Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆபிரிக்க கண்டத்தின் முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஆபிரிக்கா கண்டத்தின் முதல் நாடாக நைஜீரியா தகுதி பெற்றுள்ளது. ஆபிரிக்க மண்டலத்திற்காக கடந்த சனிக்கிழமை (07) நடைபெற்ற ஸம்பியா (Zambia) அணிக்கு எதிரான தகுதிகாண் போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நைஜீரியா உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்துகொண்டது. இந்த வெற்றியின் மூலம் நைஜீரியா ஆபிரிக்க மண்டலத்தின் B குழுவில் மொத்தம் 13 புள்ளிகளை பெற்று அந்த குழுவில் உள்ள ஏனைய அணிகளால் நெருங்க முடியாத அளவு முன்னிலை பெற்றது. மறுபுறம் இந்த குழுவில் இரண்டாவது இடத…

  2. விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு விசா இருந்தும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் வங்காள தேசம் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வருகிறார். வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்க…

  3. ஒரே நாளில் 271 ரன்கள், பிறகு முச்சதம்; பிரஷாந்த் சோப்ரா சாதனை: இமாச்சல் அணி 729 ரன்கள் குவிப்பு ரஞ்சி சாதனை நாயகன் பிரஷாந்த் சோப்ரா. தரம்சலாவில் நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இமாச்சல் அணி தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா 338 ரன்களை விளாசினார், இமாச்சல் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 729 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வலது கை வீரரான 25 வயது பிரஷாந்த் சோப்ரா 338 ரன்கள் எடுக்கும் முன்பாக நேற்று ஒரேநாளில் 271 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் அதிக ரன்கள் எடுத்த வகையில் பாவ்சாஹேப் நிம்பால்கர் 277 ரன்களை ஒரே ந…

  4. குடோ விளையாட்டில் சாதிக்கும் சிறுவன்; சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர். மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவர். குடோ விளையாட்டில் அதிசிறந்த ஆற்றல் கொண்டவராகத் திகழும் பவிந்தரவர்சன், மாகாண மற்றும் தேசிய மட்ட குடோ போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்தியாவின் மும்பையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கவும் பவிந்தரவர்சன் தகுதி பெற்றுள்ளார். ஆனாலும், அந்தப் போட்டிக்கு அவரா…

  5. 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது ஸ்பெயின் 3-வது கோலை தியாகோ அடிக்க ஸ்பெயின் வீரர் ஜெரார்ட் பிகே (நடுவில் சிரித்துக் கொண்டிருப்பவர்) கொண்டாடுகிறார். - படம்.| ஏ.பி. அல்பேனியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஸ்பெயின் அணியில் ரோட்ரிகோ (16வது நிமிடம்), இஸ்கோ (23), தியாகோ (26) ஆகியோர் முதல் பாதியிலேயே கோல்களை அடித்து முடித்தனர். இதனால் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் ஸ்பெயின் வென்று ஜி குரூப்பிலிருந்து உலகக்கோப்பைத் தகுதியை உறுதி செய்துள்ளது. இத்தாலி அணி மேசிடோனியா அணிக்கு எதிராக ட…

  6. மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20 தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இப் போட்டித்தொடரானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் குழு நிலைப் போட்டிகளில் மோதியிருந்த அணிகளிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனடிப்…

  7. மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி தேசிய சம்பியனாகிய யாழ் புனித ஹென்ரியரசர் Tamil மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி தேசிய சம்பியனாகிய யாழ் புனித ஹென்ரியரசர் By Mohamed Arshad - October 6, 2017 236 அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்தாட்டப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பிய…

  8. வசதிகளற்ற நிலையிலும் கடற்கரைக் கரப்பந்தில் அசத்திய வடக்கு பாடசாலைகள் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் வட மாகாண அணிகள் தமது அபார ஆட்டங்களை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளன. நீர்கொழும்பு உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று அணிகளான புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் ஆகியன, ஒரேயொரு மேல் மாகாண அணியான நீர்கொழும்பு சீதுவ தவிசமீர மகா வித்தியாலய அணியுடன் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தன. …

  9. FIFA உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிக் கட்டப் போட்டிகள் எவ்வாறு இருக்கும்? கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2018 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2018 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளது. …

  10. பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவுகள் சில Share பிரான்ஸ் தமி­ழர் கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் வடக்கு மாகாண ரீதி­யாக நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் சில யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றன. அவற்­றில் சில­வற்­றின் முடி­வு­கள்: காலை 8 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து புங்­கு­டு­தீவு நச­ரேத் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­ததை அடுத்து ஆட்…

  11. ஹெராத் 400 விக்கெட் சாதனையும், சங்கக்காராவினால் மீண்ட கதையும்! ஹெராத், சங்கக்காரா. - கோப்புப் படம். | ஏ.எஃப்.பி. அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை குறைந்த வெற்றி இலக்கையும் எடுக்க விடாமல் நசுக்கிய இலங்கை இடது கை வீச்சாளர் ரங்கனா ஹெராத், உலகிலேயே முதன் முதலாக 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய இடது கை சுழற்பந்து வீச்சாளரானார். மேலும் அபுதாபியில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி இலங்கை என்ற பெருமையையும் சேர்த்தார் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த ரங்கனா ஹெராத். இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்குப் பிறகே பெற்ற வெற்றிகளில் ஹெராத் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளார்,…

  12. ஐபிஎல் ஒப்பந்தத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ‘ஸ்லெட்ஜ்’ செய்யவில்லை: சேவாக் அதிரடி சேவாக். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-4 என்று ஆஸ்திரேலியா இழந்துள்ள நிலையில், அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் வலுவான ஒப்பந்தங்களை எதிர்நோக்குவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்கள் மீது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடவில்லை என்று அதிரடி மன்னன் சேவாக் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “அடுத்த ஆண்டு பெரிய அளவில் ஐபிஎல் ஏலங்கள் உள்ளன, இதனால் அவர்கள் பயந்து விட்டார்கள். இந்திய வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜ் அல்ல…

  13. ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் ஆஸ்திரேயாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார். கான்பெரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெ…

  14. இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்நோக்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழ…

  15. கிரிக்கெட் போட்டிகளில் விசித்திரமான ஆட்டமிழப்புகள், நடுவர்களின் தீர்ப்புகள், இப்படி பல நிகழ்வுகளை பகிரலாம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டேல் ஸ்டெய்னின் வேகத்தில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லின் மட்டை உடைந்தது. http://www.dailymotion.com/video/x2at9cx_dale-steyn-broke-maxwell-s-bat-usm-cricket-blogspot-com_sport

  16. ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை - வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற ஒரு நாள்…

  17. ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன இலங்கை அணியின் இரசிகர்களுக்கு, பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் கிடைத்த த்ரில்லர் வெற்றி உற்சாகத்தையும், அணி மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கையின் இந்த வெற்றி மூலம் அனைத்து இரசிகர்களும் களிப்புற்று வரும் இத்தருணத்தில் இலங்கை அணிக்கும், இலங்கையின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிய சுழல்…

  18. டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர் r டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இப்போட்டித் தொடரானது 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் திறந்த பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன. தொடரின் காலிறுதிப் போட்டிகள் 03 செற்களைக் கொண்டதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 05 செற்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன. 22 வயதிற்குட்பட்டோர் …

  19. சங்கா, மஹேலவை இன்று சந்திக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது அமைச்ர் கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்கால­மாக அடைந்து வரும் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னமும் விளையாட்­டுத்­துறை அமைச்­சரும் பெரும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் பின்­ன­டைவை சந்­தித்­துள்ள இலங்கைக் கிரிக்கெட் அ…

  20. ஸ்பானிஷ் லீக்கிலிருந்து வெளியேற பார்சிலோனா முடிவு! ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக கட்டலோனியா மாகாணம் போராடிவந்தது. சுதந்திர நாடாகச் செயல்படுவதுகுறித்து கட்டலோனியா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்டலோனியா தனி நாடாகச் செயல்பட மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கட்டலோனியா பிரிந்துசெல்லும் பட்சத்தில், பார்சிலோனா கால்பந்து அணிக்கு ஸ்பானிஷ் லீக் தொடரில் விளையாட அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் லீக்கில் சனிக்கிழமை நடந்த பார்சிலோனா- லாஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் , ''கட்டலோனியா சுதந்திர நாடாக மாறும்பட்சத்தில…

  21. உமர் அக்மலுக்கு போட்டித் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்­களில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான உமர் அக்மல், அவ்­வ­ணியின் பயிற்­சி­யாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச ­மான மொழியில் வசை ­பா­டினார் என்றும் தேசிய கிரிக்கெட் அக­ட­மியின் வச­தி­களைத் தான் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை விதித்தார் என்றும் ஊட­கங்கள் மூல­மாக குற்­றஞ்­சாட்­டி­யதால் அவர் போட்டித்தடைக்கு உள்­ளா­கி­யுள்ளார். அத்துடன் ஒரு மில்­லியன் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது. http://www.virakesari.lk/article/25239

  22. இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி: 37 நாள்களில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள்! அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இலங்கை அணி. 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள். இவை அனைத்தும், 37 நாள்களில் முடியவுள்ளன! நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 6 அன்று டெல்லி-யில் மூன்றாவது டெஸ்டுடன் டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது. தர்மசாலாவில் டிசம்பர் 10 அன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17 அன்று மூன்றாவது போட்டியுடன் ஒருநா…

  23. உலக சாதனை படைத்தார் சுழல் மன்னன் ஹேரத் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலகசாதனையை படைத்தார். 39 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 84 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 153 இன்னிங்ஸ்களில் விளையாடி 23, 835 பந்துதுகளை வீசி 11, 128 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்காக கொடுத்து 400 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார். ரங்கன ஹேரத்திற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் டானியல் வெற்றேரி 362 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். …

  24. இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலி…

  25. சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி Courtesy - Getty Images ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் சிடி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதிரணியான செல்சி அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ விளையாடாத நிலையில் இவ்வெற்றியை மென்சஸ்டர் சிடி அணி தனதாக்கிக் கொண்டது. நேற்றைய தினம் நடைபெற்ற (30) செல்சி மற்றும் மென்சஸ்டர் சிடி அணிகள் மோதிய போட்டியானது, செல்சி கழகத்தின் அரங்கமான ஸ்டம்பொர்ட் பிரிட்ஜ் (Stamford Bridge) அரங்கில் நடைபெற்றது. மென்சஸ்டர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.