2 weeks 5 days ago
காந்தியடிகளின் வேதாரண்ய சத்தியா கிரக போராட்டத்தின் போது உப்பு காய்ச்சி சகோதரிகள் இருவரும் சிறை சென்றார்கள் ..? இது புது தகவல் தெரியாதை ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும் . அப்படியே அடியேனும் திராவிட பொய் பித்தலாட்டங்களை அம்பலபடுத்துவதில் முன்னிற்பதோடு தமிழ் தேசிய அரசியலை (இப்போது சீமான் ;) இதை விட திறமாக முன்னொடுப்பவர் வந்தால் அவரின் பின் எடுத்து செல்ல கெலியில் வருவேன்!! இதை எல்லாம் சாட்சி வைத்து விட்டு செய்வார்களா என்ன ? சாட்சிகள் நிலவரம் .. மாணவன் உதயகுமார், அன்றைய ஆட்டோ சங்கர் ? பழனி பாபா ? சாதிக் பாட்ஷா ? வாசன் ஐ கேர்- M. ஆருன்? கொடநாடு ஓம் பகதூர் & கனகராஜ்? நம்மையும் போட மாட்டார்கள் என என்ன நிச்சயம்.
2 weeks 5 days ago
என்னைத் தூங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி தம்பி. இருந்தாலும் முதலே சொல்லியிருந்தால் இவ்வளவு இழுபறி இருந்திருக்காதில்ல.
2 weeks 5 days ago
100 வருடங்களை தாண்டிய வீரகேசரி…. டெல்ஃப்ட் தீவு என்று நெடுந்தீவை எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது.
2 weeks 5 days ago
கொமட்டிற்குள் நாகம்!
2 weeks 5 days ago
குருணாகலை – நா உயன ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி Published By: Vishnu 25 Sep, 2025 | 03:52 AM குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற வேளையில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/226011
2 weeks 5 days ago
வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட தரவுகளில் 50 சதவீதமானவை மாத்திரமே துல்லியமானவை : பிரதி அமைச்சர் Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 01:32 PM அண்மையில் வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானது என கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (25) உரையாற்றும் போதே இந்தத் தகவலை அவர் வழங்கினார். உணவுப் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அடையாளம் காணவும், அவற்றை முறையாக ஆய்வு செய்யவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் நோக்கமாகக் கொண்டு, 2025 மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று நாடு முழுவதும் வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களினால் குரங்குகள், மக்கா குரங்குகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில் போன்ற விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் வழங்கிய தரவுகளில் 50 சதவீதமானவையே துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிடுகையில், தரவுகள் சரிபார்ப்பின் போது, குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் அளித்த தகவல்களில் 50சதவீதமானவை துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, உணவுப் பயிர்களுக்கு வனவிலங்கு சேதத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்குப் பொறுப்பான குழு, கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலங்கு எண்ணிக்கையையும் அவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, மக்கா குரங்குகள்– 5,197,517 குரங்குகள்– 1,747,623 முள்ளம்பன்றிகள் – 2,666,630 ராட்சத அணில்கள் – 4,285,745 யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவின் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், தொடர்புடைய விலங்குகள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226045
2 weeks 5 days ago
25 Sep, 2025 | 06:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது. இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/226043
2 weeks 5 days ago
பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா கோலா கட்டுரை தகவல் ராக்ஸி காக்டேகர் பிபிசி செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025, 05:11 GMT நூர் ஜஹான் ஒரு மருத்துவ பரிசோதனையிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவர் மூன்று நாட்களை ஒரு ஆய்வகத்தில் கழித்துள்ளார், அங்கு ஆராய்ச்சியாளர்களும் மருந்து நிறுவனங்களும் அவர் மீது புதிய மருந்துகளை பரிசோதித்துள்ளன. நூர் ஜஹான் தனது சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது குழந்தைகளும் கணவரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். நூர் ஜஹானின் வீட்டில் ஒரு சிறிய சமையலறை, ஒரு படுக்கை மற்றும் சில பெட்டிகள் உள்ளன. நூர் ஜஹான் தனது மகளின் திருமணத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்து வருகிறார். தனது குடும்பச் செலவுகள் மற்றும் மகளின் திருமணத்திற்காக சிறிது பணத்தை சேமிக்க, நூர் ஜஹான் தனது உடலில் மருத்துவ பரிசோதனைகளை செய்ய அனுமதிக்கிறார். "என் குழந்தைகள் இரவில் பசியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்கிறேன்" என்று அவர் கூறினார். மூன்று மாத கால மருத்துவ பரிசோதனைகள் பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, தனது மகளின் திருமணத்திற்காக பணத்தைச் சேமித்து வருகிறார் நூர் ஜஹான் நூர் ஜஹான் தற்போது மூன்று மாத கால மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார். பரிசோதனைகளுக்காக அவர் தொடர்ந்து ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டும். மருத்துவ பரிசோதனையின் முடிவில், அவருக்கு 51,000 ரூபாய் வழங்கப்படும். பிபிசி அவரை நேர்காணல் செய்தபோது, அவர் ஏற்கனவே ரூ.15,000 பெற்றிருந்தார். அடுத்து பெறப்போகும் 36,000 ரூபாயை தனது மகளின் திருமணத்திற்குப் பயன்படுத்த இருப்பதாக நூர் ஜஹான் கூறினார். "நாங்கள் ஏழைகள். எப்படியும் இந்த சிறிய குடிசையில் நாங்கள் இறக்கப் போகிறோம். நான் என் ரத்தத்தைக் கொடுத்து பணம் பெறுகிறேன். நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. மீதமுள்ள பணத்தைப் பெற்ற பிறகு, என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பேன்" என்று நூர் ஜஹான் பிபிசியிடம் கூறினார். ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட ஒரு குடியிருப்பான கணேஷ் நகரில் நூர் ஜஹான் வசிக்கிறார். அருகிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளில் இந்தப் பகுதியிலிருந்து பங்கேற்கும் நூற்றுக்கணக்கான மக்களில் இவரும் ஒருவர். பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா தன் உடலில் உள்ள தழும்புகளைக் காட்டுகிறார் நூர் ஜஹானைப் போலவே, 60 வயதான ஜாசிபென் சுனாராவும் மருத்துவ பரிசோதனைகளில் கலந்துகொள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மற்றும் மகனை இழந்த அவர் ஆமதாபாத்தின் ஜமால்பூரில் உள்ள காய்கறி மற்றும் பூ சந்தைக்கு அருகில் வசித்து வந்தார். "நான் ஜமல்பூரில் வசித்தபோது, எனக்கு ஒருபோதும் பணக் கஷ்டம் ஏற்பட்டதில்லை. வியாபாரிகள் வேண்டாம் என ஒதுக்கும் காய்கறிகளை சந்தையில் இருந்து எடுத்து வந்து, விற்பேன்" என்று ஜாசிபென் கூறினார். "இப்போது நான் கணேஷ்நகருக்கு மாறியதால், எனக்கு வருமானத்திற்கு வழி இல்லை. மருத்துவ பரிசோதனையில் சேருவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை." என்கிறார். ஒரு சிறிய குடிசையில் அவர் வசிக்கிறார். "இப்போது என்னால் காய்கறிகளை விற்க முடியாது. என் உடல்நிலை சரியில்லை. என் கைகள் வலிக்கின்றன. ஆனாலும் பட்டினி கிடக்காமல் இருக்க மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்கிறேன்" என்று ஜாசிபென் சுனாரா கூறுகிறார். ஆமதாபாத்தின் புறநகரில் உள்ள பிரனா குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ள கணேஷ்நகரில் சுமார் 15,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள். இவர்களில் பலர் ஆற்றங்கரைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசித்து வந்தனர். அதேசமயம், ஆகமதாபாத்தின் சந்தைகளில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பெண்கள் சந்தைகளில் வேலை செய்தனர் அல்லது வீடுகளில் பணியாளர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு நாளைக்கு 200 முதல் 400 ரூபாய் வரை சம்பாதித்தனர். வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்ட பிறகு அவர்களில் பலர் வேலை இழந்துவிட்டனர். பிஸ்மில்லாவின் கதை பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, நிறுவனங்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பவர்களுக்கும் இடையே முகவர்கள் ஒரு முக்கிய இணைப்பாக உள்ளனர். ஆமதாபாத் மாநகராட்சியின் அறிக்கையின்படி, சுபாஷ் பாலம் முதல் வாஸ்னா தடுப்பணை வரையிலான ஆற்றங்கரைப் பகுதியில் வசித்த 12,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 29 அரசு குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் முன்பு வசித்த பகுதிகளில் இருந்து இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 48 வயதான பிஸ்மில்லா கோலா, கணேஷ்நகருக்கு இடம்பெயர்வதற்கு முன்பு விவாகரத்து பெற்றார். ஒரு காலத்தில், அருகிலிருந்த குடியிருப்புகளில் வீட்டு வேலைகள் செய்து வந்த அவர், அவரது மகன் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு அந்த வேலையை இழந்தார். பின்னர் பிஸ்மில்லா மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்கத் தொடங்கினார். "நான் தனியாக இருக்கிறேன். எனக்கு எந்த ஆதரவும் இல்லை. என் மகனின் வழக்கை நடத்த என்னிடம் பணம் இல்லை. என் வீட்டை பழுதுபார்க்க கூட என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ பரிசோதனைகளில் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று ஒருவர் சொன்னபோது நான் அதில் சேர்ந்தேன்" என்று அவர் கூறினார். பிஸ்மில்லா பல மருத்துவ சோதனைகளில் பங்கேற்றுள்ளார். கணேஷ்நகரின் உள்ளூர்வாசிகள் இதுபோன்ற மருத்துவ பரிசோதனைகளை 'STD'-கள் என்று அழைக்கிறார்கள். 'Study' (ஆய்வு) என்பதையே அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். "நான் குறைந்தது ஏழு முதல் பத்து ஆய்வுகளில் பங்கேற்றுள்ளேன், ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதித்துள்ளேன். நான் மூன்று நாட்கள் ஆய்வகத்தில் தங்க வேண்டும். மருந்து எடுத்துக் கொண்ட பிறகு, அவர்கள் என் ரத்தத்தை தொடர்ந்து எடுத்து பரிசோதிப்பார்கள்" என்று பிஸ்மில்லா கூறுகிறார். பரிசோதனைகள் தொடர்பான விதிகள் பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, கணேஷ்நகரில் இடம்பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை. உள்ளூர் முகவர்கள் மூலம் பிஸ்மில்லா இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். முகவர்கள், அவர்கள் அழைத்து வரும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். "பொதுவாக ஆய்வகங்கள் ஒரு குறிப்பிட்ட வயது அல்லது பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக எங்களைத் தொடர்பு கொள்கின்றன. அவர்களிடம் எங்கள் எண் இருக்கும். அவர்கள் எங்களை அழைப்பார்கள்," என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு முகவர் பிபிசியிடம் கூறினார். "நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருக்கிறோம், அங்கு இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சில நேரங்களில் நாங்களே மக்களை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்கிறோம், சில நேரங்களில் அவர்களை நேரடியாகவே அங்கு செல்லுமாறு கூறுகிறோம்." என்கிறார் அவர். இந்த முகவரே மருத்துவ சோதனைகளில் பங்கேற்றவர்தான். இப்போது அவர் பிஸ்மில்லா, நூர் ஜஹான் மற்றும் ஜாசி பென் போன்றவர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை நடத்தி வருகிறார். "இதில் என்ன தவறு? ஆராய்ச்சி நிறுவனங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்வதில்லை. அவை சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. எழுத்துப்பூர்வமாகவும் காணொளி பதிவு மூலமாகவும் ஒப்புதல் பெறப்படுகிறது" என்று அந்த முகவர் கூறுகிறார். "மருந்து மற்றும் அதன் பக்க விளைவுகள் பரிசோதிக்கப்படுவதாக பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பங்கேற்பாளர்கள் வீடு திரும்பிய பிறகும் மருத்துவரிடம் உதவி பெற முடியும்." என்கிறார் அவர். ஆனால் உள்ளூர் சமூக ஆர்வலர் பினா ஜாதவ், "முன்னதாக, ஒன்று அல்லது இரண்டு முறை என அவ்வப்போது இந்த மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக சோதனைகளில் சேர்ந்தனர், ஆனால் இப்போது அது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். ஆனால் இப்பகுதியில் வேலைவாய்ப்பு இல்லாததால், இதில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று கூறுகிறார். பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பினா ஜாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பக்க விளைவுகள் குறித்து மக்களை எச்சரிக்க முயற்சிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்களின்படி இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய பிபிசி ஒரு முக்கிய நிறுவனத்தின் ஆய்வகத்தைத் தொடர்பு கொண்டது. மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பதற்காக பணம் பெறும் நபர்களுக்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள், "அத்தகைய தொகை பொதுவாக ஆய்வின் நன்மைக்காக அல்லாமல் ஆட்சேர்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது" என்று கூறுகின்றன. "நிச்சயமாக, ஐஇசி- ஐஆர்பி (IEC - IRB) செலுத்தப்படும் தொகை மற்றும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வற்புறுத்தல் அல்லது தேவையற்ற அழுத்தம் காரணமாக மக்கள் இதில் பங்கேற்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மக்கள் இந்த ஆய்வுகளில் சேர அல்லது தொடர்ந்து பங்கேற்க ஊக்குவிக்கும் அளவுக்கு ஊதியம் அதிகமாக இருக்கக்கூடாது." உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் இந்த நடைமுறையை "மனித உரிமைகளை மீறும் ஒரு கொடூரமான செயல்" என்று விவரிக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "இந்த சோதனையின் தீய விளைவுகள் பற்றி அறியாதவர்களைக் குறித்து நாங்கள் பேசுகிறோம். சட்டப்படி, அவர்களின் சம்மதத்தை தகவலறிந்த சம்மதமாகக் கருத முடியாது" என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 'ஸ்வஸ்த் அதிகார் மன்ச்' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சஞ்சய் பாரிக் அந்த அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்தூரில் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான பல இறப்புகளுக்குப் பிறகு, அந்த அமைப்பு மனு தாக்கல் செய்தது "இது குஜராத்தில் மட்டும் நடப்பதில்லை. மும்பை, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் உள்ள ஆய்வகங்களும் மக்களை 'சோதனை எலிகளாகப்' பயன்படுத்துகின்றன" என்று அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமுல்யா நிதி கூறுகிறார். மருத்துவ சோதனைகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கும் ஒரு நாடாளுமன்றக் குழுவும், நாட்டின் அடித்தட்டு மக்களைக் குறிக்க 'கினி எலி' என்ற வார்த்தையை பயன்படுத்தியது. "தன்னார்வலர்களின் ஆட்சேர்ப்பு முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் வரை ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்க ஒரு முறையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதுவரை, பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்ந்து சுரண்டப்படுவார்கள். சோதனைகளின் குறிப்பிட்ட முடிவுகளைத் தவிர மற்ற அனைத்து தகவல்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்" என்று சஞ்சய் பரிக் கூறுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த 'கிராண்ட்வியூ ரிசர்ச்சை' மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 'இந்தியாவின் மருத்துவ பரிசோதனை சந்தை 2025-ஆம் ஆண்டுக்குள் 1.51 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சோதனைகள் தோல்வியுற்றாலும் அதிக செலவு கிடையாது என்பதால், நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. "ஒருபுறம், மக்களுக்கு பணம் தேவை, மறுபுறம், நிறுவனங்களுக்கு மருந்துகளை சோதிக்க தன்னார்வலர்கள் தேவை. எல்லாம் சட்டம் மற்றும் அரசாங்க தரநிலைகளின்படி செய்யப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை," என்று காமன்வெல்த் மருந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் ராவ் வி.எஸ்.வி. வட்லமுடி பிபிசியிடம் தெரிவித்தார். "இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு நாம் யாரைப் பாதுகாக்கிறோம் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மருந்து உற்பத்தி ஒரு உன்னதமான தொழில், சமூகம் பெரிய அளவில் பயனடைய மனித தன்னார்வலர்கள் தேவை, ஆனால் அனைத்து தரநிலைகளும் பின்பற்றப்பட வேண்டும்." என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dx9gqvd92o
2 weeks 5 days ago
வட்ட வடிவில் வானவில் நாயின் வித்தியாசமான செயல்
2 weeks 5 days ago
25 Sep, 2025 | 11:48 AM எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்போது, ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வு, நியூயோர் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், இலங்கை நேரப்படி இன்று (25) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமர்வில் உரையாற்றினார் காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெரும் கொடூரமான பேரழிவு குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பும் உடனடியாக போர்நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி வழங்கவும், அனைத்து தரப்பிலிருந்தும் பணயக்கைதிகளை விடுவிக்க குரல் எழுப்புவதாகவும் வலியுறுத்தினார். இந்த கொடூரமான கொலைகளை நிறுத்துவதற்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனிற்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும், பல உலகளாவிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ள வறுமை குறித்து தனது உரையில் சிறப்பு கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சமத்துவமின்மை மற்றும் வறுமையை உலகளாவிய பேரழிவாகக் கருதி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ள உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளையும் இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நல்வாழ்விற்கு சவாலாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உலகத் தலைவர்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவது, அவ்வாறான கடத்தல்காரர்கள் அந்தந்த நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் போதைக்கு அடிமையான புனர்வாழ்வு நிலையங்களை உருவாக்குவது குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். சமூகத்தில் பாரிய அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தும் ஊழல், அபிவிருத்திக்கு தடையாக இருப்பதுடன் ஜனநாயகம் மற்றும் உலக நலனுக்கு தீர்க்கமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கும் காரணமாகின்றன என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமான நடவடிக்கையாக இருந்தாலும், அடுத்த தலைமுறைக்காக இலங்கை அதை ஆரம்பித்துள்ளதுடன், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்கள் இன்று ' வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வையைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்க, ஊழலற்ற நெறிமுறைமிக்க நிர்வாகம், வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய முக்கிய துறைகளில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதனுடன் இணைந்தவகையில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், படிப்படியாக அவை அனைத்தும் வெற்றிகொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை கீழே பின்வருமாறு, தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, அதிதிகளே, உலக நாடுகளிடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்டிப் பேணுவதை உன்னத குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான அமைப்பின் 80 ஆவது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐரோப்பாவின் மையப்பகுதியில் உள்ள அற்புதமான ஜெர்மனியைச் சேர்ந்த அதிமேதகு அந்தெலேனா பெயபெராக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகையே வியக்க வைக்கும் புவியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை கொண்ட நாடான கேமரூனின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு பிலிமோன் யாங் வழங்கிய தலைமைத்துவத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன். அமைதியும் ஜனநாயகமும் நிறைந்த அழகிய உலகத்திற்காக எட்டு தசாப்தங்களாக தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு அமைப்பின் பல்தரப்புப் போக்கிற்கும் எதிர்காலத்திற்கும் திட்டங்கள் வகுக்கப்படும் இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் ஜனாதிபதி என்ற முறையில் முதல் தடவையாக இந்த கௌரவமான சபையில் உரையாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உலகின் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள். எனது நாடான இலங்கையைப் போலவே, ஏனைய எல்லா நாட்டு மக்களாலும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த உலகில் எங்கேனும் வாழும் அனைவரையும் பாதிக்கிறது. அந்த முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் உலகின் எதிர்கால இருப்பிற்கு ஒரு தீர்க்கமான பங்களிப்பைச் செய்கின்றன. மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து எதிர்கொள்ளும் மிகக் கடுமையான துயரமாக வறுமையை அறிமுகப்படுத்தலாம். அந்தப் பாரிய பேரழிவின் விளைவாக எழுந்த பல கடுமையான பிரச்சினைகள் நம் முன் ஒரு இருண்ட துயரத்தை உருவாக்கியுள்ளன. இந்த சிறப்பு மாநாட்டின் கவனம் அதில் குவிய வேண்டும் என்று என் மனசாட்சி உரக்கச் சொல்கிறது. பெரும்பாலும் இவை அனைத்தும் உங்கள் மனசாட்சியை ஓரளவுக்கேனும் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, வறுமை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் ஒரு தொடர்ச்சியான மற்றும் மிகவும் வேதனையான போராட்டமாக அடையாளப்படுத்தலாம். இது பல வடிவங்களில் வரும் ஒரு பயங்கரமான எதிரி, இந்த மாநாட்டில் நாங்கள் கூடியிருக்கும் தருணத்தில் கூட, நான் உட்பட இந்த ஒவ்வொரு பிரதிநிதிகளின் நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள். அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை மனித உரிமையாகும். ஆனால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஏழ்மை மற்றும் வறுமை காரணமாக இந்த உரிமை மறுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் நிறைந்ததாக பெருமை பேசும் உலகில், குழந்தைகள் பாடசாலைக் கல்வியை இழப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது? ஒவ்வொரு பாரிய தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் கல்வி ஆகும். எதிர்கால உலகின் இருப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். கல்வியில் முதலீடு செய்வதை உலக முன்னேற்றத்திற்கான முதலீடாக நாங்கள் கருதுகிறோம். பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமையை நிவர்த்தி செய்வதில், முன்னேற்றத்திற்கு கடன் சுமைகள் தொடர்ந்து தடையாக உள்ளன. பொதுவாக, குறைந்த வருமான நாடுகள் சுகாதாரம் அல்லது கல்வி சேவைகளை விட நிகர வட்டி செலுத்துதல்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குகின்றன. பிரஜைகளாகவும் நாடுகளாகவும் நாம் கடன் பொறிகளில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஒரு சாதகமான தீர்வு அவசியம். நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல், யாரையும் கைவிடாது என்றும் முதலில் பின்தங்கியவர்களை சென்றடையவும் உறுதியளிக்கிறது. இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உலகளாவிய சவாலான வறுமையை ஒழிக்கும் சவாலை நிலைபெறு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் அடையாளம் கண்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக்கான உலக உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இருப்பினும், எதிர்பாராத யுத்தங்கள், அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் உலகமே புயலில் சிக்கிய கோவிட் தொற்றுநோய் ஆகியவை இலட்சிய நிகழ்ச்சி நிரலை சீர்குலைத்துள்ளன. எனவே, ஏழை பணக்காரர் இடைவெளி மற்றும் வறுமையை ஒரு உலகளாவிய பேரழிவாக நாம் கருத வேண்டும். மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, இந்த அற்புதமான உலகை சீர்குலைத்து, குழப்பும் புதிய பிரச்சனையாக போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண முடியும். ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அதன் 2025 உலக போதைப்பொருள் அறிக்கையில் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. நாளுக்கு நாள், போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உலக சந்தையை வேகமாக ஆக்கிரமித்துள்ளன. போதைப்பொருள் வர்த்தகமும் அதன் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் பல உலக நெருக்கடிகளுக்கு வழி வகுத்துள்ளன. இவற்றில் ஈடுபட்டுள்ள குழுக்கள் நாடுகளை இரையாக மாற்றுகின்றன. இந்த கொள்ளைநோய் உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் இறுதியாக உலக நல்வாழ்வுக்கு எதிரான ஒரு பெரிய போக்காக மாறியுள்ளது. இலங்கையில் இந்த பெரும் கொள்ளைநோயை ஒழிப்பதற்கான ஒரு சாத்தியமான திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், மேலும் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துமாறு நான் உங்களை கௌரவத்துடன் அழைக்கிறேன். இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துதல், அத்தகைய கடத்தல்காரர்கள் தத்தமது நாடுகளுக்கு குடிபெயர்வதைத் தடுத்தல் மற்றும் இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையங்களை நிறுவுதல் போன்ற அநேக விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்: ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் கௌரவ தலைவர் அவர்களே, மதிப்புமிக்க விருந்தினர்களே, ஊழல் என்பது சமூகத்தில் பரவலான அழிவு மற்றும் சோகத்தை ஏற்படுத்தும் ஒரு நயவஞ்சக தொற்றுநோய் என்று நாங்கள் கருதுகிறோம். ஊழல் என்பது அபிவிருத்திக்கு ஒரு தடையாக இருப்பது எங்கள் நிலைப்பாடு. இது ஜனநாயகம் மற்றும் உலக நல்வாழ்வுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கு ஒரு காரணம் என்பது எமது நிலைப்பாடாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது. ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடாதிருப்பது இன்னும் ஆபத்தானது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனம் உலகில் மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது. மனித நாகரிகத்தின் பல்வேறு சாதனைகள் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. இவை அனைத்தும் மகத்தான தியாகம் மற்றும் விடாமுயற்சியின் பெறுபேறுகள். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு கடினமான முன்னெடுப்பாகும். ஆனால் நாம் அந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முதல் படி கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் படி சரியானதாக இருந்தால், அதனை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பல படிகள் எடுத்துவைக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தைரியமாக இருங்கள் எஞ்சிய அனைத்தும் தானாக நடக்கும் என்ற ஜவகர்லால் நேருவின் கருத்தை இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். நான் சுமார் 22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய, பிரகாசமான தீவை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இலங்கையின் மக்கள் தொகை மொத்த உலக மக்கள்தொகையில் சுமார் 0.3% ஆகும். நமது நாட்டின் மக்கள் தொகை அளவு மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறியது என்பது உண்மைதான். ஆனால் நமது நாட்டிற்காகவும் உலகத்திற்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைத்து பிரதிநிதிகளும் யுத்தத்தை நிராகரிப்பதில் என்னுடன் கைகோர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகில் யுத்தத்தை விரும்பும் எந்த தேசமும் கிடையாது.எங்காவது எப்படியாவது யுத்தமோ அல்லது மோதலோ ஏற்படும் போதெல்லாம் அது ஒரு துயரம் என்பதை நாங்கள் அறிவோம். இப்போதும் கூட, அந்த துயரத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம். யுத்தத்தினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களுக்கு வரும், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும், யுத்தத்தைப் பற்றி கனவு காணக்கூட தயங்குகிறார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் இரு கண்களால் பார்த்திருக்கிறோம். மோதல்களால் ஏற்படும் துன்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டவில்லை என்றாலும், மில்லியன் கணக்கான மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர தவறி பெரும்பாலும் சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறது. குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை ஒரு கால்பந்தாட்டமாக மாற்றுவது சந்தர்ப்பவாத அதிகார அரசியலின் துயரமாகும். மற்றவர்களின் வாழ்க்கையை தங்கள் அதிகாரத்தை அதிகரிக்க செல்வாக்கு செலுத்தவும் ஒடுக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. ஆட்சியாளர்களின் பங்கு உயிர்களை அழிப்பது அன்றி, உயிர்களைப் பாதுகாப்பதாகும். காஸா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காஸா பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அவலக் குரல்கள் நாளாபக்கமும் கேட்கின்றன . ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினர்களின் உடன்பாட்டின் படி, இரு தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும். அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். பலஸ்தீன நாடொன்றுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே போன்று இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை அடையாளங் காண வேண்டும் . 1967 எல்லைகளில் இரண்டு நாடுகள் அருகருகே இருப்பதற்கான அடிப்படையை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைத் தேடுவதில் நாம் இணைய வேண்டும். அர்த்தமற்ற போர் காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வேதனைக்கு முன்பாக வெறும் பார்வையாளராக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு முக்கியமான தருணத்தை நாம் அடைந்துவிட்டோம். உலகைப் பாதிக்கும் யுத்த மோதல்களுக்கு மத மற்றும் இனவாதம் பாரதூரமான காரணிகளாக உள்ளன. அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும், இனவெறியின் விஷம் இன்னும் ஆங்காங்கே உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். தீவிரவாத மற்றும் இனவாதக் கருத்துக்கள் கொடிய தொற்றுநோய்களைப் போலவே கொடியதாக மாறிவிட்டன. இவ்வளவு முற்போக்கான உலகில் கூட, இந்த இனவெறி மற்றும் இனவாதக் கருத்துக்கள் சாம்பலுக்கு அடியில் உள்ள தீப்பொறிகள் போல இருப்பது நகைப்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உரிய விடயமாகும். மிகவும் பயங்கரமான சூழ்நிலை என்னவென்றால், அந்த தீப்பொறிகள் அவ்வப்போது, சந்தர்ப்பவாதமாக, பிரபஞ்சத்தின் நல்வாழ்வுக்கு எதிராக பெரும் தீப்பிழம்பாக மாற்றப்படுகின்றன. உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாறுவோம். ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும். மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியால் இறக்கும் உலகில், நாம் பில்லியன் கணக்கான பணத்தை ஆயுதங்களுக்காக செலவிடுகிறோம். சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் மில்லியன் கணக்கான மக்கள் மரணத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அர்த்தமற்ற போர்களுக்கு பில்லியன்களை செலவிடுகிறோம். இலட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி எனும் சிறகுகள் கிடைக்காமல் பெருமூச்சு விடும்போது, நாம் மில்லியன் கணக்கில் நில ஆக்கிரமிப்புகளுக்கு செலவிடுகிறோம். உண்மையில், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அமைதி எனும் குடியேற்றமாக மாற்ற முடிந்தால், அந்த உலகம் ஒரு அற்புதமான உலகமாக மாறும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். இந்த மாநாட்டில் இணைந்த நாம் அனைவரும் உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். ஒரு வரலாற்று முக்கியமான தேர்தலில், இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஒரு கனவிற்காக தீர்மானம் எடுத்தார்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதன் விளைவாக சட்டவாக்கம் பன்முகத்தன்மை கொண்டது . ஒருபுறம், நாட்டின் முழு மக்களும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். மறுபுறம், கட்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களின் பிரதிநிதித்துவம் ஒரு வரலாற்று மைல்கல்லை உருவாக்கியது. பாராளுமன்றத்தில் உள்ள இந்த பன்முகத்தன்மை இலங்கையின் ஆட்சியில் இன பன்முகத்தன்மையை உறுதி செய்கிறது .அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் என்பது பொதுமக்களுக்காக சேவையாற்றும் ஊழியர்கள் அன்றி தேவையற்ற சலுகைகளைப் பெறுபவர்கள் அல்ல என்பதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம். இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த நமது நாட்டு மக்கள், 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வைக்கு தங்கள் ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளனர். இந்த வரலாற்று சாதனையை நனவாக்க, ஊழல் இல்லாத நெறிமுறையான ஆட்சி, வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுத்தமான நாடு ஆகிய முக்கிய துறைகளில் எங்கள் கவனத்தை செலுத்தியுள்ளோம். அதனுடன் இணைந்ததாக , கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அவை அனைத்தையும் படிப்படியாக வென்று வருகிறோம். இன்று, டிஜிட்டல் ஜனநாயகம் எங்கள் புதிய இலக்காகும். ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நாடும் டிஜிட்டல் யுகத்தின் வாய்ப்புகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதே உலகின் முன் உள்ள சவாலாகும். அதில் நாம் வெற்றி பெற்றால், தொழில்நுட்பத்திற்கான பிரவேசம் திறக்கப்படுவதையும் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுவதையும் ஆட்சி பலப்படுத்தப்படுவதையும் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் அவ்வாறு செய்யத் தவறினால், தொழில்நுட்பம் சமத்துவமின்மை, பாதுகாப்பின்மை மற்றும் அநீதிக்கு வழிவகுக்கும் மற்றொரு சக்தியாக இது மாறும் என்று நாங்கள் கருதுறோம். டிஜிட்டல் கருவிகளை அணுக முடியாத நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பிளவு தெளிவாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்னும் பாரிய இடைவெளி உருவாகி வருகிறது. இலங்கை உட்பட தெற்காசியாவின் பல நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும், அபிவிருத்திக்கான கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது தடையாக உள்ளது. மிகச் சிறந்த உலகத்தை உருவாக்குவோம் நாம் மிகச் சிறந்த உலகத்தை, மனிதர்களின் நித்திய கௌரவத்தை மதிக்கும் உலகத்தை உருவாக்க வேண்டும். இந்த மாநாட்டின் உறுப்பினர்களான நீங்கள், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான சிற்பிகளாக இருக்க வேண்டும். 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவும் சாசனத்தில் கையெழுத்திட்டபோது அமெரிக்க ஜனாதிபதி எஹரி எஸ். ட்ரூமன் கூறியது போல், நமது எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. நாம் அச்சம் அல்லது கடப்பாட்டுக்கு உட்படாமல் நம்பிக்கையை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு தலைமுறையாக மாற இந்த உச்சிமாநாட்டில் தீர்மானிப்போம். இறுதியாக, எனக்கு என் நாட்டின் மீது நம்பிக்கையின் கனவு இருக்கிறது. உங்களுக்கும் உங்களுடைய நாடுகள் தொடர்பில் நம்பிக்கையின் கனவு இருக்கிறது. எனது ஒரே கனவு, என் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குவதுதான். உங்கள் நாட்டு மக்களுக்கும் இதே போன்ற வாழ்க்கையை வழங்குவதே உங்கள் கனவு என்று நான் நம்புகிறேன். அந்தக் அனைத்துக் கனவுகளுக்காகவும் நம்மைப் பிரிக்கும் பயணத்திற்குப் பதிலாக, கைகளை இணைக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆரோக்கியமான பூகோளத்தில் அமைதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கு அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தை உண்மையாகவே மாற்றியமைப்பவர்களாகுவோம் என நான் உங்களை மரியாதையுடன் அழைக்கிறேன். மிக்க நன்றி. https://www.virakesari.lk/article/226038
2 weeks 5 days ago
வணக்கம் தோழர், சீமானுக்கு தனி திரிகள் எல்லாம் ஓடிய போது வராத யாழ்கள விதிகள் மீதான அக்கறை, இப்போதாவது வந்துள்ளது மகிழ்ச்சி. யாழ் களம் தமிழக அரசியல் கட்சிக்கு ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றே சொல்கிறது. அப்படி நான் செய்வதில்லை. தமிழக விடயங்களில் ஒதுங்கி இருக்கும் படியும் சொல்லவில்லை. அப்படி எண்டால் தமிழக செய்தி பகுதியை read only ஆக்கி இருப்பார்கள். நான் நாதக என்றால் ஓடி வருவதில்லை தோழர், பறந்து வருவேன். ஈழ, தமிழக தமிழர் இடையே பரவி உள்ள சீமான் என்ற விடத்தை முறிப்பது என் தலையாய கடன்களில் ஒன்று.
2 weeks 5 days ago
இங்கே பல பேர் எனக்கு பல வேடங்கள் தந்துள்ளார்கள்… அதில் திமுக 200 ரூபாய் உ பி என்பதும் எப்போதோ நடந்து விட்ட பட்டாபிஷேகம்தான் தோழர் ஆகவே கவலை வேண்டாம். நீங்கள் சொன்னதில் ஸ்டாலின் பற்றியதையும், கருணாநிதி பற்றியதையும் மட்டும் நான் கேள்வி கேட்க ஒரே காரணம், இதில் சம்பந்தபட்ட இரு பெண்களும் பொதுவெளியில் வந்து, அப்படி எதுவுமே இல்லை என மறுத்துள்ளார்கள். ஏனையவற்றில் இப்படியான ஆதாரத்தை என்னால் தரமுடியவில்லை. சம்பந்தபட்ட பெண்களே இல்லை என மறுத்த போது, அரசியலுக்காக அதை மீள, மீள காவுவது - காவுபவர் மிக மட்டமானவர் என்பதையே காட்டுவதாக நான் கருதுகிறேன் தோழர். தனியொருவன் படத்தில் வரும் வசனம் போலத்தான் இதுவும். உண்மைக்குதான் ஆதாரம் தேவை. பொய்க்கு அல்ல. நான் உண்மையை எழுதுவதால் - ஆதாரம் இல்லாமல் எழுத முடிவதில்லை. நீங்கள் எழுதும் ஒவ்வொரு கிசு கிசு வையும் என்னால் ஆதாரத்துடன் பொய் என நிறுவமுடியவில்லை. அப்படி நிறுவ முடிந்தவற்றை பற்றி மட்டும் எழுதுகிறேன். நீங்கள் கண்டமேனிக்கு உங்கள் மனதில் வரும் வக்கிர எண்ணங்களை எல்லாம் எழுத ஆதாரம் தேவையில்லை என்பதையும் ஏற்கிரேன். ஆகவே நீங்கள் ஆதாரம், தரவு எதை பற்றியும் கவலைபடாமல் எழுதலாம். பிகு அரசியல்வாதிகள் மட்டும், அல்ல அயோக்கியர்கள் எங்கும் நிறைந்துள்ளார்கள். யாழ்களத்திலும். இதில் எம் ஜி ஆர் - அம்பிகா, ராதா, அவர்களின் தாய் சரசுக்கு அரச நிலம் வாங்கி கொடுத்தது, அதே போல் ரஜனிக்கு ராகவேந்திரா மண்டப நிலம் வாங்கி கொடுத்தது என சிலதை அண்மையில் திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேட்டியில் கூறி உள்ளார். ஆனால் இதன் பின்னால் பாலியல் இலஞ்சம் இருந்தது என்பது உங்கள் ஊகமே. அப்போ ரஜனியிடமும் எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றாரா? ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர். அப்படி எழுதுவது அருவருக்கத்தக்கது.
2 weeks 5 days ago
Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 02:27 PM டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று சிறிய விமான நிலையங்களில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை ட்ரோன்கள் தென்பட்டதாக, டேனிஷ் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏனைய விமான நிலையங்கள் மூடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் முக்கிய விமான நிலையமான கோபன்ஹேகன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமானநிலையமும் தற்போது மூடப்பட்டுள்ளது. எஸ்டோனியன், போலந்து மற்றும் ருமேனிய வான்வெளியில் ட்ரோன்கள் மற்றும் விமானங்களுடன் தொடர்புடைய, அண்மைய சம்பவங்கள், ரஷ்யா நேட்டோ பாதுகாப்புகளை சோதித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தன. இதன் பின்னணியில் உள்ளவர்களை விசாரித்து வருவதாகவும், ஒரு வேடிக்கையான என்பதை நிராகரிக்க முடியவில்லை எனவும் டென்மார்க் பொலிஸ் தெரிவித்துள்ளது. வடக்கு டென்மார்க்கில், ஜட்லாண்ட் பகுதியில் அமைந்துள்ள, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் நான்காவது பெரிய நகரமான ஆல்போர்க் விமான நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் காணப்பட்டதாக பொலிஸ் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது. ஆல்போர்க்கில் ட்ரோன்கள் தென்பட்ட சம்பவங்கள், திங்கற்கிழமை, கோபன்ஹேகன் விமான நிலையத்தில் 4 மணி நேரம் விமானங்களை நிறுத்தியதை போன்று இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஸ்காண்டிநேவியாவின் விமான நிலையமொன்றின் அருகில் பெரிய மற்றும் அடையாளம் தெரியாத பல ட்ரோன்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டமையானது, டென்மார்க்கின் ஆயுதப் படைகளைப் பாதித்துள்ளது. ஏனெனில் அது ஒரு இராணுவ தளமாகப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானங்களின் நோக்கம் என்ன, அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது மிக விரைவில் அறியமுடியும் என பொலிஸார் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. விசாரணைகளில் அந்த நாட்டின் மற்றும் தேசிய பெரிஸாருக்கு உதவுவதாக டென்மார்க் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. https://www.virakesari.lk/article/226052
2 weeks 5 days ago
❤️............... மிக்க நன்றி பாஞ்ச் ஐயா. யாழில் உங்களின் எழுத்து ஒரு தனிரகம், அவற்றை நான் ரசித்து வாசிப்பேன்..........👍.
2 weeks 5 days ago
Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 08:12 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்ல, நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும் என்றும் குறிப்பிட்டார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கலந்துரையாடலான 12 ஆவது காலி கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், இந்திய பெருங்கடலின் எதிர்காலத்தைப் பற்றிய கலந்துரையாடலுக்கான ஒரு தளத்தை ஒன்றிணைப்பதில் இலங்கை கடற்படையின் தொலைநோக்குப் பார்வையையும், தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். இது உலகளாவிய கடல்சார் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'மாறிவரும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் கண்ணோட்டம்' என்பது காலத்திற்கு ஏற்றதும் முக்கியமானதும் ஆகும். இந்தியப் பெருங்கடல் உலகின் மிகவும் நீட்டிக்கப்பட்ட மூலோபாய கடல்சார் களங்களில் ஒன்றாகும், இது வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய உயிர்நாடியாகவும் உள்ளது. ஆயினும் அது புவிசார் அரசியல் போட்டிஇ சுற்றுச்சூழல் அழுத்தம், ஒழுங்கற்ற குடியேற்றம் மற்றும் நிர்வாக சவால்களிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களை இந்த பிராந்தியம் எதிர்கொள்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் நாகரீகங்களின் ஒரு மையமாக இருந்து வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாத்தியமாக்கியுள்ளது. இன்று, மூலோபாய நலன்கள் ஒன்றிணையும் ஒரு அரங்கமாக உள்ளது. இதனால் இது போட்டியின் அரங்கமாகவும் ஒத்துழைப்புக்கான ஒரு தளமாகவும் அமைகிறது. இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும். அந்த இடத்தை நாம் ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்லஇ நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும். இந்திய பெருங்கடல் முன்னோடியில்லாத அழுத்தத்தில் உள்ளது. காலநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை பல்லுயிர், மனித பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைதிக்கு அச்சுறுத்தல் விடுகின்றன. கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தேசிய உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமானது. அதனால்தான், வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் நாடுகளிடையே ஆழமான அறிவியல் ஒத்துழைப்புக்கு அழைக்கிறோம். பயனுள்ள கடல்சார் நிர்வாகம் சமமாக முக்கியமானது. பாரம்பரிய அச்சுறுத்தல்களுக்கு அப்பால், போதைப்பொருள் கடத்தல் உட்பட பாரம்பரியமற்ற சவால்களையும் இலங்கை எதிர்கொள்கிறது. இது நமது கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட முன்முயற்சி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மாறிவரும் கடல்சார் பாதுகாப்பு நிலை மற்றும் இலங்கை கடற்படையின் முக்கியப் பங்கைப் அங்கீகரிக்கும் வகையில், 2025 பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் கடற்படைக்கு 92.5 பில்லியன் இலங்கை ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12 சதவீதமான அதிகரிப்பாகும். இந்த முதலீடு தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நமது கடல்சார் களத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வழக்கமான ரோந்துப் பணி, ஆய்வு மற்றும் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, கப்பல்களை இடைமறித்து, கடத்தல்காரர்களைக் கைது செய்து, அதன் மூலம் கடல்சார் களத்தை பாதுகாப்பதில் இலங்கை கடற்படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். ஆயினும், இந்த சவால்களை இலங்கை மட்டும் சமாளிக்க முடியாது. இந்தியப் பெருங்கடலில் பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு மற்ற நாடுகளின் தீவிர ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. கப்பல் போக்குவரத்து சுதந்திரம், சர்வதேச சட்டத்திற்கு மரியாதை மற்றும் கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றத்திற்கு பதிலளிப்பது ஆகியவை தகவல் பகிர்வு, கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தது. கடலில் ஒரு விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு ஸ்திரத்தன்மையின் மூலக்கல்லாக இருக்க வேண்டும். கப்பல் போக்குவரத்து, மீன்வளம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் நீலப் பொருளாதாரம் வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம் அதன் கரைகளுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஓட்டங்களுக்கு மையமானது. இது பிராந்திய சக்திகள் மற்றும் உலகளாவிய கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவசியமாக்குகிறது. ஒத்துழைப்பின் மூலம்இ கடற்படைகள் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கலாம்இ ஆக்கிரமிப்பைத் தடுக்கலாம், சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடலாம் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பதிலளிக்கலாம். உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு பங்களிக்குமாறு இலங்கை அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறது. ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்தியப் பெருங்கடல் அமைதி, செழிப்பு மற்றும் வாய்ப்புகளின் களமாக இருக்க முடியும். சவால்கள் வலிமையானவைஇ ஆனால் செய்தி தெளிவாக உள்ளது. எந்தவொரு நாடும் தனியாக அவற்றை எதிர்கொள்ள முடியாது. அவர்களுக்கு பல்தரப்புவாதம், கூட்டாண்மை மற்றும் கடற்படைகள், அரசாங்கங்கள், தொழில் மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையிலான ஈடுபாடு தேவை. “காலி கலந்துரையாடல்” இந்த உணர்வை உள்ளடக்கியது என்றார். https://www.virakesari.lk/article/226018
2 weeks 5 days ago
ராஜினி திராணகம திடீரென்று "மனித உரிமை ஆர்வலராக" தலையில் சுமக்கப் படுவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை! அதே நேரம், சிங்களப் பேரினவாத அரசும் உண்மைகளை வெளிக்கொணர முயலும் நல்ல தரப்பாக நம்ப வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் "பெயின்ற் அடிக்கும்"😂 குழுவினர். அமரர் ராஜினியைச் சுட்ட ஒற்றை நபர் (கட்டையான, சிவந்த ஒருவர்) யாரென்று யாருக்கும் தெரியாது - அற்புதனுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுடப் பட்ட அந்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் நிகழ்ந்த சம்பவங்களின், உரையாடல்களின் சாட்சிகளை வைத்துத் தான் முறிந்த பனையின் எழுத்தாளர்கள் புலிகளே சுட்டதாகச் சொல்கிறார்கள். முறிந்த பனையை இங்கே இணைத்து உரையாட இயலாது, ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் அற்புதனின் தொடரில் இருக்கும் தகவல்களை விட மிக நுணுக்கமாக (granular) இருப்பதாக நான் உணர்கிறேன். அத்தனை நுணுக்கமான சாட்சிகளையும், உரையாடல்களையும் யாரும் கற்பனையில் உருவாக்கி விட முடியாது. மிக முக்கியமான இன்னொரு விடயம், இந்திய இராணுவத்தையும் ஒட்டுக் குழுக்களையும் துகிலுரிந்த முறிந்த பனையை புலிகள் தடை செய்தனர், அமரர் ராஜினியின் உருவப் படத்தைக் கூட பல்கலைக் கழகத்தில் நினைவுச் சுவரில் மாட்ட அனுமதிக்காமல் புலிகள் தடுத்திருந்தனர். 2012 இற்குப் பின்னர் தான் அவரது உருவப் படம் பல்கலை மருத்துவ பீடத்தில் காட்சிப் படுத்தப் பட்டது. கோமாவில் இருப்போர் இன்னும் "ஆழமான" கோமாவிற்குப் போய் ஒளிந்து கொள்ளட்டும்😎!
2 weeks 5 days ago
🤣.................. அல்வாயனின் பதிவைப் பார்த்த பின், ஈழப்பிரியன் அண்ணாவிற்கு நித்திரை நன்றாகவே வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்................🤣. அந்த அடையாள அட்டையால் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.............' என்று அன்று இரண்டு கன்னங்களையும் காட்டிக் கொண்டே பல இடங்களில் நிற்க வேண்டி இருந்தது. இரண்டு கன்னங்களையும் காட்டியதற்காக பரலோகம் போகும் போது, பிதா என்னை அதிகமாக ஆசீர்வதிப்பார்............. வல்வெட்டித்துறை, பொலிகண்டி, கம்பர்மலை, தொண்டைமனாறு, இவை எல்லாம் ஒரே கணக்கிலேயே வரும்............ இவர்களில் எவரும் தப்பவே முடியாது அந்த நாட்களில். 'பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை..............' என்ற நடைப்பயணம் சில வருடங்களின் முன் நடந்த போது, மீண்டும் பொலிகண்டியா என்று மெல்லிய சிரிப்பு வந்தது.
2 weeks 5 days ago
பட மூலாதாரம், KDP via Getty Images படக்குறிப்பு, குழந்தை பருவ மறதி என்பது பெரியவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமையைக் குறிக்கிறது. கட்டுரை தகவல் மரியா சக்காரோ பிபிசி உலக சேவை 25 செப்டெம்பர் 2025, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் நாம் பிறந்த அந்த நாள், நாம் எடுத்து வைத்த முதல் அடி, நாம் பேசிய முதல் வார்த்தைகள் அனைத்தும் நம் வாழ்வின் முக்கியமான தருணங்கள். ஆனாலும் அவற்றில் எதையும் நாம் நினைவில் கொள்வதில்லை. ஏன்? நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்கள் பல்லாண்டுகளாக இந்தக் கேள்விக்கு விடைகாண போராடி வருகின்றனர். வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் இருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமை 'குழந்தைப் பருவ மறதி நோய்' என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அதை விளக்கும் முயற்சியில் பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியரான நிக் டர்க்-பிரவுன், "இந்த விவாதம் இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. நாம் நமது குழந்தைப் பருவத்தின் தொடக்க ஆண்டுகளில் நினைவுகளை உருவாக்குகிறோம், ஆனால் பின்னர் அவற்றை நம்மால் அணுக முடியவில்லையா? அல்லது நாம் வளரும் வரை அத்தகைய நினைவுகளை உருவாக்குவதில்லையா?" என்று கூறுகிறார். பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, 'கடந்த தசாப்தம் வரை, குழந்தைகள் நினைவுகளை உருவாக்கும் திறன் இல்லாதவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். குழந்தைகளால் பேச்சு மூலம் தொடர்பு கொள்ள முடியாது என்பது அல்லது தாங்கள் யார் என்பதைப் பற்றிய முழுமையான புரிதலை அவர்கள் வளர்த்துக் கொள்ளாதது தான் காரணம்' என சிலர் கூறினார்கள். பட மூலாதாரம், Science Photo Library via Getty Images படக்குறிப்பு, மூளைக்குள் இருக்கும் கடல் குதிரை வடிவிலான ஹிப்போகேம்பஸ் எனும் பகுதி நினைவாற்றலில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றொரு கோட்பாடு, 'புதிய நினைவுகளை உருவாக்கும் மூளைப் பகுதியான ஹிப்போகேம்பஸ் (Hippocampus) இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், நான்கு வயது வரை நம்மால் நினைவுகளை உருவாக்க முடியாது' என்று அவர் விளக்குகிறார். பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, "குழந்தைப் பருவம் முழுவதும் இது தொடர்கிறது. எனவே, நமது ஆரம்பகால அனுபவங்களைச் சேமிக்க முடியாமல் போகலாம், ஏனெனில் அவ்வாறு செய்வதற்குத் தேவையான அமைப்பு அப்போது நம்மிடம் இருப்பதில்லை." குழந்தையின் மூளையை ஸ்கேன் செய்தல் இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேராசிரியர் டர்க்-பிரவுன் வெளியிட்ட ஓர் ஆய்வு அவரது கருத்துக்கே முரணாகத் தெரிகிறது. குழந்தைகளின் ஹிப்போகேம்பஸ் செயல்பாட்டை அளவிடுவதற்கு, நான்கு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான 26 குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்யும் செயல்முறையில் பேராசிரியர் டர்க்-பிரவுனின் குழு ஈடுபட்டது. அப்போது அந்தக் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக சில புகைப்படங்களையும் அவர்கள் காட்டினார்கள். பின்னர் அவர்கள் குழந்தைகளுக்கு, முன்பு காட்டிய ஒரு புகைப்படத்துடன் சேர்த்து புதிய புகைப்படம் ஒன்றைக் காட்டினர். இரண்டு படங்களில் குழந்தைகள் எதை அதிகம் பார்த்தார்கள் என்பதை பகுப்பாய்வு செய்ய குழந்தைகளின் கண் அசைவுகளை கணக்கில் கொண்டனர். குழந்தைகள் ஒருவேளை பழைய புகைப்படத்தை அதிகம் பார்த்தார்கள் என்றால், (முந்தைய ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டபடி) குழந்தைகளால் அந்தப் படத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும் அதை அடையாளம் காணவும் முடிந்தது என்பதற்கான அறிகுறியாக ஆராய்ச்சியாளர்கள் இதை எடுத்துக் கொண்டனர். பட மூலாதாரம், 160/90 படக்குறிப்பு, குழந்தைகள் விழித்திருக்கும் போதும் சுறுசுறுப்பாக இருக்கும் போதும் அவர்களின் மூளையை ஸ்கேன் செய்யும் ஒரு முறையை பேராசிரியர் டர்க்-பிரவுனும் அவரது குழுவினரும் கொண்டுவந்தனர். குழந்தைகள் ஆரம்பத்தில் ஒரு படத்தைப் பார்த்தபோது அவர்களின் ஹிப்போகேம்பஸ் செயல்பாடு அதிகமாக இருந்தால், குறிப்பாக குழந்தையின் வயது 12 மாதங்களுக்கு மேல் இருந்தால், அவர்கள் பின்னர் அதை நினைவில் வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதன் பொருள், ஒரு குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது, ஹிப்போகேம்பஸ் ஏதோ ஒரு வகையான நினைவை சேமித்து வைக்கக்கூடும். நினைவுகள் எங்கே போயின? இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டாலும் கூட, குழந்தைகள் உண்மையில் ஹிப்போகேம்பஸில் நினைவுகளை உருவாக்குகிறார்களா என்பதைத் தீர்மானிப்பதில் தனது குழுவின் ஆய்வு 'முதல் படி' என்று பேராசிரியர் டர்க்-பிரவுன் கூறுகிறார். "அவ்வாறு அந்த நினைவுகள் சேமிக்கப்படுகின்றன என்றால், அவை எங்கே போயின? அவை இன்னும் அங்கே இருக்கின்றனவா? அவற்றை நாம் அணுக முடியுமா போன்ற முக்கியமான கேள்விகளை இது எழுப்புகிறது" என்கிறார் டர்க்-பிரவுன். 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, குட்டிகளாக இருக்கும்போது ஒரு புதிர்ப்பாதையிலிருந்து (Maze) தப்பிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடித்த எலிகள், வளர்ந்தபிறகு அந்த நினைவை இழந்துவிட்டன. இருப்பினும், ஆரம்பக் கற்றலில் ஈடுபட்டிருந்த ஹிப்போகேம்பஸ் பகுதிகளை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம் அந்த நினைவாற்றலை மீண்டும் பெறலாம். மனிதக் குழந்தைகள் பிற்கால வாழ்க்கையில் (எப்படியோ) செயலற்றதாகிவிடக்கூடிய நினைவுகளைச் சேமித்து வைக்கிறார்களா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியரான கேத்தரின், 'குழந்தைகளுக்கு நினைவுகளை உருவாக்கும் திறன் உள்ளது, குறைந்தபட்சம் பேசத் தொடங்கும் நேரத்திலாவது' என்று நம்புகிறார். "சிறு குழந்தைகள் நர்சரி வகுப்பிலிருந்து திரும்பி வருவார்கள், அங்கு நடந்த ஒன்றை விவரிப்பார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை அவர்களால் விவரிக்க முடியாது. எனவே நினைவுகள் அப்படியே இருக்கின்றன. அவை ஒட்டிக்கொள்வதில்லை," என்று அவர் வாதிடுகிறார். "காலப்போக்கில் அந்த நினைவுகளை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொள்கிறோம், அவை மிக விரைவாக மங்கிவிடுகின்றனவா, அவை எந்த அளவுக்கு நனவான நினைவுகள், அவற்றைப் பற்றி நாம் உண்மையிலேயே பிற்காலத்தில் சிந்திக்க முடியுமா என்பதே முக்கியமான கேள்விகள் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், ullstein bild via Getty Images படக்குறிப்பு, குழந்தைகள் பிற்காலத்தில் அணுக முடியாத நினைவுகளை உருவாக்குகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவை போலியான நினைவுகளாக இருக்க முடியுமா? பேராசிரியர் கேத்தரினின் கூற்றுப்படி, "மக்கள் தங்கள் முதல் நினைவு என்று நம்பும் ஒன்று உண்மையில் அவர்களின் முதல் நினைவா என்பதைத் தீர்மானிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது குழந்தைப் பருவ மறதி பற்றிய நமது புரிதலை மேலும் குழப்புகிறது." நம்மில் சிலருக்கு, நாம் குழந்தையாக இருந்தபோது நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் நினைவுக்கு வரலாம். "அத்தகைய நினைவுகள், உண்மையான அனுபவங்களின் அடிப்படையிலான துல்லியமான நினைவுகளாக இருக்க வாய்ப்பில்லை." என பேராசிரியர் கேத்தரின் கூறுகிறார். "நினைவைப் பற்றிய விஷயம் என்னவென்றால், அது எப்போதும் மறுகட்டமைப்பை சார்ந்தது தான். எனவே யாராவது உங்களிடம் ஏதாவது சொன்னால், அதைப் பற்றிய போதுமான தகவல்கள் உங்களிடம் இருந்தால், முற்றிலும் உண்மையானதாக உணரக்கூடிய ஒன்றை மூளையால் மீண்டும் உருவாக்க முடியும்," என்று அவர் விளக்குகிறார். "நாங்கள் இங்கே உண்மையில் பார்ப்பது விழிப்புணர்வு நிலை, அதைப் பற்றி துல்லியமாக விவரிப்பது என்பது முடியாத விஷயம்" என்று கேத்தரின் கூறுகிறார். பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, 'குழந்தை பருவ மறதி நோயைச் சுற்றியுள்ள மர்மம், நாம் யார் என்பதன் சாரத்தைப் பேசுகிறது'. "இது நமது அடையாளத்தைச் சார்ந்தது. வாழ்க்கையின் முதல் சில வருடங்களில் நடந்தவற்றை நாம் மறந்துவிடுகிறோம் என்ற கருத்து, தனிநபர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு கடுமையான சவால்களை விடுக்கிறது என்றே நான் நம்புகிறேன்." என்கிறார் பேராசிரியர் டர்க்-பிரவுன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg91qe356po
2 weeks 5 days ago
Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 09:23 AM இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை தமிழகம் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 5.9.2020-ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸ் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் கொழும்பில் கைப்பற்றப்பட்டு துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர். விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான விசேட முகாமில் தங்க வைக்கப்பட்டார். அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று புதன்கிழமை (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள்,அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார். விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் விசேட முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/226023
2 weeks 5 days ago
Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 08:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் உள்ளன. எனவே கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கூடுதல் பிராந்திய சக்திகள் இருப்பதால் அது ஒரு வகையான சமநிலைக்கு வழிவகுக்கும் என்ற கருத்துடன் உடன்பட்டாலும், பிராந்திய பிரச்சனைகளுக்கு பிராந்திய தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் அந்த தீர்வுகளைக் கண்டறிய பிராந்தியத்திற்குள் போதுமான திறன் உள்ளது. எதுவும் கல்லில் எழுதப்படவில்லை. எனவே வேறு எந்த பயனரிடமிருந்தும் உதவி அல்லது ஆலோசனை பெற்றால் மோதலுக்கு வழிவகுக்க கூடும் என இந்திய கடற்படை அதிகாரி அட்மிரல் தினேஷ் கே. திரிபதி தெரிவித்தார். 12 ஆவது காலி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பிராந்திய பிரச்சனை என்னவென்றால், அதிக அளவு எரிசக்தி, அதிக அளவு வர்த்தகம், பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் உள்ளன. எனவே, கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கூடுதல் பிராந்திய சக்திகள் இருப்பதால், அது ஒரு வகையான சமநிலைக்கு வழிவகுக்கும் என்ற கருத்துடன் உடன்படுகிறேன். மேலும், நாம் அனைவரும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைவரும், பிராந்திய பிரச்சனைகளுக்கு பிராந்திய தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். மேலும், அந்த தீர்வுகளைக் கண்டறிய பிராந்தியத்திற்குள் போதுமான திறன் உள்ளது. அதுவே முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழியாகும். ஆனால், எதுவும் கல்லில் எழுதப்படவில்லை. எனவே, கடல்களின் வேறு எந்த பயனரிடமிருந்தும் உதவி அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், அது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாததாகி, மோதலுக்கு வழிவகுக்கக்கூடாது. “உரையாடல்” என்பது ஒன்றாகச் சிந்திக்கும் கலை என்று வில்லியம் ஐசக்ஸ் கூறியுள்ளார். அந்த வகையில், பல்வேறு பங்கேற்பாளர்களுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், போட்டியிடும் நிலைகளிலிருந்து ஒரு பகிரப்பட்ட புரிதலுக்கு செல்ல இந்த கலந்துரையாடல் உதவுகிறது. இன்றைய விவாதத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, வெளிப்படையாகத் தோன்றும் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் மாறிவரும் இயக்கவியல் என்ன? இந்தியப் பெருங்கடல் பார்வை என்பது வர்த்தகம், செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஒன்றிணையும் இடமாகும். அது பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, புவியியலின் தன்மையின் காரணமாக உலகம் முழுவதற்கும் முக்கியமானது. எனவே, ஒன்றிணைதல் என்பது, வளங்கள், செழிப்பான பொருளாதாரங்கள், வர்த்தகப் பாதைகள், பல்வேறு கடலோர நாடுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், இவை அனைத்தும் பல சிக்கலான புள்ளிகளில் நமக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இது அதிக மக்கள் தொகையையும் குறிப்பிடுகிறது. உலகின் மக்கள் தொகையில் சுமார் 35 முதல் 40ம% பேர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். எனவே, இங்கு ஒரு வாய்ப்பும் உள்ளது, ஒரு சவாலும் உள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய இயக்கவியல்கள் என்ன என்பதை கூறுகிறேன். முதலாவதாக, வெளிப்படையாக, சிந்தனையின் வேகத்தில் வேகமாகப் பாயும் தொழில்நுட்பமாகும். இதுதான் எங்கும் ஆபத்தின் கணக்கீட்டை எழுதுகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், குறைந்த விலை வணிக ரீதியாக கிடைக்கும் ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா அமைப்புகள் அரசு சாரா சக்திகளின் கைகளில் இருப்பது, மக்களை அச்சுறுத்துகிறது. உங்களுக்கு முன்வைக்க விரும்பும் இரண்டாவது இயக்கவியல், செல்வாக்கின் சங்கமம் என்று அழைப்பது. ஏனெனில், நாடுகளின் மூலோபாய நலன்கள் உருவாகி வருகின்றன. மேலும், வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒரு போட்டி உள்ளது. இது வெளிப்படையாக, மாநிலங்களுக்கு இடையில், பிராந்திய மற்றும் கூடுதல் பிராந்திய ரீதியாக உள்ளது. எனவே, நிலப்பரப்பு, அல்லது கடல் அளவைப் பயன்படுத்தலாம், இது சிக்கலான தன்மை மற்றும் போட்டியால் குறிக்கப்பட்டுள்ளது. வெள்ளை கப்பல் போக்குவரத்து குறைந்து வருவதைக் காண்கிறோம். நான் என்ன பேசுகிறேன் என்பதை பல்வேறு சர்வதேச எதிர்கால மையங்கள் பாராட்டும் என்று நம்புகிறேன். மேலும், மூன்றாவது இயக்கவியல் காலநிலை மாற்றம் ஆகும். புயல்கள் மிகவும் வன்முறையாகவும் கணிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகள் வேகமாக அழுத்தத்தில் உள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கடந்த 50 ஆண்டுகளில் கடல்சார் உயிரினங்களில் 60மூ சரிவை சுட்டிக்காட்டுகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையேயான குழு, உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி சென்டி கிரேடுக்கு உள்ளேயே பவளப் பாறைகளில் 70 முதல் 90% இறந்துவிடும் என்று கணித்துள்ளது. கிட்டத்தட்ட 330 மில்லியன் மக்கள் கூறிய அனைத்தாலும் பாதிக்கப்படுவார்கள். எனவே, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35% பேருடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருக்கிறோம். தாமதமாக வெடிக்கக் கூடிய குண்டில் அமர்ந்திருக்கிறோம். இந்தியாவின் மிக உயர்ந்த பார்வை, ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது நாகரீக தர்மமான ஒரு குடும்பம் என்ற உணர்வோடு ஒத்திருக்கிறது. உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பும் மூன்று வழிகள் உள்ளன. முதலாவது, நாம் உண்மையிலேயே உள்ளடக்கிய கடல்சார் கள விழிப்புணர்விற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் நாம் உறுதி செய்ய வேண்டிய முதல் விஷயம். இதற்கு உள்நாட்டு அளவில் தொடர்பு மற்றும் தகவல் பகிர்வு வலைப்பின்னல்கள் தேவை. இரண்டாவதாக, நெகிழ்வான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும்இ கடல்சார் கேபிள்கள் மற்றும் எரிசக்தி குழாய்களை முக்கியமான பகிரப்பட்ட உலகளாவிய உள்கட்டமைப்பாக அங்கீகரிக்க வேண்டும். அதில் எந்த விவாதமும் அல்லது சந்தேகமும் இருக்க முடியாது. மேலும், இணைய அச்சுறுத்தல்கள், கடற்கொள்ளை, கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக ஒரு கூட்டுப் பாதுகாப்பையும் கொண்டிருக்க வேண்டும். காலநிலை சார்ந்த பேரழிவுகளுக்கு எதிராக நெகிழ்வாக இருக்க வேண்டும். மேலும், பேரழிவுக்கான நெகிழ்வான உள்கட்டமைப்பிற்கான கூட்டணியை முன்மொழிகிறேன். https://www.virakesari.lk/article/226017
Checked
Wed, 10/15/2025 - 06:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed