Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஜோன் டார்பட் விளையாட்டு விழாவில் வடக்கு கிழக்கிற்கு இரண்டு தங்கம், மூன்று வெள்ளி பாடசாலை வீர வீராங்கனைகள் பங்குகொள்ளும் இலங்கையின் மிகவும் பழமை மிக்க தடகள போட்டித் தொடரான ஜோன் டார்பட் விளையாட்டு விழா 85 ஆவது முறையாக கடந்த 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெற்றது. தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் 13 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன், மகளிர் பிரிவில் ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் ஆடவர் பிரிவில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன. 110m தடை தாண்டல் போட்டியை 14.06 வினாடிகளில் நிறைவு செய்த புனித ஜோசப் கல்லூரியின் ஷெஹான் காரியவசம் மற்றும் தூரம் பாய்தல் போட்டியில் …

  2. மெதிவ்சின் தலைமைப் பதவியின் நீடிப்பில் சந்தேகம் இலங்கை அணியை கடந்த சில வருடங்களாக தலைமை தாங்கி வரும் அஞ்சலோ மெதிவ்ஸ், சனிக்கிழமை (8) நடைபெற்று முடிந்திருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் கிடைத்த ஏமாற்றமான தோல்வியின் காரணமாக, மீண்டும் விமர்சனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றார். சாதரண வீரராக இருந்த காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் பெற்றிருந்த 40.83 ஓட்டங்கள் என்னும் துடுப்பாட்ட சராசரியை விட அணித்தலைவராக மாறிய போது மெதிவ்ஸ் 45.70 ஓட்டங்கள் என்னும் சிறப்பான துடுப்பாட்ட சராசரியை வெளிக்காட்டியிருக்கின்றார். எனினும், இலங்கையின் மிகப் பிரபல்யமான விளையாட்டான கிரிக்கெட்டில் அவரது தலைமைத்துவ திறன்கள், தீர்மானம் எடுக்கும் …

  3. புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க Tamil புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேலாக இணைப்பாட்டத்தினைப் பெற்ற இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணியானது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி…

  4. அர்ஜுன் டெண்டுல்கரின் கால்பெயர்க்கும் யார்க்கர்: காய அச்சுறுத்தலால் ஜானி பேர்ஸ்டோ ஒரே பந்தில் வெளியேறினார் 2013-ல் அர்ஜுன் டெண்டுல்கர், அருகில் தந்தை சச்சின். | படம்.| கே.ஆர்.தீபக். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முந்தைய வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வீசிய யார்க்கர் அவருக்கு காய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 17 வயதான, இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஜானி பேர்ஸ்டோ எதிர்கொண்ட முதல் பந்தையே காலைப் பதம் பார்க்கும் துல்லிய யார்க்கராக வீச வலியாலும் காய அச்சுறுத்தல் காரணமாக…

  5. சிம்பாப்வே - இலங்கை 4 ஆவது ஒருநாள் போட்டி : துடுப்பெடுதாடி வருகிறது இலங்கை இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. http://www.virakesari.lk/article/21648

  6. ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி டோனி 108 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார். ஆன்டிகுவா, இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) இந்தியா இரண்டில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், நேற்று 4-வது போட்டியில் களமிறங்கியது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற …

  7. இலங்கைக்கு படையெடுக்கவுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு இம் மாத இறுதியில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு, ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச க…

  8. இந்தியா - மே.தீவுகள்: 5ஆவது போட்டி இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கிங்ஸ்டனில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால், 4ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற வெற்றி, இந்தத் தொடருக்கு உயிர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இன்று இடம்பெறும் போட்டியில் வென்றால் மாத்திரமே, தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நில…

  9. சதத்தில் சச்சின் சாதனையை முறியடித்த கோலி! ஒருநாள் போட்டியில் சேஸ் செய்யும் போது அடிக்கப்பட்ட சதங்களில் சச்சினை முந்தி கோலி புதிய சாதனை படைத்தார். இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் மீது பல விமர்சனங்கள் மற்றும் மாற்று கருத்து இருந்தாலும் அவரது பேட்டிங் திறமை மீது இதுவரை விமர்சனங்கள் வந்தது இல்லை. அதனால்தான், சச்சின் சாதனைகளை முறியடிக்கும் திறன் கோலியிடம் இருப்பதாகக் கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள். நேற்று சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய கோலி, தனது 28 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள்…

  10. சந்திமால் நீக்கப்பட்டமைக்கு ஜயசூரியவை விமர்சித்த அர்ஜுன ரணதுங்க ஜிம்பாப்வேயுடனான முதல் மூன்று போட்டிகளுக்குமான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டமை குறித்து, உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்று தந்த முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவை விமர்சித்துள்ளார். முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்குமான அணியில் இடம் கிடைக்காத சந்திமாலுக்கு முன்றாவது போட்டியில் இருந்து வாய்ப்பு வழங்குவதற்கு தேர்வாளர்கள் உறுதி அளித்தபோதும் அது நிகழவில்லை. இது குறித்து கிரிக்பஸ் செய்தித் தளத்திற்கு பேட்டி அளித்த அர்ஜுன ரணதுங்க, ‘மஹேல (ஜயவர்தன) மற்றும் குமார் (சங்கக…

  11. பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஜெர்மனி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) கூட்டுறவு கிண்ணத்தை (Fifa confederations cup) வென்ற உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி, பிஃபா வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கூட்டுறவு கிண்ண தொடருக்கு முன்னர் ஜெர்மனி அணி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிலி அணியை வீழ்த்தி முதல் முறை கூட்டுறவுக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி, தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு வந்தது. இதனால் பிரேஸில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் முறையே 2 …

  12. சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் சிம்பாப்வே அணிககி;டையிலான 3, 4, 5 ஆவது போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இலங்கை அணிகுழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் இன்று அறிவிக்கப்பட்ட…

  13. டோனி சம்பளம் குறித்து பேசிய பாகிஸ்தான் வீரருக்கு டோஸ் கொடுத்த டுவிட்டர்வாசிகள் இந்திய நட்சத்திர கேப்டன் டோனியின் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜாவிற்கு டுவிட்டர் வாசிகள் டோஸ் கொடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் ராசியான கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையா…

  14. 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல்! வரும் 9-ம் தேதி, இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விளையாடப்போகும் 20 ஓவர் கிரிக்கெட் அணியில், அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தொடர்ந்து விளையாடிவந்தார். மோசமான ஃபார்ம், உடலில் ஏற்பட்ட காயங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இடையில் சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று கலக்கினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் தான் மிக ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். என்னதான் 20 ஓவர் போட்டிகளில் கெய்ல் விளையாடினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட…

  15. பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வீனஸ் வில்லியம்ஸ்! டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்துகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளால் நிலைகுலைந்த வீனஸ், கண்ணீர்விட்டு அழுதார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால், கடும் சிக்கலில் உள்ளார். கடந்த மாதம் 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின்மீது மோதியுள்ளார். இந்த விபத்தில், அந்த காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்துவிட்டார். அதனால், பிரச்னை தீவிரமடைந்தது. இந்நிலையில், நேற்று வீனஸ் வ…

  16. ‘செல்சியைத் தவிர்க்கவே அஸ்டன் வில்லாவில்’ செல்சி அணியின் முன்னாள் தலைவரான ஜோன் டெரி, எதிர்காலப் போட்டிகளில், செல்சி அணிக்கெதிராக விளையாடுவதைத் தவிர்ப்பதற்காகவே, அஸ்டன் வில்லா அணியுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக செல்சி அணியில் விளையாடியிருந்த டெரி, கடந்த பருவகாலத்துடன், அவ்வணியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையிலேயே, அஸ்டன் வில்லா அணியுடன், ஓர் ஆண்டுக்கான ஒப்பந்தமொன்றில் அவர் கைச்சாத்திட்டுள்ளார். வாராந்தம் 77,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்ற ஊதியத்திலேயே, இந்த ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது. செல்சி அணி, பிறீமியர் லீக் பிரிவில் விளைய…

  17. ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? Tamil ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்தித்திராது காணப்பட்டிருந்த இலங்கை அணியானது, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) காலி நகரில் இடம்பெற்றிருந்த போட்டியில் அவ்வணிக்கு எதிராக பாரிய வெற்றி இலக்கு ஒன்றினை வைத்தும் மிகவும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியதால், வரலாறு மாற்றப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அத்தோல்வியினால் இலங்கை அணி மீது ரசிகர்களின் அதிருப்தியும்…

  18. கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி Tamil கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை வெற்றி கொண்ட சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. இரு பாலாருக்குமான இந்த போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டி நான்கு குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் இரண்டு அணிகள் அங்கம் வகித்து போட்டி…

  19. தப்பினார் செபஸ்டியன் வெட்டல் அஸர்பைஜானில் இடம்பெற்ற கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், லூயிஸ் ஹமில்டனின் காரோடு ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக, போர்மியூலா வண் சம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் செபஸ்டியன் வெட்டல், மேலதிக நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என, சர்வதேச ஓட்டோமொபைல் சம்மேளனம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காருக்குப் பின்னால் நின்ற போது, தனது சக மெர்சிடீஸ் சாரதியான ஹமில்டனின் காரோடு, வெட்டல் மோதியிருந்தார். இதனால் அவருக்கு, 10 செக்கன்கள் நிறுத்திச் செல்லும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மீளாய்வு இடம்பெற்ற நிலையில், தனது நடவடிக்கை தவறானது என ஏற்றுக் கொண்ட வெட்டல், அது தொடர்பாக பகிரங்க மன…

  20. சர்­வ­தேச கிரிக்கெட் பந்­து­வீச்சில் டேன் சாதனை இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களின் ஒன்­பதாம் நாளான ஞாயி­றன்று எட்டு மகளிர் அணி­களும் விளை­யா­டிய போட்­டி­களில் தென் ஆபி­ரிக்கா, இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து ஆகிய அணிகள் தங்­க­ளது பந்­து­வீச்­சா­ளி­னி­களின் அதீத திற­மையைக் கொண்டு வெற்­றி­களைப் பதிவு செய்­தன. தென் ஆபி­ரிக்க அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சாதனை மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதி­ராக லெஸ்டர் க்றேஸ் றோட் மைதா­னத்தில் நடை­பெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்க மகளிர் அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் அபூர்வ சாதனை ஒன்றை நிலை­நாட்­டினா…

  21. அரையிறுதிப் போட்டிகளில் மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் ஃபீபா கூட்டமைப்புகளின் கிண்ணத் தொடருக்கான (கொன்படரேஷன் கிண்ணம்) போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில், மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் அணிகள் வெற்றிபெற்றன. இதன்மூலம் இவ்வணிகள், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன. ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டிகளில், குழு “ஏ”க்கான போட்டிகளே, நேற்று முன்தினம் இடம்பெற்றன. கஸனில் நடைபெற்ற போட்டியில், மெக்ஸிக்கோ அணியும் போட்டிகளை நடத்தும் ரஷ்ய அணியும் மோதின. போட்டியின் 25ஆவது நிமிடத்தில், ரஷ்யாவின் அலெக்ஸான்டர் சாமெடோவ், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, தனது அணிக்கு முன்னிலையை வழங்…

  22. சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளரான இருந்த இத்தாலியின் மார்கோ மெடாரசி நீக்கப்பட்டு, இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்திய கால்பந்து சம்மேளனமும் இந்தியன் சூப்பர் லீக் என்ற கால்பந்து தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் அணிகளை வாங்கியுள்ளனர். 2014 முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் ஆதரவு அதிக அளவ…

  23. லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன? போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார். இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம…

  24. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் MCC அணிக்காக குமார் சங்கக்கார லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்ட MCC அணியின் துடுப்பாட்ட வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான யூனிஸ் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் சர்வதேச மட்டத்தில் 28,922 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள், அண்மையில் இங்கிலாந்து உள்ளூர் பருவகால போட்டிகளில் 1000 ஓட்டங்களை குவித்த குமார் சங்…

  25. இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட்: ரசிகர்களை அச்சுறுத்தும் யானைக் கூட்டம் ஹம்பன்தோடாவில் நடைபெற இருக்கும் இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டிக்கு யானைக்கூட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகள் ஹம்பன்தோடாவில் நடக்கிறது. 3-வது போட்டி 6-ந்தேதியும், 4-வது போட்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.