எம்மிடம் போனில் (தொலைபேசி) கேட்ககூடாத கேள்விகள்
அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பயிற்றுனர்கள் வழங்கும் சேவை மருத்துவர்கள் செய்யும் சேவைக்கு ஒப்பானது.
வாகனம் ஓடுபவர்கள் எதிர்காலத்தில் தமக்கு உடல், உயிர் பொருட்சேதங்கள் ஏற்படாமல் தப்புவதற்கு முறையாக வாகனம் ஓடுவதற்கு கற்றுக்கொள்வதோடு, அதை சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து, தமது அனுபவங்கள் மூலமும், ஆர்வம் மூலமும் வாகனம் ஓடுதலில் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். எதிர்பாராது நடைபெறும் சம்பவங்கள் நீங்கலாய் ஏனைய எல்லா சந்தர்ப்பத்திலும் சவாரியின் செளகரியமும், பாதுகாப்பும் வாகனத்தை ஓடுகிற சாரதியின் கைகளிலேயே தங்கி இருக்கிறது.
சாரதி பயிற்சி நெறியை பெற்று கொள்வது தொடர்பாய் எமது நிறுவனத்திற்கு தினமும் ஏராளம் தொலைபேசி அழைப்புக்கள் வரும். அதில் பெருன்பான்மையின "விலை விசாரிப்பதாய்" அமையும்.
சாரதி பயிற்சி நெறி என்பது சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் கிலோ எவ்வளவு என்று கேட்டு வாங்கி கூடையில் போடுகிற கொடுக்கல் வாங்கல் போன்றது அல்ல என்று பலருக்கும் தெரிவது இல்லை. சாரதி பயிற்சி நெறி வாகனம் ஓடுபவர்களினதும், பாதசாரிகள், தெருவை பாவிக்கிற அனைவரினதும் உடல், உயிர், வாழ்க்கை, எதிர்காலம் சம்மந்தப்பட்டது.
இங்கு போனில் (தொலைபேசி) எம்மிடம் கேட்கக்கூடாத அல்லது தவிர்க்கப்படவேண்டிய சில வினாக்களை தருகிறோம். "கேட்ககூடாததன்" என்பதன் அர்த்தம் என்ன என்றால் தவறான அணுகு முறையை குறிக்கிறது.
கேள்வி 01: நான் எவ்வளவு காலத்தில் லைசன்ஸ் எடுக்கலாம்?
குறிப்பிட்ட ஒரு மாணவனை நேரில் கண்டு அவர் வாகனம் ஓடுவதை மதிப்பீடு செய்யாதவரை ஒருவரது ஆற்றலை போன் ஊடாக எதிர்வு கூற முடியாது. சிலர் உடனடியாக விடயங்களை பிடித்து கற்று கொள்வார்கள், சிலர் அதிகளவு பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னரே வாகனத்தை முறையாக ஓடும் நிலைக்கு முன்னேறுவார்கள். சிலருக்கு வாகனம் ஓட தெரிந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து அதற்கேற்ப வாகனம் ஓடுவதற்கு தெரியாமல் இருக்கும்.
வீதி பரீட்சையில் உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்று பரீட்சிப்பது இல்லை. பரீட்சை விதி முறைகளுக்கு அமைய போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்றே பரீட்சிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு திறமையான சாரதியாக காணப்பட்டாலும், எத்தனை வருடங்கள் அனுபவம் இருந்தாலும் வீதி பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் வாகனத்தை சரியாக ஓடி காண்பிக்க தெரியாவிட்டால் உங்களால் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொள்ள முடியாது, சோதனையில் தோல்வியே கிடைக்கும்.
எவ்வளவு காலத்தில் ஒருவர் லைசன்ஸ் எடுக்கலாம் என்பது அவரவர் தனி தன்மைகளுக்கு ஏற்ப வேறுபடும்.
தொடரும்.............
தகவல்: போக்குவரத்து
Recommended Comments