22 minutes 39 seconds ago
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட கல்லடி மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
KalmunaiMay 28, 2022
(பாறுக் ஷிஹான்)
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது
கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார்.
பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியை பார்வையிட துணைக்கு அழைத்து சென்றுள்ளதுடன் அங்கு சிறுவனுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இவ்வாறு குறித்த மின்வாசிப்பாளர் சென்ற பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம் குறிப்பிட்டுள்ளார்.இதனால் குறித்த மின்சார சபை ஊழியர் அன்றைய தினம் தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து மறுநாளான வெள்ளிக்கிழமை (27) அதிகாலை அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து மனைவி உள்ளிட்ட உறவினர் தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.
பின்னர் உயிரிழந்தவர் உடல் கூற்று விசாரணையின் படி கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால் மூச்சு திணறி இறப்பு சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் திருமணமாகியுள்ளதுடன் இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
http://www.battinews.com/2022/05/blog-post_711.html
26 minutes 15 seconds ago
வடக்கு மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து உதவிகள்!
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இவற்றை காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.samakalam.com/வடக்கு-மக்களுக்கு-இந்திய/
46 minutes 15 seconds ago
பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐
47 minutes 11 seconds ago
அங்கு போலீஸ் என்பவர்கள் தமிழருக்குள் நிறைய குற்றம்களும் தற்கொலைகளும் அதிகரிக்கணும் எனும் நோக்கில் நீண்டகால தமிழ் இன அழிப்புக்கு துணையாக குந்தி இருப்பவர்கள் .
உங்கள் ஜெர்மனி அப்படியா சாமி ?
வடமராட் சியின் முக்கிய நகரங்களில் தமிழ் அரசியவாதி ஒருத்தரின் மதுபான விடுதிகள் மக்களின் எதிர்ப்பின் பின் துரத்துபட்டு புறாப்பொறுக்கி பக்கம் ஒதுங்கி உள்ளது .
அதுதான் சிங்களவன் கோல்பேசில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஊத்தினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறான் .
1 hour 10 minutes ago
இணைப்புக்கு நன்றி.
1 hour 24 minutes ago
பண்டைய தென்ஈழத்தில், (இலங்கை) இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு!
பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத் தின் சுவடுகளைத் தேடிச் சென்றேன்.
2300 வருடங்களுக்கு முன்பு மகாநாகன் எனும் நாகமன்னன் அமைத்த
இரு இராச்சியங்களில் ஒன்றே மகாநாககுல எனும் இராச்சியமாகும்.
பராக்கிரமபாகுவின், தமிழ்த் தளபதியான... ரக்கா கங்குகநாதன் என்பவன்
1000 ஆண்டுகளுக்கு முன்பு சுகலா எனும் அரசியிடம் இருந்து இந்த இராச்சியத்தைக் கைப்பற்றி
சிலகாலம் ஆட்சி செய்து வந்தான் எனும் குறிப்பும் உள்ளது.
எனவே பிற்காலத்தில் இது ரக்கா நுவர (ரக்கா நகரம் ) எனப் பெயர் பெற்றது.
அதுவே பின்பு ரம்பா நுவர எனத் திரிபடைந்தது.
அம்பாந்தோட்டை நகரின் வடக்கில்... 12 கி.மீ தூரத்தில்
இந்த இராச்சியத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன.
வன நதி எனும் வளவ கங்கை. கொஸ்வத்து ஆறு ஆகியவற்றால் சூழப்பட்ட
ஓர் தீவின் நடுவில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்டைய நகரம் அமைந்து ள்ளது.
இங்குள்ள பௌத்த விகாரையின் பின்பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில்
இதன் இடிபாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
நாகவழிபாட்டில் ஈடுபாடு கொண்ட மகாநாக மன்னனின் நகரில்
நாக வழிபாட்டின் சுவடுகளைத் தேடிச் சென்றேன்.
அப்படிப்பட்ட சுவடுகள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை.
ஆனால் அது சிவபூமி யாக இருந்தது.
இங்கிருந்த காட்டுப்பகுதியில் இருந்த இடிபாடுகளின் மத்தியில்..
மொத்தமாக 7 சிவலிங்கங்களைக் கண்டேன்.
மிகப்பழமையான சிதைந்த லிங்கங்கள் மூன்று.
பழமை வாய்ந்த தாரா லிங்கங்கள் மூன்று.
பழமையான நாகலிங்கம் ஒன்று.
பழமையான ஆவுடையார் ஒன்று.
இவை எல்லாமே 1500 வருடங்களுக்கு முற்பட்டவை.
3000 ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் குறிப்பிட்ட
சிவபூமியின் பண்டைய சுவடுகள்... தென்னிலங்கையில் தான் உள்ளன.
ஆம். இதுதான் சிவபூமி.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
ஈழம்(இலங்கை)
அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின்... அம்பாந்தோட்டை மாவட்டத்தில்
இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள... நகரசபை ஆகும்.
இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
புவியியலும் காலநிலையும்
அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும்.
இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப்
பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது.
1950 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும்.
இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர்.
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின்
மக்களின அடிப்படையிலான மொத்த மக்கள் தொகையில்,
மொத்தம்-46777
இதில்,
சிங்களவர்-37839
தமிழர்-805
இந்திய வம்சாவழி-54
இஸ்லாமியர்-2830
பரங்கியர்-52
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
மொத்தம்-46777
இதில்,
பௌத்தர் -37769
சைவம்-590
இஸ்லாம்-8092
கத்தோலிக்கம்-169
ஏனைய கிறிஸாதவம்-141
ஏனையவர்-16
இதிலிருந்து இந்த அம்பாந்தோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்...
தமிழர்கள், காலம் காலமாக சைவ சமயத்தோடு பாரம்பரியமாக வாழ்ந்த பகுதிகள்,
இன்று கை நழுவி... சிங்கள பௌத்த குடியேற்றங்கள் மூலம், சிங்களவர் தேசமாக போன பரிதாபம்.
https://m.facebook.com/story.php?story_fbid=424281546189401&id=100058226779513
https://www.facebook.com/110874614371759/posts/445613364231214/
வேரடி தேடுவோம்.
1 hour 38 minutes ago
50 நாளில்... 74 வருட அரசியலின், முகமூடியை கழட்டிய, காலிமுகத்திடல் போராட்டம்.
1 hour 46 minutes ago
தேசபந்து தென்னகோனின்... தொலைபேசி இதுவரை, கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்?
சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
https://athavannews.com/2022/1284258
1 hour 49 minutes ago
1 hour 57 minutes ago
2 hours 3 minutes ago
இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
Getty ImagesCopyright: Getty Images
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.இதனையடுத்து, சஷி வீரவன்ச தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (30) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச, சில காலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவரும் அவருடைய சகாக்களும், அரசாங்கத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
https://www.bbc.com/tamil/topics/cz74k7p3qw7t?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=6290c7a84259031cb5a254a5%26இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை%262022-05-27T14%3A16%3A12.027Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:b16f4de9-5392-4cff-b7c7-f0bce521bdd9&pinned_post_asset_id=6290c7a84259031cb5a254a5&pinned_post_type=share
2 hours 21 minutes ago
ஐபிஎல் 2022: பெங்களூருவின் கனவு தகர்ந்தது... பட்லர் சதத்தால் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்
அஷ்ஃபாக்
பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
பட மூலாதாரம்,BCCI/IPL
படக்குறிப்பு,
ஐபிஎல் 2022இல் பட்லரின் நான்காவது சதம் இது.
ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஆர்.சி.பியின் நீண்ட நாள் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி 2008க்கு பிறகு 2வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது குவாலிஃபயர் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் பெரும்பாலும் தோல்வியை தழுவி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த முறை டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பொறுப்பான ஆட்டம் - சாதித்த படிதர்
விராட் கோலி 7 ரன்களில் ப்ரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு டூ பிளெசிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரஜத் படிதர் கடந்த ஆட்டத்தை போன்றே இந்த முறையும் நேர்த்தியாக ஆடினார். சிறப்பான ஷாட்களால் பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்ட படிதர், 40 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் டு பிளெசிஸ் 25, மேக்ஸ்வெல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். படிதர் 42 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரிகள் விளாசி 58 ரன்களில் விடைபெற்றார். ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்திருக்கிறார் ரஜத் படிதர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தானின் பந்துவீச்சு தாக்குதல்
பெங்களூருவின் ரன் குவிப்பை துல்லியமான பந்துவீச்சின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது ராஜஸ்தானின் பந்துவீச்சுப் படை. குறிப்பாக ராஜஸ்தான் பவுலர் பிரசித் கிருஷ்ணா விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா என முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதே சமயம் மெக்காயும் தனது பங்குக்கு 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஏலம் போகாத வீரரின் அதிரடி ஆட்டம்: எலிமினேட்டரில் லக்னோவை வென்றது ஆர்.சி.பி
தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது"
158 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே 2 சிக்சர் 1 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்து அதிரடியை தொடங்கியது. பவர் பிளே முடிவில் 67 ரன்கள் சேர்த்து போட்டியை தன் வசப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஜெய்ஸ்வால் 21, சஞ்சு சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும் களத்தில் தனது வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தார் அதிரடி பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர்.
பட்லர் சதத்தால் தகர்கப்பட்ட ஆர்.சி.பியின் கனவு
சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட பட்லர், 59 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். நடப்பு தொடரில் இது அவருக்கு 4வது சதம். ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார் பட்லர். சதம் அடித்த கையோடு ஹர்ஷல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு விளாச, ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவின் முடிவு, 1
60 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கேப்டன்
தோல்விக்கு பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ், "முதல் செஷன் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று இருந்தது. உண்மையில் அதிகமான பவுன்ஸ் இருந்தது. 180 ரன்கள் எடுக்க நினைத்தோம் என்றார். ஆர்.சி.பிக்கு இது ஒரு சிறப்பான சீஸன். மிகவும் வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் ஆர்.சி.பி அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்கு சென்று விளையாடினாலும் ஆர்.சி.பி.. ஆர்.சி.பி என்கிற முழக்கத்தை கேட்க முடிந்தது. மும்பை விளையாடியபோது கூட ஆர்.சி.பிக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டது உணர்வுப்பூர்வமாக இருந்தது. எங்கள் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றார்.
பட மூலாதாரம்,@JOSBUTTLER
படக்குறிப்பு,
ஜோஸ் பட்லர்
பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், டாஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உண்மையில் அது முக்கிய பங்கு வகித்தது. 2வது இன்னிங்சில் ஆடுகளம் மாறியிருந்தது. ஜாஸ் பட்லர் போன்றதொரு சிறந்த பேட்ஸ்மேன் கிடைப்பதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
14 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப்போட்டியில்...
ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது 2வது முறை.. 2008ல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து மறைந்த ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதற்கு பின்னர் 2013, 15,18ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்று வரை வந்த ராஜஸ்தானுக்கு வெற்றி கைகூடவில்லை. இப்போது மீண்டும் சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ள ராஜஸ்தான், பலம் வாய்ந்த குஜராத் டைடன்ஸை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.
குவாலிஃபயரின் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான், குஜராத்திடம் தோல்வியை தழுவியது கவனிக்கத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் இறுதி யுத்தம் ஞாயிற்றுக்கிழமை (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது. கோப்பையை வெல்ல இரு அணிகளும் சம பலத்துடன் போராடும் என்பதால் ஆடுகளத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.
https://www.bbc.com/tamil/sport-61615366
2 hours 22 minutes ago
👉 https://www.facebook.com/100080995713213/videos/568659104929927 👈
நீண்ட நாளைக்குப் பின் கேட்ட... "டிங்கிரி சிவகுரு" பாணியிலான நகைச்சுவை ஒலிப்பதிவு. 😂
அதில் ஒருவர்... மட்டக்களப்பு தமிழிலும், மற்றவர் யாழ்ப்பாண தமிழிலும் உரையாடுவது...
ஒலிப்பதிவிற்கு அழகு சேர்க்கின்றது. 🤣
2 hours 23 minutes ago
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் குழுவை வழிநடத்துகிறாரா பிரசாந்தன்?
May 27, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு பொலீஸ் தலைமயகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்ட பொலீஸ் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த குறித்த குழுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தான் வழிநடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் தங்களது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் நேற்று முன்தினம் 25 திகதி குறித்த நபர்களுடன் நடாத்திய ஆலோசனை கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அவர்களுக்கும் தங்களது கட்சிக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர்களிடம் பொய் உரைத்து விட்டு தற்போது அவர்களை அழைத்து கூட்டம் நடத்தும் பிரசாந்தன் தான் குறித்த குழுவை வழிநடத்துகிறார் என்பது ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
இவர்கள் ஆளும் கட்சியின் பங்காளிகள் என்பதால் தான் இது வரைக்கும் இவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லையா? காவல்துறையினரை நடவடிக்கை எடுக்க விடாமல் பிரசாந்தன் அழுத்தம் கொடுத்து வருகிறாரா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களைச் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் admins களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலீஸ்மா அதிபர் கூறியுள்ளார். ஆனால், பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் குழுவினர் முகநூலின் ஊடாக மேற்கொண்ட அவதூறு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்த பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கூறியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
https://www.ilakku.org/is-prasanthan-leading-a-group-threatening-journalists/
2 hours 30 minutes ago
நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு விசா வழங்கியது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது.
Photograph: Stephanie Coombes
இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்கு அவுஸ்திரேலிய விசா வழங்கப்பட்டுள்ளது.
நடேஷ் முருகப்பன் குடும்பத்தினர் புகலிட அந்தஸ்து கோரும் வேளையில் அவர்கள் சட்டபூர்வமாக அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கு ஏற்ப தற்காலிக இணைப்பு விசாவை தான் வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் பொருளாளரும் பதில் உள்துறை அமைச்சருமான ஜிம் சால்மர்ஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அக்குடும்பத்தினருடன் நான் கலந்துரையாடினேன். அவர்கள் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு வாழ்த்தினேன் என ஜிம் சால்மர்ஸ் கூறினார்.
நடேஷ் எனும் நடேசலிங்கம் முருகப்பன் 2012 ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலிய சென்றவர். பிரியா 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்றவர். இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் சந்தித்து திருமணம் கொண்டவர்கள்.
அவுஸ்திரேலியாவின் குயின்லாந்த்தில் மாநிலத்திலுள்ள பிலோயலா நகரில் நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு கோபிகா எனும் மகளும் 2017 ஆம் ஆண்டு தருணிகா எனும் மகளும் பிறந்தனர்.
2018 மார்ச்சில் பிரியாவின் இணைப்பு விசா (பிரிட்ஜிங் விசா) காலாவதியாகிய நிலையில், நடேசலிங்கம், பிரியா ஆகியோரை அவுஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்தது.
இத்தம்பதியினருடன் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு பிள்ளைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இக்குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு எதிராக பிலோயலா நகர மக்கள் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இத்தீர்ப்புகளையடுத்து நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மேன்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதால் நாடு கடத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன. 2018 மார்ச் முதல் இக்குடும்பத்தினர் மெல்பேர்ன் நகரிலுள்ள குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இக்குடும்பத்தினரின் நாடு கடத்தலுக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றமும் நிராகரித்தது.
அதையடுத்து இக்குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசு தீவிரப்படுத்தியது.
2019 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி திகதி இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விசேட விமானமொன்றில் அவர்கள் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது.
எனினும் இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை தருணிகா (Tharunicaa) சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து விமானம் அவுஸ்திரேலியாவின் வட பிராந்திய நரான டார்வினில் தரையிறங்கிய போது இக்குடும்பத்தினர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எனினும் அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
தருணிகா சார்பான விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்குழந்தையுடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். தருணிக்காவின் தந்தை நடேசலிங்கமும் மூத்த சகோதரி கோபிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தமது குடும்பத்தினரை ஒன்றிணைக்க உதவுமாறு பிரியா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்பின் இக்குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பேர்த்தில் நகரில் தற்காலிகமாக வசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் கடந்த வருடம் ஜூன் மாதம் அறிவித்தார்.
அண்மையில் நடந்த பொதுத் தேர்தலின்போது, தாம் வெற்றி பெற்றால், நடேஷ் – பிரியா குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கு அனுமதிப்பதாகவும் பிலோயெலா நகருக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப் போவதாகவும் தொழிற்கட்சி கூறியிருந்தது இருந்தது.
இந்நிலையில் நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/128316
2 hours 39 minutes ago
மக்கள் போராட்டத்தால் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி வழங்கிய ஆஸ்திரேலியா
டிஃபானி டர்ன்புல்
பிபிசி செய்தியாளர், சிட்னி
2 மணி நேரங்களுக்கு முன்னர்
பட மூலாதாரம்,HOMETOBILO/TWITTER
படக்குறிப்பு,
2018-ஆம் ஆண்டு முதல் தடுப்பு முகாமில் இருக்கும் நடேஸ் முருகப்பன் குடும்பம்
ஆஸ்திரேலியாவின் அகதிகள் அடைக்கல கோரிக்கை குறித்த கொள்கைகள் மீதான கோபத்தை ஒருமுகப்படுத்திய, கிறிஸ்மஸ் தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ள நடேஸ் முருகப்பன் குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்குத் திரும்புவதற்கான நான்கு ஆண்டு காலப் போராட்டம் வெற்றியடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நடேஸ் முருகப்பன் குடும்பத்திற்கு விசா வழங்கியது. அவர்கள் தற்காலிகமாக பில்லோவீலாவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் குடும்பம் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி வருவோர் பெரும்பாலும் அவர்களுடைய குடும்பப் பெயரைக் கொண்டு அறியப்படுவார்கள். ஆனால், நடேஸ் முருகப்பன் குடும்பம் மட்டும் பில்லோவீலா குடும்பம் என அழைக்கப்படுகிறது. பில்லோவீலா என்பது ஆஸ்திரேலியாவில் அவர்கள் 4 ஆண்டுகளாக வசித்து வந்த நகரத்தின் பெயர்.
இலங்கை தமிழ் குடும்பத்தை தீவில் இருந்து விடுவித்தது ஆஸ்திரேலியா - தொடரும் சிக்கல்கள் என்ன?
கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்குமா அரசு?
ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் இரு இலங்கை தமிழ் சிறுமிகளின் கதை
நாடு கடத்தப்படுவதற்கு எதிரான சட்டப் போராட்டங்கள்
இலங்கை தமிழ் குடும்பமான நடேஸ் முருகப்பன் மற்றும் பிரியா தம்பதியினரும் அவர்களுடைய குழந்தைகளான, ஏழு வயதான கோபிகா மற்றும் நான்கு வயதான தாருணிகா ஆகியோர் தான் அந்த பில்லோவீலா குடும்பம். அவர்களின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நடேசலிங்கம் முருகப்பன், பிரியா நடராஜா இருவரும் வெவ்வேறு தருணங்களில், இலங்கை உள்நாட்டுப் போருக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி, ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். நடேஸ் 2012-ஆம் ஆண்டிலும் பிரியா அதற்கு அடுத்த ஆண்டிலும் வந்தனர். அடைக்கலம் கோரி இருவரும் ஆஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்களை ஆஸ்திரேலிய அரசு வழங்கியது.
குடியேறிகளுக்கு வேலை வழங்கும் இறைச்சிக் கூடங்களைக் கொண்ட பில்லோவீலா நகரில் அவர்கள் குடியேறினார்கள். அங்கு சந்தித்துக் கொண்ட இருவரிடையே காதல் மலரவே திருமணம் செய்துகொண்டார்கள். கோபிகா, தாருணிகா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
ஆஸ்திரேலியாவில் பிரியா மற்றும் நடேஸின் குடியேற்ற விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியைப் பெறுவதற்கான வரைமுறைகள் அவர்களுக்கு இல்லையென ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது.
பட மூலாதாரம்,HOMETOBILO
2018-ஆம் ஆண்டு நடேஸ் முருகப்பன் குடும்பத்தின் தற்காலிக விசா காலாவதியானபோது, அவர்களை வெளியேற்ற முயற்சி நடந்தது. அப்போது ஆறாயிரம் பேர் வசிக்கும் பில்லோவீலா நகரத்தைச் சேர்ந்தவர்கள், நடேஸ் முருகப்பன் குடும்பத்தை நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
நடேஸ் முருகப்பன் குடும்பம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் இடைக்காலத் தடை பெற்றனர். பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடந்தன. சமூக ஊடகங்களில் அவர்களுக்கு ஆதரவு பெருகின.
இந்த வழக்கு ஒரு கூக்குரலைத் தூண்டியது. பில்லோவீலாவில் உள்ள உள்ளூர் மக்கள் நடேஸ் முருகப்பன் குடும்பம் திரும்புவதற்காகப் பிரச்சாரம் செய்தார்கள்.
தடுப்பு முகாம் வாழ்க்கை
பில்லோவீலாவில் உள்ள உள்ளூர் மக்கள் அவர்கள் தங்குவதற்காகப் போராடினார்கள். தேசியளவிலான ஆதரவையும் அரசியல் களத்தில் பல்வேறு எம்.பிக்களின் ஆதரவையும் பெற்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
அவர்களுக்குப் பாதுகாப்பை மறுக்கும் முடிவுக்கு எதிரான சட்டரீதியான சவால்கள் ஆஸ்திரேலியாவின் நீதிமன்றங்களில் உள்ளன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
நடேஸின் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதியளிக்குமாறு போராட்டங்கள் நடந்தன
சர்ச்சைக்குரிய கொள்கைகளின் கீழ், நடேஸ் முருகப்பன் போன்ற அடைக்கலம் கோருபவர்களை ஆஸ்திரேலியாவில் காலவரையற்ற காவலில் வைக்கலாம். அதேவேளையில் அவர்களின் அகதி கோரிக்கைகளை மதிப்பிடுவது அல்லது அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற முடிவை எடுக்கும்.
ஆனால், கடந்த சனிக்கிழமை தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஆந்தனி ஆல்பனீஸ், நடேஸ் முருகப்பன் குடும்பத்திற்கு தனது அரசு விதிவிலக்கு அளிக்கும் எனக் கூறினார்.
"மக்களை மோசமாக நடத்தக்கூடாது என்ற செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும் அளவுக்கு நாங்கள் வலுவான சமூகமாக இருக்கிறோம். இவ்வளவு காலமாக இது எப்படி நடந்தது என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது," என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார். ஆனால், தற்காலிக விசாவுக்குப் பதிலாக நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தக் குடும்பத்திற்கு ஆதரவளிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"பில்லோவீலாவுக்கான அவர்களுடைய பயணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட, வலி மிகுந்த அத்தியாயம் முடிவடைவதைக் குறிக்கிறது. மேலும், அந்தக் காயங்கள் குணமடைவதற்கும் மீண்டு வருவதற்குமான தொடக்கமாகவும் அது இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவர்கள் நிரந்தரமாக இருக்க அனுமதிக்கும் வரை இந்தக் குடும்பம் பாதுகாப்பாக இருக்காது," என்று அந்தக் குடும்பத்தின் நண்பர் ஏஞ்சலா ஃபிரட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமையன்று ட்வீட் செய்தார்.
அடைக்கல கோரிக்கையை மறுமதிப்பீடு செய்வதற்காக நடேஸ் முருகப்பன் குடும்பம் நீண்ட சட்டப் போராட்டத்தையும் நடத்தியது.
பட மூலாதாரம்,SIMONE CAMERON
படக்குறிப்பு,
இலங்கைக்கு அனுப்பப்பட்டபோது தங்களுடைய ஆதரவாளர்களை நடேஸ் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்
அந்தக் குடும்பத்தை நாடு கடத்த நடந்த இரண்டு முயற்சிகளுக்குப் பிறகு, 2019-இல் விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவு அவர்களின் வழக்கு தீர்க்கப்படும் வரை, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பளித்தது. அவர்கள், 1,500 நாட்களுக்கும் மேலாக குடியேற்ற காவலில் (அதில் பெரும்பாலான நாட்கள் ஆஸ்திரேலிய புறக்காவல் பகுதியான இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவில் இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, தருணிகாவுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதால், அவர்கள் தீவிலிருந்து பெர்த்தில் இருக்கும் சமூக காவலுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த ஆண்டு பிபிசியிடம் அவர்கள் நீண்டகாலமாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்கள். அவர்களுடைய மூத்த மகள் கோபிகா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தடுப்பு முகாமில் தான் கழித்துள்ளார். தடுப்பு முகாமில் இருந்த ஆண்டுகள் மனச்சோர்வை ஏற்படுத்தியதாக பிரியா கூறினார்.
இதற்கிடையில், குடும்பம் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டபோது வெறும் ஒன்பது மாதமாக இருந்த தருணிகாவுக்கு, மோசமான ஊட்டச்சத்து காரணமாக பல் சொத்தையானது. அதை அகற்றுவதற்கு இரண்டு வயதிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, 2019-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மற்றொரு நோய்க்காக இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடைக்கல கோரிக்கையாளர்கள் மீதான கடுமையான கொள்கைகள் மனித கடத்தல் மற்றும் கடலில் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதாக ஆஸ்திரேலியா வாதிடுகிறது. ஆனால், ஐநா அதன் அணுகுமுறை மனிதாபிமானற்றது என்று விமர்சித்துள்ளது.
https://www.bbc.com/tamil/global-61612098
2 hours 46 minutes ago
அமைதிப் போராட்டம் தொடங்கி... இன்றோடு, 50 ஆவது நாள்: நீதிமன்றம் தடை உத்தரவு !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
https://athavannews.com/2022/1284240
2 hours 48 minutes ago
75% கட்டுமான தொழிலாளர்கள்... வேலை இழக்கும், அபாயம் !
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சுமார் 75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பெருமளவிலான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் அறிவித்துள்ளது.
https://athavannews.com/2022/1284255
2 hours 50 minutes ago
நிறைவேற்று அதிகார... ஜனாதிபதி முறைமை நீக்கம் – சர்வஜன வாக்கெடுப்பு... அவசியம், என சட்டமா அதிபர் அறிவிப்பு.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரும் அரசியலமைப்பின் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நாடாளுமன்றிற்கு தனிநபர் பிரேரணையாக சமர்பிப்பித்தனர்.
இந்நிலையில் அவர்கள் சமர்ப்பித்த 21 மற்றும் 22ஆம் திருத்தங்கள் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது.
ஆகவே அதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உத்தரவிட்டு வியாக்கியானம் அளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான விசாரணையின் போது இதனை சட்டமாதிபர் அறிவித்தார்.
சட்டமாதிபர் சார்பில் இம்மனுக்கள் தொடர்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா இதனை உயர்நீதிமன்றில் அறிவித்தார்.
மத்தும பண்டார மற்றும் விஜயதாஷ ராஜபக்ஷ ஆகியோரின் தனிநபர் பிரேரணைகளை சவாலுக்குட்படுத்தும் குறித்த மனுக்கள் நேற்று முன்தினமும், நேற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
https://athavannews.com/2022/1284216
2 hours 51 minutes ago
மருத்துவப் பொருட்களை... இலங்கைக்கு, நிவாரணமாக... வழங்கியது இந்தியா !
25 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள மருத்துவப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியுள்ளது.
இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் குறித்த மருத்துவப் பொருட்கள் கையளித்தார்.
குறித்த மருத்துவப் பொருட்களின் பெறுமதி சுமார் 260 மில்லியன் இலங்கை ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://athavannews.com/2022/1284235
Checked
Sat, 05/28/2022 - 08:03
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed