அரசியல் அலசல்

இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?

2 hours 27 minutes ago

இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை இரான் உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறியது, அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை

கட்டுரை தகவல்

  • ஜெரிமி போவன்

  • சர்வதேச ஆசிரியர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்கா, இஸ்ரேல், இரான் இடையே புதிய போர் தொடங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்டன.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான அரபு நாடுகளையும், வளைகுடா முழுவதும் இரானின் அண்டை நாடுகளையும் இரான் தாக்க முடிவெடுத்த பிறகு, இதுவொரு பிராந்திய போராக உருவெடுத்தது. பிரிட்டனில் உள்ள தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு பிரிட்டன் தெரிவித்து வந்த மறுப்பைக் கைவிட்டுள்ளது.

போர் இன்னும் அதிகரித்து வருகிறது. எனது கைபேசியில் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்பால் மூன்று அமெரிக்க எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அறிக்கையை நான் படித்தேன்.

அது அவர்களின் சொந்த தரப்பால் தற்செயலாக நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. இந்தக் கட்டுரையை நான் எழுதி முடிக்கும் நேரத்தில், மேலும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருக்கலாம், தற்போது உயிருடன் இருக்கும் சிலர் உயிரிழந்திருக்கலாம்.

போர் எப்போது அல்லது எப்படி முடியும் என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் கணித்துவிட இயலாது. ஒரு போர் தொடங்கியவுடன், அடுத்து நடப்பனவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், மோதிக்கொள்ளும் தரப்புகள் இந்தப் போர் எப்படி முடிய வேண்டுமென விரும்புகின்றன என்பது குறித்த சில வழிகளை இங்கு காணலாம்.

வெற்றிக்கான டிரம்பின் வரையறை

ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா லாகோ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், போர் தொடங்கியதாக அறிவித்ததில் இருந்து, அதிபர் டிரம்ப் எப்போதும் போல அமெரிக்க சக்தியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிற அதிபர்கள் ஓவல் அலுவலகத்தில் உள்ள ரெசலூட் மேசைக்குப் பின்னால் இருந்து ஒரு புனிதமான உரையைப் பேசுவதை தேர்வு செய்திருக்கலாம்.

ஆனால், கழுத்து பட்டன் அணியப்படாத திறந்த சட்டையை அணிந்திருந்தார். அவரது கண்கள் வரை இழுத்துவிட்ட வகையில் ஒரு வெள்ளை பேஸ்பால் தொப்பியை அணிந்திருந்தார். 1979இல் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்து வருவதாக வாதிட்டு, அவர் ஒரு நீண்ட குற்றப்பத்திரிகையை வாசித்தார்.

டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையில், வெற்றி குறித்த தனது கருத்தாக்கத்திற்கு ஒரு வரையறையை அவர் வழங்கினார். அது ஒரு பட்டியலாக நீண்டது.

"நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, ஏவுகணைத் தொழிலை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலும் அழிக்கப்படும். அவர்களின் கடற்படையை அழிக்கப் போகிறோம். பிராந்தியத்தின் பயங்கரவாத பிரதிநிதிகள் இனி பிராந்தியத்தையோ அல்லது உலகத்தையோ ஸ்திரமின்மைக்கு ஆளாக்க முடியாது. எங்கள் படைகளைத் தாக்க முடியாது. மேலும், பல அமெரிக்கர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்களைக் கடுமையாகக் காயப்படுத்திக் கொன்றது போல அவர்களால் ஐ.இ.டி வெடிகுண்டுகள், சாலையோர குண்டுகளைப் பயன்படுத்த முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்."

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

இரான் அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறினார். இந்த அறிக்கை அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை. கடந்த கோடையில் அமெரிக்கா இரானின் அணுசக்தி தளங்களை "அழித்துவிட்டதாக" அவர் கூறியதற்கு முரணாக, அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலையை அது நெருங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தெஹ்ரானில் உள்ள ஆட்சியை முடக்க முடியும் என்று டிரம்ப் நம்புகிறார். அது சரணடையவில்லை என்றால், இரானிய மக்கள் பல தலைமுறைகளில் இல்லாத அளவுக்கு வீதிகளில் இறங்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறும் அளவுக்கு இரான் ஆட்சி நொறுக்கப்படும் என்று அவர் கருதுகிறார்.

"நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பல தலைமுறைகளில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கும். பல ஆண்டுகளாக, நீங்கள் அமெரிக்காவின் உதவியைக் கேட்டு வந்தீர்கள். ஆனால், அதை ஒருபோதும் பெறவில்லை. இன்றிரவு நான் செய்யத் தயாராக இருப்பதைச் செய்ய எந்த அதிபரும் தயாராக இருக்கவில்லை. இப்போது உங்களுக்கு ஒரு அதிபர் இருக்கிறார், அவர் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறார். எனவே நீங்கள் அதற்கு எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்று பார்ப்போம்."

ஆட்சி மாற்றத்திற்கான பொறுப்பை இரானிய மக்களிடம் கொடுப்பது, அவர்களைச் செயல்பட அவர் நேரடியாக ஊக்குவித்தாலும்கூட, ஆட்சி நீடித்தால் பின்னர் வெளியேறுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. ஆனால் அமெரிக்கா அதை நிறைவேற்றுவதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இதைப் பார்க்கலாம். இருப்பினும், எப்போதும் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று நம்பும் ஓர் அதிபரை அது எவ்வளவு தூரம் திசைதிருப்பும் என்பது ஒரு வெளிப்படையான கேள்வி.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,US Navy via Getty Images

படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை இரானின் ராணுவ திறன்களை சிதைத்து வருகிறது

வரலாற்றில் ஓர் அரசாங்கம் அகற்றப்பட்டதற்கான தெளிவான உதாரணம் அல்லது ஒரு போர் வெற்றி பெற்றதற்கான தெளிவான உதாரணம் என எதுவும் இல்லை. அது வலுவான, நன்கு ஆயுதந்தரித்த எதிரிக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தி மட்டுமே நடந்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், பிரிட்டன் உள்பட, சதாம் ஹுசேனை அகற்றுவதற்காக இராக்குக்குள் ஏராளமான தரைப்படைகளை அனுப்பின. கடந்த 2011ஆம் ஆண்டில், லிபியாவின் தலைவர் முயம்மர் கடாஃபி, நேட்டோ மற்றும் வளைகுடா நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்புடன் ஆதரிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களால் அகற்றப்பட்டார். ஆனால் இப்போது இரானிய மக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை அவர்களே அகற்றுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.

டிரம்பின் திட்டம் மிகவும் ஆபத்தானது. ஓர் அரசாங்கத்தை அகற்ற வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது.

மேற்கத்திய நாடுகளை ஆதரிக்கும் தலைவர்கள் நாட்டுக்குள் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? அது சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது, ஆனால் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. குறிப்பாக போர் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில்.

தற்போதைய தலைவர்கள் அதிகாரத்தில் நீடிப்பார்கள், ஏவுகணைகளைத் தொடர்ந்து வீசுவார்கள், தங்கள் வலுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்படுவார்கள். அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது வளைகுடா அரபு நாடுகளைவிட அதிக துன்பங்களைத் தங்களால் கையாள முடியும் என்று அவர்கள் நினைக்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான துன்பங்களை இரானிய மக்களே எதிர்கொள்வார்கள். மேலும் நடக்கும் விஷயங்களில் அவர்களின் பங்கு எதுவுமில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு,சனிக்கிழமையன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்கி, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொன்றன

நெதன்யாகுவின் கணக்கு

டொனால்ட் டிரம்பை போலவே, பெஞ்சமின் நெதன்யாகுவும் இரானியர்களை தங்கள் கைகளில் ஆட்சியை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இரான் அரசின் இரக்கமற்ற பாதுகாப்புப் படைகளை அவர்களால் வெல்ல முடியாவிட்டால், நெதன்யாகுவின் முன்னுரிமை இரானின் ராணுவ திறனையும், இஸ்ரேலை அச்சுறுத்தக்கூடிய பிராந்தியத்தைச் சுற்றியுள்ள ஆயுதக்குழுக்களை மீண்டும் கட்டியெழுப்பும் திறனையும் நொறுக்குவதாக இருக்கும்.

பெஞ்சமின் நெதன்யாகு, பல தசாப்தங்களாக, இரானை இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரியாகக் கருதி வருகிறார். இஸ்லாமிய குடியரசின் ஆட்சியாளர்கள் யூத அரசை அழிக்க ஓர் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்று அவர் நம்புகிறார்.

போரின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, அவர் டெல் அவிவ் நகரின் மையப் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடத்தினுடைய கூரையில் நின்று, போர் முடிவடைவதைக் கண்டதாகக் கூறினார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து "40 ஆண்டுகளாக நான் சாதிக்க நினைத்ததைச் செய்ய முடியும், பயங்கரவாத ஆட்சியை முற்றிலுமாக நசுக்க முடியும்" என்று அவர் கூறினார். அது ஒரு எதார்த்தமாக மாறுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

போர்களுக்கு எப்போதும் உள்நாட்டு அரசியல் பரிமாணம் உண்டு. டிரம்பை போலவே, நெதன்யாகுவும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை எதிர்கொள்கிறார். டிரம்பை போலன்றி, அவரது சொந்த பதவி ஆபத்தில் இருக்கிறது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்த வாய்ப்பளித்த பாதுகாப்புத் தவறுகளுக்கு பல இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவை குற்றம் சாட்டுகிறார்கள். இரானுக்கு எதிராக இஸ்ரேலை ஒரு தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்றதாக அவரால் கூற முடிந்தால், தேர்தலில் ஒரு பெரிய அடியை முன்னெடுத்து வைப்பார். அவர் தோற்கடிக்க முடியாதவராகக்கூட மாறலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,GPO HANDOUT/EPA/Shutterstock

படக்குறிப்பு,பெஞ்சமின் நெதன்யாகு இரானியர்களை ஆட்சியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்

அரசாங்கத்தை தக்கவைப்பதே வெற்றி

அதிஉயர் தலைவரையும் அவரது உயர்மட்ட ராணுவ ஆலோசகர்களையும் கொன்றது இரான் ஆட்சியின் மீது சுத்தியல் அடியாக விழுந்துள்ளது. ஆனால், அது சரிந்துவிடும் என்று அர்த்தமில்லை.

அயதுல்லா ருஹோல்லா காமனெயியும் பிற நிறுவனர்களும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு போர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பிக்க இரானின் நிறுவனங்களை வடிவமைத்தனர். இது ஒரு நபரால் நடத்தப்படும் ஆட்சி அல்ல. அசாத் மற்றும் கடாஃபியின் கீழ் சிரிய மற்றும் லிபிய அரசுகள் ஆளும் குடும்பங்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டன. குடும்பங்கள் அகற்றப்பட்டபோது, கடாஃபி கொல்லப்பட்டார், பஷர் அல் அசத் தப்பி ஓடிவிட்டார், ஆட்சிகள் சரிந்தன.

ஆனால் இரானின் ஆட்சி ஓர் அரசு அமைப்பு. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட பொறுப்புகளைக் கொண்ட அரசியல் மற்றும் மத நிறுவனங்களின் சிக்கலான, அடர்த்தியான வலையமைப்பில் இது அமைந்துள்ளது. போர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பிக்க ஏதுவாக இந்த ஆட்சி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்காகவே ஆட்சி தப்பிவிடும் என்று அர்த்தமில்லை. இஸ்லாமிய குடியரசின் அமைப்பு அதன் கடுமையான சோதனையை எதிர்கொள்கிறது. ஆனால், அந்த அமைப்பு இத்தகைய தருணத்திற்காகத்தான் திட்டமிட்டுள்ளது.

அதன் வெற்றிக்கான வரையறை ஆட்சியை இழக்காமல் தக்கவைத்திருப்பதே. அதை அடைவதற்கு அதுவொரு வலிமையான அளவிலான பாதுகாப்பால் தன்னைச் சூழ்ந்துகொண்டுள்ளது.

இது பாதுகாப்பு, அடக்குமுறை, வற்புறுத்தல் ஆகியவற்றின் சக்தி வாய்ந்த, இரக்கற்ற கருவியைக் கொண்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அதன் ஆட்கள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கொல்வதற்கான உத்தரவுகளைப் பின்பற்றி வீதிகளில் இறங்கினர். இதை எழுதும்போது போரின் மூன்றாவது நாள்தான் ஆகியுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இதுவரை, 2024 டிசம்பரில் மாஸ்கோவுக்கு தப்பிச் சென்ற பிறகு அசத்தின் படைகள் செய்ததுபோல, இரான் அரசாங்கத்தின் ராணுவம் வீழ்ச்சியடைவதற்கான அல்லது போரைக் கைவிடுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அதிஉயர் தலைவரின் கொலைக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் தெஹ்ரானின் வீதிகளில் கூடினர்

வழக்கமான ராணுவம் மற்றும் அதிக ஆயுதமேந்திய போலீசாருடன், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் உள்ளது. இதன் முக்கிய வேலை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகும். ஓர் உயர் மதத் தலைவர் நாட்டை வழிநடத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேலாயத்-இ-ஃபாகிஹ் என்ற கருத்தை ஆதரிக்க இந்தப் படை உள்ளது. இந்த நம்பிக்கை இரானிய புரட்சியின் முக்கியக் கொள்கையாகும். மேலும், இது இரானில் ஷியா மதத் தலைவர்களின் ஆட்சியை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சுமார் 190,000 செயலிலுள்ள உறுப்பினர்களையும் 600,000 வரையிலான ரிசர்வ் வீரர்களையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியையும் அது கட்டுப்படுத்துகிறது. அதன் தலைவர்களிடம் பணமும் வலுவான நம்பிக்கைகளும் உள்ளன. அவை அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்கான காரணங்களைத் தருகின்றன.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பாசிஜ் என்ற ஒரு தன்னார்வ துணை ராணுவக் குழுவால் ஆதரிக்கப்படுகிறது. அதில் சுமார் 450,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதற்கும் வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் பெயர் பெற்றவர்கள்.

தெஹ்ரானில் சர்ச்சைக்குரிய 2009 தேர்தலுக்குப் பிறகு நடந்த போராட்டங்களின்போது, அவர்கள் அரசாங்கத்தின் முதல் பாதுகாப்பு வரிசையாகச் செயல்பட்டதைக் காண முடிந்தது. அவர்கள் தெருக்களில் போராட்டக்காரர்களை குச்சிகள் மற்றும் ரப்பர் தடிகளைப் பயன்படுத்தி மிரட்டி அடித்தனர். அவர்களுக்குப் பின்னால் கனரக ஆயுதமேந்திய போலீசார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நின்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களை விரைவாகக் கட்டுப்படுத்த பாசிஜ் வேகமாக நகரும் மோட்டார் சைக்கிள் குழுக்களையும் பயன்படுத்தியது.

டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பாசிஜை, அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், அவர்கள் கொடிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், அவரது அச்சுறுத்தல்கள் அரசாங்கத்தின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் பலரின் மனதை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

இஸ்லாமிய குடியரசும் ஷியா இஸ்லாமும் தியாகம் என்ற எண்ணத்தால் நிறைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிஉயர் தலைவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகப் பல மணிநேரம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, அரசுத் தொலைக்காட்சியில் அழுதுகொண்டே செய்தி வாசிப்பாளர், காமனெயியின் மரணத்தை அறிவித்து, அவர் 'தியாகத்தின் இனிமையான தூய கோப்பையைக் குடித்துவிட்டார்' என்று கூறினார்.

உலகின் பெரும்பகுதியினர் தாக்குதலை எதிர்பார்த்தபோதும், ஆயதுல்லா தனது மூத்த ஆலோசகர்களுடன் தெஹ்ரானில் உள்ள தனது வீட்டில் ஒரு சந்திப்பை நடத்தத் தேர்வு செய்திருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். அவர் ஒரு தியாகியாக இறக்கத் தயாராக இருந்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

அரசாங்கத்துக்கு இன்னும் சில சாதாரண குடிமக்களிடம் இருந்து வலுவான ஆதரவு உள்ளது. அதிஉயர் தலைவர் கொல்லப்பட்ட பிறகு, 40 நாள் துக்க காலத்தின் முதல் நாளில் ஆயிரக்கணக்கான விசுவாசமான ஆதரவாளர்கள் தெஹ்ரானின் தெருக்களில் கூடினர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் புகை பின்னணியில் எழுந்தபோதும், அவர்கள் பொது சதுக்கங்களில் நின்று, மெழுகுவர்த்திகளை ஏற்றினர், தங்கள் மொபைல் டார்ச்சுகளை பிரகாசிக்க விட்டனர்.

மோசமான முன்னுதாரணங்கள்

இந்த முறை, இஸ்ரேலுடன் சேர்ந்து, அதன் வலுவான ராணுவ சக்தியால், குழப்பத்தை ஏற்படுத்தாமல் எதிரி அரசாங்கத்தை அகற்ற முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.

ஆனால், கடந்த கால உதாரணங்கள் அதிக நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. 2003இல் இராக்கில் சதாம் ஹுசேன் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டபோது, அது பல ஆண்டுக்கால வன்முறை மற்றும் போருக்கு வழிவகுத்தது. அந்த நேரத்தில், ஆயுதக்குழுக்கள் வலுப்பெற்றன, அவற்றில் சில இன்றும் உள்ளன.

நல்ல வாழ்க்கைத் தரத்தை ஆதரிக்கப் போதுமான எண்ணெய் வளத்தைக் கொண்ட லிபியாவிலும் நிலைமை மோசமாக உள்ளது. கடாஃபி அகற்றப்பட்டு கொல்லப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், நாடு பிளவுபட்டு, ஏழையாகவும் நிலையற்றதாகவும் உள்ளது. மேற்கத்திய நாடுகள் அவரை அகற்ற உதவியது, அவரது வீழ்ச்சியைக் கொண்டாடியது. ஆனால் அதன் பிறகு, அவர்கள் பெரும்பாலும் பின்வாங்கி, அதைத் தொடர்ந்து வந்த பிரச்னைகளைச் சரிசெய்ய சிறிதளவும் முயலவில்லை.

இரான் ஒரு பெரிய நாடு. இராக்கைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது. இது 90 மில்லியனுக்கும் அதிகமான கலவையான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இரானில் அரசாங்கம் வீழ்ந்தால், அதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம், வன்முறை ஆகியவை சிரியா, இராக்கில் நடந்த லட்சக்கணக்கான மக்களை பலிகொண்ட உள்நாட்டுப் போர்களைப் போலவே மோசமாக இருக்கலாம் என்ற கடுமையான அச்சம் நிலவுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல்கள் இரானின் ராணுவ வலிமையைப் பெரியளவில் சேதப்படுத்துகின்றன. அரசாங்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட, இது மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றுகிறது.

இரான் அரசாங்கம் வீழ்ந்தால், பலர், அநேதகமாகப் பெரும்பாலான இரானியர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், பலவந்தமாக அகற்றப்பட்ட ஓர் அரசுக்கு மாற்றாக அமைதியான மற்றும் நிலையான புதிய அரசாங்கத்தை அமைப்பது மிகவும் கடினம்.

டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய ஆபத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார். இந்தப் போர் மத்திய கிழக்கை பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் மாற்றும் என்று நம்புகிறார். இருப்பினும், அது நிகழ்வதற்கான வாய்ப்புகள் நிச்சயமற்றதாக உள்ளன. அதோடு, அது மிகவும் சவாலானதும்கூட.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?

அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன்

2 days 15 hours ago

அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன்

641481424_34151319527848567_589013539163தமிழ் நாடு,திருச்சியில், கடந்த வாரம் சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள்.

அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் விஜேயும் ஒருவர் மற்றவருக்கு எதிராகக் காணப்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த சீமானின் கூட்டத்தோடு அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் நம்பிக்கையோடு காணப்படுகிறார்கள்.

ஈழத் தமிழர்கள் தமிழகத்தைக் கையாள வேண்டும். ஈழத் தமிழ் ராஜிய நடவடிக்கைகளில் அது முதன்மையானது. ஆனால் அது எப்படி என்பதுதான் இங்குள்ள கோட்பாட்டு அடிப்படையிலான கேள்வி. தமிழகத்தில் பல கட்சிகள் உண்டு. அந்தக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது. அது தமிழ்நாட்டு வாக்காளர்களுடைய பிரச்சினை. அதில் ஈழத் தமிழர்கள் தலையிடத் தேவையில்லை. ஈழத்தமிழ் நோக்கு நிலையில் தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒன்றுதான், தமிழ் நாட்டவர்கள்தான். எனவே தமிழகத்தைக் கையாள்வது என்பது கட்சி பேதங்களைக் கடந்து தமிழக மக்களைக் கையாள்வதுதான். அங்கே காணப்படும் கட்சி முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது என்பது முக்கிய முன் நிபந்தனை.

சீமானோ,விஜயோ,திமுகவோ,அதிமுகவோ,பாரதிய ஜனதாவோகாங்கிரசோ எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களை ஈழத் தமிழர்கள் அணுக வேண்டும். அது தமிழ்நாட்டு அரசு. தமிழ்நாட்டு மக்களின் தெரிவு. அதை ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். அதைக் கட்சியாகப் பார்க்கத் தேவையில்லை.

அப்படித்தான் புதுடில்லியிலும் இந்திய மக்களால் யார் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படுகிறார்களோ அவர்களை அணுக வேண்டும். அதை பாரத அரசாக பார்க்க வேண்டுமே தவிர கட்சியாகப் பார்க்கக் கூடாது. இந்தியாவை, தமிழகத்தை கையாளும்போதும் அணுகும்போதும் இந்தத் தெளிவு மிக அவசியம். அரசுகளைக் கையாள்வது. அதுதான் அரச தந்திரம்.

சமூகவலைத்தளங்களில் ஆளுக்காள் மோதிக் கொள்ளும் ஈழத் தமிழர்களிடம் இந்தத் தெளிவு மிகக்குறைவாக இருப்பதை உணர முடிகிறது. அதுமட்டுமல்ல சீமான் திரட்டிய கூட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள், தாங்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் இருப்பதைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் ?

இங்குள்ள பெரிய கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கிறது. ஒருவர் மற்றவரை எப்படித் துரோகி ஆக்குவது என்ற போட்டி.அதேசமயம் இரண்டாவது முக்கிய கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை அரசாங்கத்தின் புதிய யாப்புருவாக்க முயற்சியை நோக்கி குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து வருகிறது. ஒருபுறம் அவர்கள் தமிழகத்தை நோக்கியும் ஐரோப்பாவை நோக்கியும் சென்றார்கள். இன்னொருபுறம் தாயகத்தில் குடிமக்கள் சமூகங்களை  நோக்கி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் அவர்கள் முன்னெடுக்கும் எல்லா நகர்வுகளுக்கும் போட்டியாக புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்ச்சியாகக் காய்களை நகர்த்தி வருகிறார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள குறிப்பிட்டுச் செல்லக்கூடிய புத்திஜீவிகளில் அவர் ஒருவர். ஒரு காலம் ராஜதந்திரிகளால் ஆர்வத்தோடு பார்க்கப்பட்ட ஆங்கில இணையதளத்தை இயக்கியவர். அவருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு கோட்பாட்டு ரீதியிலானதா? ஈகோ சம்பந்தப்பட்டதா? என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த முரண்பாடு தமிழ்த் தேசிய ஆன்மாவின் இதயத்தைத் தாக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு  கோட்பாட்டு விளக்கமுடைய இரண்டு தரப்புகளுக்கும் உண்டு.

633759321_3126808887501374_4329678779529

cccc.jpg

சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு முன்னணி தாயகத்தில் உள்ள குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து கடிதம் ஒன்றை ஐநாவுக்கு அனுப்பியது. ஆனால் அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட சிறிது காலத்தில் மற்றொரு கடிதம் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் கையொப்பமிடப்பட்டு ஐநாவுக்கு அனுப்பப்பட்டது. இக்கடிதத்தின் பின்னணியில் மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளரே இருப்பதாக முன்னணி குற்றம் சாட்டியது.

அதன் பின் தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்துக்குப் போனது. அங்கே மூத்த ஈழத் தமிழ் உணர்வாளர்களில் ஒரு பகுதியினர்  அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார்கள். தமிழ்நாட்டு விஜயத்தின்போது,தமிழ்த் தேசியப் பேரவை முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக விமர்சித்து அங்குள்ள ஈழ உணர்வாளர்களில் ஒரு பகுதியினர் அறிக்கையும் விட்டார்கள். மேற்சொன்ன புலம் பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்தான் அதற்கும் பின்னணியில் இருந்ததாக முன்னணி குற்றம் சாட்டியது.

அதன்பின் தமிழ்த் தேசியப் பேரவை, இரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றொரு நகர்வை முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் குடிமக்கள் சமூகங்களுடான ஒரு சந்திப்பு அது. அந்தச் சந்திப்புக்கு சரியாக ஒரு நாள் முன்னதாக திருமலையில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. அதுவும் குடிமக்கள் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளூடான சந்திப்பு. அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது திருமலையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர். அவரை பின்னிருந்து இயக்கியது மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளரே என்று முன்னணி குற்றம்சாட்டியது. திருமலையைச் சேர்ந்த அந்த அரசியல் செயற்பாட்டாளர் முன்பு முன்னணியின் உறுப்பினராக இருந்தவர். இப்பொழுது இல்லை.

திருமலைச் சந்திப்பில் திருமலைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பான கோட்பாட்டு விவாதங்களை அது புதுப்பித்திருக்கிறது. திருமலைச் சந்திப்பைப்போல மற்றோரு சந்திப்பு அதன்பின் மட்டக்களப்பிலும் நடந்தது. அதில் முன்னணியின் செயலாளர்,கஜேந்திரன் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும் அதன் பின் வெளி வந்த காணொளிகள், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிப்பவை.

மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயல்பாட்டாளர் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான அமைப்புகளை ஒரு மெய் நிகர் சந்திப்பில் ஒருங்கிணைந்திருக்கிறார். இதில் தாயகத்திலிருந்தும் சிலர் கலந்து கொண்டதாக ஒரு தகவல். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்த மெய்நிகர் சந்திப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதுதான்.

இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் நிகழும் வாதப் பிரதிவாதங்களின் சாராம்சம் எதுவென்றால், கோட்பாட்டு ரீதியாக யார் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தை தீவிரமாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் முன்னெடுக்கிறார்கள்? இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பொறுத்து யார் கோட்பாட்டு ரீதியாக மிகச் சரியான,பொருத்தமான தீர்வை முன்வைக்கின்றார்கள்? என்பதுதான்.

ஒருபுறம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் தூதரகங்களை அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திக்கு இழுக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது. கட்சிகள் தாங்களாக ஒற்றுமைப்படாத ஒரு பின்னணியில்,தூதரகங்கள் தலையிட்டு முன்முயற்சி எடுத்தாலும் அதையும் ஒரு கட்சி குழப்புகிறது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையே எக்கிய ராஜ்யவா? சமஸ்ரியா என்ற வாதப்பிரதிவாதம். இன்னொரு புறம் சமஸ்டி வேண்டாம் பொதுஜன வாக்கெடுப்புத்தான் வேண்டும் என்ற கோரிக்கை.

சிறிய ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நாலில் ஒரு பகுதிக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். புலப்பெயர்ச்சி தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா ஈழத் தமிழ் கிராமங்களும் ஒரு பகுதி ஆளில்லா வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாறிவருகின்றன. இளைய தலைமுறையின் ஒரு பகுதி நாட்டில் வேர் கொண்டு பூத்துக் குலுங்குவதை விடவும் நாட்டை விட்டு எப்படித் தப்பியோடுவது என்றுதான் சிந்திக்கின்றது. அதாவது தாயகத்தில் சனத்தொகை தொடர்ச்சியாக மெலிந்து வருகிறது.

ஒருபுறம் சனத்தொகை மெலிகிறது. இன்னொருபுறம் இருக்கின்ற ஜனத்தொகையைத் திரட்டுவதற்குக் கட்சிகளால் முடியவில்லை. கட்சிகள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,தேசிய மக்கள் சக்தி உற்சாகமாக, எதிர்பார்ப்போடு அனுர குமாரவை தமிழ்மக்கள் மத்தியில் கதா நாயகனாகக் கட்டியெழுப்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக்  கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும். இந்த லட்சணத்தில் தீர்வை நோக்கி ஒருங்கிணைய வேண்டிய தமிழ்த்  தரப்போ சிதறிக்கொண்டு போகிறது. பலஸ்தீனர்களுக்கிடையிலான அக முரண்பாடுகளை  விமர்ச்சிப்பவர்கள் கூறுவார்கள்…”பாலஸ்தீனர்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்று விவாதித்துக் கொண்டிருக்க, யூதர்களோ அப்பத்தைச்  சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா?

https://www.nillanthan.com/8159/

அநுர கட்சியின் ஆயுதப் போராட்டத்திற்கு மூல வேரான ஈழத்தமிழனின் இரகசியம் | ஊடறுப்பு

2 days 16 hours ago

யாழ்க்கள உறவுகளே,தமிழீழ மக்களின் தற்போதைய அரசியற்கையறுநிலைகுறித்த உரையாடலாக உள்ளதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு

2 days 18 hours ago

சோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை :

அறம் கூற்றாகட்டும்

- சோம.அழகு

[சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க!

சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி

சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்]

***************************************

‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று யாரோ அவர்களை மேதாவிகள் என நம்ப வைத்திருக்கின்றனர். அதன் கொடும் விளைவாக, “யார் ஆண்டால் எனக்கென்ன? நான் சம்பாதிக்குறது எனக்கு!” என்று பினாற்றுபவர்களுக்கு, தமக்கான ஊதியம் மொத்தமாக அல்லது பகுதியாகக் கூட தமது கைக்கு வருவதே ஆட்சியாளர்களின் கைங்கர்யம்தான் என்ற தெருட்சியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே மடமை!

ஒரு தனி நபரது அரசியல் சார்பு என்பது கருத்துகளால் மட்டும் ஆனவை அல்ல. கருத்தியல் சார்ந்தது. ஒருவரது விழுமியங்கள்(ஒழுக்கம், நேர்மை…), மதிப்பீடுகள், கண்ணோட்டம், மனிதம் என உள் உறைந்திருக்கும் பலவற்றையும் ஒன்றாகக் கட்டி அவரது ஆளுமையை எடுத்துரைப்பதே அவ்வரசியல் நிலைப்பாடுதான்! அரசியலில் அற நெறிமுறைகள் மற்றும் உய்யச் சிந்தனைகளின்(critical thinking) நுட்பமான பகுப்பாய்வில் உருவாகும் விருப்பு வெறுப்புகள்தாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். யாரை ஆதரிக்கிறோம் என்பதை விட முக்கியமானது யாரை எதிர்க்கிறோம் என்பது. நண்பனை வைத்து நம்மை எடை போடுவதை விட எதிரியை வைத்து நம்மைக் கணிப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவோ?

இடப்பக்கம் நிற்பார்க்கு உய்வுண்டாம்; உய்வில்லை வலப்பக்கம் நிற்கும் மாக்களுக்கு. இக்கட்டுரையை நடுவில் நின்று எழுதும் அளவிற்கு நான் பக்குவப்படவில்லை. அவ்வளவு பக்குவப்பட(!) விரும்பவும் இல்லை. வலதுசாரிகளில் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள் பூசிக் கொள்ளும் அரிதாரமே ‘நடுநிலையாளர்’. Annoying agnostics! இந்த நடுநிலை நக்கிகள் ஏதோ பண்பட்டவர்களாகவும் அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் தங்களைத் தாங்களே புரிந்து வைத்திருப்பதுதான் அந்தோ பரிதாபம்! மனிதகுலத்திற்கு எதிரானது எனினும் ‘கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்ட வலது சாரிகள், “நீங்கள் தவறு” என்று நாம் வாதம் வைப்பதற்காகவாவது வழி வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் ‘கொள்கை அநாதை’களான நடுநிலையாளர்களிடம் என்னவென்று (அரசியல்) பேச முடியும்? இவ்வாறானவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “ஏதாவது ஒரு பக்கமா நில்லு பக்கி. நடுவால நின்னு வண்டி ஏறி செத்துராத மூதேவி” என்று வடிவேலுவின் தொனியில் இவ்வரிகள்தாம் மனதினுள் ஓடும்.

ஆராய்ந்து தெளிந்து ஒரு பக்கத்தைத் தேர்வு செய்ய ரொம்பவெல்லாம் மெனெக்கெட வேண்டியதில்லை. மனிதத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘இட’த்தைதான் ஆறாம் அறிவு மிக இயல்பாகத் தெரிவு செய்யும். எனவே கடைந்தெடுத்த கயமைத்தனத்தை மட்டுமே பின்பற்றும் வலப்பக்கத்தில் தற்காலத்திலும் கரை ஒதுங்கி, இடப்பக்கத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். மூளைச்சலவை என்பதெல்லாம் ரொம்ப பூசி மெழுகப்பட்ட மென்மையான சொல். சிலருள் இயல்பாகவே ஊறிப் போயிருக்கும் வன்மத்திற்கு ஏற்ற தளம் அமைத்துத் தருவதால்தான் வலப்புறத்தை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். எந்த மனிதனிடமும் சென்று ‘நீ அடக்கி ஆளவும் ஏறி அடிக்கவும் உனக்குக் கீழேயும் ஒரு அடுக்கு இருக்கிறது’ என அவனுக்கு அதிகார ருசியைக் காட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள அந்த வன்மத்திற்குப் பல முகங்கள் - சாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் எத்தனையோ. இந்த வெறிகளையெல்லாம் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்து நிற்பதற்கு ஒரு தனித்துவமான மானமின்மை வேண்டும்.

பெரியார், அண்ணல் அம்பேகர், கார்ல் மார்க்ஸ் – cliché என இவர்களை எப்படி புறந்தள்ள முடியும்? கருப்பு, நீலம், சிவப்பு – ஒரு மனிதனிடமிருந்து இம்மூன்று நிறங்களையும் அழித்துவிட்டால் என்னதான் மிஞ்சும்? வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதைப் போல் காவி வந்து குடியமர்ந்து கொள்ளும். இயற்கையாய் ஒரு மனிதனுள் பூசப்பட்டிருக்க வேண்டிய அம்மூன்று நிறங்களையும் அழித்தொழிக்கும் உயிரிகளிடம் ஒரே ஒரு கேள்வி - “ஏன்?”

************************************

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகிய மாபெரும் ஆளுமைகளையெல்லாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து மெய்சிலிர்த்த காலம் போய் இப்போது அதல பாதாளத்தில் எவ்வளவு எட்டி எட்டிப் பார்த்தாலும் இன்னும் இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கின்ற அரசியல் அப்பிரசண்டிகளின் பின்னால் ஒரு தலைமுறையே போதமில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்வது தமிழ் நிலத்தின் சாபக்கேடு. ட்ரம்ப், பெஞ்சமின் நெதென்யாகு…. எனத் துவங்கி மோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவிலேயே அரசியல் தரங்கெட்டுப் போயிருக்கிறது எனினும் தமிழ்நாடு அதில் தற்போது கொஞ்சம் தப்பித்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் கொள்ளும் முன்னரே, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று திடீரென சிலர் எம்பிக் குதித்து அநாகரிக அரசியலின் ஆழத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

என்னத்தப் போட்டு சூசகமா கொச கொசன்னு?

தற்போதுள்ள அரசியல் சூழலில் பா.ஜ.க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தைரியமாக எல்லா வகைகளிலும் எதிர்க்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் மிகச் சில. அவ்வாறாக, தண்டு வடம் வாய்க்கப் பெற்ற கட்சிகளில் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் தி.மு.கவும் வி.சி.கவும். நிற்க! உடனே ‘காவடி எடுக்கிறேன்’, ‘கூஜா தூக்குகிறேன்’ என்றெல்லாம் பாசத்தோடு பாராட்டு மழை பொழியும் முன் இதையும் வாசித்து விடுங்கள்.

எல்லாவாற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதர் பட்டத்தை இவர்களுக்குச் சாற்றவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க மீதான கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது அவர்களை நிராகரித்தால் பேராபத்தான சக்திகளின் பிடியில் மாட்டி நமது அடையாளத்தையே இழந்து சின்னா பின்னமாகிவிடுவோம்.

மேலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. ஓரளவு வாசிப்பும் பேச்சுத் திறமையும் கொண்ட வல்லுநர்களை உடையது அக்கட்சி. தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இல்லாதவர்கள். மேலும், தலைமையிடம் ஒரு தவறு இழைக்கும் போது முதன்முதலில் இடித்துரைப்பது கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களுமாகத்தான் இருப்பர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணித் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையே எடுத்துக்காட்டுகள். தலைமையைக் கேள்வி கேட்பதற்கான வெளியும் கேள்விகளுக்குச் செவி மடுக்கும் தலைமைப் பண்பும் அக்கட்சிக்கு உண்டு. அப்புறம் அநியாயத்திற்கு நாகரிக அரசியலால் ஓர் உயரிய செந்தரத்தை இப்போது நிலைநாட்டி வருகிறார்கள். பிழையை இடித்துரைப்பது போலவே நல்லதைப் பாராட்டவும் செய்யலாம்தானே?

அ.தி.மு.க பா.ஜ.க.விடம் என்றோ விலை போய் விட்டாயிற்று. ‘அந்தம்மா இருந்திருந்தா நடக்குறதே வேற’ என தயவு செய்து தூக்கிக் கொண்டு வராதீர்கள். அவரே ஒரு சர்வாதிகாரிதான். தே.மு.தி.க, பா.ம.க – பொட்டியைக் கண்டால் எங்கும் யாருக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதிலும் இரண்டாவது, கடைந்தெடுத்த சாதிக் கட்சி. நா.த.க – கட்டுக்கதைகளிலேயே கட்சியை வளர்த்த பெருமை இவர்களுடையது. தமிழ்த் தேசியம் வழியாக வந்தாலும் சமீபமாக பெரியாரை எதிர்த்ததன் மூலம் தங்களது கூட்டாளிகளை அம்பலப்படுத்தி விட்டார்கள். நிலைமை இப்போது இவ்வாறாக இருக்க பா.ஜ.க.வை விரட்ட இவர்களை எல்லாம் எதிர்க்கத்தான் வேண்டும். கணிசமான வாக்கு வங்கி உடைய கட்சிகளில் இக்கட்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.மு.க மட்டுமே மிஞ்சுகிறது.

என்னுடைய இந்த நிலைப்பாடு என்றென்றைக்குமானது அல்ல. மாணவர்களுக்கு, பெண்களுக்கு எனப் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் தி.மு.க., நாளை மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுமாயின் நிச்சயம் என் நிலைப்பாடும் மாறுபடும். வேறு யாரேனும் மக்கள் பக்கம் நின்று நல்லது செய்வார்களாயின் அவர்களை ஆதரிப்பேன். எனவே இப்போது ‘தி.மு.க வேண்டாம்’, ‘திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்’ என்றெல்லாம் கொக்கரிப்பவர்கள் இன்றைய சூழலில் தி.மு.கவுக்கு யார் சரியான மாற்று என்று மட்டும் கூறிவிடுங்கள். சமரசமாகப் போய் விடலாம். ‘கொள்கை எதிரி; அரசியல் எதிரி’ என்றெல்லாம் பண்ணையார்த்தனமாக உருட்டக் கூடாது.

தி.மு.க.வைத் தூற்றுபவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் காரணிகள் : வாரிசு அரசியல், ஊழல் – இவை அறவே இல்லாத கட்சிகளைக் கூறினால் அடியேன் அறிந்து புரிந்து தெளிந்து கொள்வேன். அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளை விடுத்து வேற வேற…?. தி.மு.க. ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தால் கூட ‘அது எந்த அளவிற்கு மக்களுக்குச் சென்றடைகிறது? வழியில் எவ்வளவு வழிப்பறி நடக்கிறது?’ என்று ஆராய்ச்சியில் இறங்குவது தவறல்ல. அதே ஆர்வ மிகுதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சோவார போயிற்றா? விமர்சனம் செய்யலாம். ஆனால் தி.மு.க. என்பதால் மட்டுமே தேவையற்ற காழ்ப்புணர்வுடனேயே எல்லா நல்லனவற்றையும் அணுகினால் இறுதியில் “இலவச காலை உணவு; நிரம்பி வழிகிறது கழிவறை”யில்தான் என்று 'தினமலம்' போல் வந்து நிற்பீர்கள்.

என் மனதிற்கு நெருக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் குறிப்பிடாததற்குக் காரணம் அவர்கள் இன்னும் மாநிலமயமாக்கப்படாததுதான். நான் அரசியலை கவனிக்கத் துவங்கிய காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை முழுவதுமாக ஆதரித்த அவர்களின் உறுதிப்பாடு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அது குறித்து இப்போது கூட தோழர்களின் மீது உரிமையுடனான கோபம் உண்டு எனக்கு. அது நிச்சயமாக அவர்களை விட்டுக் கொடுக்கும் தொனியில் அல்ல. “என்ன இது? நீங்களே இப்படி நிலைப்பாடு எடுக்கலாமா?’ என்று ஓர் ஆசானின் மீதான கதமாகவே வெளிப்படும். “பிற கட்சிகளும்தாம் ஆதரித்தன?” என கேட்பீர்களானால் எனது பதில் “ஒப்பற்றதும் அப்பழுக்கற்றதுமான செவ்விய ஓர் இடத்தைத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கருத்து வேறுபாட்டிற்கே வழியில்லை என்ற அதீத நம்பிக்கை சற்றே பிசகியதில் வெளிப்பட்ட திகைப்புதான் அது”.

இவ்விடத்தில் என்னுள் எழும் இரண்டக மனநிலை(dilemma) பற்றியும் கூற விழைகிறேன். எனது ஊர் இலங்கையும் அல்ல, கூடங்குளமும் அல்ல. அவ்வூர்க்காரர்கள் இன்றைக்கும் முறையே தி.மு.க. மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் கோபத்தில் இருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இதுவும் தோன்றும் – “அப்போ உனக்கு அடி விழுந்தாதான் வலிக்குமா?”. இக்கேள்வி என்மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி நக்கலாகச் சிரிக்கும். ஆனால் நான் கூறியது போல், “கோபம்தான். ஆனால் இக்காரணங்களுக்காக மட்டும் இப்போது இவர்களைப் புறக்கணிப்பது விவேகமல்ல; பெருஞ்சேதத்திற்கு வழிவகுக்கும்”.

திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் பிற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையாகக் காலூன்ற இயலாமல் போனதில் பெரு மகிழ்ச்சியே! எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமது ஏவல்களாகப் பல விளியறி ஞமலிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க அரசு. பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் யாரும் அரசியல் செய்யவே முடியாது. ஆகையால் இப்பெருந்தகைகளின் பதாகைகளை ஏந்திக் கொண்டே நமது புறவாசல், வடவாசல், மேற்கு வாசல், கிழக்கு வாசல் என எல்லா வழிகளிலும் நுழைய முற்படுகின்றன பா.ஜ.க.வின் ‘ஆ’, ‘இ’, ‘ஈ’, ‘உ’….. பிரிவுகள்.

*********************************************

அதிலும் சமீபமாக இறங்கியிருக்கும் அல்லது இறக்கி விடப்பட்டிருக்கும் பனையூர் பண்ணையாரெல்லாம்….. எழுதப் பெறும் தகுதி உடையவரல்லதான். இடி அமீன், முசோலினி, ராஜபக்க்ஷ,… போன்றோருக்கும்தான் அத்தகுதி இல்லை. ஆனால் இவர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லவா? ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்’ என்பது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை. அதையே தகுதியாகப் புரிந்து கொண்டால் எப்படி?

சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் கரூரில் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு பிறன்பழி கூற இயலாது. ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது; அல்லது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதன் பிறகான அந்த ‘சொகுசு அரசியல்வாதி’யின் அணுகுமுறைதான் இன்னும் ஆத்திரமூட்டக் கூடியதாக இருந்தது. அரசாங்கம் மீது தவறே இல்லை என்று கூறவில்லை. ஆணைய விசாரணையில் தெரிய வரும். வரட்டும். ஆனால் தெள்ளிதின் விளங்கி நிற்கும் தனது பொறுப்பற்றதனத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட சதிக் கோட்பாடுகளை(conspiracy theories) சமூக வலைதளங்களின் உதவியுடன் கிளப்பி விட்ட வில்லத்தனம் எல்லாம் திரைப்படங்களில் கூட பார்த்திராதது. ‘இந்த அரசாங்கம் ஏன் சரியாகப் பணியாற்றவில்லை?’ என்பதிலிருந்து ‘இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு வேகமாகப் பணியாற்றுகிறது?’ என்னும் சாட்டையடி(!) கேள்விக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறது இந்த தவக்கா கட்சி.

கொள்கை ரீதியாக ஒருவரை எதிரி எனக் கை காண்பித்து விட்டு அந்த எதிரியின் எதிரியும் எனக்கு எதிரியே என்பதெல்லாம் என்ன மாதிரியான பம்மாத்து அரசியல்? தி.மு.க எதிர்ப்பு/வெறுப்பு அரசியல் என அறிவித்துவிட்டுப் போவதுதானே? ஒரு தனி நபராக அந்நடிகர் என்ன வேண்டுமானாலும் பிதற்றிவிட்டுப் போகட்டும். யார் இழுப்புக்கும் போகட்டும். கருத்துச் சுதந்திரம், உரிமை என்று விட்டுத் தொலைக்கலாம். ஆனால் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒருவர் என்ற வகையில் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் இந்தப் பெரிய அணில். மற்ற எல்லா கட்சிகளும் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்ய, இவர்கள் மட்டும்தான் தனி நபர் வழிபாட்டில் கட்டுண்டு கிடக்கின்றனர். மேலும் அரசியல் மேடையின் தரத்தை வெகுவாகக் குறைத்து, பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்களைச் சொல்ல வைத்ததில் இவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளலாம். தன்பழி, ஊழ்வினையாக மாற்றம் அடையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வளவு நடத்தியது போதாது என்பது போல் ‘அதுக்கும் மேல…’ என்று அடுத்தடுத்து அசிங்கங்கள் அரங்கேறின.

இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை தமிழ்நாடு. ‘குழந்தையை இழந்தவர்கள்’ என நாம் பாவப்பட்டு வருத்தப்பட, அவர்கள் அனைவரும் சில நாட்கள் கழித்து அதற்கு முக்கிய காரணமானவர் மீது தவறே இல்லை என்று ஒரே குரலில் ஓங்கிப் பேசினார்கள். ‘அவரைப் பார்க்கும் ஆசை நிறைவேறிவிட்டது. என்ன ஒன்று? அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று’ என்று சிரித்துக் கொண்டே ஒரு தாயால் பேச முடிந்ததை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ மீது உண்டான இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் இதுவரை எங்கும் காணாதது.

தாமாகவே இப்படிப் பேசியிருந்தால் ரொம்ப குரூரம். பணம் பெற்றுக் கொண்டு பேசினார்களாயின் அது கேடு கெட்ட கேவலம். எப்படிப் பார்த்தாலும் சமூகம் போகிற போக்கைப் பார்த்தால் பதறுகிறது. பேச வைத்தவர்களுக்கும் பேசியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ‘இன்னும் ரெண்டு பிள்ளையையும் கூட்டிட்டுப் போகாம போய்ட்டேனே’, ‘இதுக்காகவாவது இன்னும் ரெண்டு புள்ளைய பெத்தேன் இல்லையே?” – நல்லவேளை இப்படியெல்லாம் ஆதங்கப்படவில்லை. ‘உங்கள் பரிதாபத்திற்கும் அனுதாபத்திற்கும் எங்களுக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது’ என பாதிக்கப்பட்டோர் நமது முகத்திலறைந்து சொன்ன விதம்; பேருந்து ஏறிச் சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ‘பண்ணையார் சவரம் செய்யவில்லை, ஷவர்மா சாப்பிடவில்லை, ஷாம்பூ போடவில்லை, ரொம்ப வருத்தத்தில் இருக்கார்’ என ஆறுதல் பெறச் சென்றவர்கள் ஆறுதல் அளித்து வந்தது….. தமிழ்நாட்டில் அரங்கேறிய இந்நாணக்கேடான நிகழ்வுகள் அழிக்க முடியாத கரும்புள்ளிகள்.

இது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. இப்போது அல்ல. சம்பவம் முடிந்த ஒரு மாதத்திலேயே ‘பிண நாயகன்’ திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கேட்டு அனத்த ஆரம்பித்துவிட்டன அணில்கள். மாநாடு என்னும் பெயரில் நடத்தப்படும் ஒவ்வொரு வைபவத்திலும் அவர் பேசுவதை…. மன்னிக்கவும்! வாசிப்பதைக் கேட்கும் போது “ச்சே! இப்படி நல்லா நடிப்பு வர ஆரம்பிக்குற நேரத்துல முழுக்கு போடுறாரே!” என்று மட்டும் கொஞ்சம் கவலை(!) மேலிடுகிறது. நம்மால் யாரோ ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது என்றாலே தூங்க முடியாமல் குற்றவுணர்வில் உழன்று கொண்டிருப்போம். கரூர் அட்டூழியத்திற்குப் பிறகும்… சரி, அந்த உத்தமர்ர்ர் மீது தவறே இல்லை என்றே கொள்வோம். தன்னைப் பார்க்க வந்துதானே மடிந்தார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் மூன்று மாதம் கழித்து மலேசியாவுக்குச் சென்று ஒருவனால் ஆட்டம் போட முடிகிறது எனில் இவ்வகை உயிரினத்தைப் புறந்தள்ளுதலே சாலச் சிறந்தது. போதாக்குறைக்கு அத்திரைப்படத்தின் வரவுக்காக வாலை ஆட்டியபடியே காத்திருப்பவர்களின் நடுவில்தான் நாமும் வாழ்கிறோம் என்று உணரும் கணம் உடல் கொஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது. அவரை வைத்துப் படம் என்ற பெயரில் என்ன கருமத்தைக் கிண்டி வைத்திருந்தாலும் விசில் பறக்கத்தான் போகிறது. வழக்கம் போல ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என வடை சுடத்தான் போகிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர் கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. ‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள் என்று ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். மக்கள் சீக்கிரமே மறந்து விட்டுக் கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அரிய உண்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கின்றனர். நாம்தான் செப்டம்பரிலேயே தேங்கி விட்டோம் போல.

இதில் “இவர்களைத் ‘தற்குறி’ என்றழைக்கக் கூடாது. இவர்களைச் சரியாக அரசியல் படுத்தத் தவறிவிட்டோம்” என்றெல்லாம் உண்மையான அக்கறையுடனும் குற்றவுணர்வுடனும் திராவிட கழகத்தினர் சிலர் பேசுவதைக் கேட்டால்….. மன்னிக்கவும்! சிரிப்புதான் வருகிறது. அணில்களைப் போன்ற தனி மனித ஒழுக்கமற்ற கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. உலகமே கையில் சுருங்கி விட்ட இந்த யுகத்தில் எல்லா செய்திகளையும் வாசிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். எது சரி எது தவறு என்று பிரித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளாதது அவரவர் குற்றம் மட்டுமே. அறியாப் பருவத்தில் இருக்கும் மழலையரைப் போல் இவர்களைக் கொஞ்ச வேண்டியதில்லை. அடிப்படை அறிவை அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கத் துப்பில்லாத இவர்கள் சமூக வலைத்தளங்களில் நான்கு கால் பாய்ச்சலில் ஒன்றிய அரசின் தவறுகளுக்குக் கூட வீறு கொண்டு மாநில அரசை மட்டுமே துவைத்து வெளுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்… “உங்களை எல்லாம் வச்சுகிட்டு இந்தியா ஏன் இன்னும் வல்லரசா ஆகாம இருக்கு?”

உலக வரலாற்றில் முதன் முறையாக இவரைப் பேட்டி எடுக்க வந்தவர்கள் பேட்டி எடுத்ததைப் பேட்டியாகக் கொடுத்த கேலிக்கூத்துப் பெருமையும் இப்பெரிய அணிலையே சாரும். “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு மக்களையும் சந்திக்க மறுக்கிறார். பத்திரிக்கையையும் எதிர்கொள்ள மருள்கிறார். ஆனால் இவருக்கு முதலமைச்சர் நாற்காலியைத் தூக்கித் தந்திட வேண்டுமாம்” என்று இவரைப் பின் தொடரும் ஆச்சரியக் குறிகள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும். அவர்களை மட்டும் சொல்லித்தான் என்ன? படித்து மண்ணள்ளிப் போட்ட பலரும் கூட கரூர் சம்பவத்தைக் காணுற்ற பிறகும் “எப்போ பாரு… தி.மு.க., அ.தி.மு.கன்னே போய்ட்டுருக்கு. ஒரு மாற்றம் வரட்டும். இவருக்குத்தான் ஒரு வாய்ப்பு குடுத்துப் பார்க்கலாமே?” என்று, ‘இன்றைக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உணவகத்தில் சாப்பிட்டுப் பார்ப்போமா?’ என்ற தொனியில் பேசுவதைப் பார்த்தால் “நீங்கள்லாம் எப்படி இன்னும் வெளிய நடமாடிட்டு இருக்கீங்க? யாரு சங்கிலியைக் கழட்டி விட்டது? எப்போ தப்பிச்சீங்க?” எனக் கேட்கத் தோன்றுகிறது.

‘எது சரி?’ என்பதைப் புரிந்து கொள்ளவும் ‘யார் பக்கம் நிற்பது?’ என்று தேர்ந்து தெளியவுமாவது கொஞ்சம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் நலம். எதை வாசிக்கிறோம் என்பதும் இங்கு முக்கியம் அமைச்சரே!

*****************************************

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கண்றாவியையெல்லாம்தான் கேட்பது? அறத்தோடு கூடியவற்றைப் பேசுதல் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என வரையறையை மாற்றுங்கள் ஐயா!

தம்மை அரசன் என்று சொல்லிக் கொள்(ல்)பவர்களால் அன்றே நிகழ்த்தப்படும் கொலைகள் யாவும் பிரிவினைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பறைசாற்றுவதற்காகவும் சுய ஆதாயத்திற்காகவும் அரங்கேறுகின்றன. தெய்வமோ தெண்டத்திற்கு நின்று கொண்டே இருக்கிறது. அநீதியையும் தீமையையும் கொல்வதற்கான நோக்கம் சற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்வதெல்லாம் கூட இருக்கட்டும்; உணர்ச்சி மேலீட்டில் கோபத்தில் பொங்குவது கூடக் கிடையாது.

(supposed)அரசர்கள் மற்றும் (so called)தெய்வங்களின் (அவ)லட்சணம் இவ்வாறாக இருக்க யாரை அல்லது எதை நம்புவது? எவ்வகையான நம்பிக்கையில் பிடிப்புக் கொள்வது? நியாயத் தராசுகள் எல்லாம் பொருளற்றுப் போன தற்காலத்தில், “வாழ்க்கை அப்படித்தான்; நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அது அநீதி என்றாலும் கூட” என்ற எதார்த்தம் புரியாமல் இல்லை. மனதில் ‘ஊழ்’ என்றொரு பிரிவை உருவாக்கி எல்லா அநியாயங்களையும் அதில் இருத்தி வைக்க வெகு கடினமாக இருக்கிறது. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு வாழ்க்கைச் சக்கரத்திற்கான நம்பிக்கை அச்சாணியை எதில் தேடுவது?

போகிற போக்கில் எல்லாவற்றையும் வெறுமனே கவனித்து மட்டும் கடந்து செல்வதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லையே! கடவுளே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். சமூக விடயங்களில் அறம் சார்ந்த கோபத்தை இல்லாத இறைகளின் மீது கொட்டி நேரத்தை வீணடிப்பதை விடுத்து, இருக்கும் தலைவர்கள்/தளபதிகள்/சிப்பாய்கள் ஆகியோரில் சரியானவர்கள் (அதாவது தவறானவர்கள்) மீது முறையாக வெளிப்படுத்துதல் மனதிற்கான ஒரு தற்காலிக வடிகால் மட்டுமே. ஒருமா அளவு மனிதத்தைத் தன்னுள் இடுக்கி வைத்திருக்கும் மனிதனுக்குக் கூட அத்துமீறிய அநீதிகளின் போதும் நீதி தேவதையின் கண்கள் இறுகக் கட்டப்பட்டு இருப்பது மனச்சோர்வைத் தந்து விரக்தியைப் படரச் செய்யும் அல்லவா? இக்கையறு நிலையில்தான் “அறம் கூற்றாகும்!” என்பதை நம்பச் சொல்லி ஆறுதல் அடைய முனைகிறது மனம். அதுவே “அறம் கூற்றாகட்டும்!” என ஆங்காரமாக மனதினுள் ஒலிக்கும்போது உத்வேகத்துடன் கூடிய ஏதோ ஒரு வகையான சமாதானத்தையும் அழைத்து வருகிறது. எனவே….

அறம் கூற்றாகட்டும்! ஆகியே தீர வேண்டும்! அப்படியே ஆகக் கடவதாக! ஆமென்!

நல்ல கண்ணுகளும் -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

3 days 2 hours ago

Nallakannu-1.jpg?resize=750%2C375&ssl=1

நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

தமிழ்நாட்டின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணு அண்மையில் இயற்கை எய்தினார்.தன் பெயருக்கு ஏற்ப நல்ல கண்ணுவாக வாழ்ந்தவர் அவர். உண்மையான  கொம்யூனிஸ்ட் ஒரு சன்னியாசியைப்போல இருப்பார். நல்ல கண்ணு அப்படித்தான் வாழ்ந்தார். அவர் சொத்துச் சேர்க்கவில்லை.புகழுக்கோ பதவிக்கோ போகங்களுக்கோ ஆசைப்படவில்லை.எளிமையாக வாழ்ந்தார். அவருடைய எளிமையை,சந்நியாசத்தை தமிழ்நாட்டில் யாரும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை.

அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்திய பின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார்.

இந்தஇடத்தில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.தமிழ்நாட்டின் முதலமைச்சரால் வாழ்நாள் போராளி என்று அழைக்கப்பட்ட ஒருவர்,தன் வாழ்நாளில் என்றைக்குமே தமிழ்மக்களால் தமது பிரதிநிதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஏன் ?

மேற்கு வங்கத்தில்,திரிபுராவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.திரிபுராவில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மிக எளிமையான,ஒரு சன்னியாசி போல வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஒருவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் வாசிக்கலாம். அவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்?தனக்கென்று சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை,அவருடைய மனைவி முச்சக்கர வண்டியில்தான் அலுவலகத்துக்கு போவார்…என்றெல்லாம் போற்றப்படுகிறது.

இந்தியாவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர்தான் நல்லகண்ணு.அவர் நூற்றியொரு வயதுவரை  வாழ்ந்தார்.ஆனால் போட்டியிட்ட  தேர்தல்களில் அவர் வெற்றி பெறவேயில்லை.தமிழ்நாட்டு மக்கள் அவரை தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? ஏன் ?

வாழ்நாள் போராளிகளாக வாழ்ந்த,வாழ்கின்ற நல்லகண்ணுக்கள் ஏன் தமிழ் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை? கெட்ட கண்ணுகள்தானே அதிகமாகத் தெரிகிறார்கள்? தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் எத்தனை பேர் நல்லகண்ணுகள்? எத்தனை பேர் கெட்ட கண்ணுகள் ? தமிழ் வாக்காளர்கள் ஏன் பெரிய அளவுக்கு நல்லகண்ணுகளை தமது தலைவர்களாகத் தெரிந்தெடுப்பதில்லை?

திரை நட்சத்திரங்களுக்காகக் தீக்குளிக்கும் மக்கள்.திரை நட்சத்திரங்களுக்காக தலையை மழிக்கும் பெண்கள்.திரை நட்சத்திரங்களுக்காக மீசையை மளிக்கின்ற ஆண்கள்.நாக்கை,விரலை வெட்டுகின்ற,விரதம் இருக்கின்ற,படித்த,படிக்காத ரசிகர்களைக்  கொண்ட ஒரு சமூகம், நல்லகண்ணுகளை ஏன் தேர்ந்தெடுக்காமல் விடுகிறது?

ரணா படத்தில் வரும் சீக்கிய போலீஸ் அதிகாரி கூறுவது போல தமிழ் மக்களில் அதிகமானவர்கள் “சென்ரிமென்ரல் இடியட்களா”?நல்லகண்ணுகளை தேர்ந்தெடுக்க அவர்களால் முடியாதா?

அல்லது நல்லகண்ணுகளால் வெற்றிகரமாக தேர்தல் அரசியலை முன்னெடுக்க முடியவில்லையா?  ஏன் முடியவில்லை?

ஈழத் தமிழ் அரசியலில் நான் திரும்பத் திரும்பக் கூறும் ஓர் உதாரணம் உண்டு. நல்ல தங்கத்தை வைத்து ஆபரணங்களை,நகையைச் செய்ய முடியாது. அதை வேண்டுமென்றால் அயர்ன் சேவில் பாதுகாக்கலாம்.தங்கத்தை அதன் பிரயோக நிலைக்கு கொண்டு வருவது என்றால் அதாவது ஆபரணங்கள் செய்வதென்றால் அங்கே ஏதோ ஒரு விகிதம் செப்பைக் கலக்க வேண்டும்.அதாவது தூய தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்யமுடியாது.அதன் தூய்மையைக்  கெடுக்கும் செப்பைக் கலப்பதன் மூலம்தான் அதனை மக்கள் மயப்படுத்தலாம்.

இது தங்கத்துக்கு மட்டுமல்ல,நல்லகண்ணுகளுக்கும் பொருந்தும்.நூறு விகிதம் நல்லகண்ணுகளாக இருந்தால் தேர்தல் அரசியலில் இறங்க முடியாது. இறங்கினாலும் வெல்ல முடியாது.தேர்தல் அரசியலில் வெல்வதற்கு சாதி வேண்டும்; சமயம் வேண்டும்; ஊர் வாதம் வேண்டும்; பிரதேச வாதம் வேண்டும்; அல்லது இதுபோல ஏதோ ஒரு குருட்டு சென்ரிமென்ரல் வாதம் வேண்டும். ஆனால் நல்லகண்ணுகள் அப்படிப்பட்ட தீய தேர்தல் உபாயங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள்.மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்;மக்கள் மத்தியில் கருத்தாக்கம் செய்ய வேண்டும்;அதன்மூலம் “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று அவர்கள் நம்புவார்கள்; உழைப்பார்கள்.

ஆனால் துயரம் என்னவென்றால்,ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல,உயர்ந்த ஜனநாயகங்கள் என்று போற்றப்படும் மேற்கு நாடுகளிலும்கூட கருத்து மக்களைப் பற்றிக்கொள்வதை விடவும்,அறிவு மக்களைப் பற்றிக் கொள்வதை விடவும், உணர்ச்சிகரமான நிறம்,இனம்,மதம், மொழி… போன்ற குருட்டு விசுவாசங்கள்தான் எளிதாகப் பற்றிக் கொள்கின்றன.

ஜனநாயகப் பரப்பில் அறிஞர்களும் நல்லகண்ணுகளும் அரிதாகவே தெரிவு செய்யப்படுகிறார்கள்.அவர்களுக்கு நடிக்கத் தெரியாது.அவர்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது.அவர்களுக்கு வேஷம் போடத் தெரியாது.அதாவது அவர்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.இங்கே பிரச்சினை அவர்களுடைய நேர்மைதான்; அவர்களுடைய ஒழுக்கம்தான்;அவர்களுடைய பற்றின்மைதான்.

நடிகர்கள் திரையிலும் நடிக்கிறார்கள்; அரசியலிலும் நடிக்கிறார்கள். ஆனால் அறிஞர்களோ,நல்லக்கண்ணுகளோ மக்களை ஏமாற்ற விரும்புவதில்லை. அதனால் தேர்தல் அரசியலில் அவர்கள் பெரும்பாலும் தோற்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, அதைவிட முக்கியமாக தேர்தல் அரசியல் ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது. அதற்குரிய தொழில் திறன்களை கொண்டிருப்பவர்கள்தான் அதில் வெல்லலாம்.எல்லா நல்லகண்ணுகளுக்கும் அந்தத் தொழில் திறன் இருப்பதில்லை.

இது தமிழகத்துக்கு மட்டுமல்ல,தமிழகத்திலிருந்து சிறிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அதுதான். அரசியலை அறிவியல் ஒழுக்கமாகப் பயில்பவர்கள்,மக்களைக் கருத்தாக்கம் செய்ய வேண்டும்,விழிப்பூட்ட வேண்டும் என்று உழைப்பவர்கள்,தேர்தல் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்.தேர்தல் அரசியலுக்குள் வந்தால் தங்களுடைய தூய தங்கத் தன்மை கெட்டுவிடும் என்றும் பயப்படுகிறார்கள். சொம்பு கலந்த ஒரு வாழ்க்கையை அவர்கள் விரும்பவில்லை.செம்பு கலந்த அரசியலுக்கும் அவர்கள் தயாரில்லை.

இந்தத் தூய்மைவாதம்-அப்படித்தான் அதை கூறவேண்டும்- காரணமாகத்தான் ஒப்பீட்டளவில் நல்ல கண்ணுகளாக இருப்பவர்கள் தேர்தல்களில் வெல்ல முடியாமல் இருக்கிறார்கள்.கெட்ட கண்ணுக்கள்தான் பெரும்பான்மை தமிழ் மக்களின் கண்களுக்குத் தெரிகிறார்கள்.கெட்ட கண்ணுகள்தான் தமிழ் மக்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிகிறார்கள்.

அல்லது ஓரளவுக்கு தங்களை தேர்தல் அரசியலில் சுதாகரித்துக் கொள்ளத் தயாராக காணப்படும் நல்லகண்ணுகள் மக்கள் பிரதிநிதிகளாக வருகிறார்கள்.

இலங்கைத் தீவில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த மக்கள் எழுச்சிகளை பின்னின்ற இயக்கியது முன்னிலை சோசலிசக் கட்சியும் குறிப்பிட்ட சில மக்கள் அமைப்புகளும் ஆகும். ஆனால் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய குடைச்சின்னத்தின் கீழ் போட்டியிடும் கூட்டமைப்பானது தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.அது அவமானகரமான ஒரு தோல்வி என்பதை விடவும் ஆபத்தான தோல்வி. அந்தக் கூட்டமைப்பு இன்றுவரை தேர்தல் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை.ஆனால் அந்த மக்கள் எழுச்சிகளின் கனிகளை தேர்தல் மேடைகளில் பொருத்தமாக மொழிபெயர்க்கத் தெரிந்த அனுர ஜனாதிபதியாக வந்து விட்டார்;தேசிய மக்கள் சக்தி ஆளுங்கட்சியாக வந்துவிட்டது.

அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போர்க்களத்தில் நின்று அவயவங்களை இழந்த முன்னாள் இயக்கத்தவர்கள் தேர்தல் கேட்டார்கள். அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்த முன்னால் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார், குறைந்தது 15,000 வீடுகளுக்கு நாங்கள் ஏறியிறங்கி இருப்போம் என்று. ஆனால் அந்த வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளோ கிட்டத்தட்ட 2000தான். தங்களுக்காகப் போராடப் போய்,தங்களுக்காக உறுப்புகளை இழந்தவர்களுக்கு தமிழ்மக்கள் கொடுத்த வாக்குகள் அவை.

நல்லகண்ணுகள் தூய நல்லகண்ணுகளாக இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது 100% தூய்மையான ஒரு நடவடிக்கையும் அல்ல. அது ஒரு வகைச் சூழ்ச்சி; ஒரு வகைச் சதி; ஒரு வகை தந்திரம்; ஒரு வகை வியாபாரம்;ஒரு வகை தொழில் தேர்ச்சி. நல்லகண்ணுகள் அதைக் கற்றுத்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான நல்லகண்ணுகள் அதைக் கற்றுக்கொள்ளத் தயாரில்லை.தங்களைத் தூய தங்கங்களாக வைத்துக் கொண்டிருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.

நல்லகண்ணுவின் மறைவு தமிழகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய அதே காலப்பகுதியில் நடிகர் விஜேயினுடைய மனைவி விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்ற செய்தி வெளியே வந்தது. அந்தச் செய்தி நல்ல கண்ணுவின் மறைவுச் செய்தியை விடவும் அதிகம் “வைரல்” ஆகியது.தமிழ்ப் பொதுப் புத்திக்கு விழிப்பூட்டாத நடிகர்களைப் பற்றிய செய்திகள் எளிதாக வைரல் ஆகின்றன.ஆனால் தமிழ்ப் பொதுப்புத்திக்கு விழிப்பூட்ட வேண்டும், தமிழ்ப் பொதுப்புத்தியை கருத்தாக்கம் செய்ய வேண்டும் என்று கனவுகாணும் நல்லகண்ணுகளை தமிழ்ப்பொதுப் புத்தி எப்பொழுது போற்றும்; கொண்டாடும்?

https://athavannews.com/2026/1466813

தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் — கருணாகரன் —

6 days 10 hours ago

தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்

February 24, 2026

தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்

— கருணாகரன் —

தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முடியாதோரின் கண்களுக்கு ரோஹண விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்க போன்ற முகங்களே தென்படும். அந்த முகங்கள் பிரதிபலித்த பழைய – தீவிர இனவாத முகத்தையும் அது மேற்கொண்ட பகிரங்க வெறுப்பு நடவடிக்கைகளுமே நினைவில் எழும். அவ்வாறு தோன்றுவதால்தான் பழைய ஜே.வி.பியை நினைத்துக்கொண்டு தமிழ்த்தரப்புப் பேசுகிறது; எழுதுகிறது; தீர்மானங்களை எடுக்கிறது;  போராட்டங்களை நடத்துவதற்கு முயற்சிக்கிறது. மொத்தத்தில் தன்னுடைய அரசியலை முன்னெடுக்கிறது. இது தவறான ஒரு வழிமுறை – அணுகுமுறை ஆகும். என்பதால் தமிழ்த்தரப்பு மேலும் பின்னடைவையும் தோல்வியையுமே சந்திக்கப்போகிறது என உறுதியாகச் சொல்ல முடிகிறது. 

எதிர்த் தரப்பைப் பற்றிச் சரியான கணிப்பீட்டைச் செய்து கொண்டால்தான் அதை எதிர்கொள்ளக் கூடிய அரசியற் பொறிமுறைகளை(தீர்மானங்கள், போராட்டங்கள், தந்திரோபாயங்கள், தொடர்பாடல்கள் போன்றவை)  முன்னெடுக்க முடியும். இல்லையெனில் தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளுமே தொடரும். தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளும் ஒருபோதும் சரியான விளைவுகளைத் தராது. நற்பயன்கள் எதையும் விளைக்காது. பதிலாக மேலும் பின்னடைவையும் சிதைவையும் தோல்வியையுமே வழங்கும்.

இன்றைய ஜே.வி.பி வேறு. அது நெகிழ்ச்சியும் உருமாற்றத்தையும் கொண்ட அநுரகுமார திசநாயக்கவின் முகத்தை உடையது. உறுதிப்பாடும் நிதானமும் கொண்ட ரில்வின் சில்வாவின் அகத்தைக் கொண்டது. இந்த இரண்டின் கலவையே தேசிய மக்கள் சக்தி. இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முற்படுவோருக்கு இந்தக் கலவையின் நுட்பத்தையும் சிறப்பையும் தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். சுலபமாக ஒன்றைச் சொல்லி இதை விளக்கவும் நிரூபிக்கவும் முடியும். 

உள்நாட்டிலும் சரி, வெளியுலகிலும் சரி, மிகச் செல்வாக்கான – நம்பிக்கைத் தோற்றமுடைய முகம் அநுரகுமார திசநாயக்கவினுடையது. ‘மக்களின் நாயகன்’ என்று சொல்லக் கூடிய இன்றைய தலைவர் அநுரகுமார திசநாயக்க. இதை யாரும் மறுக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை உட்பட எதையும் வெளிப்படையாக உரத்துச் சொல்லாத, இனவாதத்தை வெளிக்காட்டாத செல்வாக்கான இந்த முகத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அநுரகுமார முதலில் ஓரிடத்துக்குச் செல்வார். அடுத்ததாக அவரைத் தொடர்ந்து ஏனைய அரசுப் பிரதிநிதிகள் அந்த இடங்களுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செல்வார். உள்நாட்டிலும் இதுதான் நடக்கிறது. வெளிநாடுகளிலும் இதுவே நிகழ்கிறது.

அநுர முதலில் இந்தியாவுக்குச் சென்றார். இப்பொழுது ரில்வின் சென்று திரும்பியிருக்கிறார். அநுர முதலில் சீனாவுக்குச் சென்றார். ரில்வின் பிறகு சீனாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் ஐரோப்பாவுக்குச் சென்றார். ரில்வின் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் வடக்குக் கிழக்கிற்கு வந்து சென்றார். ரில்வின் அதற்குப் பிறகு வடக்குக் கிழக்குக்குச் சென்று திரும்பினார்.

இந்தப் பயண ஒழுங்கினை யாரும் மீள நினைவு கொண்டு நோக்கலாம். 

அநுரகுமார திசநாயக்க தன்னுடைய செல்வாக்கான அடையாளத்தைக் கொண்டு கடினமான பாதைகளை இலகுவாக்கிக் கொடுக்கிறார். அதைப் பயன்படுத்தி, ஏனையவர்கள் தங்களுடைய அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ஆக ஜே.வி.பியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை நட்சத்திரமும் அரசியல் முதலீடும் அநுரகுமார திசநாயக்கவே. அதை அவரும் மிகச் சரியாகப் பேணிக்கொள்கிறார். மிகச் சாதாரணரைப் போன்ற ஒரு தோற்றத்தில் மிக வலிமையான மனிதராக – தலைவராக அநுர தொழிற்படுகிறார். அநுரகுமார திசநாயக்கவுக்கு துணை செய்வதைப்போல அல்லது தேசிய மக்கள் சக்தியின் பயணத்துக்கு வலுச்சேர்ப்பதைப்போல கூடவே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விஜித ஹேரத்தும் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டைக் கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியாக வலுவான உறவைக் கட்டியெழுப்பியிருக்கிறது. நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

ஒரு வகையான நூதனமான அரசியலைக் கையாண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு முன்செல்கிறது தேசிய மக்கள் சக்தி. இதற்கு இசைவாகத் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஜே. வி. பி.

ஆனால், தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி. பிக்கும் இடையில் பெரியதொரு உட்போர் நடந்து கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுவதுண்டு. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியாமலிருக்கும் ஆற்றாமையின் வெளிப்பாடு. இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியின் இன்றைய போக்கையும் புரிந்து கொள்ளத் தவறுவதன் விளைவு. 

இந்த இரண்டினாலும் தேசிய மக்கள் சக்திக்கோ ஜே.வி.பிக்கோ எந்தப் பாதிப்புமில்லை. 

இங்கே வேடிக்கை என்னவென்றால், தங்களுடைய கட்சிக்குள் அல்லது அரசியற் கூட்டுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை. தேசிய மக்கள் சக்திக்குள்தான் குத்து வெட்டுகளும் இழுபறிகளும் என்பதைப்போல கதை விடுவதுதான். 

எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்முரண்பாடுகளும் கொதி நிலைகளும் இருப்பது வழமை. உள் முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சி நீதிமன்றத்திலேயே போய் நிற்கிறது. ஐ.தே.க உள்முரண்பாட்டினால் நீண்டகாலம் இழுபறிப்பட்டதை யாரும் மறக்க மாட்டார்கள். இனித் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில்தான் ரணில் – சஜித் அணி என்று பிளவு ஏற்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளும் உட்கொதிப்புகளும் உலகறிந்தவை. தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள், முஸ்லிம் காங்கிரசுக்குள் எல்லாம் உள் முரண்பாடுகள் அல்லது கொதிப்பான நிலை இருந்தபடியால்தான் அவற்றிலிருந்து சிலர் வெளியேறும் நிலை உருவானது. விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் நிகழ்ந்த உள்முரண்பாடுகள் பல. உமா மகேஸ்வரன் – பிரபாரன் முரண்பாடு, மாத்தயா – பிரபாகரன் முரண்பாடு, கருணா – பிரபாகரன் முரண்பாடு என பல அடுக்குகள் உண்டு. முரண்பாடும் கொதிப்புகளும் எந்தக் கட்சியிலும் எந்தக் கூட்டிலும் இருக்கும். அதைக் கடந்து, தமது அரசியல் முன்னெடுப்பில் குறித்த தரப்பு எப்படிச் செயற்படுகிறது? எப்படி வெற்றிகளைப் பெறுகிறது? எப்படி முன்செல்கிறது என்பதே அரசியல் பெறுமானமும் அரசியல் வெற்றியுமாகும்.

தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தமக்குள் உள்ள முரண்பாடுகளை எப்படித் தீர்த்துக் கொள்கின்றன என்று வெளியே தெரியவில்லை. அவற்றுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொதிப்புகளின் தன்மையைச் சரியாக உணர முடியவில்லை. நிச்சயமாக புகைச்சல்களும் முரண்களும் இருந்தே தீரும். ஆனால், அரசியல் ரீதியாக இரண்டும் முன்செல்வதை யாரும் மறுக்கவே முடியாது. இதையே நாம் கவனிக்க வேண்டும்.

இதற்கு முதற்காரணம் வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் படித்துக் கொண்ட ஒரு பேரமைப்பாக ஜே.வி.பி இன்றிருப்பதாகும். தன்னுடைய லட்சியவாதத்துக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தூரத்தையும் (இடைவெளியையும்) முரண்பாடுகளையும் இயலாமைகளையும் அது கற்றுள்ளது. அப்படிக் கற்றுக் கொண்டபடியால்தான் அதனால் தன்னை நெகிழ்ந்து கொடுக்க முடிந்திருக்கிறது. அதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. அண்மைய (இந்த வார) உதாரணம், ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணமும் அது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுமாகும். 

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரில்வினிடம் ‘இந்து’ பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, ”ஜே.வி.பி இந்தியாவுக்கு எதிரானது என்று நீண்டகாலமாக நிலவிவரும் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்து விட்டது. காலப்போக்கில் எமது நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்”  என்று சொல்லியிருக்கிறார் ரில்வின். மட்டுமல்ல, கொழும்பு – ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை எழுப்பிய “ஜே.வி.பியின் முதல் தலைவரான ரோஹண விஜேவீர இந்தியாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை நீங்கள் கைவிட்டு விட்டீர்களா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்போது, “இலங்கைக்குப் பாதகமாக அமையக் கூடிய கொள்கைகளைக் கடைப்பிடித்த இந்திய அரசாங்கங்களை எதிர்த்தோமே தவிர, நாம் ஒருபோதுமே இந்தியாவை எதிர்க்கவில்லை“ என்று தெரிவித்திருக்கிறார். 

இது எதைக்காட்டுகிறது? 

முந்திய ஜே.வி.பி யிடமிருந்து இப்படி ஒரு சொல் வருமா? அதைப்போல இன்றைய ஜே.வி.பியிடமிருந்து முன்பைப்போலக் கடுமையான ஒரு வார்த்தை வரவே வராது. இதுதான் படிப்பினை. இதுதான் மாற்றம். இதுதான் விவேகம். இதுதான் வெற்றிக்கான வழிமுறை.

புறச் சூழலின் யதார்த்தத்தை ஜே.வி.பி கற்றுத் தேர்ந்துள்ளது. அதனால்தான் ரில்வின் இந்தியாவைக் குறித்து அவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது. மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவர் பயணம் செய்தது கூட யதார்த்தத்தை உணர்ந்ததன் விளைவே. இந்தியாவை தூர வைத்துக் கையாள முடியாது என்று அவருக்குத் தெரியும். 

மட்டுமல்ல, ரில்வினின் இந்தியப் பயணம் ஜே.வி.பிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மிகப் பெரிய வெற்றியே. ஒன்று, நல்லுறவை வலுப்படுத்துவதில். இரண்டாவது, பொருளாதார உதவி மற்றும் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதில். மூன்றாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் அழுத்தத்தைக் குறைப்பதில்.

ஏற்கனவே அநுரகுமார திசநாயக்க, ஹரிணி அமரசூரிய போன்றவர்கள் சென்று நிலைமையைச் சுமுகமாக்கியிருந்தனர். இப்பொழுது ரில்வின் இந்தியாவுக்குப் போய் வந்திருக்கிறார். இப்படிப் பல உயர்மட்டத் தலைவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை இந்தியாவும் வரவேற்கிறது. இதில் இரண்டு தரப்புக்கும் வெற்றியே உண்டு. இந்திய எதிர்ப்பைத் தன்னுடைய வரலாறாகக் கொண்ட ஒரு இயக்கத்தை – அதனுடைய ஆட்சியைத் தன் வசப்படுத்தியுள்ளது இந்தியா. அதைப்போல, தான் முந்திய நிலைப்பாட்டைப்போல இந்திய எதிர்ப்பில் தான் இல்லை என்று காட்டுவதன் மூலம் இந்தியாவின் சந்தேகத்தையும் பகைமையையும் இல்லாமற் செய்துள்ளது ஜே.வி.பி. கூடவே தனக்கு ஏற்படவுள்ள நெருக்கடிகளையும் அழுத்தத்தையும் குறைத்துள்ளது அல்லது இல்லாமற் செய்துள்ளது. 

ஆக, இந்தியா, மேற்குலகம், சீனா, யப்பான், ஐ.எம்.எவ் என அனைத்துத் தரப்புகளையும் கையாளும் நுட்பத்தை தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் கற்றுக் கொண்டுள்ளன.  ‘L போர்ட் அரசாங்கம் ஓராண்டைத் தாக்குப் பிடிப்பதே கஸ்ரம்‘ என்று கேலி செய்த ரணில் விக்கிரமசிங்கவைக் காணவேயில்லை. 

இப்படியெல்லாம் சொல்லும்போது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் விழுந்தடித்துக் கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டியதில்லை. அப்படி அவர்களால் செய்யவும் முடியாது. அதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பவர்கள், இந்தக் கட்டுரை தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறது என்று கொதிக்கவும் தேவையில்லை. அப்படியான எந்த ஆபத்தையும் இந்தக் கட்டுரை உருவாக்கவில்லை. 

ஏனெனில் நாம் மேலும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய சங்கதிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்டவையெல்லாம் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி ஆகியவற்றின் புதிய தோற்றமும் புதிய அணுகுமுறைகளும் என்பது உண்மையே. அதே அளவுக்கு இவற்றின் இன்னொரு பக்கமும் உண்டு.  

முக்கியமாக வெளிநாட்டில்  தம்முடைய உறவை நல்லபடி பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் உள்நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயங்களில் சரியாகச் செயற்படவே இல்லை. அதனால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் ஒன்று உருவாகியுள்ளது என்பதை வைத்துக் கொண்டு, குறித்த சமூகங்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கவும் முடியாது. அதை வேறு விதமாக – இனவாத அடிப்படையில் – கையாளவும் கூடாது. ஆனால், அப்படித்தான் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தவறாகச் செயற்படுகின்றன. 

இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசாங்கம் வாயே திறக்கவில்லை. குறைந்த பட்சம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பற்றி ஜனாதிபதியோ பிரதமரோ எத்தகைய உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இனப்பிரச்சினை தீர்வு உள்ளடங்கலாக, பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு ஏதுவான அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும். அது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையையும் காணவில்லை. ஏன், பொருளாதார மறுசீரமைப்போ, புதிய பொருளாதாரக் கொள்கையோ, மாற்றுப் பொருளாதார விருத்தித் திட்டங்களோ உருவாக்கப்படவும் இல்லை.

ஆக மொத்தத்தில் முந்திய அரசாங்கங்களைப்போல சிங்களப் பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கம் (ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும்) அக்கறையாக உள்ளது. ஆனாலும் அப்படிக் காட்டிக் கொள்ளாமல் முற்போக்கு முலாம் பூசிச் சிரிக்கிறது. இது கபடத்தனமாகும். இந்தக் கபடத்தனத்தோடு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தலாம். ஆனால், நாட்டை அமைதியாக்கவோ முன்னேற்றவோ முடியாது. 

இப்பொழுது எல்லாமே சரியாக நடப்பதாக – முன்னோக்கிச் செல்வதாக – ஒரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது. இதுதான் ஜே.வி.பி  – தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின்  வெற்றியாகும். அடிப்படையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று நம்ப வைக்கப்படுகிறது. System Change என்பதற்கே மக்கள் தேர்தல் ஆணையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் அநுரகுமார அணி எந்த வகையில் System Change ஐச் செய்துள்ளது? அல்லது அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது? இதை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

இப்பொழுது நடக்கும் இந்த அரசியல் வித்தைக்கு எவ்வளவு காலம் ஆயுள் என்று உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தந்திரங்களுக்கும் சூதான அரசியலுக்கும் மயானம் வெகு தொலைவில் இல்லை. 

இப்பொழுது நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதை மீள நினைவுபடுத்திக் கொள்ளலாம். “தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை. 

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகவும் ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தியுள்ளது. ‘ரில்வின் இந்தியாவிடம் சரணடைந்து விட்டார்’ என்றுகூடச் சிலர் கடுந்தொனியில் பேசலாம். கைகொட்டிச் சிரிக்கலாம்.

அரசியலில் என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அதிகாரத்துக்கு வேண்டியவை எவையோ அவற்றைச் செய்ய வேண்டும் என்ற யதார்த்தமே இங்கே முக்கியமானது. அதையே ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும் செய்கின்றன. 

இனப்பிரச்சினைத்  தீர்வுக்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் இந்தியாவின் ஆதரவையும் உதவியையும் பெற வேண்டிய தமிழ்த் தரப்பு இந்தியாவைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகிறது. இலங்கை அரசுடன் நெருங்கவும் முடியாமல் திணறுகிறது. போருக்குப் பிறகான அரசியலை எப்படி முன்னெடுப்பது? இதுவரையான அரசியற் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன? பெற்றுக் கொண்டது என்ன? இலங்கையில் மெய்யாகவே சாத்தியப்படக்கூடிய அரசியற் தீர்வு என்ன? அதை எப்படிப் பெற்றுக் கொள்ளது? சர்வதேச ஆதரவை எப்படிப் பெறுவது? அதனுடைய சாத்தியப்பாடுகளும் வரையறைகளும் என்ன? என எதைப்பற்றியும் அது படித்தறியவும் இல்லை. பட்டறியவும் இல்லை. 

இப்பொழுதும் அந்தப் பழைய – நைந்துபோன – சில பல சொற்களை வைத்துக் கொண்டு வார்த்தைகளால் அரசுக்கு எதிராகப் பீரங்கிகளை அடிக்கின்றன. தினமும் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், ஊடக மாநாடுகளில் எல்லாம் குற்றச்சாட்டுப் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதாவது தாம் எந்த நிலையிலும் நெகிழவோ மாறவோ மாட்டோம் என்ற விதமாக தோற்றம் காட்டுகின்றனர் தமிழ் அரசியற் தரப்பினர். இது சுத்தமான அரசியற் கோமாளித்தனமாகும். 

‘நெகிழவோ மாறவோ மாட்டோம்‘ என்ற பிடிவாதத்தினால்தான் விடுதலைப்புலிகள் தம்மையே பலியிட நேர்ந்தது. அதற்கான விலையை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் காலத்தை நீடிப்பதும் குறைத்துக் கொள்வதும் தற்பொழுது அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது.

ஆனால், அந்தத் தலைமைகளோ வரலாற்றிலிருந்தும் எதையும் படிக்கத் தயாரில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முயல்வதில்லை. குறைந்த பட்சம் தம்மை, தம்முடைய கட்சியை அல்லது இயக்கத்தை ஒரு தடவையேனும் மறுபார்வைக்குட்படுத்திச் சீர்ப்படுத்த முயற்சிப்பதில்லை. தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்கான ஒரு முகத்தைக்கூடக் காணவில்லை. இருக்கின்ற முகங்களை மாறி மாறி ஒவ்வொரு தரப்பும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளன. தலைமைக்குரிய ஒரு முகத்தையாவது அடையாளப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. இந்தப் பிழையான குணத்தினால்– இயல்பினால் – மூடத்தனத்தினால் – இந்தியாவையும் எதிர்த்தரப்பாகிய சிங்களர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைக்கின்றன. 

இந்த (இன்றைய) உலகத்தில் ஒப்பாரிக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அது புலம்பலுக்கு ஒப்பானது. புலம்பல்களை யாரும் செவி கொள்வதில்லை. 

உங்களுடைய விருப்பங்களும் தேவைகளும் நியாயங்களும் நிலைப்பாடும் எவ்வளவோ பெறுமதிக்குரியனவாக இருக்கலாம். அவை எல்லாவற்றையும் பெறுவதற்கான யதார்த்தம் எப்படி உள்ளது என்பதே முக்கியமானது. ஜே.வி.பி பல பத்து ஆண்டுகளாக  கடைப்பிடித்த நிலைப்பாட்டையெல்லாம் மூடையாகக் கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, தன்னை நெகிழ்த்தி, தேசிய மக்கள் சக்தியாகி, இன்று உலகத்தோடு ஒத்து ஓடுகிறது. 

தமிழர்களோ???

https://arangamnews.com/?p=12696

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

6 days 12 hours ago

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக விதிகளின் கீழ்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கிடைத்த தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக, இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

ஏப்ரல் 21, 2019 அன்று , சஹாரான் ஹாஷிம் தலைமையிலான மிருகத்தனமான குழு நாடு முழுவதும் 8 இடங்களில் 10 தாக்குதல்களை நடத்தி 273 பேரைக் கொன்றது.

பின்னர், தொடர்புடைய தொடர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டன, மேலும் நாடாளுமன்ற சிறப்புக் குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணையம் மூலமாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

நேரடி தொடர்பு

அந்த விசாரணைகள் அனைத்திலும் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்த நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு தற்போது தினசரி விசாரிக்கப்பட்டு வருகிறது.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

இந்தச் சூழலில், தாக்குதலுக்குப் பின்னால் ஒரு அரசியல் கை இருப்பதாக சில தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டினர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், பிரித்தானியாவின் சேனல் ஃபோர் ஒளிபரப்பிய SRI LANKA'S EASTER BOMBINGS; DISPATCHES என்ற ஆவணப்பட நிகழ்ச்சியின் மூலம், முன்னாள் இராணுவ புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஒரு கூட்டம், ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக நாட்டில் பாதுகாப்பின்மை சூழ்நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது ஒரு காலத்தில் பிள்ளையானின் ஊடக செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி, இப்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் அசாத் மௌலானாவின் அறிக்கையுடன் இணைந்து கூறப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய இரகசிய விசாரணை தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் கூடுதல் தகவல்களை வழங்கியிருந்தது.

இந்த நிலையிலேயே, புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, இன்று காலை பேலியகொட பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று முன்னெடுக்கப்பட்ட சுரேஸ் சாலேயின் கைதின் பின்னர் இந்த வாதங்கள் எழுந்துள்ளன.

சுரேஸ் சாலே

வெளிநாடுகளில் இருந்து வெளியான அறிக்கைகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த கருத்துகள் ஆகியவை இந்த விவகாரத்தை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன.

சுரேஸ் சாலே மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது கைது செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

மேலும் இந்த கைது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலேசகரான ரொஹான் குணவர்த்தன பக்கமும் திரும்பியுள்ளது.

ரொஹான் குணவர்த்தன 03.05.2021 அன்று தேசிய பாதுகாப்பு நிறுவன இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஒருவராவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிகம் பேசப்பட்டவர்களுல் ரொஹான் குணவர்த்தனவும் ஒருவராவார்.

ரொஹான் குணவர்த்தன ஒரு பயங்கரவாத ஆய்வாளர் மற்றும் பாதுகாப்பு நிபுணர். அவர் குறிப்பாக 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

ரொஹான் குணவர்த்தன இந்த தாக்குதல் சர்வதேச தீவிரவாத வலையமைப்புகளுடன் தொடர்புடையது என்று அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் குழு மட்டும் அல்லாது, வெளிநாட்டு ஆதரவு மற்றும் பயிற்சி இருந்திருக்கலாம் என்றார். பாதுகாப்பு அமைப்புகளின் தகவல் பகிர்வு தோல்வி தாக்குதலைத் தடுக்க முடியாமல் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில் எதிர்காலத்தில் அவரிடமும் விசாரணை செய்யப்படலாம் என எதிர்வுகூறல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் முக்கிய கைதுகள் தலைப்பு செய்திகளாக வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

ரொஹான் குணவர்த்தன

இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சாலேயும் பின்னாளில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ரொஹான் குணவர்த்தனவும் பிள்ளையானை கை காட்டுவார்களா என்பதே.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

இந்நிலையில் சுரேஸ் சாலே தாக்குதல் நடைபெற்ற நாளில் நாட்டில் இல்லை என வாதிட்டு வந்தாலும், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சில சாட்சியங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு முரண்பட்ட தகவல்களை முன்வைக்கின்றன.

அவ்வாறென்றால் இந்த விசாரணை எங்கிருந்து ஆரம்பமாகபோகின்றன? 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தாக்குதலுக்கு பின்னராக சர்வதேச ரீதியில் திரும்பி பார்க்க வைத்த விடயம் chanal 4 ஆவணப்படம்.

அதில் சுரேஸ் சாலே முதல் பல்வேறு தரப்பினர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களையும் பின்னணியையும் வெளியிட்டவர் பிள்ளையானின் பிரத்தியேக செயலாளராக கருதப்படும் அசாத் மௌலான.

ஆக இந்த விசாரணைகள் அசாத் வெளியிட்ட கருத்துக்களை வைத்தே நகரப்போகிறது.

அசாத் மௌலானா சுவிட்சர்லாந்திலிருந்து வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை இந்த விவகாரத்தின் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

2023 ஒகஸ்ட் 12 அன்று வெளியிடப்படவிருந்த தகவல்கள் பின்னர் வெளியானது.

அவரது சாட்சியங்களின் அடிப்படையில் ஐரோப்பிய புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரை 24 சந்தேகநபர்கள் விசாரணை வளையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிரதான காரணம்

இங்கு ரொஹான் குணவர்த்தன தனது ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளில், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிரதான காரணம் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவும், இலங்கையில் செயல்பட்டதாகக் கூறப்படும் Islamic State (ISIS) அமைப்பின் உள்ளூர் கிளையும் என வாதிட்டுள்ளார்.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

அவரது கருத்துப்படி, மூளையாக யாரும் செயற்படவில்லை. அவ்வாறு வேறு யாரும் அல்ல. சஹ்ரான் குழுவே இதற்குப் பின்னணி என்றார்.

ஆனால் இந்தக் கருத்துக்கள், முன்னாள் உயர் காவல்துறை அதிகாரிகள் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த உச்ச நீதிமன்றப் பிரமாணப் பத்திரங்களுடன் முரண்படுவதாக கூறப்பட்டது.

மேலும், ரொஹான் வெளியிட்ட அறிக்கையில், “அபுவிந்த்” என்ற நபர் தென்னிந்திய இரகசியப் புலனாய்வு அமைப்பால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என கூறப்பட்டுள்ளது. இந்த கூற்று கூடுதல் சர்ச்சையை உருவாக்கிய ஒன்று.

கோட்டாபய காலத்தில் இருந்து நிலுவையில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு அநுர ஆட்சியில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பின்னணியிலும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையிலும், சந்தேகநபர்களுக்கு சார்பான பல சட்டத்தரணிகள் விலகியுள்ளதாக சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக பிள்ளையான் மற்றும் ISIS தொடர்பான 2018 ஆம் ஆண்டுக் குற்றச்சாட்டு சந்திப்பு குறித்து வெளிவந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாதவையாக உள்ளன.

ஆனால் ரொஹான் குணவர்த்தன பதவியில் இருந்த காலத்தில், அவர் மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானைச் சந்தித்திருந்தார்.

இந்த விவகாரம் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் உட்புற தொடர்புகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

இவ்வாறான பின்னணியில் இன்று இடம்பெற்ற காவல்துறை ஊடக சந்திப்பில் முக்கிய சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

சாரா எங்கே

அதில் குறிப்பாக சுரேஸ் சாலே பிள்ளையானுக்கு அப்பாற்பட்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

முன்பிருந்தே சாராவின் டி.என்.ஏ பரிசோதனை தொடர்பில் கேள்விகள் காணப்படுகின்றன. இவர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட்டவர். இந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்ததாக முந்தைய பரிசோதனை அறிக்கைகள் விவரித்தன.

எனினும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் “சாரா” என அடையாளம் காணப்பட்ட நபர் தொடர்பில் மூன்றாவது டி.என்.ஏ பரிசோதனை குறித்த விவாதம் எழுந்து.

சில தரப்புகள் அவர் உயிருடன் இருக்கலாம் எனக் கூறிவந்தனர். குறிப்பாக அவர் இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையிலேயே அமைச்சர் ஆனந்த விஜேபால அவர் உயிருடன் இருக்கின்றார். ஆனால் இந்தியாவில் இல்லை என திடம்பட கூறியிருந்தார்.

இதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கேள்விகளுக்கு விடை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மை இன்னும் முழுமையாக வெளிச்சமிடப்படாத பின்னணியில் சுரேஸ் சாலே கைதானது பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இதன்மூலம் சாரா தொடர்பில் ஏதேனும் தகவல் வெளிவந்தால் அது திரைமறையில் உள்ள ஏதேனும் ரகசியங்களை அம்பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக இந்த தாக்குதலில் மூளையாக செயற்பட்டவர் யார்?

இதில் சர்வதேச தொடர்புகள் இருந்ததா?

மேலும் அரசியல் விசுவாசிகள் பாதுகாக்கப்பட்டார்களா?

அல்லது இது முழுமையாக சஹரான் தலைமையிலான தீவிரவாதத் திட்டமா? என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமாகிறது.  

https://ibctamil.com/article/new-suspect-in-easter-sunday-attack-1772011689

PSTB சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா?

1 week 1 day ago

PSTB: சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா?

Veeragathy Thanabalasingham

on February 23, 2026

WhatsApp-Image-2026-01-30-at-19.53.42-1-

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது.

அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவும் (Counter Terrorism Act – CTA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2023ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti – Terrorism Act -ATA) முன்வைக்கப்பட்டன.

முன்னைய இரு வரைவுகளையும் போன்றே தற்போதைய அரசாங்கத்தின்  வரைவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாக அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் அமைப்புக்கள், சட்டத்துறை சாரந்த அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இடம்பெற்று வந்திருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை மீறல்களும் படுமோசமான துஷ்பிரயோகங்களும் இனிமேலும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த வரைவுகள் கொண்டிருக்கவில்லை என்பதே முன்வைக்கப்படுகின்ற முக்கியமான குற்றச்சாட்டாகும்.

நீதியமைச்சின் இணையத்தளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட புதிய வரைவும் ஜனாதிபதியினதும் பாதுகாப்புத்துறை அமைப்புக்களினதும் அதிகாரங்களை பெரியளவில் விரிவுபடுத்தும் ஏற்பாடுகளைப் கொண்டிருப்பது மாத்திரமல்ல, மக்களின் ஜனநாயக மற்றும் குடியியல் சுதந்திரங்களை பாரதூரமான அளவுக்கு கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தையும் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

புதிய வரைவு தொடர்பில் தற்போது மூண்டிருக்கும் பொது விவாதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களையும் மாற்று யோசனைகளையும் அரசாங்கம் எந்தளவுக்கு கவனத்தில் எடுத்து போதுமானளவு  மாற்றங்களைச் செய்வதில் நாட்டம் காட்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முன்னைய இரு முயற்சிகளுக்கும் நேர்ந்த அதே கதி தற்போதைய முயற்சிக்கும் நேராது என்று எவராலும் உத்தரவாதம் கூறமுடியாது.

பயங்கரவாதம் என்பதற்கு சட்ட வரைவில் கொடுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் ஜனநாயக ரீதியான எதிர்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படக்கூடியதாக விசாலமானதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. பயங்கரவாதக் குற்றங்கள் என்று வரைவில் வகைப்படுத்தப்பட்டிருப்பவை சாதாரண குடிமக்களைக் கூட 20 வருடங்கள் வரை சிறைவைக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆபத்தான சட்டங்களில் ஒன்று என்று இதை வர்ணித்திருக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த வரைவு தற்போதைய வடிவில் நிறைவேற்றப்படுமானால் ஜனநாயக சுதந்திரங்களுக்கு சாவுமணியாக அமையும் என்பதுடன் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

வீடுகளுக்குள் பிரவேசிப்பது, அந்தரங்கமான ஆவணங்களைக் கைப்பற்றுவது மற்றும் ஆட்களை சோதனை செய்வது உட்பட பரந்தளவிலான அதிகாரங்களை ஆயுதப் படைகள்,பொலிஸ் மற்றும் கரையோரக் காவல்படைக்கு வழங்கும் ஏற்பாடுகளை உத்தேச சட்டம் கொண்டிருக்கிறது. ஒரு வருடம் வரையான தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரமளிப்பதுடன் வழமையாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டிய சந்தேகநபர்களை பொலிஸ் காவலுக்கு மாற்றுவதற்கும் அனுமதிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன.

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக எந்தவொரு அமைப்பையும் தடை செய்யலாம். தடை உத்தரவை ஜனாதிபதி விலக்கிக்கொள்ளும் வரை அத்தகைய அமைப்புக்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதை, கூட்டங்களை நடத்துவதற்கு அல்லது வங்கிக்கணக்கு ஒன்றை கையாளுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. எந்தவொரு இடத்தையும் ஜனாதிபதி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்து மக்கள் பிரவேசிப்பதை தடுக்க முடியும். அந்தத் தடையை மீறுபவர்கள் மூன்று வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் அல்லது 3 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும்.

முன்னைய இரு அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலங்களில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் தொடர்பில் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட பாரதூரமான குறைபாடுகளையும் நீதித்துறை விதந்துரைத்த திருத்தங்களையும் கருத்தில் எடுக்காமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வரைவை வெளியிட்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்கு உள்ளாக்கித் தாக்கல் செய்யப்பட்ட  முப்பதுக்கும் அதிகமான மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக் குற்றச்செயல்கள் ‘ என்று வர்ணிக்கப்பட்டிருந்தவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு பொருத்தமான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பயங்கரவாதத்துக்கு அந்தச் சட்டமூலம் கொடுத்த வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமைய வேண்டும் என்கிற அதேவேளை, அந்த வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை என்பதே யதார்த்தம்.

ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்று நாம் வழமையாக பேசுவதுண்டு. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே பயங்கரவாதத்துக்கு வியாக்கியானம் செய்கின்றன. இலங்கை அதற்கு விதிவிலக்கு அல்ல.

நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீதான 2001 செப்டெம்பர் 11 விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் பயங்கவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்தபோது அன்றைய கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  கருத்தை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் அவர்கள் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் (Naked Terrorism) நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் (Legitimate Armed struggle) இடையிலான வேறுபாட்டை அழிக்கப் போகிறார்கள் என்று அவர் எச்சரிக்கை செய்தார்.

இது இவ்வாறிருக்க, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவரைவு ஒன்றை வெளியிட்டிருப்பதில் ஒரு முரண்நிலை இருக்கிறது.

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார். புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகிவந்திருக்கும் அந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி மீறிய முதல் தேர்தல் வாக்குறுதி பெரும்பாலும் அதுவாகவே இருக்கலாம்.

இன்னொரு விசித்திரம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள்  கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகும்.

இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12596

மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல்

1 week 1 day ago

மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல்

லக்ஸ்மன்

குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர்
கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக  அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசாங்கம் அமைத்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்களின் காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பாகவே இதுவும் அமைந்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கூறிவடவும் முடியாது. அதே  நேரத்தில் ஒரு இலக்கைக் கொண்டிருக்கின்ற தரப்புக்கு அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் செயற்பாடாகவும் அமையலாம் என்றும் கூறலாம்.

ஜே.வி.பி. தலைமையிலான  தேசிய மக்கள் சக்தியானது 2024ஆம் வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஆட்சியைக்  கைப்பற்றியவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தாம் பெற்றுக் கொண்ட பெரும்பான்மையை கவனதில் கொண்டு உள்ளுராட்சித் தேர்தலை நடத்தினார். ஆனால் அத்தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உயர்ந்து வந்த ஆதரவு சற்று சரிந்திருந்தது.  அந்தச் சரிவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்குக் காரணமாகும்.

அதன் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமலேயே நிழல் மாகாண சபையை தற்போதைய அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பான முன் தயாரிப்பொன்று வெளியில் விடப்பட்டு அபிப்பிராயங்கள் திரட்டப்படுகின்றன. அரசியலமைப்பை புதிதாக உறுவாக்கவிருக்கிறோம் என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி இப்போது
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இதிலிருந்து வெளியில் சொல்லப்படுவதனைத் தவிரவும் வேறு ஒரு செயற்பாடு உள்ளே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.

எதிர்ப்புகள் காணப்பட்டாலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்
சட்டம் தொடர்பான வரைபை வெளியிட்டதற்கு  அரசாங்கத்துக்கு நற்சான்றுகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகள், முக்கியஸ்தர்கள் புதிய அரசியலமைப்பினுடைய விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கையில் ஏன் இவ்வாறானதொன்றை உருவாக்கிக் கொள்ள முனைகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இது ஒருபக்கமிருக்க ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா
இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார்.  பிரபாகரன் சரணடைய முயற்சி
எடுக்கப்பட்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கருத்தொன்றை
கிளப்பிவிட்டிருக்கிறார். அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
புதல்வரும் தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச பதில் கருத்தையும் வெளியிட்டிருக்கிறார். பீல்ட் மார்சல் ஏன் இந்த நேரத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்பது தெரியாவிட்டாலும் இனவாதச் சிந்தனை, தென்பகுதி அரசியலில் ஒரு குழப்பமும் ஏற்பட இவருடைய கருத்து வழிகோலும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த நிலையில்தான் மாகாண சபை தேர்தல் தொடர்பிலான அரசின் நிலைப்பாடும் அதனை இழுத்தடிப்பதற்கு அரசு முயல்வதும் வெளிப்பட்டிருக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள ஒரு கட்சி ஒருவாரத்திலேயே அதற்கான சட்டச்சிக்கலைச் சீர் செய்யமுடியும். ஆனால் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்திருக்கிறது. இது ஒரு ஏமாற்று வேலையே தவிர வேறொன்றுமில்லை.

இந்த குழுவை அமைப்பதற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி
நடைபெற்றிருந்தது. எனினும், நீண்ட தாமதிப்புக்குப் பின்னரே குழு
உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.  முதல் கூட்டம் நடைபெற்ற
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய
நிலையில், உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் கவலைக்குரியது என்று
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதானது சிறிய வட்டத்துக்குள் நடந்து முடிய வேண்டியதற்காக மேலும் பெரிய வட்டம் ஒன்றை உருவாக்கி மேலும் சிக்கலாக்கும் நடைமுறையே.  மாகாண சபை முறைமையைப் பொறுத்தவரையில் முன்பிருந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் தங்களுக்குச் சாதகமான முறைமைகளை உருவாக்கி தமது ஆதிக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்கே முனைந்திருக்கின்றன. அதே அடிப்படைச் சிந்தனையினையே இந்த தேசிய மக்கள்சக்தி அரசாங்கமும் கைக் கொள்கிறது எனலாம்.

தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாக பல தசாப்தங்களாக போராடி வருகின்ற தமிழர்கள் பயன் பெற்றதனைவிடவும் ஏனைய மாகாணங்கள் பெற்றுக் கொண்டதே அதிகமாகும். 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன. 2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது.  

ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள்
நடைபெறவில்லை. தற்போது ஆளுனர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன. அத்துடன் அங்குள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவு ரீதியாக பொறுப்பளிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுனர்களையும் உடனடியாக  நியமித்தார். அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில்  காணப்படவில்லைஎன்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு.

இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்
பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக
13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன்,
மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும்
உருவாக்கப்பட்டது. வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல்  முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு
நாட்டைவிட்டு வெளியேறினார்.

2006இல் ஜே.வி. பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கதல் செய்த வழக்கினால்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள்
நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை  திருத்துவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவானது. பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். பழைய முறையிலானால் உடனடியாக நடத்திவிடலாம். ஆனால்
புதிய முறைறயிலாக இருந்தால் எல்லை நிர்ணயத் தீர்மானத்துக்கு முடிவு
வந்தாகவேண்டும்.  அதற்கு நாடாளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள
குழுவினரே முடிவைச்சொல்லியாக வேண்டும்.

முடிவுக்கு வரமுடியாமல் ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறையில் நடத்துமா, புதிய முறைமையில நடத்துமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்சியிலிருப்பவர்களை எதிர்த்து பழகிப்போன எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து ஆளும் கட்சியாக வந்த மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் காணப்படும் தாமதம் மேலும் அவர்களின் ஆதரவுக்கு சரிவைத் தேடிக் கொடுக்காததாக இருக்கவேண்டும்.

 எது எவ்வாறானாலும், பழைய முறையிலா பழைய முறையலா என  தீர்மானிக்கும் குழு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுச் சரிவையும் கவனத்திலெடுத்து
தீர்மானத்திற்கு வரட்டும். தொடர்ந்தும் மாகாண சபை தேர்தல் தொடர்பில்
உரைநிகழ்த்தும் அரசியல் தரப்பினருடைய தொடர் முயற்சிக்கு வெற்றி
கிட்டட்டும். இந்தியாவின் தொடர் மௌனமுயற்சிக்கும் பலன் கிடைக்கட்டும்
என்று காத்திருப்போம். எதற்கும் மீண்டும் ஒரு காலங்கடத்தல்
நடைபெறாதிருக்கட்டும் என்று நம்பிக்கைகொள்வோம்.

எவ்வாறானாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய சுயநிர்ணயப் போராட்டத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையேனும் முழுமையாக நடைமுறைக்குவரும் காலம் உருவாதற்கான காலம் கனியட்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபைத்-தேர்தல்-மீண்டும்-ஒரு-காலங்கடத்தல்/91-372899

எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன்

1 week 3 days ago

எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன்

634021768_905051679055373_61024808283232

அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார். அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததை கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார். இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதனால் புதிய யாப்புருவாக்க முயற்சி ஒன்றில் இந்த அரசாங்கம் ஈடுபடத் தேவையான பலம் அதற்கு உண்டு என்றும் அவர் நம்புகிறார்.

எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பும்  ஏனைய கட்சிகளும் ஆகும். ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும். எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வரைபு கூட்டமைப்பின் குழந்தையுந்தான். ஜேவிபியின் குழந்தையுந்தான். அதனால் அந்த வரைபை தமிழரசுக் கட்சியும் ஜேவிபியும் அதாவது அரசாங்கமும் இணைந்து முன்னெடுக்கும் ஆபத்துக்கள் இருப்பதாக கஜேந்திரக்குமார் சந்தேகிக்கிறார்.

பல வாரங்களுக்கு முன்பு அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பின் பின் சுமந்திரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் என்ன பதிந்தார் என்பதையும் கஜன் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பதிவில் சுமந்திரன் எகிய ராஜ்ஜிய குறித்து ஆர்வமாக இருப்பது தெரிகிறது.

இத்தகையதோர் பின்னணியில்தான் கஜேந்திரகுமார் எகிய ராஜ்ஜியவுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் எதிரானவைதான் என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. தமிழரசுக் கட்சியை தமிழ்மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் அங்கே உண்டு என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

இந்த முரண்பாடுகள், சந்தேகங்கள் என்பவற்றின் விளைவாகவே கடந்த 19ஆம் திகதி சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தின் அனுசரணையோடு தமிழ்க் கட்சிகளை ஒரே மேசையில் இருத்துவதற்கு எடுக்கப்பட்ட ஆகப்பிந்திய முயற்சி அது. அந்த முயற்சி குழப்பப்பட்டமையானது இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகச்  சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைக் காட்டுகிறதா ?

இந்த இடத்தில் மூன்று முக்கியமான விடையப் பரப்புகளில் தமிழ் மக்களுக்குத் தெளிவு அவசியம்.முதலாவதாக அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா?

இந்த அரசாங்கம் எதிர்பாராமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கம். அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைகூட புரட்சிகரமானது அல்ல. கோத்தாபய பெற்ற அதே பெரும்பான்மை. எனவே இந்த வெற்றியை எப்படித் தக்கவைப்பது என்ற சவால் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அண்மையில் ரில்வின் சில்வா சீனாவுக்குப் போனபோது அங்கே சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவருக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பாக சிங்கள ஊடகங்களில் வெளிவந்தது. குறைந்தது 15 ஆண்டுகள் ஆட்சி செய்தால்தான் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மாற்றங்களைச் செய்யலாம் என்பதே அந்த ஆலோசனையாகும். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அதன் வாக்கு வங்கியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி வளர்த்தெடுப்பது என்றுதான் சிந்திக்கும். அப்படிச் சிந்தித்தால் இனப்பிரச்சினையில் கை வைக்கக்கூடாது. இதோ தீர்க்கப் போகிறோம் என்று ஒரு தோற்றத்தைக்கட்டியெழுப்பலாம். அதன்மூலம் காலத்தைக் கடத்தலாம்.

மேலும்,இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் விளைவு. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை நிமிர்த்த வேண்டிய பொறுப்பு அதற்கு உண்டு. அடுத்த தேர்தல்களில் கிடைக்கப் போகும் வெற்றியை அதுதான் பெருமளவுக்குத் தீர்மானிக்கும். எனவே இந்த அரசாங்கம் இனப்பிரச்சினையில் கையை வைத்து நிலைமைகளைக் குழப்புமா? ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலை நீக்குவதற்கே தயங்கும் அரசாங்கம்,யாப்புருவாக்கத்தில் இறங்குமா?

633759321_3126808887501374_4329678779529

இரண்டாவது விடயம், எகிய ராஜ்ஜிய  பற்றிய வாதப்பிரதிவாதங்கள். சுமந்திரன் கூறுகிறார், அது ஒற்றை ஆட்சியைக் குறிக்காது என்று. மேலும் சுமந்திரன் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு இணைந்து இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். கஜேந்திரகுமார் கூறுகிறார்,எகிய ராஜ்ஜிய என்பது ஒற்றை ஆட்சிதான் என்று.

எகிய ராஜ்ஜிய தொடர்பாக யார் சொல்வது சரி என்பதை, அரசியலை ஓர் அறிவியலாகப் பயில்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். ஆனால் பொதுமக்கள் அதை எப்படி விளங்கிக் கொள்கிறார்கள்? இந்த விடயத்தில் வெளிப்படையான, தெளிவான,சாதாரண மக்கள் விளங்கக்கூடிய விவாதப் பரப்புகள் அவசியம். அவ்வாறான விவாத அரங்குகளை தமிழ்மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் அமைப்புகளோ அல்லது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,அல்லது தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு போன்ற அமைப்புக்களோ திறக்க வேண்டும். அதன்மூலம் எகிய ராஜ்ஜியவைச்  சூழ்ந்திருக்கும் மயக்கங்கள் தெளிவாகப்பட வேண்டும்.

மூன்றாவது,இது மிகவும் முக்கியமானது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்ட தொடர் நடவடிக்கை. இதில் இறுதியிலும் இறுதியானதுதான் யாப்புருவாக்கம். அதுவே முதலாவதும் கடைசியும் ஆகாது. இனப் பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கவும் கூடாது. மாறாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல்முயற்சியாக,மோதலில் ஈடுபட்ட தரப்புக்களுக்கு இடையிலான திறந்த உரையாடல் தேவை. அதன்மூலம் ஒரு சமாதான உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். தேசங்களை அங்கீகரிக்கும் அந்த உடன்படிக்கையில் இருந்துதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு எது என்பதனை அதன் சட்டச் சட்டத்துக்குள் வைத்துச் சிந்திக்கலாம்.

இதுதொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட இனங்களுக்கு இடையே முதலில் ஒரு சமூக உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். உதாரணமாக 1988இல் பிரித்தானியாவுக்கும்  அயர்லாந்துக்கும் இடையில்  எடுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையான பெரிய வெள்ளி உடன்படிக்கை போல ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவையின்  முன்மொழிவின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தேடத் தொடங்க வேண்டும். அதன் இறுதிக் கட்டந்தான் புதிய யாப்பாகும். யாப்பிலிருந்து அதாவது கடைசிக்கட்டத்தில் இருந்து அதைத் தொடங்க முடியாது. தொடங்கவும் கூடாது.

இங்கே விபத்து எங்கே நடந்தது என்றால்,2015 செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்தின் விளைவாகத்தான். பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. எனவே அந்தப் பொறுப்பின் நிமித்தம் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு,அதன் கீழ் ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் உப குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நடைமுறைகளின் விளைவுதான் எகிய ராஜ்ஜிய  என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும்.

2018ல் அந்த இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலச் சூழலில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் கவிழ்த்தார். அதாவது நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் காட்டிக்கொடுத்தார். நிலைமாறுகால நீதி என்பது “ஒரு தோல்வியுற்ற பரிசோதனை” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்துக் கூறினார் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்கான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு சொன்னார். தோல்வியுற்ற ஒரு பரிசோதனை எப்படி வெற்றிகரமான ஒரு தீர்வு முன்மொழிவைப் பெற்றெடுத்தது ?

நிலைமாறுகால நீதியின் தோல்விக்குக் காரணமே நிலை மாற்றம் நிகழாமல் அங்கே நிலைமாறுகால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டமைதான். இலங்கைத் தீவைப் பொருத்தவரையிலும் அது வென்றவர்கள் தோற்றவர்களின் மீது திணித்த ஒரு நீதிதான். தென்னாபிரிக்காவைத் தவிர பெரும்பாலான நிலை மாறு கால நீதிக் களங்களில் நிலைமை அதுதான். நூரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி இலங்கை வரையிலும் நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் பெரும்பாலும் அவ்வாறுதான் காணப்படுகின்றன. வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் நீதி.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கக்கூடாது. மாறாக,அதை இனங்களுக்கு இடையிலான உடன்படிக்கையில் இருந்து தொடங்க வேண்டும். மிகக்குறிப்பாக அதற்கு மூன்றாவது தரப்பின் கண்காணிப்பும் மத்தியஸ்தமும் வேண்டும்.

அவ்வாறு மூன்றாவது தரப்புக்கள் தலையிடுவது என்று சொன்னால் தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ்மக்கள் நொதித்தால்தான் இலங்கைத்தீவின் அரசியல் வலுச்சமநிலை குழம்பும்.இலங்கைத் தீவின் அரசியல் வலுச்சமநிலை குலையும் போதுதான் மூன்றாவது தரப்புகள் அதில் தலையிடும்.இந்திய-இலங்கை உடன்படிக்கை,ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை இரண்டும் அவ்வாறு தமிழ்மக்கள் நொதித்தபடியால் கிடைத்தவைதான்.நிலைமாறு கால நீதிகூட மகிந்தவைத் தோற்கடிப்பதற்கான இந்திய மற்றும் அமெரிக்கத் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மஹிந்தவைத் தோற்கடிப்பதற்கான ஆட்சி மாற்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களையும் பங்காளிகள் ஆக்கிய வெளியரசுகள் இலங்கைத்தீவில் மறைமுகமாக ஐநாவுக்கடாக ஒரு தலையீட்டைச்  செய்தன.

எனவே தமிழ் மக்கள் நொதிக்கவில்லையென்றால் மூன்றாவது தரப்புகள் தலையிடாது.மூன்றாவது தரப்புகளின் கண்காணிப்பு இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு ஊடாக ஒரு தீர்வைப் பெறமுடியாது. அப்படிப் பெற விளைந்தால் அது அனேகமாக,மைத்திரிபால சிறிசேன கூறியதுபோல “சிங்கள மக்களையும் பயமுறுத்தாத ;தமிழ் மக்களையும் பயமுறுத்தாத எதோ ஒரு   “எகிய ராஜ்ய”வாகதான் இருக்கும்.வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது. நாடாளுமன்றத்துக்கூடாக தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைப் பெற முடியாது என்பதுதான் கடந்த 75ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் ஆகும். போராடியதால்தான்,மூன்றாவது தரப்பின் தலையீடு காரணமாகத்தான் 13ஆவது திருத்தமாவது கிடைத்தது.அதையும் சிங்களபௌத்த அரசு கெட்டித்தனமாக ஒற்றையாட்சிக்குள் பெட்டி கட்டிவிட்டது. எனவே தமிழ்மக்கள் நொதிக்க வேண்டும்.போராட வேண்டும். போராடவில்லை என்றால் தீர்வு இல்லை.

https://www.nillanthan.com/niche/time-line/அரசியற்-பத்தி/

வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

1 week 3 days ago

VV.jpg?resize=600%2C375&ssl=1

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

இக்கட்டுரை எழுதப்படுகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது.

அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பட்டமளிப்பு விழாக்களில் வேலை இல்லாத புதிய தொகுதி பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்று அந்த வாதப் பிரதிவாதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. அரச வேலை தேடும் மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் இன்று வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

ஏற்கனவே 4000க்கும் குறையாத பட்டதாரிகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் என்று எழுதுவதற்கு பதிலாக அரச வேலை இல்லாத பட்டதாரிகள் என்று எழுதுவதே பொருத்தம் என்று கூறுவோர் சமூகத்தில் உண்டு.மேற்படி பட்டதாரிகள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்ற பொருளில் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.அரச வேலை அல்லாத தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய அவர்கள் தயாரில்லை என்றும் அரச வேலை அல்லாத ஏனைய வேலைகளை அவர்கள் நிரந்தரமானவைகளாகவோ அல்லது பாதுகாப்பானவைகளாகவோ கருதவில்லை என்றும், அதனால் அவர்கள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

பட்டதாரிகள் ஏன் அரச வேலைக்காக காத்திருக்கிறார்கள்?பின்வரும் காரணங்களை கூறலாம்.

முதலாவது காரணம், ஓய்வூதியம். அதாவது இறக்கும்வரை ஒரு பாதுகாப்பு ஏற்பாடு உண்டு.

இரண்டாவது,அதிகம் கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை.அரச வேலைகளில் குறிப்பிட்ட சில சோதனைகளை எழுதுவதன் மூலமும் மூப்பின் மூலமும் பதவி உயர்வுகளைப் பெறலாம். அங்கே வேலை செய்தால்தான் சம்பளம் என்று இல்லை. எனவே வேலை செய்யாமலும் சம்பளம் வாங்கலாம் என்ற ஒரு நிலை இருப்பதினால் அரசு வேலை கஷ்டப்படத் தேவையில்லாத ஒன்று என்ற கருத்து ஒரு பகுதி பட்டதாரிகள் மத்தியில் உண்டு என்று விமர்சிக்கப்படுகிறது.

மூன்றாவது,அரச உத்தியோகத்துக்கு சமூகத்தில் காணப்படும் மதிப்பு.குறிப்பாக சீதனச் சந்தையில் காணப்படும் மதிப்பு.

மேற்சொன்ன காரணங்களினால்தான் அரச ஊழியத்துக்காக பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள் என்று விளக்கம் கூறப்படுகிறது. ஆனால் அரச ஊழியத்தில் மேற்கூறிய நன்மைகள் மட்டும் இல்லை. தீமைகளும் உண்டு. குறிப்பாக ஓர் இளம் பட்டதாரி தன் பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் போது அனேகமாக திருமண வயதை அடைந்திருப்பார். அவர் திருமணம் செய்யும் நபரும் அரசு ஊழியராக இருந்தால், பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்கும் முதலாவது அரச ஊழியம் கஷ்டப்பிரதேசத்தில்தான் கிடைக்கும். கஷ்டப் பிரதேசத்தில் அவர்கள் குறைந்தது 8 ஆண்டுகள் வேலை செய்யவேண்டி இருக்கும். இந்த எட்டு ஆண்டுகள் என்ற பருவம் பெரும்பாலும் இல்லறத்தின் தொடக்கப் பருவம். திருமணம் செய்த புதிதில் சந்தோசமாக சுற்றித் திரியும் பருவம். இக்காலகட்டத்தில் அரச ஊழியம் கிடைக்குமாக இருந்தால் அதுவும் கஷ்டப் பிரதேசத்தில் கிடைக்குமாக இருந்தால் என்ன நடக்கும்?

வாழ்க்கையில் அதிகம் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஒரு பருவம் பயணங்களில் முடிந்துவிடும். அரச ஊழியர்களுக்கான பேருந்துக்காக அதிகாலையில் எழுவதிலும்,வேலை முடிந்து அந்தி சாய்ந்தபின் வீடு திரும்புவதிலும் அந்தக் காலத்தின் பெரும் பகுதி கழித்து விடும். குழந்தை பெறும் போதும் நிலைமை அப்படித்தான் இருக்கும். வீட்டில் குழந்தையை பராமரிக்க முதியவர்கள் இல்லை என்றால் வாழ்க்கை மேலும் சித்திரவதையாகும்.குழந்தையின் மழலையை அனுபவிப்பதற்கும் நேரம் இருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

எனவே அரச ஊழியத்தில் இருக்கும் பிரதானமான பிரதிகூலம் எதுவென்றால் கஷ்டப் பிரதேசத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான். திருமண வாழ்வில் ஆரம்பப் பருவத்தை,சந்தோஷமாக இருக்கவேண்டிய ஒரு பருவத்தை இப்படி வேலைக்காக மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வதிலேயே தொலைத்தால் பிறகெப்பொழுது வாழ்க்கையை அனுபவிப்பது ?

ஆனால் அரசு ஊழியத்தை நாடும் பெரும்பாலான பட்டதாரிகள் இதை ஒரு விவகாரமாக எடுத்துக் கொள்வதில்லை. கஷ்டப் பிரதேச வேலையை 8 அல்லது 5 ஆண்டுகளுக்குள் கடந்து விட்டால் பின்னர் வாழ்க்கை முழுக்க சந்தோசமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கக் கூடும்.

அதேசமயம் அரச ஊழியம் அல்லாத வேறு வேலைகளுக்குப் போக அல்லது தாமாகவே தொழில் முனைவோராகி, ரிஸ்க் எடுத்து புதிய தொழில்துறைகளை ஆரம்பிக்க எத்தனை பட்டதாரிகள் தயார்?

இந்தக் கேள்வியை அதன் பிரயோக அர்த்தத்தில் மறுவளமாக கேட்டால், அரச ஊழியத்துக்கு வெளியே தொழில் முனைவராக ஏழுவதற்குத் தேவையான துணிச்சலையும் தகைமையும் நமது கல்விமுறை பட்டதாரிகளுக்கு வழங்குகிறதா? என்று கேட்கலாம்.

இல்லை.அதுதான் பிரச்சினையே. வேலையில்லாத பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாய் ஏழுவதற்கும் சொந்தத் தொழிலில் ரிஸ்க் எடுப்பதற்கும் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தொழில் தொடர்பான மனோ நிலை சம்பந்தப்பட்ட ஒரு விடயம் மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் நமது கல்வி முறையின் மீதான ஒரு விமர்சனமாகத்தான் முன்வைக்கப்பட வேண்டும். நமது கல்வி முறை தொழில் முனைவோரை உருவாக்கத் தவறுகிறது என்பதனை பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் சுய ஒழுக்கத்தையும் சமூக விழிப்பையும் புதிய சிந்தனையையும் நமது கல்விமுறை போதிய அளவுக்குக் கட்டியெழுப்பவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு.

நமது யூடியூப்பர்களில் ஒரு பகுதியினர் சமூகத்தில் அரிதாகக் காணப்படும் தொழில் முனைவோரைத் தேடிச் சென்று படம்பிடித்து வெளியே கொண்டு வருகிறார்கள். அதனால் தூண்டப்பட்டு தாமும் அவ்வாறு ரிஸ்க் எடுப்பதற்கு எத்தனை பட்டதாரிகள் தயாராக இருக்கிறார்கள்?

வேலையில்லாத பட்டதாரிகளின் தொகை அதிகரிப்பது என்பது பட்டதாரிகளின் குற்றம் அல்ல.அது முதலாவதாக கல்வி முறையில் உள்ள குறைபாடு.

இரண்டாவதாக,வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள பலவீனம்.

மூன்றாவதாக,தொழில் தெரிவுகள் பற்றிய சமூகத்தின் கூட்டு உளவியலில் உள்ள கோளாறு.

எனவே இதுவிடயத்தில் பட்டதாரிகளைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் பிழையான கல்விமுறையின் பலியாடுகள்தான்.மிகப்பிழையான பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் பொன்னிறமான கனவுகளோடு பல்கலைக்கழகத்துக்கு வருகிறார்கள். ஆனால் வேலைக்காக காத்திருப்பதிலேயே அவர்களுடைய கனவுகள் நிறமிழந்து போகின்றன. வயதுகளும் தொலைந்து போகின்றன.

எனவே இந்த விடயத்தில் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டியது பட்டதாரிகள் மட்டுமல்ல, அரசாங்கமும் கல்விக் கொள்கைகளைத் திட்டமிடும் நிபுணர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.குறிப்பாக ஈழத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மிகப்பலமான நிதி வளம்மிக்க புலம்பெயர்ந்த சமூகம் ஒன்று உண்டு.புலம்பெயர்ந்த சமூக வாழ்க்கையை ஒரு சொர்க்கம் என்று கருதும் பட்டதாரிகளே அதிகம். ஓர் ஆங்கில ஆசிரியர் சொன்னார், இரண்டாவது பட்டப்படிப்புக்காக ஆங்கிலம் பயிலவரும் பெரும்பாலானவர்கள் புலப்பெயர்ச்சியை நோக்கமாகக் கொண்டவர்கள் என்று.ஓர் இளம் தலைமுறையினரின் மனதில் புலப்பெயர்ச்சி ஒரு கனவாகத் தொடர்ந்து காணப்படுகிறது.ஆனால் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் உள்ள தொழில் முனைவோரும் தொழில் அதிபர்களும் தாயகத்தில் முதலீடு செய்யலாம்.புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி ரீதியாக பிரகாசமான ஒரு முன்னுதாரணமாகத் திகழும் இந்த சமூகத்தில்,அதே புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் வெற்றிபெற்ற தொழில் முனைவோர் தாயகத்தில் முதலீடுகளைச்  செய்வதன்மூலம் தமது முன்னுதாரணங்களைப் பின்பற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை,தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

தன் சொந்த பலத்தில்,தன் சொந்தக் காலில், தனது வேரிலேயே நிலைத்து நிற்கத் தேவையான துணிச்சலையும் நம்பிக்கையையும் புதிய தலைமுறைக்கு வழங்குவது தமிழ்த் தேசியவாத நோக்குநிலையில் கட்டாயமானது.அது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதி. தனது வேர்களை அறுத்துக் கொண்டு ஓர் இளைய தலைமுறை புலம்பெயர முயற்சிப்பது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வி. எனவே இந்த விடயத்தில் விசேஷமாக புலம்பெயர்ந்த தமிழ்த் தொழில் முனைவோருக்கு ஒரு பொறுப்பு உண்டு.அது அரசியல் அர்த்தத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும்  ஒரு பொறுப்புத்தான். தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பொறுப்புத்தான்.

https://athavannews.com/2026/1465820

கழண்ட கத்திகள் ? - நிலாந்தன்

1 week 3 days ago

கழண்ட கத்திகள் ? - நிலாந்தன்

638955409_925532417100476_45779162090960

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர்  சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்… ”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார், ”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு. தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு  வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று.

இதை இங்கே ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால், கடந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகத்தான். முதலாவது விடயம்,கடந்த திங்கட்கிழமை நடந்த பிரித்தானிய அரசாங்கத்தின் துணைப் பிரதமருக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு. இரண்டாவது விடயம், சுவிஸ் தூதராகத்தால் கடந்த 19ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட அதே தமிழ்க்  கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பு பற்றிய விடயம்.

பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்தபோது அதில் கஜேந்திரகுமார் தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு கருத்துத் தொடர்பாக ஒரு தகவல் ஊடகம் ஒன்றில் வெளிவந்தது. ஆனால் கஜேந்திரகுமார் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்திருந்தார். இதில் கஜேந்திரகுமார் அவ்வாறு கூறினாரா இல்லையா என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு தொடர்பாக செய்திகளைக் கசியவிடுவது பற்றியது. அதைவிட முக்கியமாக,கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டுக்குள் தூதரகங்களை இழுத்து விடுவது.

இப்படித்தான் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு கடந்த 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்புத் தொடர்பாகவும் தகவல்கள் முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கசிந்தன. அதுதொடர்பாக சுவிட்சர்லாந்து தூதரகம் சந்தோசமாக இல்லை என்றும் தெரிகிறது. இங்கேயும் ராஜதந்திர சமூகத்துடனான இடையூடாட்டங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டிருக்கின்றன. இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்றா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவானாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தூதரங்கள் தொடர்பான செய்திகள் கசிய விடப்படுகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது

இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்க்  கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் ஓர் அரசு போலவும் சிந்திக்கவில்லை; ஒரு தேசமாகவும் சிந்திக்கவில்லை; ஆகக்குறைந்தது ராஜீய உறவுகளில் பேணப்பட வேண்டிய நிதானத்தோடாவது சிந்திக்கவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.

kkumar001-696x520-1-ccccc.jpg

மேலும் ஒரு சம்பவம். இது வடமாகாண சபை இயங்கிக் கொண்டிருந்த பொழுது நடந்தது. அதில் வயதால் மூத்த தலைவர் ஒருவர் கனேடியத் தூதரகத்துடனான சந்திப்பு ஒன்றின் போது  கூறப்பட்ட சில விடயங்களை சந்திப்பு முடிந்த கையோடு ஊடகங்களுக்கு அப்பாவித்தனமாக வெளிப்படையாகக் கூறிவிட்டார். அதுவும் அப்பொழுது தூதரக வட்டாரங்களில் அதிருப்தியோடு பார்க்கப்பட்டது.

தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒருபகுதியினர் ராஜதந்திர சமூகத்தைச் சந்திக்கும்போது ஓர் அரசைப்போல சிந்தித்து, ஓர் அரசைப் போல பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்பதுதான் கடந்த 16 ஆண்டு கால அனுபவம் ஆகும். ஓர் அரசைப்போல சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு தேசமாகக்கூட அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை என்பதைத்தான் அண்மைக்கால நடப்புகள் நமக்குக் காட்டுகின்றன.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசர் தமிழ் மக்களிடமிருந்த ஒரு ராஜ்ஜியத்தை தோற்கடித்தார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ் மக்கள் ஐந்து நூற்றாண்டுகளாக அரசற்ற  தரப்பாகவே இருந்து வருகிறார்கள். இடையில் ஆயுதப் போராட்டம் 1985 வசந்த காலத்தில் தொடங்கி 2009 மே மாதம் வரையிலும் ஒரு கருநிலை அரசைக் கட்டி எழுப்பியது. அந்த கருநிலை அரசின் ஒரே ராஜதந்திரியாக அன்ரன் பாலசிங்கம் உலகம் முழுவதும் பிரகாசித்தார். அவர் துறைசார் ராஜதந்திரி அல்ல. முறைசாரா ராஜதந்திரிதான். ஆனாலும் ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் பாலசிங்கம் உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் ராஜதந்திர முகமாக மதிக்கப்பட்டார். லண்டனில் அவருடைய இறுதி நிகழ்வானது, வெளி நாட்டுப் பிரதிநிதிகள்  அதிகம் கலந்துகொண்ட ஒரு தமிழ் நிகழ்வாகக் காணப்பட்டது.

சுமார் நான்கு நூற்றாண்டுகளில் அதிக காலம் அரசு இல்லாத சமூகமாக இருந்த காரணத்தாலோ என்னவோ, தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அரசைப்போல சிந்திக்கும் மாண்பு அனேகமாக இல்லாமல் போய்விட்டது. ஒரு தேசமாகச் சிந்திக்க முடியாத மக்கள் ஓர் அரசைப்போல சிந்திப்பார்கள், செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது கடினமானதுதான். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் வெளி உலகத்தை அணுகும்போது ஓர் அரசைப் போல சிந்தித்து செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் தூதரகங்கள்  இழுத்துவிடப்படும். நிறுவன மயப்படாத தனியோட்டங்களே அதிகரிக்கும்

இந்த இடத்தில் மேலும் ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளினால் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார்கள். அதன் பின்னணியில் ஒரு புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு ஊடாகத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைத்  தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கு இடையில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் சில கட்சித் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைப்பாட்டோடு காணப்பட்டார்கள். இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை அங்கிருந்த கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொலைபேசியில் தொடர்பு எடுத்திருக்கிறார். தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியோடு நடந்த அந்த உரையாடலை அவர் எல்லாரும் கேட்கக்கூடியதாக கைபேசியின் ஒலிபெருக்கியில் விட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்தத் தகவல் பின்னர் ஊடகங்களுக்கும் கசிய விடப்பட்டது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்துக்கு அப்படி ஒரு அனுபவம் அதற்கு முன் ஏற்பட்டிருக்குமோ தெரியாது.

ஆனால் அப்படிப்பட்ட அனுபவங்களின் பின் ராஜதந்திரிகள் தமிழ்க் கட்சித் தலைவர்களை நம்பிக் கதைப்பார்களா? மூடிய அறைக்குள் நடக்கும் சந்திப்புகளில் கூறப்பட்ட விடயங்களை சரியாகவோ, பிழையாகவோ அல்லது கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்திலோ வெளியே கசியவிடும் அரசியல்வாதிகளை எந்தத் தூதரகமாவது நம்பிக் கதைக்குமா? நமது தமிழ் தலைவர்களில் எத்தனை பேர் அவ்வாறு நம்பி கதைக்கத்தக்க தலைவர்களாகக் காணப்படுகிறார்கள்?

எனது நண்பர் ஒருவர் தென்னராட்சியைச் சேர்ந்தவர். அவர் ”கழண்ட கத்திகள்” என்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவார். அதன் பொருள் கத்தியின் பிடி கழண்டு விட்டது, அல்லது பிடி கத்தியோடு இறுக்கமாக இல்லை என்பதாகும். அவ்வாறு கழண்ட கத்தியால் எதையாவது வெட்டினால்,அது ஒழுங்காக வெட்டாது மட்டுமல்ல,வெட்டுகிறவரின் கையையும் நன்னி விடும் ;காயப்படுத்தி விடும்.

இப்பொழுதுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் அவ்வாறு  கழண்ட கத்திகள்தானா? ராஜதந்திர சமூகம் அவர்களை நம்பி உறவாடி, ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளுமா?இந்தக் கழண்ட கத்திகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் எதைப் பெறப் போகிறார்கள்?

https://www.nillanthan.com/8149/

கொழும்பில் நடந்த பெளத்த மாநாடு.

1 week 3 days ago

--கொழும்பில் நடந்த பெளத்த மாநாடு--

சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய செய்தி!

--- ---

*வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் பெளத்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம். தடை விதிக்க முடியாது.

*பௌத்த சமயம் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு அநுர பொறுப்புக் கூற வேண்டும்...

*பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

---- ----- -----

இலங்கைத்தீவில் பௌத்த சமயத்திற்கும் பௌத்த தேரர்களுக்கும் ஏற்படும் அழுத்தங்கள், புத்த சாசனம் மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தி நடைபெற்ற பௌத்த மகா சங்க மாநாடு, சிங்கள அரசியல் தலைவர்களுக்கு பலவிதமான செய்திகளை வழங்கியுள்ளன.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாநாட்டில், அரசாங்கம் பௌத்த சமயவிதிகளின் பிரகாரம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற போதனைகள் முன்மொழியப்பட்டன.

பேராசிரியர் கோட்டாபிட்டியே ராகுல தேரர், அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பௌத்த சமயத்தை மதிக்கவில்லை எனவும் குறை கூறினார்.

அதேவேளை --

இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள பௌத்த சமய முன்னுரிமையின் போதாமைகளை நிவர்த்தி செய்தல், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பொரளையில் உள்ள இலங்கை பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில், ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த தேரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஆனாலும் --

இந்த மாநாடு அஸ்கிரிய, மல்வத்த மற்றும் அமரபுர பௌத்த பீடங்களின் உத்தியோகபூர்வ பங்கேற்பு இன்றி தனிப்பட்ட தேரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றதாகவே உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.

முத்தெட்டுவே ஆனந்த தேரர் முக்கிய உரையாற்றினார்.

இலங்கைத்தீவைப் பாதுகாப்பது மற்றும் பௌத்த சாசனம், கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசியல் - பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆனந்த தேரர் மாநாட்டில் வலியுறுத்தினார்.

அதேவேளை, பௌத்த மகா சங்க மாநாடு எந்த ஒரு அரசியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, இலங்கையின் கலாசாரம், மொழி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பது பிரதான நோக்கம் என மிகிந்தலை விகாராதிபதி மாநாட்டில் நிகழ்த்திய விளக்கவுரையில் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக --

மிஹிந்து தேரர் கொண்டு வந்த பௌத்த விழுமியங்கள் தற்போது சிதைந்து வருகிறது. அதனைத் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய சிங்களத் தலைவர்களுக்கு சுட்டிக்காட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும் தேரர் விளக்கினார்.

பௌத்த மதத்தையோ அல்லது பௌத்த கலாசாரத்தையோ அழித்துவிட்டு எவராலும் இந்த நாட்டில் ஆட்சி செய்ய முடியாது என மிகிந்தலை விகாராதிபதி இடித்துரைத்தார்.

அத்துடன்---

தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும், பௌத்த உரிமைகள் பறிபோவது குறித்தும் பௌத்த தேரர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துவதாகவும், கடந்த காலங்களில் சீகிரியா போன்ற இடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது, மகா சங்கத்தினர் தலையிட்டுப் பாதுகாத்ததாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு எதிராகவும், புத்தர் சிலைகளை அவமதிக்கும் வகையிலும் வெளியாகும் பதிவுகள் குறித்து தமது கடும் அதிருப்தியை வெளியிடுவதாகவும், இத்தகைய செயல்களைப் பார்த்துக் கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருக்க முடியாது என்றும் உரத்துக் கூறிய தேரர், ஜனாதிபதி அநுரவும் அவரது அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது பற்றிய அறிக்கைப் பிரகடனம் ஒன்றும் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

பௌத்த சமயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் --

சட்ட நடவடிக்கைகள் மூலமாகவோ அல்லது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலோ, பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான தேரர்களின் பயணத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்கள் பற்றி எடுத்துக் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மாநாட்டில் பகிரங்கமாகக் கூறினார்.

அதாவது --

இந்த பௌத்த மாநாட்டை நிறுத்துங்கள் என்ற தொனியில் அநுர பேசியதாகவும், பௌத்த சமய முன்னுரிமைக்கு இடமளிப்பதாக அநுர உறுதியளித்தார் என்றும் தெரிவித்த ஆனந்த தேரர், எக் காரணம் கொண்டும் இந்த மாநாட்டை நிறுத்தப் போவதில்லை என தான் பதிலுக்குக் கூறியதாகவும் விபரித்தார்.

'தன்னையும் திட்டுகிறார்கள்' என்று அநுர தொலைபேசியில் கூறியதாகவும், “உங்களைத் திட்டினால் எனக்கு பிரச்சனை இல்லை” என தான் பதிலளித்தாகவும் தனது உரையில் விபரித்த ஆனந்த தேரர், இந்த மாநாட்டை நிறுத்தி தனது அரசாங்கத்துக்கான அழுத்தத்தை குறைப்பதே ஜனாதிபதி அநுரவின் நோக்கமாக இருந்தது என்றும் ஆனந்த தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அநுர அரசாங்கம் பௌத்த சமயத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என பௌத்த தேரர்கள் ஒருமித்த குரலில் கருத்துரைத்தனர்.

அதேவேளை --

திரி-நிகாய மகாநாயக்க தேரர்கள் உட்பட மூன்று பிரிவுகளின் உயர் சங்க சபைகள் இந்த மகா சங்க மாநாட்டில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் இருந்தாலும், ஆசிச் செய்தியை அவர்கள் அனுப்பியதாகவும் தினியாவெல பாலித தேரர் மாநாட்டில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் மூலமாகவும் சில குழுக்களாலும் பௌத்த பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், இந்த மாநாட்டின் தேவை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய தேரர், தசராஜ தர்மத்தின்படி இலங்கைத்தீவை ஆளும் எந்தவொரு தலைவரும் மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெறுவார்கள் என்றும் விளக்கமளித்தார்.

பௌத்த மகா சம்மேளனம், கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தாய்நாடு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.

பிரதானமாக நான்கு அம்சங்களை இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளில் இருந்து அறிய முடிகிறது.

ஒன்று - தொல்லியல் ஆராய்ச்சிகள், தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் போது பௌத்த தேரர்களுக்கு முக்கிய இடமளிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது - பௌத்த தேரர்களின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது. ஆனால் அரசாங்க விதிமுறைகள் சட்டங்கள் போன்றவற்றுக்கு பௌத்த தேரர்கள் மதிப்பளித்து செயற்படுவர். அத்துடன் பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்படும்.

மூன்றாவது – அரசியல் தலைவர்கள் பௌத்த தேரர்களின் பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதாவது தசராஜ தர்மத்தின்படி செயற்பட வேண்டும். ஆசியும் பெற வேண்டும்.

நான்காவது - நிதியுதவிகள் என்ற பெயரில் வல்லாதிக்க நாடுகள் இலங்கையின் இறைமையில் தலையிட அனுமதிக்க முடியாது.

இந்த நான்கு அம்சங்களும் பௌத்த தேரர்களின் உரைகளிலும் பிரகடனத்திலும் தென்பட்டதாக மாநாட்டில் பங்கு பற்றிய சில சிங்கள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை ---

இந்த பௌத்த மாநாட்டுக்குத் தேவையான ஒத்துழைப்புகள் அனைத்தையும் அரசாங்கம் செய்து கொடுத்ததாக ஜனாதிபதி அநுரவின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார்.

அதேவேளை மெதகொட அபயதிஸ்ஸ தேரர், அமெரிக்க - இந்திய அரசுகள் தொடர்பாக மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் கடும் விமர்சனங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

குறிப்பாக --

மாகாண சபை தேர்தல் நடைபெற்றால்,தேர்தல் நடைபெற்று முடிந்த அடுத்த நாள் வடக்கு கிழக்கில் அமெரிக்க - இந்திய அரசுகளின் தலையீட்டில் மீண்டும் தமிழ்ப் பிரிவினைக்கு சார்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

அதேவேளை, இந்த மாநாட்டின் எதிரொலியாக அதாவது அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மாற்றீடாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறவுள்ள இலங்கை அமரபுர மகா நிக்காயத்தின் உபசம்பத விநாயக நிகழ்வுக்கு, அனுசரணை வழங்க அநுர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்ற வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அநுரவின் செயலாளர் கலாநிதி சனத்

குமநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை அமரபுர மகா நிகாயத்தின் பிரதான செயலாளர், ராஜகாய பண்டித தர்ஷனபதி பலபிட்டியே சிறிசீவலி தேரர் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றினர்.

எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை களுத்துறை போதி மரத்திற்கு அருகில் அமைந்துள்ள சீமா மலகாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பௌத்த துறவிகள் பங்கேற்கும் வகையில் நிகழ்வு நடைபெற உள்ளது.

ஜனாதிபதி அநுர தலைமை தாங்குவார் என சிறிசீவலி தேரர் வெள்ளிக்கிழமை காலை ஊடகங்களுக்கு அறிவித்தார்.

அரச நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் பொலிஸார் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் நிகழ்வு என சிறிசீவலி தேரர் கூறினார்.

ஆனால் ---

இதனை அரச நிகழ்வாக நடத்துவதால், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அநுர அரசாங்கத்துடன் முரண்படக்கூடும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலங்களிலும் அமரபுர மகா நிக்காயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும் — கருணாகரன் —

1 week 5 days ago

நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும்

February 19, 2026

— கருணாகரன் —

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தேசிய மக்கள் சக்தியும் தீர்வைத் தரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் பதிலையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ சொல்லாமல் தந்திரமாக நாட்களைக் கடத்தும் உபாயத்தைக் கையாள்கிறது NPP அரசாங்கம். 

இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மாகாணசபைகளுக்கான தேர்தல், வடக்குக்கிழக்கில் பௌத்த சிங்கள விரிவாக்கச் செயற்பாடுகள், பொருளாதார மறுசீரமைப்பு – புதிய பொருளாதார முன்னெடுப்பு, மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினைகள் என எதற்கும் பொறுப்பான பதிலை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவோ சொல்வதில்லை. மட்டுமல்ல, ஒவ்வொரு பிரச்சினையையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் தீர்வு காண்பது என்றும் பேசுவதில்லை. அல்லது ஒவ்வொரு விடயத்தையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் முன்னெடுத்துச் செயற்படுத்துவது என்றும் கூறுவதில்லை. 

பதிலாக இவை தொடர்பாக பிரதி அமைச்சர்கள், NPP யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் அங்கங்கே சில வார்த்தைகள் சொல்லப்படும். அதாவது அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளில் அக்கறையோடு செயற்படுகிறது. நிச்சயமாக மாற்றங்களை உருவாக்கும் என்று அவர்கள் அங்கங்கே சொல்லி, எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் அக்கறை அரசாங்கத்துக்குண்டு என்றவொரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்தியின் ஆளும் நிலைப்பாட்டுக்கான உபாயமாகும். 

இந்த மாதிரியானதொரு உபாயத்தையே முன்பு ரணில் விக்கிரமசிங்கவும் கையாண்டு வந்தார். எதையும் உரத்த குரலிலோ, உறுதிபடவோ ரணில் சொல்வதில்லை. ஆனால், தந்திரமாகக் காய்களை நகர்த்துவார். ஐம்பது ஆண்டுக்கும் அதிகமான அரசியல் வரலாற்றைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஐந்து தடவைக்கு மேல் பிரதமராக இருந்திருக்கிறார். ஒரு தடவை ஜனாதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார். அரசியல் வாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தும் இலங்கையின் எந்த நெருக்கடிக்கும் ரணில் விக்கிரமசிங்க தீர்வைக் கண்டதேயில்லை. ஆனால், வெற்றிகரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னுடைய அரசியற் காலத்தைக் கடத்திக் கொண்டார்.  

ஏறக்குறைய அநுரகுமார திசநாயக்கவும் இத்தகையதொரு உபாயத்தை – தந்திரத்தைத்தான் கையாள்கிறார். 

ஆனால், தேசிய மக்கள் சக்தி, இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் – தீர்வை எட்டும் என்று சிலர் அடித்துச் சொல்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு எதைப் பரிசாகக் கொடுப்பது என்று தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியும் அதற்குத் தலைமை தாங்கும் அநுரகுமார திசநாயக்கவும் சர்வரோக நிவாரணிகள். இதொரு முட்டாள்தனமான நம்பிக்கை. அடிப்படைகளற்ற எந்த நம்பிக்கையும் முட்டாள்தனமானதே. 

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்துக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகிறது. போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் என்றவாறாக நடவடிக்கைகள் அமைந்துள்ளனவே தவிர, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியைக் காண்பதற்கான புதிய பொருளாதாரக் கொள்கையோ, திட்டமோ இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தெரியவில்லை. அப்படித்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் காணமுடியவில்லை. குறைந்த பட்சம் தீர்வுக்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் பின்னடிக்கிறது. தேர்தல் நடக்கும் என்று NPP யின் ஒரு தரப்புச் சொல்கிறது. தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று NPP யின் இன்னொரு தரப்பு மறுக்கிறது. இது திட்டமிட்ட ஏய்ப்பு அன்றி, வேறென்ன? 

அரசியலமைப்பு மாற்றம் நடக்கும் என்று ஒரு தரப்புச் சொல்கிறது. அது இப்போதில்லை என்று இன்னொரு தரப்புக்கூறுகிறது. 

இதையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்வது? அல்லது இந்த மாதிரிச் செயற்பாடுகளுக்கு என்ன பெயர்?

ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் போன்றவற்றிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியவில்லை. கல்விக் கொள்கையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதையும் விட அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணியை எதிர்த்து முடக்குவதற்கே NPP க்குள்ளும் வெளியிலும் மும்முரமான முயற்சிகள் நடக்கின்றன. ஊழல்வாதிகளைக் கைது செய்வதிலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. அதாவது வெளியே சொல்லப்பட்ட – மக்களுக்கு உறுதி அளித்த அளவுக்கு முந்திய ஆட்சியாளர்களில் (ஊழல்வாதிகளில்) NPP கைவைக்கவில்லை. இதுவரையில் பிடித்து உள்ளே போடப்பட்டிருப்பவர்கள் ஓரத்தில் இருந்த சிறிய எறும்புகளே. 

என்பதால்தான் NPP யின்மீது கேள்விகளும் சந்தேகமும் வலுக்கிறது. 

இதேவேளை இலங்கையின் இன்றைய அரசியல் யதார்த்தத்தில் NPP க்குப் பதிலாக – மாற்றாக வேறு தெரிவுகள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். NPP யைத் தவிர்த்தால், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கலாமா என்றால், சஜித்தான் கடந்த ஆட்சியில் 1000  விஹாரைகள் திட்டத்தை உருவாக்கிய நாயகனாக இருக்கிறார். இலங்கைக்குத் தேவை தொழிற்சாலைகளே தவிர, விஹாரைகளோ, தேவாலயங்களோ, கோயில்களோ, மசூதிகளோ இல்லை. உலகத்திடம் கையேந்தி, கடன்வாங்கி ஆட்சியை நடத்தும் அரசாங்கத்தின் நிதியில் மத நிறுவனங்களை வளர்ப்பது மூடத்தனத்தை வளர்ப்பதாகவே அமையும். அப்படியான ஒருவரை எப்படி நம்பி ஏற்றுக் கொள்வது? அடுத்தது பொதுஜன பெரமுன. இந்த நாட்டைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கியவர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ராஜபக்ஸவினரை எந்த அடிப்படையில் மறுபடியும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவது? மட்டுமல்ல, அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எதிர்வளமாகச் சிந்திப்பவர்கள். ஆகவே அவர்களும் பொருத்தமான தெரிவல்ல. மிஞ்சுவது, சக்குப் பிடித்துப்போன ரணில் தரப்புத்தான். அவர்கள்தானே எதற்குமே பொருத்தமற்றவர்கள் என்று சனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றால், இனி எந்த அடிப்படையில் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது? 

இதுதான் மிகப் பெரிய துயரமும் அவலமுமாகும். இதுதான் NPP க்கும் வாய்ப்பாக உள்ளது. 

இந்த யதார்த்தப் பின்னணில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எப்படிக் கையாள்வது என்ற கேள்வி எழுகிறது. இதில் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு விதமாகச் சிந்திக்கின்றனர். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமல் விட்டாலும் பரவாயில்லை. புதிய அரசியலமைப்பு வந்தாலென்ன, விட்டாலென்ன? மாகாணசபைத் தேர்தல் நடந்தால் என்ன? நடக்காமல் போனாலென்ன? இனிமேல் ஊழலற்ற, பொருளாதார சுபீட்சத்தை நோக்கிய ஒரு ஆட்சி இருந்தால் போதும் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள். இது பெருந்திரள் சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட அவதானிப்பும் கருத்துமாகும். இதை உள ரீதியாக நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு அரசாங்கத்தின் எளிமையான நடவடிக்கைகளும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் தனிப்பட்ட – பகிரங்க நடமாட்டங்களும் அமைகின்றன. மிக எளிமையாக, தாங்கள் நெருங்கிப் பார்க்கக் கூடிய ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார் என்பது பெரும்பாலான மக்களுடைய எண்ணமாகும். ஆக, அநுரகுமார திசநாயக்க என்ற தங்கக் குதிரை உள்ளவரை தேசிய மக்கள் சக்தியின் கதிரைக்குப் பிரச்சினையில்லை. 

தமிழ்ச் சமூகத்தில் முக்கியமாக இரண்டு விதமான நோக்குநிலையைக் கொண்ட தரப்புகள் உண்டு. ஒன்று, தேசிய மக்கள் சக்தியை நம்பி, அந்த மாயக்குதிரைக்குப் பின்னால் மகிழ்ச்சியோடு செல்லும் – செல்ல விரும்பும் தரப்பு. மற்றது, NPP யை நம்ப முடியாது என்று வெளியே நிற்கும் தமிழ்த்தேசியவாதத் தரப்பு. இதற்குள் சிறிய – குட்டிக்குட்டி – அணிகள் உண்டு. அடிப்படையில் அவையெல்லாம் ஒரு தரப்பே. ஆனால், இரண்டு தரப்புகளும் இன்றைய நிலையில் அரசியல் வலுவற்றவையே. தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் தரப்பு, எந்த வகையிலும் அரசாங்கத்தில் செல்வாக்கைச் செலுத்த முடியாத ஒன்றாகவே உள்ளது. குறைந்த பட்சம், வடக்குக் கிழக்கில் உள்ள எந்தச் சிறிய – தனித்துவமான எத்தகைய வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கக் கூடியதாக இல்லை. இதற்கு இரண்டு எளிமையான உதாரணங்களைச் சொல்ல முடியும். 

1.   மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள். அது தமிழ்பேசும் மக்களுடைய எதிர்பார்ப்பும் அடிப்படைத் தேவையுமாகும் என்பதை NPP ஐ  ஆதரிக்கும் தமிழ் பேசும் ஆதரவாளர்களும் சரி, NPP யில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை, மாநகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்பேசும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என ஒரு பெரிய குழாத்தினர் இருக்கின்றபோதும் பேசுவதோ, அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அப்படி அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, NPP யும் இடமளிப்பதில்லை.

2.   வடக்குக் கிழக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைத் துறைமுகம், ஆனையிறவு உப்பளம், கிழக்கில் பிற தொழிற்சாலைகள் உள்ளிட்ட எதையும் சீராக – முழுமையான அளவில் விரிவாக்கம் செய்து வளர்த்தெடுப்பதற்கு அரசாங்கத்தைக் கோரவோ, பொறுப்பெடுத்துச் செயற்படுத்தவோ முடியாதவர்களாகவே உள்ளனர். 

ஆக இந்தத் தரப்பு நானும் ரவுடிதான் என்று வலுக்கட்டாயமாக பொலிஸ் வண்டியில் அடம்பிடித்து ஏறும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியையே நினைவூட்டுகின்றனர். இவர்களுடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் நமக்குச் சிரிப்பூட்டுகின்றன. ஆனால், நாம் இதையெல்லாம் பார்த்து ரசிக்கும்படியாகவோ சிரிக்கும்படியாகவோதானா வாழ்கிறோம். ஒரு பெரிய போரினால் முற்றாகவே சிதைக்கப்பட்ட சமூகத்தின் மக்களல்லவா!

அப்படியென்றால், இந்தக் குறைபாடுகளை நீக்கி, சிதைக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக – அல்லது அவ்வாறு தம்மை அடையாளப்படுத்த முற்படும் தமிழ்த்தேசியவாத சக்திகள் இந்த இடத்தில் மிக விழிப்பாகவும் உறுதியாகவும் மிக நுட்பமாகவும் மிகத்தீவிரமாகவும் தொழிற்பட வேண்டும். ஆனால், அதை எந்தக் கட்சியும் செய்யவே இல்லை. தமிழ்த்தேசியவாத அரசியலை மென்நிலையிலும் தீவிர நிலையிலும் முன்னெடுக்கும் இரண்டு போக்குகள் உண்டு. ஒரு போக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன் போன்றோர் பிரதிநிதித்துப்படுத்தும் தீவிர நிலைப்போக்கு. மற்றது சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினர். 

இந்த இரண்டு தரப்பும் 2009 க்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகால அரசியலில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இருந்தபோதும் எதையும் செய்யவில்லை. அதிலிருந்து முரண்பட்டுப் பிளவுபட்டுப் பிரிந்து நின்றும் சாதிக்கவில்லை. இப்பொழுது கட்சிகளுக்குள்ளேயே குத்துவெட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரெலோ, தமிழரசுக்கட்சி, முன்னணி போன்றவை பிளவுபட்டுள்ளன. உள்முரண்பாடுகளால் தமிழரசுக்கட்சியும் ரெலோவும் நீதிமன்றம் வரை சென்று விட்டன. சனங்கள் இப்பொழுது இந்தக் கட்சிகளின் உள் வீட்டுப் பிரச்சினையைக் கண்டு கொதிப்போராகவும் ரசிப்போராகவும் மாறியுள்ளனர். ஆனால், எல்லோருக்கு மேலும் துயரச் சுமைகளும் அபாயக் கத்திகளுமே அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.

தெற்கில் பலமான எந்த அரசியற் சக்தியும் இல்லை. ரணில் – சஜித் அணிப்போட்டி முடிவுக்கு வரவில்லை. புதிதாக வேறெந்தக் கூட்டணியோ சக்தியோ உருவெடுக்கவும் இல்லை. 

இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும்? அடுத்தாக என்ன செய்வது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் NPP சத்தமில்லாமல் தன்னைப் பலப்படுத்துவதில் மிக நுட்பமாகச் செயற்படுகிறது. அரசியல் ரீதியாக சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என வல்லாதிக்கச் சக்திகளை அது திறமையாக – தனக்கு வாய்ப்பாகக் கையாள்கிறது. புலம்பெயர் சமூகத்தை அநுரகுமார திசநாயக்க, ஹரிணி, ரில்வின் போன்றோர் தனிப்பட வசப்படுத்தி வைத்துள்ளனர். உள்ளுரில் அபிவிருத்திக் குழுக்கள் என்ற பேரில் கிராமியக் கட்டமைப்புகளை விரிவாக்கி, விரைவுபடுத்தித்தன்னைப் பலப்படுத்துகிறது. வெளியே உள்ள எதிர்த்தரப்புகளின் பலவீனத்தையும் NPP தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது. 

மக்கள்?

ஆம், மக்கள் எப்போதும் போல இருண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். 

https://arangamnews.com/?p=12688

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான  வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன?

2 weeks 1 day ago

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான  வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன?

February 16, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான  வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன? 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு” (protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத்  தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக  முன்னெடுக்கப்படுகின்ற  மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு  குறித்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு  அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது.

அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடுப்புச் சட்ட வரைவும் ( Counter Terrorism Act – CTA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2023 ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti – Terrorism Act -ATA) முன்வைக்கப்பட்டன.

முன்னைய இரு வரைவுகளையும் போன்றே தற்போதைய அரசாங்கத்தின்  வரைவும்  பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாக அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் அமைப்புக்கள், சட்டத்துறை சாரந்த அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இடம்பெற்று வந்திருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை மீறல்களும் படுமோசமான  துஷ்பிரயோகங்களும்  இனிமேலும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த வரைவுகள்  கொண்டிருக்கவில்லை என்பதே முன்வைக்கப்படுகின்ற  முக்கியமான குற்றச்சாட்டாகும். 

நீதியமைச்சின் இணையத் தளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட புதிய வரைவும்  ஜனாதிபதியினதும் பாதுகாப்புத்துறை அமைப்புக்களினதும் அதிகாரங்களை பெரியளவில் விரிவுபடுத்தும்  ஏற்பாடுகளைப்  கொண்டிருப்பது மாத்திரமல்ல, மக்களின் ஜனநாயக மற்றும் குடியியல் சுதந்திரங்களை பாரதூரமான அளவுக்கு கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தையும் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 

புதிய வரைவு தொடர்பில்  தற்போது மூண்டிருக்கும் பொது விவாதத்தில்  முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களையும் மாற்று யோசனைகளையும் அரசாங்கம் எந்தளவுக்கு கவனத்தில் எடுத்து  போதுமானளவு  மாற்றங்களைச் செய்வதில் நாட்டம் காட்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முன்னைய இரு முயற்சிகளுக்கும் நேர்ந்த அதே  கதி தற்போதைய முயற்சிக்கும்  நேராது என்று எவராலும் உத்தரவாதம் கூறமுடியாது. 

பயங்கரவாதம் என்பதற்கு சட்ட வரைவில் கொடுக்கப்பட்டிருக்கும்  வரைவிலக்கணம் ஜனநாயக ரீதியான எதிர்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படக்கூடியதாக விசாலமானதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. பயங்கரவாதக் குற்றங்கள் என்று வரைவில் வகைப்படுத்தப்பட்டிருப்பவை சாதாரண குடிமக்களைக் கூட 20 வருடங்கள் வரை சிறைவைக்கக்கூடிய  ஆபத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கையில் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்ட 

ஆபத்தான சட்டங்களில் ஒன்று என்று இதை வர்ணித்திருக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த வரைவு தற்போதைய வடிவில்  நிறைவேற்றப்படுமானால் ஜனநாயக சுதந்திரங்களுக்கு சாவுமணியாக அமையும் என்பதுடன் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

வீடுகளுக்குள் பிரவேசிப்பது, அந்தரங்கமான ஆவணங்களைக் கைப்பற்றுவது மற்றும் ஆட்களை சோதனை செய்வது உட்பட பரந்தளவிலான அதிகாரங்களை ஆயுதப் படைகள்,பொலிஸ் மற்றும் கரையோரக் காவல்படைக்கு வழங்கும் ஏற்பாடுகளை உத்தேச சட்டம் கொண்டிருக்கிறது. ஒரு வருடம் வரையான தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரமளிப்பதுடன் வழமையாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ்  விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டிய சந்தேகநபர்களை பொலிஸ் காவலுக்கு மாற்றுவதற்கும் அனுமதிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன.

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக எந்தவொரு அமைப்பையும் தடை செய்யலாம்.  தடை உத்தரவை ஜனாதிபதி விலக்கிக்கொள்ளும்  வரை அத்தகைய அமைப்புக்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதை, கூட்டங்களை நடத்துவதற்கு அல்லது வங்கிக்கணக்கு ஒன்றை கையாளுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. எந்தவொரு இடத்தையும் ஜனாதிபதி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்து மக்கள் பிரவேசிப்பதை தடுக்க முடியும். அந்த தடையை மீறுபவர்கள் மூன்று வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் அல்லது 3 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும்.

முன்னைய இரு அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலங்களில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் தொடர்பில் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட பாரதூரமான  குறைபாடுகளையும் நீதித்துறை விதந்துரைத்த திருத்தங்களையும் கருத்தில் எடுக்காமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வரைவை வெளியிட்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்கு உள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட  முப்பதுக்கும் அதிகமான மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக் குற்றச்செயல்கள்’ என்று வர்ணிக்கப்பட்டிருந்தவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு பொருத்தமான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.   பயங்கரவாதத்துக்கு அந்த சட்டமூலம் கொடுத்த  வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமைய வேண்டும் என்கிற அதேவேளை, அந்த வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை என்பதே யதார்த்தம்.

ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்று  நாம் வழமையாக பேசுவதுண்டு. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே  பயங்கரவாதத்துக்கு வியாக்கியானம் செய்கின்றன.  இலங்கை அதற்கு விதிவிலக்கு அல்ல.

நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீதான  2001 செப்டெம்பர் 11 விமானத் தாக்குதல்களைத்  தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் பயங்கவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்தபோது அன்றைய கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  கருத்தை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது.  பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் அவர்கள் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் (naked terrorism) நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் (Legitimate Armed struggle)  இடையிலான வேறுபாட்டை அழிக்கப் போகிறார்கள் என்று அவர் எச்சரிக்கை செய்தார்.

இது இவ்வாறிருக்க, பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவரைவு ஒன்றை வெளியிட்டிருப்பதில் ஒரு முரண்நிலை இருக்கிறது.

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார். புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகிவந்திருக்கும் அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி மீறிய முதல் தேர்தல் வாக்குறுதி பெரும்பாலும் அதுவாகவே இருக்கலாம்.

இன்னொரு விசித்திரம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள்  கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகும்.

இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

https://arangamnews.com/?p=12680

அரசியலையே அவமதிக்கும் நடிகர் விஜயை பொதுமன்றம் கண்டிக்க வேண்டாமா? - ராஜன் குறை

2 weeks 1 day ago

அரசியலையே அவமதிக்கும் நடிகர் விஜயை பொதுமன்றம் கண்டிக்க வேண்டாமா?

16 Feb 2026, 7:00 AM

Actor Vijay is insulting politics

ராஜன் குறை

நடிகர் விஜய் பிற அரசியல் கட்சி தலைவர்கள் போல பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. தன் கருத்துக்களைக் கூறுவதில்லை. அரசியலை மல்டிபிள் சாய்ஸ் குவெஸ்டின் பேப்பர் போல எடுத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி மட்டும் கருத்து தெரிவிக்கிறார். பிற பிரச்சினைகளில் அவர் கருத்துக் கூறவில்லையே என்று விமர்சித்தால், நீங்கள் சொல்வதற்காகவெல்லாம் நான் பேசமுடியாது என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார்.

அதைவிட மிகப்பெரிய சிக்கல் அவரால் மக்களை இயல்பாகச் சென்று சந்திக்க முடிவதில்லை. அவர் ஒரு ஊருக்குச் செல்வதே பெரியதொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறிவிடுகிறது.காரணம் அவரது நட்சத்திர பிம்பம் கலையாததுதான். அவர் அதைக் கலைக்க விரும்புவதில்லை; ஏனெனில் அதுதான் அவரது முதலீடு என நினைக்கிறார். அரசியல் தலைவராக மாறாமல் சினிமா நட்சத்திரமாகவே அரசியல் செய்ய நினைக்கிறார்.

அவர் நினைத்தால் தொடர்ந்து பொதுவெளியில் பயணம் செய்வதன் மூலம் அவரைக் காண்பது அவ்வளவு அரிதானதல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும். அப்படி செய்தால்தான் அவரால் இயல்பாக மக்களிடையே பயணம் செய்ய முடியும். ஆனால் அவருக்கு தன்னைக் காண பெருந்திரள் கூடிக் காத்திருக்கிறது என்ற நட்சத்திர மனமயக்கம் தேவைப்படுகிறது. அதிலிருந்து வெளியே வர அவருக்கு இயலவில்லை.

எப்போதாவது பெரிய மேடைகளில் தோன்றி பல ஆயிரம் மக்களிடம் பத்து நிமிடமோ, பதினைந்து நிமிடமோ பேசுகிறார். ஆவேசமான பஞ்ச் டயலாக்குகளை எழுதி வைத்துப் படிக்கிறார். அதைக் கடந்து அவர் மக்களை நேரடியாக சந்தித்துப் பேசும், உரையாடும் வாய்ப்புகள் எதுவுமே இருப்பதில்லை. அப்படி அவர் அபூர்வமாக பொதுவெளியில் தோன்றும் சமயத்தில் அவரது ரசிகர்கள் அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று கூடுகிறார்கள். கூட்ட நெரிசலிலோ, வெயிலில் வாடியோ உயிரிழக்கிறார்கள்.

Actor Vijay is insulting politics

விஜயின் கட்சி அமைப்பு என்பதும் தெளிவாக இல்லை. நாலைந்து பேர் மட்டுமே அவருடன் தினசரி தொடர்பில் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள்தான் கட்சியில் பிற நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார்கள். அவருக்கு வசனங்களை எழுதிக் கொடுப்பவர், இயக்குபவர் தொழில்முறை அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என்பவர் என்று  கூறப்படுகிறது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் என்பவர் கட்சியின் பொதுச்செயலாளர். இவர்தான் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். விஜயின் வலதுகரம் எனலாம்.

 அதைத்தவிர ஆதவ் அர்ஜுனா என்ற தேர்தல் வியூக வகுப்பாளர் இருக்கிறார். இவரும் பிரபல தொழில்முறை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றியவர்; லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். அரசியல் தொடர்புகள், செல்வாக்கு மிக்கவர். பிறகு வருமான வரித்துறை பணியை விட்டுவிட்டு வந்துள்ள அருண் ராஜ் என்பவரும் உள்வட்டத்தில் இருக்கிறார். புதிதாகச் சேர்ந்துள்ள மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் தினசரி விஜயுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

இப்படி ஒரு கட்சியின் தலைவர் தன் எண்ணங்களை பொதுவெளியில் பகிராமல், மக்களுக்கும், கட்சி அணியினருக்கும், ஊடகங்களுக்கும் எட்டாதவராக  மன்னராட்சிக் காலத்தில் அந்தப்புரத்திலிருந்து திரைமறைவு ஆட்சி செய்த அரசிகளைப் போல செயல்படுவது மக்களாட்சியை ஏளனம் செய்வதாகவே உள்ளது. கட்சி அணியினருடன் அவருக்கு அன்றாடம் நேரடித் தொடர்பு இல்லையென்றால் அவர்களது செயல்பாடுகளை எப்படி வழிநடத்துவார், எப்படி அவர்களிடமிருந்து அவர் தகவல்களைப் பெறுவார் என்று தெரியவில்லை. அதற்குள்ளாகவே கட்சிக்குள் பல கோஷ்டிப் பூசல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் என்று சீரழிவுகள் பெருகியுள்ளன. விஜய்க்கு எந்த அளவு அதெல்லாம் தெரியும் என்பதே மர்மமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்தான் பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லையே.   

இப்படியாக இழிந்து நிற்கும் நடிகர் விஜயின் பக்குவமற்ற, அரசியல் பண்பாடுகளை பாழாக்கும் செயல்பாடுகளை பிற அரசியல் கட்சிகள் கண்டிப்பது தேர்தல் கள முரண் அரசியல் தொடர்பானதாகத்தான் கருதப்படும். மக்களாட்சியின் விழுமியங்களை பாதுகாக்கும் பொறுப்பு குடிமைச் சமூகம் கட்டமைக்கும் பொதுமன்றத்திற்கு உள்ளது. அது உரத்த குரல் எழுப்ப வேண்டும். விஜயை நோக்கி பேசவேண்டும். விமர்சிக்க வேண்டும்.

அரசியல் விமர்சகர்களும், சிந்தனையாளர்களும் ஒருமித்த குரலில் கண்டனங்களை எழுப்ப வேண்டும். இது கட்சி அரசியல் பிரச்சினையல்ல. மக்களாட்சி என்ற அற்புதமான வரலாற்று விளைபொருள் சார்ந்த பிரச்சினை. இப்படியெல்லாம் கூறும்போது சிலர் அப்படியென்ன பெரிய தவறிழைக்கிறார் விஜய் என்று வியப்புக் கூட அடையலாம். அவர் என்ன தவறு செய்கிறார் என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை.

நான் பொதுவாக தி.மு.க-வை ஆதரித்து எழுதுவதால் அந்தக் கோணத்திலிருந்து விஜயை விமர்சிக்கிறேன் என்று சிலர் அவசரப்பட்டு புரிந்துகொள்ளலாம். அது மிகவும் பிழையான புரிதல் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நான் தத்துவார்த்த  மானுடவியல் நோக்கில் அரசியலை ஆராய்வதன் பகுதியாகத்தான் தி.மு.க-வை ஆதரிக்கிறேன். இதை ஆங்கிலத்திலும், தமிழிலும் விரிவாக விளக்கி எழுதியுள்ளேன். இரண்டாவது, எதிர்வரும் தேர்தலில் விஜய் தி.மு.க-விற்கு எதிரான வாக்குகளைத்தான் பிரிப்பார் என்பதால் தி.மு.க ஆதரவாளர்கள் அவரைக்குறித்து கவலைப்படத் தேவையில்லை. எனவே என்னுடைய கண்டனம் மக்களாட்சி விழுமியங்களை காப்பது குறித்தது என்பதை விளக்கவே இந்த கட்டுரை.

ஊடகங்கள்தான் (குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம்) பொதுமன்றத்தை சமூக அளவில் கட்டமைக்கின்றன. ஆனால் ஊடகங்கள் தேர்தல் ஆரூடங்களை சொல்வதுடன் பல சமயங்களில் நின்றுவிடுகின்றன. விஜய்க்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? அவர் எந்தக் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பார்? ஆகிய கேள்விகளுடன் ஊடக அக்கறை நின்றுவிடுகிறது. 

ஊடகங்களை விஜய் முற்றிலும் புறக்கணிக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பையே முற்றாகத் தவிர்க்கிறார். இது மக்களாட்சிக்கு செய்யப்படும் மிகப்பெரிய அவமானம் என்பதைக் கூட மக்களாட்சியின் நான்காவது தூண் எனப்படும் ஊடகங்கள் உரத்துச் சொல்வதில்லை. ஆங்கில ஊடகங்கள் கூட கண்டிப்பதில்லை. வெட்கமில்லாமல் அவருடன் பேசியவரை நேர்காணல் செய்து வெளியிடுகின்றன. ஒரு நேர்காணலை எதிர்கொள்ள முடியாதவரெல்லாம் முதல்வராக அருகதையுள்ளவரா என்று ஆங்கில ஊடகங்கள் கூட கேட்பதில்லை.

அதற்கு மேல் விஜயின் செயல்பாடுகள் சரியானவையா, நாட்டில் அரசியல் கலாசாரத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவையா அல்லது ஒட்டுமொத்தமாக அரசியலை அவமதித்து, சீரழிக்கும் தன்மை கொண்டவையா என்பதை பொதுமன்றம்தான் விவாதிக்க வேண்டும். ஊடகங்களையும் விவாதிக்க நிர்பந்திக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பலரும் மனம் வெதும்பிப் பதிவிடுகிறார்கள். அவர்களை விஜய் ரசிகர்கள் மிக மோசமாக வசை பாடுகிறார்கள். எந்த நாகரீகமும், தர்க்கமும் அவர்கள் எதிர்வினைகளில் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக அவர் செயல்பாடுகளின் பிரச்சினை என்னவென்பதை விவாதிப்போம்.

Actor Vijay is insulting politics

அரசியலில் ஈடுபடுவது என்றால் என்ன?

அரசியலில் ஈடுபடுவது என்றால் மக்கள் பணி செய்வது என்று பொருள். ஏற்கனவே இயங்கி வரும் கட்சியில், இயக்கத்தில் இணைபவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊரில், அல்லது மாவட்டத்தில் மக்களுக்கும் அந்த கட்சிக்கும், மக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக இருப்பார்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள்.

அப்படியில்லாமல் ஒரு புதிய கட்சியை, இயக்கத்தைத் தொடங்குபவர்கள் மக்களை ஒரு சில இலட்சியங்கள், கோரிக்கைகள் அடிப்படையில் அணி திரட்டுவார்கள். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைக்காக உருவான வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார் மருத்துவர் ராமதாஸ். அது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாகத் தேங்கிவிடக்கூடாது என்று தலித் எழில்மலையை ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். ஆனாலும் அவர் நினைத்தபடி அது வெகுஜன கட்சியாகப் பரிணமிக்கவில்லை எனலாம். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நலன்களைப் பேசும் கட்சியாக தொடர்ந்தது.  

ஒரு சில கட்சிகள் விவசாயிகளை அணிதிரட்டும்; தொழிலாளர்களை அணி திரட்டும்; ஒரு பின்தங்கிய பிரதேசத்தை சார்ந்தவர்களை அணிதிரட்டும். வேறு சில அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் அனைத்து மக்கள் தொகுதிகளையும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு எதிராக அணி திரட்டும். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலித் தொகுதிகளை வேர் மட்டத்தில் அணிதிரட்டுவதில் கணிசமான வெற்றி கண்டுள்ளார். அதனை வெகுஜன கட்சியாக விரிவாக்கவும் விரும்புகிறார். இது அனைத்திலுமே முக்கியமான வார்த்தை அணி திரட்டல் என்பதுதான்.

இந்த அணி திரட்டல் என்பது நிலத்தில் பள்ளம் தோண்டி, அஸ்திவாரம் இட்டு, அதன் மேல் செங்கற்களை அடுக்கி கட்டடம் எழுப்புவது போன்றது. அதன் முக்கியமான பகுதியே அந்த வேர்மட்ட அணிதிரட்டல்தான். அண்ணாவும், அவருடைய தளகர்த்தர்களும் தமிழ்நாடு முழுவதும் ஒயாமல் பயணம் செய்து, மரத்தடிகளிலும், பேருந்து நிலையங்களிலும், திண்ணைகளிலும் படுத்து உறங்கி கட்சியின் வேர்மட்ட அணிகளை உருவாக்கினார்கள். அதற்கு முன்னால் சமூகப் பரப்பை சுயமரியாதைக் கலப்பையால் பெரியார் சலியா உழைப்பால் உழுது விதைப்பிற்கு தயார் செய்திருந்தார். திராவிட இயக்கத்தின் வரலாறு உலக மக்களாட்சி வரலாற்றின் மகத்தான அத்தியாயம்.

இவற்றிற்கெல்லாம் மாறாக திரைப்பட நடிகர்கள் தங்களைப் பார்க்கக் கூடும் ரசிகர்கள் கட்சியின் அஸ்திவாரமாக மாறுவார்கள் என்று நினைப்பது, அணிதிரட்டல் என்பதன் பொருளையே அர்த்தமற்றதாக்குகிறது. ரசிகர்களுக்கு என்று என்ன அரசியல் கோரிக்கை இருக்கிறது? அவர்கள் நட்சத்திரக் கவர்ச்சிக்காக வருகிறார்கள். அந்த கவர்ச்சி அவர்களை ஒருங்கிணைப்பதற்கு போதுமான சிமெண்ட் கிடையாது. அவர்கள் உதிரிகளாகவே இருப்பார்கள். அவர்களை அஸ்திவாரமாக்கினால் கட்டிடம் சரிந்துவிடும்.

Actor Vijay is insulting politics

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் முன்னுதாரணங்களா?

இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் எம்.ஜி.ஆர் தலைவராகவில்லையா, என்.டி.ஆர் தலைவராகவில்லையா என்பது போன்ற அரைவேக்காட்டு கேள்விகள்தான். எம்.ஜி.ஆர் தி.மு.க என்ற வலுவான அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட மாளிகையின் நடுவில் சுவரெழுப்பி பாகம் போட்டுக்கொண்டார். அவருடைய நட்சத்திர பிம்பமே தி.மு.க சொல்லாடலால், கதையாடலால் உருவானதுதான். அவர் பாடல்கள், வசனங்கள் எல்லாமே  தி.மு.க அரசியல் அணிதிரட்டலின் அங்கமாகவே புரிந்துகொள்ளப்பட்டன. அவருடன் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சேர்ந்து வெளியேறி அ.இ.அ.தி.மு.க-வில் இணைந்தார்கள்.

என்.டி.ஆர் அதேபோலவே காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியைத்தான் தன் கட்சியாக்கிக் கொண்டார். பாஸ்கர ராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல காங்கிரஸ் மந்திரிகள் அவர் கட்சியின் தூண்களாக விளங்கினார்கள். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்றாக கட்சிகள் எதுவும் இல்லாததால், தெலுகு தேசம் உருவாக இடமிருந்தது. மாநில அரசியல் இரு துருவ அரசியலாக மாறியது. ஆனால் அந்த என்.டி.ஆரால் கூட தன் கட்சியை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலவில்லை.

Rajan-6-1.jpg

விஜய்காந்த்தால் ஓரளவு கட்சிக்காரர்களுடன் பழக முடிந்தது. கட்சி அணிகளை உருவாக்க முடிந்தது. ஆனால் அவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முதல் முறை தேர்தலில் வென்றவுடனேயே அ.இ.அ.தி.மு.க-விற்கு சென்றார்கள். அந்த அளவுதான் விசுவாசம்; காரணம் அணிதிரட்டலுக்கு எந்த வலுவான சமூகவியல் வரலாற்றுப் பின்னணியும் இருக்கவில்லை. அவரை முதல்வர் வேட்பாளராகக் கொண்டு 2016-இல் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப் பட்டபோது அது படு தோல்வியைத் தழுவியது. அவரே அவர் தொகுதியில் வெற்றிபெற இயலவில்லை என்பது முக்கியமான உண்மை. பத்தே ஆண்டுகளில் கட்சி கலகலத்து விட்டது. ஆந்திராவில் என்.டி.ஆரை பின்பற்ற முயன்ற மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரே தேர்தலுக்குப் பிறகு கட்சியைக் கலைத்துவிட்டார்.

இத்தனைக்கும் பிறகு விஜயைப் பார்க்க கூட்டம் வருகிறது என்று கூறுவதும், கருத்துக் கணிப்பில் அவருக்கு வாக்களிக்கப் போவதாகக் கணிசமானவர்கள் கூறுகிறார்கள் என்பதும் அரசியல் அணிதிரட்டல் என்பதன் அடிப்படைகளையே புரிந்துகொள்ளாத ஊடகப் பேச்சாகும். ஊடகங்கள் தங்கள் வணிகத்திற்காக இது போன்ற பரபரப்புகளை உருவாக்குகின்றன. மக்கள் நலக் கூட்டணி பற்றி எத்தனை பரபரப்பு உருவாக்கப்பட்டது என்பதை யாரேனும் அந்த ஆண்டின் ஊடக வெளிப்பாடுகளை வைத்துக்கொண்டு ஆராய வேண்டும். அப்போதுதான் ஊடகம் உருவாக்கும் சோப்புக் குமிழ்கள் எப்படிப்பட்டவை என்பதை உணர முடியும்.

விஜய் அரசியலின் தீமை என்ன?

விஜய் அரசியலின் தீமை என்னவென்றால் அவர் எந்த வகையிலும் அரசியல் தலைவராகத் தகுதியற்றவராக இருப்பதுதான். அவருக்கு அரசியல் பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் ஆற்றலே இருக்கிறதா என்பது ஐயமாக இருக்கிறது. அவர் தி.மு.க-வை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அதை அவரால் பொறுப்பான ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்ற முடியவில்லை. கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் அவர் பேசியது பெரும் அதிர்ச்சியளிக்கும் காட்சியாக இருந்தது. கட்சியின் வெற்றி வாய்ப்பினை விளக்க அவர் சிறுபிள்ளைத்தனமான நாடகத்தை நடித்துக் காட்டுகிறார். அது என்னவென்று பார்ப்போம்.

முதல்வர் ஸ்டாலின் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறாராம். அவர் அருகில் சென்று “அங்கிள், அங்கிள்” என்று கூப்பிடவேண்டுமாம். அவர் தூக்கம் முழுமையாகக் கலையும் முன்னால் நீங்கள் என்ன சின்னத்திற்கு ஓட்டுப்போடுவீர்கள் என்று கேட்க வேண்டுமாம். அவர் “விசில் சின்னம்” என்று கூறிவிடுவாராம். அப்படி அவரே விசில் சின்னத்தைத்தான் நினைத்திருக்கிறார் என்பதால் அனைவருமே விசில் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்களாம். திரைப்படங்களில் சிறுவர்களை, முதிரா மனதினரைக் கவர அவர் செய்யும் கோமாளித்தனம் போலவே இதைப் பேசிக் காட்டுகிறார்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகுதி, எட்டு கோடி பேருக்கு மேல் கொண்ட மக்கள் தொகுதி. இந்திய மாநிலங்களை தனி மக்கள் தொகுதிகளாக கணக்கிட்டால், உலக அளவில், 195 நாடுகளில் 24-ஆவது பெரிய மக்கள் தொகுதியாகும். உலக பொருளாதாரத்திலும் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடுகள் 20 நாடுகள்தான். அதில் ஒன்றாக இடம்பெற முன்னேறுகிறது தமிழ்நாடு. அத்தகைய ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய விரும்புபவர் பேசுகிற பேச்சா இது என்று அயர்ச்சியாக இருக்கிறது.

Actor Vijay is insulting politics

தமிழ்நாட்டு ஊடகங்களை அவர் சந்திக்காவிட்டாலும் என்.டி.டி.வி, இந்தியா டுடே ஆகிய அகில இந்திய ஊடகங்கள் சென்னையில் நடத்திய விவாத அரங்கங்களில் பங்கேற்க விஜய்க்கு என்ன தடை என்று புரியவில்லை. இன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி உட்பட எல்லோரும் கலந்து கொண்டார்கள். ஆனால் விஜய் மட்டும் பனையூருக்கே அவர்களை வரச்சொல்லி விட்டார். அங்கேயும் அவர்கள் காமிராவில் நேர்காணலை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுடன் பேசிவிட்டு அனுப்பிவிட்டார். அவருடன் பேசியவர்களைத்தான் அந்த ஊடகங்கள் நேர்காணல் செய்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டறிந்தன. இது இந்தியக் குடியரசு இதுவரை காணாத அதிசயம் எனலாம்; பேரவலம் எனலாம்.

இத்தனைக்கும் விஜய் காமிரா முன் வெளிச்சத்தில் இயங்கி பழகியவர். அவருக்குக் கூச்சம் இருக்க வாய்ப்பில்லை. பிறகு ஏன் ஆங்கில ஊடகங்களின் மேடையில் தோன்ற மறுக்கிறார் என்று சிந்தித்தால் திடுக்கிடும் எண்ணமொன்று தோன்றுகிறது. அவரால் வசனங்களை பிறர் சொல்லிக்கொடுக்காமல், எப்படி பேச வேண்டுமென்று இயக்காமல் எதையும் பேச முடியாதோ என்ற ஐயம்தான் அது. அதாவது ஒரு நடிகராகத்தான் அவரால் எந்த நேரமும் இருக்க முடியுமோ என்ற அச்சமூட்டும் எண்ணம் பிறக்கிறது.

அப்படியானால் விஜய் கட்சி துவங்க முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவி மோகம் தவிர வேறு காரணம் எதுவுமில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு அடிப்படையாக ஆங்கிலத்தில் நார்சிஸம் எனப்படும் சுயமோகம் விளங்குகிறது. அவரது தந்தை சந்திரசேகர் சிறுவயதிலேயே கதாநாயக நடிகனாகவேண்டும், அரசாளவேண்டும் என்பது போன்ற ஆசைகளை அவர் மனதில் விதைத்திருக்கலாம். அதனால் உலக அனுபவம்  எதுவும் இல்லாமல், உலகத்தை எதிர்கொள்ளும் ஆற்றலும் இல்லாமல், தன் திரைபிம்பத்தை மட்டுமே பணயம் வைத்து மக்களாட்சி அனுமதிக்கும் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு கட்சி துவங்கியுள்ளார் என்றுதான் கருத முடிகிறது.

அப்படி ஒரு தனிநபரின் மனமயக்கத்திற்கு, அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு, உலகின் முதிய பண்பாடுகளில் ஒன்றைக் கொண்ட தமிழ்நாடு இடம் கொடுப்பது என்பது வருந்தத்தக்கது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்களின் அறமற்ற வணிக நோக்கு என்றுதான் தோன்றுகிறது. தங்களுடன் பேசவே மறுக்கும் ஒரு மனிதருக்குக் கண்டன ங்களைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வெட்கமற்றுத் தரும் முக்கியத்துவம், மக்களாட்சியின் தூண்கள் செல்லரித்துப் போயுள்ளன என்பதைத்தான் காட்டுகிறது.

Rajan-5-4.jpg

அவருடைய பொறுப்பற்ற காட்சிப்பிம்ப அரசியலால் கரூரில் நாற்பத்தோரு உயிர்கள் பலியாயின. சென்ற வாரம் சேலத்தில் ஒருவர் இறந்துள்ளார். அவர் தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. என்னதான் நினைக்கிறார் என்றும் யாருக்கும் தெரிவதில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரும் இந்த மூடுமந்திர அரசியலை கண்டிப்பது அவசியம்.

கட்டுரையாளர் குறிப்பு:      

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/actor-vijay-is-insulting-politics-shouldnt-the-public-forum-condemn-him/

நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன்

2 weeks 2 days ago

நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன்

kkumar001-696x520-1-ccccc.jpg 

கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து  தூதரகம் வரும் 19ஆம் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது இந்த அழைப்பின் நோக்கம் என்று கருதப்படுகிறது. எனினும் அந்தச் சந்திப்பு இடம்பெறாது என்று தெரிய வருகிறது. அதற்கு காரணம், சுமந்திரன் அதை விரும்பவில்லை என்ற பொருள்பட சிங்கள ஊடகமான TTV.Lk  தகவல் வெளியிட்டுள்ளது. 19ஆம் தேதி நடக்கவிருந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் சுவிற்சலாந்து தூதரகம் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. கட்சிகளுடைய  வேண்டுகோளின் அடிப்படையில்தான் தூதரகம் மேற்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம்,மேற்சொன்ன சந்திப்பு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது இன்று 15ஆம் திகதி குடிமக்கள் சமூகங்களையும் கட்சிகளையும் ஒரு சந்திப்புக்கு வருமாறு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. ”எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படும் இடைக்கால வரைபை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்ப்பாக முன்வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதினால், அதனை எதிர்த்து தமிழ்த் தரப்பு ஒரே குரலில் சமஷ்டித் தீர்வை அதாவது கூட்டாட்சித் தீர்வை வலியுறுத்த வேண்டும் என்றும், அது தொடர்பான ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்காகவே அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 15ஆம் திகதி,அதாவது இன்றைய சந்திப்பு இடம்பெறுவதும் சுவிற்சலாந்து தூதரகத்தின் சந்திப்பை தமிழரசுக் கட்சி ஆர்வத்தோடு அணுகாமைக்கு ஒரு காரணம் என்று தெரிகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சுவிற்சலாந்து அண்மை ஆண்டுகளாக அதிகம் ஆர்வம் காட்டிவருகிறது. இலங்கைக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான ராஜிய தொடர்புகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறான நல்லிணக்க முயற்சிகளில் தாம் ஈடுபடுவதாக  தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நாலாம் கட்ட ஈழப் போருக்கு முன்னரான நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னணியில், இப்பொழுது சுவிற்சலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் புதிய முயற்சிகளை ஆரம்பித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.

சுவிற்சலாந் இதற்கு முன்னரும் இமாலயப் பிரகடனத்தின் பின்னணியில் நின்றது. மகா சங்கத்துக்கும் சில புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக அந்த பிரகடனம் உருவாக்கப்பட்டது. அது அடுத்தடுத்த கட்டத்துக்கு வளராத ஒரு முயற்சி.

அதன்பின் சுவிற்சலாந்து கடந்த ஆண்டு அரசாங்கமும் உட்பட தமிழ் கட்சிகளை தனது நாட்டுக்கு அழைத்து இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் உரையாட வைத்தது. அந்த உரையாடல்களின் அடுத்தடுத்த கட்டமாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தமிழ் கட்சிகளை அழைத்து உரையாடியது. இந்த முயற்சிகளின் ஆகப்பிந்திய நகர்வாக இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

சுவிற்சலாந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு,இமாலயப் பிரகடனம் போன்ற முயற்சிகளில் மட்டும் ஆர்வங் காட்டவில்லை. அதற்குமப்பால்,வடக்கிலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான உரையாடல்களுக்கும் நிதி அனுசரணை புரிந்து வருகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்திற்கும் சில செயற்பாடுகளுக்கு நிதி அனுசரனை புரிகிறது. இவ்வாறு கட்சிகள் செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்புகளுக்கும் சுவிட்சர்லாந்து நிதி உதவிகளைச் செய்கிறது.

நல்லிணக்கம்,சமாதானம் மனித உரிமைகள்,நிலைமாறு கால நீதி அல்லது பொறுப்பு கூறல் போன்ற வார்த்தைகள் கவர்ச்சியானவை. ஆனால் நவீன அரசியலில் அவை தெளிவான அரசியல்,ராஜதந்திர,பொருளாதார இலக்குகளைக் கொண்டவை.

இவ்வாறான நகர்வுகளின் ஒரு பகுதியாகவே இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பும் ஒழுங்குசெய்யப்பட்டது. அந்தச் சந்திப்பின் நோக்கம் இனப்பிரச்சினைக்கான பொதுவான ஒரு தீர்வை நோக்கி வருமாறு தமிழ் கட்சிகளை ஊக்குவிப்பது என்று விளங்கிக் கொள்ளப்பட்டது.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தமக்கு என்ன வேண்டும் என்பதை ஏன் ஒரே குரலில் கூற முடியவில்லை?

தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்பு ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு தூதரக மட்டங்களில் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சிவில் சமூகங்கள் சந்தித்தபோது இது சுட்டிக்காட்டப்பட்டது. அப்பொழுது சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக்காட்டினர். 2015ல் நிலைமாறு கால நீதி செய்முறைகளின் கீழ் புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அங்கிருந்து தொடங்கி கோத்தபாயாவின் நிபுணர் குழு வரையிலுமான சுமார் 6 ஆண்டு ஆண்டு கால பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வெவ்வேறு தரப்புகள் தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. அப்பொழுது இயங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வு முன்மொழிவை வெளியிட்டது. அது ஒரு சமஷ்டி முன்மொழிவு. அதன் பின் வடமாகாண சபை ஒரு முன்மொழிவை வெளியிட்டது. அதுவும் சமஸ்டி.தவிர வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனின் கட்சி ஒரு முன்மொழிவை வெளியிட்டது. அது சமஸ்டியை விட உயர்வான, கொன்பெடரேஷன் என்று அழைக்கப்படுகின்ற ஒரு தீர்வு. இவை தவிர புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்தன. இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக அந்த ஆறு ஆண்டுகாலப் பகுதியைக் கூறலாம். இவ்வாறு முன்வைக்கப்பட்ட எல்லா முன்மொழிவுகளிலும் ஒரு பொதுப் பண்பு இருந்தது. அது என்னவென்றால் அவை அனைத்தும் சமஷ்டிப் பண்பைக் கொண்டிருந்தவை என்பதுதான். இது சிவில் சமூகங்களால் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் கேட்டார், நீங்கள் குறிப்பிடும் அத்தனை தீர்வு முன்மொழிவுகளையும் தமிழ்த் தரப்பு ஒன்றாக ஒரு மேசையில் அமர்ந்திருந்து ஒரே ஆவணமாகக் கொடுத்ததா? என்று.

இல்லை. கொடுக்கவில்லை. ஏன் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்றால், மேற்சொன்ன அனைத்து தீர்வு முயற்சிகளிலும் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. வட மாகாண சபையின் முன்மொழிவிலும்  அது தமிழரசுக்கட்சியின் முன்னொளிவாக வைக்கப்படவில்லை. மாகாண சபையின் முன்மொழிவுதான். எனவே மேற்கண்ட அனைத்து தீர்வு முன்மொழிவுகளிலும் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை.

ஆனால் அப்போதைய யாப்புருவாக்க முயற்சிகளில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தோடு பங்காளியாகச் செயல்பட்டது. அப்பொழுது தமிழ் மக்கள் பேரவையில் காணப்பட்ட சில கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கொடியின் கீழ் யாப்புருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டன. அந்த முயற்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் “எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும். அந்த வரைபானது மைத்திரிபால சிறிசேனவின் வார்த்தைகளில் சொன்னால்,சிங்கள மக்களையும் பயமுறுத்தாத தமிழ் மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அதைத்தான் இப்பொழுது கஜேந்திரக்குமார் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.

வெளிப்படைத் தன்மையற்ற அந்த இடைக்கால வரைபானது ஒற்றையாட்சிப் பண்பு மிக்கது என்று கஜன் குற்றச்சாட்டுகிறார். அதை சுமந்திரன் மறுக்கிறார்.

அந்த இடைக்கால வரைபை உருவாக்கியதில் ஜேவிபி,தமிழரசுக் கட்சி, புளட் ,டெலோ ஆகியவற்றுக்கும் பங்குண்டு. ஆனால் அண்மை மாதங்களாக தமிழரசுக் கட்சியானது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசி வருகிறது. அதன் விளைவாக இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

631198452_122129121945053196_28520033668

எனினும் தொகுத்துப் பார்த்தால் தெரிவது என்னவென்றால், தமிழ்த் தரப்பு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சிதான்.

எனவே இப்பொழுது தமிழ்த் தரப்பு ஏன் ஒருமித்த குரலில் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்பதற்கு விளக்கம் கிடைக்கிறது. எல்லாருமே சமஸ்டியைத்தான் கேட்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தோடு இணைந்து அதாவது சிங்கள மக்களையும் பயமுறுத்தாமல் ஒரு தீர்வைக் கொண்டு வருவது என்றால் அது வெளிப்படையான சமஷ்டியாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்று தமிழரசுக் கட்சி கருதுவதாகத் தெரிகிறது.

இதை இன்னும் பிழிந்து சொன்னால்,சிங்களப் பிரதிநிதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதுதான். இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால், மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல், தமிழ்த் தரப்பு போராடாமல். உள்நாட்டுக்குள்ளேயே கண்டுபிடிக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஷ்டியாக இருக்க முடியாது.

இந்த இடத்தில்தான் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னமும் கண்காணிப்பும் அழுத்தமும் தேவைப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு  தமிழ்த் தரப்பு போராடவில்லையென்றால், மூன்றாவது தரப்புகள் அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்றால் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தும் ஒரு தீர்வை கொண்டுவர முடியாது. இந்திய இலங்கை உடன்படிக்கை அதைத்தான் உணர்த்துகின்றது. ஆனால் 13ஆவது திருத்தம் சமஸ்ரியல்ல.

எனவே தமிழ் சிங்கள முஸ்லிம், மலையக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வெளிப்படைத்தன்மை மிக்க எந்த ஒரு தீர்வும் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னம், அழுத்தம்,கண்காணிப்பு இல்லாமல் கிடைக்காது என்பதுதான் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் ஆகும். இப்பொழுது சுவிற்சலாந்து அப்படி ஒரு மூன்றாவது தரப்பாகச் செயல்படுமா? அதை இந்தியா ஆர்வத்தோடு பார்க்குமா?

https://www.nillanthan.com/8140/

போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி

2 weeks 3 days ago

போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி

Courtesy: தீபச்செல்வன்

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது.

இலங்கையின் வானொலிப் பாரம்பரியம்

தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளில் ஒன்றாக இலங்கை வானொலி எனப்படும் Sri Lanka Broadcasting Corporation (SLBC) விளங்குகிறது. 1920களிலேயே ஆரம்பித்த ஒலிபரப்பு, பின்னர் “Radio Ceylon” என உலகளவில் பிரசித்திபெற்றது ஆசியாவின் முதல் வானொலி. குறிப்பாக தமிழ்ச் சேவை, வடக்கு–கிழக்கு மக்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை வெளிப்படுத்திய முக்கிய மேடையாக இருந்தது. போர்காலத்திலும் பேரிடர் சூழல்களிலும், தகவல் பரிமாற்றத்தின் முதன்மை ஆதாரமாக வானொலி திகழ்ந்தது. நூற்றாண்டு கடந்து இன்னமும் மக்களின் மனங்களில் இலங்கை வானொலி நீங்காத இடத்தை தக்க வைத்திருக்கின்றது.

இலங்கையில் உள்ள மக்கள் மாத்திரமின்றி தமிழ்நாட்டு மக்களின் வாழ்விலும் உயர்விலும் நகர்விலும் இலங்கை வானொலிக்கென ஒரு தனியான இடமுண்டு. இலங்கையில் வானொலி வெறும் செய்தி ஊடகமல்ல; அது கலாச்சார நினைவகமாகவும் இருந்தது. நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், விவசாய அறிவுரைகள், கல்வி ஒலிப்பரப்புகள் ஆகியவை கிராமிய வாழ்க்கையுடன் வானொலியை நெருக்கமாக இணைத்தன. இன்று தனியார் எப்.எம். நிலையங்கள் பெருகியுள்ளன. இசை, இளைஞர் நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள் என வானொலி புதிய வடிவம் பெற்றாலும், அதன் அடிப்படை நோக்கம் மக்களை இணைக்கும் சேவையில் எந்த மாற்றமுமில்லை.

இந்தியாவின் வானொலி வளம்

இந்தியாவில் All India Radio (AIR), “ஆகாஷ்வாணி” என அழைக்கப்படும் அரசு வானொலி, 1936இல் தொடங்கப்பட்டது. பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் AIR, இந்தியாவின் மொழி மற்றும் பண்பாட்டு பல்வகைப்பாட்டை பிரதிபலிக்கிறது. செய்தி, நாடகம், இசை, கல்வி, விவசாயம், அறிவியல் எல்லாவற்றிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

சுதந்திரப் போராட்ட காலத்தில் வானொலி தேசிய உணர்வை ஊட்டிய கருவியாக இருந்தது. பின்னர், கிராமிய மேம்பாடு, சுகாதார விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம் போன்ற சமூகப் பணிகளில் முக்கிய பங்கு வகித்தது. சமீப காலங்களில் சமூக வானொலிகள் (Community Radio) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. உள்ளூர் குரல்களுக்கு இடமளித்து, சிறுபான்மையினரின் அனுபவங்களை வெளிக்கொணரும் பணியை அவை மேற்கொள்கின்றன.

டிஜிட்டல் காலத்திலும் வானொலியின் தேவை

இணையம், சமூக ஊடகங்கள், பொட்காஸ்ட்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், வானொலி தனது தனித்தன்மையை இழக்கவில்லை. மின்சாரம் அல்லது இணையம் இல்லாத சூழல்களிலும் செயல்படக் கூடிய சாதனமாக அது தொடர்ந்து பயன்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள், அரசியல் பதற்றங்கள் போன்ற அவசரநேரங்களில் வானொலி நம்பகமான தகவல் ஊடகமாக விளங்குகிறது.

தமிழீழ வானொலித்துறை

புலிகளின் குரல் என்பது இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒலிபரப்பு சேவையாக இயங்கியது. 1990களில் வடக்கு இலங்கையில் இருந்து ஒலிபரப்பான இந்த வானொலி, செய்தி அறிவிப்புகள், அரசியல் கருத்துரைகள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கத்தின் உள்நிலை தகவல்களை வெளியிட்டது. போர்நிலையிலிருந்த சூழலில், அது இயக்கம் மற்றும் போர் சார்ந்த தகவல் பரிமாற்ற ஊடகமாகவும் கருத்தியல் பரப்புரைக் கருவியாகவும் செயல்பட்டது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போருடன் ஈழ மண்ணில் அதன் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது./

சினிமா பாடல்களைத் தவிர்த்து, களியாட்ட நோக்கம் தவிர்த்து விடுதலை பற்றிய உணர்வை ஊட்டியதுடன் சமூக எழுச்சிக்கான ஒலிப்படைப்புக்களையும் புலிகளின் குரலும் தமிழீழ வானொலியும் வடக்கு கிழக்கு மண்ணிற்கு வழங்கியது. விடுதலைப் போராட்டம் பற்றிய பாடல்கள் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தன. இன்று விடுதலைப் புலிகள் இயக்கம் நிலத்திலற்ற காலத்திலும் விடுதலை பற்றிய உணர்வும் கருத்துக்களும் போராளிகளைப் பற்றிய நினைவும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன என்றால் அதற்கு அன்றைய காலத்தில் புலிகளின் குரல் வானொலியும் விடுதலை இயக்கப் பாடல்களும் ஏற்படுத்திய தாக்கமே ஆகும்.

உலகத் தமிழர் வானொலிச் சேவை

உலகத் தமிழர்களின் வானொலி முயற்சிகள், புலம்பெயர் வாழ்வின் மத்தியில் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டு இயக்கமாக உருவெடுத்துள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் சமூக மற்றும் இணைய வானொலிகள், உள்ளூர் தமிழர் சமூகத்தின் செய்திகள், இலக்கியம், இசை, மத நிகழ்வுகள் மற்றும் அரசியல் விவாதங்களை ஒலிபரப்புகின்றன. இணைய தொழில்நுட்ப வளர்ச்சியால், பாரம்பரிய எப்.எம். ஒலிபரப்பைத் தாண்டி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மற்றும் பொட்காஸ்ட் வடிவங்களில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணைக்கும் ஒலி வலைப்பின்னல் உருவாகியுள்ளது. இவ்வாறான முயற்சிகள் வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல; தலைமுறைகள் இடையிலான மொழிப் பிணைப்பை உறுதிப்படுத்தும் சமூக நினைவகங்களாகவும் செயல்படுகின்றன.

தொழில்நுட்ப மாற்றங்கள் எவ்வளவு ஏற்பட்டாலும், மனித குரலின் நம்பகத்தன்மை மற்றும் உணர்ச்சி பிணைப்பு அழியாது என்பதையே உலக வானொலி நாள் கற்றுத் தருகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் வானொலி, வரலாற்றை சாட்சியமாகக் கொண்டதும், எதிர்காலத்தை நோக்கியதுமான பயணத்தைக் கொண்டது. அது வெறும் தகவல் தொடர்புச் சாதனமல்ல. நாடு மற்றும் சமூகங்க நினைவுகளின் ஒலிப்பதிவு. மக்களின் இதயத் துடிப்பை எடுத்துச் செல்லும் ஒலி மொழி.

இலங்கையிலும் இந்தியாவிலும், வானொலி இன உரிமை, சமூக நீதி, மொழி உரிமை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பாதுகாக்கும் கருவியாகத் திகழ்கிறது. ஈழ மண்ணல் போர் நடந்த காலத்தில் வானொலிகள் பொழுதுபோக்கைக் கடந்து மக்களை ஆற்றுப்படுத்தவும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்பட்டது ஒரு மாறுபட்ட வரலாற்று அனுபவம் ஆகும். அத்துடன் தமிழ்ச் சேவைகள், மொழி மற்றும் இன அடையாளங்களை காக்கும் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஒலியின் மூலம் உணர்வுகளைப் பகிரும் சக்தி, மனிதர்களின் உள்ளங்களை நேரடியாகத் தொட்டுச் செல்கிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 15 February, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

https://ibctamil.com/article/radio-medium-of-communication-during-wartime-1771126719

தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். -

2 weeks 3 days ago

Questen.png?resize=750%2C375&ssl=1

தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள்  தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். -

“ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்?

ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? உங்களின் நாய்ச் சண்டைகளால் தெரு நாய்கள் எல்லாம் வவுனியாவில் வந்து ஊளையிட்டுச் செல்கின்றன. அதைப்பற்றிக் கவனிக்க உங்களுக்கு நேரமில்லை?

உங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் கட்சிக்கெதிரான வழக்கு தக்கல் செய்யப்படவில்லை. நீங்கள் இருவரும் நினைத்தால் அந்த வழக்கை முடிவுறுத்தவும் முடியும்.

தலைவர் தெரிவு வரும்போது, நான் நீங்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றே நினைத்தேன்.கட்சி உறுப்பினர்கள் சிலருடனும் உங்களுக்குச் சார்பாகவே கதைத்தேன்.

நீங்கள் பொறுமையாக இருந்திருந்தால் இன்று அடுத்த தலைவர் தெரிவு நடந்திருக்கும்.சில வேளை நீங்கள் முன்கதவால் தலைவராக வந்திருக்க கூடும். நாமும் மகிழ்ந்திருப்போம். ஒர் ஆளுமையான தலைவர் என்று.

தலைவர் தெரிவிற்குப் பின்னரான உங்களின் செயற்பாடு மிக அற்பத்தனமானது. உங்கள் மீதான அத்தனை கற்பிதங்களையும் போலியாக்கியுள்ளது.யோசித்துப் பாருங்கள் கட்சியின் தொண்டர்களால் தெரிவு செய்யப்படாத தலைவரும் செயலாளரும் தொண்டர்களின் மன எண்ணத்தை எவ்வாறு பிரதிபலிப்பீர்கள் ? நீங்கள் இருவரும் மக்களைப் பற்றி இன்று நினைக்கவில்லை.உங்கள் தலைமைப் பதவியையும் அதிகாரத்தைப் பற்றியுமே கனவு கான்கின்றீர்கள்.

சிறீதரன் அவர்களை நீங்கள் எப்படியாவது நீக்குவீர்கள். அவ்வாறு நடந்ததால் அது கட்சிக்குப் பாதிப்பு. ஆனால் அது உங்ளுக்கு இரட்டிப்பு சந்தர்ப்பத்தை தரும். இலகுவாக அடுத்த தடவையாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படலாம் என்ற கணக்கு சரியாக அமையும்.

இறுதியாகக் கூறுகின்றேன்,தொண்டர்களுக்குத் தலைவரா? தலைவர்களுக்குத் தொண்டரா? என்றால் அதற்கான விடையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.”

 

இது முகநூலில் காணப்படும் ஒரு பதிவு.இதை எழுதியவர் வன்னிப் பெருநிலத்தில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் ஆசிரியராக இருப்பவர். தமிழரசுக்  கட்சியை எங்கேயும் விட்டுக் கொடாதவர். எனது கட்டுரைகளில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் இருந்தால் அதுதொடர்பாக முகநூலில் பதில் வினையாற்றுவார். ஆனால் அவர்தான் சில நாட்களுக்கு முன் மேற்கண்டவாறு முகநூலில் எழுதியுள்ளார்.அவர் ஏன் அப்படி எழுத வேண்டி வந்தது? கட்சியின் பதில் செயலாளராக உள்ள சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒரு அறிவிப்புத்தான் காரணம்.கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக கதைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

 

இதை அவர் தெரிந்து செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கின்றாரா? ஏனென்றால் இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவுகள் எங்கே கொண்டு போய்விடும்? இக்கட்டுரையில் கூறப்பட்ட அந்த ஆசிரியர் மிகத்  துடிப்பான ஓர் அரசியல் செயற்பாட்டாளர். அவரே மனம் வெறுத்து அவ்வாறு முகநூலில் எழுதும் ஒரு நிலைமை வந்திருப்பது என்பது அவரைப் போன்ற பலர் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கக்கூடும் என்பதனை ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.அதாவது கட்சி மேலும் சிதையும் நிலைமைதான் தெரிகிறது.

 

நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டமும் அதைத்தான் காட்டுகிறது. தங்களுக்குள் தாங்களே மோதி கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை உணர முடியாத தலைவர்களா இவர்கள்?

 

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு பற்றி திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பூட்டுவது. ஆனால் அப்படி எழுதுவது தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் உள்ளதில் பெரிய கட்சி. அந்தக் கட்சியும் சிதைந்தால் அதற்கு மாற்றாக மேல் எழுவதற்கு முன்னணியால் முடியுமா?

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் பெரு வெற்றி பெற முடியவில்லை.அவர்கள்தான் ஒப்பீட்டளவில் தெளிவாக கொள்கைகளை முன் வைக்கிறார்கள். ஆனால் அவர்களால் கடந்த 16 ஆண்டுகளாக தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. கடந்த நாடாளுமன்றத்தில் கிடைத்த தோல்வியும் கட்சியின் தலைவர் கஜேந்திரக்குமாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் அவர்களை புதிய பாதையில் சிந்திக்க வைத்திருக்கிறது என்று தெரிகிறது. அவர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதாகவும் தெரிகிறது. ஆனால் மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பது என்பது என்ன? நடந்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவது மட்டுமல்ல,அதைவிட ஆழமான பொருளில் கட்சியை கட்டமைப்புரீதியாக மீளக்  கட்டியெழுப்புவது.

 

அண்மையில் ஒரு கிறிஸ்தவ மதகுரு இந்தியாவில் இருந்து வந்திருந்தார். இந்தியாவில் மேற்படிப்புக்காகச் சென்றவர்.அவர் அங்கே தமிழகக் கிராமங்களில் கட்சிகளுக்கு உள்ள வட்டச் செயலர் என்ற பதவி நிலையைக்  குறித்து  உரையாடினார். வட்டச் செயலர் என்ற பதவி தமிழக மக்களைப் பொருத்தவரை தமிழ்ச் சினிமாவில் வடிவேலுவின் நகைச்சுவையோடு சேர்ந்து பிரபல்யமான ஒரு பதவி நிலை. ஆனால் அது ஒரு நகைச்சுவைப் பாத்திரம் அல்ல. கிராம மட்டத்தில்,அடிமட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு பதவி நிலை. அது ஒரு பொறுப்பு. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுக்கு அவ்வாறு ஆழமான அடிபட்டக் கட்டமைப்புகள் உண்டு.வட்டச் செயலர்கள் கிராம மட்டத்தில் கட்சியைக் கட்டியெழுப்புகிறார்கள். கீழ் மட்டத்தில் மக்களோடு உயிர்த்தொடர்பைப் பேணுகிறார்கள்,வளர்க்கிறார்கள்.தமது நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்கள். அவர்கள் அடிமட்ட மக்களை அரசியல்மயப்படுத்துகிறார்களோ இல்லையோ அவர்களை கட்சி மயப்படுத்துகிறார்கள்.

 

நமது தமிழ்த் தேசியக் கட்சிகளில் எத்தனை அப்படிப்பட்ட கிராம மட்டக் கட்டமைப்புகளை, பதவி நிலைகளைக் கொண்டிருக்கின்றன?

 

இதற்கு தமிழ்நாட்டு உதாரணம் கூடத் தேவையில்லை. 83 ஜூலைக்கு பின் தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தன? எப்படிப்பட்ட கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தங்களைப் பலப்படுத்திக் கொண்டன? என்பவற்றில் இருந்தாவது குறைந்தபட்சம் கற்றுக் கொண்டிருக்கலாம்.

 

தமிழ் இயக்கங்களுக்கு கிராம மட்டத்தில் கிராமப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களுக்குப் பொறுப்பாக ஏரியாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் இருந்தார். அரசியல் துறைக்கு மட்டுமல்ல படைத்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை முதலான எல்லாக் கட்டமைப்புகளுக்கும் அவ்வாறு கீழே இருந்து மேல் நோக்கிய சீரான கட்டமைப்புகள் இருந்தன.இந்தக் கட்டமைப்புகள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும்.மேலிருந்து கீழ் நோக்கி வழிநடத்தப்படும்.இயக்கங்களின் கட்டமைப்புகள் பெருமளவுக்குப் படைப் பரிமாணத்தை கொண்டுவை என்பதனால் அங்கே உத்தரவுக்குக் கீழ்ப்படியும் ஒரம்சம் இருக்கும்.அதை முழுமையாக ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு பொருத்தமான நடைமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.ஆனால் கிராம மட்டக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியாது மட்டுமல்ல தேர்தல் அரங்குகளில் வெற்றிகளை உறுதிப்படுத்தவும் முடியாது.

 

ஜனநாயக அரசியலில் வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் எது பெரும்பான்மை என்பதைத் தீர்மானிக்கும். பெரும்பான்மையின் கருத்துத்தான் அந்த மக்கள் கூட்டத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும். எனவே கட்சி மைய அரசியலுக்கூடாகச் சிந்திக்கும் பொழுது தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம்.அதேசமயம் தேர்தல் மைய அரசியலுக்கு வெளியேயும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு.

https://athavannews.com/2026/1464919

தன்னைத் தானே தோற்கடிப்பது? - நிலாந்தன்

2 weeks 3 days ago

தன்னைத் தானே தோற்கடிப்பது? - நிலாந்தன்

628633481_26296070826672808_966732670510

நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள், சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள். உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய தமிழ் மக்கள் இப்பொழுது இப்படிப்பட்ட அற்ப வெற்றிகளைக் கொண்டாடும் மக்களாக சிறுத்துப் போய்விட்டார்கள்? தமிழரசுக் கட்சி என்பது 75 வயதான ஒரு கட்சி. தனது உட்கட்சிப் பகையை பிரதிபலிக்கும் ஒரு வெற்றியைக் கொண்டாடக்கூடாது என்று தனது தொண்டர்களுக்குச் சொல்லும் மாண்பை அந்தக் கட்சி இழந்து விட்டதா? ஏற்கனவே மாவையின் இறுதி நாள் நிகழ்வில் சுடலை வரை மோதல் வந்தது. அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் அந்த மோதல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு சாணக்கியன் நியமிக்கப்பட்டதை கிழக்கில் உள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவேற்கவில்லை என்று தெரிகிறது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறீதரனை அகற்றும் பொழுது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, அவர் அரசியலமைப்பு பேரவையில் ஒரு படை அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதுதான். ஆனால் சாணக்கியன் யார்? யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சக்களோடு நின்றவர். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர்களோடு காணப்பட்டவர். அவர்களுடைய கட்சியின் அமைப்பாளராகச் செயல்பட்டவர்.

அவருடைய ஆதரவாளர்கள் உட்கட்சி மோதலில் கிடைத்த வெற்றியை வெடி கொளுத்தி, இனிப்புக் கொடுத்து,பனர் கட்டி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு உணர்த்துவது எதை என்றால், உட்கட்சிப் பகை எந்த அளவுக்கு கூர்மையானதாக இருக்கிறது; எந்த அளவுக்கு நாகரீகமற்றதாக மாறியிருக்கிறது என்பதைத்தான். அது தவறு என்று சாணக்கியனுக்கோ அல்லது தொண்டர்களுக்கோ சொல்லக்கூடிய மூப்பும் முதிர்ச்சியும் உள்ள ஆட்கள் கட்சிக்குள் இல்லை என்று தெரிகிறது.

75 வயதான கட்சிக்குள் முதன் முதலாக தலைவர் தெரிவிற்காக நடந்த ஒரு தேர்தல். அதில் தெரிவு செய்யப்பட்டவர்,கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பை ஏற்கவிடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். படிப்படியாக கட்சிக்குள்ளேயே முடக்கப்பட்டு வருகிறார். 75 வயதான ஒரு கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை விளங்கிக் கொள்ள இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா ?

இதன் பொருள்,சிறீதரன் கிளிநொச்சியில் ஜனநாயகச் செழிப்பான ஒரு சூழலைப் பேணி வருகிறார் என்பதல்ல. அங்கே அவர் தன்னுடைய அரசியல் எதிரிகளை அணுகும் விதமும், அவருடைய ஆதரவாளர்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் விதமும் பண்பானவைகளோ அல்லது அரசியல் நாகரீகத்தைப் பேணுகின்றவையோ அல்ல. தன்னுடைய எதிரிகளை மேடைகளில் பகிரங்கமாக பெயர் சொல்லி விமர்சிக்கிறார். அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் சமுக வலைத் தளங்களில், முகத்தைக் காட்டியும், முகத்தைக் காட்டாமலும் வந்து, தமது அரசியல் எதிரிகளின் குடும்பத்தை இழுத்து, சகோதரர்களை இழுத்து விமர்சிக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் உட் கட்சி ஜனநாயகத்தில் குற்றம் காண்பது என்பது அதன் ஒரு பகுதியாக கிளிநொச்சியில் காணப்படும் அரசியல் விமர்சனச் சூழலையும் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவதுதான்.

எந்தத் தேசியவாதத் தராசில் வைத்து சிறீதரன் தனது எதிரிகளை நிறுத்தாரோ, அதே தேசியவாதத் தராசில் வைத்து சுமந்திரன் அணி அவரை நிறுக்கிறது. அதன்மூலம் அவருடைய வாக்காளர்கள் மத்தியில் அவரை மதிப்பிறக்கம் செய்வதே அவர்களுடைய நோக்கம். அதை கஜேந்திரக்குமார் அணி செய்தால் அதற்கு ஒரு பொருள் இருக்கும். ஆனால் சுமந்திரன் செய்தால் அதற்குப் பொருள் இருக்காது. ஏனென்றால் சுமந்திரன் ஏற்கனவே தமிழ்த் தேசிய நீக்கத்துக்கு தலைமை தாங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் எவ்வளவு கெட்டிடித்தனமானவராக இருந்த போதிலும்,எத்தனை சதி சூழ்ச்சிகளைச் செய்த போதிலும்,கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

634072869_26304931352453422_288814025803

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடக்கப்பட்டு வரும் சிறீதரனும் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க தவறிவிட்டார். அவரை நம்பி வாக்களித்த கட்சிக்காரர்களுக்கும் அவர் தலைமை தாங்கவில்லை. மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதத்தில் அவர் நடந்து கொள்ளவில்லை. அண்மையில் யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில் நடந்த பெப்ரவரி நான்கு நிகழ்வின் போது, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசசன் சிறீதரனை குறித்து உள்ளூர் பழமொழி ஒன்றை எடுத்துக் காட்டினார். ”பனங்கிழங்கு முத்தினால் நாராகிவிடும்” என்பதே அந்தப் பழமொழி. சிறீதரனின் தலைமைத்துவத்தின் நிலைமையும் அப்படித்தானா? தனது கடைசிக் கட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் அப்படித்தான் காணப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர் கட்சிக்குள் பலமாக இருக்க முடியாது என்ற வாதம் சரியாக இருந்தால்,சுமந்திரன் எப்படி கட்சிக்குள் தீர்மானிக்கும் சக்தியாக மேலெழ முடிந்தது? அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. அங்கேயும் உட்கட்சிப் பூசல்கள் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின. மாவை துணிச்சலாகவும் மிடுக்காகவும் முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக, தானும் தோற்று கட்சியையும் தோற்கடித்து விட்டார். அவர் இறந்து ஓராண்டின் பின்னரும் கட்சி ஒரு சீருக்கு வரவில்லை என்பதைத்தான் அண்மையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின.

மாவையோடு ஒப்பிடுகையில் சிறிதனிடம் தலைமைப் பண்பு அதிகம். மாவை அளவுக்கு அவர் நசிய மாட்டார். தனது மாவட்டத்தில் கட்சிக் கட்டமைப்பை பலமாகக் கட்டி எழுப்பி வைத்துள்ளார். அவருடைய வாக்கு வங்கி போரால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் பிரதிபலிப்பது. அதைவிட மேலகமாக, தீவு மைய, கிளிநொச்சி மைய வாக்குகளும் அங்கே உண்டு.கட்சியை விட்டு நீங்கினாலும் கிளிநொச்சியில் சிறீதரன் ஒரு பலமான சவாலாக இருப்பார். ஆனால் இங்கே பிரச்சனை அதுவல்ல. தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான இலக்கு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டி,பலமான பேரம் பேசும் சக்தியாக கொழும்பிலும் உலக சமூகத்தின் முன்னும் முன்னிறுத்துவதுதான். அதை சிறீதரன் செய்வார் என்று நம்பத்தக்கதாக கடந்த இரண்டு ஆண்டுகளும் அமையவில்லை.

அண்மையில் ஒரு காணொளி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் முன்னுதாரணமாக கட்சிக்குள் தொடர்ந்தும் இருக்கப்போவதாக பொருள் கொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறியிருந்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதனால் அவர் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுந்தான் தக்கவைத்துக் கொண்டார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தனது தலைமைத்துவத்தை எந்தளவுக்கு ஸ்தாபித்திருக்கிறார்?

சுமந்திரனைப் பொறுத்தவரை இப்பொழுதும் கட்சியை முழுமையாக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சிறீதரனை கட்சிக்குள் இருந்து அகற்றினால் மட்டும்தான் அவருக்கு முழு வெற்றி. ஆனால் அதை அவரால் இன்றுவரை செய்ய முடியவில்லை. சிறீதரன் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து, அவமானப்படுத்தி அவராக கட்சியை விட்டு விலகும் அளவுக்கு நிர்பந்திப்பது என்று சுமந்திரன் சிந்திக்க கூடும். ஏனென்றால் இதே விதமான உத்தியைத்தான் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த போது பங்காளிக் கட்சிகள் மீதும் பிரயோகித்தார். பங்காளிக் கட்சிகளுக்கு நெருக்கடியைக் கொடுத்து அவர்களாக விலகப் பண்ணினார். அப்படித்தான் விக்னேஸ்வரனின் விடையத்திலும். ஆனால் அவருடைய உத்திகளின் விளைவுகள் என்ன? முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் சிதைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு கால கயிறு இழுத்தல் போட்டியில் யாரும் முழு வெற்றி பெறவில்லை. இது 75 வயதான கட்சியின் உள்விவகாரங்களை முழுமையாக தனது கைக்குள் கொண்டு வரத்தக்க தலைவர் யாரும் இப்பொழுது கட்சிக்குள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் சுமந்திரனால் கட்சியை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 2024 இல் கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதையும் அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

கொழும்பில் அவர் சவால்கள் மிகக் குறைந்த ஒரு சட்டவாளராகக் காணப்படுகிறார். ஆங்கிலம் பேசும் உயர் குழாத்தின் மத்தியிலும், அரசியல் சமூகம்,ராஜதந்திர சமூகம், ராணுவ சமூகம் மற்றும் சிவில் சமூகங்களின் மத்தியிலும் மதிக்கப்படும் தமிழ் அரசியல்வாதியாக அவர் காணப்படுகிறார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று கொழும்பில் ஒரு தீர்மானகரமான சக்தியாக அவர் வலம்வந்தார். 2024 அவரைப் பொறுத்த வரை ஒரு கெட்ட ஆண்டு. தோல்விகரமான ஆண்டு. அந்த ஆண்டில் கிடைத்த தோல்விகளால் கொழும்பில் அவருடைய மதிப்பு குறைந்து போய் விடக்கூடாது என்று அவர் அந்தரப்படுகிறார். ஆனால் அவருடைய தந்திரமான, புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின்மூலம் கட்சியை அவருடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இன்றுவரை முடியவில்லை.

சிறீதரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் எதிர் அணி ஒரு புதிய அணியாக மேலெழக்கூடும். தமிழரசுக் கட்சியானது வெல்லும் கட்சி என்ற நம்பிக்கை உடைக்கப்படுமாக இருந்தால் அக்கட்சிக்குள் இப்பொழுது ஒட்டிக் கொண்டிருக்கும் பலரும் கழண்டு போய் விடுவார்கள். அந்த நம்பிக்கை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உடைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்ப் பகுதிகளில் ஒரே எண்ணிக்கையான ஆசனங்கள்தான். இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தீராத உட் பகையை தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படுமா என்று எதிர்பார்ப்போடு.

https://www.nillanthan.com/8134/

Checked
Wed, 03/04/2026 - 17:34
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed