விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதலிடம் வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது. த…
-
- 0 replies
- 829 views
-
-
அதிக சிக்சர்கள்; கெய்ல், தோனி கிளப்பில் இணைந்தார் டிவில்லியர்ஸ்: சுவையான தகவல்கள் வங்கதேசத்துக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 176 ரன்கள் விளாசி மைதானம் நெடுக வங்கதேச பீல்டர்களை அலைய வைத்த டிவில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் பட்டியலில் உயர்மட்ட கிளப்பில் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஷாகித் அஃப்ரீடி 351 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க, ஜெயசூரியா 270, கெய்ல் 252, தோனி 213, டிவில்லியர்ஸ் 201 என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் நே…
-
- 0 replies
- 420 views
-
-
அனித்தா போன்று சாதனை படைக்கும் ஆசையில் அவரது தங்கை ஹெரினா நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் தங்கம் வென்ற யாழ் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மங்கை சந்திரகுமாரர் ஹெரினா http://www.thepapare.com
-
- 1 reply
- 366 views
-
-
கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணி. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு 2இன் (டிவிஷன் ll) குழு D அணிகளுக்கான ஒரு போட்டியாக இவ்விரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் நணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோ…
-
- 0 replies
- 440 views
-
-
ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உறுதிசெய்தது நீதிமன்றம் வாழ்நாள் போட்டித் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்த மனு மீதான விசாரணையில் தோல்வியைத் தழுவிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஆற்றாமையை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். ‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ இ20 போட்டித் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் சபை வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் மேன்முறையீடு செய்ததையடுத்து, அது குறித்த வழக்கு கேரள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீசாந்த் ம…
-
- 0 replies
- 299 views
-
-
கும்ப்ளே இந்திய அணியின் பௌலர் மட்டும்தானா?: பி.சி.சி.ஐ-க்கு எதிராகக் கொந்தளித்த நெட்டிசன்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே இன்று, தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். Photo: BCCI இதையடுத்து சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் போனிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், அரசியல், திரையுலகப் பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கும்ப்ளே, இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தவர். ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியா…
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா? பகிர்க படத்தின் காப்புரிமைICC இலங்கை டி 20 அணியின் கேப்டன் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என பிபிசி சிங்கள சேவைக்கு தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கூறி…
-
- 0 replies
- 336 views
-
-
ஊக்கமருந்து தடையிலிருந்து மீண்ட ஷரபோவா சம்பியனானார் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாத தடைக்குபின்னர் திரும்பிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவில் இடம்பெற்றுவரும் டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் வீராங்கனை மரியா ஷரபோவா பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கினாலும்இ அதன் பின்னர் சரிவிலிருந்து மீண்டு 7-6இ 7-6 (10-8) என்ற நேர் செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் ஊக்கமருத்துத்…
-
- 0 replies
- 351 views
-
-
சக வீரருடன் மோதி இந்தோனேஷpய கோல் காப்பாளர் திடீர் மரணம் கால்பந்து போட்டியின்போது சக வீரருடன் மோதுண்ட இந்தோனேஷpய கோல் காப்பாளர் ஒருவர் மரணித்துள்ளார். இந்தோனேஷpயாவின் முதல் பிரிவு கால்பந்து தொடரில் பங்கேற்ற 38 வயதான சொய்ருல் ஹுதா நேற்று (15) நடைபெற்ற போட்டியிலேயே இந்த பரிதாபத்திற்கு முகம்கொடுத்தார். பெர்சலா கால்பந்து கழகத்திற்கு விளையாடி வருகின்ற அவர் செமன் படங் கழகத்துடனான போட்டியின் பாதிநேர ஆட்டத்திற்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது இவ்வாறு மரணித்துள்ளார். இந்தோனேஷpய சுப்பர் லீக் தொடரில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவை நோக்கி செல்லும் வேளையில் எதிரணி வீரர் கோலை நோக்கி பந்தை எடுத்துவரும்போது அதனை தடுக்கும் முயற்சியாக…
-
- 0 replies
- 541 views
-
-
நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக தரவரிசையில் நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச அளவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மற்றும் நட்புறவு போட்டிகளின் முடிவுகள் அடிப்படையிலேயே தரவரிசையில் புதிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் உலக தரவரிசையின் முதல் ஆறு இடங்களிலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. ஜெர்மனிக்கு அடுத்து பிரேசில், போர்த்துக்கல், ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் மற்றும் போலந்து அணிகள் முறையே 2 முதல் 6 ஆவது இடம் வரை நீடிக்கின்றன. அடுத்த உல…
-
- 5 replies
- 618 views
-
-
புறக்கணிக்கும் தேர்வாளர்கள்: ரஞ்சி தொடரில் இரட்டை சதமடித்து அசத்திய ஜடேஜா! ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஜடேஜா இரட்டை சதமடித்து அசத்தினார். முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர் மற்றும் விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஜடேஜாவுடன், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அஷ்வின் தமிழக அணிக்காகவும், ஜடேஜா ச…
-
- 1 reply
- 444 views
-
-
அஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா... நிரந்தரமா? Chennai: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லை. “இலங்கை தொடருக்கு ஓய்வுன்னு சொன்னாங்க.. இன்னுமா ரெஸ்ட் எடுக்குறாங்க...?” என்று ரசிகர்களுக்கு டவுட்! இந்தச் சந்தேகம் நியாயமானதே. டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பெளலர்களில் இருவருக்கு, ஒருநாள் போட்டி அணியில் இடமில்லை எனும்போது, அதுவும் தொடர்ந்து 3 தொடர்களில் எனும்போது சந்தேகம் எழுவது சகஜமே. உண்மையில் இது ஓய்வுதானா? இல்லை, இளம் இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் கழட்டிவிடப்பட்டார்களா? 2016-ம் ஆண்டு நடந்த இந்தியா – நியூசிலாந்து தொடருக்குப் பிறகான பெர்ஃபாமன்ஸ்களை வைத்து, ஒரு பார்வை….. சாம்பியன்ஸ் டிராஃ…
-
- 0 replies
- 534 views
-
-
40 சிக்ஸர்கள், 307 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: உள்ளூர் போட்டியில் சாதனை ஜோஷ் டன்ஸ்டன் | படம்: ட்விட்டர் பகிர்விலிருந்து ஆஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் போட்டி ஒன்றில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற கிரிக்கெட் வீரர் 307 ரன்களைக் அதிரடியாக குவித்துள்ளார். இதில் அவர் மட்டுமே 40 சிக்ஸர்கள் விளாசியதுதான் ஆட்டத்தின் முக்கிய அம்சம். வெஸ்ட் அகஸ்டா அணிக்கும், செண்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் இடையே சனிக்கிழமை அன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. அணிக்கு 35 ஓவர்கள் வீதம் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் அகஸ்டா அணி முதலில் ஆடியது. அணியின் முதல் விக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் பிரிவில் செல்வி ச. சங்கவி 1ஆம் இடத்தை பெற்றுள்ளார். கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெறும் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 20வது வயது பெண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச்சேர்ந்த செல்வி ப. கிரிஜா 2.85m உயரம் பாய்ந்து 3ஆம் இடத்தை பெற்றுள்ளார். http://www.tamilsguide.com/blog/srilanka-news/13994
-
- 12 replies
- 2.1k views
-
-
தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று (14) தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை நேற்று திருமணம் முடித்தார். இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் ஜோ ரூட், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் அலிஸ்டேர் குக், இயொன் மோர்கன், க்ரஹெம் ஒனியன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வின்போது ஸ்டோக்ஸின் வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருபத்தாறு வயதான ஸ்டோக்ஸ், கடந்த மாதம் பிஸ்டலில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளிப்புறம் மற்றொருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட…
-
- 9 replies
- 1.4k views
-
-
1992ல் ஒலிப்பிக் போட்டியில் நடந்த இதயம் தொடும் நிகழ்வு இது!
-
- 0 replies
- 447 views
-
-
வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற மென்சஸ்டர் யுனைடட், லிவர்பூல் போட்டி லிவர்பூல் அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை லீவர்பூல் அணி வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது. இரு அணிகளதும் முக்கிய வீரர்கள் இப்போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிவர்பூல் கால்பந்து கழகத்தின் அரங்கமான அன்பீய்ல்ட் (Anfield) அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் மற்றும் லிவர்பூல் கழகங்களிற்கிடையிலான போட்டியானது இரு அணியினதும் பாரிய போராட்டத்தின் பின் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. மென்சஸ்டர் யுனைடட் அணியின் மருவானே பெய்லானீ (Maruane Felliani) பெவ்ல் போக்பா (Paul Pogba) மற்றும் லிவர்பூல் அணியின் ஸடீயோ மனேய் (Sadio Mane) ஆகியோர் …
-
- 0 replies
- 345 views
-
-
இறுதி நேரத்தில் பெறப்பட்ட கோலினால் போட்டியை சமநிலை செய்த பார்சிலோனா அத்லடிகோ மட்றிட் மற்றும் பார்சிலோனா கழகங்கள் மோதிய லாலிகா சுற்றுப்போட்டியின் போட்டியானது, பார்சிலோனா அணியினால் இறுதித் தருவாயில் பெறப்பட்ட கோலின் மூலம் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. முதல் பாதி அட்லடிகோ அணி சார்பாகவும், இரண்டாம் பாதி பார்சிலோனா அணி சார்பாகவும் அமைந்திருந்தது. நேற்றைய தினம் (14) நடைபெற்ற போட்டிகளில் அட்லடிகோ மட்றிட் கால்பந்து கழகத்திற்கும் பிரபல பார்சிலோனா கால்பந்து கழகத்திற்கும் இடையிலான போட்டி பார்வையாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற போட்டியாக அமைந்தது. அத்துடன் பார்சிலோனா அணியானது அட்லடிகோ மட்றிட் அணியின் புதிய அரங்கமான மெட்ரோபோலீனோ (Me…
-
- 0 replies
- 327 views
-
-
உருகிய கோஹ்லியின் வைரல் வீடியோ: கண்கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்! ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஹாங்ஹாங்கில் நடைபெறும் கண்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே பகுதிநேர வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போல ஆப்கானிஸ்தானிலும் ஸ்பகிஸா டி-20 என்று அந்த நாடு திட்டமிட்டிருந்தது. இந்நேரத்தில் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மைதானத்திற்கு வெளியில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தால் கிரிக்கெட் நிர்வாகமே அதிர்ந்…
-
- 0 replies
- 418 views
-
-
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில்! 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளை ஸிம்பாப்வேயில் நடத்துவது என சர்வதேச கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. மேலும், இந்தப் போட்டிகள், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது. இத்தகுதிகாண் போட்டிகளை பங்களாதேஷில் நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் நேரடியாகத் தகுதிபெற்றதால், அதற்கு அடுத்தபடியாக இருந்த ஸிம்பாப்வேயில் தகுதிகாண் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மைதானங்கள் குறித்து ஆய்வு நடத்த சர்வதேச கிரிக்க…
-
- 0 replies
- 351 views
-
-
லாகூரில் வேண்டாம்: இலங்கை அணி கோரிக்கை பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான இ20 போட்டியை பாகிஸ்தானின் லாகூரில் நடத்த வேண்டாம் என இலங்கையின் நாற்பது வீரர்கள் கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒக்டோபர் 29ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்பச் சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்களின் இந்தக் கோரிக்கையால், போட்டியை லாகூரில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது. திங்களன்று இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்த தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத…
-
- 1 reply
- 594 views
-
-
துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் தோல்விக்குக் காரணம் சங்கக்கார வெளிப்படை 0 SHARES ShareTweet பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்கக்கார. இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து இலக்குகளை இழந்ததை அடுத்து ஐந்தாவது வீரராக களமிறங்கும் சந்திமல் மூன்றாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். மூன்றாவது வீரராகக் களமிறங்கும் குசல் மென்டிஸ் ஐந்தாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஆனால் இவர்கள் இருவருமே பெரிய…
-
- 0 replies
- 401 views
-
-
ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள்: இந்திய அணியில் நெஹ்ரா, கார்த்திக், தவண் டி20 அணியில் ஆஷிஷ் நெஹ்ரா. - படம்.| ஏ.பி. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஷிஷ் நெஹ்ரா கடைசியாக பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் ஆடினார். மீண்டும் ஜடேஜா, அஸ்வினுக்கு வாய்ப்பில்லை. ரஹானே, பவுலர் ஷர்துல் தாக்குர் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை. அணி விவரம்: விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராகுல், பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக்,…
-
- 18 replies
- 2k views
-
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் லீக் தொடர்களுக்கு ஐ.சி.சி. ஒப்புதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்ற போதே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஐ.சி.சி.யினால் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்களை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடவுள்ளன. டெஸ்ட் லீக் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டி…
-
- 1 reply
- 353 views
-
-
ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவைர் அர்ஜென் ராபென், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்பொவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பிஃபா உலக கிண்ண போட்டிகளுக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற தவறிய நிலையிலேயே அவர் தனது ஓய்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலக கிண்ண தகுதிகான் போட்டிகளில் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2 க்கு 0 என்ற குால் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அர்ஜென் இரண்டு கோல்களை அணிக்காக போட்டுக் கொடுத்தார். எனினும், எனினும் ஏ பிரி…
-
- 1 reply
- 509 views
-