Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. 10 முறை சாம்பியன்ஸ் அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகி…

  2. கோலியிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றி மனம் திறந்தார் சச்சின் விராட் கோலி, மனதளவில் மிகவும் பலமானவர் என்பதுடன் நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடக் கூடியவரென இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவரிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார் . கோலி குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சச்சின் டெண்டுல்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கோலியின் ஆட்டத்திறமை குறித்து சச்சின் மேலும் தெரிவிக்கையில், கோலி ஸ்ட்ரெயிட் பேட் முற…

  3. ஆஸ்திரேலியாவில் கோலி அடித்த 4 டெஸ்ட் சதங்களுக்கு ஈடு இணை இல்லை: ரவி சாஸ்திரி ரவிசாஸ்திரியிடம் பேட்டிங் ஆலோசனை பெறும் முரளி விஜய், விராட் கோலி. | கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ். இந்திய அணியுடன் தனது 18 மாத கால அனுபவம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறிய ரவிசாஸ்திரி கோலியின் வளர்ச்சி குறித்து பாராட்டியுள்ளார். செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், “இந்திய கிரிகெட்டுடன் ஒரு வீரராக பிறகு ஒரு இயக்குநராக இணைந்து பணியாற்றியதில் இந்த 18 மாத கால அனுபவம் என்னால் மறக்க முடியாத தருணங்களாகும். நாங்கள் ஒரு அணியாகச் சாதித்ததை நினைத்துப் பார்க்கும் போது இந்த 18 மாத கால அனுபவம் மறக்க முடியாதது. நான் ஒரு வீரராக …

  4. ஆங்கிலேய கிரிக்கெட் லீக் அனுபவத்திற்கு நன்றி கூறுகின்றார் குசல் மெண்டிஸ் "டெஸ்ட் கிரிக்­கெட்டில் போதிய அனு­ப­வமோ, ஏ அணி­யு­ட­னான வெளி­நாட்டு விஜ­யமோ, உள்ளூர் கழகத் தலை­மைத்­து­வமோ குசல் மெண்­டி­ஸுக்கு இதற்கு முன்னர் கிடைத்­த­தில்லை. ஆனாலும் அவ­ருக்கு கிடைத்த வாய்ப்­பு­களை அவர் பற்­றிப்­ பி­டித்­துக்­கொள்ளத் தவ­றி­ய­தில்லை. அதுதான் அவ­ரது திறமை வெளிப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாகும். இங்­கி­லாந்தில் தனது முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய குசல் மெண்டிஸ் இரண்­டா­வது இன்­னிங்ஸில் குவித்த அரைச்சதம் டெஸ்ட் அரங்கில் அவ­ ரது கன்னி அரைச் சத­மாகப் பதி­வா­னது. …

  5. பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம் வரு­டாந்தம் நடத்­தப்­படும் மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்­டி­களின் வரி­சையில் இரண்­டா­வ­தாக இடம்­பெறும் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டிகள் எதிர்­வரும் ஞாயி­றன்று ஆரம்­ப­மாகி ஜூன் மாதம் 5ஆம் திகதி நிறை­வு­பெ­ற­வுள்­ளது. இப் போட்­டிக்­கான மொத்த பணப்­ப­ரிசு 32, 017,500 ஸ்டேர்லிங் பவுண்ட்­க­ளாகும். ஒற்­றையர் பிரிவில் சம்­பி­ய­னாகும் ஆணுக் கும் பெண்­ணுக்கும் தலா 2,000,000 ஸ்டேர்லிங் பவுண்­டுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் இரட்­டையர், கலப்பு இரட்­டையர், சக்­கர இருக்கை டென்னிஸ் போட்­டிகள் ஆகி­ய­வற்­றுக்கும் பணப்­ப­ரி­சுகள் வழங்­கப்­படும். இப் போட்­டி­க…

  6. விலக்கப்பட்டார் வான் கால் மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தின் முகாமையாளர் லூயிஸ் வான் கால், அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கழகம், உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தது. அவர் நீக்கப்படும் செய்தி, கடந்த சனிக்கிழமையிலிருந்து வெளிவந்த நிலையிலேயே, தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது இடத்துக்கு, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ, நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்.ஏ கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியைச் சம்பியன் ஆக்கிய பின்னரே, வான் கால் பதவி விலக்கப்பட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தெரிவாகாமை உட்பட, கழகத்தின் அண்மைக்காலப் பெறுபேறுகளில் திருப்தியடை…

  7. விளையாட்டு மைதானத்தில் வீரர் பலி.! (Video) ஆர்ஜன்டினாவில் நிகழ்ந்த காற்பந்தாட்ட போட்டியொன்றின் போது 23 வயதான மைக்கல் பெவ்ரே என்னும் வீரர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீரர் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிரணி வீரரொருவரின் கால் முட்டியானது முகத்தில் பலமாக மோதியுள்ளது. இதனால் காயமடைந்து கீழே விழுந்த குறித்த வீரனை எதிரணியின் வீரரொருவர் மீண்டும் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் குறித்த வீரனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த…

  8. தன் நடத்தையை விமர்சித்தவர்களுக்கு கிறிஸ் கெயில் பதிலடி கிறிஸ் கெய்ல். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய சேனல் ஒன்றின் பெண் நிருபரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக கெய்ல் மீது கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். கடந்த பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேனல் 10 பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசியதற்காக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிறிஸ் கெயில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சானல் 10 பெண் நிருபரான மெல் மெக்லாஃப்லின் கெயிலை அன்றைய தினம் பேட்டிக்காக அணுகிய போது, don't blush baby என்று கூறியது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சைக்குள்ளானது, கெயிலுக்கு அவர் ஆடிய கிளப்…

  9. இலங்கையுடன் மோதப் போகும் ஆஸி அணி இதுதான் ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள அவுஸ்திரேலிய 15 வீரர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிட்செல் ஸ்டார்க், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. மேலும் ஜேக்சன் பேர்ட், நேதன் கூல்டர்-நைல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னுக்கு நேதன் லயன், ஸ்டீஃபன் ஒகீஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் ஜூலை 26-ம் திகதி தொடங்குகிறது. இதன்படி இலங்கையை எதிர்கொள்ளவுள்ள அவிஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்…

  10. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் சைமன் வில்லிஸ் கிரிக்கெட் வீரர், (விக்கெட் காப்பாளர்) சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைந்து கொண்டுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=80057

  11. சிகிச்சையின் பின்னர் 100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் ஓடிய போல்ட் செக். குடியரசின் ஒஸ்ட்ராவாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுநர் போட்டியில் ஆறு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான யூசெய்ன் போல்ட் 100 மீற்றரை 9.98 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்றார். தொடை தசையில் ஏற்பட்ட உபாதைக்கு ஜேர்மனியில் சிகிச்சை பெற்ற பின்னர் பங்குபற்றிய போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றார். இவ் வருடம் அவர் பதிவு செய்த அதி சிறந்த நேரப் பெறுதி இதுவாகும். ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற கேமன் அழைப்பு மெய்வல்லுநர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 29 வயதான போல்ட் 10.05 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்…

  12. மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணி அறிவிப்பு படம்: ஏ.எஃப்.பி. ஜூலை-ஆகஸ்ட்டில் மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள், டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல், புஜாரா, அஜிங்கிய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் (மும்பை வேகப்பந்து வீச்சாளர்), ஸ்டூவர்ட் பின்னி. ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகள்: தோனி (கேப்டன்), ராகுல், ஃபைஸ் ஃ…

  13. இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில், இலங்கை அணியில் தாராளமாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சகலதுறை ஆட்டக்காரர்களும…

  14. ஆங்கிலேய எவ். ஏ. கிண்ணத்தை 12ஆவது தடவையாக மென்செஸ்டட் யுனைட்டட் கழகம் சுவீகரித்தது வெம்ப்ளி விளை­யாட்­ட­ரங்கில் க்றிஸ்டல் பெலஸ் அணிக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தின் மேல­திக நேரத்தில் 10 வீரர்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட மென்­செஸ்டட் யுனைட்டட் கழகம் 2 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்றி­பெற்று ஆங்­கி­லேய எவ். ஏ. கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. அரங்கம் முழு­வதும் ர­சி­கர்கள் நிறைந்­து­வ­ழிய இறுதிப் போட்­டியின் மேல­திக நேரத்தில் லிங்கார்ட் போட்ட கோலின் உத­வி­யுடன் வெற்­றி­ பெற்ற மென்­செஸ்டர் யுனைட்டட் 12ஆவது தட­வை­யாக எவ். ஏ. கிண்­ணத்தை வென்­றெ­டுத்­தது. ஆரம்பம் முதல் இறு­தி­வரை…

  15. யுனைட்டெட்டின் முகாமையாளராக இவ்வாரம் நியமிக்கப்படுகிறார் மொரின்ஹோ மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ நியமிக்கப்படவுள்ளதாக, பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இவ்வாரத்தில் அவர் நியமிக்கப்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்பதாகவே, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்கும் மொரின்ஹோவுக்குமிடையிலான இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லூயிஸ் வான் காலின் முகாமைத்துவத்தின் கீழ், சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் அணி தகுதிபெறாமை காரணமாக, மாற்றமொன்றை மேற்கொள்ள, அக்கழக நிர்வாகிகள் முடிவெட…

  16.  பரிஸ் செய்ண்ட் ஜெர்மைனிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் இப்ராஹிமோவிக் மர்சேய் அணியைத் தோற்கடித்து கூப்பே டீ பிரான்ஸ் கிண்ணத்தை பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி கைப்பற்ற, பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்கான தனது இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்று வெற்றியுடன் ஸல்டான் இப்ராஹிமோவிக் விடைபெற்றார். மேற்படி கிண்ணத்தினை வென்றமையையடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக உள்ளூர் கிண்ணங்கள் அனைத்தையும் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வென்றுள்ளது. மேற்படி போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி சார்பாக இப்ராஹிமோவிக் 2 கோல்களையும் எடின்சன் கவானி, பிளை…

  17. ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்று முதல்முறையாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவில் இந்த அணியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பத்து நாள்கள் பயணத்தில் டெல்லியிலும் மும்பையிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றில் விளையாட உள்ளது. பழங்குடியினரின் கிரிக்கெட் விளையாட்டானது பல இலட்சக்கணக்கான பங்கேற்பாளர்களோடு ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. http://www.bbc.com/tamil/sport/2016/05/160520_cricket?ocid=socialflow_facebook

  18.  ‘ஷரபோவா மீண்டும் விளையாட முடியாமல் போகலாம்’ ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, ஐந்து கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா, இனி மேல் மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என ரஷ்யா டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரிலேயே 29 வயதான ஷரபோவா மெல்டோனியத்தை பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஷரபோவா, இனியும் தொடர்களில் விளையாடுவாரா என்று வினவப்பட்டபோது, அது மிகவும் சந்தேகம், ஷரபோவா மோசமான நிலைமையில் இருப்பதாக ரஷ்ய டென்னிஸ் சம்மேளன தலைவர் ஷமில் தர்பிஷ்ஷெ…

  19. ஃபிஃபாவின் உயர்மட்ட குழுவின் உறுப்பினருக்கு தடை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழு, ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஊழல் இடம்பெற்றது, ஆனால் தான் பொறுப்பில்லை என்கிறார் நியர்ஸ்பாக் ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்தே வுல்ஃப்காங் நியர்ஸ்பாக் கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் தடை செய்யப்பட வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அவர் கையூட்டு அளிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்ற ஆண்டு நவம்பரி…

  20. அஸ்டன் வில்லாவை வாங்குகிறார் சீனர் அஸ்டன் வில்லா கால்பந்தாட்டக் கழகத்தை, சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்குவதற்குச் சம்மதித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது. 60 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு வாங்குவதற்கே அவர் சம்மதித்துள்ளார். கலாநிதி டொனி ஸியா என்ற அந்த சீனத் தொழிலதிபர், இக்கழகத்தை வாங்குவதற்கான அனுமதி, கால்பந்தாட்ட லீக்கினால் வழங்கப்பட்டவுடன், இந்த விற்பனை உத்தியோகபூர்வமாகும். 2006ஆம் ஆண்டில் 62.2 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு அஸ்டன் வில்லா கழகத்தை வாங்கிய அமெரிக்க கோடீஸ்வரரான றன்டி லேர்னர், அக்கழகத்தை விற்பனை செய்யவுள்ளதாக 2014ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார். குறிப்பாக, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் இம்…

  21. மும்முனை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள்; ஒரு நாள் கிரிக்கெட் குழாமில் நரேன், பொலார்ட் 2016-05-20 11:42:47 அவுஸ்­தி­ரே­லியா, தென் ஆபி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்­கான மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் குழாமில் சுனில் நரேனும் கீரொன் பொலார்டும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். சுழல்­பந்­து­வீச்­சாளர் சுனில் நரேனும் சக­ல­துறை வீரர் கீரொன் பொலார்டும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் பின்னர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­வில்லை. நடை­பெ­றப்­போகும் மும்­முனைத் தொட­ருக்­கான முதல் நான்கு போட்­டி­க…

  22. அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது விழா: அதி சிறந்த வீரர் சங்கக்கார, அதி சிறந்த வீராங்கனை நிமாலி 2016-05-20 10:23:42 அங்­கு­ரார்ப்­பண ஜனா­தி­பதி விளை­யாட்­டுத்­துறை விருது (2015) விழா வில் வரு­டத்தின் அதி­ சி­றந்த விளை­யாட்டு வீரர் விருதை இலங்­கையின் முன்னாள் கிரிக்ெகட் வீரர் குமார் சங்­கக்­கா­ரவும் அதி சிறந்த விளை­யாட்டு வீராங்­க­னைக்­கான விருதை மெய்­வல்­லுநர் நிமாலி லிய­ன­ஆ­ராச்­சியும் வென்­றெ­டுத்­தனர். இவ் விரு­து­விழா பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்­று­முன்­தினம் மாலை நடை­பெற்­றது. வரு­டத்தின் விளை­யாட்­டுத்­து­றையில் அதி சிறந்த ஆளு­மை ­மிக்­க­வ­ருக்­கான விருது சர…

  23. "ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பு":ஐஓசி விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் குற்றச்செயலாக அதிகரித்துள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். பீஜிங் போட்டியில் பங்குபெற்ற பலர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நபர்களுக்கு மட்டுமல்ல, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என தாமஸ் பாக் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், அரச ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்பாடு இடம்பெற்றுள்ளது எனும் குற்றச்சாட்டுகளின…

  24.  பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும் கடமையாகும். அதன்மூலமே, அதிகார அமைப்புகள், தங்கள் தங்கள் கடமைகளைத் தொடர்ச்சியாகத் தவறின்றி முன்வைப்பது உறுதிசெய்யப்படும். அதேபோல், அந்த அமைப்புகள், சிறப்பான கடமைகளை ஆற்றும்போது, அதைப் பாராட்ட வேண்டியதும் கடமையாகும். இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் பொருத்தமா…

  25. ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக கேட்க உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குசேல் ஜனித் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்ததாக கூறி ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பொய்யானது. எனவே நஷ்டஈடு கேட்கும் உரிமை எமக்குள்ளது. இதற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேராவை இலங்கை அணியில் இணைத்து நாட்டுக்காக விளையாட வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்கமாகும். http://www.virakesari.lk/article/6340

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.