Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி வெற்றியைக் கொண்டாடும் மெக்சிகோ வீரர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் பனாமா அணியை 1-0 என்று வீழ்த்தி மெக்சிகோ அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் பிரேசில், ஜப்பான், இரான், போட்டியை நடத்தும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் 2018 உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற 5-வது அணியானது மெக்சிகோ. மெக்சிகோ சிட்டியில் உள்ள ஆஸ்டெக்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹிர்விங் லோசானோ 53-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல…

  2. இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்: மலிங்கா இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார். கொழும்பு: கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்ட பிறகு அந்த அணியின் பொறுப்பு கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:- காலில் ஏற்பட்ட காயத்தால் 19 மாதங்களுக்கு பிறகு களம் திரும்பினேன். ஜிம்பாப்வே மற்றும் …

  3. மற்றைய அணிகளிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் : சங்கக்கார r தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவும் தற்போதைய தனது தாயக அணி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழும் அனைத்து அணிகளினதும் வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது, அனைத்து அணிகளுக்கும் ஒரு மோசமான காலம் காணப்பட்டிருக்கின்றது. அனைத்து நாடுகளும் அந்த மோசமான காலகட்டத்தினை கடந்தே இன்று சாதனை அணிகளாக மாறியுள்ளன. …

  4. மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து மலிங்கா அளித்த விருந்தில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. சொந்த மண்ணில் இலங்கையை புரட்டியெடுத்து வரும் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் முறையே 9 விக்கெட், 3 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. …

  5. இன்று ஆரம்பிக்கிறது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ் உலகில் இடம்பெறும் டென்னிஸ் கிரான்ட் ஸ்லாம் தொடர்களில், ஆண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் உலகம், இந்தத் தொடரில் யார் வெல்வார்க் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீரர்களான அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ஸ்டான் வவ்றிங்கா, கீ நஷிகோரி, மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஏற்கெனவே பலர் விலகியிருந்த நிலையில், அன்டி மரேயும், போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் இருக…

  6. வடக்கின் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார். ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். அதன்படி இன்று இடம்பெற்ற இந்த பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகளே பெற்றுள்ளனர். இதற்கமைய, ஜே.அனித்தா 3.47 m உயரம்வர…

  7. அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஜப்பான் பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி Image Coutesy - Shuji Kajiyama/AP ரஷ்யாவில் 2018 ஆம் அண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்ற நான்காவது அணியாக ஜப்பான் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளது. ஜப்பானின் சைட்டாமா அரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய மண்டலத்திற்கான தகுதிகாண் போட்டியில் பலம்கொண்ட அவுஸ்திரேலியாவை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியே ஜப்பான் ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் விளையாட தனது இடத்தை பதிவு செய்து கொண்டது. கடந்த 1998ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்று வருகின்றமை க…

  8. சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் புதிய கழகங்களுடனும், புதுமுக வீரர்களுடனும் ஆரம்பமாகியுள்ள 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இப்பருவகாலத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் லாலிகா சுற்றுப்போட்டியை ஆரம்பித்துள்ள கழகங்கள் சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு சவால் விடுப்பதை போட்டியின் முடிவுகளும் லாலிகா புள்ளிப்பட்டியலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 2017/18 ஆம் ஆண்டு…

  9. இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ரூனே கைது: குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரரான வேய்ன் ரூனே குடிபோதையில் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த வேய்ன் ரூனே(வயது 31). இங்கிலாந்து அணிக்காக 119 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது சொந்த அணியான எவர்ட்…

  10. பீலேவை விஞ்சிய ரொனால்டோ! சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் தேசிய அணிக்காக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலேவை முந்தினார் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடக்க உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், ஃபரோ தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி, போர்ச்சுகல் நாட்டின் போர்டோவில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து உதவ, 5-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல், அந்தக் குட்டித் தீவை வீழ்த்தியது. ரொனால்டோ ஹ…

  11. 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலி…

  12. ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரா… தந்தை சுடப்பட்டும் களம் கண்ட பெசிச்... ப்ரீமியர் லீக் அப்டேட்! ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி, இந்த வாரம் வழக்கமான அதே விறுவிறுப்போடு நடந்து முடிந்தது. செல்சீ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகிய அணிகள் இந்த வாரம் வாகை சூடின. முன்னணி அணிகளில் ஆர்சனல் மட்டும் தோல்வியைத் தழுவியது. விளையாட்டையும் தாண்டி நெகிழ்ச்சியான சில சம்பவங்கள் இந்த வாரம் அரங்கேறின. ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரோ! 2013-14ம் ஆண்டு சீஸனின் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, கத்துக்குட்டி போர்ன்மவுத் அணியை எதிர்கொண்டது. கடந்த வாரம் எவர்டன் அணியோடு டிரா செய்ததால், இந்த வாரம் அதிக ஆக்ரோஷத்தோடு களம்கண்டது சிட்டி. ஆனா…

  13. வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்! 2008-ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் அறிமுகமான ஏப்ரல் மாதம் இப்போது இருப்பதுபோல் அப்போது ஐபிஎல்-க்குப் பின்னால் 8, 9 என்றெல்லாம் எழுதாத காலம். ஷாருக் கான், மல்லையா, அம்பானி, சீனிவாசன் என்று பெரும் பணக்காரர்கள் பல கோடி முதலீட்டில் உதயமான அந்த கிரிக்கெட் திருவிழாவின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் மெக்கலம் 73 பந்துகளுக்கு 158 ரன்கள் எடுத்து ஐபிஎல்-ன் முதல் சதத்தைப் பதிவுசெய்தார். 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணி, 82 ரன்களுக்கு மண்ணைக் கவ்வியது. அப்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அணிகள் விளையாட ஆரம்பித்து சில ஆ…

  14. அஷ்வின், ஜடேஜாவிடம் கற்றுக்கொண்ட வங்கதேச பந்துவீச்சாளர்கள்! ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றி அதுவாகும். மிர்பூரில் நடந்த அந்தப் போட்டியில், வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் 19 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அதிலும் குறிப்பாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் சாய்த்தார். வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி என அறியப்படுகிறார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் ஜோஷி, …

  15. ஆஸ்திரேலியாவுடன் அதிரடி: முதல் இடத்துக்கு முன்னேறினார் ஷாகிப் வங்கதேசம் அணி கிரிக்கெட்டில், அவ்வப்போது பெரிய அணிகளைத் தோற்கடித்து அதிர்ச்சிக் கொடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என்று எந்த அணிகளும் அதிலிருந்து தப்பியதில்லை. குறிப்பாக, சொந்த மண்ணில் புலி பாய்ச்சலுடன் அந்த அணி விளையாடி வருகிறது. இதனிடையே, ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முதலே, அந்த அணி ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவால் அளித்து வந்தது. அந்த ஆதிக்கத்தை கடைசி வரை செலுத்திய வங்கதேச அணி, போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதன்மூலம், டெஸ…

  16. சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி Image Courtesy - Getty Image விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் தெரிவாகியுள்ளது. இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறை…

  17. கோலியின் விக்கெட் மலிங்கவுக்கு மைல்கல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை லசித் மலிங்க கடந்துள்ளார். கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து லசித் மாலிங்க 300 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லைக் கடந்தார். 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 300 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளைக் கடந்த இலங்கையர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை மலிங்க பிடித்துக்கொண்டார். இதேவேளை, 30 டெஸ்ட் போட்டிகளலில் விளையாடியுள்ள லசித்…

  18. இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்­விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று இலங்கை அணியின் புதிய தலைவர் லசித் மாலிங்க தெரி­வித்துள்ளார். இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கில் ஏற்­க­னவே இந்­தியா கைப்­பற்­றி­யுள்ள நிலையில் இன்று நான்­கா­வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது. இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா? அல்லது மாலிங்க தலைமையிலான இளம் இலங்கை அணி வெற்றி பெற்று தமக்கு விருந்தள…

    • 0 replies
    • 532 views
  19. இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம் இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம் சிட்னியில் நடைபெற்ற 2015 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குப் பின்னர் அணியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் அணியின் தூண்களாக இருந்த குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன இருவருமே சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்கள். சங்கக்கார இதற்கு பின்னரும் ஒருசில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தபோதும் அது அணிக்கு பலம் சேர்க்கவே தவிர அவரது இடம் நிரந்தரமானதாக இருக்கவில்லை. எனவே உலகக் கிண்ண போட்டிக்கு பின்னரான இலங்கை அணியில் …

  20. துச்சமென கருதிய இங்கிலாந்தை மோதி ஜெயித்த வெஸ்ட் இண்டீசின் அந்த 'Hope'! #WIvsENG கிரிக்கெட்டை ரசிக்கும் எவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பிடிக்கும். எதிராளிகளை வீழ்த்தும்போதெல்லாம் பகடி செய்வார்கள்; ஆக்ரோஷம் கூட்டுவார்கள்; நடனமாடுவார்கள்; ஜெயிக்கும்போதெல்லாம் 'நாங்க தாண்டா கெத்து' எனக்காட்டும் அவர்களது ஆர்ப்பாட்டம் நிச்சயம் நம்மைக் கோபப்படுத்தாது. நாமும் அவர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவோம் அல்லது அந்தக் கொண்டாட்டத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவோம். ஏனெனில் விளையாட்டை நேசிக்கும்... வீரர்களை மதிக்கும் பண்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரித்தானது. போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் போட்டி முடிந்த பின்னர் எதிரணி வீரர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர…

  21. இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் உறுப்பினர்களும் இராஜினாமா இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் குழுவின் உறுப்பினர்களும் தமது பொறுப்புக்களை இராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் இன்று பிற்பகல் தமக்கு கிடைத்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் ரஞ்ஜித் மதுரசிங்க, அசங்க குருசிங்க, ரொமேஸ் களுவித்தரன , எரிக் உபசாந்த ஆகியோர் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களது ஒன்றிணைந்த இராஜினமாக் கடிதங்களின் பிரகாரம் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் அவர்களின் பதவிகள் முடிவுக்கு வருகின்றன. h…

  22. வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ரசி­கர்­களை கைதுசெய்ய நடவடிக்கை இலங்கை - இந்­திய அணி­க­ளுக்கு இடையே கடந்த 27 ஆம் திகதி இடம்­பெற்ற ஒரு நாள் சர்­வ­தேச போட்­டியின் போது, இலங்கை வீரர்­களை இலக்கு வைத்து கல், தண்ணீர் போத்­தல்களை வீசி தாக்­குதல் நடத்­திய ரசி­கர்­களை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய மத்­திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னைக்கு அமைய இதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன. இதற்­கா­க­ வேண்டி குறித்த போத்தல் வீச்சு, கல் வீச்சு காட்­சிகள் பதி­வா­க…

  23. ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, தனஞ்செயா... கிரிக்கெட்டின் ரிஸ்ட் ஸ்பின் கலைஞர்கள்! இந்திய அணியின் இலக்கு 231. ஓபனிங் ஜோடி குவித்தது 109 ரன்கள். விக்கெட் இல்லை. இந்தியா எளிதில் வெற்றிபெறும் என்பது ரசிகர்கள் கணிப்பு. காரணம், இலங்கையிடம் அனுபவம் வாய்ந்த மலிங்கா தவிர சிறப்பான பந்து வீச்சாளர்கள் இல்லை. ரோஹித்தின் அரை சதத்துக்குப் பிறகு நம்பிக்கை இழந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அந்த நேரத்தில் நிகழ்ந்தது ஒரு மாயாஜாலம். ஆஃப் பிரேக் பௌலர் அகில தனஞ்செயா, ரிஸ்ட் ஸ்பின்னராக அவதாரம் எடுத்து திறமையான பேட்ஸ்மேன்கள்கொண்ட இந்திய பேட்டிங் வரிசையைத் திணறடித்தார். கோலி, ராகுல், கேதார் விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. அனைத்தும் தனஞ்செயாவி…

  24. நிஜ Never Ever Give Up ஹீரோ தோனி! `வயதாகிவிட்டது. இனி கிரிக்கெட் ஆட முடியாது. இளைய சமுதாயத்துக்கு வழியைவிட்டு அவர் ஒதுங்கவேண்டியதுதானே?' இதுபோன்ற கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் கூலாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் தோனி. இலங்கையில் தற்போது இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. முதலில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 3 -௦ என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது. தற்போது ஐந்து போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரையும் 3 -௦ எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஒருநாள் தொடர் தொடங்கும் முன், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் கோலி, ``இதுபோன்ற தொடர் மூலம் 2019-ம் ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கு, மையமான அணியைத் தேர்வுசெய்ய பய…

  25. வென்றார் லூயிஸ் ஹமில்டன் பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸ் வாகன ஓட்டப் போட்டியை, மேர்சிடீஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன் வெற்றிகொண்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இப்போட்டியில், ஃபெராரியின் செபஸ்டியன் வெட்டலை முந்திக் கொண்டே, ஹமில்டன் வெற்றிபெற்றார். 3ஆவது இடத்தை, றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிக்கார்டோ வென்றார். ஹமில்டனின் இந்த வெற்றி, அவரது வாகன ஓட்டுநர் வரலாற்றில், அவர் வெற்றிகொண்ட 58ஆவது கிரான்ட் பிறிக்ஸ் பட்டமாகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்துக்கான வரிசையில், முதலிடத்தில் காணப்படும் வெட்டலுக்கும் தனக்குமிடையிலான புள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.