3 months 2 weeks ago
Published By: Vishnu 31 Aug, 2025 | 10:28 PM இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அதன் விலை 325 ரூபாவாக இருந்தது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 305 ரூபாவிலிருந்து 299 ரூபாவாக அதன் புதிய விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். https://www.virakesari.lk/article/223877
3 months 2 weeks ago
31 Aug, 2025 | 09:03 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும். திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும், அதேநேரம் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றார். பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்வது என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். அதனால் செப்டம்பர் தொடக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/223870
3 months 2 weeks ago
கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன. சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், கிட்டத்தட்ட 400 கி.மீ தூரத்தில் உள்ள பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், US Geological Survey நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது. பட மூலாதாரம், Getty Images உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன. இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது. உதவி கோரும் தாலிபன் அரசு தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான சாலைகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev2r7pkzv9o
3 months 2 weeks ago
140 mm தெறோச்சி & 152 mm தெறோச்சி
3 months 2 weeks ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Planing Trimaran 1 (class name lost in time) OBM (1) 1) 2) (craft name lost in time) At least 2 The Sri Lankan military captured all of these in damaged condition 2 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 3 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1
3 months 2 weeks ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Vessels 1 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 2 (class name lost in time) OBM (1) 1) 2) (craft name lost in time) At least 2 3 (class name lost in time) IBM (1) 1) 2) (craft name lost in time) At least 2
3 months 2 weeks ago
பாகம் - 6 இராணுவ முகாமுடன் இணைந்ததாக அல்லது அருகில் இந்த அகதி முகாம்கள் இருப்பதால் எப்போதும் மரண பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது. இராணுவத் தினரின் அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினரின் 'மூட்' எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே வாழ்வு நிர்ணயிக்கப்படுகின்றது என்றார். 'எங்கேயாவது ஏதாவது பிரச்சினை நடந்தால் அகதிமுகாமுக்குள் வந்து அப்போது தாங்கள் தீர்மானிக்கும், அல்லது ஏற்கனவே அவர்களின் தீர்மானத்தில் உள்ளவர்களைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்கள். முன்னரெல்லாம் இவர்களை பூஸாவுக்கோ, வெலிக்கடைக்கோ கொண்டு செல்வார்கள். இப்போது கொண்டு செல்லப்படுபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்றார். கதை இங்கேயே முடிந்து விடுகிறது என்றார். சிலவேளை பலர் ஊர்க்காவல் படையால் அல்லது இராணுவத்தால் தாக்கப்படுவார்கள். இதைத்தான் செய்கிறார்கள் என்றால் பெண்கள்மீது இவர்கள் இழைக்கும் கொடுமைதான் கடவுளுக்கே பொறுக்காது’ என்றார். முதன்முதல் சுங்கான் குழியைச் சேர்ந்த ஞானசேகரம் பகவதிப் பிள்ளை என்ற பெண்ணை முஸ்லிம் காவல் படையினர் கற்பழித்தார்கள். 2-8-90 இல் சீனன் குடாவில் சசி என்ற பெண்ணை சிங்கள ஊர்காவல் படை யினர் கற்பழித்தார்கள் என்றார். தொடர்ந்து ‘அகதி முகாமுக்குள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் வருவார்கள். இந்த அகதிமுகாம்கள் மேலே கிடுகினால் வேயப்பட்டு படங்கினால் சுற்றிவர கட்டப்பட்டுமிருக்கும். படங்கை விலத்தி வருவார்கள் இவர்களைக் கண்டதும் பயத்தினால் பெண்கள் முகத்தைத் திருப்பி குப்புறப்படுப்பார்கள். டோர்ச் லைட்டை அடித்து முகத்தைக் காட்டு, முகத்தைக் காட்டு என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாங்கள் தீர்மானிக்கும் பெண்ணைக் கொண்டு போவார்கள். கொண்டு போகும் பெண்களை உயிருடன் விடுவதில்லை. சிலவேளை முகாமுக்குள்ளேயே வைத்தும் கற்பழிப்பார்கள். சுற்றிவர குழந்தைகள் இருக்கும். கதறக் கதற ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் போது அதைப் பார்க்கும் குழந்தைகளின் மனோநிலை எப்படிப் பாதிக்கப்படும்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எப்படி அங்கு இருப்பது?’ என்று கேட்டார். குடும்பங்களே சிதறிப்போய்விட்டன. பெரும்பாலான ஆண்கள் மனைவி பிள்ளைகளை விட்டு முல்லைத்தீவுக்கு போய் விட்டனர். புதுக்குடியிருப்பில் சிலர் எண்ணெய் வியாபாரம் செய்கிறார்கள். வவுனியாவில் வாங்கி வந்து புதுக்குடியிருப்பிலோ யாழ்ப் பாணத்திலோ விற்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து திருமலைக்கு வரும் திருமலை மாவட்டப்போராளிகள் மூலமாகவும், திருமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் மூலமாகவும் தான் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்; முகாமில் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றார். 'எந்த ஊர் மக்கள் புதுக்குடியிருப்பில் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். 'பெரும்பாலும் தம்பலகாமம் ஆட்கள்தான் அங்கே இருக் கிறார்கள்' என்றார். பெண்களைக் கொண்டு பேகும் போது தமிழீழம் தானே கேட்டீர்கள். எல்லாம் கிடைக்கும் வாருங்கள் என்று முஸ்லிம் ஊர்காவல் படையினர் கூறுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். (கோவில் குடியிருப்பைச் சேர்ந்த கந்தசாமி என் பவருடைய 18 வயது மகள் 15-10-90 அன்று இவ்வாறு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், இலங்கை சபையில் போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் பாக்கியராசா என்பவரின் மகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தோளில் போட்டுக் கொண்டு போனதாகவும், அவர் உயிருடன் திரும்பவில்லை எனவும் பின்னர் அறிந்தோம்.) தங்களை அலங்காரம் செய்து கொள்ளும் இளம் வயதுப் பெண்பிள்ளைகளெல்லாம் தங்களை அசிங்கமாகக் காட்ட என்னென்ன மாதிரிக் கோலத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் விளக்கினார். தலை இழுக்காமல், முகத்தில் கரி பூசி... என்றெல்லாம் கூறினார். இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் சகோதரங்கள் உண்டு ஆனபடியால் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெண்பிள்ளைகளின் பெயரைக் கேட்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். (ஆரம்பத்தில் நிலைமையை இயல்பாகக் கதைத்தவர் பெயர்களை நான் குறிப்புப்புத்தகத்தில் குறித்ததும் நிறுத்திக் கொண்டார்) 'எனக்கும் பெண் பிள்ளைகள் உண்டு. எங்களுடைய சமூக அமைப்பு இன்னும் மாறவோ, காலத்துக் கேற்ற மாதிரி வளர்ச்சியடையவோ இல்லை - நீங்கள் இந் தத்தர்மசங்கடமான நிலையை புரிந்து கொள்ள வேண்டும்' என்று அவர் வேண்டிக்கொண்டார். சரி ஆண்களுக்கு நடந்ததைக் கூறுங்கள் என்றேன். 5.9.90 அன்று கந்தளாய் அகதி முகாமில் சித்திரவேல் கனகலிங்கம் என்பவர் இராணுவத் தால் தாக்கப்பட்டார். 9.9.90 அன்று தம்பலகாமம் அகதி முகாமைச் சேர்ந்த கந்தசாமி, ஐயாத்துரை ஆகியேர் முஸ்லிம் ஊர்காவல் படையால் கொலை செய்யப் பட்டு 98 கொலனி வயல் வெளியில் பிணமாகக் கிடந்தனர். 96 ஆம் கொலனியைச் சேர்ந்த ஐயாத்துரை என்பவரும் அகதி முகாமிலிருந்து வெளியே செல்லும் போது கைது செய்யப்பட்டார். இவருக்கு வயது 57. மற்றும் முத்துக்குமா ரு (மேற்கு - கொலனி 42 வயது) ராசதுரை (முள்ளியடி - 45 வயது), பேபி ராசா (மேற்கு - கொலனி - 28 வயது). சந்திரசேகரம் (நடுப்பன் திடல் - 36 வயது), ராசதுரையின் மகள் (முள்ளி யடி 13 வயது), கோணநாய கம் (கள்ளிமேடு - 32 வய து). ஜயா (மேற்குக்கொலனி - 28 வயது), சகோதரர்களான மேற்குக் கொலனி வாசிகளான 30 வயதான பாலகிருஷ்ணன், 26 வயதான கோபால கிருஷ்ணன் இவர்களெல்லாம் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 9 ஆம் மாதத்தில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். ஆட்கள் அவ்வளவு தான்! என்றார். கிண்ணியாப் பக்கம் நிலைமை என்னமாதிரி? என்று கேட்டேன். கிண்ணியா, சின்னக்கிண்ணியாவைச் சேர்ந்த 86 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கருதி பணயக் கைதிகள் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். எங்கே தடுத்துவைத்துள்ளனர்? என்றேன், கிண்ணியா நெற்களஞ்சியத்தில் தான் அந்தத் தடுப்புமுகாம் உண்டு. இவர்களைப்பற்றியும் கந்தளாயில் உள்ள அகதிகள் பற்றியும் அறிவது கொஞ்சம் கஷ்டம் என்றார். “சிங்களவரால் ஏதும் தொந்தரவில்லையா?” என்று கேட்டேன். தொந்தரவு இல்லையா? ஜோண் சில்வா என்று ஒருவன் இருக்கிறான்… என்றவாறே தொடர்ந்தார். (தொடரும்)
3 months 2 weeks ago
எங்களை மாதிரியே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
3 months 2 weeks ago
நியாயமான சிந்தனை
3 months 2 weeks ago
இந்தப் பணத்தை கொடுக்க அங்கே பாடசாலை இருக்க வேண்டும். பாடசாலை இருந்தாலும் மாணவ மாணவியர் இருக்க வேண்டும்.
3 months 2 weeks ago
ஹங்கேரி சொல்வதெல்லாம் உண்மையே. ரஷ்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இந்த ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும்...
3 months 2 weeks ago
இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்குமான தன்மான போர்.இதில் உக்ரேன் வெறும் பொம்மை மட்டுமே.
3 months 2 weeks ago
நடன போட்டியின் பிரமாதங்கள். https://youtu.be/PZNdzwVwPRc?si=qXFiRxpHBzFg9in-
3 months 2 weeks ago
முன்னாள் இராணுவத் தலைவர் ஜலுஷ்னி அதிக நம்பிக்கையைப் பெறுகிறார், ஆனால் ஜெலென்ஸ்கி முதல் சுற்று ஜனாதிபதி வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் - கணக்கெடுப்பு கேடரினா டிஷ்செங்கோ — ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025, 17:01 20149 Volodymyr Zelenskyy மற்றும் Valerii Zaluzhnyi. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் உக்ரைனின் ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி வலேரி ஜலுஷ்னியின் மீதான நம்பிக்கையின் அளவு, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை விட அதிகமாக இருப்பதாக ஒரு புதிய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது, ஆனால் ஜனாதிபதித் தேர்தலில், பதிலளித்தவர்களில் சுமார் 35% பேர் ஜெலென்ஸ்கிக்கும், சுமார் 25% பேர் ஜலுஷ்னிக்கும் வாக்களிப்பார்கள். மூலம்: மதிப்பீடு சமூகவியல் குழுவால் ஆகஸ்ட் 21-23, 2025 அன்று நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு . விவரங்கள்: ஜலுஷ்னி மீதான நம்பிக்கை 74% ஆக உள்ளது, இது ஜெலென்ஸ்கிக்கு 68% ஆகவும், உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடனோவுக்கு 59% ஆகவும் உள்ளது. இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், ஜெலென்ஸ்கி மிகப்பெரிய ஆதரவைப் பெறுவார் (அனைத்து பதிலளித்தவர்களிலும் 35.2%), அதே நேரத்தில் ஜலுஷ்னி இரண்டாவது இடத்தைப் பெறுவார் (25.3%). ஜூலை 2025 முதல், ஜெலென்ஸ்கியின் மதிப்பீடு 30.7% இலிருந்து 35.2% ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஜலுஷ்னியின் மதிப்பீடு 24.8% இலிருந்து 25.3% ஆக உயர்ந்துள்ளது என்பதை விளக்கப்படம் காட்டுகிறது. https://www.pravda.com.ua/eng/news/2025/08/31/7528669/
3 months 2 weeks ago
உக்ரைன் போர் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று ஜெர்மனியின் மெர்ஸ் எச்சரிக்கிறார் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் விரைவில் போர்நிறுத்தம் எட்டப்படலாம் என்ற மாயையில் தான் இருப்பதாகவும், ஆனால் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் அதிபர் மெர்ஸ் கூறுகிறார். அனடோலு ஊழியர்கள் |31.08.2025 - புதுப்பிப்பு : 31.08.2025 பெர்லின் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் இராஜதந்திர முன்னேற்றத்தை அடைவது குறித்து சந்தேகம் இருப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார், மோதல் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று எச்சரித்தார். பொது ஒளிபரப்பாளரான ZDF-க்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்த போதிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சமீபத்திய நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகளில் அவருக்கு ஆர்வமின்மையை தெளிவாகக் காட்டுகின்றன என்பதை மெர்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார். "இதை நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கையை நான் கைவிடவில்லை. ஆனால் நான் எந்த மாயையிலும் இல்லை," என்று பழமைவாதத் தலைவர் கூறினார், போர்கள் பொதுவாக இரண்டு வழிகளில் ஒன்றில் முடிவடைகின்றன என்பதை வரலாறு காட்டுகிறது: ஒரு பக்கம் இராணுவத் தோல்வி அல்லது பொருளாதார மற்றும் இராணுவ சோர்வு மூலம். "ஆனால், தற்போது இரு தரப்பிலும் அது நடப்பதாக நான் பார்க்கவில்லை. எனவே இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்பதற்கு நான் மனதளவில் என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன். நாங்கள் அதை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம். ஆனால் உக்ரைனின் சரணடைதலின் விலையில் நிச்சயமாக இல்லை," என்று மெர்ஸ் கூறினார். மேற்கத்திய பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தும், சாத்தியமான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி உக்ரைனுக்கு தரைப்படைகளை அனுப்புமா என்பது குறித்தும் கேட்டபோது, தற்போதைய இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் துருப்புக்களை அனுப்புவது ஒரு முதன்மையான தலைப்பு அல்ல என்று அதிபர் வாதிட்டார். "தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டால் பாதுகாப்பு உத்தரவாதங்களை உருவாக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். மேலும் உக்ரேனிய இராணுவம் நீண்ட காலத்திற்கு தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவளிப்பதே முதன்மையான முன்னுரிமை. அதுதான் முழுமையான முன்னுரிமை" என்று மெர்ஸ் கூறினார். "போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே பல விஷயங்களை செயல்படுத்த முடியும். அதற்கு ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் தேவை, மேலும் இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் நிபந்தனைகளைக் கொண்டிருப்பார்கள். எங்கள் தரப்பில், உக்ரைன் அதன் சுதந்திரம், சுதந்திரம் மற்றும் அதன் சொந்த கூட்டணிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நிரந்தரமாகப் பராமரிக்க வேண்டும் என்பதே நிபந்தனை," என்று அவர் தொடர்ந்தார். இந்தப் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஜெர்மனியின் பங்களிப்பு குறித்த எந்தவொரு முடிவும் - அமைதி காக்கும் துருப்புக்களை அனுப்புவதா அல்லது வான் பாதுகாப்பு ஆதரவை வழங்குவதா - ஜெர்மன் பாராளுமன்றமான பன்டெஸ்டாக் மூலம் தீர்மானிக்கப்படும் என்றும் சான்சலர் தெளிவுபடுத்தினார். "இந்த நேரத்தில் உக்ரைனில் தரைப்படைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. நான் குறிப்பிட்ட ஒரு நாடாளுமன்ற ஆணை, வெளிநாடுகளில் உள்ள ஒவ்வொரு இராணுவ நிலைநிறுத்தலுக்கும் பொருந்தும். உக்ரைன் மீது வான்வெளியைப் பாதுகாக்க மட்டுமே நாம் இருந்தாலும், அதற்கு நாடாளுமன்ற ஆணை நமக்குத் தேவைப்படும்," என்று அவர் கூறினார். அனடோலு ஏஜென்சி வலைத்தளம், AA செய்தி ஒளிபரப்பு அமைப்பில் (HAS) சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் செய்திகளின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டுள்ளது, மேலும் இது சுருக்கமான வடிவத்திலும் உள்ளது. சந்தா விருப்பங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். தொடர்புடைய தலைப்புகள் Germany's Merz warns Ukraine war could continue for exten...Chancellor Merz says he's not giving up hope, but remains under no illusion that ceasefire between Russia and Ukraine could be achieved in near future - Anadolu Ajansı
3 months 2 weeks ago
'பிரஸ்ஸல்ஸ் அமைதிக்கு அல்ல, நீண்ட போருக்குத் தயாராகிறது' என்று கூறி, உக்ரைன் உதவி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஹங்கேரி கடுமையாக சாடியுள்ளது. உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ உதவி மற்றும் ரஷ்யா மீதான தடைகளை ஹங்கேரி எதிர்க்கிறது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மீதான தாக்கத்தை காரணம் காட்டி. ஐசு பைசர் |30.08.2025 - புதுப்பிப்பு : 30.08.2025 லண்டன் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆதரவை ஹங்கேரி எதிர்த்துள்ளது, பிரஸ்ஸல்ஸ் "சமாதானத்திற்கு அல்ல, நீண்ட போருக்கு" தயாராகி வருவதாகக் கூறி, ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ சனிக்கிழமை தெரிவித்தார். டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்திற்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் வந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் முன்னதாக, உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்புக்காக முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருவதாகக் கூறினார். "ரஷ்யா அமைதிக்குத் தயாராகவில்லை. அது நேர்மாறானது. அவர்கள் மேலும் போருக்குத் தயாராகி வருகின்றனர்" என்று அவர் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பீட்டர் சிஜ்ஜார்டோ அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான X இல் கூறினார்: "கோபன்ஹேகனில் இன்று நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், பிரஸ்ஸல்ஸும் பெரும்பாலான உறுப்பு நாடுகளும் அமைதிக்கு அல்ல, நீண்ட போருக்குத் தயாராகி வருகின்றன என்பது தெளிவாகியது." "வீரர்களின் சம்பளம், ட்ரோன்கள், ஆயுதங்கள் மற்றும் உக்ரைன் அரசின் செயல்பாட்டிற்காக அவர்கள் பல்லாயிரக்கணக்கான யூரோக்களை உக்ரைனுக்கு அனுப்ப விரும்புகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார். உறுப்பு நாடுகளை விட கியேவை முன்னுரிமைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தை சிஜ்ஜார்டோ விமர்சித்தார். "அவர்கள் டிரான்ஸ்கார்பதியாவில் உள்ள ஹங்கேரியர்களையும் எங்கள் எரிசக்தி பாதுகாப்பையும் முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள், உக்ரைன் எங்கள் விநியோக பாதையை ஆபத்தில் ஆழ்த்துவது குறித்து ஸ்லோவாக்கியாவுடன் நாங்கள் அனுப்பிய கூட்டு கடிதத்திற்கு இன்னும் பதிலளிக்க மறுக்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார். அவர் ஹங்கேரியின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டினார்: அமெரிக்க-ரஷ்யா சமாதான ஒப்பந்தத்தை மட்டுமே ஆதரிப்பது, உக்ரைனின் விரைவான ஐரோப்பிய ஒன்றிய அணுகலை நிராகரிப்பது, உக்ரேனிய இராணுவத்திற்கு நிதியளிக்க மறுப்பது மற்றும் ஹங்கேரிய எரிசக்தி விநியோகம் மற்றும் வீட்டுச் செலவுகளைப் பாதிக்கக்கூடிய தடைகளை எதிர்ப்பது. https://www.aa.com.tr/en/europe/hungary-slams-eu-over-ukraine-aid-saying-brussels-preparing-for-long-war-not-peace/3673881
