விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இரு கைகளிலும் அசுர வேகத்தில் பந்துவீசும் பவுலர்! (வீடியோ) வாசிம் அக்ரமையும், வக்கார் யுனிஸையும் மிக்ஸ் செய்து இன்னுமொரு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ஸை பாய விட்டிருக்கிறது பாகிஸ்தான். வலது கையில் பந்து வீசினால் 145 கி.மீ. வேகம், இடது கையில் வீசினால் 135 கி.மீ. வேகம் எனப் பின்னி பெடலெடுக்கிறார் யஸிர் ஜான். சிவாஜி படத்தில் ரஜினி ‛இரண்டு கைகளால்’ எழுதுவது போல, யாஸிர் ஜான் இரு கைகளிலும் வேகமாக பந்துவீசுவதுதான் பாகிஸ்தானில் ஹாட் டாபிக். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதியைச் சேர்ந்தவர் யாஸிர் ஜான். தந்தை காய்கறி வியாபாரி. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த யாஸிர், 2003 உலக கோப்பையில் வாசி…
-
- 0 replies
- 465 views
-
-
மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள்’A’ அணிக்கும் இலங்கை ‘A’ அணிக்கும் இடையிலான 4 நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற 3 வதும் இருதியுமான டெஸ்ட் நிறைவுக்கு வந்துள்ளது. 3 போட்டிகள் கொண்டதான இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை ‘A’அணி,2 வது போட்டியில் 333 ஓட்டங்களால் மிகப்பெரிய தோல்வியை கண்டது. இந்த நிலையில் தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்ற தொடரை தீர்மானிக்கும் முக்கியமான 3 வது டெஸ்ட் போட்டியில் இ…
-
- 0 replies
- 291 views
-
-
உலகி்ன் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதுகள்: பத்து ஆண்கள், பத்து பெண்கள் முன்மொழிவு 2016-10-21 14:36:59 சர்வதேச மெய்வல்லுநர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வருடத்தின் அதி சிறந்த ஆண் மெய்வல்லுநர், பெண் மெய்வல்லுநர் விருதுகளுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த இரண்டு விருதுகளுக்கும் முறையே பத்து ஆண் மெய்வல்லுநர்களினதும் பத்து பெண் மெய்வல்லுநர்களினதும் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச மெய்வல்லுநர் சங்கங்களின் சம்மேளனப் பேரவை உறுப்பினர்கள், சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் அமைப்களின் உறுப்பினர்கள், சமூக ஊடக வாயிலாக இரசிகர்கள…
-
- 0 replies
- 385 views
-
-
எட்டு வருடங்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைமைக்கு இந்தியா பச்சைக்கொடி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள தொடரில் டி.ஆர்.எஸ். முறையை ஒத்திகை அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. டி.ஆர்.எஸ். எனப்படும் நடுவரின் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் இந்த முறைமைக்கு இந்திய அணி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த டி.ஆர்.எஸ். முறைமையை எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒத்திகை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்திய அணி கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையுடனான போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்தியதனை தொடர்ந்து, எதிர்வரும் இங்கிலாந்து தொடரில்…
-
- 0 replies
- 250 views
-
-
சங்காவின் தலைமையில் களமிறங்கும் மஹேல பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இம்முறை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்நிலையில் கராச்சி கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரராகவும், அணியின் ஆலோசகராகவும். சங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்காரவுடன் இலங்கை அணியின் மற்றுமொரு ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில்…
-
- 0 replies
- 532 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே வீல்சேர் பயன்படுத்துவோருக்கான டி-20 கிரிக்கெட் தொடர்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே, மாற்றுத்திறனாளர்களுக்கான வீல்சேர் டி-20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் வியாழக்கிழமை துவங்கியது. இரு அணி வீரர்களும் உற்சாக அறிமுகம் முதல் ஆட்டத்தில், 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மலேசியாவில் முதல் முறையாக நடைபெறும் மாற்றத்திறனாளர்களுக்கான, வீல் சேர் கிரிக்கெட் போட்டி, மலேசிய கிரிக்கெட் சங்க ஒத்துழைப்புடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களால் இணைந்து நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப…
-
- 0 replies
- 264 views
-
-
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான, தில்ருவன் பெரேரா, குசேல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவான் பிரதீப், கௌசல் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமிர, தனுஸ்க குணதிலக, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன் ஆகியோரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/12590
-
- 0 replies
- 239 views
-
-
ஃபேஸ்புக், ட்விட்டர், ஜியோ, அமேசான்..ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி! உலகின் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பி வரும், சோனி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. எனவே அதற்கடுத்த ஆண்டுகளுக்கான ஒளிபரப்பும் உரிமை யாருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. மொத்தம் 18 முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமைக்காக போட்டியிடுகின்றன. இந்த ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தங்கள் வரும் 25-ம் தேதி பெறப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் இந்…
-
- 0 replies
- 613 views
-
-
'சிறந்த உப தலைவராக இருக்கவில்லை' அவுஸ்திரேலிய அணியின் தலைவராக றிக்கி பொன்டிங் இருந்த போது, அவருக்குப் பொருத்தமான உப தலைவராக தான் இருந்திருக்கவில்லை என, மைக்கல் கிளார்க் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே, அவர் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். 2013ஆம் ஆண்டு, தனது சுயசரியை வெளியிட்ட றிக்கி பொன்டிங், தனது உப தலைவராக இருந்த மைக்கல் கிளார்க்குடன் காணப்பட்ட தடுமாற்ற உறவை விவரித்திருந்தார். இந்நிலையிலேயே, தனது சுயசரிதைப் புத்தகத்திலும் அது குறித்து, மைக்கல் கிளார்க் எழுதியுள்ளார். "உப தலைவராக என் மீது, சில விடயங்களில் ஏமாற்றமடைந்ததாக, அவரது சுயசரிதைப் புத்தகத்தில் றிக்கி எழுதியுள்ளார்.…
-
- 1 reply
- 516 views
-
-
அப்ரிடியை மிரட்டினாரா தாவூத் இப்ராஹிம் சம்பந்திக்காக தலையிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடியை தாவூத் இப்ராஹிம், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கடந்த உலகக் கிண்ணத்துடன் முழுக்கு போட்ட அப்ரிடி, இ–20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் இருபதுக்கு 20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. …
-
- 0 replies
- 285 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம் 32 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றார். இன்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமான விளையாட்டு விழாவின் 04 வது நாளான இன்று போட்டிகள் உரிய நேரத்திற்கு முன் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிக் கால அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன . யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றா…
-
- 7 replies
- 1.6k views
-
-
சுவாரஸ்யமான கட்டத்தில் பிரீமியர் லீக் போட்டிகள்-2017 சுவாரஸ்யமான கட்டத்தில் பிரீமியர் லீக் போட்டிகள்-2017 சர்வதேச கால்பந்து விடுமுறையை தொடர்ந்து பிரீமியர் லீக் போட்டிகளின் 8 ஆவது வார போட்டிகள் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. #Chelsea 3-0 Leicester City பிரீமியர் லீக் சம்பியன்களுக்கெதிராக இலகுவான வெற்றி பெற்றுள்ளது செல்சி அணி. கோஸ்டா, ஹசார்ட், மற்றும் மோசஸ் ஆகியோரின் கோல் உதவியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் கோஸ்டா 8 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். #Arsenal 3-2 Swansea City ஆர்சனல் ஸ்வான்சீ அணிகளுக்கிடைய…
-
- 0 replies
- 461 views
-
-
அன்று அகதி… இன்று ஃபுட்பால் ஸ்டார்…! ஜேர்மனியில் காம்பியா – ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ஒரு பாவப்பட்ட தேசம். சர்வாதிகாரம் மற்றும் வறுமையின் பிடியில் அகப்பட்டு வாடும் தேசம். எச்.ஐ.வி, டைபாய்டு, ரேபிஸ் போன்ற நோய்களால் அடிக்கடி உயிரிழக்கும் மக்கள் என சராசரி வாழ்க்கை என்பது அங்கு கேள்விக்குறிதான். நல்லதோர் வாழ்க்கையைத் தேடிப் பலரும் பிற தேசங்களுக்கு அகதிகளாய்ப் போய் விடுகின்றனர். அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் அகதியாய் தஞ்சம் அடைந்தவர் தான் ஓஸ்மான் மன்னே. அன்று வாழ்க்கையைத் தேடி ஓடிய மென்னா, அடுத்த இரண்டே ஆண்டுகளில், இன்று ஜெர்மன் கால்பந்து லீக்கில் ஒரு இளம் நட்சத்திரமாய் ஜொலிக்கிறார். ஜெர்மனி மண்ணில் கால்பதிக்கையில் மன்னேவிற்கு வயது 1…
-
- 0 replies
- 919 views
-
-
இலங்கை ஏ அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே இலங்கை ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டிக்கான இலங்கை ஏ குழாம் பின்வருமாறு; 1.லஹிரு திரிமான்னே (அணித்தலைவர்) 2. குசால் ஜனித் பெரேரா (உபத்தலைவர்) 3.ரொஷான் சில்வா 4. சரித் அசலங்க 5. அசேல குணரத்ன 6. அவிஷ்க பெர்னாண்டோ 7. அனுக் பெர்னாண்டோ 8. லக்ஷான் …
-
- 0 replies
- 343 views
-
-
400 வது டெஸ்ட் போட்டியை நாளை சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.முதலாவது பகலிரவு போட்டியும் இதுவே. 400 வது டெஸ்ட் போட்டியை நாளை சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.முதலாவது பகலிரவு போட்டியும் இதுவே. பாகிஸ்தான் அணி தங்களது 400 வது டெஸ்ட் போட்டியில் நாளைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடவுள்ளது. நாளைய போட்டி இன்னுமொரு முக்கியத்துவம் கொண்ட போட்டியாகவும் அமையவுள்ளது, பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னணி துடுப்பாட்ட வீரர் யூனுஸ் கான் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இப்போது மீண்டுவந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி 10 நாட்கள் ஓய்வில் இருக்க பணிக்கப்பட்டுள்ள…
-
- 6 replies
- 641 views
-
-
ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த அணித்தலைவர்கள் வரிசையில் 2 ம் இடத்திற்கு முன்னேறினார் டோனி. ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த அணித்தலைவர்கள் வரிசையில் 2 ம் இடத்திற்கு முன்னேறினார் டோனி. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி அணித்தலைவர் கள் வரிசையில் 2 ம் இடத்திற்கு டோனி முன்னேறியுள்ளது உள்ளார். நேற்றைய நியூசிலாந்து அணியுடனான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலமே டோனி இந்த சாதனை படைத்தார். 107 வெற்றிகள் பெற்றிருந்த முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் அலன் போர்டரின் சாதனையை முறியடித்து டோனி தனது 195 வது போட்டியில் 108 வது வெற்றி பெற்றுக்கொண்டார். இந்தப் பட்டியலில் 230 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அவுஸ்திரேலியாவ…
-
- 0 replies
- 380 views
-
-
அஷ்வின் Vs ஹர்பஜன் பனிப்போர்..! புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை என்ன? அஷ்வின் மீது ஹர்பஜன் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பதாக அனல் கக்கும் விமர்சனங்களை ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இந்தூர் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பிட்சை பற்றிய விமர்சனம் ஒன்றை டிவிட்டரில் வைத்தார் ஹர்பஜன் சிங்." ஒரு பந்து கூட இன்னும் வீசப்படவில்லை, ஆனால் இரண்டு நாள் பிட்ச் போல காட்சியளிக்கிறது. என்னுடைய கணிப்புப்படி மூன்றரை நாட்களைத் தாண்டி மேட்ச் செல்லாது" என விமர்சித்திருந்தார் ஹர்பஜன். Harbhajan Turbanator ✔ @harbhajan_singh Already looks like 2 days old pitch before the 1st bowl is bowled..…
-
- 1 reply
- 373 views
-
-
உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் அண்மைய நாட்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், சிலவேளைகளில் அடுத்துவரும் சிம்பாவே தொடருக்கான அணியில் இளையவர்கள் அழைக்கப்படலாம் எனும் கருத்து வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சேனநாயக்கவை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் , ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் தசைப்பிடிப்பு காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்,ஆயினும் அவரும் இன்னும் குணமாகவில்லை என அறியக் கிடைக்கிறது. இலங்…
-
- 0 replies
- 334 views
-
-
ஆஸி. வீரர்களுக்கு காத்திருக்கும் அஸ்வின் எனும் பயங்கரம்: இயன் சாப்பல் அஸ்வின். | கோப்புப் படம். நியூஸிலாந்துக்கு எதிராக அஸ்வின் வீசியதைப் பார்க்கும் போது அஸ்வின் சுழற்பந்து வீச்சு என்ற பயங்கரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு காத்திருக்கிறது என்றே கூற வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். ஈஎஸ்பிஎன்-கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வது விருப்பமில்லாமல் போயுள்ளது என்பது ஒரு சாபமாகவே பரவலாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வீசியதைப் பார்க்கும் போது இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய அணியை …
-
- 0 replies
- 386 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகள்: பாக். பவுலர் யாசிர் ஷா சாதனை யாசிர் ஷா பந்து வீசும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகளுக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் பிங்க் நிறப்பந்தில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சாதனை படைத்துள்ளார். இவர் தனது 17-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகளுக்கான 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளராகவும் யாசிர் ஷா திகழ்கிறார். இதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலிடத்தில் ஜி.ஏ.லோமான் என…
-
- 0 replies
- 302 views
-
-
ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி. இந்தியக் கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவரான டோனி, நாளை ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் இன்னுமொரு மைல்கல்லை எட்டித்தொடக் காத்திருக்கிறார். இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்க்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, 3 இலும் தோல்வி கண்டுள்ள நிலையில் ,நாளை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் டோனி 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வாராயின் ஒருநாள் போட்டிகளில் 9000 ஓட்டங்கள் கடந்தவர்கள் வரிசையில் இணைந்துகொள்வார். இது…
-
- 0 replies
- 522 views
-
-
இந்தியன் சூப்பர் லீக் – 3: கோப்பையை வெல்லப்போவது யார்? #ISL ஐ.பி.எல் தொடருக்கு நிகராக பிரபலமடைந்து வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் காலெடுத்து வைக்கப்போகிறது ஐ.எஸ்.எல். வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி மூன்றாவது சீசனை வெல்ல அனைத்து அணிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சென்னை அணியைத் தவிர்த்து மற்ற ஏழு அணிகளிலும் பயிற்சியாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மெண்டோசா, எலானோ போன்ற சில முன்னனி வெளிநாட்டு வீரர்கள் இந்த சீசனில் இல்லை. ஆனாலும் டீகோ ஃபோர்லான், ஆரோன் ஹூக்ஸ் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் புதிதாய் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். பல வீரர்களும் கடந்த முறை விளையாடிய அணிகளிலிருந்து வேறு அணிக்கு மாறியுள்ளன. அதுமட…
-
- 9 replies
- 1.9k views
-
-
இது இந்தியாவின் 900-வது ஒருநாள் போட்டி! #Throwback ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்றதில் தபால், இரயிலுக்கு பிறகு இன்றளவும் நாம் போற்றிப் பாதுகாக்கும் விஷயம்னா அது இந்த கிரிக்கெட்தான். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே தர்மசாலாவில் நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. சர்வதேச அளவில் இந்திய அணி விளையாடும் 900-வது ஒருநாள் போட்டி இது. இந்த சாதனையைச் செய்யும் முதல் அணி நாம் தான். இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும் (889 போட்டிகள்) பாகிஸ்தானும் உள்ளன (866 போட்டிகள்). இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி: கிரிக்கெட் வரலாற்றில் 1971 ல் முதன்முறையாக 60 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை ஜ…
-
- 0 replies
- 341 views
-
-
நடுவரின் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் UDRS இந்தியாவிலும் அமுலுக்கு வருகின்றது நடுவரின் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் UDRS இந்தியாவிலும் அமுலுக்கு வருகின்றது. கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் UDRS முறையை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் ஏற்றுக்கொண்டாலும் இதுவரை இந்தியா மட்டும் UDRS முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி இதற்கு முற்றுமுழுதாக ஒத்துப்போகாத நிலையில், இந்தியக் கிரிக்கெட் சபை அதனை முற்றுமுழுதாக நிராகரித்தது. ஆனால் தற்போதைய டெஸ்ட் அணி தலைவர் விராட் கோஹ்லி இந்த விவாதத்தில் இருந்து சற்று மாறுபட்டு, எதிர்காலத்தில் UDRS முறையை பயன்படுத்தலாம் என்றும், முறைப்…
-
- 0 replies
- 299 views
-
-
மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அசார் அலியின் அபார முச்சதத்தின் துணையுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையில் காணப்படுகின்றது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் அசார் அலியின் ஆட்டமிழக்காத முச்சதத்தின் துணையுடன் (302*) மிகப்பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது.3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 579 …
-
- 0 replies
- 400 views
-