36 minutes 26 seconds ago
ரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்துவிட்டார்.
பொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்!
43 minutes 9 seconds ago
கற்பகம் மாதிரி நாலுபேர் இருந்துருந்தால் இப்பணியைல்லாம் நடந்திருக்குமா. கற்பகம் மாதிரி படித்த நாலுமனிதரிடம் கேட்டிப்பார்ப்பமர எப்படி எங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் என்று
57 minutes 57 seconds ago
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிக விரைவில் சந்திக்கபோறாராம் ஐனாதிபதி..!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிக விரைவில் ஐனாதிபதி சந்திப்பார் என வெளியுறவு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை இந்திய ஊடகமான 'த இந்து' வுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து அந்த குடும்பங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி உண்மையிலேயே உறுதியாக உள்ளார்.
இது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் முதல் பயணமாகும். அவர் [ஜனாதிபதி] அரசியல்வாதிகள் சொல்வதைக் காட்டிலும்,
நேரடியாக குடும்பத்தினரிடம் அவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர்களின் உண்மையான குறைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கவும் விரும்புகிறார்.
இது மிக விரைவில் நடக்கும், என கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.
https://jaffnazone.com/news/23578
டிஸ்கி
2 hours 2 minutes ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
2 hours 46 minutes ago
அணை கட்டாவிடில் மடை திறந்த வெள்ளம்போல் ஒருவரொருவர் மேல் வெறுப்பை கொட்ட வேண்டிவரும்.
3 hours 4 minutes ago
யாரோ தெரிந்தவருக்கு கொரோனா என்றாலே துடித்துப் போகிறோம்.
அதே எமது வீட்டுக்குள் அதுவும் பிள்ளைகளுக்கென்றால் எப்படி தாங்குவது.
3 hours 8 minutes ago
கண்டிப்பாக இவரது கணவரையும் விசாரணை செய்ய வேண்டும், குறித்த மாணவனுக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், ஒட்டுக்குழுக்களின் கடத்தல், காணாமல் போகச் செய்தல் விடயங்களை ஐ. நாவரை கொண்டு செல்ல வேண்டும். என்னதான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும், குப்பையில் போட்டாலும் குண்டுமணி மங்காது. ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு.
3 hours 37 minutes ago
தற்போது -
10,052,579 views
•Premiered Feb 18, 2021
3 hours 53 minutes ago
கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியை முன்னாள் ஆயுதக் குழுத் தலைவருக்கு நெருக்கமானவர்? கொதித்தெழும் மாணவர்கள்!!
Report us Gokulan 2 days ago
இன்று சமூகவலைத்தளங்களில் அதிக வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருகின்ற ஒரு விடயம், மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு விடுத்த கடத்தல் மிரட்டல்தான்.
'மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்' என்று என்று அந்த ஆசிரியை மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பில் சில மாணவர்கள், பெறோர்களை அனுகிய எமது செய்தியாளருக்கு அவர்கள் வழங்கிய கருத்துக்கள் இவை:
(பாதுகாப்பு கருதி கருத்து தெரிவித்தவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன)
கருத்து -1:
“மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’
கருத்து -2:
“பாடசாலைக்குப் போகவே பயமாக இருக்கிறது.. சுகுணன் ரீச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்வரை நாங்கள் பாடசாலைக்கு போகமாட்டோம்..”
கருத்து -3:
“ஒலிப்பதிவு வெளியான அன்றைய தினம் குறிப்பிட்ட ஆசிரியையின் கணவரான வைத்தியர் அந்த ஒலிப்பதிவை பகிர்பவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக தனது முகப்புத்தகத்தின் ஊடாக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் மறு தினம் அந்த கண்டனத்தை அகற்றிவிட்டு மனவருத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர்கள் யாருமே மிரட்டலுக்குள்ளான மாணவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் அவரை காவல்துறை கைதுசெய்யவில்லை?”
கருத்து -4:
“அந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆசிரியையின் கணவர் ஒரு முன்னாள் பிரதி அமைச்சரின் நன்பர். அதனால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தைப் பெருப்பிக்கின்றார்கள்..”
கருத்து -5:
“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”
கருத்து -6:
“ இந்த விடயத்தை மூடி மறைக்க நிறைய காரியங்கள் நடக்கின்றன. பணம், பதவி, அந்தஸ்து, அரசியல் செல்வாக்கு என்று நிறைய காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மாணவனுக்கு நியாயம் வேண்டி மக்கள்தான் போராடவேண்டும்…”
கருத்து -7:
“இதை இப்படியோ விட்டால் நாளைக்கு பாடசாலையில் ஆசிரியர்களின் பேச்சு மொழி இப்படியேயாகிவிடும்..’ உன்னை இல்லாமல் செய்துவிடுவேன்.. உன்னை கடத்துவேன்.. நாயே.. மண்டையில போடுவேன்…(பீப்..) “
கருத்து -8:
“ அவர் ஒரு ஆசியராக நடந்துகொள்வதானால் பாடசாலையில் மாணவணைக் கண்டித்திருக்கவேண்டும். ஒரு தயாராக நடந்துகொள்வதானால், அதிபரிடம் முறையிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கவேண்டும். தகப்பன் இல்லாத ஒரு மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி எடுத்து கடத்துவேன்.. காணாமல் போகச் செய்வேன்.. மட்டக்களப்பை விட்டு வெளியேற்றுவேன் என்று மிரட்டுவது ஒரு 'பேட்டை தாதா' செய்கின்ற செயல். அந்த ஆசிரியைக்கு நிச்சயம் தண்டணை வழங்கப்பட்டேயாகவேண்டும்”
கருத்து -9:
“இத்தனைக்கும் மாணவனை மட்டக்களப்பை விட்டு விரட்டுவேன் என்று எச்சரித்த ஆசிரியை மட்டக்களப்பைச் சேர்ந்தவரே அல்ல.. அவர் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்.. அவருக்கும் அவர் கணவனுக்கு மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் செல்வாக்கு இவ்வாறு பேசும் அங்கீகாரத்தை அவருக்கு வழங்கியிருக்கின்றது..”
கருத்து -10:
“ ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை: “எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு...’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” - முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும். இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்”
கருத்து -11:
“ஒரு மாணவன் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கின்றான். மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வதற்கான அச்சுறுத்தல் ஆதாரம் வெளிப்பட்டு இருக்கின்றது. பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பாகவே மாணவன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றார். பாடசாலை நிர்வாகம் ஏன் இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை? உயிரச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவனுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படவில்லை?”
https://www.tamilwin.com/srilanka/01/269490?ref=rightsidebar
4 hours 20 minutes ago
ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?
4 hours 30 minutes ago
பெருமாளை இந்தியாவுக்கு அனுப்பி, ஈழத்தமிழர் சார்பாக மோடியிடம் பேசி, தமிழீழத்துக்கு ஆதரவு கேட்டுப்பார்க்கலாமா?🙂
சாரி, ஏன் இந்தியா ஈழத்தமிழருக்கு உரிமை வாங்கி கொடுக்க வேண்டும்…? அதோடு எங்கே உரிமை விற்கிறார்கள் என்று சொன்னால் தானே பெருமாள் மோடியிடம் வாங்கித்தரச்சொல்லி கேட்கலாம்? 😇
4 hours 30 minutes ago
வசமா சிக்கிட்டனே
4 hours 34 minutes ago
காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் எல்லாம் தீரும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.
4 hours 51 minutes ago
யாருக்காக கூட்டணி" | கருத்துக்களம் | திரு. சுரேஸ்பிரேமச்சந்திரன்
5 hours 7 minutes ago
உண்மையை உருவகித்து கோர்வையாக கதை சொன்ன விதம் மிக்க அழகு .உங்கள் திறமையை கண்டு வியந்து போனேன். விபரமான விவசாயி
5 hours 27 minutes ago
தொலைத்த இடத்திலேயே தேடவேண்டும் ஓசோவின் தத்துவ வார்த்தைகள்.
தொலைத்த இடத்தில் நாங்களும் இல்லை. தொலைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தேடும் சக்தியும் இல்லை.
தர்மம் வெல்லும் என்ற சொல்லைக்காட்டிலும் வல்லவன் வாழ்வான் என்ற சொல்லே இக்காலத்தில் மிளிர்ச்சியாக இருக்கிறது. சுவியண்ணா.
5 hours 27 minutes ago
ஐயா விக்கினேசுவரனும் இணைந்து செயற்படுவதற்கு விரும்புகிறார் போல தோன்றுகிறது.
ஆனால் அவர் முன்வைக்க விரும்பும் இலச்சினை தாமரைப்பூ.
😂😂
bjp lanka என்று பெயர் வைப்போம் எனக் கூறாதவரைக்கும் okay
😂😂
5 hours 27 minutes ago
மருத்துவம், கற்பித்தல் இரண்டுமே புனிதமான பணிகள். உயிரை காப்பதும், வாழ்வை வளம்படுத்தி, சமுதாயத்தை உருவாக்கி உயர்த்தும் பணிகள். என்றொரு நாள் இதற்குள் சுயநலம் புகுந்ததோ அன்றே அந்த சமுதாயத்திற்கு சாவு மணி அடித்தாயிற்று.
5 hours 28 minutes ago
டேய் குமாரசாமி இனித்தான்ரா நீ வெரி கெயார் புல்லாய் இருக்க வேணும்..😎
5 hours 33 minutes ago
விவசாயி உண்மையிலேயே உங்கள் எழுத்தை வாசித்து பிரமித்துப் போய் நிற்கிறேன். நீங்கள் வேற லெவலய்யா. நமக்குள் இப்படியான எழுத்தை இப்போதுதான் முதல்முதலாக வாசிக்கிறேன். கிண்டலாக பேசலாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிலேடையாக நெளிக்கலாம். உங்கள் படைப்பு பிரமாண்டம். தேர்ந்த உலக அரசியல் அறிவுள்ள ஒருவரால் மட்டுந்தான் இப்படி எழுதலாம். விவசாயி உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன்.
Checked
Sat, 02/27/2021 - 06:45
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed