1 week 1 day ago
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் ! 04 Oct, 2025 | 11:09 AM டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை (Age Verification) கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, குளோபல் விட்னஸ் நிறுவனம், ஏற்கனவே தேடல் வரலாறுகள் நீக்கப்பட்ட புதிய தொலைபேசிகளில், 13 வயதுடையவர்களைப் போல உருவகிக்கும் 7 புதிய டிக் டொக் கணக்குகளை இங்கிலாந்தில் உருவாக்கியது. டிக்டொக் கணக்கை ஆரம்பிக்க குறைந்தபட்ச வயதெல்லை 13 ஆகும். டிக்டொக் இன் ஆதரவுப் பக்கத்தின்படி, 'கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறை' (Restricted Mode) என்பது "பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள்" உட்பட "அனைவருக்கும் வசதியாக இருக்காது" என்று கருதப்படும் உள்ளடக்கத்தை மட்டுப்படுத்துகிறது. இருப்பினும், 13 வயதுடையவர்கள் என்று குறிப்பிட்டும், கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறையைப் பயன்படுத்தியும் உலாவிய பயனாளர்களுக்கு, டிக்டொக் இன் தேடல் பரிந்துரைகள் "அதிக பாலியல் தன்மையுடன்" இருந்ததாக குளோபல் விட்னஸ் தெரிவித்துள்ளது. குளோபல் விட்னஸ் உருவாக்கிய சோதனை கணக்குகளில் மூன்றிற்கு, பயனர் முதல் முறையாக தேடல் பட்டியை கிளிக் செய்தபோதே பாலியல் ரீதியான தேடல் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மேலும், கணக்கைத் தொடங்கிய பிறகு சில கிளிக்குகளில் அனைத்து ஏழு சோதனை பயனர்களுக்கும் ஆபாச உள்ளடக்கத்தை டிக்டொக் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்ததாக அறிக்கை கூறுகிறது. "டிக்டொக் ஆபாச உள்ளடக்கத்தை சிறுவர்களுக்குக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல எங்கள் வாதம். டிக்டொக் -இன் தேடல் வழிமுறைகள் இளையவர்களை ஆபாச உள்ளடக்கத்தை நோக்கி செயலூக்கத்துடன் தள்ளுகின்றன" என்று குளோபல் விட்னஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது. டிக்டொக் -இன் சமூக வழிகாட்டுதல்கள் நிர்வாணம், பாலியல் செயல்பாடு மற்றும் பாலியல் சேவைகள் கொண்ட உள்ளடக்கத்தையும், இளையவர்களை உள்ளடக்கிய பாலியல் ரீதியான ஆலோசனைகள் அல்லது கணிசமான உடல் வெளிப்பாடு கொண்ட உள்ளடக்கத்தையும் தடை செய்கின்றன. இந்த அறிக்கை குறித்து, டிக்டொக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, "இந்த கூற்றுகள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக அவற்றை விசாரணை செய்யவும், எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றவும், எங்கள் தேடல் பரிந்துரை அம்சத்தில் மேம்பாடுகளை ஆரம்பிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், டிக்டொக் இளம் பருவத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அம்சங்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். டிக்டொக், வயது கண்டறிதல் முறைகளைப் பயன்படுத்தி உலகளவில் மாதந்தோறும் சுமார் 6 மில்லியன் வயது குறைந்த கணக்குகளை அகற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/226861
1 week 1 day ago
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட 04 Oct, 2025 | 04:11 AM (எம்.ஆர்.எம்.வசீம்) அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு இதுதொடர்பில் ஆலாேசனை வழங்கிய அரசாங்கமும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் அதனை செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்து. ஆனால் இந்த நடவடிக்கையில் தலையிட்டிருந்த நாணய நிதியம் தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மிகவும் மோசமான முறையில் விமர்சித்திருக்கிறது. அதாவது 2028ஆகும்போது நாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் நாங்கள் 2028இல் பாரியதொரு தொகை கடன் செலுத்த வேண்டி ஏற்படுகிறது. அதேநேரம் கடன் மறுசீரமைப்பு குறைகிறது. 2028இல் எங்களுக்கு கடன் மீள செலுத்த முடியாமல் போனால், எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. கடன் குறைப்பும் வட்டியும் கணக்கிடப்படுவது, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருட சராசரிக்கு அமைவாகும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க (டைம் பாம்) நேரம்பார்த்து வெடிக்கும் குண்டுகளை புதைத்து விட்டுச்சென்றுள்ளதாக நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம்.சில குண்டுகள் 2025 இறுப்பகுதியில் வெடிக்கும் வகையிலும் இன்னும் சில குண்டுகள் 2028இல் வெடிக்கும் வகையிலே புதைத்துள்ளார். இந்த டைம் பாம்களை எடுத்துக்கொண்டு விழுங்க வேண்டாம் என இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நாங்கள் தெரிவித்திருந்தோம். அதுமாத்திரமல்ல, எங்களுக்கு கடன் செலுத்த முடியாமல் நாங்கள் நெருக்கடிக்குள்ளாகினாலும், வாக்குறுதியளித்த கடன் உரிமையாளர்களுக்கு கட்டாயமாக கடன் தவணைகளை செலுத்த வேண்டும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதனால் கடன் செலுத்துவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் எங்களுக்கு கடன் பெறவேண்டி ஏற்படுகிறது. அதற்காக மக்களின் சொத்துக்கள் வளங்களை விற்பனை செய்தாவது பணம் தேட வேண்டிவரும். அதனால் அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில், சர்வதேச நாணய நிதியம், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ஷ்வினர் இணைந்து பொறி ஒன்றை வைத்திருந்தனர். அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அழகான முறையில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/226840
1 week 1 day ago
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்! 04 Oct, 2025 | 09:59 AM அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226851
1 week 1 day ago
யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா 04 Oct, 2025 | 10:59 AM யாழ் மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது. யாழ். புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் - பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும், "யாழ்ப்பாணம் - 4" (மரபுகளும் நம்பிக்கைகளும்) நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்வில் "யாழ் முத்து" விருது 15 கலைஞர்களுக்கும், இளங்கலைஞர் விருது 15 கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை மாவட்ட செயலர் இமெல்டா சுகுமார் மற்றும் அவரது கணவர் கே. சுகுமார் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் தர்சினி நிதர்சனும், கெளரவ விருந்தினராக அளவெட்டி நாதஸ்வர கலாநிதி இரத்தினவேல் கேதீஸ்வரன் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/226859
1 week 1 day ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு 04 Oct, 2025 | 10:00 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளார். ஆய்வு மாநாடு கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெறவுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையினை ஆற்றவுள்ளார். பல்கலைக்கழகங்களின் பிரதான பணிகளில் ஒன்றாக இருப்பது ஆய்வுச் செயன்முறையாகும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் கல்விசார் ஆய்வுகளில் சிரத்தையுடன் ஈடுபட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. அதற்கமைய, பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு தடங்களில் தமது ஆய்வு நாட்டத்தைக் காண்பித்து வருகிறார்கள். அந்தவகையில், கலைப்பீடத்தின் இளம் கலைமாணி ஆய்வு மாநாடு கடந்த நான்கு வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இம்முறை நடைபெறும் ஐந்தாவது மாநாடு “வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளோடு 16 ஆய்வுத் தடங்களில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. இளங்கலைமாணி கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அளிக்கையாக இம்மாநாடு அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/226849
1 week 1 day ago
திலீபனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - சி.வீ.கே.சிவஞானம் 04 October 2025 உணவுத்தவிர்பை மேற்கொண்டு உயிர்நீத்த திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என இலங்கைத் தமிழரசுக்கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இந்த நிலையில், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். தற்போது தீபங்களுக்கு முன்பாக தலை குனிந்து நிற்பவர்கள் தம்மை தியாகிகளாக நினைக்கின்றனர். இதில் யார் யார்? இராணுவப் புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது தனக்கு தெரியும் எனவும், சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/423594/dont-do-politics-with-dilipan-c-v-k-sivagnanam
1 week 1 day ago
நெத்தன்யாஹுவும், ஹமாஸும் எப்படிப் பாடுபட்டும் டிரம்புக்கு நோபல் பரிசை கிடைக்காமல் செய்யப் பார்ப்பார்கள். நெத்தன்யாஹுவுக்கு தனது பதவியை நீடிக்கவேண்டும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பவேண்டும் என்பதுதான் குறி. ஹமாஸுக்கு பலஸ்தீனர்களை தொடர்ந்தும் அழிவுப் பாதைக்குள் தள்ளுவதுதான் நோக்கம்.
1 week 2 days ago
சக மாணவிகள் விலகி இருந்தனரா? அல்லது bullying செய்தனரா என்றும் விசாரிக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் பெருமையும் திமிரும் பிடித்தவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாகப் படித்தால், விளையாட்டுக்களில் முன்னிலையில் இருந்தால் அல்லது பெரிய பதவிகளில் இருந்தால் (அமைச்சர் சந்திரசேகர், யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ) பொறாமை கொள்ளுவது காலம் காலமாக இருந்துவருகின்றது. இப்படியான ஊத்தைப் பழக்கங்களை பாடசாலையில் வளரவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி மனதைரியத்தை வளர்த்து, மீண்டும் நலமாகி ஓட்டத்தில் முதலாவதாக வரவேண்டும்.
1 week 2 days ago
’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம் அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றது. அது என்னவென்றால் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான். அண்மையில் கூட இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது கூட நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றுதான் அவர் சொல்லியிருக்கின்றார். உண்மையில் நாங்கள் ஒருமித்துதான் இருக்கின்றோம். உதாரணத்துக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் ஒற்றுமையாக வாருங்கள் என்று இந்தியா சொல்கின்றது? ஆக நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அதைவிடுத்து விசுவாமித்திரருக்கு வரம் கொடுத்தது போல் கேட்கத் தேவையில்லை. நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் ஆக அந்தச் சைக்கிள் கட்சியினர்தான் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் உடன்படாமல் இருக்கட்டும். உலகத்தில் எங்கும் எல்லோரும் முழு ஒற்றுமை என்று கிடையாதே. அவர்களை விட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் ஏனைய எல்லாக் கட்சிகளும் ஒருமித்துத்தான் இருக்கின்றன என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/நாங்கள்-எல்லோரும்-ஒற்றுமையாக-உள்ளோம்/175-365699
1 week 2 days ago
299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைக்கப்படவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறை written by admin October 3, 2025 யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணி மற்றும் இறங்குதுறைக்கான வீதி மறுசீரமைப்பு பணிகள் நாளைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் , துறைமுகங்கள் , நெடுஞ்சாலைகள் , போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர். சுமார் 299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறை சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். https://globaltamilnews.net/2025/221093/
1 week 2 days ago
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவும் காவல்துறையினரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம் adminOctober 3, 2025 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் , கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் காவல்துறையினர் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினர். அதன் போது, தினசரி காவல்துறையினரின் உதவியுடனேயே இப்பகுதியில் இருந்து மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும் , மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களுடன் காவல்துறையினர் நல்லுறவில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வடமராட்சி கிழக்கு பகுதியில் ஒரு சிலர் தொடர்ந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பிரதானமான காரணமாக இருப்பவர்கள் காவல்துறையினர். போதை பொருள் கடத்தல்காரர்களிடம், மணல் கடத்தல்காரர்களிடமும் லஞ்சம் வாங்கி விட்டு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கிறார்கள் காவல்துறையினர் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் இந்த வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்திருக்கிறார்கள் அவர்களுடன் சில காவல்துறையினரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள் இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் காவல்துறையினருடைய பெயர் விவரங்கள் யாவும் நாங்கள் எடுத்து, இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் முன்னைய அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது. இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையினரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/221083/
1 week 2 days ago
மற்றொரு பொலிஸ் அராஜகத்தால்… தமிழன் ஒருவன் அடித்துக் கொலை. நாட்டில் எத்தனையோ சிங்கள போதைப் பொருள் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும், துப்பாக்கிதாரிகளும், கொலைகாரர்களும் கைது செய்யப்பட்டு… நல்ல முறையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது…. அங்கு நிகழாத காவல் நிலைய கொலை… தமிழ்ப்பகுதியில் தமிழனை விசாரிக்கும் போது மட்டும் நிகழ்வது…. தமிழனை கேட்க நாதி இல்லாத அடிமை இனம் என்று நினைப்பதால் ஏற்படும் சிங்கள இனவெறி அன்றி வேறு காரணங்கள் இருக்கவே முடியாது. எமது சட்டத்தரணி அரசியல்வாதிகளுக்கு…. தமக்குள் புடுங்குப்பட நீதிமன்றம் போவார்களே தவிர, இதுகளுக்கு குரல் கொடுக்க நேரமும் , மனமும் இல்லை.
1 week 2 days ago
காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும் திட்டத்தின் பிற விபரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது. டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும். ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmgbkklj600tdo29nsk902bng
1 week 2 days ago
03 Oct, 2025 | 05:17 PM இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' (Coldrip) எனப்படும் இருமல் மருந்தை உட்கொண்டதனால் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்த மருந்து விற்பனைக்கும் விநியோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகத் தடை உத்தரவை தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களுக்குள் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு அதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. உயிரிழந்த அந்தக் குழந்தைகள் அனைவரும் 'கோல்ட் ரிப்' உள்ளிட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தமை விசாரணையில் கண்டறியப்பட்டது. விசாரணையில், அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைகால் (Diethylene Glycol) எனப்படும் இரசாயன வேதிப்பொருள் இருந்தது ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. பெயிண்ட், மை போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை துணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவுகள் வெளியாகும் வரை, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ‘கோல்ட் ரிப்’ மருந்து விற்பனையையும் விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச துயரச் சம்பவத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226821
1 week 2 days ago
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (02) மாலை, போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் கபிலன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கபிலனை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர், பொலிஸ் நிலையத்தின் கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று (03) காலை அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இன்று காலை 6:30 மணியளவில், அவரது சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12 மணியளவில், மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு, பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின், அவர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று, பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளைத் தொடர்ந்தார். இந்நிலையில், உயிரிழந்த நபரின் தாய், இன்று (03) காலை பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வந்து, பொலிஸார் தனது மகனை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmgb3c26e00tco29nzci5q8wh
1 week 2 days ago
03 Oct, 2025 | 12:43 PM அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சாகச விளையாட்டுகளுக்குப் பிரபலமான லோஸ் வேகாஸ் நகரில், மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற இளைஞன் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது பயிற்றுவிப்பாளரும் சென்றிருந்தார். அவர்கள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக பாராசூட் திடீரெனச் செயலிழந்தது. இதன் காரணமாக, மிட்செல் டீக்கின் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் இருவரும் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞரான மிட்செல் டீக்கின் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும், அவருடன் சென்ற பயிற்றுவிப்பாளருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, கீழே விழுந்த இருவரையும் விமானம் மூலம் மீட்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாராசூட் செயலிழந்ததற்கான காரணம் குறித்து லோஸ் வேகாஸ் பொலிஸார் மற்றும் சாகச விளையாட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226772
1 week 2 days ago
ட்ரம்பின் உத்தரவை…. இஸ்ரேல் கணக்கில் எடுக்குமா? அப்படி எடுத்து… இஸ்ரேல் போரை நிறுத்தினால்… !!! ? எப்படியும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வாங்கியே தீருவேன் என்று பல வழிகளிலும் “அடாத்தாக அடம் பிடித்துக் கொண்டு நிற்கும் ட்றம்பிற்கு” நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்!? உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த மாதம் நவம்பரில்…. நோபல் பரிசு அறிவிப்பற்கான நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. அது…. ட்றம்பிற்கு கிடைக்காவிட்டால், நோபல் பரிசு அறிவிக்கும் குழுவிற்கு அட்டமத்து சனி ஆரம்பம்தான். 😂 ட்றம்பிற்கு சமாதானத்துக்குரிய, நோபல் பரிசு கொடுத்தால்…. நோபல் பரிசுக்கு அவமானம். கொடுக்காமல் விட்டால்…. ட்றம்பிற்கு அவமானம். எப்படிப் பார்த்தாலும்… இன்னும் ஒரு மாதத்தில் நல்ல கூத்து ஒன்று இருக்கின்றது. 🤣
1 week 2 days ago
குற்றவாளியின் கோரிக்கைகள் மதிப்பளிக்கப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், கோரிக்கைகள் கவனிப்பாரின்றி இழுத்தடிக்கப்படுகின்றன. சொல்லில் மாற்றமேயொழிய பொருளில் மாற்றமில்லையென்றால்; ஏன் அதை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? ஏக்கிய ராஜ்ய ஏமாற்றுக்கதைதான். எங்கள் விடுதலையை நாங்களே போராடி பெற்றுக்கொள்ள விட்டிருக்க வேண்டும். இல்லையேல் தாம் அதை பெற்றுத்தந்திருக்க வேண்டும். தங்கள் தேவைக்கு, பொழுதுபோக்கிற்கு ஒரு சபை, இது கலைக்கப்படவேண்டும். இது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று இனி கனடா சொல்ல முடியாது என இலங்கை எதிர்பார்க்கிறது. தமிழ் இனம் என்கிற ஒரே காரணத்திற்காகவே, இவ்வளவு அவலங்களை நம் இனம் சந்தித்தது. அதை மாற்றியமைக்க இவர்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது? இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம் பக்கம் யாருமில்லை, சந்திப்புகள் இல்லை, விளக்கம் அளிக்க ஒருவருமில்லை. இலங்கைக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க பலர் நம்பக்கமேயுண்டு. இந்த சொல் இலங்கைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. இதை விட கொடூரமான சொல் பயன்படுத்தப்படுவதுதான் பொருத்தமானது. காரணம் ஒரு இனத்தை அழித்து, மவுனமாக்கி விட்டு எதுவுமே நடக்காத மாதிரி, விடுதலை வேண்டியவர்களை மட்டும் குறி வைத்து தடைகளை ஏற்படுத்துவதும் குற்றம் சாட்டுவதும் எந்த வகையில் நிஞாயமானது? இவர்கள் எல்லாம் எங்களுக்கு நிவாரணம், நிஞாயம் பெற்றுத்தரப்போகிறார்களாம் நம்புவோம். இனி இனிப்பிரச்சனை ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை, பொருளாதார பிரச்சனை மட்டுமேயுண்டு, அதற்கான அபிவிருத்தி ஏர்படுத்தப்படுமென அறிவிக்கப்படும். ஐ. நா. இலங்கை பிரச்சனை பற்றி இனி விவாதிக்கப்போவதில்லை. எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் நடைபெறும். போராட யாரும் இல்லை. இது தான் சர்வதேசத்தின் நடுவு நிலை. இதைத்தான் நம் தலைவர்கள் மௌனமாக இருந்து சேர்ந்தியங்கி சாதித்தது. இனிமேல் இவர்களுக்கு அரசியல், பதவி, பணம் எதுவுமிருக்கப்போவதில்லை. அப்பப்போ குரல் எழுப்பி விட்டு போக வேண்டியதுதான்! இது ஒரு சர்வாதிகார ஆட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்லாட்சி மஹிந்தவை காப்பாற்றியது, இந்த ஆட்சி இனப்பிரச்சனை நடைபெறவேயில்லை என சாதிக்கும்.
1 week 2 days ago
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஆதரவளித்தது. நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார் - வெளிநாட்டு ஊடகங்கள்- adaderana.lk BBC NewsLive updates: Trump tells Israel to stop bombing Gaza as...The US president says he believes Hamas is "ready for a lasting peace", as the group seeks further negotiations on his peace proposal.
1 week 2 days ago
அட… பந்தயம் எண்டது வரேல்ல என சொல்லிவிட்டு போனவர் விசுகு அண்ணா. பந்தயமா எண்டு கேட்ட திரியில் படுத்த பாய்கும் சொல்லாமல்…..எஸ் ஆன அண்ணைக்கு தன்னை சொல்லேல்ல எண்டு கோவமாக்கும்🤣
Checked
Mon, 10/13/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed