Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களம்!!

-----------------

இது எங்கள் தாய் களம்...

தமிழால் நாமெல்லாம் உள்ளம்

நனைக்க குதிக்கும் குளம்!

ஒரு வகையில் புலம் பெயர்ந்த

நமகெல்லாம்..

தமிழை தமிழால் அர்ச்சிக்க

வாயில் திறந்த புண்ணிய தலம்!

இங்கே புதினங்கள் இருக்கிறது....

புதிர்களும் உயிர்கிறது....

வாழ்த்துக்களும் பொழிகிறது...

வசைபாடலும் தொடர்கிறது...

அறிவியலும் இருக்கிறது..

அந்நியன் திரை படம் பற்றிய

பேச்சும் இருக்கிறது...

தேசத்தின் குரல் எடுத்து பாடும்

தேசிய குயில்களும் வாழ்கிறது...

தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்

தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!

நாவில் நீர் ஊற வழி செய்யும்

நள பாக முறையும் இருக்கிறது..

நான்கு இமையும் மூடி சிரிக்க

நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...

ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது!

இருந்தும்...எம்மை மறந்து...

இட்ட அடி பிரள விட்டு...

எம் முகத்தில் நாம் அறைந்து...

எமக்குள் மோதி ...

ஏதோ வெற்றி பெற்றதாய்..

எண்ணி இந்த சந்தன மேடையை சிலசமயம்

சாக்கடை ஆக்கி போகிறோம்...

சுகம் கொள்கிறோம்- பிறர் மனசை கொல்கிறோம்!

தங்கத்தை காய்ச்சி முதுகில் வைத்தால்..

சருமம் தீய்ந்து போகாதென்று நினைப்போ? தெரியவில்லை!

எது எப்படியோ....

அமெரிக்காவில் இருப்பவருடன்

ஒரு செல்ல சண்டை..

லண்டனில் இருப்பவருடன்

ஒரு வாதம்..

கனடாவில் வாழ்பவருடன்

ஒரு கருத்து பகிர்வு...

கொலண்டில் குடியேறியவருடன்

ஒரு கொள்கை விவாதம்..

ஜேர்மனியிலிருந்து வருபவரிடம்

ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

ஆகா..

யாழ் களமே..உன் உடலில் பரந்திருப்பது...

வெறும் தந்தி நரம்புகளல்ல...

விதி என்று போனதால் தாய் நிலம்

பிரிந்து துயருறும்

ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..

ஒன்றாய் அணைப்பவளே...

உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்

விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

கரும்பு காட்டிடையே அலையும்

எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

தந்தையின் மார்பு மிதித்தேறி..

தாயின் தோழில் தாவி...பின்..

அவள் மடியில் குதித்துருண்டு சென்று...

உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..

உன்னால் கொண்டோம்!

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...

வரலாற்று ஆவணம்!

அவதானமாய் சேகரித்தால்..

அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?

உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..

நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!

0 Comments

Recommended Comments

There are no comments to display.

Guest
This blog entry is now closed to further comments.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.