3 months 1 week ago
இந்தியா மகளிர் அடிச்சு ஆடக் கூடிய மைதானத்தில் பந்தை வைச்சு நொட்டினம்........................
3 months 1 week ago
நானயத்தில் வென்று நியுசிலாந் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்..........................
3 months 1 week ago
நல்ல திட்டம் ........இவர்கள் பல விடயங்களிலும் முன்னேற்றகரமான திட்டங்களை அமுல் படுத்துகின்றனர் .........! 👍
3 months 1 week ago
இப்பதான் பார்க்கிறேன் பையா 2013 ம் ஆண்டிலேயே உலகக்கோப்பையை எவ்வளவு அழகாய் செய்துள்ளார்கள் . ...... நீங்கள் ஒரு ரசிகன் ஐயா ........ உங்களின் ரசனையை நானும் ரசிக்கின்றேன் . .....!
3 months 1 week ago
இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதற்கு முழுப் பொறுப்பு இவர்தான் என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது. தமிழர் சார்பில் செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இதில் சம பங்கு உண்டு. இலங்கையில் அதிகர பரவலாக்கத்துடன் கூடிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப் பட வேண்டுமானால் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இணைந்தே அதை செய்ய வேண்டும். அதுவே நிரந்தரமானதாக இருக்கும். உலகில் வெற்றியடைந்த நாடுகளில் அப்படியே நடந்துள்ளது. கடும் சிங்கள/ தமிழ் இன தேசியவாதிகளை புறம் தள்ளி புதிய சமுதாயம் பரஸ்பர நம்பிகையை கட்டியெழுப்புவதன் மூலமே அதை செய்ய முடியும். நிச்சயமாக அதற்கு சற்று காலம் எடுக்கலாம். அண்மையில் இலங்கை சென்றிருந்த போது யாழ்பாணத்தில் அவதானித்த ஒரு நல்ல விடயம் இந்த ரிக் ரொக், முகநூலில் தேசியம் பற்றி அலட்டும் விடயங்கை பற்றி எதுவும் அறியாத அது பற்றி அறிய கூட விரும்பாத தமது கல்வி முன்னேற்றங்களிலும் தாயகத்திலேயே தமது வாழ்வை தமது கல்வி திறமைகளால் அடையவேண்டும் என்பதில் கூடுதலான கவனம் செலுத்தும், எப்போதும் தமது கல்வி, மேற்படிப்பு career என்பதில் பிஸியாக உள்ள ஒரு இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது. இதை ஒரு சிறந்த சமிக்ஞையாக நான் பார்கிறேன். இலங்கையில் பல மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்தை உபயோகித்து பயணம் செய்த போது சாமான்ய மக்களிடையே இனவாதம் இருப்பதை உணரவில்லை. அனைத்து தரப்பு மக்களும் இயல்பாக பழகினார்கள். இது வும் சிறந்த சமிக்ஞையே. எனது பார்வையில் இனப்பிரச்சனைக்கான தீர்வுடன் கூடிய ஒரு அரசியலமைப்பை காலப்போக்கில் அந்த புதிய தமிழ் சிங்கள சமுதாயத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர தற்போதைய இரு பகுதி அரசியல்வாதிகளாலோ புலம் பெயர் நாடுகளில் தேசியம் பேசி வியாபாரம் செய்யும் வியாபார கும்பல்களாலோ அது முடியாது.
3 months 1 week ago
ஆண்களின் கிரிக்கேட்டை எடுத்தால் கூட உத்திரபிரதேஸ் மற்றும் டெல்லி , இந்த இரண்டு மானிலத்தில் இருந்து தான் இந்தியா அணியில் பலர் இடம் பிடித்தவை , 2005 அல்லது 2006 இந்த ஆண்டில் ஒன்றில் தமிழ் நாட்டில் பெரிய போராட்டம் வெடித்தது இந்திய அணியில் தமிழக வீரர்களுக்கு திறமை இருந்தும் இந்திய அணியில் சேர்ப்பதில்லை என , பிறக்கு காவல்துறை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தவை.............. இந்திய மகளிர எடுத்தால் ஒவ்வொருதரும் வெவ்வேரு மானிலத்தை சேர்ந்தவை....................................
