புதிய பதிவுகள்2

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
2ம் நாள் ஆட்ட முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் தலை கீழ் மாற்றத்தை தந்து விட்டிருந்தன. முன்னாள் முதல்வர் பதவி இழக்க அவர் இடத்தை கெட்டியா பிடித்து கொண்டு சத்தமில்லாமல் முதல்வர் கதிரையில் அமர்ந்து கொண்டார் நேற்றைய துணைமுதல்வர் சுவி அவர்கள். ஆனால் இன்றைய துணை முதல்வரோ, இது நிரந்தரமில்லை, நாளை தானும் அதையே செய்வேன் என தன் ஆதரவாளர்களிடம் சூளுரைத்ததாக தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன. இவ்வாறு பலரும் பலவாறு தடுமாறிய போதும், எதற்கும் கலங்காத உறுப்பினர் செம்பாட்டான் தொடர்ந்து இரெண்டாம் நாளாக கேண்டீனில் உட்கார்ந்து ஹாயாக முட்டை கோப்பி குடித்துகொண்டிருந்தார் என்பது மேலதிக செய்தி. சுவி 30 🪑 வாதவூரான் 30 ரசோதரன் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 வாத்தியார் 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 கந்தப்பு 20 நுணாவிலான் 10 பிரபா 10 செம்பாட்டான் 00 🐥 இப்போ இருக்கும் 218 ஐ அடிக்க வே திணற வேண்டி வரும். ஆனால் பிட்சில் எந்த பிழையும் இல்லை. தெ. ஆ - இதை ஒரு ஒருநாள் ஆட்டம் போல அணுகினால் வெல்லலாம். எதிர் மறை அணுகுமுறை பலந்தராது.

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

1 month 3 weeks ago
இந்தத் தகவலை ஆங்கில பிபிசி தளத்தில் பார்த்த பின்னர் தான் கிருபனின் வீடியோ பார்த்தேன். ஒரு விமானம் மேலெழும் போது மிக முக்கியமான பகுதியாக இந்த மடிப்பு என்கிற flaps இருப்பதால், ஓடு பாதையில் ஓடுவதற்குத் தரித்து நிற்கும் வேளையில் இந்த மடிப்புகளை இயக்கிச் சரி பார்ப்பார்கள். விமானப் பயணங்களில், இறக்கை மட்டத்திற்குப் பின்னால் இருப்பவர்களுக்கு இந்த மடிப்பின் இயக்கங்கள் தெளிவாகத் தெரியும். மேலெழும் விமானத்திற்கு ஒரு முக்கியமான சவால் stalling எனப்படும் "ஏறா நிலை". வேகமாக ஓடி மேலெழும் போது, பூமியின் ஈர்ப்பு விசையை விமானத்திற்குக் கிடைக்கும் மேலுதைப்பினால் மேவ முடியாவிட்டால் விமானம் stall ஆகி , தொப்பென்று விழும். இந்த stalling மிக உயரத்தில் நிகழ்ந்தால், சமாளித்து விமானம் விழாமல் தடுப்பது இலகு. விமானிகளுக்கு இதைச் செய்யும் பயிற்சி இருக்கிறது. ஆனால், தரைக்கு மிக அருகில் விமானம் stall ஆனால், சமாளிப்பது இயலாத காரியம்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
தாங்கள் சொன்னதுதான் நடக்கப் போகுது. 250க்குக் கிட்ட துரத்த வேணும். உலகமே தென்னாபிரிக்காவின் வெற்றிக்காக. எல்லா தென்னாபிரிக்காவின் முன்னால் வீரர்களும் மைதானத்தில்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு ; விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - இராமலிங்கம் சந்திரசேகர்

1 month 3 weeks ago
12 JUN, 2025 | 03:20 PM தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார். அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/217268

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்!

1 month 3 weeks ago
இலங்கையில் வட மாகாணத்திலேயே வீட்டுத் திட்டத்துக்கு அதிக நிதி வழங்கப்படுகிறது - சோதிநாதன் Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 03:18 PM இலங்கையிலேயே வட மாகாணத்தில்தான், வீட்டுத் திட்டத்துக்காக அதிக தொகையான 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டுத் திட்டத்துக்குத் தெரிவான பயனாளிகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இம்முறை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளமையால் வீட்டுத் திருத்தத்துக்காக 238 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது. வடக்கில் உள்ள உங்களுக்கு தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இந்தளவு நிதி வழங்கப்படுவதில்லை. நாம் முதல் முறையாக அதிகளவு நிதியை வீட்டுத் திட்டத்துக்கு வழங்கியுள்ளோம். இதை நடைமுறைப்படுத்த உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். அதைப்போல வீடுகளை கட்டி முடித்த பின்னர் நீங்கள் அதில் வாழவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217266

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

1 month 3 weeks ago
நீங்கள் எழுதுவதே உங்களுக்கு நினைவில் இருக்காது போல😂? தமிழ் நாடு சென்று ஸ்ராலினுடன் சுமந்திரன் செல்பி எடுத்துப் போட்ட திரியில், போலித் தகவல்களின் பின் சென்று நீங்கள் எழுதியவற்றை மீளச் சென்று பாருங்கள். அங்கேயே உங்கள் "சுமந்திரன் லவ்" வெளிப்பட்டிருக்கிறது. சுமந்திரனையும், மேலதிகமாக சாணக்கியனையும் சில யாழ் கள லவ்வர்ஸ் வெறுப்பதே மதத்தின் அடிப்படையில் என்பது நேரடியாகவே வெளிப்பட்ட திரிகளில் ரொம்ப "பொறுப்போடு நீங்கள் கடந்து போனதை" யாவரும் அறிவர்! அந்தப் பொறுப்புணர்வு (?) 😎 என்னிடம் இல்லை!

செவ்வால் அறணை

1 month 3 weeks ago
மனசு நெகிழ்ந்து போச்சு ........ நல்ல கதை ...... கொஞ்சம் கௌரவம் படத்தில் மேஜர் சுந்தர்ராஜனும் நினைவில் வந்து போகிறார் . ...... ! 😁

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

1 month 3 weeks ago
ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூன் 2025, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. மேகானி நகரில் ஒரு மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கிய இந்த விமானம் விபத்துக்கு உள்ளானதற்கு "மனிதப் பிழை" காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற மீட்புப் படையினர் உள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார். METAR என்றழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது. விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-இன் (FlightRadar24) கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி 'மேடே அழைப்பு' (உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கும் சொல்) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார். அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அது மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர். விமான விபத்திற்குக் காரணம் மனிதப் பிழையா? விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பிபிசி சரிபார்த்த ஒரு காணொளியில் விமானம் கீழே இறங்குவதையும், அது தரையில் மோதும்போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்படுவதையும் காண முடிகிறது. "இதைப் பார்க்கும்போது, இறங்கமைப்பு (Undercarriage) இன்னும் கீழே உள்ளது. ஆனால் மடிப்புகள் பின்வாங்கிய நிலையில் உள்ளன என்பது தெரிகிறது" என்று விமான ஆய்வாளர் ஜெஃப்ரி தாமஸ் கூறுகிறார். இதன் பொருள் மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையில் இருந்துள்ளன, விமானம் புறப்பட்ட உடனேயே இவ்வாறு இருப்பது மிகவும் அசாதாரணமானது என்று அவர் கூறுகிறார். "இறங்கமைப்பு பொதுவாக 10-15 விநாடிகளுக்குள் பின்வாங்கப்படும். பின்னர் மடிப்புகள் 10-15 நிமிடங்களுக்குள் பின்வாங்கப்படும்," என்று விளக்குகிறார் அவர். மற்றொரு நிபுணரான டெர்ரி டோசர், "ஆனால், காணொளியில் பார்த்து 'மடிப்புகள் நீட்டிக்கப்பட்டிருப்பது போலத் தெரியவில்லை' என்று உறுதியாகச் சொல்வது மிகவும் கடினம். ஒருவேளை அவ்வாறு இருந்திருந்தால், ஒரு விமானம் அதன் புறப்பாட்டுச் செயல்முறையை முழுமையாக முடிக்கவில்லை என்பதே அதன் அர்த்தம்" என்கிறார். "இறக்கையின் மடிப்புகள் சரியான நிலையில் இல்லையென்றால், அதற்கு மனிதப் பிழை ஒரு சாத்தியமான காரணமாக இருக்கும். ஆனால் அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு காணொளி தெளிவாகவும் தரமாகவும் இல்லை" என்று பக்கிங்ஹாம்ஷையர் நியூ பல்கலைக் கழகத்தின் முன்னாள் விமானியும் மூத்த விரிவுரையாளருமான மார்கோ சான் கூறுகிறார். போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது. அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது. இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது. தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும். அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார். ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yqnwwjj3zo

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

1 month 3 weeks ago
நாட்டில் 5.17 மில்லியன் குரங்குகள் : விலங்குகளின் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின! 12 JUN, 2025 | 01:51 PM நாட்டில் உள்ள விலங்குகளின் கணக்கெடுப்பு முடிவுகளை விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது. விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி நாட்டில், 5.17 மில்லியன் குரங்குகள் 1.74 மில்லியன் மந்தி குரங்குகள் 2.66 மில்லியன் மரஅணில்கள் 4.24 மில்லியன் மயில்கள் உள்ளன. விலங்குகள் கணக்கெடுப்புக்காக 2.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வனவிலங்குகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பயிர்ச்சேதங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விலங்குகள் கணக்கெடுப்பு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு அறிக்கையின் ஊடாக, வனவிலங்குகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பயிர்ச்சேதங்களை தடுப்பதற்கான உத்திகளை கண்டறிய முடியும். இதனால் எதிர்காலத்தில் பாதுகாப்பான விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முடியும். https://www.virakesari.lk/article/217259

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS (32.1 ov) 212 & 93/7 SA 138 Day 2 - Session 3: Australia lead by 167 runs. CRR: 2.89 • Min. Ov. Rem: 19.5 • Last 10 ov (RR): 35/3 ( இப்பத்தான் பார்க்க நேரம் கிடைத்தது! அவுஸ் கட்டாயம் வெல்லும்!

வெருகல் படுகொலை 38வது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

1 month 3 weeks ago
திருகோணமலை வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு 12 JUN, 2025 | 01:35 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூறப்பட்டது. வெருகல் -ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 வருடங்களாகியும் நீதியும், நிவாரணங்களும் கிடைக்காத நிலையில் குறித்த நினைவேந்தலை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நினைவேந்தல் நிகழ்வில் முதலில் ஆத்ம சாந்தி வேண்டிய பூஜைகள் இடம்பெற்று பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி ஆத்மா சாந்தி வேண்டி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சியின் தவிசாளர் , உதவி தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் இவ் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் இந்த வெருகல் படுகொலையின் 39வது நினைவுதினம் இன்றாகும். (12.06.2025) அன்று நாட்டில் நிலவிய யுத்தசூழல் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கம் சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கி வந்தது. இந்நிலையில் 1986ம் ஆண்டு யூன் மாதம் 12ம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை வண்டில்களை கொண்டுவந்து ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரிய அவர்களினால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் மாட்டு வண்டில்களுடன் சேருவில நோக்கிச் சென்றார்கள். அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி வரும்போது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து பின்னர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லீம் சகோதரர்களாவர். அத்துடன் 16.06.1987 ஆம் ஆண்டு வெளியான வீரகேசரி பத்திரிகையில் “ஈச்சிலம்பத்தை அகதிகளில் 21பேரை காணவில்லை” என தலைப்பிட்டு குறித்த படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் பெயர் விபரங்களுடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும் இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் 1.அண்ணாமலை தங்கராஜா – கிராம சேவகர் (தம்பலகாமம்) - ஈச்சிலம்பற்று முகாம் 2.அலிபுகான் - கிராம சேவகர் (தோப்பூர்) - பூமரத்தடிச்சேனை முகாம் 3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் - (பாலத்தோப்பூர்) - மீள்குடியேற்ற உத்தியோகத்தர் - பூநகர் முகாம் 4.கோணாமலை வேலாயுதம் - பூமரத்தடிச்சேனை 5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி - பூமரத்தடிச்சேனை 6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை 7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர் 8.கனகசபை கனகசுந்தரம் - பூநகர் 9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி - பூநகர் 10.மூத்ததம்பி காசிப்பிள்ளை - பூநகர் 11.கதிர்காமத்தம்பி நாகராசா - பூநகர் 12.வீரபத்திரன் நடேசபிள்ளை - பூநகர் 13.முத்தையா காளிராசா - பூநகர் 14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை - பூநகர் 15.வைரமுத்து சித்திரவேல் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 16.சித்திரவேல் சிவலிங்கம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 17.வீரபத்திரன் சோமசுந்தரம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம் 20.தாமோதரப்பிள்ளை தங்கராசா - ஈச்சிலம்பற்று 21.புண்ணியம் மதிவதனன் - பூமரத்தடிச்சேனை அத்துடன் வீரபத்திரன் சோமசுந்தரன், வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள் https://www.virakesari.lk/article/217261

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

1 month 3 weeks ago
இலண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியாவின் AI 171 என்ற விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்துகிறன. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமை மாலை, உள்ளூர் காவல்துறையின் தகவலின்படி பயணி ஒருவர் விபத்தில் இருந்து தப்பியதாக தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்தவர் பிரிட்டிஷ் குடிமகன் என்று பிபிசி தெரிவித்துள்ளது. விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், "காயமடைந்த பயணிகள் உள்ளூர் அதிகாரிகளால் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார். விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக முதலில் உள்ளூர் காவல்துறை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தது. ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, விமானத்தில் 217 பயணிகள் மற்றும் பதினொரு குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ், ஒரு கனடியன் மற்றும் ஏழு போர்த்துகீசிய பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. விமானத்திலிருந்து குறைந்தது 204 பேர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் காவல்துறை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. விமானம் ஒரு குடியிருப்பு பகுதியில் மோதியது என்று முதலில் தெரிவிக்கப்பட்டபோதும், பிந்திக்கிடைத செய்திகளில் மருத்துவ மாணவர்களுக்கான விடுதி வளாகத்தில் மோதியதாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இடிந்த கட்டிடத்திலிருந்து குறைந்தது 30 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விபத்து நடந்தபோது கட்டிடத்தில் இருந்தார்களா என்பது தற்போது தெரியவில்லை. இந்த விபத்து தனக்கு விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை வருத்துவதாக அனுதாபத்தை பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது அனுதாபங்களை கூறுகிறார். அகமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மற்றும் வருத்தப்படுத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது விபத்து ஏற்பட்டது, மேலும் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்திலிருந்து ஒரு மேடே செய்தி அனுப்பப்பட்டது, ஆனால் பின்னர் அதில் இருந்து எந்த தொடர்பும் வரவில்லை. அகமதாபாத் மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது, அங்கு 5.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியின் செயற்கைக்கோள் படங்கள் அடர்த்தியான கட்டிடங்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதிகளைக் காட்டுகின்றன. சம்பவ இடத்திலிருந்து வியத்தகு படங்கள், பல தொகுதிகள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியில் இருந்து எழும் மகத்தான புகையை அணைக்க மீட்புப் பணியாளர்கள் முயற்சிப்பதைக் காட்டுகின்றன. விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டிலும் அவசர உதவிக்குழுக்களை அமைத்துள்ளதாகக் கூறுகிறது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரும் ஒரு அறிக்கையில், மன்னர் சார்லஸுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது லண்டனுக்குச் சென்ற அவர்களின் விமானம்தான் என்பதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. விபத்தில் அவசர சேவைகளுக்கு உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக ஏர் இந்தியாவின் தலைவர் கூறுகிறார். விமானம் புறப்பட்ட சில நொடிகளில், விமானத்திலிருந்து சிக்னலை இழந்ததாக ஃபிளைட்ரேடார் கூறுகிறது. அந்த நேரத்தில், விமானம் தரையிலிருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் 625 அடி உயரத்தில் இருந்தது. விமானத்தின் இயந்திரங்களை போயிங் நிறுவனத்துக்கு வழங்கும் GE ஏரோஸ்பேஸ், அவர்கள் தங்கள் அவசர குழுவைத் இந்தியாவுக்கு அனுப்புவதாக கூறுகிறது. எங்கள் வாடிக்கையாளருக்கும் விசாரணைக்கும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6:25 மணிக்கு விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக லண்டனின் கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்பட்டவுடன் விபத்துக்குள்ளாகி விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விலுந்து நொருங்கியதாக இந்திய விமான அதிகாரிகள் தெரிவித்தனர். ஃபிளைட்ராடரின் கூற்றுப்படி, விமானம் டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு அதிகாலையில் பயணித்தது. விமானப் பாதுகாப்பு வலையமைப்பு தரவுத்தளத்தின்படி, போயிங் 787 விமானம் சம்பந்தப்பட்ட முதல் விபத்து இதுவாகும். இந்த மாடல் அதன் முதல் பயணிகள் விமானப் பயணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகளில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயணங்களை மேற்கொண்டுள்ளது. போயிங் ஒரு அறிக்கையில், விபத்து குறித்து அறிந்திருப்பதாகவும், மேலும் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

1 month 3 weeks ago
முள்ளியவளையில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட பௌத்த தோரணம் : இனம்தெரியாதோரால் அகற்றல்! Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 01:41 PM முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அண்மையில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம் புதன்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம், முள்ளியவளை கல்லூரிக்கு அருகிலுள்ள தனியார் நிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக அங்கு பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் வெசாக் தோரண அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தது. இதில், “மகிந்த தேரரின் இலங்கை வருகை மற்றும் பௌத்த மத ஸ்தாபித்தலும்” எனும் வாசகத்துடன் பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு இனம்தெரியாத நபர்கள் அந்த பதாதையை கிழித்தெறிந்துள்ளனர். மேலும், பௌத்த தோரணம் அகற்றப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217257

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
🙃............................ நானா அது.................... அதுவரை வேறு எவரும் கமிண்சை தெரிவு செய்யாமல் இருந்ததால் அவரை நான் தெரிவு செய்திருந்தேன். மற்றபடி அதே கிளி தான்................🤣.

இலங்கையின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்பதற்கான வாய்ப்பு - கீதா கோபிநாத் நம்பிக்கை

1 month 3 weeks ago
Published By: VISHNU 12 JUN, 2025 | 06:12 PM (நா.தனுஜா) இலங்கையில் நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை; படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கௌரவ அதிதியாகப் பங்கேற்கவுள்ளார். நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து நடாத்தவுள்ள இம்மாநாடானது பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், கடன்மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல், ஏனைய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஆராய்தல் என்பவற்றைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருக்கும் கீதா கோபிநாத், இம்மாநாடு இலங்கையின் அனுபவங்களில் மற்றும் எதிர்வரும் சவால்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217294
Checked
Thu, 08/07/2025 - 00:30
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed