1 month 3 weeks ago
இருளில் தேடும் தமிழ்ப்பூனை June 13, 2025 — கருணாகரன் — சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது. அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்தது. இரண்டுக்கும் காரணம், நட்புச் சக்திகள் யார், எதிர்ச் சக்திகள் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இந்த மாதிரி வீறாப்புப் பேசுவதால் எதிர்விளைவுகளே ஏற்படும் என்பது. கடந்த காலத்திலும் இதுவே நடந்தது. நட்புச் சக்திகளை எதிர்தரப்பாகக் கருதி வசைபாடுவதும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் துரோகியாக்கி விலக்குவதும் ஒரு நோயாகும். இது உச்சமடைந்தே சக போராளி இயக்கங்களை நோக்கி விடுதலைப்புலிகள் துப்பாக்கி ஏந்தியது. இறுதியில் சிங்களப் பேரினவாதத் தரப்புக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழிவைச் சந்தித்ததே மிச்சமாகும். இதிலிருந்தெல்லாம் யாரும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் சுமந்திரன் சற்று யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள். துணிச்சலாகச் சில விடயங்களையேனும் பேசக் கூடியவர்கள். கொஞ்சமாவது ஜனநாயகத் தன்மையைப் புரிந்து கொண்டவர். தமிழரசுக் கட்சியில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய ஓர் ஆளுமை. அவரே இப்படிப் பேசுகிறார் என்றால்… துக்கப்படாமல் என்ன செய்ய முடியும்? இதையிட்டு ஏன் சிரிப்பு வந்தது என்றால், இந்த மாதிரிப் பேச்சுகளும் எச்சரிக்கைகளும் சவால்களும் சிலருக்கு உளக் கிளர்ச்சியை அளிக்கலாம். ஆனால், மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் தரப்போவதில்லை. ஆகவே இதனால் பயனில்லை. மட்டுமல்ல, இதெல்லாம் வானத்தை நோக்கித் தீர்க்கப்படும் வெற்று வேட்டுகளுக்கு நிகரானவை. இப்படி எத்தனை வெற்று வேட்டுகளைப் பார்த்து விட்டோம் என்பதால் உண்டான சிரிப்பு. அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நன்மையைத் தருவதாக அமைய வேண்டும். அப்படியிருந்தால்தான் அந்த அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு முன்னேற்றம் கிட்டும். அந்த அரசியலும் முன்னகர்வதோடு அதுமுன்னேற்றகரமானதாகவும் அமையும். அதற்கே பெறுமானமும் வரலாற்று மதிப்பும் ஏற்படும். இதற்கு நிதானமும் கூர்மையான நுண்மதியும் விரிந்த மனப்பாங்கும் அவசியம். முக்கியமாக ஜனநாயகப் பண்பு வேண்டும். அப்படியாயின், அந்த அரசியலை முன்னெடுப்போர் வெளிப்படுத்தும் வார்த்தைகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஜனநாயகப் பண்புடனிருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும். இல்லையெனில் அனைத்தும் சிதைந்து விடும். ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் சிதைந்து பின்னடைந்து, தோல்வி கண்டதற்குப் பிரதான காரணம், ஜனநாயக அடித்தளம் சிதைந்ததும் சிதைக்கப்பட்டதுமாகும். ஜனநாயகத்தைச் சிதைத்துக் கொண்டு எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஈடேற்றத்தையும் எவராலும் எந்தச் சக்தியாலும் செய்ய முடியாது. என்பதால்தான் உலகம் ஜனநாயகத்தை முதன்மையாக வலியுறுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிச்சட்டமே ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பெற்ற வெற்றிதான். ஆகவே ஜனநாயகச் சட்டத்திலிருந்துதான் நீங்கள் அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும். எதையும் வலப்படுத்த இயலும். ஜனநாயகச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும்போதும் அதைப் புறக்கணிக்கும்போதும் நீங்களே சிதைக்கப்படுகிறீர்கள். சூழலும் சிதைக்கப்படுகிறது. இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மிக உணர்ச்சி வசப்பட்டுச் சுமந்திரன் அந்த உரையை ஆற்றியிருந்தார். அந்த உரை, தற்போதைய நிலையில் கட்சியின் உறுப்பினர்களை மகிழ்வித்திருக்கலாம். ஆனால், அதற்கு வரலாற்றில் எந்தப் பெறுமானமும் இல்லை. வரலாற்றில் மட்டுமல்ல, சமகாலச் சூழலிலும்தான். ஏனென்றால், அது அவருடைய அலைவரிசையில் சேர்ந்தியங்க வேண்டிய இன்னொரு தமிழ்த்தேசியவாதத் தரப்பான தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சாடியது; எதிர்நிலைக்குத் தள்ளியது. தேர்தல் அரசியலில் போட்டித் தரப்பை எதிரணியாகக் கருதிப் பேசுவதொன்றும் புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. தேர்தல் அரசியலில் போட்டி எந்தளவுக்கு முதன்மை பெற்றிருக்குமோ அந்தளவுக்கு சுழிப்புகளும் தந்திரங்களும் இருக்கும். அதேபோல சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் இடமுண்டு. இதையெல்லாம் மனதிற் கொண்டே எதிரணியின் மீதான விமர்சனங்களையோ கருத்துகளையோ முன்வைக்க வேண்டும். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சுமந்திரன் உட்பட தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒருமுகப்பட்டு அறிவிப்புச் செய்தது, வடக்குக் கிழக்கில் NPP க்கான ஆதரவை வழங்கக் கூடாது. தமிழ்த்தரப்புகளே சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும். இதில் விசேடமாகச் சுமந்திரன் இன்னொன்றையும் சொன்னார், ‘கூட்டாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதை விட தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தலுக்குப்பின்னர் வெற்றியைப் பொறுத்து கூட்டாக ஆட்சியை அமைத்துக் கொள்வோம் என. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரன் கூறிய கருத்துகளை பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சபைகளில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பும் விட்டுக் கொடுப்பு – ஏற்றுக் கொள்ளல் – புரிந்துணர்வு போன்றவற்றின் அடிப்படையில் பேசியிருக்க வேண்டும். முதற்சுற்றுடன் முற்றுப் புள்ளியை வைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து நிதானமாகப் பேசியிருந்தால் இந்த மாதிரியெல்லாம் வார்த்தைகள் வெளிப்பட்டிருக்காது. நெஞ்சை நிமிர்த்தியிருக்க வேண்டியதில்லை. நமக்குச் சிரிப்பையும் துக்கத்தையும் வரவழைத்திருக்க வேண்டியிருந்திருக்காது. வேண்டிய அரசியற் சூழலையும் கெடுத்திருக்கத் தேவையில்லை. உண்மையில் இங்கே என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோமாளித்தனமும் முட்டாள் வேலைகளும்தானே! ஏனென்றால், போரினால் தோற்கடிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்றவற்றில் அனைத்துத் தரப்புமாக இணைந்து வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில், ஆளாளுக்கு பகை கொண்டு எதிர்முனைப்படுவது முட்டாள்தனமன்றி வேறென்ன? இதற்கு நிதானமாகப் பல பரிமாணங்களில் செயற்பட வேண்டும். அதில் ஒன்றே உள்ளுராட்சி மன்றங்களுமாகும். உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவதென்பது, தமிழீழத்தைக் கைப்பற்றுவதோ அதற்கு நிகரான ஆட்சியை நிகழ்த்துவதோ அல்ல. பதிலாக இந்தச் சபைகளின் மூலம் மக்களுக்கான சேவைகளை செழிப்பான முறையில் வழங்கச் செய்வதே. இது ஒரு மிகச் சிறிய எல்லைக்குட்பட்ட பணியே. வேண்டுமானால், சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமது கட்சியை வளர்த்துக் கொள்வற்குச் சில வாய்ப்புகள் கிடைக்கலாம். அதற்கு அப்பால் அரசியல் நன்மைகள் இல்லை. ஆனால், இங்கே நடப்பதோ தமிழீழத்துக்கான இறுதிப்போரைப் போலவே உள்ளது. இதெல்லாம் தமிழ்த் தேசியவாதத் தரப்புகளுக்கிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும். அதாவது யார் 22 மாற்றுத் தங்கம். யார் 24 மாற்று. யார் 18 மாற்று என்ற அடையாளப்படுத்தலின் விளைவு. இதற்கே இந்தப் போர். இதற்கு முன்பு, தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கும் அதற்கப்பாலான தரப்புகளுக்குமிடையிலேயே முரண்பாடுகளும் மோதல்களும் இருந்தன. தமிழ்த்தேசியவாதத் தரப்பு அரசாங்கத்தையும் (ஆட்சியாளர்களையும்) சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பையும் வெளிப்படையாக எதிர்த்தது. மறுதரப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அதை அரசோடும் சிங்களப் பௌத்தத் தரப்போடும் கலந்து பேசியே பெற முடியும் என்று நம்பியது. ஆகவே இரண்டினது வழிமுறையும் வேறு வேறாக இருந்ததால் அவற்றின் நடைமுறையும் வேறாகவே இருந்தது. இதனால் இரண்டு வகையான அரசியல் முறைமைகளை மக்களிடையே கொண்டிருந்தன. இதில் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதில் தீராத நெருக்கடியும் போட்டியும் நிலவியது. விளைவாக துரோகி – தியாகி என்று பொதுவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தன இந்தத் தரப்புகள். உண்மையில் இந்த அசிங்கப்படுத்தலை தமிழ்த்தேசியவாதத் தரப்புகளே செய்தன. அதற்கு மறுதலையான தரப்பு அதைச் செய்யவில்லை. அதற்கான தேவையும் அந்தத் தரப்புக்கு இருக்கவில்லை என்பதை நாம் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். தமிழ்த்தேசியவாதத் தரப்பினுடைய அரசியல் தடுமாற்றங்களும் அரசியல் குறைபாடுகளும் வரட்சியுமே அது தன்னைத் தியாகியாக – சுத்தமான பேர்வழியாக முன்னிறுத்திக் கொள்ள முனைந்ததற்குக் காரணமாகும். தன்னுடைய பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கும் எதிர்த்தரப்பிற்கு வளர்ந்து வரும் செல்வாக்கை மறுதலிப்பதற்குமே எதிர்த்தரப்பைத் துரோகியாகச் சித்தரித்தது. இது எதிர்கொள்ள முடியாத நிலையின் (Unable to face) வெளிப்பாடாகும். ஆனால், மக்கள் இரண்டு தரப்பையும் ஆதரித்தே வந்துள்ளனர். இதுதான் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். அதிலும் தமிழ்த்தேசியவாதத் தரப்புகளுக்கே ஊடக ஆதரவு தாராளமாக இருந்தது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல, சிவில் அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தின் பெருந்திரள், மத நிறுவனங்கள் மற்றும் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர், தமிழ்ப்பரப்பில் இயங்கும் அரசியல் நோக்கர்களும் பத்தியாளர்களும் எனப் பல தரப்புகளின் பேராதரவு தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கே இருந்தது. அதற்கு மறுதலையான தரப்புக்கு இவை எதுவுமே இல்லை. ஆனாலும் அவையும் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. செல்வாக்குச் செலுத்தின. அதாவது, ஆதரவுப் பரப்புரை கிடைக்காது விட்டாலும் பரவாயில்லை. மிகக் கடுமையான எதிர்ப்பரப்புரைகளின் மத்தியிலேயே அவை மக்களின் ஆதரவைப் பெற்றன. இது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான ஓரம்சமாகும். அதாவது மக்கள் ஜனநாயக அடிப்படையில் அனைத்துச் சிந்தனைக்கும் – மாற்று வழிமுறைகளுக்கும் ஆதரவளித்தனர். சமூகம் என்பது அவ்வாறுதானிருக்கும். அது எப்போதும் ஒற்றைப் படையாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அப்படி ஒற்றைப்படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினால் அது ஜனநாயக அடிப்படையை மறுப்பதாகும். அது எதேச்சாதிகாரமாகும். ஆனால். அத்தகைய எதேச்சாதிகாரத்தையே தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் தொடர விரும்புகின்றன. இதற்கு அவை சொல்லும் நியாயமே – நியாயப்படுத்தலே – ‘ஏகபிரதிநிதிகள்‘, ‘ஏக பிரதிநிதித்துவம்‘ என்பது. இத்தகைய சிந்தனையும் அணுகுமுறையும் தவறு. சுமந்திரனின் அன்றைய பேச்சும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் கஜேந்திரன்களின் வெளிப்பாடுகளும் இதையே வெவ்வேறு விதமாகக் காட்டுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இல்லை. சிவில் சமூகத்தினரும் இல்லை. மதத் தலைவர்களும் இல்லை. மக்கள் அமைப்புகளும் இல்லை. ஊடகங்களும் இல்லை. பதிலாக கொம்பு சீவி விடுவதற்கே ஆட்கள் அதிகம். அல்லது கனத்த மௌனம்கொள்ளுதல். இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன. அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது. 2009 க்குப் பிறகு இது மெல்ல உள்ளடங்கிக் கிடந்தது. ஆனாலும் அடுத்த ஆண்டுகளில் மெல்ல மெல்லப் புத்துயிர் பெற்று இப்பொழுது உச்சமடைந்துள்ளது. ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாவடக்கம், கையடக்கம் (மனம்போன போக்கில் எதையும் எழுதக்கூடாது) வேண்டும். இதை ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியம். இப்போது ‘துரோகி’ என்ற புனிதச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று அதை உச்சரிப்போர் சொல்ல வேண்டும். ஏனென்றால் எல்லோரும் துரோகிகளாகவே மாறி மாறிச் சித்திரிக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்கு வலுவான எதிர்ச் சக்தியாக NPP உள்ளபோதும் இந்தக் கூத்துகள் நடப்பதுதான் சிரிப்புக்கிடமானது. https://arangamnews.com/?p=12082
1 month 3 weeks ago
கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல சாணக்கியன் புரிந்துகொள்ள வேண்டும் மு.எம்.பி கோ.கருணாகரம் காட்டம் By kugen (கனகராசா சரவணன்) எனது கட்சியில் இருந்து என்னை இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு நா.உ.சாணக்கியன் யாhர் ? கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி; தாவித்திரிபவன் நான் அல்ல என்பதை சாணக்கியன் புரிந்துகொண்டு ஏனையவர்களை தூற்றுவதை நிறுத்தி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என முன்னாள் நா.உ. கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் நா. உறுப்பினரும் ரொலே கட்சியின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார். மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது இதன் பேது நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் என்பற்றி உண்மைக்கு பறம்பாக பல அவதூறுகளை வெளிப்படுத்தினார் மண்முனை தென் ஏருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் 20 உறப்பினர் கொண்ட அந்த சபையில் தவிசாளர் தெரிவு ஒரு இக்கட்டான நிலையில் நடைபெற இருந்தது. அந்த வகையில் எமது கட்சி உறுப்பினர் திறந்த வாக்கெடுப்பை கோரியது ஆனால் தமிழரசு கட்சி இரகசிய வாக்கெடுப்பை கோரியதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழரசு கட்சியுடன் இணைந்து இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து அங்கு இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. எனவே இந்;த இரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தார் என யாராலும் ஊகிக்க முடியாது இருந்தபோதும் எமது கட்சி உறுப்பனர் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தார் என்பது எப்படி தெரியும் அதனை சாணக்கியன் எப்படி உறுதிப்படுத்தினார் எப்படி என் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இந்த இரகசிய வாக்கெடுப்பில் ரிஎம்வி கட்சியின் உறுப்பினர் ஒருவரை உள் வாங்கியது போல தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் ஏன் தமிழரசு கட்சிக்கு வாக்களித்திருக்கு முடியாது மாவட்டதில் சகல பிரதேசசபையில் தமிழரசு கட்சிக்கு எதிராக ஜனநாயக கூட்டமைப்பு வாக்களிக்கவில்லை மண்முணை ஆரையம்பதி சபை தவிசாளருக்கு ஆதரவாக எமது கட்சி உறுப்பினர் இருந்தார.; அவ்வாறே வியாழக்கிழமை காலையில் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போதுகூட எமது கட்சி உறுப்பினர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தார.; செங்கல பிரதேச சபைக்கு தவிசாளரை ஏனைய நா.உறுப்பினர்கள் தெரிவு செய்திருந்த போது அங்கு சாணக்கியன் வேறு ஒருவரை தெரிவு செய்ததாக அங்கு குழப்பம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது இந்த நிலையில் இவரால் முன்மொழிந்த உறுப்பினர் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவுக்கு சமூகமளிக்காமல் சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவே மண்முணை தென்ஏருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது கட்சி உறுப்பினர் வாக்களித்திருக்கு முடியாது என எப்படி இவர்களுக்கு தெரியும். உண்மையில் சாணக்கியன் என்னை தேடிவந்து பேசினார், தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் வினேர் அவ்வாறு மட்டக்களப்பு மாநகரசபை தெரிவு செய்யப்பட்ட முதல்வர் பிரதி முதல்வர் வந்து சந்தித்தனர் ஏன் இறுதி நேரத்தில் நேற்று எம்.சுமந்திரன் என்னுடன் தொலைபேசியல் தொடர்பு கொண்டார் இதன் போது அவர்கள் எல்லோருக்கும் உங்களுக்கு எதிராக வாக்களிகமாட்டோம் என கூறவில்லை ஆனால் இறுதிவரை சில கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் அவர்கள் எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை எந்தவொரு சபையிலும் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வரவில்லை ஆனால் இன்று முஸ்லீம் காங்கிரஸ், சி.வி விக்கினேஸ்வரனுடன், மற்றும் சஜத் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதுடன் டக்கிளஸ் தேவானந்தாவை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். இருந்த போதும் ஜனநாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 106 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இந்த நிலையில் எங்களுடன் உடன்பாட்டிற்கு வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க கூடிய இடங்களில் வாக்களித்து வருகின்றோம். கடைசிவரை சில கோரிக்கைகள் நிறைவேற்றலாம் என இருந்தோமே தவிர இவர்களுக்கு எதிரா நாங்கள் செயற்படவேண்டும் என்று இருக்கவில்லை எனவே மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாள் தெரிவில் திறந்த வாக்களிப்புக்கு கோரியிருந்தால் அந்த உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும் எனவே அதைவிடுத்து தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை வைப்பதை சாணக்கியன் முதலில் தவிர்க்க வேண்டும் இன்று பிரதேச சபைகளை அமைப்பற்கு கூட பணரீதியான மற்றும் வேறு நலன் சார்ந்த பல டீல்கள் நடைபெறுகின்றது இன்று மாலை பட்டிப்பளை பிரதேச சபைக்கான தெரிவிற்கு நேற்று இரவு 1 மணிவரை ஒரு சில உறுப்பினர்களை சந்தித்து டீல் பேசியுள்ளனர் வாழைச்சேனையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது உறு;பினர் வாக்களித்தார் ஆனால் நா.உ. சாணக்கியன் தென்எருவில்பற்று பிரதேச சபையில் நடந்த சம்பவத்தின் பின்னர் நாங்கள் பயந்து தமிழரசு கட்சிக்கு வாக்களித்தாக பேசியுள்ளமை விசித்திரமானது எனவே இறால் தன்னுடைய தலையில் கழிவை வைத்துகொண்டு நாறுது என கூறுவதைப் போன்று தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு கட்சியை நீதிமன்றம் கொண்டு சென்று மக்களை புதினம் பார்க்க வைக்கும் நீங்கள் என்னை எனது கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு சாணக்கியன் யார்? என்ன அருகதை இருக்கின்றது கடசிக்கு மாறாக நான் நடந்தால் எனது கட்சி என்னு நடவடிக்கை எடுக்கும் நீயாhர் அதை கேட்பதற்கு உனக்கு அந்த அதிகாரத்தை யார் தந்தது? 43 வருடமாக ஒரே கட்சியில் ஒரே கொள்கையுடன் தமிழ் தேசியத்துக்காக ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி அகிம்சை போராட்டமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாகவும் ஒரே கட்சியில் நான் பயணத்துக் கொண்டிருக்கின்றேன் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் தேசிம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன? போராட்டம் என்றால் என்ன? இந்த போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பு என்ன? தமிழ் மக்களின் தேவை என்ன? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் வெறுமனவே கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ஏனையவர்களை தூற்றுவதை விமர்சிப்பதை விடுத்து உங்கள் கட்சியில் இருந்து கட்சிக்கு எதிராக செயற்படுகின்ற நீங்கள் உட்படவர்களுக்கு உங்கள் கட்சியால் நடவடிக்கையை முதலில் எடுங்கள் ஏனைய கட்சியில் என்ன நடக்கின்றது என்பதை எட்டி பார்க்க வேண்டாம் என்றார். https://www.battinews.com/2025/06/blog-post_894.html
1 month 3 weeks ago
ஈரான் தொடர்ந்தும் தாக்குகின்றது – இருவர் பலி மேலும் பலஇஸ்ரேலியர்களிற்கு காயம் 14 JUN, 2025 | 09:35 AM இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. டெலிகிராவ் இதனை தெரிவித்துள்ளது. சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர்,பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை ஏவுகணைகள் தாக்கின என மகென் டேவிட் அலெம் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217419
1 month 3 weeks ago
யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி! 14 JUN, 2025 | 10:15 AM யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/217421
1 month 3 weeks ago
தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை 14 June 2025 இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின், சாட்சிய சேகரிப்பு முயற்சிகளின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த, டர்க்கின் இந்த பயணம் உதவும் என்று, பிரித்தானியத் தமிழர் பேரவை டர்க்குக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 7 தசாப்தங்களாக, தமிழர் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்கள் மற்றும் தொடர்ச்சியான தாக்கங்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன. அத்துடன், இலங்கையின் தமிழ் சமூகங்கள் அரச அடக்குமுறை மற்றும் முறையான துஷ்பிரயோகங்களின் விளைவுகளைத் தொடர்ந்து எதிர் நோக்கி வருவதாக, பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்கு கிழக்கின் பல இடங்களுக்கும் சென்று, தமிழ் பொதுமக்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்றும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். https://hirunews.lk/tm/407092/successive-sri-lankan-governments-are-trying-to-cover-up-the-scars-of-atrocities-against-tamils-british-tamil-council#google_vignette
1 month 3 weeks ago
பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர் எனவே இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா' திட்டம் ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை. ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும். சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே 'சரோஜா' திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும். ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbvriynk01u6qpbsinrqo4iq
1 month 3 weeks ago
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஈரான் "சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது" இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது. “தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இஸ்ரேல்-மீது-நூற்றுக்கணக்கான-பாலிஸ்டிக்-ஏவுகணைகளை-ஏவிய-ஈரான்/50-359193
1 month 3 weeks ago
எங்கட சட்ட மேதைகள் ஒருவருக்கொருவர் அரசியல் குழிபறிப்பதில் நேரத்தை விரயமாக்குவதில் மட்டுமே வல்லவர்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
1 month 3 weeks ago
யார் அவர்?
1 month 3 weeks ago
இதுவரை எங்கள் சட்ட மேதைகளே மறந்துவிட்ட ஒரு காரியம். சிங்கள மக்களாலே நமக்கு நடந்த அனிஞாயங்கள் வெளிகொண்டுவரப்படவேண்டும். இவருக்கு முள்ளிவாய்க்கால் படுகொலை காணொளிகளை காட்டுங்கள்.
1 month 3 weeks ago
தமிழரசுக்கட்சிக்குள் இப்போ இருப்பவர்கள் மக்களுக்காகவோ இந அபிமானத்துக்காகவோ உழைக்க வந்தவர்களல்லர். கட்சியிலுள்ள பெலயீனத்தை வைத்து தங்களை தக்க வைக்கவும் மக்களை ஏமாற்ற வந்தவர்களுமாகும். மக்களின் உணர்வுகளின் மேலேறி பதவிகளை பெற வந்த குள்ள நரிகள். அவர்களுக்கு கொள்கை, இலட்சியம், நீதி, நிஞாயம் என்பதெல்லாம் வெறும் சொற்களே. சுமந்திரனுக்கு கட்சிக்குள் நுழையும்வரை அதன் கொள்கைகள் எல்லாம் தெரியாது. உள்நுழைக்கப்பட்டதும் அதை சிதைப்பதிலும் பதவியை பெறுவதிலும் கண்ணாக இருந்தார் காரியமாற்றினார். கட்சியை வெளியுலகில் தூற்றி அதை நிறைவேற்ற துடித்தார். அன்று தான் செல்லும் வெளிநாடுகளிலெல்லாம் விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டவர், இன்று அவருடனேயே ஒப்பந்தம் செய்துள்ளார், கொள்கைகளை தனது சுய நலத்திற்காக பிரட்டியவர். இப்போ கட்சிகள் கொள்கைகளை மறுத்து செயற்பட்டதாக புலம்புகிறார். அநிஞாயங்களை தட்டிக்கேட்க துணிவில்லாமல் மௌனம் காத்த சிவஞானம் தனக்கேற்ற காரணங்களை காட்டி தன்னை நிஞாயப்படுத்துவதிலும் வெளிக்கிட்டுள்ளார். சாணக்கியன் சிங்களக்கட்சியில் போட்டியிட்டு தோற்று, தமிழ் மக்களின் உணர்வில் சவாரி செய்ய வந்தவர். இவர்களே தலைமைத்துவ போட்டிக்கு அடிபடுகின்றனர். இவர்களை விட்டு வெளியேற்ற மக்களால் மட்டுமே முடியும். பதவிக்காக வரும் சோம்பேறிகளையும், துரோகிகளையும் வீட்டுக்கு அனுப்பி தங்கள் உணர்வுகளை பாதுகாக்க வேண்டும். இல்லையேல் துரோகிகளின் கூடாரத்தை மாற்ற வேண்டும்.
1 month 3 weeks ago
செந்த நாய் நாட்டை விட்டு ஓடி விட்டதாக செய்திகள் ( மேற்கை தவிர) சொல்கின்றன.
1 month 3 weeks ago
வடக்கில் தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் தமிழ்ப் பிரதேசங்களிலும் தனக்கு இராணுவபாதுகாப்பு தரப்படவேண்டும் என்று கேட்டு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை பெற்றவர், தமிழரை துடிக்க துடிக்க கொன்ற படையின் பாதுகாப்போடு எப்படி அந்த மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற முடியும்? எதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மக்களுக்கு இவர் தலைவராக வேண்டும்? வேறு இளிச்ச வாய் கூட்டம் கிடைக்கவில்லையா? இவருக்கு அதிஷ்டம் கொடுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்களா? இதற்கும் சுமந்திரனின் அபிமானிகளால் பதில் தர முடியுமா?
1 month 3 weeks ago
இப்படி சொன்னால் தமிழ்நாட்டைத் தான் பரந்த, சர்வதேச தொல்லியல் சமூகம் தவறான கண்ணோடத்தில் பார்க்கும. இந்திய தொல்லியல் துறை, தொல்லியல் துறை சார் விடயங்களை கேட்க, தமிழ்நாடு அரசியல் கதைப்பது. இந்திய அஅமைச்சர் கூட, விஞ்ஞான பூர்வ தன்மை அல்லது ஆதாரங்கள் போதாது (உண்மையில் அவருக்கு இந்திய தொல்லியல் துரையின் அமைச்சர் மட்டத்தில் அறிவுறுத்தல் ) என்று கருத்து சாரப் பட துறை சார் சமபந்தமாகவே சொல்லி இருந்தார். அப்படி இல்லை போதிய அளவு ஆதாரம் இருக்கிறது என தமிழ் நாடு தொல்லியல் துறை துறைசார் மதிப்பீ ட்டை கொண்டு இருக்குமாயின், வேறு சர்வதேச துறை சார் நிபுணத்துவத்தை நாடி இருக்கிறோம் அல்லது அதை போன்ற வேறு எதாவது துறை சார் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
1 month 3 weeks ago
ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்ற சுமந்திரன், போர் முடிந்தபின்னும் மக்களுக்கெதிராக ஆயுதம் பாவித்த டக்கிலஸிடம் ஆதரவுதேடிப்போன சிவஞானத்தை ஏன் தடுக்கவில்லை? சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஷ்டம்என்று சொன்ன சுமந்திரன், புலிகளைச்சாட்டி நான் வாக்கு கேட்க்கவில்லை என்று சொன்ன சுமந்திரன், தமிழரோடு வாழாதவர், அவர்களின் இன்னல்களில் பங்கெடுக்காதவர், இன்றும் புலிகளை நேசிக்கும் மக்களின் தலைவனாக வர துடிப்பது ஏன்? தமிழருக்கு நடந்த கொடுமைகளை ஜெனிவா சென்று எடுத்துரைக்க பின்னடித்த சுமந்திரன், எப்படி அவர்களுக்கு விடுதலையை வேண்டிக்கொடுப்பார்? மன்னாரில் மனிதப்புதைகுழி தோண்டும்போது நானும் அங்கே சமூகமளித்திருந்தேன் என்று சொன்ன சுமந்திரன், அது கிடப்பில் போடப்பட்ட போது அதை வெளிக்கொணருவதற்கு என்ன செய்தார்? பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதுதான் அந்த மக்கள் சார்ந்து அவரது பொறுப்பா? இதற்கு பிறகும் இலங்கையில் நடந்தது இனவழிப்புதான் என்று நிரூபிப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று வாதாடுகிறார். எங்கோ இருக்கிற கனடா அமைச்சர் துணிந்து, இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான், அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று உரத்து சொல்லி வருவதோடு அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக தடைகளை அறிவிக்கிறது. அது எப்படி கனடாவால் முடிந்தது? தமிழருக்கு நடந்த, நடக்கிற கொடுமைகளை வெளிக்கொணர, எடுத்துச்சொல்ல விரும்பாதவர், அந்தப்பிரச்சனையில் இலங்கைக்கு கால அவகாசம் வாங்கிக்கொடுப்பதற்கு அமெரிக்கா விரைய அவசியமென்ன? சுமந்திரனின் அனுதாபிகள் இதற்கு விளக்கம் தருவார்களா?
1 month 3 weeks ago
வசி கேட்டு கொண்ட படி, போட்டியில் முதலாவது ஆளாக பாஸ்மார்க் 40 ஐ எடுத்துள்ளார் வாதாவூரான். நாளை இன்னும் சிலரும் ஆத்தா நான் பாசாகிட்டேன் என சொல்ல போகிறனர், அதேபோல் மீதி சிலர் ஆடு மேய்க தயாராகின்றனர் 🤣.
1 month 3 weeks ago
நீங்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது. இனிங்ஸ் முடியாவிட்டாலும், 4ம் கேள்விக்கான விடை கிடைத்த விட்டதுதான். ஆகவே முடிவுகளை அறிவிக்கிறேன். சட்டசபையில் உறுப்பினர் கந்தப்பு எழுப்பிய நிலையியல் கட்டளை பிரச்சனையால் ஒரு திடீர் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தபப்பட்டது. இன்னும் ஒரு நாளைக்கு தன் பதவிக்கு ஒரு ஆபத்தும் இல்லை என அவர் அசந்திருந்த வேளையில், தீடீரென நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் சுவி தன் பதவியை இழக்க, நேற்றைய துணை முதல்வர், இன்று முதல்வாராகி தன் சபதத்தை பூர்த்தியாக்கி கொண்டார். வாதவூரான் 40 🪑 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 பிரபா 20 நுணாவிலான் 10 செம்பாட்டான் 00 🐥
1 month 3 weeks ago
வாழ்த்துக்கள்! வெற்றி வீரப்பேச்சுகளை புறந்தள்ளி பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு விசுவாசமாக உழையுங்கள். அவர்கள் மிகவும் விரக்தியடைத்துள்ளார்கள் தமது அரசியற் தலைமைகளின் செயல்களால். மக்களுக்கு தலைவனாக விரும்புகிறவர், தெரிந்துகொள்ளப்பட்டவர்; அவர்களுக்கு சேவையாளராக இருக்கட்டும், இருக்கவேண்டும். அப்போதே அந்த பதவி நிலைக்கும்.
1 month 3 weeks ago
இனியாவது தமிழ் மக்களை உசுப்பேத்தி ஏமாற்றி கொண்டு மறு பக்கத்தால் தாங்கள் ஊழல் மோசடிகள் செய்து கொள்ளை அடித்து கொண்டு இருக்காமல் மக்களுக்கு தேவையான பலன் தரகூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்
1 month 3 weeks ago
இன்னும் இரண்டாம் முறை ஆட்டம் முடியவில்லை. விடை தென்னாபிரிக்காதான். ஆனால் முடியவேணுமோ இல்லையோ. எல்லாத்தையும் கூட்டி நாளைக்குப் போடுவார்.
Checked
Sat, 08/09/2025 - 15:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed