Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம் இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு, வந்த உடனே அற்புதங்களை செய்ய அவர் மயாஜால வித்தைக்கார் அல்ல. எனவே அணியை நெறிப்படுத்த அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா தெரிவித்தார் கடந்த 2, 3 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணி, சர்வதேச அரங்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் இலங்கை அணி பங்குபற்றிய 29 ஒரு நாள் போட்டிகளில் 23 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரலாற்றில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இவையனைத்துக்கும் விமோசனம…

  2. அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடுவர்களுடன் வாதிடும் விராட் கோலி. - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்தவரும் வரலாற்றறிஞரும் சமூகச் சிந்தனையாளருமான ராமச்சந்திர குஹா வருத்தத்துடன் சாடியுள்ளார். கொல்கத்தா…

  3. ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி ஜே.பி.டுமினி சாதனை! ஜே.பி.டுமினி. - கோப்புப் படம். | அகிலேஷ் குமார். தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளார். நியூலேட்ண்ட்சில் நடைபெற்ற மொமெண்டம் ஒன் டே கப் போட்டியில் டுமினி லெக் ஸ்பின்னர் எடி லீயி என்பவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார். நைட்ஸ் அணியின் 240 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடிய கேப் கோப்ராஸ் அணி 36வது ஓவரில் 208/2 என்று சவுகரியமாக இருந்தது. டுமினி களத்தில் இருந்தார். போனஸ் புள்ளி பெற வாய்ப்பிருக்கிறது என்பதால் டுமினி, எடி லீயி என்ற லெக்ஸ்பின்னரை அடித்து நொறுக்குவது என்று திட்டமிட்டார். முதலில் ஒரு…

  4. விளையாட்டு: செய்தித்துளிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 6.30 மணிக்கு மவுண்ட் மவுங்கனுயி நகரில் நடைபெறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - வடகிழக்கு யுனைட்டெடு அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் வடகிழக்கு அணி 9 ஆட்டத்தில் 2 வெற்றி…

  5. 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்... பல பிரிவுகளில் கில்லியடித்த விராட் கோலி! சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் - விராட் கோலி 2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - ஸ்டீவ் ஸ்மித் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணி - டேவிட் வார்னர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டிகாக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென…

  6. வயது இரண்டரை தான். இந்தச் சென்னை சிறுவனின் கிரிக்கெட் ஆட்டம் உங்களை கவரக்கூடும் சென்னையைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவுக்கு தற்போது இரண்டரை வயதாகிறது. ஐந்து மாத வயது குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து சனுஷ் விளையாடியதாகவும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவரது தந்தை கூறுகிறார். படத்தின் காப்புரிமைSANUSH தற்போது நெகிழி பந்துகளில் கிரிக்கெட் விளையாடும் சனுஷ், தொழில்முறை கிரிக்கெட்டரைப் போல அழகாக டிரைவ் ஆடுகிறார். இந்தியா புக் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ் 'இளம் குழந்தை கிரிக்கெட்டர்' என சனுஷை அங்கீகரித்திருக்கிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைச் சந்தித்து வாழ்த…

  7. ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்! ரோஹித் சர்மா, பார்த்திவ் படேல். - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது. மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப…

  8. கிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சல் விரட்டு விளையாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜல்லிக் கட்டு போன்று மஞ்சல் விரட்டு பாரம்பாரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பல கிராமங்களில் மஞ்சல் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது. பின்னர் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற மஞ்சல் விரட்டு இடம்பெறாது இருந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் மஞ்சல் விரட்டும் நிகழ்வு கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேச இளைஞர்களால் நடத்தப்பட்டுள்ளது. தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில் துணி ஒன்றில் பணம் அல்லது பிடிக்கப்படும…

  9. இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை ! மரதன் போட்­டி­களில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார் இலங்­கையின் மரதன் வீராங்­க­னை­யான ஹிருணி விஜே­ரத்ன. டெக்­ஸாஸின் ஹொட்­சனில் நடை­பெற்ற சர்­வ­தேச மரதன் போட்­டியின் போதே ஹிருணி இந்த புதிய சாத­னையை படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்­கனை நிலூகா ராஜ­சே­க­ர­வினால் நிலை­நாட்­டப்­பட்­டி­ருந்த இரண்டு மணித்­தி­யா­லயம் 40 நிமிடம் 7 வினா­டி­களில் அடைந்த பந்­தயத் தூரத்தை, தற்­போது ஹிருணி விஜே­ரத்ன இரண்டு மணித்­தி­யா­லயம் 36 நிமி­டங்கள் 35 வினா­டிகளில் கடந்து இலங்­கையின் தேசிய சாத­னையை புதுப்­பித்­துள்ளார். இந்த தேசிய சாத­னை­யுடன் எதிர்­வரும் ஏப்ரல் மா…

  10. கோலியின் மகுடத்தில் மற்றொரு வைரம்! கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த டொன் பிராட்மனின் சாதனையொன்றை விராட் கோலி முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியொன்றில், அணித் தலைவராகக் களமிறங்கி எட்டு முறை நூற்றைம்பது ஓட்டங்களைக் குவித்தவர் பிராட்மன். தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கோலி 153 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இது, டெஸ்ட் அணித் தலைவராக அவர் பெற்ற ஒன்பதாவது நூற்றைம்பது ஓட்டங்களாகும். இதன்மூலம், பிராட்மனின் சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி. டெஸ்ட் அணித் தலைவராக நூற்றைம்பது ஓட்டங்கள் கடந்தோர் பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் ஏழு 150 ஓ…

  11. பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்தது லிவர்பூல் அ-அ+ பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முற்றுப் புள்ளி வைத்தது லிவர்பூல். #PremierLeague #mancity #Liverpoo இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் போட்டியில் பிரைட்டன் அணியை 2-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அதன்பின் நேற்று லிவர்பூல் அணியை சந்திக்கும் வரை தோல்விய…

  12. ஆஸ்திரேலிய ஓப்பன் பதக்கம் யாருக்கு? - கலக்கத் தயாராகும் புதுமுகங்கள் வருடம் தொடங்கினாலே, டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு வருடத்தின் டென்னிஸ் போட்டிகளை பிள்ளையார்சுழி போட்டு தொடங்கிவைப்பது ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இன்று தொடங்கி (ஜனவரி 15), ஜனவரி 28-ம் தேதி வரை நடக்கிறது. அழகிய மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் 49 நாடுகளிலிருந்து 256 வீரர்கள் பங்கேற்கின்றனர். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாகக்கொண்ட வருடத்தின் மாபெரும் முதல் கிராண்ட்ஸ்லாம், வீரர்களின் அந்த வருடத்துக்கான டென்னிஸ் பயணத்தைக் கணிப்பதாகவே அமையும். இந்த…

  13. பங்களாதேஷ், ஸிம்பாப்வே, மற்றும் இலங்கை கலந்துகொள்ளும் முக்கோண ஒருநாள் போட்டி செய்திகள் முக்கோண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி திங்களன்று ஆரம்பமாகின்றன. இறுதிப் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும். 1. திங்கள்கிழமை 15.1.2018 பங்களாதேஷ் vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 2. புதன்கிழமை 17.1.2018 இலங்கை vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 …

  14. கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில், அணியொன்றினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நேபாள கட்புலனற்றோர் அணியுடன் இன்று (13) நடைபெற்ற லீக் போட்டியில் 494 ஓட்டங்களைப் பதிவுசெய்த இலங்கை அணி புதிய உலக சாதனை படைத்தது. கட்புலனற்றோருக்கான 40 ஓவர்கள் கொண்ட 5 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டுபாய் மற்றும் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்றன. டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சந்தன தேஷப…

  15. டி20 வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! ரிஷாப் பாண்ட் சாதனை டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பாண்ட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் 32 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். Photo Courtesy: BCCI சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இந்த தொடரின் வடக்கு மண்டலம் பிரிவில் டெல்லி - ஹிமாச்சலப்பிரதேச அணிகள் மோதிய போட்டி இன்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹிமாச்சலப் பிரதேச அணி 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரிஷாப் பாண்ட் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் டெல்லி அணியின்…

  16. 2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் 2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் என பல்வேறு விளையாட்டுகளில் முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஜனவரி இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20…

  17. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன்.... ஐ.பி.எல் ஏலத்துக்கு வரும் 1,122 வீரர்கள்! Chennai: 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கும் என்று …

  18. அவுஸ்ரேலியா இங்கிலாந்து அணிகளுக்கான முதலாவது ஓடி நாளை ஆரம்பம் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள முதலாவது ஓடி போட்டி நாளை அவுஸ்ரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இவ் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளதுடன் 1 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. அதனால் டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஓடி தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணி மோதவுள்…

  19. முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து அ-அ+ துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. துபாய்: துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. …

  20. T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார Image Courtesy - Cricinfo இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

  21. சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் போட்­டியில் பதக்கம் வென்ற முதல் இந்­தியர் சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் போட்­டியில் பதக்கம் வென்ற முத­லா­வது இந்­தியர் என்ற பெரு­மையை 21 வய­தான யுவதி அன்ச்சல் தக்கூர் தன­தாக்­கிக்­கொண்டார். துருக்­கியில் நடை­பெற்ற அல்பைன் எஸ்டர் 3200 கிண்ண பனிச்­ச­றுக்கல் போட்­டியில் அன்ச்சல் தக்கூர் வெண்­கலப் பதக்­கத்தை வென்றார். இப் போட்டி சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் (ஸ்கி) சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­பட்­டது. இந்­தி­யாவில் பனிப்­பொ­லிவு இடம்­பெ­று­வது அரிது என்­பதால் குளிர்­கால விளை­யாட்டுப் போட்­டிகள் பெரி­தாக கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. வெண்­கலப் பதக்கம் வென்ற அன்ச்­சலை முத­லா­வ­தாக பாராட்­டி­ய­வர்­களில் இந்­தியப் பிர­தமர…

  22. வார இறுதி ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டி செய்திகள் வென்றது மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எவ்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது. மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய சேர்ஜியோ அகுரோ, போட்டியின் இறுதிக் கணங்களில் பெற்ற கோல் காரணமாகவே, ஆரம்பத்தில் ஒரு கோல் பின்தங்கியிருந்தபோதும் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது. காலிறுதிப் போட்டியில், மன்செஸ்டர் யுன…

  23. தந்தை வழியில் மகன்: ராகுல் திராவிட் வாரிசு சமித் அடித்த வெற்றிச் சதம் ராகுல் திராவிட் மகன் சமித். சச்சின் மகன் அர்ஜுன் தற்போது ராகுல் திராவிட் மகன் சமித் ஆகியோர் தந்தையர் கிரிக்கெட் வழியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே போல் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தன் தந்தை வழியில் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி ஒன்றில் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தார். விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார் …

  24. பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க முடியும்: குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாடும் பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க முடியும் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மெல்போன் கிரிக்கெட் குழு உறுப்பினர்களின் தலைமையில் அவுஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே குமார் சங்கக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவில் கிரிக்கெட் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தாம் இருப்பதாகவும், அவ்வாறு இடம்பெறாவிட்டால் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவினை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாகவும் குமார் சங்கக்கார கூற…

  25. பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்! கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்தவர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயது வீரர் முறியடித்துள்ளார். Photo Credit: Afgan Cricket board ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பீன்கர் பகுதி அணிக்காக விளையாடி வருபவர் பஹீர்ஷா மெஹ்பூப். கடந்த 2017 சீசனில் அறிமுகமான 18 வயது வீரரான பஹீர்ஷா, இதுவரை 7 முதல்தர போட்டிகளில் (12 இன்னிங்ஸ்கள்) 1,096 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆமோ ரீஜன் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே 256 ரன்கள் குவித்தார். உலக அளவில் அறிமுகப் போட்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.