அரசியல் அலசல்

ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை

6 hours 16 minutes ago
ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை

on March 27, 2023

20srilanka-imf-01-lfpb-facebookJumbo.jpg

Photo, The New York Times

இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவி கிடைத்திருக்கிறது.

நான்கு வருட காலத்தில் எட்டு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இந்த கடனுதவியின் முதல் தவணைக் கொடுப்பனவு 30 கோடி 30 இலட்சம் டொலர்கள் உடனடியாகவே கடந்த வாரம் கிடைத்தது. இதில் 12 கோடி 10 இலட்சம் டொலர்கள் இந்தியாவிடம் இருந்து பெற்ற தொடர் கடனை (Credit Line) திருப்பிச் செலுத்துவதற்கான முதல் தவணைக் கொடுப்பனவுக்கு பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு முற்றுமுழுதாக நாணய நிதியத்தின் இந்தக் கடனுதவியை நம்பியிருக்கும் அரசாங்கம் ஒரே குதூகலத்தில் இருக்கிறது. நிறைவேற்று சபை உடன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கிய செய்தி வெளியான உடனே கொழும்பில் அரசாங்க ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இவர்கள் பெரும்பாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களே என்று கூறப்படுகிறது. கட்சியின் தலைமையகம் ஸ்ரீகோத்தாவின் முன்பாகவும் பட்டாசுகள் வெடித்தன.

வெளிநாட்டுக் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்து பிறகு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கப்பெற்ற வேறு எந்தவொரு நாட்டிலாவது பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்குமோ தெரியவில்லை.

உள்நாட்டுப் போரில் அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பிறகு ராஜபக்‌ஷர்களிடம் காணப்பட்டதைப் போன்ற குதூகலத்தை ‘பொருளாதாரப் போரை’ வெற்றி கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இப்போது  காணக்கூடியதாக இருந்தது.

இலங்கை இனிமேலும் வங்குரோத்து அடைந்த நாடாக கணிக்கப்படமாட்டாது. தனது கடனை மறுசீரமைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நாடு என்று இலங்கையை நாணய நிதியம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து வழமையான பொருளாதார நடவடிக்கைகளை தொடரக்கூடியதாக இருக்கும் என்று  நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைத்த உடனடியாகவே விக்கிரமசிங்க அறிவித்தார்.

நாணய நிதியத்தின் கடனுதவி முற்றிலும் புதியதொரு யுகத்துக்குள் பிரவேசிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகின்றது என்பது போன்று மக்களுக்கு  நம்பிக்கையூட்டுவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கடன் மறசீரமைப்பு மாத்திரமல்ல நாட்டின் எதிர்காலமே நாணய நிதியத்துடனான உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியிருக்கிறது என்று கூறும் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை இந்த உடன்பாட்டை கைவிட்டால் இலங்கைக்கு மீட்சி இல்லை என்ற நிலைப்பாட்டை கொண்டவராக இருக்கிறார் என்பது தெளிவானது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உடன்பாட்டை சமர்ப்பித்து விசேட உரையாற்றிய ஜனாதிபதி ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மேலதிகமாக பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் மூலமாக புதியதொரு நிதிக்கலாசாரம் உருவாக்கப்படும் என்றும் கூறினார். இந்த உடன்பாட்டுடன் மாத்திரம் இலங்கை திருப்திப்பட்டுவிட முடியாது. இது முடிவு அல்ல. இன்னொரு நீண்ட பயணத்தின் தொடக்கம் என்று அவர் பிரகடனம் செய்தார்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே அதன் கடனுதவி கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் ‘பொருளாதார சீர்திருத்தங்கள்’ என்று சொல்கிறது.

விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் மற்றும் 2023 பட்ஜெட் மூலமாக ஏற்கெனவே நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் கணிசமானளவுக்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாக அதிகரிக்கப்பட்ட நேரடி வரிகளும் மறைமுக வரிகளும் சேவைகள் கட்டணங்களும் ஏற்கெனவே மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்று கூறிக்கொண்டு நாணய நிதியத்தின் வழிகாட்டலில் அரசாங்கம் வரும் நாட்களில் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,  வானளாவ உயர்ந்திருக்கும் வாழ்க்கைச் செலவின் சுமையில் இருந்து விடுபடுவதற்கு  கிடைக்கப்பெற்றிருக்கும் கடனுதவியின் மூலம் நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடாது.

வரும் நாட்களில் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு, எரிபொருட்கள் உட்பட அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் தெளிவான சில சமிக்ஞைகளைக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

தற்போதைய தடவையுடன் சேர்த்து இலங்கை இதுவரையில் நாணய நிதியத்தை 17 தடவைகள் நாடியிருக்கிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் காணப்பட்ட உடன்பாடுகளின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கங்கள் ஒருபோதும் முற்றாக நிறைவேற்றவில்லை. அதனால் கடனுதவியின் முழுத்தொகையையும் அந்த அரசாங்கங்களினால் பெறமுடியவில்லை.

நாணய நிதியத்துடனான உடன்பாடுகளை மதிப்பதில்லை என்ற ஒரு கெட்டபெயர் இலங்கைக்கு இருந்தது. ஆனால், முதற்தடவையாக தற்போதைய அரசாங்கம் முழு நிபந்தனைகளையும் நிறைவேற்றியிருக்கிறது என்று கடந்த வாரம் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன கூறினார்.

மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கூடிய கடுமையான தீர்மானங்களை எடுக்கத் தயங்கிய காரணத்தினால் கடந்த காலத்தில் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கங்கள் தவறியிருக்கக்கூடும்.

ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் அத்தகைய தயக்கம் எதையும் காணவில்லை. முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகள் மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக இலங்கை அதன் வரலாற்றில் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவேண்டுமானால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு  நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விக்கிரமசிங்க அரசாங்கம்  மக்களை ஒரு விதமான ‘பணயக்கைதிகளாக’ வைத்திருக்கிறது.

வழமையாக அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பல்தரப்பு நிதி நிறுவனங்களை நாடுவதை எதிர்க்கின்ற ஜனதா விமுக்தி பெரமுன போன்ற இடதுசாரி கட்சிகளினால் கூட நாணய நிதியத்தை அரசாங்கம் நாடுவதை எதிர்க்கமுடியவில்லை. இது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதனால் ஏற்படக்கூடிய எதிர்கால பாதக விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. உருப்படியான மாற்றுத் திட்டங்களை எதிரணியினால் முன்வைக்க முடியாமல் இருப்பது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

பொருளாதார மீட்சிக்கான சகல நடவடிக்கைகளும் நாணய நிதியத்தின் மூலோபாயத் திட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமானது. நிபந்தனைகளில் சிலவற்றை அரசாங்கம் இன்னமும் பகிரங்கமாக கூறவில்லை என்ற குற்றச்சாட்டும் எதிரணி கட்சிகளிடமிருந்து வருகிறது.

அதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிய விக்கிரமசிங்க தெற்காசியாவிலேயே மிகவும் சிறந்த ஊழல் தடுப்புச்சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தனது அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்று அறிவித்தார். ஆனால், தற்போதைய நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உருப்படியான நடவடிக்கைகளை ஜனாதிபதியினால் எடுக்கக்கூடியதாக இருக்கும் என்று மக்கள் நம்பமாட்டார்கள்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று வரும்போது அண்மைய கடந்த கால பொருளாதாரக் குற்றங்களைச் செய்தவர்களைப் பொறுப்புக்கூற வைக்கவேண்டியது முக்கியமான விடயமாகும்.

ஆனால், கடந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்து கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய விக்கிரமசிங்க வங்குரோத்து நிலையடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து நிலையுறுதிப்படுத்துவதே தனது முன்னுரிமைக்குரிய பணி என்றும் கடந்த கால பொருளாதாரக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியது ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ஆதரவில் ஆட்சியை நடத்தும் அவருக்கு அது விடயத்தில் இருக்கும் சிக்கலை தெளிவாக உணர்த்துகிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் ஆட்சிமுறைச் சீர்திருத்தங்களுக்கும் நாணய நிதியம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதை இலங்கையை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்ததில் ஊழலுக்கும் தவறான ஆட்சிமுறைக்கும் இருக்கும் பிரதான பங்கின் பின்னணியிலேயே நோக்கவேண்டும்.

ஆசியப் பிராந்தியத்தில் ஆட்சிமுறை நாணய நிதியத்தின் உன்னிப்பான கண்காணிப்பின் கீழ் வருகின்ற முதல் நாடாக இலங்கை இருக்கிறது என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இலங்கையில் நிலவும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகளையும் ஆட்சிமுறைக் குறைபாடுகள் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கண்காணித்து கிரமமான அறிக்கைகளை நாணய நிதியம் வெளியிடும். இது உடன்பாட்டின் முக்கியமான ஒரு மைல்கல் என்று அதன் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அந்த அறிக்கைகளைப் பொறுத்தே கடனுதவியின் அடுத்தடுத்த கட்ட கொடுப்பனவுகள் அமையக்கூடும். ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் ஆட்சி நிருவாகம் நாணய நிதியத்தின் ராடாருக்குள்’ வருகிறது.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10770

தமிழர் தாயக கனிமவளச் சுரண்டலும் ; தமிழ்த் தலைமைகளின் பாசாங்கு அரசியலும்

1 day 3 hours ago

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சிங்கள அரசினால் தமிழின ஒதுக்கல், தமிழர்தாயக நில அபகரிப்பும், தமிழர்தாயக கனிமவளச் சுரண்டலும் அதே நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகளுடைய பாசாங்கு அரசியலும், அரசியல் வங்குரோத்துத்தனங்களும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் வளர்ச்சியடையத் தடையாக அமைந்துவிட்டன.

இதேவேளையில் சிங்கள தேசம் தன்னை அரசியல் ரீதியாக இஸ்திரப்படுத்தியதோடு தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமிப்பதிலும் தொடர் வெற்றியடைந்துவருகிறது. ஆனால் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்காக, தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அது பிரயோகித்த பொருளாதாரம் என்பது மிகப்பெரியது.

தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக தன்னுடைய முழு பொருளாதாரத்தையும் செலவழித்ததன் விளைவே இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கும் தமிழ் மக்களும், தாயகமும் இப்போதும் பலிக்கடாவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதுதான் துரதிஷ்டம்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கையின் ஒவ்வொரு பாகங்களையும் குறிப்பாக வட-கிழக்கின் கனிமவளப் பகுதிகளை சர்வதேச நாடுகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப வேலை வாய்ப்புகளை தருவதாக ஆசைவார்த்தைகாட்டி தமிழினத்தின் எதிர்காலத்தை சூனிய மயமாக்கும் செயல்முறையை இன்றைய அரசு மிக சாதுரியமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழர் தாயகத்தில் உள்ள கனிம வளங்களை புவிச்சரிதவியல் அடிப்படையில் பார்ப்போமானால்

1) மயோசின் கால சுண்ணாம்புக்கல். - இது புத்தளம்-பரந்தன்-முல்லைத்தீவு ஆகிய நகரங்களை இணைத்து நேர்கோட்டை வரைந்தால் அதன் வடக்கு பகுதியில் உள்ள பகுதி முழுவதும் சுண்ணாம்புக்கல் கனிம வளத்தை கொண்ட பகுதியாகும்.

2) பிளைத்தோசின்கால வண்டல் மண் படிமம். - இது நீர்கொழும்பிலிருந்து முல்லை தீவை நோக்கி ஒரு கோட்டை வரைந்தால் சுண்ணாம்புக்கல் பிரதேசத்திற்கும் இந்தக் கோட்டுக்கும் இடைப்பட்ட சராசரி 20 மைல் அகலம் கொண்ட பகுதி. இப்பகுதியில் கிறவல் மண்மேடுகள் காணப்படுகிறது. இக்கிறவல் இரும்பத்தாது படிமமாகும்.

3) பளிங்குப்பட்டை பாறை  - இது மகாவிலாச்சி ,அனுராதபுரம், திருகோணமலை ஆகியவற்றை இணைத்து வரையப்படுகின்ற கோட்டுக்கு இருமருங்கிலும் உள்ள பகுதி.

4) அண்மையகால வண்டல் படிவு. - இது பூநகரி, கௌதாரி முனை பகுதியும் பருத்தித் துறையில் இருந்து திருக்கோவில் வரையிலான தமிழர் தாயகத்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் மணல் திட்டிகள். இவைதான் தமிழர் தாயகமான வடகிழக்க்கு நிலப்பரப்பில் காணப்படுகின்ற கனிம வளங்கள்.

தமிழ் மக்களின் உயிர் நாடி

இவை தவிர தமிழர் தாயகத்தின் சுற்றியுள்ள கடற்பரப்பும் அதன் இயற்கை வளங்களுமாகும். இந்த வளங்கள்தான் தமிழர் தாயகத்தின் வாழ்வையும், வளத்தையும் வளப்படுத்த வல்லவை. அவற்றை தமிழ் மக்கள் ஒருபோதும் இழக்க முடியாது இழக்கவும் கூடாது. தமிழ்மக்களுக்கே உரித்தானது.

இந்த வளங்களே தமிழ் மக்களின் உயிர் நாடியுமாகும். கனிம வளங்கள் இந்த வளத்தின் பருத்திதுறையில் இருந்து முல்லைத்தீவு வரையிலும் மற்றும் நிலாவளியிலிருந்து திருக்கோயில் வரையிலுமான கடற்கரையோர பகுதிகள் காணப்படுகின்ற புவிச்சரிதவியலில் குறிப்பிடப்படும் "பிற்கால வண்டல் மண்படிவு" அதாவது இல்மனைட், மொனசைட், படிக மணல் போன்ற கனிம வளங்களை உலகின் பல்தேசிய நிறுவனங்களுக்கும் வல்லரசுகளுக்கும் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது.

தமிழர் தாயகத்தின் கரையோர மீன்பிடி அபிவிருத்தி என்ற பெயரில் இரால் பண்ணைகள், கடல் அட்டைப் பண்ணைகளை உருவாக்குவதற்கு சீன நிறுவனங்களுக்கு பல்லாயிரம் உவர்நீர் நிலப்பரப்புகள் தாரைவார்க்கப்பட்டு இருக்கின்றன. அவ்வாறே திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு கொடுப்பதா? இந்தியாவுக்கு கொடுப்பதா என இரண்டு பகுதியினருக்கும் ஆசைவார்த்தை காட்டி இருபகுதியினடமிருந்தும் நல்ல பண வசூலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

அபிவிருத்தி திட்டங்கள்

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் கைத்தொழில் விவசாய மீன்பிடி அபிவிருத்தி என்ற அடிப்படையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அபிவிருத்தித் திட்டங்களால் தமிழர்தாயகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்ததா? தமிழ் மக்களுடைய பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியதா? என்றால் அது இல்லை என்றே பதில் வரும். வடக்கில் இரண்டு பிரதான கைத்தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

தமிழர் தாயக கனிமவளச் சுரண்டலும் ; தமிழ்த் தலைமைகளின் பாசாங்கு அரசியலும் | Mineral Exploitation And The Politics Of Hypocrisy

காங்கேசன்துறையில் சிமெண்ட் தொழிற்சாலை, இரண்டாவது பரந்தன் இரசாயன தொழிற்சாலைஇந்த இரண்டும் தமிழ் மக்கள் சிலருக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்ததுதான். ஆனால் இந்த தொழிற்சாலைகளால் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மிகப் பயங்கரமானது என்பதனை மறந்து விடக்கூடாது. பரந்தனில் இரசாயன தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆணையிறவிலிருந்து பரந்தன் வரையான பகுதியில் புல் பூண்டுகள் முளைக்க முடியாத அளவுக்கு அந்தப் பகுதியில் உப்பு படிவுகள் படியத் தொடங்கின.

அதனால் அந்தப் பகுதியில் மரஞ்செடிகள் கொடிகள் அழிந்து போயின. யுத்தத்தினால் கடந்த 40 ஆண்டுகளாக அந்த தொழிற்சாலை இல்லாமல் போனதன் பிற்பாடுதான் இப்போது அந்த பிரதேசம் சற்று பச்சை பசேலென தெரிகிறது.

சீமெந்து தொழிற்சாலை

புல் பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் வளரத் தொடங்கி இருக்கின்றன என்பதனை நாம் எம் கண்முன்னே பார்க்க முடிகிறது. அதேபோலத்தான் காங்கேசன் துறையில் உருவாக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலை யாழ் குடாவில் மிக உயர்ந்த நிலப்பரப்பான கீரிமலை பகுதியில் உள்ள சுண்ணாம்புக்களை அகழ்தடுத்து முருங்கனிலிருந்து கொண்டுவரப்பட்ட களிமண்ணையும் மூலப்பொருளாகக் கொண்டே சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த உற்பத்தியினால் வடக்கின் நிலம் தாழ்ந்து கொண்டு சென்றது. அதே நேரத்தில் இந்த சீமந்தை பயன்படுத்தி மாட மாளிகைகளும், கட்டடங்களும், பெரும் அணைக்கட்டுகளும், பாலங்களும் தென்னிலங்கையில் உயர்ந்து வளர்ந்தது என்பதனையும். தொழிற்சாலைக்காக சுண்ணாம்புக்கல் தோண்டி எடுக்கப்பட்டு பெரும் அதாள பாதாளமான பள்ளங்கள் தோன்றின. தொழிற்சாலையில் இருந்து வெளியாகிய நச்சு புகையும், தூசு படலமும் யாழ்குடாவின் வலிகாமப்பகுதிய ஆக்கிரமித்து அங்கிருந்த விவசாய பயிர்களில் படிந்து நாசப்படுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுடைய சுவாசத்தில் கலந்து பல வகையான நோய்களுக்கு வித்திட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழர் தாயக கனிமவளச் சுரண்டலும் ; தமிழ்த் தலைமைகளின் பாசாங்கு அரசியலும் | Mineral Exploitation And The Politics Of Hypocrisy

இத்தகைய பின்னணியிற்தான் 1982 ஆம் ஆண்டு யாழ்பல்கலைக்கழக சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது.   காங்கேசந்துறை தொழிற்சாலையால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றிய ஓர் ஆய்வை யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட. ஓரணி மேற்கொண்டது. பல்கலைக்கழகத்தின் அறிவியல் சார்ந்த 12 மாணவர்களும் புவியியல் துறை பேராசிரியர் பாலச்சந்திரன் தலைமையில் இரு பேராசிரியர்களும், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ஒருவரம் அடங்கியிருந்தனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட மொத்தம் 15 பேரில் இருவரைத் தவிர மீதி 13 பேர் இன்னமும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கிறார்கள். இதற்கான நிதி பங்களிப்பை அன்றைய கால விடுதலைப் புலிகள் நிதிப் பொறுப்பாளராக இருந்த பண்டிதர் வழங்கியிருந்தார். சீமெந்து ஆலையின் உண்மையான கோப்புகளை ஆய்வு செய்வதற்கான முழுமையான ஆதரவை இந்த அணியுடன் இணைந்து ஆலையின் இரசாயனவியல் பொறுப்பதிகாரி சந்திரமௌலீசன் வழங்கியிருந்தார்.

தொழிற்சாலையின் கழிவுகளினால் சூழல் மாசடைவு

 

சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் மிக அதிர்ச்சிகரமானவையாய் அமைந்தன. இந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்குமானால் வலிகாம பிரதேசத்தின் மரஞ்செடி கொடிகள் எதிர்காலத்தில் முழுமையாக அழிந்துவிடும் என்றும் அதேபோல இந்த தொழிற்சாலையின் கழிவுகளினால் ஏற்படக்கூடிய சூழல் மாசடைவும் அதனால் மக்களுக்கு சுவாசப்புற்றுநோய், தோல்ப் புற்று நோய்கள் அதிக அளவில் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனவே இந்த தொழிற்சாலை மூடப்பட வேண்டும் என்பதுதான் அந்த ஆய்வு அறிக்கையின் இறுதி முடிவாகவும் இருந்தது.இந்த ஆய்வறிக்கையைச் சரிபார்த்து அதன்படி சீமெந்துத் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று பரிந்துரைத்தத துறைசார் பேராசிரியர் பின்னாளில் இயற்கை எய்திவிட்டார். மற்றவர் பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றள்ளார். இந்த முடிவின் அடிப்படையிற்தான் ஆலையை மூடுவதற்கான ஒரு மார்க்கத்தை தேடியபோதுதான் அங்கு சுண்ணாம்பு கற்களை உடைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற வெடிபொருட்களும், வெடிக்க வைப்பதற்கான கருவியையும் (எக்ஸ்புளோடர்) விடுதலைப் புலிகளின் தாக்குதல் பொறுப்பாளராக இருந்த சீலனால் எடுத்துச் செல்லப்பட்டன. அதனை அடுத்து தொழிற்சாலை குறிப்பிட்ட காலம் மூடப்பட்டிருந்தது.

தமிழர் தாயக கனிமவளச் சுரண்டலும் ; தமிழ்த் தலைமைகளின் பாசாங்கு அரசியலும் | Mineral Exploitation And The Politics Of Hypocrisy

 

ஆனாலும் காங்கேசன்துறைத் தொழிற்சாலைக்கு அருகில் இருக்கின்ற சுண்ணக்கல் அகழ்ந்தெடுக்கப்பட்டு மிகப் பிரமாண்டமான பள்ளத்தாக்கு பிரதேசத்துக்குள் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் கடல் நீர் புகுந்தால் வலிகாம பிரதேசத்தின் நன்னீர் வளம் முற்றாக பாதிக்கப்படும் என்ற அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது. சுண்ணாம்புக்கல் அகழ்வு இலங்கை தீவைப் பொறுத்தளவில் யாழ்குடாவும் அதனை அண்டிய பகுதிகளும் முற்று முழுதாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயப்பகுதி. ஆனால் மற்றைய பகுதிகள் ஆறுகளை மறித்து கட்டப்பட்ட குளநீர்பாச்சனத்தை கொண்ட பகுதிகள்.

எனவே வடக்கின் விவசாயம் என்பது நிலத்தடிநீரை பெருமளவில் தங்கி இருக்கிறது. சுண்ணாம்புக்கல் நிலவுருவப் பகுதியில் சுண்ணாம்புக்கல் அகழ்வு என்பது வடக்கின் சுற்றுச்சூழலையும் மனித வாழ்வையும் பாதிக்கும். அந்த வரிசையில் இப்போது வடக்கில் பூநகரைப் பிரதேசத்தில் உள்ள பொன்னாவெளிப் பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழ்வதற்கான ஆய்வுகள் என்ற அடிப்படையில் அந்தப் பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் சிங்கள ஆய்வாளர்களும் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வுகள் பற்றி முழுமையான தரவுகள் இன்னும் வெளிவரவில்லை.

எனினும் கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று பொன்னாவழிப் பிரதேசத்தில் சுன்னக்கல் அகழ்வதற்கான ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இங்கு அகழ்வு 100 அடி ஆழத்திற்கு மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. பிரதேசம் பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து 20 அடிக்கு உட்பட்ட நிலப்பிரதேசமாகும். இங்கே நூறு அடி ஆழத்திற்கு தோண்டுவது மிக ஆபத்தானது.

இவ்வாறு தோண்டப்படும் பகுதிக்குள் கடல் நீர் புகுந்து விட்டால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பகுதி உவர் நிலமாக மாறிவிடும். மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாற்றமடையும். பல்வகைப்பட்ட கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகவும் இந்தப் பகுதி விளங்குகிறது. இப்பகுதியில் சுண்ணக்கல் மாத்திரமல்ல வேறும்பல பெறுமதி வாய்ந்த கனிம வளங்கள் இந்த பிராந்தியத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

2002-2004 சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அன்றைய வன்னியின் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் அனுமதி கேட்டிருதமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது இந்தப் பகுதி பெரும் வர்த்தக நிறுவனங்களினதும், வல்லரசுகளினதும் கனிமவள வேட்டைக்களமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஆகவே இதற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் குத்துவெட்டுக்களும், கபட நாடகங்களும், பாசாங்கு அரசியல்களும் இங்கே நிகழும் என்பது நிச்சயம். எனினும் இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விவரங்கள் எதுவும் தமக்குத் தெரியாது என நொண்டி காரணங்களை கற்பிப்பதும் ஏற்புடையதல்ல.

ஆய்வு மேற்கொள்ளல்

இலங்கையின் அரசியல் நிர்வாக ஒழுங்கில் பிரதேசசபைக்கு ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி சார்ந்த முழுமையான அதிகாரங்கள் உண்டு.பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி முடிவெடுப்பதில் பிரதேச சபைக்கு பெரும்பலமான அதிகாரங்கள் உண்டு. அந்த அடிப்படையில் பார்த்தால் பூநகரி பிரதேச சபையின் கீழ் அடங்குகின்ற பொன்னாவெளிப்பகுதியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது அல்லது ஒரு சுண்ணாம்புக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படப் போகின்றது என்றால் முதலில் அது அந்த பகுதியினுடைய பிரதேச செயலாளருக்கும், அதனுடைய பிரதேச சபைக்கும், அப் பிரதேசம் உள்ளடங்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனைத்து விவரங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.

அத்தோடு அத்தகுதியினுடைய நாடாளுமன்ற உறுப்பினருடனும் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை.ஒரு பிரதேச சபையின் அனுமதியின்றி அந்தப் பிரதேசசபை எல்லைக்குள் ஒரு கட்டிடத்தையோ, ஒரு வீதி புணரமைப்பையோ அல்லது ஒரு கல்லைதானும் நாட்ட முடியாது.

தமிழர் தாயக கனிமவளச் சுரண்டலும் ; தமிழ்த் தலைமைகளின் பாசாங்கு அரசியலும் | Mineral Exploitation And The Politics Of Hypocrisy

 

அதனை சட்டரீதியாக தடுக்கவும், அகற்றவும் முடியும். எனவே இவ்வாறு ஒரு மக்களுக்குத் தெரியாத, பிரதேசத்தை பாதிக்கக்கூடிய, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம் ஒன்று இடம்பெற்றால் அதனை பல வழிகளிலும் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இன்றைய நிலையில் முடியும்.

அதற்காக பலமான வெகுசனப் போராட்டங்களை எல்லா மட்டங்களிலும் நடத்தி தடுத்திருக்க முடியும். அதனை இன்னும் இந்த அரசியல்வாதிகள் செய்யவில்லை. மாறாக ஊடகங்களில் காட்டுக்கத்து கத்துவதில் எந்த பயனும் கிடையாது. உண்ணாவிரத போராட்டங்கள், ஊர்வலங்கள், கடையடைப்புகள், பணிப்புறக்கணிப்புகள் என எந்தப் போராட்டங்களும் கிளிநொச்சியில் அல்லது வடக்கிலோ நடைபெறவில்லை.

இவைகள் ஒன்றும் நடக்கவில்லை என்றால் இதற்குப் பின்னே பின்கதவுகளால் பணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இனியும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.இதனை இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் மீன்பிடிக் கைத்தொழில் அமைச்சராக இருந்த அன்றைய தமிழ் தலைவர் திரு. ஜி. ஜி . பொன்னம்பலம் கிழக்கு மாகாணத்தில் "பட்டிப்பளை" ஆற்றை கல்லோயா என்ற சிங்கள பெயரிட்டு புதிய சிங்களக் கொடியேற்ற திட்டத்தை அன்றைய பிரதமர் டி. எஸ். செனநாயக்க ஆரம்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்ததையும் அதற்காக பெறப்பட்ட பெரும் பணக் குயிலில் இருந்து கொண்டுதான் இன்று அவருடைய வாரிசுகள் இரண்டு தலைமுறைகள் தமிழ், தேசியம், இருதேச அரசியல் என்றும் பாசாங்கு அரசியல் செய்வது ஜி.ஜி.பொன்னர் தமிழ் மக்களை ஏமாற்றி தாயகத்தை விற்று சேர்த்த சொத்தைப் பாதுகாப்பதற்கான பாசாங்கு அரசியலே என்பதனையும் தமிழ் மக்கள் வரலாற்றில் மறக்கமாட்டார்கள்.

கனிமவள அரசியல் நடைமுறை

அம்பாறை தமிழர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். "வரலாற்றுக்கு மன்னிக்கத் தெரியாததை தவிர தெரியாதது என்று ஒன்றும் இல்லை"என்பதுதான் உண்மை ஜி.ஜி யினது வாரிசுகள் இன்று செய்யும் பாசாங்கு அரசியல் போன்றே தமிழ் மக்களை ஏமாற்றி பாசாங்கு அரசியலை பொதுவில் இன்றைய தமிழ்த் தலைவர்கள் பலரும் மேற்கொள்கின்றனர்.

அந்தவகையினதாக இப்போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் இத்தகைய ஒரு வளசுரண்டலை, வளவிற்றலைச் செய்கின்ற அரசியல் நடக்கிறது. தமிழ் மக்களின் வாழ்வியலை சூனியமயமாக்கும் செயற்திட்டத்தை பின்கதவால் ஆதரித்து தனக்கும், தன்பிள்ளைக்கும், தன்பேரனுக்கும் அரசியல் நடத்துவதற்கான சொத்தை சேகரிக்கின்ற நாசக்கார அரசியல் நடத்தப்படுகிறது. இன்று இந்த கருத்தை பலரும் எதிர்க்க கூடும். ஆனால் இதே அரசியல்வாதிகளின் பிள்ளையும் பேரனும் அந்த மண்ணில் துரோகத்தின் மீதமர்ந்து அரசியல் நடத்துவதை வரலாறு நிச்சயம் நிரூபிக்கும்.

காங்கேசன்துறை சீமெந்து ஆலை, கல்லோயா குடியேற்றம் போன்ற வரலாற்று அனுபவத்திலிருந்து இன்றைய இந்த கனிமவள அரசியலை நோக்க வேண்டும். எனவே இன்றைய இந்த அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நம்பி இருக்காது தம்முடைய பிரதேசத்தின் அபிவிருத்தியும், தமது பிரதேசத்தின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவும் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் அறிவு பூர்வமாக எடுக்க வேண்டியது அவசியமானது.    

https://tamilwin.com/article/mineral-exploitation-and-the-politics-of-hypocrisy-1679820073

ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

1 day 5 hours ago
ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

புருஜோத்தமன் தங்கமயில்

இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

 சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை ரணில், ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டது முதல் மும்முரமாக முன்னெடுத்திருந்தார். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்று நாட்டின் பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்தும் வேலைகள் நடைபெற்று வந்தன. 

அதன் பிரகாரம், கடன்களை திருப்திச் செலுத்தக் கூடிய வல்லமையை இலங்கை கொண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கு, இந்தியாவும் சீனாவும் கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கிய கடன் உதவிகளை, காலம் தாழ்த்தி மீள வசூலித்துக் கொள்வதற்கு இணங்கியமை முக்கிய காரணம். 

இந்தக் காரணங்களால், இலங்கை வங்குரோத்து அடைந்த நாடல்ல; அது,  பெற்றுக்கொள்ளும் நிதியுதவிகளை மீளச் செலுத்துவதற்கான வலு, அதனிடம் இன்னும் இருக்கின்றது என்று சர்வதேசம் நம்புகின்றது. அதனால்தான், சர்வதேச நாணய நிதியம், ஏழு பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணங்கியிருக்கின்றது என்று கொள்ளலாம். அதை நோக்கும் போது, ரணில் குறிப்பிடுவது போல, இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்பது தர்க்க ரீதியில் சரிதான்!

 ஆனால், இலங்கை சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை கிட்டத்தட்ட 64 பில்லியன் டொலர் என்பது பொருளாதார வல்லுநர்களின் வாதம். இந்தக் கடன் தொகையைடு இலங்கையால் இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் திருப்பிச் செலுத்துவதற்கு குறைந்தது 50 வருடங்களாவது ஆகும் என்பதும் அவர்களின் கருத்து. 

இலங்கையின் நிலத்துக்கு கீழ் அதிசயிக்கத் தக்க வகையில் எரிவாயுவோ, பொற்றோலியப் பொருட்களோ கிடைத்து, அதைக் கொண்டு நிதி வருவாய், எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்தால் அன்றி, 64 பில்லியன் டொலரைச் செலுத்துவது என்பது உண்மையில் நடக்கக் கூடிய காரியமல்ல. அந்த கடன்கள் மீதான வட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் செலுத்த வேண்டிய கடன் தொகை இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும். அது, நாட்டு மக்களின் பல தலைமுறைகளின் தலைகளில் வரியாகவும், விலை அதிகரிப்பாகவும் எழுதப்படும்.

 இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல், அதன் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு, பௌத்த சிங்கள மேலாதிக்கவாத சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டது. அது, நாட்டின் சமூக, கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்து வந்தது. 

சுதந்திரம் அடைந்த போது, இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைத்த சிங்கப்பூர் என்ற அனைவராலும் கைவிடப்பட்ட தேசம், இன்றைக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளோடு போட்டி போட்டு பொருளாதார வெற்றியைக் கண்டிக்கின்றது. 

ஆனால், இலங்கையோ, படிப்படியாக வீழ்ச்சியடைந்து, 75ஆவது சுதந்திர தினத்தை அடைவதற்கு முன்னதாகவே, ‘வங்குரோத்து அடைந்த நாடு’ என்ற பெயரைப் பெற்றது. இன்றைக்கு, ‘வங்குரோத்து அடைந்த நாடல்ல’ என்பதை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவியைப் பெறுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதை, ரணில் ஓர் ஆதாரமாக முன்வைத்து, தன்னுடைய ஆட்சிக்கான நற்சான்றிதழை மக்களிடம் கோருகின்றார். 

அதிலும், இன்னும் ஒரு படி மேற்சென்று, அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினர், கடனுதவிக்கான அனுமதி கிடைத்ததை வெடி கொளுத்தி ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். அதைக் காணும் போது, இந்த நாட்டின் ஆட்சியாளர்களினதும் அரசியல் கட்சிகளினதும் சிந்தனை எவ்வளவு சிறிதானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

 சர்வதேச நாணய நிதியத்தின்  முதல் தொகுதிக் கடனாக 3.3 பில்லியன் டொலர் எதிர்வரும் மாதமளவில் கிடைக்கும் என்று அரசாங்கம் நம்புகின்றது. அது கிடைத்ததும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அந்தத்துறை அமைச்சர் கூறியிருக்கின்றார். 

அதுபோல, இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கிக் கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இவையெல்லாம் மக்கள் மீதான அபிமானத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அல்ல!

மாறாக, தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளாகும். தேர்தல் வெற்றிகளைக் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்றுவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதை இலங்கையின் ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் செய்து வந்திருக்கிறார்கள். 

அதனால், நாட்டு மக்கள் மீதான பொருளாதார சுமை என்பது பெருமளவு அதிகரித்திருக்கின்றது. கடன்களை கடந்த காலங்களில் எந்தவித பொருளாதார திட்டங்களும் இன்றி வாங்கிக் குவித்தமையும், அதனை ஆட்சியில் இருந்தவர்கள் சுரண்டி, தங்களின் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டமையாலும் நாட்டின் நாணயப் பெறுமதி ஒவ்வொரு நாளும் பாரிய வீழ்ச்சியைக் கண்டு வந்திருக்கின்றது. 

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கை ரூபாயின் பெறுமதி என்பது, அமெரிக்க டொலரின் பெறுமதியை விட அதிகமாகும். அந்த நிலையில் இருந்து  இன்றைக்கு டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி என்பது கிட்டத்தட்ட 400 ரூபாய் என்ற அளவை எட்டியிருக்கின்றது. 

ஏழு பில்லியன் டொலர் நாட்டுக்குள் வரப்போகின்றது என்பதைக் காட்டிக் கொண்டு, டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியை 320க்குள் வைத்துக் கொள்ள அரசாங்கம் முயல்கின்றது. ஆனால், பெறும் கடன்களுக்கான வட்டி உள்ளிட்டவை எல்லாமும் சேர்ந்து கொண்டால், டொலருக்கு எதிரான ரூபாயில் பெறுமதி இந்த ஆண்டின் இறுதிக்குள் 400 ரூபாய் என்ற அளவை எட்டும் என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. 

அவ்வாறான நிலை ஏற்பட்டால், நாட்டில் ஏற்கெனவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மத்தியதர வர்க்கம் என்ற  பெரும்பான்மையான மக்கள், வாழ்வதற்கான சிக்கல்களை இன்னும் இன்னும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாடு, ‘அபிவிருத்தி அடைந்து வரும் நாடு’ என்ற நிலையில் இருந்து, ‘வறுமைக் கோட்டுக்கு கீழான நாடு’ என்ற நிலையை எட்ட வேண்டியிருக்கும்.

 வெளியாரிடம் இருந்து கடன்களைப் பெற்று, அவசரப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணுவதற்குப் பதிலாக, நீண்ட காலப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமாக இருக்கின்றது. 

எளிய முறையில் சொல்வதென்றால், வறுமையில் வாடும் ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதைக் காட்டிலும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது என்பது, அவனது பசியை மட்டுமல்ல, அவனது பொருளாதார மீட்சிக்கும் உதவும் என்பது வழக்கு. இந்த நிலை குறித்துதான் மக்களுக்காக சிந்திக்கும் எந்தவொரு ஆட்சியாளரும்  செய்ய நினைப்பார்கள். மாறாக, தேர்தலை வெற்றிகொள்வதற்காக, நாட்டை மேலும் மேலும் வங்குரோத்து நிலைக்குள் தள்ளி, விளையாடும் வேலைகளைப் பார்க்க மாட்டார்கள்.

 சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனுதவியைக் கொண்டு, தன்னுடைய தேர்தல் வெற்றிக்கான ஏற்பாடுகளை மாத்திரமே ரணில் மேற்கொள்ள நினைக்கிறார். கடந்த காலங்களில் தன்னையொரு ஜனநாயக விரும்பியாக காட்டிக் கொண்ட அவர், எப்போதோ நடக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்தத் தேர்தல் நடந்தால், தன்னுடைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் கனவு எப்போதோ நீர்த்துப் போயிருக்கும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான், தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு பணத்தினை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவை அலைக்கழிக்கின்றது. 

இதன்மூலம், தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகளிடம் இல்லாமல் செய்துவிட்டு, நேரடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திட்டத்தை ரணில் முன்னெடுக்கின்றார். அதில், தன்னை முதன்மைப் போட்டியாளராக முன்னிறுத்துவதற்காக, சர்வதேச நாணயத்திடம் பெற்ற கடன் தொகையைக் பயன்படுத்தப் போகின்றார். இது, யாராலும் சகிக்க முடியாத அரசியல் பொறுப்பின்மை. இதன்மூலம், நாடு மீட்கப்பட முடியாத அலைக்கழியும் நிலைக்கு செல்லும். அது, மக்கள் வாழ முடியாத ஒரு சூழலை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கு வழிகளை உருவாக்கும். 

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்தலுக்கான-ரணிலின்-முதலீடு/91-314707

சிலை அரசியல் : அறிவும் செயலும் – நிலாந்தன்

2 days 3 hours ago
சிலை அரசியல் : அறிவும் செயலும் – நிலாந்தன்.

March 26, 2023

spacer.png

வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை, சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று.

இச்சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை கடந்த வாரக்கட்டுரையில் ஓரளவுக்குப் பார்த்தோம். இச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மத அரசியலைத் தனியாயகப் பார்க்கவேண்டும். இன்று இக்கட்டுரையானது இச்சிலைகளின் அழகியல் அம்சங்களைக் குறித்த விவாதக் குறிப்புகள் சிலவற்றை முன்வைக்கின்றது.

பொதுவெளிச் சிற்பங்கள் அவற்றை நிறுவும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களின் விருப்பங்களை மட்டும் பிரதிபலிப்பவை அல்ல. அதைவிட ஆழமான பொருளில் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் கலை மேதமையை, அழகியல் உச்சங்களை, அரசியல் கலாச்சார பல்வகைமையை வெளிக்காட்டுபவைகளாக அமைய வேண்டும்.ஒரு வெளிப்பார்வையாளர் கண்டு வியக்கும் அளவுக்கு அது ஒரு வெற்றிபெற்ற கலைப் படைப்பாக அமைய வேண்டும்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில பொதுச் வெளிச் சிற்பங்களை அல்லது சிலைகளை அல்லது தூபிகளைப் பார்க்கலாம்.

முதலில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் சிலையிலிருந்து தொடங்கலாம். இச்சிலை ஒரு வழிபாட்டு உருவாகத்தான் அந்த சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது. இச்சிலையை உருவாக்கியவர்கள் அதனை ஒரு வழிபாட்டு நோக்கத்தையும் மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. அப்படியென்றால் தங்களுடைய இஷ்ட தேவதையை சிலையாக்கும்போது அதன் அழகியல் முழுமை குறித்து ஆகக்கூடிய பட்ச கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் தனக்கு மிகவும் பாசத்துக்குரிய தன் தாய்க்கு ஒரு சிலை வைக்கும்போது அச்சிலை தாயைப் போலவே இருக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பார் ? அது வேறு யாரையோ போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாரா? இல்லைத்தானே? இது ஆஞ்சநேயருக்கும் பொருந்தும்.

ஆஞ்சநேயரின் ஆகிருதியைக் காட்டுவதுதான் சிலையின் நோக்கம் என்றால் அதற்கென்று செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்குரிய துறைசார் நிபுணர்களை அணுக வேண்டும்.அதை ஒரு தவமாகச் செய்ய வேண்டும். ஆனால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் தமிழ் அழகியலின் வீழ்ச்சியின் குறியீடாக நிற்கிறார். அவருடைய முகத்துக்கும் உடலுக்கும் இடையிலான அளவுப் பிரமாணம் பிழைத்து விட்டது. அதனால் அது ஒரு கறாளையான சிலை.

spacer.png

இத்தனைக்கும் அச்சிலை இருப்பது யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறை அமைந்திருக்கும் வளாகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்தான். ஆனால் பல்கலைக்கழகத்தின் இது சம்பந்தப்பட்ட துறைசார் ஆளுமைகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது குறைந்தபட்சம் அந்த வளாகம் வளர்ச்சியடைந்த பின்னராவது அது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின்,யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்பிக்கப்படுகின்ற சிற்பம் தொடர்பான அழகியல் அறிவிற்கும் ஆஞ்சநேயருக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அதாவது அறிவுகும் செயலுக்கும் இடையிலுள்ள இடைவெளி.

இந்த இடைவெளி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான பொதுச் சிற்பங்களுக்குப் பொருந்தும்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் மட்டுமல்ல,ஆனையிறவுச் சிவனின் மீதும் அவ்வாறான விமர்சனங்கள் உண்டு. அதை உலோகத்தில் வார்த்திருந்தால் அதன் அழகு மேலும் பொலிந்திருக்கும் என்ற ஒரு கருத்து உண்டு. மேலும் அச்சிலையை வடிவமைக்கும் போதும் அது தொடர்பான துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட்டதா என்ற கேள்வி உண்டு.

சிவ நடனம் எனப்படுவது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது. அப் பிரபஞ்ச அசைவை ஒரு அசையாச் சிலைக்குள் கொண்டு வருவதற்கு மகத்தான சிற்பிகள் தேவை. அசையாச் சிலை ஒன்று பிரபஞ்சப் பேரசைவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அது ஒர் அழகியல் சவால். சுந்தர ராமசுவாமி கூறுவதுபோல ஒரு வேட்டை நாயின் பாய்ச்சலை ஓர் ஒளிப் படத்துக்குள் கைப்பற்றுவது போல.

ஆனால் நடராஜர் சிலையை வடிவமைக்கும்போது அது தொடர்பான துறைசார் நுட்பங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உரிய துறைசார் நிபுணர்களோடு அது தொடர்பாக உரையாடப்பட்டதாகவும் தெரியவில்லை. இது ஆஞ்சநேயருக்கும் நடராஜருக்கும் மட்டுமல்ல,முத்திரச் சந்தையடி சங்கிலியன் சிலையும் உட்பட,தமிழில் பெரும்பாலான பொதுவெளிச் சிற்பங்களுக்கும் பொருந்தும்.

தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு தூண்களில் தொடங்கி முள்ளிவாய்க்கால் நினைவுச் சிற்பம் வரையிலும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. உரும்பிராயில் சிவகுமாரன் சிலையில் தொடங்கி வவுனியாவில் பத்மநாபா சிலை வரையிலும் நிலைமை அதுதான். அவரவர் தன் வசதிக்கேற்ப தன் அழகியல் புரிதலுக்கு ஏற்ப சிலைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அது ஒரு மக்கள் கூட்டத்தின் கலை மேதமையை பிற நாட்டவர்கள் கண்டு பிரமிக்கும் அளவுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தைத் தவற விடுகிறார்கள்.

spacer.png

இதில் ஆகப்பிந்தியது கடந்த வாரம் திருநெல்வேலிச் சந்தியில் திறக்கப்பட்ட மணிக்கூட்டுடன் கூடிய ஓர் அலங்காரத்தூபி.அது யாழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழலுக்குள் காணப்படும் ஒரு சந்தி. அதுவும் பண்ணைச் சுற்று வளைவைப் போலவே பிறசமூகங்கள் புழங்கும் ஒரு சந்தி. யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு மிக அருகில் காணப்படும் அச் சந்தியில் வைப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னோடிகள் அல்லது,நிறுவன உருவாக்கிகள் என்று கூறத்தக்க யாருடைய சிலையும் இல்லையா? கடந்த வாரம் திறக்கப்பட்ட சிறுதூபி தமிழ் மக்களின் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகின்றதா? தமிழ்மக்களின் பெருமைகளைப் பிரதிநிதித் துவப்படுத்துகின்றதா?

ஏன் அதிகம் போவான் யாழ்.பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்கூட ஒர் அழகியல் முழுமை என்று கூற முடியாது. அதிர்ச்சியூட்டும் நவீனம் என்று கூற முடியாது. உலகிலுள்ள இதுபோன்ற நினைவுச் சின்னங்களோடு ஒப்பிடுகையில் அது மிகவும் சாதாரணமானது.

ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் காணப்படும் நினைவுச் சின்னத்தின் நிலைமை அதுவென்றால், அதுவும் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் தனது உயர்கல்வி நிறுவனத்தில் அப்படித்தான் ஒரு நினைவுத் தூபியைக்க கட்டுமென்றால், அதிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் ஏனைய பொது வெளிச்சிற்பங்கள் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. இது ஒரு பொதுவான போக்காக தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவெளிச் சிற்பங்களை உருவாக்கும் பலரும் அது தொடர்பான துறைசார் நிபுணர்களை அணுகுவதில்லை என்பதைத்தான் பெரும்பாலான சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் மிக அருந்தலான புறநடைகளை உண்டு. அப்புறநடைகள் யாவும் அதற்குரிய துறைசார் அறிவுடையோரால் உருவாக்கப்பட்டவை.

இவ்வாறான சிலைக் கலாசாரத்தின் பின்னணியில்,சிலை அரசியலின் பின்னணியில்,பண்ணைச் சுற்றுவளைவில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவரை இனிப் பார்ப்போம்.அச்சிலைக்குப் பின்னால் உள்ள மொழி,மத அரசியல் குறித்து ஏற்கனவே சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக வாதப்பிரதிவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இங்கு அச்சிலையின் அழகியல் அம்சங்களை மட்டும் கவனிப்போம்.

கண்ணாடி நாரிழையில் செய்யப்பட்ட அச்சிலையானது தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜிபி குழுமத்தின் தலைவர் சந்தோசம் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும். இலங்கையின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்தம் 18 சிலைகளை அவர் வழங்கியிருக்கிறார். அதில் இரண்டு வடக்கு கிழக்குக்கு. ஒன்று திருகோணமலைக்கு. மற்றது யாழ்ப்பாணத்திற்கு. இச்சிலைகள் யாவும் வழமையானவை. அவற்றின் அழகியல் அம்சங்கள் குறித்து விவாதிக்க அதிகமில்லை. ஆனால் பண்ணைச் சுற்று வளைவில் அச்சிலை வைக்கப்பட்டிருக்கும் இடம்,அதன் பின்னணி என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

அச்சிலைக்காகக் கட்டப்பட்ட பீடத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது அச்சிலை சிறுத்துப்போய்த் தெரிகிறது. முத்தவெளி, டச்சுக்கோட்டை என்பவற்றின் பின்னணியில் அச்சிலையை நிற்கின்ற வள்ளுவராக வடிவமைத்து இருந்திருந்தால் ஒரு பிரமாண்டத்தை காட்டியிருக்கலாம். ஆனால் வீதிச்சுற்று வளைவில் எதைக் கட்டினாலும் அதற்குப் போக்குவரத்துத் துறைசார் வரையறைகள் உண்டு என்று சுட்டிக் காட்டப்படுகிறது. அதன்படி ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் எதையும் கட்ட முடியாது. ஆயின் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வெளிக்குள் எப்படிப்பட்ட ஒரு சிலையை ஸ்தாபிப்பது என்பதில் அரசியல் மற்றும் அழகியல் தெரிவுகள் இருக்க வேண்டும். கோட்டை,முத்தவெளி என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அச்சிலை போதாது என்ற உணர்வே எழுகிறது.

