புதிய பதிவுகள்2

வட கொரியாவின் அடுத்த தலைவர் இந்த சிறுமியா? - கிம் ஜோங் உன்னின் வாரிசாக முன்னிறுத்தப்படுபவர் யார்?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கட்டுரை தகவல் Flora Drury BBC News 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முதல் பலதரப்பு சந்திப்பு ஊடக கவனத்தைப் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்தது. ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு இளம் பெண் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ. தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன் கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை. முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது 'அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை' தான் கையில் ஏந்தியதாகக் கூறினார். அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார். அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் 'மதிப்பிற்குரிய' (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார். 'மதிப்பிற்குரியவர்' என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், 'எதிர்காலத் தலைவர்' என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் 'மதிப்பிற்குரிய காம்ரேட்' என்று குறிப்பிடப்பட்டார். பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார். 'கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு' இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது. கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது. ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார். ஆனால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டியுள்ளன. 1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewnlqd8qqxo

அழகான புத்தகக்கடை

1 month 3 weeks ago
அட நம்ம ஊரைப் பற்றியும் அவருக்கு தெரிந்திருக்குமோ? என்ன தேடினால் ஆறுமுகநாவலர் சேனாதிராச முதலியார் இப்படிப்பட்ட பெயருகள் தான் வரும். 10 யூரோ போச்சா? “புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும் இதற்கெல்லாம் முதல் பிரச்சனை முன்னணியில் அழகான பெண்களை விட்டிருப்பார்கள். அப்புறம் என்ன உருவி எடுத்து விடுவார்கள்.

நான் அரசியலில் இருக்கும் வரை அனுரகுமார ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்க மாட்டேன் - லொகான் ரத்வத்தையின் கருத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

1 month 3 weeks ago
அறிக்கை விட்ட மனுசன் கவலையில போய்ச்சேர்ந்திட்டார்.

அதிக எடையில் பிறந்த ஆண் குழந்தை

1 month 3 weeks ago
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சிசேரியன் சிகிச்சை தங்களுக்கு சவாலாக இருந்ததாகவும் குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் தாயும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் இருவரையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/largest-newborn-ever-recorded-was-born-in-world-1757133988

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

1 month 3 weeks ago
23 வருடங்கள் கடந்து அதே நாளில் நடந்த பெரும் அனர்த்தம்! சோகத்தில் இலங்கை எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து 23 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் நடந்த மற்றுமொரு மோசமான விபத்தை நினைவூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில், பேருந்து முதலில் ஒரு ஜீப்புடன் மோதி, பின்னர் பள்ளத்தில் விழுந்தது. இதே நாளில் இந்த நிலையில், நேற்றைய பேருந்து விபத்து, 2002 செப்டம்பரில் நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தை ஒத்துப்போவதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவிக்கின்றனர். 2002 விபத்தின் போது, பேருந்து பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்திருந்துடன், அந்த விபத்தும் இதே நாளிலும், கிட்டத்தட்ட அதே நேரத்திலும் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தொடர் பேருந்து விபத்துகள் இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் பேருந்து விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருவது பெரும் கவலையை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. இவ்வருடம் மே மாதத்தில், கதிர்காமத்தில் இருந்து குருணாகலை நோக்கி சென்ற பேருந்து விபத்தில் 21 பேர் பலியானார்கள். அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு பஸ்ஸரவில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர். இவ்விரு விபத்துகளும் சமீபத்திய எல்ல – வெல்லவாய விபத்து நிகழ்ந்த அதே மாவட்டத்தில் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ella-bus-accident-similar-to-2002-bus-accident-1757080927#google_vignette

கிருஷாந்தி நினைவேந்தல்

1 month 3 weeks ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். காலங்கள் கடந்தாலும் கொலையாளிகள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சாமாதான தேவதையாக வந்த சந்திரிகா இதற்காக ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

"மூன்று கவிதைகள் / 06"

1 month 3 weeks ago
"மூன்று கவிதைகள் / 06" 'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே' இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே நன்று உணர்ந்து காதல் தேடாயோ ? அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே நின்று எனக்கு அறிவுரை தாராயோ ? கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே! அன்பு கொண்ட மங்கை கண்டு துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ? இன்பம் கொட்டும் அழகு வியந்து உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. வெள்ளிப்பூக்கள்' வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர கள்ளம் இல்லாக் காதலர் தழுவ கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே! அல்லிப்பூ நிலா ஒளியில் மலர ஒல்லி இடையாள் அருகில் நெருங்க சொல்ல முடியா இன்பம் பொழிந்ததே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .................................................. 'படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே' படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே கடிக்க கடிக்க போதை இழுக்கிறதே நடிக்க நடிக்க பொய் வளர்கிறதே! உண்மையை உணர்ந்து உலகத்தைப் படித்தால் மண்ணின் வாசனையில் உன்னை நிறுத்தினால் பண்பாடு நிலைத்து மகிழ்ச்சி மலருமே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள் / 06" https://www.facebook.com/groups/978753388866632/posts/31179991941649379/?

The Shawshank Redemption

1 month 3 weeks ago
இல்லை. IMDb இல் பல ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பமான படங்களில் முதலாவது இடத்தில் உள்ளது https://www.imdb.com/search/title/?groups=top_100&sort=user_rating,desc&ref_=ext_shr_lnk நான் பல தடவைகள் பார்த்தும் இன்னும் அலுக்கவில்லை! ஆனாலும் எனது விருப்பமான படம் Pulp Fiction. இங்கிலாந்துக்கு வந்த பின்னர் திரையில் பார்த்த இரண்டாவது படம்! எப்படியும் 20 தடவைக்கு மேல் VHS, DVD, BlueRay, Streaming இல் பார்த்திருப்பேன். எனக்கு பிடித்த லைன்! "I'm Winston Wolf, I solve problems”

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

1 month 3 weeks ago
யாழ்.கள உறவு... அஜீவன் இன்று, (06.09.2025) காலமானார். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏 தகவல்: @தனிக்காட்டு ராஜா
Checked
Wed, 10/29/2025 - 23:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed