விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
விராட் கோலியின் ஆக்ரோஷம் அஸ்வினை ஒட்டிக் கொண்டது: எரபள்ளி பிரசன்னா விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் அஸ்வின் தொடர்ந்து விக்கெட்டுக்கள் கைப்பற்ற உதவும் வகையில் அவரையும் ஒட்டிக் கொண்டது என்று முன்னாள் சுழற்பந்து வீசசாளர் எரபள்ளி பிரசன்னா கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 19 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. இதற்கு அஸ்வினின் சுழற்பந்து வீச்சு முதுகெலும்பாக உள்ளது. அவர் கடைசி 9 போட்டிகளில் 61 விக்கெட்டுக்கள் கைப்பற்றியு…
-
- 0 replies
- 502 views
-
-
நீங்கள் வாழ்த்தியது உலகமே வாழ்த்தியதாக அர்த்தம்: சச்சினுக்கு கோலி ரீடுவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு விராட் கோலி பதில் டுவிட் அளித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன விராட் கோலி டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் (நியூசிலாந்து- 3, இங்கிலாந்து -5, வங்காள தேசம்-1) 9 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று இரட்டை சதங்கள் உள்பட 1457 ரன்கள் குவித்துள்ளார். அதேவேளை…
-
- 0 replies
- 325 views
-
-
பந்து வீச்சில் சகாப்தம்: பிராட்மேனுடன் ஒப்பிடுவது மிகப்பெரிய கவுரவம் - அஸ்வின் பந்து வீச்சின் பிராட்மேன் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கவுரவம் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் 250 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் அதிவேகப் பந்தில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்தார். அஸ்வினின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் வெகுவாக பாராட்டி இரு…
-
- 0 replies
- 295 views
-
-
இங்கிலாந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் செயற்படவேண்டும்-பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ரசிகர்கள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விரும்பும் வகையில் நாம் செய ற்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் துணைத் தலைவர் தெரிவித்து ள்ளார். இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். கடந்த வாரம் குக் தனது பத வியை ராஜினாமா செய்தார். இதனால் ஜோ ரூட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோ க்ஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் முதன்முறையாக பத்திரிகையா ளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘மீண்டும் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரு ம்பும் வகையில் நாம் செயற்படுவது அவசியம். …
-
- 0 replies
- 230 views
-
-
முதலிடம் கிடைக்குமென நினைக்கவே இல்லை-இம்ரான் தாஹிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவே இல்லை என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர். இவர் சமீபத்தில் தென்னா பிரிக்காவில் இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரி சையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையிலும் அவர்தான் முதல் இடத்தில் உள்ளார். தற்போது தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு நியூசிலாந…
-
- 0 replies
- 273 views
-
-
ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட் இந்த ஆண்டு தடகள விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற நான் எடுத்த முடிவால் எனக்கு ஒரு கவலையும் இல்லை . காரணம் சாதிக்க வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டேன் என்கிறார் உசைன் போல்ட் . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலண்டனில் இடம்பெறவுள்ள தடகள சம்பியன் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் , தான் ஓய்வு பெறப்போகிறேன் என்பதைத் தீர்மானமாக அறிவித்துள்ளார் 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரான இந்த அற்புத வீரர். மொனாக்கோவில் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இவர் கலந்து கொண்டபோதே பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் . முன்னாள் சிறந்த தடகள வீரரான மிச்சேல் ஜோன்சனை இதே கேள்வியை நான் முன்பு கேட்டிருந்தேன் . …
-
- 0 replies
- 427 views
-
-
2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள் எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி தொடக்கம் 23 வரை பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண றோல் போல் போட்டியில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா் கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர் அத்துடன் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று கடந்தவருட இறுதிப்பகுதியில் நடைபெற்ற தேசியரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட றோல் போல் ஆண் பெண் ஆகிய…
-
- 7 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்டெ் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு இம் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இருபதுக்கு -20 அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக செயற்படுகின்றார். அதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணிய…
-
- 3 replies
- 836 views
-
-
இவரை உலகறிய செய்வோம் . கஷ்டப்பட்டு சாதனை படைத்த தமிழன்
-
- 0 replies
- 349 views
-
-
யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு லோரியஸ் விருது விழாவில் உயரிய விருதுகள் மோனாக்கோவில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற லோரியஸ் உலக விளையாட்டுத்துறை விருது விழாவில் 2016ஆம் ஆண்டுக்கான அதி உயர் விருதுகளை யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகிய இருவரும் தமதாக்கிக்கொண்டனர். யூசெய்ன் போல்ட் - சிமோன் பைல்ஸ் எட்டுத் தடவைகள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சம்பியனான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும் ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் அதி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தனர். …
-
- 0 replies
- 276 views
-
-
பாரீஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி படு தோல்வி சாம்பியன்ஸ் லீக் கால் பந்து தொடரின் குரூப் பிரிவு ஆட்டத்தில், முன்னனி அணியான பார்சிலோனா, பாரீஸ் அணியிடம் 0-4 என்ற கணக்கில் படு தோல்வியடைந்தது. பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, பாரீஸ் நகரில் நடந்த குரூப் போட்டியில், பாரீசை சேர்ந்த பி.எஸ்.ஜி அணியும், முன்னனி கால்பந்து அணியான பார்சிலோனா அணியும் பலப்பரிட்சை நடத்தின. இரண்…
-
- 0 replies
- 327 views
-
-
ஒரே பந்துக்கு இரண்டு ரிவியூக்கள்: வங்கதேச கடைசி விக்கெட் எழுப்பும் சந்தேகங்கள் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி முடிந்த விதம் வெற்றிக் கொண்டாட்டங்களினால் நம் கவன ஈர்ப்பை பெறாமல் போயிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று நிபுணர்களால் கருதப்படுகிறது. ஆனாலும் இந்தத் தீர்ப்பு முடிவை மாற்றக்கூடியதல்ல ஏனெனில் ஆட்டம் முடிய இன்னும் 2 மணி நேரங்கள் இருந்தது, கடைசி விக்கெட்தான் வங்கதேசம் கையில் உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பினால் முடிவு மாறிவிட்டது என்றுகூற முடியாவிட்டாலும், இது எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான சூழ்நிலைகளில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய (தவ…
-
- 0 replies
- 339 views
-
-
உதைபந்தாட்ட வீரர்களுக்கு வித்தியாசமான காரணத்தால் விளையாடத் தடை முறையற்ற சிகையலங்காரத்துடன் விளையாடவிருந்த நாற்பத்தாறு உதைபந்தாட்ட வீரர்களைத் தடை செய்திருக்கிறது ஐக்கிய அரபு இராச்சிய உதைபந்தாட்டச் சம்மேளனம். மேலும், சிகை அலங்காரத்தை மாற்றிக்கொண்டால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் ‘மோஹோக்’ மற்றும் ‘காஸா’ போன்ற சிகையலங்காரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு சவூதியின் தேசிய உதைபந்தாட்ட அணி கோல் காப்பாளர் வலீத் அப்துல்லாவுக்கும், அவரது சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளுமாறு போட்டி நடுவர்களால் கூறப்பட்டிருந்தது. சவூதியில் உ…
-
- 0 replies
- 384 views
-
-
அதிக டக்: 24 முறை அவுட்டாகி பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மர் முதலிடம் 24 முறை டக்அவுட் முறையில் வெளியேறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல், அதிக டக் அவுட் ஆன வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் கிப்ஸ், தில்ஷன் 23 முறை அவுட்டாகியிருந்தனர். 26 வயதான பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல். அதிரடியாக விளையாடும் அவர் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூ…
-
- 0 replies
- 392 views
-
-
இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்ட அலாஸ்டர் குக்கின் இடத்துக்கு ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் பல சிரேஷ்ட வீரர்கள் இருக்கின்ற போதும் இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அலாஸ்டர் குக். 2012ஆம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற குக் 59 போட்டிகளில் தலைவராக இருந்துள்ளார். இந்த காலப் பகுதியில் 2 ஆஷஸ் தொடர்கள் உட்பட பல தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர் வி…
-
- 0 replies
- 378 views
-
-
வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம்: சஹா சொல்கிறார் வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குறிப்பிட்டுள்ளார். இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியா வங்காள தேசத்தை குறைத்து மதிப்பிடாது என்று சகா கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்…
-
- 23 replies
- 1.8k views
-
-
தென்ஆப்பிரிக்கா தொடர்: நியூசிலாந்து அணியில் கப்தில், ரோஞ்சி சேர்ப்பு தென்ஆப்பிரிக்கா தொடருக்கான நியூசிலாந்து அணியில் காயத்தில் இருந்து மீண்ட கப்தில், ரோஞ்சி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் டி20 மற்றும் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட…
-
- 0 replies
- 348 views
-
-
குறை பார்வை உடையோருக்கான இருபது 20 உலகக் கிண்ணம்: இலங்கைக்கு இரண்டாவது தொடர்ச்சியான வெற்றி; இரண்டு போட்டிகளில் நான்கு சதங்கள் குவிப்பு 2017-02-02 11:13:08 இந்தியாவில் நடைபெற்றுவரும் பத்து நாடுகளுக்கு இடையிலான குறை பார்வை உடையோருக்கான இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது இரண்டாவது வெற்றியை நேற்று பதிவு செய்தது. இந்த இரண்டு வெற்றிகளும் டெல்லி சிறி குறை பார்வை உடையோருக்கான இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் மற்றும் மொத்த எண்ணிக்கைக்கான உலக சாதனைகளுடன் வெற்றியீட்டிய இலங்கை அணியினர்,…
-
- 3 replies
- 322 views
-
-
இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமனம் தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சர்வதே…
-
- 16 replies
- 1.2k views
-
-
விராட் கோஹ்லியின் அதகளம் ஷேவாக் சாதனையை முறியடித்தது! #Kohli200 கொலைப்பசியில் இருக்கிறார் விராட் கோஹ்லி. எந்தெந்த அணிகள், எந்தந்த பவுலர்கள் மாட்டுகிறார்களோ, அத்தனை பேரையும் கதி கலங்க வைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உலகக்கோப்பையில் சொதப்பித்தள்ளியிருந்தார் கோஹ்லி. கடும் விமர்சனங்கள் எழ, அதன் பின்னர் வேற லெவல் ஆட்டம் ஆடத் துவங்கியிருக்கிறார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன் நான்காவது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார். தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெட்டாக இருந்தா…
-
- 0 replies
- 528 views
-
-
ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை ; இறுதி ஒருநாள் போட்டி இன்று இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 4-0 என கைப்பற்றியுள்ள நிலையில், வைட் வொஷ் ஆவதை தடுப்பதற்கு இந்த போட்டியில் இலங்கை அணி கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய போட்டியை பொறுத்தவரையில், இலங்கை அணி சார்பில், தனஞ்சய டி சில்வா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சந்திமல் அணியில் இணைத்துக்கொள்ளப்படும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் சம்ஷிக்கு பதில…
-
- 0 replies
- 359 views
-
-
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி ராஜினாமா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அசார் அலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தவர் அசார் அலி. சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் அணிக்கு அசார் அலி கேப்டனாக இருந்தார். இந்த தொடரில் பாகிஸ்தான் 1-4 என படுதோல்வியடைந்தது. இதனால் அசார் அலி மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அனைத்த…
-
- 0 replies
- 297 views
-
-
சனத் ஜயசூரிய இராஜினாமா? இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் தலைவர் பதவியில் இருந்து, சனத் ஜயசூரிய, இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுத்துள்ளதாகவும், தென்னாபிரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது, இவ்வாறான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/191279/சனத-ஜயச-ர-ய-இர-ஜ-ன-ம-#sthash.tvokm652.dpuf
-
- 0 replies
- 789 views
-
-
கிரிக்கெட்டுக்கோ, மைதானத்திற்கோ பாதிப்பேற்படுத்த இடமளியேன் : திலங்க சுமதிபால எமக்கு மேல் விளையாட்டும், விளையாட்டு மைதனங்களும் உள்ளன. அதற்கு கீழ் தான் நாம் உள்ளோம். கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்களுக்கோ எவரேனும் பாதிப்பேற்படுத்த முனைந்தால் நான் ஒரு போது இடமளிக்கமாட்டேனென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைதானப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்…
-
- 0 replies
- 353 views
-
-
மீண்டும் அணியில் இணைந்தார் மலிங்க : உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவராக மலிங்க தெரிவுசெய்யப்படுவதற்கான தகுதியும் அவரிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/16421
-
- 1 reply
- 372 views
-