இதுதான் பிரச்சினை. இதுதொடர்பில் துறைசார் நிபுணர்களின் அறிவை யாரும் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சிலைகளின் விடயத்தில் மட்டுமல்ல, பொதுவெளிச் சிற்பங்கள்,பொதுக் கட்டங்கள் போன்றவற்றில் மட்டுமல்ல,அரசியலும் உட்பட ஈழத்தமிழர்களின் பெரும்பாலான பொதுவிடயங்களில் அறிவுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை. அறிவு தன் பாட்டில் பாடப்புத்தகங்களில் இருக்கின்றது. செயல் தன்பாட்டில் நடக்கின்றது.

அறிவுக்கும் செயலுக்கும் இடையிலான இந்த இடைவெளி அதிகமாக வெளிப்படும் இடமும் அதிக நாசத்தை விளைவித்த இடமும் எதுவென்றால் தமிழ் அரசியல்தான். சிலைகள் கோணல்மாணலாக வருவதோ அல்லது பொருத்தமற்ற இடங்களில் பொருத்தமற்ற அளவுகளில் நிர்மாணிக்கப்படுவதோ அழகியற் சிதைவு மட்டுமே. பண்பாட்டுச் சிதைவு மட்டுமே. ஆனால் அரசியலில் அவ்வாறு துறைசார் நிபுணத்துவத்தைப் புறக்கணிப்பது அல்லது சட்டக் கண்களால் எல்லாவற்றையும் அளப்பது என்பது எத்துணை பாரதூரமானது என்பதனைக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கண்டோம். அறிவையும் செயலையும் பொருத்தமான விதங்களில் இணைக்கத் தவறிய ஒரு சமூகம் இப்பொழுது சிலைகளை வைத்துவிட்டு ஆளையாள் தின்று தீர்க்கின்றதா?

 

 

http://globaltamilnews.net/2023/188979/

தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

2 days 4 hours ago
தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன். தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள் வர அனுமதித்திருக்கிறார்கள். அவர் வியாபார விசாவில் வந்தபடியால் அதை மத நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனால் குறிப்பிட்ட போதகர் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அந்த மத நிகழ்ச்சியில் பங்குபற்றாமல் நாடு திரும்பிவிட்டார்.

இத்தனைக்கும் அவர் நேரடியாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை.கொழும்புக்கு வந்து அங்கே நான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர்தான் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவருக்கு வியாபார விசா வழங்கியிருக்கிறது. அவர் ஒரு மதபோதகர் இதற்கு முன்னரும் இதுபோன்று இலங்கைக்கு வந்திருக்கிறார். மதக் கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறார். எனவே அவரை முதலில் தடுத்திருக்க வேண்டியது, அவருக்கு விசா வழங்கிய இலங்கைத் துணைத் தூதரகம்தான். ஆனால் விசாவை வழங்கிவிட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து நான்கு மணித்தியாலங்கள் விசாரித்து அவருடைய நடமாட்டத்திற்குள்ள வரையறைகளை உணர்த்தியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னரும் இது போன்ற மத நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.போதகர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கிறார்கள்.இம்முறை குறிப்பிட்ட போதகரை திருப்பி அனுப்பியதற்கு பிரதான காரணம் ஈழத்துச் சிவ சேனையின் முறைப்பாடுதான் என்று கருதப்படுகிறது.ஈழத்துச் சிவசேனை அப்போதகர் வருவதற்கு முன்னரே அவருக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுக்க தொடங்கிவிட்டது.அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அது தொடர்பாக முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணம் மானிப்பாயிலும் நடக்கவிருந்த இரண்டு கூட்டங்களுக்கு எதிராக அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த முறைப்பாடுகளின் விளைவாகத்தான் மேற்படி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடக்கவிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டமைக்கு போதகர் பெற்றுக் கொண்ட விசா ஒரு காரணமாக கூறப்பட்டாலும், வெளிப்படையாக கூறப்படாத காரணம் ஈழத்துச் சிவ சேனையின் முறைப்பாடு என்று நம்பப்படுகிறது. ஆயின் அரசாங்கம் இது போன்ற இந்து அமைப்புகளின் முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கின்றதா என்ற கேள்வி இங்கு எழும்.

ஆனால் குறிப்பிட்ட போதகர் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன் கொழும்பில் அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருக்கிறார்.ரணிலை அவர் ஆசீர்வதிக்கிறார். ரணில் அவருக்கு முன் அடக்க ஒடுக்கமாக நிற்கிறார். அந்த ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ரணில் விக்கிரமசிங்க அவருடைய மத நம்பிக்கைகளை பொறுத்தவரை புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ ஒழுக்கத்துக்கூடாக வளர்க்கப்பட்டவர். அவர் மேற்படி ஆவிக்குரிய சபை போதகரின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டது வழமைக்கு மாறானது அல்ல.ஆனால் அதே போதகர் யாழ்ப்பாணத்தில் ஒரு மத நிகழ்ச்சியில் பங்கு பற்றவிடாது தடுக்கப்பட்டிருக்கிறார்.அரசாங்கம் ஈழத்துச் சிவ சேனையின் வேண்டுகோளை கவனத்திலெடுத்தே, அப்போதகர் மத நிகழ்வில் கலந்துகொள்வதை தடுத்துநிறுத்தியது என்பதனை வெளிப்படையாக சொல்லவில்லை.எனினும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இறுதியிலும் இறுதியாக ஈழத்துச் சிவசேனைக்கு சாதகமாகத்தான் முடிந்திருக்கின்றன. அதன்படி அரசாங்கம் ஈழத்துச் சிவ சேனைக்கு ஆதரவாக முடிவெடுத்ததா என்ற கேள்வி எழும்.

கடந்த சில வாரங்களாக நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து பார்த்தால் அரசாங்கம் ஈழத்து சிவசேனைக்கு ஆதரவாக முடிவெடுத்திருப்பதாகவே தோன்றும். ஆனால் அது ஒரு தோற்றம் மட்டுமே. உண்மை நிலை என்னவெனில் அரசாங்கம் சிங்கள பௌத்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப முடிவெடுத்திருக்கின்றது என்பதுதான்.

ஒருபுறம் ஜனாதிபதி மேற்படி போதகரை சந்திக்கிறார்.அவருக்கு முன் பணிவாக நிற்கிறார்.இன்னொருபுறம் அவருடைய அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் போதகரை விசாரிக்கிறார்கள்.ஒருபுறம் அரசாங்கம் ஈழத்துச் சிவசேனையின் கோரிக்கையை ஏற்றுப் போதகரை விசாரித்ததாக எடுத்துக் கொண்டால், இன்னொருபுறம் அதே அரசாங்கம் குருந்தூர் மலையில் ஒரு சிவன் கோவிலை ஆக்கிரமிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? அல்லது கச்சதீவில் புத்தர் சிலைகளை வைப்பதையும் அரச மரங்களை நடுவதையும் எப்படி எடுத்துக் கொள்வது?

அண்மையில் வலிகாமத்தில் அரச படைகளால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சைவ ஆலயங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.இப்பொழுதும் உயர் பாதுகாப்பு வலையங்களில் பல இந்து கோவில்கள் பாழடைந்து கிடக்கின்றன. பேராசிரியை. சுஜாதா அருந்ததி மீகம போன்ற சிங்கள அறிஞர்கள் கூறுவதுபோல பொலநறுவையில் தொடக்கத்தில் 15 சிவ ஆலயங்களின் சிதைவுகள் காணப்பட்டன. ஆனால் இப்பொழுது அங்கே மூன்று சிவனாலயங்கள்தான் மிச்சமுள்ளன. இதுதான் இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தம் அல்லாத ஏனைய மரபுரிமைச சொத்துக்களின் நிலை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், யில் சைவ ஆலயம் ஒன்றை ஆக்கிரமிக்கும் அதே அரசாங்கம் இன்னொகுருந்தூர் மலைரு புறம் ஈழத்துச் ஈழத்துச் சிவ சேனையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது என்று எடுத்துக் கொள்வது எவ்வளவு முரணானது?

அவ்வாறு ஈழத்துச் சிவ சேனையின் கோரிக்கைக்கு அமைவாகத்தான் மேற்படி போதகரின் மத நிகழ்ச்சி தடுக்கப்பட்டது என்று காட்டுவதன்மூலம் அரசாங்கம் ஈழத்துச் சிவ சேனைக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள விரோதத்தை வளர்க்க முனைகிறதா?அதாவது அரசாங்கம் தமிழ் மக்களுக்கிடையே மத ரீதியான மோதல்களை மிகவும் தந்திரமான விதங்களில் ஊக்குவிக்கின்றது என்று பொருள்.தமிழ் மக்களை மதரீதியாக தங்களுக்கிடையே முரண்பட வைப்பதன்மூலம், தமிழ் மக்களின் தேசிய இருப்பை சிதைப்பது.

ஏற்கனவே கிழக்கில், வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிரான சக்திகளை தாமரை மொட்டுக் கட்சி தன்பக்கம் வசப்படுத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் மதரீதியான முரண்பாடுகளைத் தூண்டி விடுவதன்மூலம் தமிழ் மக்களை மதத்தின் பெயராலும் பிரிக்கலாம் என்ற ஒரு நிகழ்ச்சி நிரல் அண்மை ஆண்டுகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமது கோரிக்கையை ஏற்றுத்தான் அரசாங்கம் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியை நிறுத்தியது என்று சிவசேனா பெருமைப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால் அழிக்கப்பட்ட சிவன் ஆலயங்களை மீட்டெடுப்பதற்கு சிவசேனையால் முடியவில்லை.குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டப்பட்டுவரும் பௌத்த விகாரையை தடுத்துநிறுத்த ஈழத்துச் சிவ சேனையால் முடியவில்லை.விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுமல்ல உயர் பாதுகாப்பு வளையங்களில் சிதைவடைந்த நிலையில் உள்ள இந்து கோவில்களை மீட்டெடுக்க சிவசேனையால் முடியவில்லை. ஆனால் சொந்தத் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஈழத்துச் சிவ சேனைக்கு வெற்றி கிடைக்கின்றது என்றால் அதன் பொருள் என்ன?

நாவற்குழியும் உட்பட தமிழ் பகுதிகளில் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக போராடும் தமிழ்த் தேசியவாதிகளோடு ஏன் சிவசேனை இணைந்து போராடுவதில்லை? ஞானசார தேரரை விடவும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை ஏன் சிவசேனை அதிகம் வெறுக்கின்றது? வடக்கு கிழக்கை இணைக்கக்கூடாது என்று கருதும் கிழக்கு மையக் கட்சிகளுக்கு வடக்கு ஒரு விரோதியாக தெரிகிறது. ஆனால் ராஜபக்சக்கள் விரோதிகளாகத் தெரியவில்லை. அதுபோலவே கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு எதிராக செயல்படும் இந்து மத அமைப்புகளின் முக்கியஸ்தர்களுக்கு ஞானசார தேரர் எதிரியாக தெரியவில்லை.

இது எதைக் காட்டுகிறது? தமிழ்மக்களைச் சிதறடிக்க வேண்டும், அவர்களுடைய தேசிய ஐக்கியத்தை சிதைக்க வேண்டும், என்று கருதும் சக்திகளுக்கு தமிழ் மக்கள் மத்தியிலேயே நண்பர்கள் கிடைத்து வருகிறார்கள். நாடு வங்குரோத்தாகி, ஐ.எம்.எப் கடன் கொடுத்ததை பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு காலகட்டத்தில் கூட, தமிழ் மக்களைச் சிதைக்க வேண்டும் என்று கருதும் சக்திகள் விறுவிறுப்பாக இயங்குவதைத்தான் இது காட்டுகின்றதா?

https://athavannews.com/2023/1328576

நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்கிறோமா- பா.உதயன் 

2 days 22 hours ago

நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்கிறோமா- பா.உதயன் 

ரஷ்யா, உக்ரைன் போர் ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. மனிதப் பேரழிவுகளோடும் பொருளாதாரப் பின்னடைவுகளுடனும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. உலகத்தை ஆக்கிரமித்து தாக்கிய கொரோன வைரசு ஒரு பக்கம் அதைத் தொடர்ந்த ரஸ்சிய உக்ரேன் யுத்தம் இப்படியே தொடரும் நோய் யுத்தம் போன்ற அழிவுகளினால் இன்று உலகில் சமூக அரசியல் பொருளாதாரம் ( social political and economical structure ) ஆட்டம் காண தொடங்கியுள்ளது. 

உலக மக்கள் பெரும் பொருளாதா பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். இன்னும் குறிப்பாக ஏழை நாடுகளை இது பெரிதும் பாதித்துள்ளது. உலகின் பெரும் பான்மை மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் போதும் பெருவாரியான பணமும் ஆயுதமும் போருக்காக வீண் விரயம் செய்யப்படுகின்றது. உலகம் பெரும் போர் ஒன்றை நோக்கி நகர்கிறதா இன்று நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா. Are we living in a turbulent world.

தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல்( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம். 

அண்ணன் அமெரிக்காவும் அவர் தம் தம்பிமார் ஐரோப்பாவும் அணுகுண்டையும் ஆயுதங்களையும் செய்து கொண்டும் விற்றுக் கொண்டும் கொடுத்துக் கொண்டும் இருக்கும் அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் சமாதானத்தை எப்படி ஏற்படுத்த முடியும். இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ( sovereignty and integrity ) என்று சொல்லிக் கொண்டே இன்னும் ஒரு நாட்டை ஆக்கிரமிப்பவர்களினாலும் தங்கள் அரசியல் பொருளாதார நலன்களையே எப்பொழுதும் சிந்திப்பவராலும் எப்படித்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு இன்னும் எண்ணை ஊற்றி எரிப்பவர்களினாலும் எங்குமே எல்லைகளை அறுத்து தின்னும் பெருச்சாளிகளினாலும் எப்படித்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். எப்பொழுதுமே அதிகாரசக்தி மிக்க நாடுகளோடு சேர்ந்து பாடும் ஐ. நாவால் எப்படி ஒரு சமாதானத்தை எங்கும் ஏற்படுத்த முடியும். 

எந்தப் பிரச்சினையும் இருந்து கதைத்து இராஜதந்திரரீதியிலான அணுகுமுறையே சமாதானத்துக்கான பாதையை ஏற்படுத்த முடியும். ரஸ்சிய ஆளும் தலைமையிலும் அவர்களின் அரசியல் பொருளாதார கோட்பாடுகளிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் அருகில் இருக்கும் நாடுகளோடு சமாதானத்தை ஏற்படுத்தும் வழியை தேட வேண்டுமே தவிர யுத்தங்களினால் பெரும் அழிவே என்பதை அறிய வேண்டும் இதுவே இன்றும் எரிந்து கொண்டிருக்கும் ரஷ்யா உக்ரேன் போருக்கும் ஒரு சமாதானத்தை தேட வழி பிறக்கும்.

ஈராக்கை அழித்த போதும் ஆக்கிரமித்த போதும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் ஜப்பானில் அணுகுண்டை போடும் போதும் கியூபாவை அழிக்க எடுத்த முயற்சியின் போதும் ஜனநாயக மறுப்பு நாடான சவுதி அராபியாவோடு நட்பு கொண்டாடும் போதும் ஜனநாயகம் பேணாத நாடு சீனா என்று கூறிக்கொண்டும் அதனோடு வியாபாரம் செய்யும் போதும் சிறு பான்மை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அடக்கியபோதும் எங்கே போனது உங்கள் இறைமையும் ஒருமைப்பாடும் ஜனநாயகமும்  இன்று மட்டும் எப்படி வந்தது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இறைமையும் ஜனநாயகமும் பாதுக்காக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்று. எல்லாமே உங்கள் உங்கள் தேசிய நலனுக்கு ஏற்றா போல் ஆடும் நாடகம் மட்டுமே. 

தத்துவவியலாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்தி கூறுவது போல் இந்த உலகம் யுத்தங்களினாலும் வன்முறையாலும் ஆயத உற்பத்தி விற்பனையாலும் அவர் அவர் தேசிய நலன்களோடு கூடிய தத்துவார்த்த சிந்தனைகளோடு அமைதி சமாதானம் இன்றி இருக்கிறது. மனிதர்கள் இன்னும் ஏன் இந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறார்கள் என்ற பெரும் சவால் மிக்க கேள்வியை உலகத்திடம் கேட்கிறார். இனி வரும் உலகம் புதிய உலக ஒழுங்கோடு புதியதொரு முன்னுதாரண மாற்றங்களோடு (new paradigm shift) கூடிய பாதையில் இனி பயணிக்குமா. இவை எல்லாவற்றையும் கடந்து உலகின் அனைத்து இனங்களும் சமத்துவமான( Equality)  ஒரு பாதையில் பயணிப்பதென்பது இனி வரும் உலக ஒழுங்கில் மிகவும் சவால் மிக்கதாகவே அமையலாம்.

பா.உதயன் ✍️


 

புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை!

3 days 4 hours ago
புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை!
 
e5ac64b1ffa9777c1a47809ea79f8d15.jpg?res

Photo, THE AUSTRALIAN

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உதவும். பழைய கடன்களையும் புதிய கடன்களையும்  திருப்பிச்செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிசெய்வதே சவாலாக அமையும். இதற்காக அரசாங்கம் அதன் புதிய வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

இந்தக் கொள்கை வரிகள் இல்லாமலேயே விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்கெனவே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாமல் இருந்த வருவாயை சம்பாதிப்போருக்கு கணிசமான வரிச்சுமையை அதிகரிக்கிறது. அரசாங்க சேவையாளர்களிலும் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களிலும் குறைப்புச்செய்வதற்கான அதன் திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் அறிகுறிகளைக் காட்டுகின்றது. இவை பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கு அவசியமான சீர்திருத்தங்களாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து அரசாங்கத்துக்கு இவை ஆதரவைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சாத்தியமில்லை. சனத்தொகையில் 40 சதவீதமானோர் தினமும் 225 ரூபாவையும் விட குறைவான பணத்துடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் பலர் வறுமைக்கோட்டின் கீழ் விழக்கூடிய ஆபத்து இருப்பதாக உலக வங்கி எச்சரிக்கை செய்திருக்கிறது.

பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் வரவேற்பைப் பெறக்கூடியவையாக இல்லை என்பதே அரசாங்கத்தின் பிரசசினையாகும். அந்க்த கொள்கைகள் அரசியல் ரீதியிலும் சிக்கலானவையாக இருக்கின்றன. கடந்த காலத்தை ஆராய்ந்து பார்க்கத் தவறுவது எமது தோல்விகள் அல்லது தவறுகளுக்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுவதில்லை. ஆட்சிமுறைமையை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு அல்லது நேர்மையற்ற முறையில் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதும் உதவப்போவதில்லை. நிதி வளத்தைப் பொறுத்தவரை நாட்டை ஒப்பேறக்கூடியதாக்குவதற்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பொருளாதார மறுசீரமைப்பின் செலவுச்சுமை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அவர்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மீதே விகிதப் பொருத்தமில்லாத அளவுக்கு கடுமையாக விழப்போகிறது.

வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துகொண்டிருக்கும் ஒரு நேரத்தில், நிலையான வருமானத்தைப் பெறுகின்றவர்களைப் பொறுத்தவரை உயர்ந்த மட்டங்களிலான வரிகளினால் இருமடங்கு சுமையைத் தாங்கவேண்டியவர்களாக இருப்பதால் அவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். செலவு அதிகரிப்புக்களை தங்களது வாடிக்கையாளர்கள் மீது சுமத்திவிடக்கூடிய நிலையில் இருக்கும் வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுயாதீன துறைசார் நிபுணத்துவ பிரிவினரைப் போலன்றி, இந்த நிலையான வருமானத்தைப் பெறும் பிரிவினர்  வாழ்க்கையைச் சமாளிப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். 12 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அல்லது சனத்தொகையில் ஐந்து சதவீதமானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக கடந்தவருடம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக குடியகல்வு புள்ளிவிபரங்கள் காடடுகின்றன.

மக்கள் அனுபவிக்கின்ற பொருளாதார இடர்பாடுகள் பாரம்பரிய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் அமைப்புக்களின்  ஒன்றிணைந்த போராட்டங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. தங்களுக்குப் பாதிப்பாக அமையக்கூடிய முறையில் வருவாய் பெருக்கத்தில் ஈடுபடும் அரசாங்கத்துக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறா்கள். அடையாள வேலைநிறுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட கடந்த வாரத்தைய வேலைநிறுத்தம்  இணக்கமான ஒரு பிரதிபலிப்பை வெளிப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும் அளவுக்கு வெற்றிகரமானதாக அமைந்தது. ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசாங்க உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியதைப் போன்று தொழில்களை இழக்கவேண்டிவரும் என்பது மாத்திரமல்ல, சொத்துக்களும் சுவீகரிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக போலும் பல ஊழியர்கள் வேலைக்கு வராமல் இருக்கவில்லை.

இதற்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. 1980 ஜூலை வேலைநிறுத்தின்போது ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அன்றைய அரசாங்கம் எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை நடைமுறைப்படுத்திய அரசாங்கம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது. அந்த ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் பல வருடங்களாக பெரும் கஷ்டப்படவேண்டியேற்பட்டது. அன்றைய அரசாங்கம் மக்களின் அமோக ஆணையைக் கொண்ட அரசாங்கமாக இருந்த காரணத்தினால் சமூகத்தின் ஏனைய பிரிவினர் அடக்குமுறைக்கு எதிராக எதையும் செய்யமுடியவில்லை.

தற்காலிக ஓய்வு

தங்களது பொருளாதாரக் கஷ்டங்களையும் மனக்குறைகளையும் பரிசீலனைக்கு எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்திருப்பதன் விளைவாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக Determination தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

பல்வேறு துறைகளையும் சேர்ந்த நாற்பதுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்தன. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதனாலேயே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவை விளக்கமளித்தன. வேலைநிறுத்தத்தின் விளைவாக சுகாதாரம், தபால் மற்றும் ரயில் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டன.

கல்வி, துறைமுகம், நீர்விநியோகம், பெற்றோலியம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் மற்றும் வங்கிச்சேவைகள் உட்பட  ஏனைய துறைகளையும் சேர்ந்த ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். தங்களது பிரச்சினைகள் மற்றும் அக்கறைகள் குறித்து ஆராய முன்வருவதாக ஜனாதிபதி செய்த அறிவிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் பேசவிருப்பதாக கூறிய  வேலைநிறுத்தம் செய்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றன. இது அரசாங்கம் அதன் தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும். 1980 பதவியில் இருந்த அரசாங்கத்தைப் போலன்றி தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடையாது. கடந்த வருடத்தைய மக்கள் போராட்ட இயக்கத்துக்குப் பிறகு இன்றைய அரசாங்கத்துக்கு ஒரு சட்ட ஆணை மாத்திரமே இருக்கிறது.

மக்களின் விரக்திக்கும் வெறுப்புக்கும் மத்தியில் அரசாங்கம் இதுவரையில் விட்டுக்கொடுக்காமல் இருந்துவருகிறது. மக்கள் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டிருக்கிறது. போராட்ட இயக்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டருக்கிறார்கள். திட்டமிடப்பட்டபடி பொருட்களின் விலைகளும் வரிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் உறுதிப்பாட்டுக்கும் நிதி வளங்கள் பெருக்கத்துக்கும் அவசியமான பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை கொடுப்பது என்ற அடிப்படையில் அரசாங்கம் தான் எடுக்கும்  மிகவும் கடுமையான நிலைப்பாடுகளை நியாயப்படுத்திக்கொண்டுவருகிறது.

ஆனால், மக்களின் அபிப்பிராயத்தை செவிமடுக்க மறுப்பதன் மூலமாக அரசாங்கம் தன்னை தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன அரசியல் கட்சிகளாக இருந்தாலென்ன ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகளுடன் ஒரு மோதல் போக்கிற்கே கொண்டுசெல்கிறது. சமூகத்தின் ஏனைய பிரிவுகள் ஒப்பீட்டளவில் பாதிக்கப்படாமல் இருந்தாலும் கூட பொருளாதார சுமையின் கடுமை பரந்தளவு பிரிவினரை பெரிதும் பாதிக்கிறது. இது ஒரு பெரும் அநீதி என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அதை நிச்சயம் அகற்றவேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வதும் தற்போதைய சூழ்நிலையில் சமாதானத்தை ஏற்படுத்தும் சைகைகளாக அமையமுடியும்.

மறபுறத்தில், சட்டத்தின் பிரகாரம் நடத்தவேண்டியிருப்பதும் ஏற்கெனவே இரு தடவைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி நிர்ணயிக்கப்பட்டதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக காட்டிவருகின்ற மறுப்பு அரசியல் நெருக்கடியை மோசமாக்குகிறது. தேர்தல்களுக்குத் தேவையான நிதி வளங்களை திறைசேரி விடுவிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு முரணாகவும்  எடுத்திருக்கும் நிலைப்பாட்டினால் அரசாங்கம் அதற்கான எதிர்ப்பை தொடர்ந்து விரிவடையச்செய்துகொண்டே போகிறது.

மக்களின் ஆதரவைப் பெறுவதில் தனக்கு இருக்கும் ஆற்றல் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் அச்சவுணர்வே அது உள்ளூராட்சி தேர்தல்களை குழப்புவதற்குக் கொண்டிருக்கும் திடசங்கற்பத்துக்குக் காரணமாகும். எதிரணி கட்சிகளையும் விட மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே அரசாங்கக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்கவைத் தவிர மற்றும்படி ஒரு வருடத்துக்கு முன்னர் மக்கள் இயக்கத்தின் சீற்றத்துக்கு முகங்கொடுக்கமுடியாமல் அபகீர்த்திக்குள்ளாகி பதவியில் இருந்து விலகிய அதே அரசியல் கட்சிகளினதும் அரசாங்கத்தினதும் உறுப்பினர்களையே தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதியின் தெரிவுகள்

அரசாங்கம் இதுவரையில் அதற்கு இருக்கக்கூடிய நெருக்குதல்களுக்கு பொலிஸ் நடவடிக்கைகளின் மூலமாக போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதன் மூலமே பதிலளித்துவருகிறது. வீதிப்போராட்டங்களை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளத் தயாராயில்லை. அத்துடன், சட்டத்தைப் பொருட்படுத்தாமல் அரசாங்க நிறுவனங்கள் தனது விருப்புக்கேற்ப செயற்படவேண்டும் என்று அவை மீது அரசாங்கம் நெருக்குதலையும் பிரயோகிக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கான திகதிகளை நிர்ணயிப்பதில் தேர்தல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் ஒரு தடவை அவமதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேர்தல்களை மீண்டும் ஒத்திவைக்கவேண்டியிருக்கிறது போன்று இப்போது தோன்றுகிறது. அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்கு தன்னாலியன்றவரை சிறப்பாக சுயாதீனமாக செயற்பட்டுவரும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சர்களுக்கு விடுக்கின்ற அழைப்பாணைகளையும் அரசாங்கம் அவமதிக்கிறது.

தேர்தல் நோக்கங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை நிறுத்திவைப்பதற்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை மதித்துச் செயற்படுவதற்கு அரசாங்கம் மறுப்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் தாக்கமாகும். இவையெல்லாம் எதிர்காலத்தில் தகராறுகளையும் சட்டம் ஒழுங்கு இன்மையையும் கொண்டுவரக்கூடிய எதிர்மறையான போக்குகளாகும். இவை நீண்டகாலத்துக்கு நாட்டின் அபிவிருத்திக்கும் விழுமியங்களுக்கும் பாரிய பாதக விளைவுகளைக் கொண்டுவரக்கூடியவையாகும்.

நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை விளங்கிக்கொள்ளக்கூடியவராக ஜனாதிபதி விக்கிரமசிங்க இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பிரச்சினைகள் தொடர்பில் நெருக்குதல்கள் அதிகரிப்பது தவிர்க்கப்படவேண்டும். அனுபவமிக்க ஒரு அரசியல் தலைவராகவும் சிறந்த வாசிப்பு பழக்கத்தைக் கொண்ட சர்வதேச அரசியல் மாணவராகவும் இருக்கும் ஜனாதிபதி அரசாங்கத்தின் மூன்று கிளைகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய ஒரு மோதல் கொண்டுவரக்கூடிய ஆபத்துக்களை நன்கு அறிவார்.

நீதித்துறையுடனான ஒரு மோதல் அல்லது நீதித்துறையின் தீர்மானங்களை மறுதலிக்கும் செயல் சட்டமுறைமை முழுமையின் மீதுமான நம்பிக்கையை அரித்துச்சென்றுவிடும்; அரசியல் சமுதாயத்தின் உறுதிப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது அதற்கு இருக்கவேண்டிய  பற்றுறுதியில் முதலீட்டாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கையை இல்லாமல் செய்துவிடும். உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டிய தேவை குறித்த அமெரிக்கத் தூதுவரின் வலியுறுத்தல் இந்த உண்மையை உணர்த்தியிருக்கும்.

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் அமெரிக்காவைப் போன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் ஜப்பானும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை போன்ற நிதிச்சலுகைகள் மற்றும் பயன்களின் வடிவில் உலகின் மிகவும் பெரிய தனவந்த நாடுகளான இவற்றின் இலங்கை அதன் பொருளாதார உயிர்வாழ்வு, வர்த்தகம் மற்றும் உதவிகளுக்காக தங்கியிருக்கிறது. அதனால் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் வருகின்ற இந்த நெருக்குதல்கள் தேர்தல்களின் திசையில் அரசாங்கத்தை உந்தித்தள்ளி மக்களிடமிருந்து புதிய ஆணையப் பெற நாட்டம் கொள்ளவைக்கக்கூடும்.

உருப்படியான முறையில் ஆட்சி செய்வதற்கு அரசாங்கத்தின் நியாயப்பாட்டை வலுப்படுத்தவும் தேசிய நலன்களுக்காக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் தேர்தல் ஆணையொன்று தேவை. வேண்டப்படும் ஆணை உள்ளூராட்சி மட்டத்தில் இல்லாமல் இருக்கலாம். அங்கு அரசாங்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன. ஆனால், ஜனாதிபதி தனது தற்துணிபை பிரயோகிக்கக்கூடிய தேசிய மட்டத்தில் அந்த ஆணை வரக்கூடும்.

jehan-e1660716495972.jpg?resize=83%2C116கலாநிதி ஜெகான் பெரேரா
 

 

https://maatram.org/?p=10765

தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா

6 days 5 hours ago
தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா

அரசியலில் மிகவும் துல்லியமான கணிப்புக்களை எவராலும் வழங்க முடியாது. சில அனுமானங்களை செய்ய முடியும். உலகின் முன்னணி புத்திஜீவிகளில் ஒருவரான பேராசிரியர் நோம்ஷொம்ஸகி, கூறுவார், என்னால் நாளைய காலநிலையை எதிர்வுகூற முடியாது. அதாவது, அரசியலிலும், உலக விவகாரங்களிலும் ஒருவர் என்னதான் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் கூட, எதிர்காலம் தொடர்பில் அப்பழுக்கற்ற பார்வையை எவராலும் முன்வைக்க முடியாது. பிஸ்மார்க், கூறியது போன்று, நான் என்னதான் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும் கூட, கடிகாரத்தின் முள்ளை மாற்றிவைப்பதால், காலத்தை நகர்த்திவிட முடியாது. எனவே மனிதனின் ஆளுமையென்பது எல்லையற்றதல்ல. அது எல்லைக்குட்பட்டது. ஒரு எல்லைக்குட்பட்ட நம்மால், ஒரு எல்லைக்குள்தான் சிந்திக்கவும் செயலாற்றவும் முடியும். இதற்குள் நம்மை நாமே வல்லுனர்களென்று கருதிக் கொள்வதெல்லாம் நமது தனிப்பட்ட ஆர்வங்கள் சார்ந்தது.

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு என்ன நடைபெறப் போகின்றது? இதற்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? தாயுமானவர் கூறுவது போன்று, நாமொன்றும் அறியோம் பராபரமேயென்று கூறிவிட்டு, அமைதியடைந்துவிடவும் முடியாது. பதிலளிக்கவும் வேண்டும் ஆனால் அந்த பதிலில் நிதானமும் தெளிவுமிருக்க வேண்டும். இதுவரையில் என்ன நடந்தது என்பதில் தெளிவிருக்கும் போதுதான், இனிமேல் நடைபெறப் போகும் – அல்லது, நடைபெறலாமென்று நாம் எதிர்பாக்கும் விடயங்களின் சாத்தியப்பாட்டை ஆராய முடியும்? ஒரு விடயத்தை சிலரும், சிலவேளைகளில் பலரும் கூறுவதை காணமுடிகின்றது.

அதாவது, இந்தியாவை கையாண்டிருக்கலாம், அமெரிக்காவை கையாண்டிருக்கலாம், அதற்கான வாய்ப்பு இப்போதுமுண்டு, ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் அதனை சரியாக புரிந்துகொண்டு கையாள முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களிடம் ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்கினால், அவர்களால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போகலாம். ஏனெனில் இது பேசுவது போன்று, கட்டுரையெழுதுவது போன்று, இலகுவான விடயங்கள் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்ற சிலர் ஆற்றல்லற்றவர்கள் அல்லர். குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக இருக்கின்ற சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்களுக்கு ஆற்றலுண்டு. அவர்களுக்கு இந்த விடயத்தில் நீண்ட அனுபமுண்டு. அதே போன்று, தமிழரசு கட்சியில் சுமந்திரனும் ஆற்றலுள்ளவர்தான். அதே போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விடயங்களை அறிந்தவர்தான். அதனை மறுதலிக்க முடியாது. ஆனால் இவர்களால் என்ன செய்யமுடியும்? தேர்தல் அரசியலுக்காக சில விடயங்களை கூறவேண்டிய நிர்பந்தத்திலிருந்தாலும், இவர்கள் கூறிவரும் விடயங்கள் எதனையும், அடைய முடியாதென்பதை அவர்களும் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசியல் கட்சியென்பதால் தங்களால் முடியாதென்றும் மக்களிடம் கூறமுடியாது. ஒரு வகையில் அரசியல் கட்சிகளின் நிலைமை திரிசங்கு நிலைதான்.

இன்றைய தமிழ் தேசிய அரசியலை ஆழமாக நோக்கினால், ஒரு விடயத்தை காணலாம். அதாவது, இன்று தமிழ் தேசியமென்பது சில நம்பிக்கைகளினால் மட்டுமே அசைகின்றது. முதல் நம்பிக்கை, சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் ஈழத் தமிழ்மக்களுக்கு நன்மை கிட்டும். இரண்டாவது, நம்பிக்கை, இந்தியாவிற்கு ஒரு தேவையேற்படும், அப்போது வேறு வழியில்லாமல் ஈழத் தமிழர்களை நோக்கித்தான் வரவேண்டும் ஏனெனில், இலங்கைக்குள் சீனா வலுவாக காலூன்றிவிட்டது, அதனை கையாள முடியாமல் இந்தியா தடுமாறுகின்றது.

மூன்றாவது நம்பிக்கை, புலம்பெயர் சமூகம் பற்றியது. புலம்பெயர் சமூகம் பலமாக இருக்கின்றது, மேற்குலக நாடுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தும் ஆற்றலோடிருக்கின்றது. அவர்களின் அழுத்தங்களால் ஏதோவொரு வகையில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். நான்காவது, சீன – அமெரிக்க உலகளாவிய போட்டியின் காரணமாக, இலங்கை முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த பின்புலத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஈழத் தமிழர்கள் இருப்பதால், அமெரிக்காவின் நகர்வுகளுக்கு தமிழர்கள் தேவைப்படுவார்கள், இது தமிழர்களுக்கு சாதகமானது. மொத்தத்தின் இவற்றின் வாயிலாக ஈழத் தமிழர்களுக்கு விமோசனமுண்டு.

யுத்தமில்லாத கடந்த 13 வருடகால தமிழ் தேசிய அரசியலானது இவ்வாறான நம்பிக்கைகளின் வழியாகத்தான், நகர்ந்திருக்கின்றது.

spacer.png

இவைகள் அனைத்துமே சிலரிடமும், பலரிடமும் உள்ள எதிர்பார்ப்புக்கள் மட்டுமே. முதலாவது நம்பிக்கையை நோக்குவோம், சர்வதேச அழுத்தங்களின் வழியாக தமிழ் மக்களுக்கு சில விடயங்கள் கிடைக்கும். இதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. நாங்கள் எதிர்பார்க்கலாம், எங்களுடைய அறிவின் எல்லைக்குட்பட்டு, அனுமானிக்கலாம். முதலில் சர்வதேச அழுத்தங்கள் என்பதால் நாம் எதை விளங்கிக் கொள்கின்றோம்? இது தொடர்பில் முன்னைய பத்திகளிலும் சில விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றேன். முதலில் சர்வதேச அழுத்தமென்பது, மேற்குலக அழுத்தம் மட்டுமே. அதாவது, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா அத்துடன் ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மூலம் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களாகும். மனித உரிமையின் மீதான கரிசனையே, இந்த அழுத்தங்களின் அடிப்படையாகும். ஒரு வேளை நாம் மனித உரிமை தொடர்பில் பேசாவிட்டாலும் கூட, அவர்கள் பேசுவார்கள். ஏனெனில் அது அவர்களின் வெளிவிவகார அணுகுமுறையாகும். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மேற்படி நாடுகள் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றன. இந்த நாடுகளின் அழுத்தங்கள் நேரடியாகவும், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச அழுத்தமென்பது, இதுதான். இதுதான் கடந்த 13 வருடங்களாக இடம்பெற்றுவரும் அழுத்தங்கள்.

இந்த அழுத்தங்களை தீவிரப்படுத்துங்கள் – என்னும் பெயரில்தான், ஆண்டுகள் தோறும், தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூக குழுக்களும், புலம்பெயர் குழுக்களும் கடிதங்களை அனுப்பியிருந்தன, பயணங்களையும் மேற்கொண்டிருந்தன. எதிர்பார்த்த விளைவுகள் கிடைத்தனவா? இல்லை. ஏன் அவ்வாறு நடைபெறவில்லையென்பதற்கு நம்மில் சிலரிடமுள்ள இலகுவான பதில், அரசியல்வாதிகள் இதனை சரியாக கையாளவில்லை. அவர்களுக்கு விடயங்கள் விளங்கவில்லை. இதிலுள்ள அடிப்படையான விடயம் அரசியல்வாதிகளால் இந்த விடயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் எதனையும் செய்ய முடியாது. கடிதங்களை அனுப்பலாம், தேர்தல் அரசியலுக்காக, தங்களுடைய கடிதங்களிலுள்ள விடயங்களைத்தான் ஆணையாளர் உள்வாங்கியிருக்கின்றார் – என்று அறிக்கை வெளியிடலாம். இந்த அறிக்கைகள் தேர்தல் அரசியல் தொடர்பானது. அதே போன்று, இன்னொரு கட்சி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரன் தடுக்கின்றார், என்று அறிக்கை வெளியிடலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரனால் எவ்வாறு தடுக்க முடியும்? நிச்சயம் முடியாது. இவ்வாறான கதைகளெல்லாம் தேர்தலில் ஒருவரை தோற்கடிப்பதற்கு மற்றைய கட்சி கூறும் கதைகள். ஆனால் அறிவுள்ள ஒரு தரப்பு இவ்வாறான கதைகளை ஆராயமல் உச்சரிக்கக் கூடாது.

இரண்டாவது இந்தியா தொடர்பானது. இந்தியா தொடர்பில் தெளிவான பார்வை, தமிழ் சூழலில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இங்கும் பிரச்சினை இந்தியா தொடர்பான எதிர்பார்ப்புக்கள்தான். இதில் அரசியல்வாதிகளிடம் பிரச்சினையில்லை. ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போரிடம்தான் பிரச்சினையுண்டு. ஒரு தரப்பினர், இந்தியாவை ஈழத் தமிழர்களின் வேலையாள் போன்று நோக்குகின்றனர். தாங்கள் விரும்பும் ஒன்றை இந்தியா செய்ய வேண்டும். இரண்டாவது, தரப்பினர், இந்தியாவென்னும் ஒரு பிராந்திய சக்தியின் தேசிய பாதுகாப்பே, ஈழத் தமிழர்களில்தான் தங்கியிருக்கின்றது – என்றவாறு புனை கதைகளை எழுத முற்படுகின்றனர். இரண்டுமே அடிப்படையிலேயே தவறானது.

இந்தியா, நாம் விரும்புவதையெல்லாம் செய்யாது என்பதை நாம் முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவின் கொள்கை, அன்றிலிருந்து இன்றுவரையில், ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது, இலங்கை ஒரு நட்புநாடு. அந்த நட்புநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதில் தலையீடு செய்யும் கடப்பாடு இந்தியாவிற்குண்டு. அன்றைய சூழலில் இந்திராகாந்தி கூறியது ஒன்றுதான் – அதாவது, ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியாவானது, அருகிலுள்ள இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது, அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு இதுதான். ஆனால் அதற்காக சிங்களவர்களின் குரல்வளையை நசிக்க வேண்டுமென்று, தமிழர்கள் எதிர்பார்த்தால், அதனை இந்தியா ஒரு போதும் செய்யாது. ஏனெனில் இந்திராகாந்தி, அதன் பின்னர், அவரது புதல்வர் ராஜீவ்காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, குரல்வளையை பிடிக்கும் சிறிய அணுகுமுறையிருந்தது உண்மைதான். ஒரு புறம் ஈழ ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளித்த இந்தியா, பின்னர் அதனையே ஒரு காரணமாகக் கொண்டு இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது. இந்தியாவின் அன்றைய அணுகுமுறை இராணுவரீதியானது. ஆனாலும் இந்தியா ஈழத் தமிழர்களின் பெயரில் தலையீட்டை முன்னெடுத்த போதிலும் கூட, அதன் மூலம் இந்தியாவிற்கு மோசமான அனுபவங்களே கிடைத்தது. இறுதியில் விரல்களை சுட்டுக்கொண்ட அனுபவத்தோடு, இந்தியா வெளியேறியது.

மூன்றாவது நம்பிக்கை புலம்பெயர் சமூகம் தொடர்பானது. தாயக தமிழ் மக்களுக்கான சர்வதேச குரலாக புலம்பெயர் சமூகம் வளர்சியடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். அதனை மறுதலிக்க முடியாது ஆனால் இது தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. புலம்பெயர் சமூகம் தலையீடு செய்வதால்தான் மேற்குலம், இலங்கை விடயத்தில் சில அழுத்தங்களை பிரயோகிப்பதாக கருதுவது தவறானது. அண்மையில் கனடிய வெளிவிவகார விடயங்களில் நிபுனத்துவம் வாய்ந்த பேராசிரியர் கிம் நொஷலை, எனது மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்திற்கான நேர்காணல் செய்திருந்தேன். இதன்போது அவர் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது, கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் அடிப்படையானது. மேலும் கனடாவின் அணுகுமுறை தனியானது அல்ல, அதன் நேச நாடுகளின் அணுகுமுறையின் அங்கமாகும். ஒருவேளை, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் கூட, கனடாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. மேலும் கனடாவில் இடம்பெறும் புலம்பெயர் செயற்பாடுகளை உள்நாட்டு விவகாரமாக நோக்க வேண்டும். உதாரணமாக இனப்படுகொலை வாரத்தை அனுமதிப்பது. இவைகள் உள்ளுர் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளேயன்றி, கனடாவின் வெளிவிவகார கொள்கையில் தாக்கம் செலுத்தும் விடயங்களல்ல.

எனவே விடயங்களை நோக்கினால், இவ்வாறான எதிர்பார்புக்களும், அந்த எதிர்பார்ப்புக்கள் மீதான எதிர்வு கூறல்களும் முற்றிலும் சரியானதல்ல. இவற்றுக்கான வாய்ப்புக்கள் என்பது, பெரும்பாலும் அதிஸ்டத்தை நம்புவது போன்றது. ஒரு இனத்தின் அரசியல் போக்கை இவ்வாறு அணுகுவது சரியானதா? கடந்த காலம் நமக்கு தந்திருக்கும் படிப்பினைகள் எவையுமே இவ்வாறான விடயங்கள் மீது நம்பிக்கை வைப்பதை சந்தேகத்துடன் நோக்குமாறுதான் வற்புறுத்துகின்றது. முதலில் நாம் ஏதாவதொரு வகையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஏதாவதொரு கட்டமைப்பு தேவைப்படுகின்றது. அவ்வாறில்லாவிட்டால், நமது நிலைமையானது, பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை என்பதாகிவிடும். கடந்த 13 வருடங்களாக, நமது காலம், பல்லக்கு பேச்சுக்களில்தான் கழிந்திருக்கின்றது. இது சுகமானது ஆனால் மக்களுக்கு பயனற்றது.

 


 

http://www.samakalam.com/தமிழரின்-அரசியலை-வழிநடத்/

 

 

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும்

6 days 10 hours ago

 

 

காலனித்துவ ஆட்சிக்கு பின்னனா இலங்கையின் அரசியல் வரலாறு என்பது மிகவும் வினோதமானது. இலங்கையின் சிங்கள அரசியலை தேரவாத பௌத்தத்தைக் கோட்பாட்டின் அடித்தளத்திலிருந்தும், புவிசார் அரசியல் கண்ணோட்டத்தினுாடகவும் நோக்குவது அவசியமானது.

மகாவம்சம் என்ற ஐதீக கதையிலிருந்து கட்டமைக்கப்பட்ட 'தம்மதீப' கோட்பாட்டினை மையப்படுத்தியே சிங்கள தலைவர்கள் தமக்கிடையிலான அரசியல், பொருளியல், வர்க்க, பதவி போட்டிகளையும் பிரச்சனைகளையும் அணுகுகின்றனர்.

பொதுவாக ஆதிக்கப் போட்டிகள் ஏற்படுகின்ற போது அதனைத் தமிழருக்கு எதிரான அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமாக மடைமாற்றி அரசியற் படுகொலைகளை நிறைவேற்றி தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வர்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

பௌத்தத்தின் வரலாறு

இத்தகைய போக்கு இலங்கையின் பௌத்த வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்வதைக் காணலாம். அத்தகைய நிகழ் போக்கை வரலாற்றுரீதியாக இரண்டு அரசியல் படுகொலை வரலாற்று நிகழ்வுகளை நோக்குவதன் மூலம் இலங்கையின் அரசியல் போக்கினை புரிந்துகொள்ள போதுமானது.

இலங்கையின் தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்பது கிறிஸ்துக்கு முன் 247இல் இந்தியாவிலிருந்து வருகை தந்த மகிந்த தேரர் அனுராதபுரத்தின் மன்னனான தீசனை பௌத்தனாக மதம் மாற்றி அசோகச் சக்கரவர்த்தியின் பட்ட பேரான 'தேவநாம்பிய' என்ற பட்ட பேருடன் இணைத்து தேவநாம்பியதீசன் என்ற பெயரை இட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட முடியை அணிவித்து அனுராதபுரத்தின் பௌத்த மன்னனாக முடிசூடப்பட்டான்.

அவ்வாறு முடிசூடப்பட்டவன் பேரளவில் மன்னனாக இருந்தானே தவிர உண்மையான முடிக்குரிய, அதிகாரத்துக்குரிய மன்னனாக அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மகிந்த தேரரே பௌத்த துறவி என்ற வேடத்தில் அனுராதபுரத்திலிருந்து அதிகாரம் செலுத்தினார் என்பதே உண்மையானது.

மகாநாமதேரர் இதனைக் கருத்தில் கொண்டும் அதற்கு பின்னனா தொடர் வரலாற்றில் இந்திய ஆக்கிரமிப்பு குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி தமிழ் மன்னர்கள் படையெடுத்துக் கைப்பற்றியமையும், அதேபோன்று வட இலங்கை அரசர்களான உத்தர தேச மன்னர்கள் அனுராதபுரத்தின் மீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றி அனுராதபுர மன்னர்களாக முடிசூடிக்கொண்ட வரலாற்றையும் தன் மனதில் கொண்டு இந்தியா மீதும், தமிழர்கள் மீதும் அவருக்கு இருந்த வெறுப்புணர்வுகளும்தான் கிபி ஆறாம் நூற்றாண்டில் மகாநாடு தேரரை 'மகாவம்ச' என்ற நூலை எழுதத் தூண்டியது. அந்த நூல் 'தம்மதீபக்' கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டுள்ளது. 

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

முதலாவது அரசியல் படுகொலை

அதாவது இலங்கைத் தீவு புத்தபிரானால் பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு. (யூதர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி இஸ்ரேல் போன்றது) பௌத்தத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு என்ற ஐதீகக் கதையின் விளைவுகளைச் சார்ந்து இந்த கட்டுரை எழுதும் நிமிடம்வரை இலங்கை தீவில் தொடர்ந்து தேரவாத பௌத்தர்கள் அல்லாதவர்களும் தம்மதீபக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்காத பௌத்தர்களும் அரசியல் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது.

இந்த வகையில் இலங்கையின் முதலாவது அரசியல் படுகொலை என்பதை வரலாற்றுக் காலங்களில் பார்த்தால் அது கிபி 3ம் நூற்றாண்டின் இறுதியில் மாசேனன் காலத்தில் நிகழ்ந்தது. அன்றைய காலத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் பௌத்தத்தின் இரு பிரிவுகளான மகாசேன பௌத்தமும், தேரவாத பௌத்தமும் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தன. தேரவாத பௌத்தம் என்பது புத்தருடைய பாதச்சுவட்டையும், தந்ததா துவையும் வழிபடுகின்ற முறைமையைக் கொண்டது. அது வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.

மாகா ஞான பௌத்தம் என்பது புத்தருடைய உருவச்சிலையையும், உருவச் சிலைக்கு தூபதீபம் காட்டுகின்ற கிரியை முறைகளையும் கொண்டது. மகாசேன பௌத்தம் தென்னிந்தியாவிலும் குறிப்பாகத் தமிழர்கள் மத்தியிலும் வட இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பெரு வளர்ச்சி அடைந்திருந்தது. அது சைவ வைதீக மதங்களின் அனைத்து வழிகாட்டு முறைகளையும் கிரியைகளையும் உள்வாங்கி இருந்த மதமும்கூட.

கிபி 3ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் தேரவாத பௌத்தத்தை வீழ்த்தி மகாசேன பௌத்தம் எழுச்சி பெற்றது மகாசேன பௌத்தத்தை அன்றைய காலத்தில் தென்னிந்தியா தமிழர்களும் வட இலங்கைத் தமிழர்களும் ஏற்றுப் பெரு வளர்ச்சி எய்தியிருந்தது. அத்தகைய எழுச்சியின் விளைவு அனுராதபுரத்தை நோக்கியும் மகாசேன பௌத்தம் பரவத் தொடங்கியது அவ்வாறு பரவுவதற்கு வித்திட்டவர் தமிழகத்திலிருந்து வருகை தந்த சங்கமித்தார் எனப்படும் தமிழ் பௌத்த துறவியாவார்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

மகாவிகாரை

 

அவர் அனுராதபுரத்தில் மகா விகாரையில் இருந்த தேரவாத பௌத்த துறவியான சங்க பாலரை சமயத்திலே தோற்கடித்தார். அதனால் அனுராதபுர மன்னன் கோத்தபாயன் மகாசேன பௌத்த தர்மத்தைப் பின்பற்றினான் . அனுராதபுரத்தில் அரச மதமாக மகாஞானத்தை சங்கமித்தர் நிலைநாட்டினார். அவருக்காகவே அனுராதபுரத்தில் 'அபயகிரி' என்ற மகாசேன பௌத்த விகார கட்டப்பட்டது.

அதே நேரம் தேரவாத பௌத்தர்களுடைய 'மகாவிகாரை' கவனிப்பாரற்று அழிவு நிலைக்குச் சென்றது. இந்தப் பின்னணியில் அனுராதபுர ஆட்சி அதிகாரத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டியின் விளைவைச் சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்கான சதி நடவடிக்கைகள் மகாசேனன் காலத்தில் இடம்பெற்றது.

தமிழர்கள் பின்பற்றிய மகாஞாண பௌத்தம் அனுராதபுரத்தில் நிலை பெறப்போகிறது என்ற அச்சத்தினை நாட்டு மக்களுக்குப் பரப்பிய மகாசேன மன்னனின் மூன்றாவது மனைவியாகிய அணுலாதேவியும் சங்க பாலர் என்கின்ற தேரவாத பௌத்த துறவியும் இணைந்து சங்கமித்தர் எனப்படும் தமிழ் மகாசேன. பௌத்த துறவியைப் படுகொலை செய்தனர். இதுவே இலங்கைத் தீவில் பௌத்தத்தின் பெயரால் நிகழ்ந்த முதலாவது அரசியல் படுகொலையாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இத்தகைய வரலாற்றுப் போக்கின் தொடர்ச்சியாகக் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை தீவின் அரசியல் அதிகாரத்தைச் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்குச் சிங்களத் தலைவர்கள் தமது சந்தர்ப்பவாத பதவி, பொருளியல் போட்டிகள் நலன்களுக்கும், தமது அற்பத்தனமான பிற்போக்குத் தனங்களுக்கும் இனவாதத்தையும் மதவாதத்தையும் கருவியாகப் பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறையாக மடைமாற்றி விட்டிருந்தனர்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

மலையகத் தமிழர்கள்

 

மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பிரயோகித்து சிங்கள ஆளும் குழாம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதும் பொருளியல் நலன்களை அடைவதையும் இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் காணமுடியும். 

இந்த அடிப்படையிலேதான் எஸ்.டபுள்யூ . ஆர்.டி.பண்டார நாயக்கா படுகொலையும் நிகழ்ந்தது. பண்டார நாயக படுகொலை என்பது பலபரிமாணம் மிக்கது. பௌத்தமும், மேலைத்தேச முதலாளித்துவ அதிகார வர்க்கமும், உள்ளூர் பொருளாதார ஆதிக்க போட்டியும் என மும்முனை சக்திகள் தமது நலன்களை அடைவதற்காகத் தொழிற்பட்டதைக் காணமுடிகிறது.

பண்டார நாயக்க படுகொலை என்பது வெறுமனே ஒரு பௌத்த தேரரால் கொல்லப்பட்டது என்ற செய்தி சொல்லப்படுகின்ற போதும் அதனுடைய அடி ஆழம் என்பது இந்த மும்முனை சக்திகளின் நலனிலும் இலாபத்திலும் தங்கியிருந்துள்ளது.

1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பண்டார நாயக்கா முன்வைத்த கோஷம் 'நான் வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் சிங்கள மொழிச் சட்டத்தை உருவாக்குவேன் இலங்கையின் அரச மதமாகப் பௌத்தத்தை பிரகடனப்படுத்தி பௌத்த சாசன அமைச்சை உருவாக்குவேன்' என்பனவே முக்கியத்துவம் பெற்றது. அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

கண்டி தலதா மாளிகை

சிங்கள மொழிச் சட்டத்தை நிறைவேற்றினார். அன்றைய காலத்தில் இலங்கை அரசியலில் ஜனநாயகத்துக்குப் பதிலாகப் பெரும்பான்மைவாத ஜனநாயகம் எழுச்சி பெற்றது. இதன் விளைவாகத் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் எனத் தொடங்கித் தனி சிங்கள மொழிச் சட்டம் என்பவற்றினால் வெகுண்ட சிறுபான்மையினர் மேற்கொண்ட போராட்டங்களைத் தணிப்பதற்காக பண்டார நாயக்க பண்டா-செல்வா ஒப்பந்தத்தை 26-07-1957இல் கைச்சாத்திட்டார்.

ஒப்பந்தத்தை எதிர்த்து 04-10-1957 களனி ராஜாகா விகாரையின் விகாராதிபதி புத்திர கித்திரதேரர் உள்ளிட்ட 200 பிக்குகளும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிங்களத் தலைவர்களும் கண்டி தலதா மாளிகை நோக்கி பாதயாத்திரை செய்தனர். இதனை அடுத்துத்தான் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என பௌத்த பிக்குகளுக்கு வாக்குறுதி வழங்கியதை அடுத்து ஒப்பந்தம் குப்பைக் கூடைக்குள் போய்விட்டது. 

அதேநேரம் பண்டார நாயக்கா பெட்ரோலியம், போக்குவரத்து, பெருந்திட்டம் என்பவற்றைத் தேசிய மயமாக்கி பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்தார். அத்தோடு சிங்கள கிறிஸ்தவ மிஷனரியிடமும் சிங்கள கிறிஸ்தவ உயர்குலத்தின் வலுவான பிடியிலிருந்த கல்வித்துறையைத் தேசிய மயமாக்கினார்.

தனியார்த் துறை தேசிய மயமாக்கல் மூலம் பெரும் பாதிப்படைந்த கிறிஸ்தவ உயர் குழாம், கிறிஸ்தவ மிஷினரிகள், மேற்குலக முதலாளித்துவ கம்பனிகளும், முதலாளிகளும் அனைவருடைய பொது எதிரியாக பண்டார நாயக்க தென்படத் தொடங்கினார்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

பௌத்த சாசன அமைச்சு

 

அரிசி இறக்குமதிக்கான கோட்டாவை விமலா விஜயவர்த்தனா அவர்களுக்குக் கொடுக்க மறுத்தார். அன்றைய காலத்தில் விஜய வர்த்தன குடும்பம் என்பது இலங்கையின் முதல்தர செல்வந்த குடும்பமாகக் கருதப்பட்டது. விஜய வர்த்தன ரஜமகா விகாரையின் தருமகர்த்தாவும்கூட. இந்தப் பின்னணியில்தான் ரஜமகா விகாரையின் விகாராதிபதி புத்தரகித்ரதேரர், விமலா விஜயவர்த்தனவுக்காக பண்டாரநாயக்காவின் மீது வெறுப்பு கொண்டார்.

மரத்தளபாட ஏகோ போக விற்பனையாளரான ஓசி கொரியா, பண்டார நாயக்கா குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டவர். எந்த நேரத்திலும் பண்டார நாயக்கா வீட்டுக் கதவைத் திறக்க வல்லவர். அவரும் இந்த மேற்குலக சிந்தனை, வாழ்வியல் மரபைக்கொண்ட முதலாளித்துவ அணியுடன் இணைந்து கொண்டார்.

அல்லது இந்த முதலாளித்துவ வர்க்கத்தினால் கருவியாகப் பயன்படுத்தப்பட்டார். இவ்வாறு மும்முனை அணியும் இணைந்து பண்டார நாயக்க மீதான படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி முடித்தனர். இக்கொலையில் மேற்குலக புலனாய்வு அமைப்புக்களின் கைகளும் இருந்தது. இங்கே அவரவர்கள் நலன்களும் இலக்குகளும் வேறுபட்டவை.

ஆயினும் இதில் மும்முனைகளும் நலனை அடைவதற்கு பண்டார நாயக்க கொல்லப்பட வேண்டும். இந்தக் கொலையின் கருவியாக அதி தீவிர பௌத்த விசுவாசியான சோமராமதேரர் பயன்படுத்தப்பட்டார். சேமராமதேரருக்கு பண்டார நாயக்க மீதான வெறுப்பு என்னவென்றால் பௌத்த சாசன அமைச்சை உருவாக்காமல் தட்டிக் கழிக்கிறார் என்பதுதான்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

கைத்துப்பாக்கியால் சுட்டார்

 

எனவே அவருக்கு இருந்த பௌத்தத்தின் மீதான விசுவாசத்தை தமக்குச் சாதகமாக இந்த மும்முனை அணிகளும் பயன்படுத்தி, சிறுபான்மையினருக்கு உரிமைகளை பண்டார நாயக்க வழங்குகின்றார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி சோம ராம தேரரைத் தூண்டி பண்டாரநாயக்கவை சுட்டுக் கொல்ல திட்டமிடப்பட்டது.

25-09-1959 அன்று காலை 10 மணி அளவில் பிரதமரைச் சந்திப்பதற்கு என்று கூறிக்கொண்டு சென்ற சோமராம் தேரர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டார். படுகாயம் அடைந்த பண்டார நாயக்க சரிந்து விழுந்தார். அப்போதுகூட பண்டார நாயக்கா பௌத்த துறவியை ஒன்றும் செய்யாதீர்கள் என்றுதான் குறிப்பிட்டாராம். காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சோமராம் தேரர் ஆவேசமாக 'நான் சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும் காப்பாற்றுவதற்காகவே பிரதம மந்திரியைச் சுட்டேன்' எனக் கத்தினார்.

அந்த அமளிதுமளியில் இன்னும் ஒரு நபர் பண்டாரநாயக்காவின் இல்லத்தின் பின்புற மதிலால் ஏறிப்பாய்ந்து தப்பித்தார் என்றும் சாட்சியம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தக் குறித்த நபர் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. படுகாயமடைந்த பண்டார நாயக்க 22 மணித்தியாலங்கள் உயிருக்காகப் போராடி மறுநாள் 26ஆம் திகதி காலை 8 மணி அளவில் மரணமடைந்தார். ஆனால், இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளும் அதனுடைய பின்புலங்கள் பற்றியும் அன்றைய காலத்தில் பெரிய அளவில் விசாரிக்கப்படவுமில்லை அவை வெளிக்கொணரப்படவும் இல்லை.

இந்த வழக்கில் கொலைக் குற்றத்தைச் செய்யத் தூண்டியதற்காக புத்தரகித்தர தேரருக்கு ஆயுள் காலச் சிறைத் தண்டனையும் கொலைக் குற்றம் செய்த சோமராம் தேருக்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டது.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

பௌத்த பிக்கு

 

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் சோமராம் தேரர் தன்னை ஒரு கிறிஸ்தவனாக மதமாற்றி பீட்டர் என்ற கிறிஸ்தவ மத பெயரையும் சூட்டிக்கொண்டார். அவர் தூக்குக் கயிற்றில் தொங்கியபோது பீட்டர் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவனாகவே மரணித்தார். அவருடைய மரணச் சடங்கும் கிறிஸ்தவ முறைப்படியே நடைபெற்றது.

இங்கு இந்த விடயத்தை மிக ஆழமாகக் கவனிக்க வேண்டும். பௌத்த துறவிகளும், சிங்கள பௌத்தர்களும் பௌத்த மதத்திற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படக் கூடாது என்பதிலும், ஒரு பௌத்த பிக்கு தூக்குக் கயிற்றில் தொங்கக்கூடாது என்பதானாலுமே இவ்வாறு கிறிஸ்தவராக மாறித் தூக்கை எதிர்கொண்டார். பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் எத்தகைய செயலையும் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பௌத்தம் என்பது தனது இலக்கில் உறுதியாகவும், வேகமாகவும் தொழிற்படுகிறது என்பதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மகாநாடு தேரரால் கட்டமைக்கப்பட்ட மகாவம்சம் என்கின்ற ஐதீக கதையின் அடிப்படையில் இன்றைய பௌத்த மகாசங்கங்கள் தம்மதீப கோட்பாட்டை விஸ்தரித்தும் வலுப்படுத்தியும் வருகிறது.

தம்மதீபக் கோட்பாட்டுக்கும், நலங்களுக்கும் பாதிக்காத அந்நிய செல்வாக்குகளையும் மாற்றங்களையும் தனது வளர்ச்சிக்காக ஏற்றுக் கொண்டு தன்னை மறுசீரமைப்புச் செய்யும் அதே நேரத்தில் தனது நலனைப் பாதிக்கின்ற அந்நிய தலையீடுகளையும் அந்நிய பண்பாட்டு உட்பாச்சல்களையும் சிறுபான்மையினரின் செயற்பாடுகளையும் அது மிக வலிமையோடு எதிர்க்கும். இதற்கு உதாரணமாக இன்று இலங்கையில் இருக்கின்ற தேரவாத பௌத்தம் என்பது பேரளவிலானதாகவே உள்ளது.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் | Sri Lankan Buddhism And Political Assassinations

 

ஆனால் நடைமுறையில் அது மகாஞான பௌத்தத்தினுடைய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளது. இதனைப் பார்க்கின்ற போது இந்திய, தமிழ் செல்வாக்கு என்பனவற்றிற்குத் தன்னை இசைவாக்கி சங்கத்தையும் பௌத்தத்தையும் வளர்ப்பதையும் அதன் நலனைத் தொடர்ந்து பேணுவதையும் அறியலாம்.

இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி இலங்கை தீவில் பௌத்தத்தின் பெயரால் ஆக்கிரமிக்க அவ்வாறு அசோகனால் பிரயோகிக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்குச் சின்னமான பௌத்தத்தையே தாம் உள்வாங்கி அதை இன்று தமக்குக் கவசமாக்கி, கேடயமாகப் பயன்படுத்தி, சிங்கள இனம் தன்னை தற்காத்து, தகவமைத்துக் கொண்டிருக்கின்றது என்ற வரலாற்று அறிவை தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொண்டால் மாத்திரமே இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கான சுபிட்சமான நிலையான அரசியல் எதிர்காலத்திற்கான வழியைத் தேடமுடியும். 

Courtesy: தி.திபாகரன், M.A.

இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு

1 week ago
இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு

on March 21, 2023

FWl6x11agAUm0IX.jpg?resize=1200%2C550&ss

Photo, @anuradisanayake

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான்  இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும். அதை எதிர்த்து பெரிதாக வாதிடுவதும் கஷ்டமானதாக தோன்றும். ஆனால், அவ்வாறு  நடைமுறையில் சாத்தியமானதாக உலகில் எங்குமே முன்னுதாரணம் ஒன்றை எவராலும் கூறமுடியாது.

அந்தக் கருத்தை எமது நாட்டில் எத்தனையோ தலைவர்கள் முன்னர் கூறினார்கள். தற்போது உள்ள தலைவர்களும் கூறுகிறார்கள். இந்த வரிசையில் இறுதியாக தன்னைச் சேர்த்துக்கொண்டிருப்பவர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இன் தலைவரான அநுரகுமார திசாநாயக்க.

ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் இருக்கும் திசாநாயக்க தென்னிலங்கை செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்றும் அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் மூலமோ அல்லது அதை மாற்றியமைப்பதன் மூலமோ தமிழர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை வழங்கமுடியாது என்றும் பதிலளித்ததாக ஈழநாடு கடந்த வெள்ளிக்கிழமை முன்பக்கத்தில் தலைப்புச் செய்தி வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாகவே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். இதனை தமிழர்களின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனும் கூறியிருக்கிறார். எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் திசாநாயக்க தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறியது.

கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் போராட்டத்துக்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவு பெருமளவு அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. அண்மைய பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளும் இதை உறுதிப்படுத்தின. நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்புகள் கூறின.

இதனால் மிகுந்த உற்சாகமடைந்திருக்கும் திசாநாயக்கவும் அவரது தோழர்களும் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துப் பார்க்குமாறு தங்களது பேரணிகளில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள். அத்துடன், தங்களுக்கு இருக்கக்கூடிய மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கான உடனடி வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்களை நோக்கும் அவர்கள் அதன் காரணத்தினாலேயே தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை கடுமையாக எதிர்க்கிறார்கள் எனலாம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் மூலம் என்றாலும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை முதலாளித்துவ அரசியல் அதிகாரவர்க்கம் எவ்வாறு நோக்கும்? எத்தகைய சூழ்ச்சித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதைத் தடுக்க முயற்சிக்கும் என்பது பிறிதொரு கட்டுரையில் விரிவாக ஆராயப்படவேண்டிய விடயம்.

ஆனால், மக்களின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தை ஜனநாயக தேர்தல்கள் மூலமாக கைப்பற்றக்கூடிய நிலையை நோக்கி தங்களது அரசியல் பயணம் விரைவாக நகருகிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கடுமையாக நம்புகிறார்கள். அதன் காரணத்தினால்தான் தங்களது ஆட்சியில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கு மாத்திரமல்ல, நீண்டகால இனப்பிரச்சினைக்கும் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்ற அவர்களின் பேச்சுக்களை நோக்கவேண்டும்.

இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த எதிர்மறையான ஒரு வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. அந்தப் போக்கில் எந்த மாறுதலையும் அவர்களிடம் இபபோதும் காணமுடியவில்லை.

1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்குக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் கட்டங்கட்டமாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்ததை அடுத்து அதற்கு எதிராக தென்னிலங்கையில் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகள் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரதான அரசியல் சக்திகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டின.

இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் 37 வருடங்களாக இருந்து வருகின்ற போதிலும் அதற்கு எதிராகவே பொதுவில் சிங்கள அரசியல் சமுதாயம் நிற்கிறது என்பதை  ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னரான நிலைவரங்கள் உணர்த்துகின்றன. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை அடுத்து கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே 13ஆவது திருத்தம் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. அல்லாவிட்டால் எப்போதோ சிங்கள தலைவர்கள் அதை நீக்கியிருப்பார்கள்.

சமாதான உடன்படிக்கையை எதிர்த்து விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. 1980 களின் பிற்பகுதியில் நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்திய போதிலும் பின்னர் வந்த தலைவர்களின் கீழ் அந்தக் கட்சி குறிப்பாக 1990 களின் நடுப்பகுதியில் இருந்து மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டுவந்தது. அண்மைக்காலமாக அதன் புதிய தலைவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பெரிதாக பேசியதுமில்லை.

திசாநாயக்க கூட கடந்த வருட பிற்பகுதியில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் தமிழர்கள் தங்களுக்கான ஒரு தீர்வாக அந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அது குறித்து தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறியிருந்தார். அதேவேளை, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அறிவிப்பையடுத்து 13ஆவது திருத்தம் தொடர்பில் மூண்ட அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அந்தத் திருத்தம் குறித்து தங்கள் கட்சிக்குள் விவாதம் இருக்கின்ற போதிலும் ஏற்கெனவே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டிருப்பதால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

ஆனால், அந்தத் திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் பரவலாக கிளம்பிய எதிர்ப்பு அலையில் இருந்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தங்களுக்கு சிங்கள மத்தியில் மக்கள் வளர்ந்துவரும் ஆதரவுக்குப் பாதிப்பாக  வந்துவிடும் என்று கருதிய காரணத்தினால் போலும் அதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வெளிப்படையாக பேசத்தொடங்கினார்கள். அதன் மூலமாக அவர்கள், பல்வேறு போதாமைகள், குறைபாடுகளுக்கு மத்தியிலும் அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரேயொரு சட்ட ஏற்பாடாக நிலைத்திருக்கும் 13ஆவது திருத்தத்தையும் ஒழித்துவிடவேண்டும் என்று கங்கணங்கட்டி நிற்கும் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளையே அவர்கள் இறுதியில் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேவேளை, தங்களது ஆட்சியில் புதிய அரசிலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறுவது கையில் இருக்கும் பிரச்சினையை கையாள்வதில் இருந்து நழுவும் ஒரு தந்திரோபாயமே.

தென்னிலங்கை மக்களினால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று கூறும் திசாநாயக்க தனக்கு துணையாக மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்களை  இழுக்கிறார். சிங்கள மக்களும் ஆதரிக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வே நிலையானதாக இருக்கமுடியும் என்று சம்பந்தன் அடிக்கடி கூறுவது சிங்கள மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் தீர்வைக் காண்பதற்கு தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை விளக்கவே தவிர சிங்கள மக்கள் எதிர்ப்பதனால் எமக்கு எந்தத் தீரவு வேண்டாம் என்று அறிவிப்பதற்கல்ல.

உள்நாட்டுப் போரின் விளைவுகளினால் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அரசியல் உரிமைகள் பற்றிய பிரச்சினை என்று வரும்போது இன அடிப்படையில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை. அவ்வாறு பாதிக்கப்படாத மக்களின் இணக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைக் காண்பது என்பது அதுவும் இலங்கையின் இதுகாலவரையான அனுபவங்களின் அடிப்படையில் நோக்கும்போது நடைமுறையில் சாத்தியப்படுவதற்கில்லை.

இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்றால் 1957 பண்டா  – செல்வா ஒப்பந்தம், 1965 டட்லி  – செல்வா ஒப்பந்தம் தொடக்கம்  மைத்திரிபால சிறிசேன – விக்கிரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு வரைவு முயற்சிவரையானவையே அவை.

இவற்றில் எதை தென்னிலங்கை மக்கள் ஆதரித்தார்கள்? அல்லது அந்த முயற்சிகளுக்கு அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு எந்த சிங்கள தலைவர் மானசீகமாக முயற்சிசெய்தார்? எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்து தாங்கள் எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் துணிவு எந்தத் தலைவருக்கு வந்தது? வரவில்லை. மக்களின் தவறான உணர்வுகளுக்கு அல்லது கருத்துக்களின் பின்னால் இழுபட்டுச்செல்வதற்கு தலைவர்கள் தேவையில்லை. பிழையான சிந்தனைகளைச் சுட்டிக்காட்டி அவற்றினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை மக்களுக்கு விளக்கி சரியான மார்க்கத்தில் அவர்களை வழிநடத்திச் செல்வதற்கே தலைவர்கள் தேவை. அத்தகைய பாத்திரத்தை வகிக்க இதுவரையில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எந்த சிங்கள தலைவருக்கும் அரசியல் துணிவாற்றல் வரவில்லை என்பதே வரலாறு.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க தன்னை அந்தத் தலைவர்களிடம் இருந்து வேறுபட்டவராக காட்டிக்கொள்ளவேண்டுமே தவிர, மக்களின் உணர்வுகளின் தவறான உணர்வுகளுக்கு பின்னால் இழுபட்டுச் சென்ற பாரம்பரிய சிங்கள அரசியல் தலைவர்களின் பாதையிலேயே செல்லக்கூடாது.

தங்களது கட்சி சமகால சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்குப் பொருத்தமான முறையில் அதன் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றிக்கொண்டுள்ளதாக அண்மையில் திசாநாயக்க கூறியிருந்தார். ஆனால், இனப்பிரச்சினை விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்ட அறிகுறியைக் காணமுடியவில்லையே.

இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் தீர்வொன்றைக் காணத்தவறியதால் நாடும் மக்களும் பல தசாப்தங்களாக அனுபவித்த அவலங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு முன்னைய தவறான போக்குகளில் இருந்து தென்னிலங்கை மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்பை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உணர்ந்து செயற்படவேண்டும். தேர்தல் அரசியல் என்று வரும்போது நாளடைவில்  இயல்பாகவே சந்தர்ப்பவாத அணுகுமுறைகளை கடைப்பிடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது.

இதில் இருந்து விடுபடுவதற்கு அடுத்த தேர்தலுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்கால நலன்களைப் பற்றிய மானசீகமான அக்கறையுடன் கூடிய அரசியல் நேர்மையும் துணிவாற்றலும் தேவை. அவற்றை வரவழைத்துக்கொள்வதற்கு தயாரில்லாத தலைவர்களினால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடமுடியாது.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10753

பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும் — கருணாகரன் —

1 week 2 days ago
பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும்
பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும்

— கருணாகரன் —

பலரும் கருதியதைப் போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது. இந்த உடைவினால் தனித்து விடப்பட்டிருப்பது தமிழரசுக் கட்சியே. ஆனாலும் அது தன்னைப் பலமானதாகக் கருதிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், அதனுடைய வீட்டுச் சின்னமாகும். எத்தகைய நிலையிலும் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற பலமான எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்குண்டு. இதுவே அவர்களுடைய தைரியமாகும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வீட்டுச் சின்னமாகவே மக்களிற் பலரும் அறிந்துள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொடுத்த அருமையான வாய்ப்பிது. இதனால் இளையதலைமுறையினரின் மனதில் கூட்டமைப்பு என்றால் அது வீட்டுச் சின்னம் என்ற புரிதலே உள்ளது. இன்னொன்று கிராமப்புற மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள உடைவைப் பற்றியோ, தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டிருப்பதைப் பற்றியோ எதுவுமே தெரியாது. இதெல்லாம் தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பாகவே உள்ளன.

 வெளியே ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவை ஒன்றிணைந்து கூட்டாக நிற்கின்றன. இவையே “தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு” என்று தம்மைப் பிரகடனம் செய்துள்ளன. தமக்கான சின்னம் குத்து விளக்கு என்றும் அறிவித்துள்ளன. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை முறைப்படி பதிவு செய்யவுள்ளதாகவும் இந்த அணி கூறுகின்றது.

இருந்தாலும் இந்த அணி பெரும் சவாலை எதிர்கொண்டே உள்ளது. கூட்டமைப்பின் பெயரில் ஒரு பெரிய அணியாக இயங்கினாலும் இவர்களுடைய குத்துவிளக்குச் சின்னம் மக்களுக்குப் புதிது. இந்தப் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் வீட்டுச் சின்னத்தை நிராகரிக்கச் செய்ய வேண்டும். 

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுச் சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி விட்டு இப்பொழுது அதை மறுதலிப்பது என்றால் அது மக்களிடம் குழப்பத்தை உண்டாக்கும். அதற்கான நியாமான காரணத்தை, தெளிவான விளக்கத்தை அடிமட்ட மக்கள் வரையில் (கிராமங்கள் வரையில்) கொண்டு செல்ல வேண்டும். அதை ஒரு பெரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கவேண்டும். அணியில் உள்ள தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட உறுப்பினர்கள் வரையில் இதைச்செய்ய வேண்டும். அவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். பொருத்தமான திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனியே ஊடகங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது.

ஏனென்றால், இந்தப் பிளவைக் குறித்து ஊடகங்களும் அரசியல் எழுத்தாளர்களும் இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பலரும் இரண்டு தரப்பையும் அனுசரித்துப் போவதையே காணக் கூடியதாக உள்ளது.  அண்மையில் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சி நடத்திய பெண்கள் நாள் நிகழ்விலும் ஆனையிறவில் நடராஜர் சிலை திறப்பின்போதும் அரசியல் எழுத்தாளரான கே.ரி.கணேசலிங்கம் கலந்து கொண்டிருந்தார். நாளைக்கு இன்னொரு நிகழ்வை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (குத்துவிளக்கு அணி) அழைத்தால் அங்கும் இவர் செல்லக்கூடும். இதெல்லாம் அவருடைய சொந்த விருப்பமும் தெரிவுமாக இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்குண்டு. இப்படித்தான் பலரும் உள்ளனர். ஆனால், அரசியல் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொண்டு, மக்களுக்கு வழிகாட்டுகிறோம் என்று இப்படிச் செயற்பட முடியாது.

உண்மையில் எந்த அணி சரியான நிலைப்பாட்டில் உள்ளது? எது தவறாகச் செயற்படுகிறது என்பதை இவர்கள் தெளிவாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். மக்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கும்தான். அதைச் சொல்லாத வரையில் குத்துவிளக்கு அணியினர் தாமே மக்களுக்கு உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும்.

இதேவேளை கூட்டமைப்பில் நடந்துள்ள பிளவில் நாம் ஒரு தெளிவான பிரிகோட்டைப் பார்க்கமுடிகிறது. இரண்டு அணிகளும் மிகத் தெளிவான அரசியற் பயணப்பாதையைக் கொண்டன என்பதே அதுவாகும். தமிழரசுக் கட்சியோ எப்போதும் “பாவனைப் போர்” செய்யும் வழிமுறையைக் கொண்டது. 1960 களுக்குப் பின்னர் அது எத்தகைய போராட்டங்களையும் செய்ததில்லை. அதற்கு முன்பு செய்த சத்தியாக்கிரகப் போராட்டமே அதனுடைய ஒரே அரசியல் முதலீடாக இன்னும் உள்ளது. தவிர, உரத்துப் பேசுதலே (பாவனைப் போரே) அதனுடைய வழிமுறையாகும். இப்போது கூட கூட்டமைப்பிலுள்ள சிறிதரன், சாணக்கியன் போன்றோரே தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பிரமுகர்களாக உள்ளனர். இவர்களுடைய உரத்த குரலே இதற்குக் காரணம். அடுத்த நிலையில் உள்ளவர் சுமந்திரன். அவரும் பல சந்தர்ப்பங்களிலும் Politician னாக நடந்துகொள்வதற்குப் பதிலாக Police Man னாகவே நடந்து கொள்கிறார். கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் சுமந்திரனின் நடத்தைகள் இப்படியே உள்ளன. ஆனாலும் அவரிடமிருக்கும் மிரட்டும் தொனியே அவரை மேலெழுப்பிக் காட்டுகிறது. உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இந்த மாதிரி உரத்துப் பேசுவோரே (பாவனைப் போர் வீரர்களே) விருப்பத்துக்குரியவர்களாக உள்ளனர் போலும். இல்லையென்றால் இவர்கள் எப்படி முன்னணியில் நிற்க முடியும்? இவர்களுக்குத்தான் ஊடகங்களும் முன்னுரிமை அளிக்கின்றனவே!

ஏனைய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் அணியினரோ அப்படியல்ல. அவர்களைப்  பொறுத்தவரையில் அளவுக்கு அதிகமாகப் பேசுவதை விட எதையாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். தொடக்கத்திலிருந்தே செயற்பாட்டு அரசியல் வழிமுறையைக் கொண்டவர்கள். மக்களுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். தியாக வரலாறு இவர்களுக்கே உண்டு. மக்களுடன் நெருக்கமான அரசியல் உறவைக் கொண்டிருந்தவர்கள். (இப்பொழுது அப்படி உள்ளதா என்பது கேள்வியே) ஆனாலும் மக்களின் மீதான மெய்யான கரிசனை இவர்களை விட்டு நீங்கவில்லை. செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே நின்றாலும் எதையாவது செய்து தீரவேண்டும் என்ற விருப்பத்துடன் இருப்பவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து நின்றாலும் சரி, வெளியே எதிர்த்தரப்பில் நின்றாலும் சரி எதையாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். ஆனால் தமிழரசுக் கட்சியினரிடம் இந்தக் குணமில்லை. அவர்கள் தங்களுடைய தேவைகள், நலன்களை மிகச் சாதுரியமாகச் செய்துகொள்வார்கள். மக்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இதை ஆதரத்துடனேயே இங்கே முன்வைக்கிறேன். எளிய, அண்மைய சான்று, கடந்த ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபாலசிறிசேன ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துக்கு இணக்கமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டது. இருந்தும் அது மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. அப்படித்தான் முன்னரும் என்பதால்தான் இந்த உடைவு தவிர்க்க முடியாமல் நிகழ்ந்திருக்கிறது. இது வரலாற்று விதியின் விளைவு. பாவனைப் போர் வீரர்களும் செயல் வீரர்களும் ஒன்றாக நீண்ட காலம்  பயணிக்கமுடியாது என்பதே இதற்கான காரணமாகும். ஆகவே இந்தத் தெளிவான வரலாற்று விதியை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். இன்று இந்தப் பிரிகோடு துலக்கமாகி விட்டது. இனியும் எதற்காகவும் சமரசம் செய்ய முடியாது என்ற நிலையில்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்தது. தமிழரசுக் கட்சி தனித்தது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும்தான். அது அப்படித்தான் நிகழும். வரலாற்று விதி இதுவே.

இந்த வரலாற்று விதியை அரசியல் ஆய்வாளர்களும் ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியமாகும். இப்பொழுது தாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய ஒரு கட்டாயம் வரலாற்றின் முன்னே ஆய்வாளர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் புத்திஜீவிகளுக்கும் வந்துள்ளது. இதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இனியும் தடுமாற்றங்களுக்குள்ளாகக் கூடாது.

இது ஏறக்குறைய 1970 களில் உருவான நிலையே ஆகும். அந்தச் சூழல் மறுபடியும் இப்பொழுது வந்துள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிடத்தில்தான் தமிழரசுக் கட்சி மீள எழுந்தது. இருந்தாலும் அதன் செயற்பாடற்ற தன்மையும் மேட்டுக்குடி மனப்பாங்கும் அதனை மறுபடியும் தோற்கடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. காலம் அப்படித்தான் தன் விதியைக் கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. அது தனக்குத் தேவையானதைத் தேர்ந்து கொள்ளும்.

1970 கள் வரையிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் மேற்கொண்டு வந்த “பாவனைப் போர்” அரசியல் 1970 களின் இறுதியில் வெளுத்தது. செயலின்மையை மறைப்பதற்கே இவை இனவாதத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால்தான் அது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே காலாவதியாகப் போக வேண்டிய நிலைக்குள்ளாகியது. “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று செல்வநாயம் மக்களைப் பார்த்துக் கைவிரிக்க வேண்டிய நிலை வந்தது அதனுடைய அரசியல் முறைமையினாலேயே. இல்லையெனில் ஒரு தலைவர் தன்னுடைய மக்களுக்குச் சரியான வழியைக் காட்டுவதற்குப் பதிலாக கடவுள்தான் இனி உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கையை விரிப்பாரா? அது ஒரு தலைவருக்கும் ஒரு தலைமைக்கும் அழகாகுமா?

கடவுள் காப்பாற்ற மாட்டார். நாம்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எழுந்த இளைஞர் படைதான் பின்னர் வந்த காலத்தில் மக்களைப் பாதுகாத்தது. செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் போராளிகள் எழுச்சியடைந்தனர். திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பை இளைஞர் இயக்கங்களே தடுத்து நிறுத்தின. அவைதான் தமிழ் மொழிச் சமூகத்தினருக்கு எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடித்துத் தாம் ஒரு புதிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கின. பேச்சுவார்த்தை மேசையை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு உருவாக்கியது போராளிகளேயாகும். மாவட்ட அபிவிருத்திச் சபையே போதும் என்ற அளவில் தம்முடைய அரசியல் கோரிக்கையை சுருக்கிக் கொண்ட  தமிழரசுக் கட்சி + தமிழ்க்காங்கிரஸ் = தமிழர் விடுதலைக் கூட்டணியை நிராகரித்து விட்டு அதற்கப்பால் பயணித்தது இளைஞர் இயக்கங்களே. அதன் விளைவே இன்றுள்ள மாகாணசபையாகும். இது கூடப் போதாதென்றே தொடர் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. அவைதான் தமிழ் மக்களின் பிரச்சினையை பிராந்திய, சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசென்றன. போராளிகள்  உருவாக்கிய அரசியல் அடித்தளமே இன்றுள்ளதாகும். காரணம், செயற்பாட்டு அரசியலே மக்களுக்குத் தேவையாக இருந்தது. இந்த அணிகளின் வரலாற்றுத் தவறுகள் காரணமாகவும் சந்தர்ப்பவசமாகவும் தமிழரசு இதற்குள் புகுந்து நிற்கிறது. நின்றுகொண்டு தன்னை விரிவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் நடந்தது இந்த மோதல்தான் என்பது தெளிவு. செயற்பாட்டுத் தரப்பினருக்கும் பாவனைப் போர்த் தரப்பினருக்குமிடையிலான இழுபறிகள். இறுதியில் இதற்கான இடமில்லை என்ற நிலையில் தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டதும் ஏனைய அணிகள் ஒன்றிணைந்ததும் இதனால்தான். வரலாற்று விதியின்படி பொருத்தமற்றதைக் காலம் கழித்தே தீரும். அதுவே நிகழ்ந்துள்ளது. செயற்பாட்டுத் தரப்பினராகிய குத்துவிளக்கு அணியினர், தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு கிழக்கிலும் வடக்கிலும் உள்ள மேலும் பொருத்தமான தரப்புகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். 

தனித்து நிற்கின்ற தமிழரசுக் கட்சியும் நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய நிலையில் இல்லை. ஒன்று, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல, அது பாவனைப் போரை விட்டு எளிதில் செயற்பாட்டு அரசியலை எளிதில் முன்னெடுக்கும் என்று தெரியவில்லை. அடுத்தது, அதன் கட்டுக்கோப்பில் உள்ள தளர்வும் நோய்க் கூறுகளுமாகும். அதனிடத்தில் உள்ள அரசியல் குழப்ப நிலையும் பதவி ஆசையும் அதைச் சிதைத்தே தீரும். மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டையும் நெறிப்படுத்தலையும் இழந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சி உள்ளது.

இனி இதை (தமிழரசுக் கட்சியை) மக்களும் கழித்து விட வேண்டும். இல்லையேல் மக்களுக்கு அதுவே தண்டனையாகும். நீங்கள் தேவையற்ற எந்தப் பொருளை வைத்திருந்தாலும் அது கழிவாகும். கழிவு குப்பையாகவே இருக்கும். குப்பையை எரிக்க வேண்டும். அல்லது புதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் உங்களுக்குப் பாதிப்பே ஏற்படும். பொருத்தமில்லை, பயனில்லை என்றால் நாமே நட்டு வளர்த்த தென்னையையோ மாமரத்தையோ நாம் வெட்டி நீக்கிவிடுவதில்லையா, அதைப்போலத்தான் தயக்கமில்லாமல் அதை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் நமக்கே பாதிப்பு.
 

https://arangamnews.com/?p=8963

ஆனையிறவில் ஆடும் சிவன் - நிலாந்தன் 

1 week 2 days ago
ஆனையிறவில் ஆடும் சிவன் - நிலாந்தன் 

spacer.png

 

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம்.

2009க்கு பின் ஆனையிறவுப்  பிரதேசம் யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரமாகிய கவர்ச்சிமிகு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் எவரும் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு யுத்த வெற்றி வளாகங்களைக் கடந்துதான் உள்ளேவர வேண்டும். அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள். இது எங்களால் வெற்றி கொள்ளப்பட்ட நிலம் என்று பொருள்.

யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் பொழுது குடாநாட்டின் கழுத்துப் பகுதியில் முதலில் தென்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோல்வியுற்ற படை நடவடிக்கை ஒன்றின்போது பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கவச வாகனம். அதற்கருகில் அந்தக் கவச வாகனத்தை தடுத்து நிறுத்திய படை வீரர் ஒருவரின் நினைவுச் சின்னம். அதோடு சேர்த்து ஒரு விருந்தகம். அதைச் சற்றுத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் கடலேரியின் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு யுத்த வெற்றிச்சின்னம் உண்டு. இலங்கைத்தீவை இரண்டு கைகள் ஏந்தியிருப்பது போன்ற அந்த யுத்த வெற்றிச் சின்னந்தான் யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் வெளியாட்களை வரவேற்கின்றது. அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.

spacer.png

இவ்வாறு கடலேரியின் உப்புக் காற்றில் எப்பொழுதும் யுத்த வெற்றி வாடை வீசும் ஒரு பிரதேசத்தில்,தமிழ் மக்களின் வழிபாட்டுருக்களில் ஒன்றாகிய நடராஜர் சிலையை நிறுவியமை என்பது அரசியல் அர்த்தத்தில் கவனிக்கப்பட வேண்டியது.

அச்சிலையின் அழகியல் அம்சங்களைக் குறித்தும் அது பார்த்த உடனேயே கையெடுத்துக் கும்பிடக்கூடிய ஒரு சிலையாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்தும் பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன். இன்று இக்கட்டுரையில் நான் கூறவருவது அச் சிலைக்குப் பின்னால் இருக்கும் பிரதேச,பிராந்திய மற்றும் கட்சி அரசியலைப் பற்றி.

நாவற்குழிச் சந்தியை போலவே ஆனையிறவிலும் அதாவது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் தமிழ் மக்களை அடையாளப்படுத்தும் கட்டுமானங்கள் அவசியம். அரசாங்கம் அதைத் திட்டமிட்டு யுத்தவெற்றி வாசலாகக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறது. தமிழ்மக்கள் அதனை ஒரு மரபுரிமை வாசலாக மாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் சிந்தித்து கரைச்சி பிரதேச சபை முடிவெடுத்திருந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே.

நாவற்குழியில் ஒரு புத்த விகாரை கட்டியெழுப்பப்பட்டுவரும் ஒரு நிலக்காட்சியில்,சிவபூமி அறக்கட்டளையின் அருங்காட்சியகமும் திருவாசக அரண்மனையும் கட்டப்பட்டிருப்பதுபோல, ஆனையிறவிலும் யுத்தவெற்றி வாசலை எதிர்நோக்கி ஒரு மரபுரிமை வாசலை சிருஷ்டிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.


spacer.png

 

ஆனால் அந்த மரபுரிமைக் கட்டமைப்பானது எப்படி அமைய வேண்டும்? அது சிங்கள பௌத்த சின்னங்களுக்கு எதிராக சைவச் சின்னங்களை முன் நிறுத்தும் ஒன்றாக அமைய வேண்டுமா? அல்லது தமிழ்த் தேசியத்தின் மதப்பல்வகைமையை பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டுமா?

சிவபூமி அறக்கட்டளை ஒரு சமய நிறுவனம். அது தான் போற்றும் ஒரு சமயத்தை முன்னிறுத்தும். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கத் தேவையில்லை. மேலும் பொதுவெளிச் சிற்பம் வேறு, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விக்கிரகம் வேறு. இரண்டையும் ஒன்றாகக் கண்டு மயங்கும் பொதுப்புத்தியை அரசியல்வாதிகள் இலகுவாகக் கையாள்வார்கள்.

பிரயோக தேசியவாதமும் நடைமுறையில்  பொதுப்புத்தியின் மீதே கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால்,தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள். அதாவது ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக்  கூட்டிக் கட்டவேண்டும். இதை இன்னும் ஆழமாக சொன்னால், ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரட்டவேண்டும். இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், ஒரு மதம் இன்னொரு மதத்திற்கு சமம்; ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்துக்கு சமம்; யாரும் பிரதேச ரீதியாகவோ சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் மற்றவருக்கு மேலானவரும் அல்ல; கீழானவரும் அல்ல என்ற அடித்தளத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும். எனவே தேசியவாதம் எனப்படுவது மதப்பல்வகைமையின் மீதே கட்டியெழுப்பப்பட வேண்டும். மத மேலாண்மையின் மீது அல்ல. இந்த அடிப்படையில் சிந்தித்து தமிழ்மக்கள் தமது மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கவும் முன்நிறுத்தவும் வேண்டும்.

spacer.png

ஒவ்வொரு மதப்பிரிவும் அதனதன் மதச்சின்னங்களை முன்னிறுத்துவதில் தவறில்லை. அது அந்த மதத்தின் கூட்டுரிமை. ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை அவமதிக்கும்போது அல்லது அந்த மதச் சின்னங்களை அழிக்கும்போது அல்லது ஒரு மதத்தின் மேலாண்மையை நிறுவ முற்படும் போதுதான் பிரச்சினை வருகிறது. அதாவது மதப்பல்வகைமை வேறு ;மத மேலாண்மை வேறு.

அண்மை ஆண்டுகளாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்திய மத்திய அரசை அணுகுவதற்கு மதத்தை ஒரு வாகனமாக பயன்படுத்த முயற்சிப்பது தெரிகிறது. இதில் சில தமிழ் அரசியல்வாதிகளும் அடங்குவர். இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மதசார்பு நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தை அணுக முடியுமா என்று மேற்படி தரப்புக்கள் சிந்திக்கின்றன. பாரதிய ஜனதா அரசாங்கமானது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. எனவே ஈழத் தமிழர்கள் அந்த அரசாங்கத்தைத்தான் அணுக வேண்டும். ஆனால் அதன் பொருள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பாரதிய ஜனதா பின்பற்றும் அதே நிகழ்ச்சி நிரலை ஈழத் தமிழர்களும் பின்பற்ற வேண்டும் என்றில்லை.

இப்பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது. இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமுடியாது. இப்பிராந்திய யதார்த்தத்துக்கூடாக சிந்திக்கும்போது ஈழத்தமிழர்கள் பாரதிய ஜனதா அரசாங்கத்தைத்தான் அணுகவேண்டும். ஆனால் அதன் பொருள் தமிழ் தேசியத்தின் மதப்பல்வமையை பலியிட வேண்டும் என்பதல்ல.

ஈழத்தமிழர்களின் நவீன அரசியல் எனப்படுவது மதப்பல்வகமையின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. பெருமளவு இந்துக்களைக் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில் முதலில் தோன்றிய இளையோர் அமைப்பாகிய யாழ்ப்பாண வாலிபர் முன்னணியை உருவாக்கியது(1924) ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராகிய கன்டி பேரின்பநாயகந்தான்.

தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதன் கால்கோல் விழா 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முன்றலில் சீலஸ்ரீ துரைசாமிக் குருக்களின் ஆசியுடன் இடம் பெற்றது. இதுதொடர்பான தகவல்களை தமிழரசுக் கட்சியின் வெள்ளி விழா மலரில் காணலாம். அக்கட்சியின் தலைவராகிய செல்வநாயகம் ஒரு புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர். செல்வநாயகத்தை ஈழத்தமிழர்கள் தந்தை என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அழைத்தார்கள். தந்தை செல்வா இறந்தபோது அவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. இந்து முறைப்படி வேட்டி அணிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. தன்னைத் தலைவராக தெரிந்தெடுத்து,தந்தை என்று அழைத்த பெரும்பான்மை இந்து வாக்காளர்களை கௌரவிப்பதற்காக செல்வநாயகம் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக கருதப்படுகிறது.

spacer.png

எனவே ஈழத்தமிழர்களின் நவீன அரசியலானது மதப் பல்வகமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டது. அதை இப்பொழுது ஒரு மதத்துக்கு மட்டும் உரியதாக குறுக்கக் கூடாது. குறிப்பாக நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது திருச்சபைகளுக்கும் ஆறுமுகநாவலர் போன்ற மதப் பெரியார்கள் மற்றும் இந்துபோர்ட் போன்ற இந்து அறக்கட்டளைகளுக்கும் இடையிலான போட்டியின் திரண்ட விளைவுதான். ஆனால் அந்தப் போட்டியானது மத விரோதமாக,மோதலாக மாறவில்லை.

ஆனால்,2009க்குப் பின் எந்த ஒரு மதத் தலைவரும் துணிந்து கதையாத ஒரு வெற்றிடத்தில், ஒற்றைக் குரலாக ஒலித்த, முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடைய அதே மறை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான முரண்பாடு தூக்கலாகத் தெரிவது தமிழ்த் தேசியத் திரட்சிக்குப் பாதகமானது. தமிழ்த் தேசியத்தை மதப்பல்வகைமையின் மீது கட்டியெழுப்ப விரும்பும் எல்லாச்  சக்திகளும் அந்த முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறு  அகமுரண்பாடுகளைத்  தீர்க்கும் சக்திமிக்க சிவில் அமைப்புகளோ கட்சிகளோ இல்லாத அரசியல் மற்றும் ஆன்மீக வெற்றிடத்தில், இன்னொருபுறம், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் “எல்லைக் கற்களாக” புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருமோர் ராணுவஅரசியற் சூழலில், தமிழ் மக்கள் மத்தியிலும் இரவோடிரவாகச் சிலைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இவ்வாறான சிலை அரசியலின் பின்னணியில்,ஆனையிறவில் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிவ நடனத்துக்கு  ஆன்மீக வியாக்கியானம் மட்டுமல்ல,பௌதீகவியல் வியாக்கியானமும் உண்டு. அது ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது(cosmic dance). ஆனையிறவுச் சிவனுக்கு மேலதிகமாக ஓர் அரசியல் பரிமாணமும் உண்டு. உப்புக் காற்றில் யுத்த வெற்றிச் சின்னங்களின் மத்தியில்,சிவனார் யாருடைய பஜனைக்கு ஆடப்போகிறார்?

http://www.nillanthan.com/5941/

வசந்த முதலிகேயின் யாழ் விஜயம்! நிலாந்தன்.

1 week 2 days ago
வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு வசந்த முதலிகேயின் யாழ் விஜயம்! நிலாந்தன்.

கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்.

போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.

அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போதிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னெழுச்சிப் போராட்டங்களின் குழந்தைதான் என்பது. போராட்டங்கள் இல்லையென்றால் ரணிலுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது.

தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர்தான் தன்னெழுச்சி போராட்டங்களை நசுக்கினார். அதாவது அரசியல் அர்த்தத்தில் அவர் ஒரு தாயைத் தின்னி.

அவர் அவ்வாறு தன்னெழுச்சிப் போராட்டங்கள் நசுக்கப்பட்டபோது வசந்த முதலிகே-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதானி- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பல மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தன்னெழுச்சிப் போராட்டங்களின் பிரதானிகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். தன்னெழுச்சிப் போராட்டங்களுக்காக ஒப்பீட்ளவில் அதிகம் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.

அண்மையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தமது போராட்டத்திற்கு ஆதரவைக் கேட்பதே அவருடைய வருகையின் நோக்கம்.

சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருக்கிறார்கள். ஆனால் வசந்த முதலிகே குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தை எப்படி தங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை முழுவதிலும் உள்ள 100 நகரங்களில் தாங்கள் போராட இருப்பதாகவும், அப் போராட்டங்களில் தமிழ் மாணவர்களும் இணைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் மாணவர்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை அவர்களே தென்னிலங்கைக்கு வந்து மக்களுக்கு கூற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தாங்கள் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் சில நாட்களுக்கு முன் வசந்த முதலிகே பிபிசிக்கு வழங்கிய போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் அவ்வாறு பத்து அம்சக் கோரிக்கையைக் கையளிக்கவில்லை என்று கூறயிருக்கிறார்.

பிபிசி இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டிருக்கின்றது. வசந்த முதலிகே அணியிடம் தாங்கள் முன்வைத்த 10அம்ச கோரிக்கைகளை மாணவ அமைப்பின் கடிதத் தலைப்பில் எழுதிக் கொடுக்கவில்லை என்ற போதிலும் அவற்றை முன்வைத்தே தாங்கள் உரையாடியதாக யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

சந்திப்பின்போது தாங்கள் எதைக் கதைத்தார்களோ அதையே கதைக்கவில்லை என்று கூறுபவர்களோடு எப்படிச் சேர்ந்து போராடுவது ? என்ற சந்தேகம் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உண்டு.

தென்னிலங்கையில் நடந்த தென்னெழுச்சி போராட்டங்கள் அதாவது இலங்கைத்தீவில் நடந்த நான்காவது பெரிய போராட்டம் ஒன்று நசுக்கப்பட்ட பின் தென்னிலங்கையில் இருந்து வடக்கை நோக்கி வந்த ஆகப் பிந்திய அழைப்பு அது.

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வருமாறு தெற்கு வடக்கை அழைக்கின்றது. அந்த அழைப்புக்கு தமிழ் மாணவர்கள் கொடுத்த பதிலை மேலே கண்டோம்.

தமிழ் மக்கள் அப்படித்தான் பதில் கூற முடியும் என்பதைத்தான் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன சில நாட்களின் பின் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது என்று அநுரகுமார கூறியிருக்கிறார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுரகுமார கூறுவதின்படி 13ஆவது திருத்தம் ஒரு தீர்வு இல்லை என்றால் அதைவிடப் பெரிய தீர்வை அவர் மனதில் வைத்திருக்கிறாரா? என்று கேள்வி எழும்.

நிச்சயமாக இல்லை.அவர்கள் 13ஐ எதிர்ப்பது ஏனென்றால் மாகாண சபைகளை தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

ஏற்கனவே வடக்கு-கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இல்லாமல் செய்த கட்சி ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜேவிபி 13 எதிர்ப்பதற்கு மேற்கண்ட காரணத்தை விட மற்றொரு காரணமும் உண்டு அது என்னவெனில், 13ஆவது திருத்தம் இந்தியா பெற்றெடுத்த குழந்தை என்பதால்தான். அதாவது இந்திய எதிர்ப்பு.

ஜேவிபி தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்ரியை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவும் தயாரில்லை.ஜேவிபி மட்டுமல்ல தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் முன்னிலை சோசியலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரட்னமும் அப்படித்தான் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்க அவர்கள் தயாரில்லை. அவ்வாறு சமஸ்டியை ஒரு தீர்வாக முன் வைப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இதுதான் பிரச்சினை.

இலங்கைத் தீவில் நிகழ்ந்த, உலகின் கவனத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் ஈர்த்த, படைப்புத்திறன் பொருந்திய ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரும், தென்னிலங்கையின் நிலைப்பாடு அப்படித்தான் காணப்படுகிறது.

தமிழ்ப் பகுதிகளில் ஒருபுறம் நிலப்பறிப்பு தொடர்கிறது.இன்னொரு புறம் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது.மட்டக்களப்பில் மைலத்தனை மேய்ச்சல் தரைகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கே ஆக்கிரமிப்பு நடக்கின்றது.தமிழ்மக்களின் கால்நடைகள் இரவில் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகின்றன.இன்னொருபுறம் திருகோணமலையில் கன்னியா வெந்நீர் ஊற்று, குருந்தூர் மலை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை போன்றவற்றில் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது. குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே நாட்டின் தளபதி சவீந்திர டி சில்வா 100பிக்குகளோடு நாவற்குளிக்கு வந்திருக்கிறார். அங்கே கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு கலசத்தை வைப்பது அவர்களுடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனையிறவில், கண்டி வீதியில், தட்டுவன் கொட்டிச் சந்தியில், கரைச்சி பிரதேச சபை இலங்கைத்தீவின் மிக உயரமான நடராஜர் சிலையை கட்டியெழுப்பிய பின் தளபதி சவேந்திர டி சில்வா நாவற்குழிக்கு வருகை தந்திருக்கிறார்.

அதாவது அரசின் அனுசரணையோடு ராணுவ மயப்பட்ட ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் தமிழ்மக்கள் அதற்கு எதிராகப் போராடும்போது அவர்களோடு வசந்த முதலிகே வந்து நிற்பாரா? ஜேவிபி வந்து நிக்குமா? சஜித் வந்து நிற்பாரா? அல்லது குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சுலோக அட்டைகளைத் தாங்கியபடி சந்திகளில் நிற்கின்ற இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறிய கட்சிகள் வந்து நிற்குமா?

இல்லை. அவர்கள் வர மாட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களைத் தீண்டியதால் அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வருகிறார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனப்பிரச்சினைதான் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இனப் பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்மக்கள் அவர்களோடு எந்த அடிப்படையில் இணைந்து போராடுவது?

அதே சமயம் வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் வெற்றி பெறவில்லை என்பது ரணிலுக்கு ஆறுதலானது. தனக்கு எதிராகத் தமிழ் மக்களை எதிர்க்கட்சிகளால் அணி திரட்ட முடியாது என்பது அவருக்கு ஒரு விதத்தில் ஆறுதலான விடயம். தங்களுக்கிடையே ஒற்றுமைப்பட முடியாதிருக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களையும் இணைக்கமுடியாமல் இருப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆறுதலான ஒரு விடயம்தான்.

மேலும் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன காலத்தையொட்டி கிண்ணியா வெந்நீரூற்று விவகாரம் மீண்டும் சூடாகி இருக்கிறது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரமும் ஊடகங்களில் சூடான செய்தியாக இருக்கிறது.

இவை தற்செயலானவைகளா? அல்லது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்படுகின்றவையா?என்று ஒரு நண்பர் கேட்டார். ஏனெனில் இது போன்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை இப்பொழுது ஏன் தீவிரப் படுத்தவேண்டும்? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில், அதைவிடக் குறிப்பாக வசந்த முதலிகே யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன ஒரு பின்னணியில், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்வதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்று மேற்சொன்ன நண்பர் கேட்டார்.அவருடைய கேள்வி நியாயமானது.

தமிழ் மக்களை எதிர்நிலைக்கு தள்ளிவிட்டால்,அவர்கள் வசந்த முதலிகேயோடு இணைய மாட்டார்கள். தங்களோடு சேர்ந்து போராட வா என்று கேட்பார்கள். அதை வசந்த முதலிகே செய்ய மாட்டர். ஜேவிபி செய்யாது.

எனவே ஒருபுறம் தமிழ் மக்களின் கவனத்தைப் புதிய பிரச்சினைகளின் மீது திசை திருப்பி விடலாம். இன்னொருபுறம் தென்னிலங்கையின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வடக்குடன் இணைவதைத் தடுக்கலாம்.

அதாவது தொகுத்துக்கூறின் தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள்வதை ரணில் கெட்டித்தனமாகத் தடுத்துவருகிறார்.

அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பலமான கூட்டு ஜனவசியம் மிக்க தலைமையின் கீழ் உருவாகவில்லையென்றால் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாது.

பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் சரி செய்யும்வரை அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டேயிருக்கும்.

https://athavannews.com/2023/1327970

இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம்

1 week 3 days ago
இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 19: 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். 

முதலாவது, இப்பிராந்தியத்தில் அதிகூடிய மக்கள் தொகையையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் கொண்ட நாடான பிரேஸிலில், ஜனவரி மாதம் எட்டாம் திகதி, தேர்தலில் தோல்வியடைந்த அதிவலதுசாரி முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேஸிலியாவில் அரச கட்டடங்களைச் சூறையாடி, மிகப்பாரிய சேதத்தை விளைவித்தார்கள். இது, சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் விளைவித்த சேதத்துக்கு ஒப்பானது. 

image_02a1099603.jpg

பிரேஸிலில் அதிவலது வன்முறை அரங்கேறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், அதாவது, ஜனவரி ஆறாம் திகதி, பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ கஸ்டிலோ, ஓர் அதிவலதுசாரிகளின் சதித்திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். இவை, இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரிகளின் நடவடிக்கைகள், இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வதைக் காட்டி நிற்கின்றன. 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இடதுசாரித்துவ அலை வீசியது. அதன் குணவியல்புகளின் அடிப்படையில், அதை ‘இளஞ்சிவப்பு அலை’ (pink tide) என்று எல்லோரும் அழைத்தார்கள். 

பல இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிச் சார்புள்ளவர்கள், தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இது, இப்பிராந்தியத்தில் ஜனநாயகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மீது பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

கிட்டத்திட்ட அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. தேர்தல்களில் இடதுசாரிகள் சிறப்பாக செயற்படாதபடி பார்த்துக் கொள்ள, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. 

இந்த எதிர்ப்புரட்சி செயற்பாடுகளின் பிரதான அம்சமாக, தீவிர அதிவலதுசாரித்துவத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது.  இலத்தீன் அமெரிக்காவில், தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு உண்டு. ஆனால், இப்போதைய மீள்எழுச்சியானது, இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒழித்துக் கட்டுவதை நோக்காகக் கொண்டது. இலத்தீன் அமெரிக்காவில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியானது, உலக அளவில் அதிதீவிர வலதுசாரித்துவத்தின் ஒருங்கிணைப்பால் உந்தப்படுகிறது.

image_9640edef27.jpg

இடதுசாரிச் சார்பு எழுச்சிக்குக் காரணம், அவர்கள் சாதாரண மக்களை, பழங்குடிகளைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்; அவர்தம் நலன்களை முன்னிறுத்தினார்கள். இதனால், பல்தேசிய கம்பெனிகளை, செல்வந்த உயரடுக்கை எதிர்த்தார்கள். இன்று, அதிவலதுசாரி செல்வந்தர்களினதும் பல்தேசிய கம்பெனிகளினதும் அடியாளாக உள்ளது. 

இன்றைய போராட்டம் என்பது, உண்மையில் கிராமப்புற விவசாயிகள், பாரம்பரியமாக நிலத்தின் பராமரிப்பாளர்களாக இருந்த பழங்குடியினருக்கும் அவர்களை இடம்பெயரச் செய்து, அவர்களின் நிலத்தை எடுக்க விரும்புகின்றவர்களுக்கு இடையிலானது. இது உற்பத்தி வழிமுறைகளைப் பற்றியது.  

இந்தப் பெரிய நிலங்களை கையகப்படுத்துவதற்கான போராட்டத்தின் பகுதியே, அதிவலதின் எழுச்சியாகும். அதனால்தான், நிச்சயமாக, இங்குள்ள மக்கள் இயக்கங்கள் நிலத்தை ஜனநாயகமயமாக்குவதற்குப் போராடின; உற்பத்தி செய்ய நிலத்தை அணுகுவதற்குப் போராடின. இவற்றைச் சாத்தியமாக்குவதன் ஊடு, மக்கள் எங்காவது வாழ, எங்காவது வளர மற்றும் உற்பத்தி செய்ய உரிமை உண்டு. அவர்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக இருக்காது, தமக்கான உணவு உற்பத்தியைச் செய்ய முடியும்; ஏற்றுமதி செய்ய முடியும். மற்றும், பொருளாதார ரீதியாக முன்னேற, மற்ற விடயங்களைச் செய்ய முடியும். 

ஆனால் இதை தங்களது நிலங்களாகக் கையகப்படுத்தி, தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்த செல்வந்தர்களும் பல்தேசிய கம்பெனிகளும் அதிவலதுசாரிகளும் கைகோர்த்துள்ளன.  

image_f1e4331b1b.jpg

இலத்தீன் அமெரிக்காவில், நாம் பெரும்பாலும் பார்ப்பது, கறுப்பின மக்களுக்கும் பணக்கார வெள்ளையர்களுக்கும் இனத்தின் அடிப்படையில் நடக்கும் வெறும் கலாசாரப் போரை மட்டுமல்ல! இது, நிலம் மற்றும் வளங்களுக்கான போராட்டம். 
இயற்கை வளங்களின் மீது இறையாண்மை, நிலத்தின் மீது இறையாண்மை, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அவற்றை உற்பத்தி செய்ய விரும்பும் மக்களுக்கு எதிராக, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக, அந்தப் பகுதிகளுக்கு அணுகல் தேடும் நாடு கடந்த நலன்களுக்கு எதிரான போராட்டம் ஆகும். 

அவர்களின் சொந்த நலனுக்காக, தங்களுக்கு வாய்ப்பான ஆட்சியாளர்களை உருவாக்கும் எதிரான ஆட்சியாளர்களை அகற்றும் நடவடிக்கைகளுக்கு, எதிரான போராட்டம். இந்தப் பின்புலத்திலேயே அதிவலதுசாரித்துவத்தின் புதிய அலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

இலத்தீன் அமெரிக்க தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு ஒரு வரலாறுண்டு. சர்வாதிகாரத்தன்மை, கவர்ந்திழுக்கும் ஆற்றலுடைய இராணுவத் தலைவர்கள், இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் மூன்று அலைகளை நாம் அடையாளம் காண முடியும். 

இதன் முதலாவது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு தொடங்கியது. 1930இல் ‘வோல் ஸ்ட்ரீட்’ நெருக்கடியுடன், ஆர்ஜென்டினா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில் ‘பாரம்பரிய ஜனரஞ்சகவாதம்’ வெளிப்பட்டது. இது கம்யூனிசத்துக்கு எதிரான தற்காப்பாக உயரடுக்கினரால் புரிந்து கொள்ளப்பட்ட அதேவேளை, தொழிலாளர் வர்க்கத்தால் சமூக நிலைமைகளின் முன்னேற்றத்துக்கான வழி என்று ஏற்கப்பட்டது. 

image_9414db7b8b.jpg

இராணுவத்தின் ஆதரவுடன், அர்ஜென்டினாவில் ஜுவான் பெரோன், பிரேஸிலில் கெட்டுலியோ வர்காஸ் ஆகியோர், தீவிர வலதுசாரி, பாசிச அறிவுஜீவிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் கூட்டணிகளை நிறுவி ஆட்சிக்கு வந்தனர். இது, இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் மீது, ஐரோப்பிய பாசிச செல்வாக்கைக் காட்டிய ஒரு முக்கியமான தருணம்.பெரோன் (முன்னாள் ஜெனரல்) மற்றும் வர்காஸ் (இராணுவத்தின் நெருங்கிய கூட்டாளி) ஆகிய இருவரும் ஐரோப்பிய பாசிச ஆட்சிகளின் அபிமானிகளாக இருந்தனர். ஆனால், கூட்டணிகளை நிறுவி, நகர்ப்புற தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை கிராமப்புற சமூகங்களுக்கு சில உரிமைகளை வழங்கினர். 

இந்தச் சர்வாதிகார ஜனநாயகம், பாரம்பரிய மற்றும் பிரபுத்துவ உயரடுக்குகளை மாற்றியது. அவர்களது செயற்பாடுகளின் மீது, தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வலிமையை இழந்தனர். பெரோன், வர்காஸ் ஆகிய இருவரும், சர்வாதிகார ஆட்சிகளை நிறுவினர். கம்யூனிசத்துக்கு எதிராக சிறந்த போராளிகளாக தங்களை முன்வைத்தனர். இந்நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாகினர். 

தீவிர வலதுசாரிகளின் இரண்டாவது அலை, 1959ஆம் ஆண்டு கியூபப் புரட்சிக்குப் பின்னர், இலத்தீன் அமெரிக்காவில் கெடுபிடிப்போரின் தாக்கத்தோடு தொடங்கியது. 

மேல்தட்டு மக்களிடையே கம்யூனிசம் பற்றிய அச்சம், மற்றும் இடதுசாரி தீவிரமயமாக்கலுக்கு எதிரான அமெரிக்காவின் ஆதரவு ஆகியவை, இந்தச் சூழலை வரையறுத்தன. 60கள், 70களில் தீவிர வலதுசாரி சர்வாதிகாரங்களின் ஒரு சக்திவாய்ந்த சுழற்சி தோன்றியது. இது, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத் தலைவர்களைத் தாக்கியது, 

குறிப்பாக, தெற்குமுனை நாடுகளில் (அர்ஜென்டினா, பிரேஸில், சிலி, உருகுவே) மற்றும் மத்திய அமெரிக்காவில் கொடூரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தின் சிறந்த பிரதிபலிப்பு, சிலியில் (1973-1990) இருந்த அகஸ்டோ பினோஷேயின் சர்வாதிகாரமாகும். 

image_741a858d0b.jpg

இது இப்பகுதியில் புதிய தாராளமயம் மற்றும் சர்வாதிகாரத்தின் முதல் கூட்டிணைவுக்கு உதாரணமானது. இராணுவ ஜெனரல் பினோஷே, இலத்தீன் அமெரிக்க அதி வலதின் மிக முக்கியமான தலைவராக இருந்தார், மேலும், அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகும், அவர் ஒழுங்கமைத்த அதிவலது ஒழுங்கு, சிலி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. 

இலத்தீன் அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் மூன்றாவது அலையில், நாம் தற்போது இருக்கிறோம். முற்போக்கான நவதாராளவாத எதிர்ப்பு, இடதுசாரி ஜனரஞ்சக அரசாங்கங்களின் உருவாக்கத்துக்கு எதிரானதாக, இந்த அலை இப்போது இருக்கிறது.  ஒட்டுமொத்தமாக, இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் வரலாறு, இராணுவ சக்தி, நவதாராளவாதத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவதாராளவாதமே, இன்று மக்களின் பரந்துபட்ட எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. 

‘இளஞ்சிவப்பு அலை’ ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வும் போராடுவதற்கான உந்துதலும், நவதாராளவாதத்துக்கு பெரிய சவாலாகவுள்ளது. இன்று இலத்தீன் அமெரிக்கா எங்கும் அதிவலதுசாரிகளுக்கு ஆதரவு பெற்ற வளச்சுரண்டலுக்கு எதிராக, மக்கள் போராடுகிறார்கள். இது, இடதுசாரிச் சார்புள்ள ஆட்சிகள் மீள்வதற்கு வழி செய்துள்ளது. இடதுசாரிகளின் இந்த மீள்எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், பிராந்தியத்தில் அதிவலதுசாரி இயக்கங்கள், கட்சிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மறுஉருவாக்கமும் அவை பலப்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். 

இதன் விளைவுகளின் ஒரு பகுதியே, இவ்வாண்டு தொடக்கத்தில் அரங்கேறிய நிகழ்வுகள். பிரேஸிலில் 2018இல் அதிவலதுசாரி நபர் ஜனாதிபதியானமை முக்கியமானது. இது, இலத்தீன் அமெரிக்க அதிவலதுக்கு மிகப்பெரிய ஊக்க மருந்தானது. இதில் இலத்தீன் அமெரிக்காவின் அதிவலசாரித்துவத்தின் வரலாற்றுக்கும் பங்குண்டு.  

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலத்தீன்-அமெரிக்காவில்-அதிவலதுசாரி-அலையின்-புதிய-கட்டம்/91-314210

தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது

1 week 3 days ago
தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது

புருஜோத்தமன் தங்கமயில்

தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசு ஏவுகின்றது. போராட்டங்களில் காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்தப் போராட்டங்களை, கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்தப் போராட்டங்களால், நாட்டின் இயல்பான நடவடிக்கைகள் மாத்திரமன்றி, தொழில் நடவடிக்கைகளும் முடங்குகின்றன. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பும், கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவும் சுட்டிக்காட்டத்தக்கன. 

நேற்று (15) கூட, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனால், மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன. 

ஏற்கெவே, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய மூன்றாம் தவணைப் பரீட்சைகள், நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களால் நான்கு மாதங்கள் கடந்து நடைபெறுகின்றது. 

இவ்வாறான நிலையில், அந்தப் பரீட்சைகள் மீண்டும் காலம் தாழ்த்தி நடத்தப்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் பரீட்சைகள் பிற்போடுவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 

கடந்த ஆண்டு பரீட்சை நடந்து முடியாமல், இந்த ஆண்டின் முதல் காலாண்டுப் பரீட்சையை எவ்வாறு நடத்துவது என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும், நாட்டு மக்கள் தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

 நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்த போது, விரைவாக தேர்தல் ஒன்றின் ஊடாக, புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர். 

ஆனால், ராஜபக்‌ஷர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்களை நடத்தாது, ஒற்றை மனிதராக, சர்வாதிகார ஆட்சியொன்றைப் பேணுவது குறித்து, சிந்தித்துச் செயலாற்றுகிறார். 

மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, நிதியை வழங்காது ரணில் ஒத்திப்போட வைத்துவிட்டார். எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடி, ஒத்திப்போடப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான ஆணையை வாங்கியிருக்கின்றன. 

ஏப்ரல் 25ஆம் திகதி அந்தத் தேர்தலை நடத்துவது என்று, தேர்தல் ஆணைக்குழு மீண்டும் அறிவித்திருக்கின்றது. ஆனால், அதனை நடத்துவதற்கான நிதியை திறைசேரி விடுவிக்குமா என்ற கேள்வி எழுகின்றது.

 நாட்டில் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு, ஜனநாயக ரீதியான ஆட்சி அமையாத வரையில், போராட்டங்கள் ஓயப்போவதில்லை; மக்கள் இயல்பு வாழ்க்கைக்குள்ளும் செல்லப்போவதில்லை. இன்றைக்கு தேர்தலொன்று நடைபெற்றால், பிரதான தரப்புகளாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இருக்கும் என்கிற நிலை காணப்படுகின்றது. 

ஆட்சியமைப்பதற்கான போட்டியில், இரு தரப்புகளுமே இருக்கும் என்பது தென் இலங்கையின் உணர்நிலை. அப்படியான நிலையில், தேர்தலை நடத்துவது தங்களின் எதிர்கால ஆட்சி - அதிகார கனவுகளில் பாறாங்கல்லை எறிவதற்கு சமமானது என்பது ரணிலினதும், ராஜபக்‌ஷர்களினதும் நிலைப்பாடு. 

அப்படியான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் அபிமானம் குறையும் வரையில், தேர்தல்களை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான அனைத்து சதித்திட்டங்களையும் ரணிலும் ராஜபக்‌ஷர்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.

image_7be211592d.jpg

 பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர் இல்லம் என்று நாட்டின் முக்கிய மத நிறுவனங்கள் தொடங்கி, சமூக இயக்கங்களும் தொழில் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோருகின்றன. திங்கட்கிழமை (13) அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள், தேர்தலை உடனடியாக நடத்துமாறு ரணிலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். 

இனியும் தேர்தலை நடத்தாது விட்டால், தென்இலங்கையில் தங்கள் மீதான மதிப்பு மேலும் கீழிறங்கும் என்று ரணில் - ராஜபக்‌ஷ தரப்புகளுக்குத் தெரியும். ஏனெனில், ராஜபக்‌ஷர்களை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு பௌத்த பீடங்கள் எவ்வாறு உதவின என்பது அனைவருக்கும் தெரியும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில், தென் இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலுள்ள பௌத்த விகாரைகளும் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று பெரும் பிரயத்தனத்தோடு பிரசாரத்தை மேற்கொண்டன. அப்படிப்பட்ட நிலையில், நாட்டின் பல தரப்புகளும் தேர்தலை நடத்துமாறு கோரிய நிலையில், இறுதியாக தவிர்க்க முடியாமல் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களும் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. 

இந்த நெருக்கடியையும் தாண்டி, தேர்தலை நடத்தாது ஒத்திவைப்பது என்பது அவ்வளவுக்கு சாத்தியமில்லை. ஏனெனில், மீண்டும் ஆட்சிக்கனவை நோக்கி ஓடுவதற்கு, இனவாதமும் மதவாதமுமே உதவும் என்பது ராஜபக்‌ஷர்களின் நம்பிக்கை. அதற்கு, பௌத்த பீடங்களின் ஒத்துழைப்பு அவசியம். அதனால், பௌத்த பீடங்களோடு இப்போது இணங்கிச் செல்வதுதான் எதிர்கால அரசியலைக் காப்பாற்றும் என்பது அவர்களின் நினைப்பு. குறிப்பாக, நாமல் ராஜபக்‌ஷவை பத்து ஆண்டுகளுக்குப் பின்னராவது, ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவும் என்பது மஹிந்தவின் எதிர்பார்ப்பு.

 ஆனால், ரணில் இந்த நெருக்கடிகளை எல்லாம் பூச்சாண்டிகளாக மாத்திரமே காண்கிறார்.  அவருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்தே சிந்தனை இருக்கின்றது. அதில் எப்படி வெல்வது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைய இலக்கு. 

கடந்த வாரம் திடீரென அமெரிக்கா டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியை அதிகரித்தது. கடந்த எட்டு மாதங்களில், குறிப்பாக ரணில் ஜனாதிபதியானதும் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைந்து, ரூபாயின் பெறுமதி அதிகரித்ததாக அரசாங்கம் அறிவித்தது. 

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 360 ஆகக் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் மூன்று நாள்களில் 306 முதல் 309 ரூபாய் வரை வந்தது. இந்தப் பெறுமதி அதிகரிப்பு என்பது, திறைசேரி ஊடாக திட்டமிட்ட ரீதியில் பொய்யாக கட்டமைக்கப்பட்ட ஒன்று என்று எதிர்க்கட்சிகளும் பொருளாதார அறிஞர்களும் வாதிட்டனர். 

இவ்வாறு பொய்யாக ரூபாயின் பெறுமதியை அதிகரித்துக் காட்டினால், இந்த ஆண்டின் இறுதியில் டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி இழப்பு என்பது, கிட்டத்தட்ட 400 ரூபாயில் கொண்டுவந்து நிறுத்தும் என்பது குற்றச்சாட்டு. 

இந்த வண்டவாளங்களை எல்லாம் ரணில் அறியாதவர் அல்ல. அவர் தன்னை, ‘நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுத்த தலைவராக முன்னிறுத்தி’ மக்களை மடையர்களாக்க நினைக்கிறார். அதன்மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார். 

பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக்கட்டண அதிகரிப்பு தொடங்கி சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்குவதற்காக விதித்த பல நிபந்தனைகளையும் ரணில் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. மக்கள் மீதான வரிச்சுமை என்பது, ஏற்கெனவே வாழ்வாதார நெருக்கடியில் இருக்கும் மக்களை, இன்னும் இன்னும் அலைக்கழிக்க தொடங்கி இருக்கின்றது. 

அப்படியான நிலையில், தற்போதைக்கு போலியாக ரூபாயின் பெறுமதியை அதிகரிக்கச் செய்துவிட்டு, ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி அதன் இயல்பான கட்டத்தை அடைந்தால், அதாவது 400 ரூபாய் என்ற நிலையை ஏட்டினால் அதையும் நாட்டு மக்களே தாங்க வேண்டி ஏற்படும். 

மீண்டும் பொருட்களின் விலை அதிகரிப்புத் தொடங்கி, அனைத்து நெருக்கடிகளும் ஏற்படும். தனது ஆட்சி அதிகார வெறிக்காக, ரணில் இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். அதனை, ஜனநாயக விரும்பிகள் என்று கடந்த காலங்களில் பேசிக்கொண்டிருந்த சில புத்திஜீவிகளும், சமூக அறிஞர்களும் கூட ஆதரிப்பது என்பது அற்பத்தனமானது.

 நாட்டின் நெருக்கடிகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேர்தல்கள் ஊடாக நிலைபெறும் ஆட்சி அவசியமானது. அவ்வாறான ஆட்சியொன்று அமையும் வரையில், நாட்டில் போராட்டங்கள் என்பது தொடர் கதையாகிவிடும். 

அது, மக்களின் இயல்பு வாழ்வை முற்றாக சீர்குலைக்கும். நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் இன்னும் படுபாதாளத்துக்குள் தள்ளும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தலை-நடத்தாது-தொடர்-போராட்டங்கள்-ஓயாது/91-314209

 

உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது?

1 week 6 days ago
உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது?

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

இம்மாதம் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது 2023 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல், 2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்தன. ஆனால், இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் குறித்த தினத்தில் தேர்தல் நடத்தப்பட முடியாது தாமதமானது. 

உயர்நீதிமன்றின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, பாதீட்டில் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதைத் தடுக்க, இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் நடப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பணியாற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு ஏப்ரல் 25ஆம் திகதியை உள்ளூராட்சித் தேர்தலுக்கான புதிய திகதியாக அறிவிக்க அறிவுறுத்தியுள்ளது. 

உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் உப பிரிவு 38(1)(c) இன்படி, தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியை நிர்ணயித்த பின்னர், தேர்தல்களை அறிவிக்கும் தனி வர்த்தமானிகளை பிராந்திய தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர். ஆகவேதான், அவர்களுக்கான தேர்தல் திகதி அறிவுறத்தலை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா இல்லையா, என்ற  கேள்வி ஒரு புறமிருக்க, இந்தவிடத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகமென்ன என்பதைப் புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகம் பற்றி அழுத்திச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கக் காரணம், இந்த உள்ளூராட்சித் தேர்தல், நாட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும், ஆட்சியை, ஆட்சிமுறையை மாற்றப்போகும் தேர்தலாக பிரதான எதிர்க்கட்சிகள் உருவகித்து வரும் பிரசாரத்தின் உண்மைத்தன்மை பற்றிய தௌிவு வாக்காளர்களிடம் ஏற்பட வேண்டும் என்பதாகும்.

image_abcf45bf9c.jpg

உள்ளூராட்சி மன்றங்களென்றால் என்ன? உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை இலங்கையின் மூன்றாவது மற்றும் கீழ்மட்ட அரசாங்கக் கட்டமைப்பாகும். மத்திய அரசாங்கம் முதல் மட்டமாகவும், மாகாண சபைகள் இரண்டாம் மட்டமாகவும் உள்ளன எனலாம். உள்ளூராட்சி மன்றங்கள் தமது பகுதிக்குட்பட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றுகின்றன. 

வீதிகள், நடைபாதைகள், உள்ளூர் போக்குவரத்து, உட்கட்டமைப்பு, சுகாதாரம், வடிகால், கழிவகற்றல், வீடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதும், உறுதிப்படுத்துவதும் உள்ளூராட்சி மன்றின் பணிகள்.

ஆகவே மக்களின் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புடைய பல அடிப்படைப் பணிப்பொறுப்புகள் உள்ளூராட்சி மன்றின் பாற்பட்டது. மிகப் பொதுவான உதாரணமாக, குப்பை அள்ளுதல், ஊரைச் சுத்தப்படுத்துதல், வடிகால் அமைத்தல், சிறிய வீதிகளை அமைத்தல், சீரமைத்தல், ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குதல், கட்டாக்காலி நாய்களைப் பிடித்தல், தீயணைப்பு மற்றும் அவசர உதவி சேவைகளை நடத்துதல், ஊர் பொதுச்சந்தைகளை நிர்வகித்தல், ஊர் மயானங்களை நிர்வகித்தல் போன்றவற்றை எல்லாம் செய்வது உள்ளூராட்சி மன்றங்களே!

இந்த உள்ளூராட்சி மன்றங்கள், பெருநகரங்களில்  ‘மாநகர சபை’ என்றும், நகரங்களில் ‘நகர சபை’ என்றும், ஏனைய பிரதேசங்களில் ‘பிரதேச சபை’  என்றும் அறியப்படுகின்றன. 

மாநகர சபைகள், 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மாநகர சபை கட்டளைச் சட்டத்தாலும், நகர சபைகள், 1939 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க நகர சபைகள் கட்டளைச் சட்டத்தாலும், பிரதேச சபைகள், 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தினாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

சமூகங்கள் நன்கு நிர்வகிக்கப்படுவதையும், வளமானதாக இருப்பதையும், அவர்களின் குடிமக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கக் கூடியதாக இருப்பதையும் உறுதி செய்வதில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு முக்கியமானது. உள்ளூராட்சி மன்றங்கள் இல்லாமல், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும், அடிமட்ட அளவில் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதிலும் மிக்பெரிய இடைவௌி ஏற்பட்டுவிடும்.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இன்றைய எதிர்க்கட்சிகள் மேடைக்கு மேடை முழங்குவதைப் போல, நாட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும், ஆட்சியை, ஆட்சிமுறையை மாற்றப்போகும், விலைவாசியைக் குறைக்கப்போகும், பொருளாதாரத்தை மேம்படுத்தப்போகும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கப்போகும், வரிகளைக் குறைக்கப்போகும், இனவாதத்தை இல்லாதொழிக்கப்போகும் தேர்தலா என்றால், அதற்கான உறுதியான பதில், உள்ளூராட்சி மன்றங்களால் இந்த எந்த விடயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்பதுதான். 

உள்ளூராட்சித் தேர்தல், உள்ளூர் சமூகங்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை நாட்டின் ஆட்சிக் கொள்கையை மாற்ற வாய்ப்பில்லை. ஏனெனில், வரிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, நாட்டுக்கான சட்டவாக்கம்,  தேசிய பாதுகாப்பு போன்ற மாற்றங்கள் போன்ற முழு நாட்டையும் பாதிக்கும் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு இல்லை.

image_feca258f33.jpg

ஆட்சிக் கொள்கை பொதுவாக பாராளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. 

முழு நாட்டையும் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு மத்திய அரசாங்கமே பொறுப்புடையதும், அதிகாரமுடையதுமாகிறது. குடிமக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்தும் அதிகாரம், மத்திய அரசாங்கத்திடமே உள்ளது.

சில சந்தர்ப்பங்களில், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பொதுக் கருத்து மற்றும் அரசியல் உணர்வுகளில் பரந்த போக்குகளைப் பிரதிபலிக்கலாம். எவ்வாறாயினும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாட்டின் ஆட்சிக் கொள்கையை நேரடியாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இந்த உண்மையை வாக்காளர்கள் உணரவேண்டும்.

உண்மையில், உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, போட்டியிடும் கட்சிகள் வழங்க வேண்டிய உறுதிமொழிகள், உள்ளூராட்சி மன்றின் அதிகாரம், பொறுப்புகள் சார்ந்து அமைய வேண்டும். உதாரணமாக, தினமும் முறையாக குப்பை அகற்றுவோம்; குழந்தைகளுக்கான தரமான பாலர் பாடசாலைகளை ஊரின் பல பகுதிகளிலும் அமைப்போம்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நுளம்புகளை இல்லாதொழிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுப்போம்; எல்லா வீதிகளையும் முறையாகச் செப்பனிட்டு பாதுகாப்போம்; அனைத்து வீதிகளுக்கும் சூரிய சக்தியைச் சேமித்து, இரவில் ஒளிரும் மின்விளக்கு வசதியை வழங்குவோம்; வீதிகளை தினமும் சுத்திகரிப்போம்; பொதுப் பூங்காக்களை அமைத்து, பராமரித்துப் பாதுகாப்போம்; ஊர்க் குளங்களை தூர்வாரிப் பாதுகாப்போம்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு தரும் செயற்பாடுகளை அனுமதியோம்; வீட்டுவரிகளை சமநீதிக் கொள்கைகளின்படி நடைமுறைப்படுத்துவோம் போன்ற உள்ளூராட்சி மன்றுகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலான உறுதிமொழிகளை வழங்க வேண்டுமேயொழிய, ‘சிஸ்டம் சேஞ்ச்’, வரிகளைக் குறைப்போம், பொருளாதாரத்தை மாற்றியமைப்போம்,என்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் மேடைகளில் முழங்குவதெல்லாம் அப்பட்டமான ஏமாற்று வேலை. 

பொதுவாகவே, உள்ளூராட்சி மன்றிற்கு மக்கள் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், பெரும் அரசியல் விற்பன்னராக இருக்க வேண்டியவரல்ல. இது பாராளுமன்ற தேர்தல் அல்ல. இங்கு குறித்த ஊரைச் சேர்ந்த, அம்மக்களுக்கு காட்சிக்கு எளியவனாக உள்ள, எப்போதும் மக்கள் அணுகக் கூடிய, ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதே மிகச் சிறந்த தெரிவாக அமையும்.

இரண்டு நாள்கள் குப்பையகற்ற உள்ளூராட்சி மன்றின் பணியாளர்கள் வரவில்லையென்றால், மக்கள் உடனடியகாகத் தொலைபேசி மூலம் அழைக்கவோ, நேரில் சந்திக்கவோ கூடியவராக அம்மக்களின் பிரதிநிதி இருக்க வேண்டும். 

ஆகவே, உங்கள் வட்டாரத்தில் வாழ்கின்ற, மக்களோடு மக்களாக நிற்கும் ஒருவர்தான், உள்ளூராட்சி மன்றிற்கு உங்கள் பிரதிநிதியாகவதற்கு தகுதியுள்ள நபர். இங்கு கட்சி சார்பு என்பது கூட அவசியமானதொன்றல்ல. ஏனென்றால் இது பாராளுமன்றத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ அல்ல என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகத்திற் கொள்ளுதல் வேண்டும். 

கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்ற பெயரில், கட்சி நிறுத்திய யாரோ ஒருவருக்கு வாக்களித்துவிட்டு, நாளைக்கு தெருவிளக்கு எரியாவிட்டால், நீங்கள் தெரிவுசெய்த அந்த யாரோ ஒரு பிரதிநிதியை எங்கே சென்று தேடுவீர்கள்? உங்கள் வட்டாரத்திற்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், கட்சி அடையாளங்களைத் தாண்டி, உங்கள் வட்டாரத்திற்கு சேவையாற்றக் கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் சுயாதீனமாகக் கூட போட்டியிடுபவராக இருக்கலாம். அதுதான் உங்களுக்கு நன்மையானது. அதைவிடுத்து, ஆட்சி மாற்றம், கொள்கை மாற்றம் என சில கட்சிகள் காட்டும் பேய்க்காட்டலில் ஏமாந்துவிட வேண்டாம்.
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உள்ளூராட்சித்-தேர்தல்-யாருக்கு-வாக்களிப்பது/91-314013

வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை

2 weeks ago
வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை

புருஜோத்தமன் தங்கமயில்

வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. 

இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதைச் செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார். 

இதன் ஒருகட்டமாக கடந்த நாள்களில், பாரதிய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீன்பிடித்துறை பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து, டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்கள்.

வடக்கு கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால், வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொழில் இழப்பு, உடமைகள் இழப்பு தொடங்கி உயிரிழப்புகள் வரையில் நிகழ்ந்து விட்டமைக்கான சாட்சிகள் உண்டு.

 யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு கடற்பகுதிகளில், கடற்கரைக்கு ஒரு சில கிலோ மீற்றர் வரையில் அண்மையாக வந்து, பாரிய இழுவை மடிகளைக் கொண்டு வடக்கின் கடல் வளங்களை, இந்திய இழுவைப் படகுகள் வாரிச் சுருட்டிச் செல்லும் காட்சிகளை நாளாந்தம் காண முடியும். 

image_1625785522.jpg

சட்ட நடவடிக்கைகள் என்று பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் கைதுகளும் முன்னெடுக்கப்பட்டாலும், அதனால் பயன் இல்லை; அவை வெறும் கண்துடைப்பு மட்டுமே! 

ஏனெனில், கடற்படையோ, இலங்கை அரசோ, வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதைக் காட்டிலும், இந்திய இழுவைப் படகுகளின் பெரு முதலாளிகளையும், அவர்களின் அரசியல் தொடர்பாளர்களையும், முகவர்களையும் குளிர்விக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலேயே கவனமாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு கடலில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது என்கிற விடயம் முன்னெடுக்கப்படுகின்றது.

வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது என்பது காலங்காலமாக நடைபெறுகின்றது. அது, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாரியளவில் சூறையாடி வருகின்றது. இந்தப் பிரச்சினைகளை ஒவ்வொரு கட்டமாக எடுத்துச் சென்று, தீர்வைக் காண்பதில் வடக்கு மீனவர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் அர்ப்பணிப்போடு செயற்பட்டிருக்கிறார்கள். 

ஆனால், இலங்கை அரசோ, சொந்த மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதைக் காட்டிலும், இந்திய பெரு முதலாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனமாக இருக்கின்றது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், குறிப்பாக வடக்கு கடலில் புலிகள் ஆதிக்கம் கொண்டிருந்த காலப்பகுதியில், இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்களை மேற்கொண்ட காட்சிகளை காண முடியாது. 

ஆனால், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், வடக்கு கடலில் ஆதிக்கம் புலிகளிடம் இருந்து இலங்கை  கடற்படையிடம் சென்றதும், எந்தவித தயக்கமும் இன்றி இந்திய இழுவைப் படகுகள் ஆயிரக்கணக்கில் வடக்கு கடற்பரப்பை ஆக்கிரமித்தன. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான  போர்க்கொடி எழுப்பிய வடக்கு மீனவர்களை,  இந்திய இழுவைப் படகுகள் வன்முறை வழியில் தாக்கி, நோகடித்து இருக்கின்றன. 

image_b0f894e09b.jpg

 

இந்தக் கடல் ஆக்கிரமிப்புக்கு எதிராக, வடக்கு மீனவர்கள் ஒன்றிணைந்தார்கள். அதன்பொருட்டு, தமது கடற்பரப்பில் பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக ஒருங்கிணைந்தார்கள். 

அதன் முதற்கட்டமாக, வடக்கு மீனவர்கள், பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்ற நடைமுறையை மீனவ சங்கங்கள், சமாசங்கள் ஊடாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். அதன்மூலம், வடக்கு கடல் வளம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

வடக்கு மீனவர்களுக்கு பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தெரியாது. அதனால்தான் அந்தத் தொழில் முறைக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்ற விமர்சனம், இந்திய இழுவைப் படகுகளை ஆதரிக்கும் தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றது.

 வடக்கு மீனவர்களால் இழுவை மடிகளைக் கொண்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். வல்வெட்டித்துறையிலும் குருநகரிலும் இன்னும் சில பகுதிகளிலும் அந்தத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாரிய படகுகள் இருந்தன. 

ஆனால், அதைத் தொடர்ந்து முன்னெடுப்பதால், வடக்கு கடல் வளம் அழிக்கப்படும் அபாயத்தை உணர்ந்துதான், அந்தத் தொழில் முறையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் வடக்கு மீனவர்கள் ஈடுபட்டார்கள். 

ஏனெனில், வடக்கு கடற்பரப்பு என்பது ஆழம் குறைந்த கடற்பரப்பு. அங்கு சூரிய ஒளி இலகுவாக கடல் அடிப்பரப்பை எட்டுமளவுக்கு நிலைமை உண்டு. அதனால், மீன்களுக்கான உணவான பிளாந்தன்களின் உற்பத்தி என்பது அதிகம். அத்தோடு, வடக்கு கடற்பரப்பில் மீன்களின் இனப்பெருக்கத்துக்கான இயற்கை அமைவிடம் என்பது, சிறப்பான நிலையில் காணப்படுகின்றது. 

இந்த இரண்டு விடயங்களையும் பாதுகாப்பது தொடர்பில், வடக்கு மீனவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதனால்தான், இழுவை மடி தொழில் முறையை வடக்கு மீனவர்கள் நிராகரிக்கிறார்கள். ஏனெனில், தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடல் அன்னையின் கருப்பையை அழிக்கும் வேலைகளில் எந்த மகனும் ஈடுபடமாட்டான். 

ஆனால், இந்திய இழுவைப் படகுகளுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை. பாரிய பாரமான மடி வலைகளைக் கொண்டு, கடலின் அடி மட்டம் வரையில் வாரி அள்ளிச் செல்கின்றன. இதனால், வடக்கு கடலின் இயற்கைக் கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. 

ஏற்கெனவே, இந்திய கடற்பரப்பை இவ்வாறான தொழில் நடவடிக்கைககளால் அழித்துவிட்டர்கள். இப்போது வடக்கு கடலையும் அப்படியான ஆக்கிரமிப்புக்காக கோருகிறார்கள். அதற்கு ஒத்திசையும் வேலைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபடுகின்றது.

இந்திய மீனவர்களுக்கு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடை நடைமுறையிலுள்ள நிலையிலேயே, இவ்வாறான இழுவைப் படகுகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகுகளை அனுமதித்தால், அந்த நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனெனில், குறைந்த வலுக் கொண்ட படகுகளை அனுமதிப்பது என்ற போர்வையில், உண்மையில் இந்திய இழுவைப் படகுகளே வடக்குக் கடலை ஆக்கிரமிக்கப் போகின்றன. மாறாக, தமிழகத்தின் சாதாரண மீனவர்கள் அதன் பயனை அனுபவிக்கப் போவதில்லை.

‘தமது பிரச்சினைகளை உணர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சர்; அதனால், அது நல்லது’ என்பது, வடக்கு மீனவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சர் ஆனது முதல், வடக்கு கடற்பரப்பில் வெளிநாட்டு நிறுவனங்களினதும், இந்திய இழுவைப் படகுகளினதும் அத்துமீறல்கள்  அதிகரித்துவிட்டன. 

image_5c85ef43ab.jpg

 

ஏற்கெனவே கடல் அட்டை பிடிப்புக்காக சீன நிறுவனங்களை டக்ளஸ் அழைத்து வந்திருக்கின்றார் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அந்தத் தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக, வடக்கு மீனவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், அதைச் சமாளிப்பதற்காக ஒருசில மீனவ சங்கப் பிரதிநிதிகளை, தனது கைக்குள் போட்டுக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நடவடிக்கைகளை டக்ளஸ் தேவானந்தா காப்பற்றி வருகின்றார். 

இப்போது அவர், இந்திய பெரு முதலாளிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் மனிதராக, செயற்படுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்.

வடக்கு கடல் அன்னையைக் காப்பாற்ற வேண்டியது வடக்கு மீனவர்களின் கடமை மாத்திரமல்ல; அது ஒட்டுமொத்த வடக்கு மக்களினதும் கடமை. அதனை, பிராந்திய வல்லரசின் எதிர்பார்ப்புகளுக்காக தட்டிக்கழித்துவிட்டு செயற்படுவார்களாக இருந்தால், வடக்கின் கடல் அன்னை முழுவதுமாக அந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அலங்கோலமாக்கப்படுவாள். அப்போது, அழுது புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.

 அதனால், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் போல, கடல் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் வடக்கு மக்கள் எழுந்து வர வேண்டும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-கடல்-அன்னை-மீதான-அச்சுறுத்தலைத்-தடுப்பது-தலையாய-கடமை/91-313942

Checked
Tue, 03/28/2023 - 10:50
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed