நானும் அவனும்..!
அன்னை ஒரு பிறவி தந்தாள்..
அடுத்தொரு பிறவி நீ எனக்கு தந்தாய்..
மண்ணில் இந்த பறவை வாழ...
உந்தன் மனசில் கூடு ஒன்று எனக்களித்தாய்....
மரணம் வரும் நாள் வந்தால்...
கண்ணா ... உன் மடியில்
சாகும் வரம் தாயேன்!
தோள் உரசி நாம் நடக்க...
சூரியன் மெல்ல மெல்ல கண் மூட...
தொடுவானம் குங்கும குளத்தில் நீராட..
தூரத்து நிலவு எறியும் ஒளியை...
ஆளுக்கு பாதியாய்..
அள்ளிக் கொள்வோமா..
அழகிய முரடா?
கடலோரம் ஒரு மாலை...
நாம் நடை போட...
கண் சிமிட்டும் விண் மீன்கள் ..
எம்மை எடை போட...
கால் தடுக்கி நான் விழுவேன்..
கல கல என நீ சிரிப்பாய்...
கரை மணலை அள்ளி உன் மேல் நான் விசிற...
ஏய் வேணாம் அடிப்பேன்...
என்று சொல்லி மீண்டும் சிரிப்பாய்...
வாழ்வு என்பது எதுவடா??
என் வசீகரா..
உன்னோடு நான் வாழ்வதுதான் அல்லவா???
கை கோர்த்து நாம் போக ...
களவாய் தென்றல் வந்து என் கூந்தல் கலைக்க...
உன் விரல் கொண்டு கோதி விடுவாய் மீண்டும்...
வசந்தம் தோளில் வந்து கூடு கட்டுமே!!
வானவில் போன்ற அழகிய பாசம்
என்றென்றும் எனக்கு வேண்டுமே!!!
Recommended Comments