3 months 1 week ago
ஒம் அண்ணா இவான்ட பெயர் அது தான் 2013உலக கோப்பையோட சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டா 2013ம் ஆண்டு உலக கோப்பை பினலை இவாக்காக பார்த்தேன்............நல்ல அமைதியான மகளிர் , இப்ப இருக்கும் சில மகளிர்கள் இவாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளனும் எப்படி மைதானத்தில் நடந்து கொள்ளனும் என இவா இப்போது கிரிக்கேட் வர்னையாளரா இருக்கிரா................ இவான்ட தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக தெரியாது............... சிறந்த கிரிக்கேட் மகளிர் என்றது மட்டும் தெரியும் லொள்🥰❤️👍.........................
3 months 1 week ago
செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம் October 23, 2025 11:32 am ”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார். https://oruvan.com/chemmani-massacre-plan-to-seek-foreign-technical-assistance/
3 months 1 week ago
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் October 23, 2025 12:16 pm 2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரமர், 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்ட அமைப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, முன்பள்ளி கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான ஆசிரியர் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் வலியுறுத்தியதாவது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்பதுடன், பாடசாலைகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவது தற்போது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார். இது கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். இந்த பாராளுமன்ற உபகுழுக் கூட்டத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://oruvan.com/single-curriculum-for-pre-schools-across-the-country-from-2026/
3 months 1 week ago
மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர். அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர். குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள், தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளதாகவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் காணிகள் வழங்கப்பட்டமையை எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=345677
3 months 1 week ago
“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை” October 23, 2025 இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலானா பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமானப்படைத் தளபதிகாளான ஏர் மார்ஷல், பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார். https://www.ilakku.org/india-sri-lanka-bridge-will-lead-to-illegal-activities/
3 months 1 week ago
நினைத்துப் பார்த்திருக்க முடியாத..... பல பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்களையும், அவர்களின் அடியாட்களையும்... அனுர அரசு கைது செய்திருக்கும் நிலையில்... விசாரணையின் பிடிகள் இறுக... அடுத்த கட்டமாக, இயக்கிய தம்மை இவர்கள் அடையாளம் காட்டி விடுவார்கள் என்ற முன் எச்சரிக்கையுடன் பழைய கொழுத்த அரசியல்வாதிகள் இக்கொலையை செய்திருக்கலாம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை. அனுர அரசு காலத்திலேயே.... நீதிமன்றத்திற்குள் குற்றவாளிக் கூண்டில் நின்ற கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லப் பட்ட போது... நீதிமன்றத்துக்குளேயே பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் நிலையில்.... மீண்டும் ஒரு கொலையை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து அதன் தலைவரை... அனுர அரசு சுட்டுக் கொன்று, எதிர்க் கட்சிகளுக்கு பிடி கொடுக்க நினைத்து இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன். அனுர அரசு... இவரை கொல்ல வேண்டும் என்றால், வேறு எத்தனையோ வழிகள் இருக்க.... பிரதேச சபை அலுவலகத்தை தேர்ந்து எடுத்து இருக்க மாட்டார்கள் என்பதே எனது கணிப்பு. தற்போது... இளைய தளபதி நாமலும் நாட்டில் இல்லை. அவர் இல்லாத நேரம் இந்தக் கொலை நடந்த படியால்.. சந்தேகம் தன் மேல் வராமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது. உங்களுக்கு, அனுர அரசு மேல் இருக்கும் கடுப்பில், "சந்துல... சிந்து பாடுகின்றீர்கள்" போலுள்ளது. 😂
3 months 1 week ago
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் - பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை.! Vhg அக்டோபர் 23, 2025 கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22.10.2025) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நேரடியாகப் பயங்கரவாதத் குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜரானார். இந்நிலையில் அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டுக்குக் கடந்த- 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாகவிருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகத் தெரிவித்து அது தொடர்பான விசாரணைகளுக்குக் கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கிச் சென்றிருந்தனர்.. இதற்கமைய, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகள் நடந்துள்ளன. வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை-03 மணியளவில் அவர் வெளியேறியுள்ளார். https://www.battinatham.com/2025/10/blog-post_359.html
3 months 1 week ago
வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு ! By SRI 2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் கூறினார். குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறினார். https://www.battinews.com/2025/10/500.html
3 months 1 week ago
யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் sachinthaOctober 23, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தற்போது காணப்படுகின்ற இறங்குதுறையானது நீண்டகாலமாக பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.thinakaran.lk/2025/10/23/breaking-news/159976/யாழ்-குறிகட்டுவான்-இறங்/
3 months 1 week ago
காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு வழங்கும் 62 மில்லியன் டொலர் மானியத்தை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை. கடனிலிருந்து மானியமாக மாற்ற இந்திய அரசு முன்வைத்த நிபந்தனைகள் குறித்து இன்னும் பேச்சுகள் நடந்து வருவதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இதுதொடர்பில் தெரிவிக் கையில். வடக்கு துறைமுகத்தின் மேம்பாட்டுக் காக இந்தியா 62 மில்லியன் டொல ருக்குமேல் வழங்கியிருந்தாலும், அந்தத்தொகை தற்போது கடனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடனை மானியமாக வழங்க இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இன்னும் கலந் துரையாடப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்க வில்லை. ஒரு துறைமுகம் நிறுவப்படும்போது, அதன் சமூகப்பொருளாதார தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டவுடன், தேவையான பேச்சுகளைத் தொடங்கி அதற்கேற்ப முன்னேறுவோம் - என்றார். https://newuthayan.com/article/காங்கேசன்துறைமுக_அபிவிருத்தியில்_இந்தியாவின்_நிபந்தனைகள்_ஆராய்வு#google_vignette
3 months 1 week ago
செவ்வந்திக்கு படகு சேவை – அந்தோணிப்பிள்ளை ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு! adminOctober 23, 2025 திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு-கண்டி சாலையில் உள்ள திஹாரியவின் ஓகோடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தோணிப்பிள்ளை ஆனந்தன் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் சந்தேக நபர் விசாரணையின் போது சுட்டிக்காட்டியதன் பேரில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சந்தேக நபர் 19.04.2019 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களுடன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிலோன் பாய் எனப்படும் முகமது ரிஸ்வி என்ற நபரின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வசதிகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது. https://globaltamilnews.net/2025/221869/
3 months 1 week ago
3 months 1 week ago
நாடாளுமன்றத்தில் விசேட சோதனை! எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் நாடாளுமன்றத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையில், நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம் பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதேவேளை, விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படுவதுடன், விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் அன்றையதினம் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். இதேவேளை, அன்றைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1450953
3 months 1 week ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=2171647533266181 👈 இது... பனையேறி கெண்டை மீன் என்கிறார்கள். இது... நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியதாம். மண்ணுக்கு கீழ் ஈரலிப்பான இடத்தில் இருந்து விட்டு... மழை பொழிய வெளியே வருமாம். ஆன படியால்... இது வானத்தில் இருந்து விழுந்ததாக சொல்வதை ஏற்க கடினமாக உள்ளது. மேலே உள்ள காணொளியில் பல பனையேறி கெண்டை மீன் நீர் நிலைகளை தேடி அணிவகுத்து செல்வதை காணலாம். அப்படி வானத்தில் இருந்து விழுவதாக இருந்தால்... பாரை, விளை, திரளி, நண்டு, இறால், கணவாய் எல்லாம் விழுந்து இருக்க வேண்டும். 😂 வாசகர்கள்... தமது கருத்துக்களை பகிர்வது வரவேற்கப் படுகின்றது. 🙂
Checked
Fri, 02/06/2026 - 01:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed