3 months 2 weeks ago
திட்வா புயல் - இலங்கையின் தற்போதைய நிலவரத்தை காட்டும் 20 புகைப்படங்கள் படக்குறிப்பு,வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான திட்வா புயலால் இலங்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலரையும் காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு,நுவரெலியாவிற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மண் சரிவால் மூடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,கடைகளைச் சூழ்ந்துள்ளா மழை வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,மீட்புப் பணிகளுக்காக படகுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74x3zxelw3o
3 months 2 weeks ago
எங்கள் காலத்தில் ஷெல், விமான குண்டு வீச்சு காலங்களில்தான் இப்படி உடல் சிதறும் அவல காட்சிகள் தென்படும். போர் இப்போது இல்லை. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு விட்டது. ஆனால், உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். என்ன கொடுமை சாமி இது. விசுகரின் கருத்தை பார்த்தேன். செய்தியில் உள்ள படத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் இயற்கை அனர்த்தனத்தில் அவலப்படும்போது உள்ளூர் ரவுடிகள், தாதாக்களுக்கு வேறு பிரச்சனைகள்.
3 months 2 weeks ago
உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே ! சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருறியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநர் 57, உடற்கல்வி இயக்குநர் 102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும். ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tn-trb-exam-85-000-teachers-fail-in-tamil-subject-754703.html டிஸ்கி : இதில் இவர்களுக்கு எந்த தேர்வும் இல்லாமல் விண்ணப்ப முதிர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமாம் . மத்திய அரசு அலுவர்களுக்கு இணையான சலுகைகள் , மற்றும் ஒய்வூதியம் , பணி பாதுகாப்பு அனைத்தும் வேண்டுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் கான்வென்டில் படிப்பார்களாம் அரசு பள்ளிகளின் கல்வி தரம் அந்த அளவில் தான் இருக்கும் அப்புறம் அடுத்த மாநிலத்தான் நம் அரசு வேலைகளை பறிக்கிறான் என்று கூப்பாடு வேறு..?
3 months 2 weeks ago
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கழிமுக அகலப்படுத்தும் நடவடிக்கை இலங்கை கடற்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன வீரர்களை மீட்க ஏற்கனவே விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/navy-personnel-missing-disaster-site-chundikulam-1764506135
3 months 2 weeks ago
புதிய இணைப்பு Update - 06:47 விபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாம் இணைப்பு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விழுந்து இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்குள்ளான போது குறித்த உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்ததாகவும், குறித்த நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/extreme-weather-helicopter-accident-1764506677
3 months 2 weeks ago
மாவிலாறு அனர்த்தம்! 1,000 பேரின் அவலநிலை.. ஜனாதிபதிக்கு நேரடியாக வந்த தொலைபேசி அழைப்பு மாவிலாறு உடைப்பை தொடர்ந்து சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து விமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் காப்பாற்றப்பட்டு வருதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அவசர கலந்துரையாடலின் போது ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்த ஒருவர், தங்கவெளி கிராமத்தில் உள்ள சுமார் 1,000 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்காலிக தங்குமிடம் இதற்கிடையில், நேற்று (29) இரவு மூதூர் மற்றும் நீலபொல பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் கிண்ணியா நகரம் தற்போது முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரங்களில் இருப்பதாகவும், அவர்களை மீட்க கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவில்ஆறு குளக் கரை உடைப்பு சோமபுர, சிறிமங்கலபுர, கல்யாறு மற்றும் தெஹிவத்த பகுதிகளைப் பாதித்து வருகிறது, மேலும் அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை சேருநுவரவில் உள்ள நவோதயா பாடாசாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் சேருவில ராஜமகா விஹாரையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட உள்ளனர். https://tamilwin.com/article/immediate-action-rescue-1000-people-mavil-aru-1764502671
3 months 2 weeks ago
மாவிலாறு அணை உடைந்துள்ளது மூதூர், வெருகல், சேருவில கடும் பாதிப்பு..! 30 Nov, 2025 | 04:42 PM மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்த நிலையில் மூதூர், வெருகல், சேருவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாவலி ஆற்றில் அதிக நீர் ஓட்டம் மற்றும் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மாவிலாறு நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி ஒரே நீர்த்தேக்கமாகக் காணப்பட்டது. மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் . பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் நீர்ப்பாசன இயக்குநர் நாயகம் கேட்டுக்கொள்கிறார். கடற்படையினர் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கங்கை பாலத்திற்கு அருகாமையில் உள்ள முறிஞ்சாறு உடைப்பு எடுத்தன் காரணமாக மூதூர் பயணம் உப்பாறு பாலம் வழியாக போக முடியாமல் தடைப்பட்டுள்ளது. வெருகல் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. ஈச்சிலம்பற்று வைத்தியசாலை பாதிக்கப்பட்டுள்ளது. கங்குவேலி பாடசாலை மற்றும் முத்துவிநாயகர் விவசாய சம்மேளன கட்டிடம் முமுமையாக நீரில் மூழ்கி உள்ளன. மூதூர் - இறால் குழி , நாவலடி பிரதேச மக்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர் இவர்கள் அந்- நஹார் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாபிநகர், வேதத்தீவு மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மகாவலி கங்கை பெருக்கெடுப்பால் மாவிலாறு அணை உடைந்ததால் மூதூர், வெருகல், சேருவில மக்களின் வயல்கள், வீடுகள், கால் நடைகள் அழிவடைந்துள்ளன. https://www.virakesari.lk/article/232062
3 months 2 weeks ago
கந்தப்பளை - எஸ்கடேல் பகுதியில் மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 04:47 PM நுவரெலியா - இராகலை பிரதான வீதியில் கந்தப்பளை, எஸ்கடேல் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். மண்ணில் புதையுண்டவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த பகுதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே இன்றைய தினம் வானிலை வழமைக்கு திரும்பி மழை இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரையில் மண்ணில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை பொலிஸாரும் பொது மக்களும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியை, தரம் 9 தரம் 6 கல்விபயிலும் இரண்டு மகன்கள் மற்றும் வயோதிப பெண் ஒருவர் என நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/232060
3 months 2 weeks ago
கொத்மலை அனர்த்தத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண், காயமடைந்த இருவர், வெளிநாட்டவர்கள் உட்பட 24 பேர் இந்திய விமானப்படையின் ஒத்துழைப்புடன் மீட்பு 30 Nov, 2025 | 04:45 PM கொத்மலை பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டுசென்றுள்ளனர். இன்று (30) இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI 17 (Indian Ac) ஹெலிக்கொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232059
3 months 2 weeks ago
செயலிழந்துள்ள தொலைபேசி இணைப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் தடையின்றி பராமரிக்க தொலைபேசி சேவை வழங்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, விரைவில் தகவல் தொடர்பு வசதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் பந்துல ஹேரத், TRCSL அதிகாரிகள் மற்றும் மொபைல் போன் சேவை வழங்குநர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். நுகர்வோருக்கு சிறப்பு சலுகை (Mobitel) மொபிடெல்: 7677 என்ற எண்ணுக்கு 'YES' என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள், 300 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் 3 நாள் பேக்கேஜ் பெறலாம். கூடுதலாக, SLT-Mobitel லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு வசதிகளையும், ஃபைபர், ஹோம் 4G LTE மற்றும் ADSL உள்ளிட்ட பிராட்பேண்ட் பயனர்களுக்கு வரம்பற்ற இணைய அணுகலையும் வழங்குகிறது. (Hutch) ஹட்ச்: எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் சலுகை. #3111# ஐ டயல் செய்வதன் மூலம் சலுகை பெறலாம். இதற்போது நுகர்வோருக்கு சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (Dialog) டயலொக் மற்றும் எயார்டெல்: எந்த நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள், 250 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் இலவச சலுகை #006# ஐ டயல் செய்வதன் மூலம் பெறலாம். https://tamilwin.com/article/announcement-regarding-the-broken-telephone-lines-1764496286 வடக்கு, கிழக்கு, தெற்கில் சில மாகாணங்களில் Dialog நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி இணைப்புகள் மட்டுமே செயலிழந்தது. Mobitel, Hutch இரண்டும் இயங்கியது.
3 months 2 weeks ago
திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு - 55 பேர் விமானம் மூலம் மீட்பு! 30 Nov, 2025 | 03:27 PM திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர். இதேவேளை மேலும் 22 பேர் விமான மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்றுவருகின்றதாக தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/232051
3 months 2 weeks ago
திடீரென ரத்தான Flights.. உலகளவில் எதிரொலித்த பிரச்னைக்கு என்ன காரணம்? | Airbus A320
3 months 2 weeks ago
Sri Lankaவில் மழை நின்ற பின்னும் குறையாத ஆபத்து; தொடர்ந்து Death Counts அதிகரிப்பது ஏன்? திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 228 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அரசும் 'ஆபரேஷன் சாகர்பந்து' என்ற பெயரில் மீட்பு பணிக்கு உதவி வருகிறது. இந்த சூழலில் மின்சாரம், தகவல் தொடர்பு சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை பற்றி இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள். #SrilankaRains #SirlankaFlood #DitwahCylone இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
3 months 2 weeks ago
நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்றை ஆரம்பித்து உள்ளோம். இன்றைய தினம் காலை 7.00மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான - குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால்மா, ரஸ்க்) - அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு) - குழந்தைகளுக்கான சோப் - தொற்றுநீக்கிகள் - நுளம்புவலை - பிளாஸ்டிக் பாய் - படுக்கை விரிப்புகள் - தேயிலை - பால்மா - சீனி - நுளம்புத் திரி - பிஸ்கெட் வகைகள் - பொதி செய்யப்பட்ட உணவுகள் - தண்ணீர் போத்தல்கள் - தறப்பாள் - Towels போன்றவற்றை வழங்கலாம். முதற்கட்ட நிவாரணமாக இன்றைய தினம் காலை 11 மணிக்கு, பாரவூர்தி செல்ல இருக்கிறது. தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை சேகரிப்பு பணி தொடர்ந்து நடைபேறும். சேகரிப்பு மையம் தொடர்பான அனைத்து பணிகளும் யாழ் மருத்துவபீட மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும். நன்றி. A Relief Supply Collection Centre has been established at the Faculty of Medicine, Jaffna for the public to donate essential items. From 7.00 a.m. today, the collection point will be functioning at the main entrance area (Aadiyapatham Road). Those who wish to extend their support may contribute urgently needed items such as: - Baby food (biscuits, milk powder, rusks) - Sanitary items (sanitary pads & diapers for women and children) - Baby soap - Disinfectants - Mosquito nets - Plastic sheets - Bed sheets - Tea - Milk powder - Sugar - Mosquito coils - Biscuit varieties - Packaged food items - Bottled water As the first phase of relief, a lorry carrying supplies will depart at 11.00 a.m. today. The collection process will continue until further notice. All activities related to the collection centre are being coordinated by the Student Union of the Faculty of Medicine, Jaffna. Thank you. தன்னார்வலர்களால் எம்மிடம் கையளிக்கப்படும் இடரனர்த்த உதவிப்பொருட்களை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு பகிர்ந்து கொள்வதற்காக, உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் சேகரிப்பு மையம் - யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் (இராமநாதன் வீதி) அமைக்கப்பட்டுள்ளது. ☎️தொடர்புகளுக்கு - லஜிதன் : +94 76 205 6557 (தலைவர், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) - கஜேந்திரன் : +94 76 090 0982 (தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம்) பேரனர்த்தத்துக்குள்ளாகியிருக்கிற எங்களது மக்களை மீட்டெடுக்கும், உயரிய பணியில் உங்களையும் பங்காளர்களாக அன்புரிமையுடன் அழைக்கின்றோம். - ஒருங்கிணைப்பாளர் : ம.தனுஷன் (உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்) +94 77 530 2813
3 months 2 weeks ago
மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்??? வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡
3 months 2 weeks ago
மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்??? வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡
3 months 2 weeks ago
30 Nov, 2025 | 04:02 PM சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஞாயிற்றுக்கிழமை (30) இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பிரதேச செயலாளர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், மேன்மேலும் துரிதமான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக மேலதிக ஒருங்கிணைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் துரித நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கவனத்திற்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கலுக்காக - தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக - சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது. 1. பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 03 நாட்களுக்கு சமைத்த உணவு பிரதேச செயலாளர் ஒழுங்கமைப்பில் வழங்க முடியும். மேலதிக நாட்களுக்கு வழங்க வேண்டியிருப்பின் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேலும் 04 நாட்களுக்கு வழங்க முடியும் எனவும், அதற்கு மேலும் 07 நாட்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படின் அமைச்சின் செயலாளர் அனுமதி பெற்று வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார். 2. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருக்காமல் அவர்களுடைய வீடுகள் அல்லது நண்பர்கள் ,உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவு வழங்கலாம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீரான உணவு விநியோகத்தில் வினைத்திறனான ஒத்துழைப்பினை வழங்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். 3. அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் பிரதேச செயலாளர்கள் மூலமே பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், ஏற்கனவே பிரதேச செயலகங்களுக்கு அவசர தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட தறப்பாள், நுளம்பு வலைகள், மடிக்கும் கட்டில்கள் வழங்கப்பட்டதற்கு மேலதிகமான தேவைப்பாடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு தாம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றதும் பிரதேச செயலகங்களின் தேவைக்கு ஏற்ப மேலும் பங்கிட்டு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. மேற்படி பிரதேச செயலாளர்கள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபங்கள், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இது தொடர்பான திருத்தப்பட்ட கடிதங்கள் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு உரிய தெளிவூட்டல்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித இடையூறும் அற்ற வகையில் சமைத்த உணவு வழங்குமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் பங்குபற்றியதுடன், நேரடியாக இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வை. தர்சினி, அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் ஆ. நளாயினி ஆகியோர் பங்குபற்றினார்கள். https://www.virakesari.lk/article/232056
3 months 2 weeks ago
வெள்ளத்துக்கு பிறகு பலர் அசுத்தமான நீரும் நுளம்புகளும் காரணமாக உடல்நலப் பிரச்சனைகள் பெறலாம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். சுத்தமான அல்லது கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்கவும், உடனடி சமைத்த உணவு சாப்பிடவும், காயங்களை மூடி வைத்திருக்கவும், வெள்ளநீரை தவிர்க்கவும். நுளம்பு விரட்டும் கிரீம் பயன்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், அடிக்கடி கைகள் கழுவவும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது ஏதாவது விசித்திரமான அறிகுறிகள் இருந்தால் உடனே டொக்ரரைச்சந்திக்கவும்(டொக்ரர் அரச்சனாவை அல்ல😂
Checked
Fri, 03/20/2026 - 22:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed