விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
எல் கிளாசிகோ நேரம் மாற்றம் ஸ்பெய்னின் முக்கிய கால்பந்தாட்டக் கழகங்களான ரியல் மட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் எல் கிளாசிகோ ஆட்டம் நடைபெறும் நேரம் ஆசிய ரசிகர்களையும் கவரும்படியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பரம வைரிகளான இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டத்தைக் காண்பதற்கு உலகமே ஆவலுடன் காத்திருக்கும். வழக்கமாக இந்த ஆட்டங்கள் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கே ஆரம்பமாகும். ஆனால் மாலை 5.30 மணிக்கு இனி ஆட்டங்கள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/50614.html 2017-18 சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டி எப்போது …
-
- 1 reply
- 385 views
-
-
2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி நடத்தும் வாய்ப்பு பேர்மிங்காம் நகருக்கு 2022-ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது. டர்பன் நகர் போட்டியை நடத்த முடியாது எனக் தெரிவித்த மையினைத் தொடர்ந்து இந்த வாய்ப்பானது பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது. பிரித்தானிய காலணித்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இடம்பெற்று வருகின்றது. இறுதியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோவில் நடைபெற்றிருந்தது. அதேவேளை 2018-ம் ஆண்டிற்கான …
-
- 0 replies
- 418 views
-
-
அரையிறுதியில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஈ.எவ்.எல் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகியன தகுதிபெற்றுள்ளன. மன்செஸ்டர் சிற்றி, நேற்று இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் லெய்செஸ்டர் சிற்றியை வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் இல்கி குன்டோகன் கொடுத்த பந்தை பெர்னார்டோ சில்வா கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதிக் கணத்தில் லெய்செஸ்டர் சிற்றிக்கு கிடைத்த பெனால்டியை ஜேமி வார்டி கோலாக்க, போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அண…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கை அணியை முன்னோக்கி கொண்டுசெல்வதே எனது நோக்கம் : ஹத்துருசிங்க கடந்த காலங்களை விட்டு, இலங்கை அணியை நான் எவ்வாறு அடுத்த படிக்கு நிலைக்கு கொண்டுசெல்ல முடியுமென்பதிலேயே எனது முழுக்கவனமும் இருக்குமென இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹத்துருசிங்க தெரிவித்தார். இலங்கை கிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஹத்துருசிங்க கருத்துத் தெரிவிக்கையில், நான் இலங்கை கிரிக்கெட் அணிக…
-
- 1 reply
- 373 views
-
-
விடைபெற்றார் கால்பந்து நட்சத்திரம் ககா பிபாவின் 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்தவரும் AC மிலான் மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய பிரபல அணிகளின் முன்னாள் மத்தியகள வீரருமான ரிகார்டோ ககா கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். தற்பொழுது 35 வயதுடைய ககா பிரேசிலின் சாவோ போலோ அணிக்காக தனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்தார். மிக அண்மை வரை ஓர்லான்டோ சிட்டி MLS கழகத்திற்காக அவர் ஆடினார். கடந்த ஒக்டோபரில் முடிவடைந்த ஓர்லான்டோ பருவகால போட்டிகளிலேயே ககா கடைசியாக கால்பந்து போட்டிகளில் ஆடியிருந்தார். அது போன்றே AC மிலான் கழக இயக்குனர் பதவி ஒன்றுக்கு தான் அழைக்கப்பட்டதை கடந்த நவம்பரில் க…
-
- 1 reply
- 751 views
-
-
கோலியுடன் என்னை ஒப்பிடவேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் வலியுறுத்தல் பாபர் ஆஸம் - Getty Images ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடம், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருவதால் உலக கிரிக்கெட் அரங்கில் அவர், உயர்மட்ட அளவிலான இடத்தை பிடித்துள்ளார். சமீபகாலமாக அவரது திறனுடன் மற்ற முன்னணி வீரர்களின் திறன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்…
-
- 0 replies
- 678 views
-
-
இந்த நூற்றாண்டின் சிறப்பான பந்து வீச்சு இதுதான்! கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க் ஒரே பந்து வீச்சு மூலம் கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க்- வீடியோ பெர்த்: இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என கிரிக்கெட் உலகமே வர்ணிக்கிறது ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய அந்த ஒரு பந்தை. ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட், வேகபந்து வீச்சுக்கு பிரபலமான பெர்த்-டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதன் நான்காவது நாளில்தான் வியப்பூட்டும் அந்த ஒரு பந்து வீச்சு அதிசயம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணியின், வலது கை பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் அவுட்டாக்கப்பட்ட விதம்தான், அந்த பந்தை, இந்த நூற்றாண்டின் ச…
-
- 0 replies
- 698 views
-
-
ஜனவரி 27, 28-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு 2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது. மும்பை: உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது. 2018-ம் ஆண்டுக்கான 11-வது…
-
- 0 replies
- 324 views
-
-
டி10 கிரிக்கெட் லீக்: பஞ்சாபி லெஜண்ட்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கேரளா கிங்ஸ் ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஷார்ஜா: ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியும், கேரளா கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேரளா கிங்ஸ் முதலில் பந்து வீசியது. இதையடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுக் ரான்கியும், உமர் அக்மலும் களமிறங்கினர். லுக் ரான்கி …
-
- 0 replies
- 248 views
-
-
பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி 16-வது வெற்றியை ருசித்தது மான்செஸ்டர் சிட்டி பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றி தொடர்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை 4-1 என துவம்சம் செய்தது. பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தற்போதைய சீசனில் (2017-18) மான்செஸ்டர் சிட்டி அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் 15 வெற்றியை ருசித்திருந்த நிலையில் நேற்று, டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளி…
-
- 2 replies
- 507 views
-
-
ஆஸ்திரேலியாவில் அதிக தோல்வி: மோசமான சாதனையில் சச்சினுடன் இணைந்தார் குக் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக தோல்விகளை சந்தித்த வீரர்கள் என்ற மோசமான சாதனையில் சச்சினுடன் அலஸ்டைர் குக் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான அலஸ்டைர் குக்கிற்கு இது 150-வது டெஸ்ட் ஆகும். சிறப்புமிக்க இந்த டெஸ்டில் குக் 7, 14 என சொற்ப ரன்கள…
-
- 0 replies
- 304 views
-
-
2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம் Image Courtesy - EPA ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் ஸ்பெயின் அணி 2018 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அந்நாட்டு அரசு தொடர்ந்து தலையிட்டால் அடுத்த உலகக் கிண்ண போட்டியில் ஸ்பெயினுக்கு தடை விதிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஏஞ்சல் மரியா வி…
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் கோஹ்லி இல்லை : அணிக்கு புதிய தலைவர் இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வினை வழங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்திருக்கின்றது. எனினும், தற்பொழுது நடைபெற்று வரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினை தொடர்ந்து கோஹ்லி தலைமை தாங்கி வழிநடாத்துவார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகும் போட்டியுடன…
-
- 26 replies
- 2.7k views
-
-
FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி @Getty Images கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது. எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல…
-
- 2 replies
- 371 views
-
-
ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 1 வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் சுருக்கமாக `WWE'. சீமான் ஸ்டைலில் சொன்னால், உலக மற்போர் மகிழ் கலை நிறுவனம். பல ஆண்டுகளாக `ப்ரோ ரெஸ்லிங்' எனப்படும் வல்லுநர் மல்லாடல் போட்டிகளை நடத்திவரும் மிகப் பிரபலமான நிறுவனம். வெறும் ஜட்டிதான் அணிந்திருப்பார்கள். ஆனால், பெல்ட்டுக்காக அடித்துக்கொள்வார்களே... அவர்களேதான். அவர்களைப் பற்றித்தான் இந்தத் தொடர் முழுக்கப் பேசவிருக்கிறோம். ஏனெனில், கிரிக்கெட், சினிமாவைத் தாண்டி பெரும்பாலான இந்தியச் சிறுவர்களின் பேசுபொருளாக இருந்தவர்கள் / இருக்கிறவர்கள் இந்த பெல்ட் ப்ரியர்கள்தான். நாம் கிழித்துப் போட்ட காலண்டர் பேப்பர்களிலும், கடிகார …
-
- 2 replies
- 1.1k views
-
-
குஜராத்: உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஜடேஜா குஜராத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். புதுடெல்லி: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ளது சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாம்நகர் அணி முதலில் விளையாடியது. ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். …
-
- 1 reply
- 454 views
-
-
ஐ.சி.சி தூசு மாசு சட்டத்தை தூசு துடைத்து நெறிப்படுத்துமா? இந்திய உபகண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டை துதிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் காணப்படுகின்றனர். பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டைப்போல வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து,அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து வீரர்கள் உட்பட கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பலவீரர்கள் (ஐ.பி.எல்) எனப்படும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி கோடானு கோடி இந்திய ரூபாக்களை அள்ளிச் செல்கின்றனர். முன்னொரு காலத்தில் இங்கிலாந்து சென்ற…
-
- 0 replies
- 437 views
-
-
‘அவுட் ஆவார் போல் தெரியவில்லை’: ரோஹித் ட்வீட்டும், சச்சின் சாதனையை முறியடித்த ஸ்மித்தும் பெர்த்தில் இரட்டைச் சதம் விளாசிய ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். பெர்த் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று தனது 22-வது டெஸ்ட் சதத்தை எடுத்ததில் ஸ்மித், மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 114 இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஸ்மித் 108-வது இன்னிங்ஸில் 22-வது சதத்தை எடுத்து முறியடித்தார். முதலிடத்தில் 58 இன்னிங்ஸ்களீல் 22 சதங்களை எடுத்த டான் பிராட்மேனும், 101 இன்னிங்ஸ்களில் எடுத்த சுனில் கவாஸ்கர் 2-ம் இடத்திலும் உள்ளனர். ‘அருமையான …
-
- 0 replies
- 772 views
-
-
முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் T-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் யுகம் தற்போது T-10 போட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது. அந்த வகையில் அங்குரார்ப்பண T-10 லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை …
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்திய வீரர்களின் சம்பளம் 100% உயர்கிறது: கேப்டன் விராட் கோலி ரூ.10 கோடி பெற வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 100 சதவீதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பல மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும் அதேவேளையில் இங்…
-
- 0 replies
- 342 views
-
-
20 இருபது இந்திய தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்க இல்லை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டித் தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இப்போட்டியில்,நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,லசித் மலிங்கவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் ஜீவன் மெண்டிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை கிரிகெட் வாரியம் கூறியுள்ளது.இதுவரை 68 போட்டிகளி…
-
- 0 replies
- 323 views
-
-
ஐ.சி.சி.யை கேள்வி கேட்ட இலங்கை பெண் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.-யிடம் டுவிட்டரில் இலங்கைப் பெண் எழுப்பிய கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது. இதனை கவனித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், கோஹ்லி–-அனுஷ்கா திரும…
-
- 0 replies
- 819 views
-
-
4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கு அல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் டி20 போட்டிகளுக்கும், அதனையடுத்து பகலிரவு டெஸ்ட், தற்போது டி10 போட்டிகள் என மாற்றம் பெற்ற கிரிக்கெட், தற்போது நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அற…
-
- 0 replies
- 429 views
-
-
சமநிலையில் முடிந்த சென் ஜோன்ஸ் – புனித தோமியர் இடையிலான மோதல் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் மற்றும் கொழும்பு, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையில் பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இம்முறை போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (13) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களான கபில்ராஜ் மற்றும் அபினாஷ் ஆகியோரது அபாரப் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் கொழும்பு தரப்பினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். …
-
- 0 replies
- 277 views
-
-
மிலன் – ஜுவென்டஸ் போட்டி சமநிலை இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இன்டர் மிலன், நடப்பு சீரி ஏ சம்பின்களான ஜுவென்டஸுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போட்டியில் ஜுவென்டஸின் மரியோ மண்டுஸிக்கின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், இவரின் பல உதைகளை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிக் தடுத்திருந்தார். இந்நிலையில், நடப்பு பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்றவரான இன்டர் மிலனின் அணித்தலைவர் மெளரோ இகார்டியின் உதையொன்றை ஜுவென்டஸின் கோல்…
-
- 3 replies
- 495 views
-