3 months 2 weeks ago
ஸ்கூப்: உக்ரைன் போரின் முடிவை ஐரோப்பா ரகசியமாக செயல்தவிர்ப்பதாக வெள்ளை மாளிகை நம்புகிறது. மைக் ஆலன், பராக் ராவிட் facebook (புதிய சாளரத்தில் திறக்கும்) ட்விட்டர் (புதிய சாளரத்தில் திறக்கும்) லிங்க்டின் (புதிய சாளரத்தில் திறக்கும்) மின்னஞ்சல் (புதிய சாளரத்தில் திறக்கும்) கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு அனுப்பியதாகக் கூறும் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் காட்டுகிறார். புகைப்படம்: ஜாக்குலின் மார்ட்டின்/ஏபி. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் முயற்சியை சில ஐரோப்பிய தலைவர்கள் பகிரங்கமாக ஆதரிப்பதாகவும், அலாஸ்கா உச்சிமாநாட்டிற்குப் பிறகு திரைக்குப் பின்னால் இருந்த முன்னேற்றத்தை அமைதியாக செயல்தவிர்க்க முயற்சிப்பதாகவும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் நம்புகின்றனர் என்று ஆக்சியோஸ் அறிந்துகொண்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பாவால் விதிக்கப்படக்கூடிய தடைகளின் பட்டியலை தொகுக்குமாறு கருவூலத் துறையை வெள்ளை மாளிகை கேட்டுள்ளது. இது ஏன் முக்கியமானது: ஜனாதிபதி டிரம்புக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகும் , போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தெளிவான முன்னேற்றம் எதுவும் இல்லை. விரக்தியடைந்த டிரம்ப் உதவியாளர்கள், டிரம்ப் அல்லது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது அல்ல, ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது பழி சுமத்தப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர். திரைக்குப் பின்னால்: வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஐரோப்பிய தலைவர்களிடம் பொறுமை இழந்து வருகின்றனர், அவர்கள் ரஷ்யாவின் நடைமுறைக்கு மாறான பிராந்திய சலுகைகளைப் பெற உக்ரைனைத் தள்ளுவதாகக் கூறுகின்றனர். ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பாவை அமெரிக்கா வலியுறுத்தி வரும் தடைகளில் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல்களையும் முற்றிலுமாக நிறுத்துவதும், அமெரிக்கா ஏற்கனவே இந்தியா மீது விதித்ததைப் போலவே, இந்தியா மற்றும் சீனா மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாம் நிலை வரிகளும் அடங்கும் என்பதை ஆக்சியோஸ் அறிந்திருக்கிறது. "ஐரோப்பியர்கள் இந்தப் போரை நீட்டிக்கவும், நியாயமற்ற எதிர்பார்ப்புகளுக்குப் பின்னால் செல்லவும் முடியாது, அதே நேரத்தில் அமெரிக்கா அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்," என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் ஆக்சியோஸிடம் கூறினார். "ஐரோப்பா இந்தப் போரை அதிகரிக்க விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது. ஆனால் அவர்கள் நம்பிக்கையின்றி வெற்றியின் தாடைகளிலிருந்து தோல்வியைப் பறிப்பார்கள்." அவர்கள் என்ன நினைக்கிறார்கள்: ஐரோப்பியர்கள் ஜெலென்ஸ்கியை "சிறந்த ஒப்பந்தம்" - போரை அதிகப்படுத்திய ஒரு அதிகபட்ச அணுகுமுறை - நிலைநிறுத்த அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது, டிரம்பின் உள் வட்டம் வாதிடுகிறது. பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக நடந்து கொள்கிறார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகிறார்கள். ஆனால் மற்ற முக்கிய ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போரின் முழுச் செலவையும் ஏற்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தாங்களாகவே எந்தத் தோலையும் போடக்கூடாது என்றும் அவர்கள் புகார் கூறுகின்றனர். "ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது சாத்தியமான ஒரு கலை," என்று உயர் அதிகாரி கூறினார். "ஆனால் சில ஐரோப்பியர்கள் டேங்கோவுக்கு இரண்டு பேர் தேவை என்ற உண்மையை புறக்கணிக்கும் ஒரு விசித்திரக் கதை நிலத்தில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்." பெரிய படம்: புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான தனது உச்சிமாநாடுகளுக்குப் பிறகு, அடுத்த கட்டம் புடின்-ஜெலென்ஸ்கி உச்சிமாநாடாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். இதுவரை, ரஷ்யர்கள் மறுத்துவிட்டனர். அதே நேரத்தில், ரஷ்யர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வராவிட்டால், சாத்தியமான பிராந்திய சலுகைகள் குறித்த எந்தவொரு விவாதத்தையும் உக்ரேனியர்கள் நிராகரித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நிலைமை குறித்து டிரம்ப் வெளிப்படையாகவே விரக்தியடைந்தார். "எல்லோரும் நடிக்கிறார்கள். இது எல்லாம் முட்டாள்தனம்," என்று அவர் கூறினார். கியேவ் மீதான ரஷ்யாவின் பாரிய வான்வழித் தாக்குதல்களும், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரேனியத் தாக்குதல்களும், அமைதி நெருங்கி வரவில்லை என்பதை மேலும் சுட்டிக்காட்டின. அவர்கள் என்ன சொல்கிறார்கள்: "ஒருவேளை இந்தப் போரின் இரு தரப்பினரும் தாங்களாகவே அதை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இல்லை. ஜனாதிபதி இது முடிவுக்கு வர விரும்புகிறார், ஆனால் இந்த இரு நாடுகளின் தலைவர்களும் இது முடிவுக்கு வர வேண்டும், மேலும் இது முடிவுக்கு வர வேண்டும் என்றும் விரும்ப வேண்டும்" என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார். ஒன்று அல்லது இரண்டு தரப்பினரும் அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்டத் தொடங்கும் வரை, இராஜதந்திர முயற்சிகளில் இருந்து பின்வாங்குவது குறித்து டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் ஆக்சியோஸிடம் தெரிவித்தார். "நாங்கள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். அவர்கள் சிறிது நேரம் சண்டையிட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கட்டும்," என்று அந்த அதிகாரி கூறினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு டிரம்ப் ஐரோப்பிய தலைவர்களுடனும் ஜெலென்ஸ்கியுடனும் நட்புரீதியான சந்திப்பை நடத்திய போதிலும், சில அமெரிக்க அதிகாரிகள் ஐரோப்பிய தலைவர்களை ஒரு பெரிய தடையாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். மறுபக்கம்: உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஒரு மூத்த ஐரோப்பிய அதிகாரி, அமெரிக்காவின் விமர்சனம் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய தலைவர்கள் டிரம்புடன் ஒரு விளையாட்டையும், அவரது முதுகுக்குப் பின்னால் இன்னொரு விளையாட்டையும் விளையாடுகிறார்கள், உண்மையில் அத்தகைய இடைவெளிகள் எதுவும் இல்லை என்று கூறியது அந்த அதிகாரியைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார். சமீபத்தியது: வெள்ளிக்கிழமை, டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் ஆகியோர் நியூயார்க்கில் சந்தித்தனர். அவர்கள் ஜெலென்ஸ்கி-புடின் சந்திப்பின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர், மேலும் யெர்மக் விட்காஃப்பை கியேவிற்கு முதல் வருகைக்கு அழைத்தார், ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று சந்திப்பை அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. இன்னும் ஆழமாகச் செல்லுங்கள் : "பாலஸ்தீன ஜனாதிபதியை ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதை அமெரிக்கா தடுக்கிறது," - பராக் ராவிட். https://www.axios.com/2025/08/30/trump-accuse-european-leaders-prolong-ukraine-war
3 months 2 weeks ago
இலவசமாக ஓசியில் எனக்கு திருமணம் செய்து வையுங்கோ என்று எதிர்பார்பதைவிட வாரத்தில் 4 நாள் தான் வேலை 3 நாள் வேலை இல்லை என்று ஆசைபடுவது மேலானது.
3 months 2 weeks ago
முன்பே சொன்னது போல இது ஒன்றும் பெரும்பாலும் சோம்பேறித்தனம் இல்லை. பாரிய பொருளாதார போக்கின் விளைவு - முன்பே சுருக்கமாக சொன்னது unearned income / wealth உருவாக்கம், உழைப்பை விட கூடிவிட்டது என்ற பெரும் பொருளாதார போக்கு ( macro economic effect by deliberate policies) என்பதே காரணம். சோம்பேறித்தனம் என்பது தனிப்பட்ட அவதானம், பொருளாதார, சமூக போக்குகளை கருதில் எடுக்காதது. வேறு எந்த தலைமுறையை இந்த நிலைக்கு ஆளாக்கினால் இதே அல்லது ஒத்த போக்கேயே எடுக்கும் அந்த சோம்பேறித்தனம் என்ற விளக்கம் அல்லது புரிவு வருவவது, எம்முடைய தலைமுறையில் இருந்த பொருளாதார அமைப்பு இப்போதும் இருப்பதாக நம்புவதால். மிக இலகுவாக உதராணாம், இருப்பிட வாடை. ஆக குறைந்தது நிகர உழைபின் 40% தாண்டுவது. இருப்பிட வாடை, நிகர உழைப்பின் 33% க்கு கீழேயே இருக்க வேண்டும். வீடு அல்லது வேறு சொத்த்துகள் அவர்களாக வாங்க வேண்டும் என்றால், முன்பு எப்படி அதிக காலம் பெற்றோருடன் வாழ்ந்து சேமித்து வாங்கப்பட்டதோ அது மீண்டும் தலை தூக்குகிறது, அனால் , மேற்கின் கலாசாரம் அதுக்கு ஏற்றதாக நெகிழ்ச்சி இல்லை. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில இருப்பது. (பொதுவாக மேற்றகில் இப்பொது bank of mom and dad இல்லாதவர்கள் வீடு பொதுவாக வாங்க முடியாத நிலை, ஆனால் bank of mom and dad, பெற்றோரை தாக்குகிறது, ஏனெனில் அவர்களின் சேமிப்பு அல்லது அவர்களின் வீட்டை / சொத்தை வைத்து கடன் எடுத்து கொடுப்பது, கண்ணுக்கு தெரியாத systemic risk. இதை பற்றியும் சில ஆய்வுகள் ஆங்காங்கே செய்ய எத்தனிக்கப்படுகிறது, ஆனால் தரவு மிகவும் இரகசியமாக இருப்பதால் மிக கடினம்). விளைவு, உழைத்து அவளவு பலன் இல்லை என்ற நிலை. உழைத்து வாழ்வதை தவிர வேறு பலன் இல்லை என்ற பொதுவான நிலை. ஆகவே, இலகுவான வழியில் வாழ்க்கையை கொண்டு போக இந்த தலை முறை முயல்கிறது. மற்றது வேலை என்பது ஒவ்வொரு தலைமுறைக்கும் கூரப்படைந்து கொண்டே வருகிறது. (எம்முடை நிலையை இங்கு 'ஊன்றிய' தலைமுறையுடன் ஒப்பிட முடியாது. நாம் செய்வது / செய்தது கட்டாய தேவையால்) இதன் மறு பக்கம், மேற்கு அரசாங்களின் சொத்தின் பெறுமதி ஏற்றும் (quantitative easing), rentier capitalism பக்கம் சாய்வாக கொள்கைகள் உ.ம். பணவீக்கம் கணிக்கப்படுவது - இதில் வீடு விலை அகற்றப்பட்டு உள்ளது, ஏனெனில் வசிப்பிடம் கூட முதலீடு என்ற விளக்கம் கொடுத்து. rentier capitalism (கொளகையின் அடிப்படை) பச்சையாக ஊக்குவிப்பது சீனாவின் 2000 ஆண்டு உலக பொருளாதாரத்தில் இணைக்கப்பட்டது, கிட்டத்தட்ட 900 மில்லியன், பொதுவாக மேற்றகிலும் ம மிக குறைவான சம்பளத்தில் வேலை செய்யக்கூடிய வேலை படை உலக வேலைப்ப்படையில் இணைந்தது. ஆனால், இதன் தாக்கம் இதபோதையா பொருளாதார போக்கில் குறைவு, ஏனெனில் சீனர் மேற்கு நாட்களுக்கு சீனர் குடிவரவில்லை. ஆனாலும், பொருளாதார கோட்பாடுகள் சொல்கிறது, எப்படியாவது reversion to (long term) mean (சொத்துக்களின் பெறுமதி, மற்றும் அது அறவிடும் வாடை போன்றவை நீண்டகால சராசரிக்கு) நடந்தே ஆகும் என்று. இப்போதைய சராசரி பெறுமதி ண்ட காலா சராசரி பெறுமானத்தின்ஆக குறைந்தது 30 மடங்கு. அனால் இது எல்லா உள்ளடக்கி
3 months 2 weeks ago
Checked
Tue, 12/16/2025 - 16:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed