ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
திருமலையில் வீதியமைப்பு என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியமர்த்த திட்டம்! திருகோணமலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி என்ற பெயரில், வீதி அமைப்பு அதிகாரசபை மூலம் உயர் மட்டத்தினரால் அவசர அவசரமாக திருகோணமலை - புத்தளம் வீதியையும், திருகோணமலை - கண்டி வீதியினையும் இணைக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டு எட்டு கட்டங்களாக இந்த வேலைகள் துரித கதியில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்தே உயர்மட்ட உத்தரவுகளும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும், இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பும் இதற்கு முழுமையாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது இராணுவத்தினர் இந்த வீதி அமைப்புக்க…
-
- 2 replies
- 1k views
-
-
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அனல் மின் நிலையம்அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. [sunday December 31 2006 08:34:18 AM GMT] [pathma] தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அனல் மின் நிலையத்தை திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த அனல் மின் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இந்திய அரசு, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில், சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதை விரும்பவில்லை என்று தெரிவித்தள்ளது. இதற்கு பிரதான காரணியாக சம்பூருக்கும் திருகோணமலை துறைமுகத்திற்கும் இடையி…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு வெவ்வேறான நிதி ஒதுக்கீடு [sunday December 31 2006 08:48:30 AM GMT] [pathma] வடக்கு - கிழக்கை பிரிப்பதற்கு சிறிலங்கா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 2007 ஆம் அண்டிற்கான நிதி ஒதுக்கீடு இரு மாகாணங்களுக்கும் தனித்தனியாகவே இருக்கும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அடமிரல் மொகான் விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இரு மாகணங்களும் தற்போது தனித்தனியாக சுதந்திரமாக உள்ளன. அதனால் வடக்கு - கிழக்கு ஆளுநர் என்ற பதவி நீக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இரு திறைசேரிகள் தனித்தனியாக இயங்கும். 18 வருடங்கள் ஒன்றாக இயங்கிய இரு மாகாணங்களும் தனித்தனியாக இயங்க…
-
- 1 reply
- 752 views
-
-
வடக்கு - கிழக்கு இணைப்பு: ஐ.தே.க. யோசனை சமர்ப்பிக்கிறது. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு 8-10 வருடங்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டமொன்றை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பிக்கவுள்ளது. எதிர்வரும் 8 ஆம் நாள் (08.01.07) நடைபெறவுள்ள அனைத்து கட்சி குழுக்கூட்டத்தில் இதனை சமர்ப்பிக்கவுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தருவதுடன், மாகாணங்களின் இணைப்பை உத்தியோகபூர்வமாக்க அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்ட ரீதியான தீர்மானங்களுக்கும் எமது கட்சி ஆதரவு வழங்கும். எனினும் இந்த ஆதரவு 8-10 வருடங்கள் மட்டுமே அதாவது நிரந்தர இணைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது. 8 அல்…
-
- 1 reply
- 759 views
-
-
கண்காணிப்பு பணிகளை இடைநிறுத்தியதற்கு இலங்கை அரசு விளக்கம் கோர முடிவு போர்நிறுத்த கண்காணிப்பு குழு தற்போது நிலவும் யுத்த சூழலின் பின்னணியில் தனது கண்காணிப்புப் பணிகளை கடந்த 27ம் திகதி திருமலையில் இருந்தும் மறுநாள் ஏனையபகுதியில் இருந்தும் இடைநிறுத்தியமைக்கான காரணம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாக விளக்கம் கோருவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா தகவல் தொடர்புத் திணைக்களம், மாற்று ஏற்பாடுகள் எவற்றையும் மேற்கொள்ளாது, வடக்குக் கிழக்கில் இருந்து கண்காணிப்பாளர்கள் அனைவரையும் கண்காணிப்புக் குழு கொழும்பிற்கு மீளப் பெற்றிருப்பதாக, குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை சிறீலங்கா படைத்துறைப் ப…
-
- 0 replies
- 716 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டிய படைத்தளபதி. பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைப்புலிகளிற்கு துணைபோகக் கூடாது என யாழ் குடா படைத்தளபதி டி.எ.சந்திரசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட்ட குழுவினருடன் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பின் போது ஏ-9 நெடுஞ்சாலையை மக்கள் போக்குவரத்திற்கு திறந்துவிடுமாறும் இவ்வாறு திறந்துவிட்டால் பல்கலைக்கழக மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்க மாட்டார்கள் எனவும் பல்கலைக்கழக பேராசிரியர்களால் வலியுறுத்தப்பட்டது. இதற்குப் பதிலளித்த டி.ஏ.சந்திரசிறி பாதை விடயம் தொடர்பாக ஜனாதிபதிதான் முடிவு எடுக்கவேண்டும் எனவும் ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதல…
-
- 0 replies
- 821 views
-
-
சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார். இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப…
-
- 10 replies
- 2.1k views
-
-
வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் கருணா கட்சியும் போட்டியிடும். வாகரைப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத் திட்டம் என்றும் அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக "றொய்ட்டர்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறும்போது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவின் அரசியல் கட்சியும் போட்டியிடும் என்றும் ஆய்வாளர் கருதுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வாகர…
-
- 5 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு [சனிக்கிழமை, 30 டிசெம்பர் 2006, 14:14 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர். …
-
- 0 replies
- 891 views
-
-
மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்தவர்களை மூதூர் தெற்கில் தங்க வைக்க ஆலோசனை வீரகேசரி வாரவெளியீடு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தாக்குதல் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களை தற்காலிகமாக மூதூர் தெற்கில் உள்ள சில பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் கிழக்கில் இயல்பு நிலைமை ஏற்பட்டதும் பின்னர் இவர்கள் மூதூர் கிழக்கில் நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனப் பிரதிநிதிகள் சகிதம் நிறுவன மற்றும் அதிகாரிகள் குழுவொன்று குறித்த மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி, பட்டித்திடல் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகள், பொது இடங்களை …
-
- 0 replies
- 631 views
-
-
முல்லைத்தீவில் விமானக்குண்டு வீச்சு ஐந்து பொதுமக்கள் படுகாயம் வீரகேசரி வாரவெளியீடு முல்லைத்தீவில் இலங்கை வான்படையினரின் 2கிபீர் விமானங்கள் நேற்று நடத்திய வான் குண்டு வீச்சுத் தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த வான் குண்டு வீச்சுத் தாக்குதல் சிலாவத்தைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதித்திட்டப் பணிப்பாளரின் வீட்டில் குண்டு வீழ்ந்து வெடித்து அவருடைய வீடும் அருகில் உள்ள கத்தோலிக்க அருட் சகோதரிகளின் பெண்கள் விடுதியும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக தியோக நகர் கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இத் தாக்குதலில் விஜயகுமார் மதிமாறன் (வயது 14)…
-
- 0 replies
- 811 views
-
-
இனப்பிரச்சனைக்கான புதிய யோசனை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் முன்வைக்கப்படும். இனப்பிரச்சனை தீர்வுக்காக இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் யோசனை தொடர்பாக இந்திய இலங்கை அரசாங்கங்கள் மத்தியில் இணக்கம் ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இனப்பிரச்சினை தீர்வுக்கான இலங்கை அரசாங்கத்தின் யோசனை எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை வரும் போது இந்த விடயம் குறித்து இந்தியாவின் கருத்துக்களும் முன்வைக்கப்படவுள்ளன. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சமர்பிக்கும் யோசனை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் இணக்கமும் பெற்றுக்…
-
- 1 reply
- 768 views
-
-
சிறிலங்காப் படையினரால் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் வீட்டிற்குச் சென்ற சிறிலங்காப் படையினரும் துணைஇராணுவக்குழுவினரும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் உவர்மலைக் கீழ் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் வீட்டிற்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர். இவரது வீட்டை தங்களது தொடர்பகமாக பாவிக்கப் போவதாகவும் அவ்வாறு வீட்டைத் தர மறுத்தால் வீட்டை உடைக்கப் போவதாகவும் அத்தோடு அவரை கொலை செய்வோம் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. www.sankathi.com
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவம் மனிதாபிமானப் பிரச்சினைகளை போராயுதமாக்குகிறது: த.தே.கூ. குற்றச்சாட்டு மனிதாபிமானப் பிரச்சினைகளை போராயுதமாக சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வருடம் 2005, மே மாத காலப் பகுதியில் மட்டக்களப்பு எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்த இராணுவம், சீமெந்து, எண்ணெய் மற்றும் முக்கிய கட்டுமாணப் பொருட்களை பொதுமக்கள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதித்து, வாகரைப் பகுதியில் ஆழிப்பேரலை புனர்நிர்மாணப் பணிகள் நடைபெறாது முடக்கியது. பின்னர் ஒரு வருடம் கழித்து 2006 ஆம் ஆண்டில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக, உத்தியோகபூர்வமாக தடையை அமுல்படுத்தியது. தாக்குதல…
-
- 0 replies
- 642 views
-
-
நளினி விடுதலையாகிறார்? வேலூர் சிறையில் 14 ஆண்டு தண்டனை முடித்த ராஜீவ்காந்தி கொலைக்கைதி நளினி உற்பட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது பற்றி நீதிபதிகுழு ஆலோசனை நடத்தியுள்ளது. வேலூர் தொரப்பட்டியில் உள்ள ஆண்கள் சிறை, பெண்கள் சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளில் 14 ஆண்டு தண்டனையை ஒழுங்காக முடித்தவர்கள் ஆண்டு தோறும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் 2007 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வேலூர் ஆண்கள் சிøறயிலும் பெண்கள் சிறையிலும் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது பெண்கள் சிறையில் உள்ள கைதிகளில் 14 ஆண்டு தண்டனை முடித்தவர்களில் நன்னத்தையுடன் நடந்து கொண்டவர்களை விடுதலை செ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வாகரையில் எறிகணை- வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள். வாகரையில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் மற்றும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கல்லாறு, கரடிக்குளம் மற்றும் வாழைச்சேனை சிறிலங்காப் படை முகாம்களில் இருந்து படையினர் இன்று சனிக்கிழமை தொடரான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். வான்படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதுடன் கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளன. www.puthinam.com
-
- 1 reply
- 986 views
-
-
முரண்பாடுகளை களைந்து சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்தலாம்: ரணில். முரண்பாடுகளைக் களைந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று ஐக்கியதேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறு சிறு விடயங்களுக்காக நாம் முரண்பட்டுக்கொண்டு பிரிந்திருந்தோமானால் இனப்பிரச்சினைக்கு என்றும் தீர்வுகாண முடியாது என்பதுடன் அதிகாரப்பகிர்வின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்பதே எம்முடைய கொள்கையாகும். என்றும் அவர் மேலும் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடக நலன்புரி சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்…
-
- 0 replies
- 719 views
-
-
குடாநாட்டில் இரவு எட்டு மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல் வீரகேசரி நாளேடு சாவகச்சேரியில் தேடுதல் யாழ். குடாநாட்டில் நேற்று முதல் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நேரம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை தளர்த்தப்பட்டிருந்தது. தற்போது தளர்வு நீக்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு அமுலாகும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென்மராட்சியில் நேற்று பகல் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததுட
-
- 0 replies
- 890 views
-
-
குடா நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலை [saturday December 30 2006 06:39:19 AM GMT] [virakesari.lk] யாழ். குடாநாட்டில் புது வருடத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர்கள் தமது புதிய வகுப்புகளுக்கு செல்ல முடியாத சூழல் தோன்றியிருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் கற்றல் உபகரணங்களான கொப்பிகள், பேனைகள், பென்சில்கள், காகிதாதிகள், புத்தகங்கள் போன்றவை பெரும் பற்றாக்குறையாக இருப்பதுடன் பல இடங்களில் கொப்பிகள், பேனைகள் இல்லை. மேலும் சில இடங்களில் இப்பொருட்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் ஏழை மற்றும் வறிய மாணவர்களினால் இப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது இரு…
-
- 0 replies
- 898 views
-
-
இலங்கைக்கு ஒரு புதிய நோய்! - உதயன் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது, மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளாமை என்பன குறித்துச் சாடி வந்த வெளி உலகம் சர்வதேசம் இப்போது இந்த நாட்டில் ஊழல் கள் மலிந்து வருவதை கண்டிக்கத் தொடங்கி உள்ளது. இந்த வரிசையில், அமெரிக்காவின், ஆசியப் பிராந்தியங்களுக்கான வெளியுறவுக் கொள்கைக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் ஊழல்கள் மலிந்து வருவதை அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை இல்லாத போக்கை கடும் தொனியில் எச்சரித்திருக்கிறது. இலங்கை அரசாங்கம், ஊழல் பெருகுவதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்வதில்லை என்று எள்ளி நகையாடி இருக்கிறது அமெரிக்க செனெட்டின் குழு. ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்கு, லஞ…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழில் மீண்டும் செயலிழந்தது கையடக்க தொலைபேசி சேவை! கடந்த செப்ரம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மோதல் சூழ்நிலைகாரமாக எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது வெறும் இராணுவ நலனுக்காக யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினை வழங்கிவந்த டயலொக் நிறுவனம் தனது சேவையினை நேற்று வியாழக்கிழமை தொடக்கம் இடைநிறுத்திக்கொண்டது. இது தொடர்பாக தமது யாழ்ப்பாண வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியினையோ, மன்னிப்பினையோ கோரியிராத மேற்படி நிறுவனம் அதற்கும் ஒருபடி மேல்போய் சேவை நிறுத்தப்பட்டபின்னரும், இணைப்பினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டிருந்தவர்களுக்கு தொடர்ந்தும் தொலைபேசிக்கட்டணங்களை அனுப்பியும் வந்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த கிறிஸ்மஸ் தினத்திலிருந்து திடீர் என்று அங்கு தனது சேவையினை ஓரள…
-
- 3 replies
- 1.4k views
-
-
திருமலை, கிளிநொச்சி கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் கொழும்பு வந்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு. திருகோணமலை, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் கொழும்புக்குத் திரும்பியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டதால் உண்டான சிக்கல்களை அடுத்தே மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் இருந்து குழுவின் பிரதிநிதிகள் கொழும்பு திரும்ப நேர்ந்ததாக அறியப்படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கும் நடவடிக்கைகள் காரணமாக தமது பணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சிறி லங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் டோறிஸ் எஜேரி தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 820 views
-
-
பாதுகாப்பு நிலவரம் குறித்து இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத் பொன்சேகா பலாலியில் ஆராய்வு. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜென்ரல் சரத் பொன்சேகா நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். பலாலியில் கட்டளைத் தளபதிகள் மற்றும் படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்து விளக்கினார். சிவில் நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இராணுவத் தளபதி களமுனைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தினார். இச்சந்திப்பில் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் பிரசன்னமாகி இருந்தார். இதன்பின் இராணுவத் தளபதி துறைமுக மற்றும் விமானத்துறை பிரதி…
-
- 0 replies
- 754 views
-
-
ஒட்டுக்குழுக்கள் கொலைப் பயமுறுத்தல் விடுத்து வர்த்தகர்களிடம் பணம் பறிப்பு. வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் வர்த்தகர்களிடம் பணம் பறிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியா நகரில் பல்வேறு ஒட்டுக்குழுக்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில் வர்த்தகர்களிடம் அச்சுறுத்தி பெருமளவு பணத்தை அபகரித்து வருகின்றனர். ஒரே வர்த்தகர் பல்வேறு ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகி பலதரப்பிடம் இலட்சக்கணக்கான பணத்தை இழக்கும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வர்த்தகர்கள் ஒட்டுக் குழுக்களின் கொலைப் பயமுறுத்தல்களினால் இலட்சக்கணக்கான பணத்தை ஒப்படைக்கும் நிலையால் பெ…
-
- 0 replies
- 605 views
-
-
நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி ஆட்சி செய்யும் மகிந்த: கொழும்பு ஆங்கில நாளேடு சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்த ராஜபக்ச மட்டும்தான் உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவின்றி ஒரு வருடமாக ஆட்சி நடத்தி வரும் அரச தலைவர் என்று கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. கொழும்பு நாளேடு மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகின்றது. ஆனால் அவர்களுக்கு நன்மை கிட்டும் வரைக்கும் தான் அவர்களின் ஆதரவு தொடரும். எனவே மகிந்த ஒரு பெருன்பான்மை அரசை அமைக்க வேண்டுமாக இருந்தால் ஜே.வி.பி.யை அரசுக்குள் இழுக்க வேண்டும் அல்லது ஐ.தே.கவில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்க வேண்டும். இந்த முயற்சிகள் தான் தற்போது மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 649 views
-