Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சந்திமாலின் தலைமைத்துவத்தை பாராட்டும் குமார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்ற இலங்கை அணியை வழிநடாத்திய தினேஷ் சந்திமாலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தை பாகிஸ்தான் தமது தாயகமாக தத்தெடுத்துக்கொண்ட பின்னர் டெஸ்ட் தொடரொன்றில் முதற்தடவையாக இலங்கை அணியினாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் வரை தமது சொந்த மண்ணில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வியடையாது காணப்பட்டிருந்தம…

  2. 'ஜீனியஸ்' மெஸ்ஸியின் மேஜிக் ஹாட்ரிக்: உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினா அணியை அழைத்துச் சென்றார் ஈக்வடார் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் நம்பமுடியாத, அதிசயிக்கத்தக்க ஹாட்ரிக் சாதனையுடன் 3-1 என்று வெற்றி பெற்று அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. பிரேசில், உருகுவே, கொலம்பியா அணிகளுடன் 6-ம் இடத்திலிருந்து நேரடியாக உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்றார் மெஸ்ஸி. குவிட்டோவில் ஈக்வடாரை வெற்றி பெற்றால்தான் நேரடி தகுதி சாத்தியம் என்ற நெருக்கடியில் களமிறங்கியது அர்ஜெண்டினா. நிச்சயம் மெஸ்ஸிக்கு கூடுதல் பதற்றமே. காரணம் தகுதி பெறாமல…

  3. 2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி பெற்றன. அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்…

  4. ஓய்வு பெறுகிறார் 'கம்-பேக்' மன்னன் நெஹ்ரா! தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா. வரும் நவம்பர் 1-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்கிறார் நெஹ்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1999-ம் ஆண்டு அறிமுகமான நெஹ்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால், அவருக்கு இந்த காலகட்டத்தில் 12 சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் அவர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் ஒருவராக இருந்தார். 2003-ம் ஆண்டு இங்கிலா…

  5. முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான்சுப்பர் லீக் (PSL) போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த 5 அணிகளும், தமது அணியில் விளையாடியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுகளின்விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்களில், 4 பிரிவுகளிலிருந்து தமது அணிக்கான முக்கிய 9 வீரர்களை நேற்று (10) இடம்பெற்ற விசேட ஏலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளபோட்டித் தொடரில் 6ஆவது அணியாக களமிறங்கவுள்ள முல…

  6. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு அபுதாபியில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராக லஹிரு திரிமான்னே கடமையாற்றவுள்ளார். இவர்கள் தவிர, திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரோஷென் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்சன் சந்தகன், தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு கமகே ஆகியோரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, மேலதிக…

  7. உலகக் கோப்பையில் அமெரிக்கா இல்லை: டிரினிடாட் அண்ட் டுபாக்கோவிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் அமெரிக்க அணி, கடைசி ஆட்டத்தில் டிரினிடாட் அண்ட் டுபாக்கோ அணியிடம் தோற்றதால் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. வாஷிங்டன்: ரஷ்யாவில் அடுத்த ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மொத்தம் 35 அணிகள் விளை…

  8. யாழ்ப்பாணத்தில் 300 இற்கும் அதிகமான அணிகள் மோதும் கால்பந்து திருவிழா ஐந்­தா­வது வரு­ட­மாக யாழ்.மாவட்ட செய­லகம் மற்றும் யாழ். கால்­பந்­தாட்ட சங்­கத்­துடன் இணைந்து மைலோ நிறு­வனம் நடத்தும் மைலோ வெற்றிக் கிண்­ணத்­திற்­கான கால்­பந்­தாட்டத் தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் யாழ். மாவட்­டத்தில் விளை­யாட்டை அபி­வி­ருத்தி செய்யும் நோக்­கு­டனேயே இக்­கால்­பந்­தாட்டத் தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டது. மேலும் இவ் ஆண்­டுக்­கான மைலோ கிண்ணத் தொடர் எதிர்­வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இந்தத் தொடரில் இம்­முறை 100 பாட­சாலை அணி­க­ளுடன் 210 கால்­பந்து கழக அணி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளன. யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி ஆகிய மாவட…

  9. அபத்தப் பெருமித வர்ணனையும் தோனி ஆட்டமிழப்பும் தோனி, ஸாம்ப்பா பந்தில் ஸ்டம்ப்டு ஆகும் காட்சி. | - படம். | ரிதுராஜ் கொன்வர் குவஹாத்தியில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் வார்னரால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் பேட்டிங் சரிவு கண்டது. தோனியும், கேதர் ஜாதவ்வும் அணியை தூக்கி நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். அப்போது ஆட்டத்தின் 10-வது ஓவரை ஆடம் ஸாம்ப்பா வீசினார். முதல் பந்தை ஜாதவ் சிங்கிள் எடுக்க தோனி ஸ்ட்ரைக்குக்கு வந்தார். ஸாம்பா வீச மேலேறி வந்தார் தோனி, பந்தின் லெந்தை சற்றே குறைத்தார் ஸாம்ப்பா, மிட் ஆஃபில் தட்டி விட்டார் தோனி ரன் இ…

  10. 2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா? பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறாமல் வெளியேறும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. 2018 இல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு தென் அமெரிக்காவில் இருந்து நான்கு அணிகளே நேரடி தகுதி பெற முடியும் என்ற நிலையில், ஆர்ஜன்டீன அணிக்கு மேலும் ஒரு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உலக சம்பியனான ஆர்ஜன்டீனா தனது உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்து…

  11. ஹேரத் விரும்பும் காலம் வரை தனது பாணியில் விளையாட வேண்டும் – ரிச்சர்ட் ஹார்ட்லி Image courtesy - Sportskeeda.com இலங்கை அணியின் இடது கை சுழல் ஜாம்பவான் ரங்கன ஹேரத் தான் விரும்பும் காலம் வரை கிரிக்கெட் உலகில் இன்னும் நீண்ட காலம் விளையாட வேண்டும் என டெஸ்ட் கிரிக்கெட் உலகில் 400 விக்கெட்டுக்களை எடுத்த முதல் வீரரான சேர் ரிச்சர்ட் ஹார்ட்லி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட்போட்டியின் போது ஹேரத் தனது 39வது வயதில் 400 விக்கெட்டுக்களைப் பெற்றுகிரிக்கெட் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். இதன் போது இச்சாதனையைபுரிந்த ரிச்சர்ட் ஹர்…

  12. டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி. இதையடுத்து, ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி, நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்று 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. மாறாக, 93 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தத் தொடர் தோல்வியையடுத்து 5 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, முழ…

  13. மிகச் சிறிய நாடாக சாதனையுடன் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற ஐஸ்லாந்து கடந்த ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து, அதற்கு 18 மாதங்களின் பின்னர் தற்பொழுது உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முதல் முறை தகுதி பெற்றுள்ளது. கொசோவோ அணியுடன் திங்களன்று (09) நடந்த போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலமே ஐரோப்பாவின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்துக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. ஐரோப்பாவின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் I குழுவில் ஆடும் ஐஸ்லாந்து, அந்த குழுவில் முதலிடத்தை உறுதி செய்யவே கொசோவோ அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் கில்பி சிகட்சன் மற்றும் இரண்டா…

  14. உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் ஜெர்மனி வெற்றி அஜர்பைஜான் நடுகள வீரர் ரஷித்திடம் பந்தை விட்டுக்கொடுக்காமல் கடத்திச் செல்லும் ஜெர்மனி வீரர் லியோன் கோரேட்ஸ்கா. - படம்: ஏஎப்பி உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனை படைத்துள்ளது. 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் பெர்லின் நகரில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெ…

  15. கோஹ்லியினால் ஓரம்கட்டப்படுகிறாரா அஷ்வின்? இது­வரை நான் ஆடிய அனைத்து ஆட்­டங்­க­ளிலும் சிறப்­பா­கவே ஆடி­யுள்ளேன். என்­னு­டைய முழுத் திற­மையை அனை­வ­ரி­டமும் வெளிப்­ப­டுத்திக் காட்­டி­யுள்ளேன். என்­னு­டைய திற­மையின் கார­ண­மாக கண்­டிப்­பாக விரைவில் அணியில் எனக்கு வாய்ப்பு அளிக்­கப்­படும். அந்த வாய்ப்பும் என் வீடு தேடி வரும் என இந்­திய சுழற்­பந்­து­வீச்­சாளர் அஷ்வின் தெரி­வித்­துள்ளார். தற்­போ­தைய இந்­திய அணியில் விளை­யா­டா­தது குறித்து நிரு­பர்­க­ளுக்கு அளித்த பேட்­டியின் போதே அஷ்வின் இவ்­வாறு தெரி­வித்தார். மிகவும் சிறப்­பாக செயற்­பட்ட அஷ்வின் நீண்ட காலத்­திற்கு பந்­து­வீச்­சா­ளர்கள் வரி­சையில் முத­லி­டத்தில் திக…

  16. 28 வருடங்களின் பின் FIFA உலகக் கிண்ணத்தில் எகிப்து 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு அரபு உலகில் அதிகளவு மக்களைக் கொண்ட நாடாக விளங்குகின்ற எகிப்து தகுதி பெற்றுக்கொண்டது. ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் 3 ஆவது சுற்றில் 20 அணிகள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தங்களது குழுக்களில் உள்ள மற்றைய அணிகளுடன் மோதிக்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பெறும் அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும் நிலையில், E குழுவில் நேற்று கொங்கோ அணியுடன் இடம்பெற்ற போட்டியில் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வருகின்ற எகிப்து அணியின் 25 வயதுடைய இளம் நட்சத்திர…

  17. நிறவெறி இழிவுபடுத்தல்தான் ஆஸ்திரேலிய அணிகளை நான் ஆதரிக்காததற்குக் காரணம்: மனம் திறக்கும் உஸ்மான் கவாஜா உஸ்மான் கவாஜா. - படம்.| ஏ.பி. சிட்னியில் தான் வளரும் காலங்களில் அனுபவித்த நிறவெறி ரீதியான இழிவுபடுத்தல்களே விளையாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் ஆதரிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று பாகிஸ்தானில் பிறந்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மனம் திறந்துள்ளார். ‘பிளேயர்ஸ்வாய்ஸ்.காம்.ஏயு’ என்ற இணையதளத்தில் கட்டுரை எழுதியுள்ள, 30 வயது வீரர் உஸ்மான் கவாஜா, ‘எங்கள் சிறுபிராயத்தில், வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் இருந்து வந்த நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்கள் ஆஸ்திரேலிய அணிகள் மீது கோப…

  18. ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் ஜப்பானில் நடந்த பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். சுஜுகா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மூன்று முறை சாம்பியனான இங்கில…

  19. பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் இறுதி அறிக்கை கல்வி அமைச்சரிடம் கையளிப்பு இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் முதற்தடவையாக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் இணைந்துகொண்டனர். பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நீக்கி பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட வி…

  20. ஆபிரிக்க கண்டத்தின் முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஆபிரிக்கா கண்டத்தின் முதல் நாடாக நைஜீரியா தகுதி பெற்றுள்ளது. ஆபிரிக்க மண்டலத்திற்காக கடந்த சனிக்கிழமை (07) நடைபெற்ற ஸம்பியா (Zambia) அணிக்கு எதிரான தகுதிகாண் போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நைஜீரியா உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்துகொண்டது. இந்த வெற்றியின் மூலம் நைஜீரியா ஆபிரிக்க மண்டலத்தின் B குழுவில் மொத்தம் 13 புள்ளிகளை பெற்று அந்த குழுவில் உள்ள ஏனைய அணிகளால் நெருங்க முடியாத அளவு முன்னிலை பெற்றது. மறுபுறம் இந்த குழுவில் இரண்டாவது இடத…

  21. விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு விசா இருந்தும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் வங்காள தேசம் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வருகிறார். வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்க…

  22. ஒரே நாளில் 271 ரன்கள், பிறகு முச்சதம்; பிரஷாந்த் சோப்ரா சாதனை: இமாச்சல் அணி 729 ரன்கள் குவிப்பு ரஞ்சி சாதனை நாயகன் பிரஷாந்த் சோப்ரா. தரம்சலாவில் நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இமாச்சல் அணி தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா 338 ரன்களை விளாசினார், இமாச்சல் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 729 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வலது கை வீரரான 25 வயது பிரஷாந்த் சோப்ரா 338 ரன்கள் எடுக்கும் முன்பாக நேற்று ஒரேநாளில் 271 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் அதிக ரன்கள் எடுத்த வகையில் பாவ்சாஹேப் நிம்பால்கர் 277 ரன்களை ஒரே ந…

  23. குடோ விளையாட்டில் சாதிக்கும் சிறுவன்; சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர். மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவர். குடோ விளையாட்டில் அதிசிறந்த ஆற்றல் கொண்டவராகத் திகழும் பவிந்தரவர்சன், மாகாண மற்றும் தேசிய மட்ட குடோ போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்தியாவின் மும்பையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கவும் பவிந்தரவர்சன் தகுதி பெற்றுள்ளார். ஆனாலும், அந்தப் போட்டிக்கு அவரா…

  24. 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது ஸ்பெயின் 3-வது கோலை தியாகோ அடிக்க ஸ்பெயின் வீரர் ஜெரார்ட் பிகே (நடுவில் சிரித்துக் கொண்டிருப்பவர்) கொண்டாடுகிறார். - படம்.| ஏ.பி. அல்பேனியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஸ்பெயின் அணியில் ரோட்ரிகோ (16வது நிமிடம்), இஸ்கோ (23), தியாகோ (26) ஆகியோர் முதல் பாதியிலேயே கோல்களை அடித்து முடித்தனர். இதனால் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் ஸ்பெயின் வென்று ஜி குரூப்பிலிருந்து உலகக்கோப்பைத் தகுதியை உறுதி செய்துள்ளது. இத்தாலி அணி மேசிடோனியா அணிக்கு எதிராக ட…

  25. மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20 தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இப் போட்டித்தொடரானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் குழு நிலைப் போட்டிகளில் மோதியிருந்த அணிகளிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனடிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.