Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு முரளி விஜய்யை உதாரணம் காட்டும் கவாஸ்கர் ஸ்விங் பவுலிங்கை கையாள்வதில் முரளி விஜய்யை ஆஸி.பேட்ஸ்மென்களுக்கு உதாரணம் காட்டும் சுனில் கவாஸ்கர். | கோப்பு படம். இங்கிலாந்து பிட்ச்களில் ஸ்விங் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியுள்ளது பற்றி சுனில் கவாஸ்கர் கூறும் போது முரளி விஜய்யின் உத்தியை ஆஸ்திரேலிய வீரர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். உலகின் அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்களான வெஸ்லி ஹால் தொடங்கி கிரிபித், ராபர்ட்ஸ், கார்னர், கிராப்ட், ஹோல்டிங் மார்ஷல், இங்கிலாந்தின் ஜான் ஸ்னோ, பாப் விலிஸ், கிறிஸ் ஓல்ட், போத்தம், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி, ஆஸ்திரேலியாவில் தாம்சன். லில்லி, லென் பாஸ்கோ, பாகிஸ்தானின் இம்ரான்,…

  2. ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு! ஆஷஸ் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் கிளார்க்கின் மோசமான பார்மும் அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்களையும், மீடியாக்களையும் திருப்பி விட்டுள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 28 இன்னிங்சுகளில் 668 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இதில் 2 முறை சதமடித்துள்ளார். சராசரி 28.67 ஆகும். இந்த 28 இன்னிங்ஸ்களில் கிளார்க் 23 முறை, 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரானத் தொடரில்தான் கிளார்க் அறிமுகம் ஆனார். கிளார்க் அறிமுகமான இந…

  3. மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்! இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படு கேவலத்தை சந்தித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால் 331 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் ரோஜர்சும் டேவிட் வார்னரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இரண்டாவது இன்னிங்சில் ரோஜர்ஸ் 52 ரன்னிலும் வார்னர் 64 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.ஆனால் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித் வெறும் 5 ரன்னில் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் தோல்வியை நோக்கி அழைத்து செல்ல காரணமாக அமைந்து விட்டது. உலகின் நம்பர் …

  4. நாட்டிங்ஹாமில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியர்! ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வம்சாவளி வீரர் ஒருவரும் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கினார். காயமடைந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சுக்கு பதிலாக களமிறங்கிய அனுஜ் தால் 19 வயதே நிரம்பியவர். இங்கிலாந்து அணியின் 12வது வீரராக இருந்த அவருக்கு ஸ்டோக்ஸ் காயமடைந்ததையடுத்து இந்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1996ஆம் ஆண்டு பிறந்த அனுஜ் தால், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். நாட்டிங்ஹாமில் உள்ள டர்பன் பள்ளியில் அவர் படித்து வருகிறார். நாட்டிங்ஹாம்ஷயர் லெவன் அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான அனு…

  5. பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கப் போகிறார் தோனி ஓய்வில் இருந்து வரும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் தோனி, பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசம் நிகழ்த்தவுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் அமைந்திருக்கும் 'எலைட் பாரா ரெஜிமெண்ட்' ராணுவ முகாமில் இணைந்து அவர் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பதற்காக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக இந்த முகாமில் அவர் வந்து சேர்ந்தார். தோனிக்கு பயிற்சி அளிக்கும் ராணுவ உயரதிகாரிகள் கூறுகையில், "இருவார கால பயிற்சிக்கு பின்னர் ஐந்து முறை தோனி ராணுவ விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் கீழே குதித்து சாகசம் நிகழ்த…

  6. லலித் மோடியால் கேப்டன் பதவியை இழந்த சுரேஷ் ரெய்னா! இந்திய அணி கடந்த மாதம் ஜிம்பாப்வே அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த தொடருக்கு சுரேஷ் ரெய்னாவைதான் கேப்டனாக நியமிக்க வேண்டுமென்று இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். ஜிம்பாப்வே செல்லவுள்ள இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஜுன் 29ஆம் இந்திய அணியின் தேர்வுக்குழு கூடியது. அதற்கு இரு நாட்களுக்கு முன்னதாகத்தான் சுரேஷ் ரெய்னா, பிராவோ, ரவீந்தர ஜடேஜா சூதாட்டத் தரகரான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் 20 கோடி அளவிற்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை லஞ்சமாக பெற்றதாக லலித் மோடி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதம…

  7. உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் சிட்னியில் ஆரம்பம் : ஆசியாவின் முதல் நிலை நாடுகள் இன்று மோதல் சர்­வ­தேச வலை­ப்பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் மேற்­பார்­வையில் அவுஸ்­தி­ரே­லிய வலைப் ­பந்­தாட்ட சங்கம் முன்­னின்று நடத்தும் 14ஆவது உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டிகள் சிட்னி ஒலிம்பிக் பார்க் உள்­ளக அரங்கில் இன்று முதல் எதிர்­வரும் 16ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளன. 10 தட­வைகள் சம்­பி­ய­னா­னதும் நடப்பு சம்­பி­ய­னு­மான அவுஸ்­தி­ரே­லியா, முன்னாள் சம்­பி­யன்­க­ளான நியூ­ஸி­லாந்துஇ ட்ரினிடாட் அண்ட் டுபாகோ ஆகி­யன உட்­பட 16 நாடுகள் இவ் வருட உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. முன்னாள் ஆசிய சம்­பி­ய­னான இலங்கை தனது முத­லா­வது போட்­டியில் நடப்பு ஆசிய …

  8. இலங்கை மண்ணில் இந்தியா வென்றதில்லை கிரிக்­கெட்டில் பல்­வேறு சாத­னைகள் படைத்­துள்ள இந்­திய அணி, இலங்கை மண்ணில் கடந்த 22 ஆண்­டு­க­ளாக டெஸ்ட் தொடரை வென்­ற­தில்லை என்ற கவலையை நீடித்­துக்­கொண்டே இருக்­கி­றது. தலை­சி­றந்த சுழற்­பந்து வீச்­சாளர் கும்ப்ளே, ஹர்­பஜன் சிங் உட்­பட பல்­வேறு சிறந்த பந்து வீச்­சா­ளர்­களை கொண்ட இந்­திய அணி தரவரிசையில் முத­லி­டத்தை எட்­டிப்­பி­டித்­துள்­ளது. வெளி­நா­டு­களில் தங்­க­ளு­டைய சுழற்­பந்து மற்றும் வேகப்­பந்து வீச்சால் அசத்­தி­யுள்ள இந்­திய அணி இலங்­கையில் மட்டும் ஜொலித்­த­தில்லை. சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான இலங்­கையில் இந்­திய அணி 6 முறை சுற்­றுப்­ப­யணம் செய்­துள்­ளது. இதில் கடந்த 1993ஆ-ம் ஆண்டு மட்­டுமே டெஸ்ட் தொடரை வென்­றுள்­ள…

  9. அது போன மாசம்... யுவராஜிடம் சிக்கி ஒரே ஓவரில் 6 சிக்சர் விட்டு கொடுத்த பிராட் (வீடியோ) இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட், நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்... பிராட் தந்தை கிறிஸ் பிராடும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். இதனால் பிராட்டின் ரத்தத்திலேயே கிரிக்கெட் கலந்துள்ளது. தந்தையை போலவே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த பிராட். 17 வயது வரை தொடக்க வீரராகத்தான் இருந்தார். அதற்கு பின்தான் பந்துவீச்சுக்கு மாறினார். கடந்த 2007ஆம் ஆண்டு, டி20 உலகக் கோப்பை போட்டியில் யுவராஜ்சிங், பிரா…

  10. நெருக்கடியில் ஜொலிக்க இந்தியாவுடன் விளையாடுங்கள்: பாக். வீரர்களுக்கு இன்ஸமாம் அறிவுரை நெருக்கடியான சூழலில் சிறப் பான ஆட்டத்திறனை வெளிப் படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடும் போது, நாங்கள் திணறினோம். அதேசமயம், நெருக்கடியைச் சமாளிப்பது எப்படி என்பதையும் அதன் மூலம் கற்றுக் கொண்டோம். பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி யான சூழலிலும் சிறப்பாக விளையாடுவதைக் கற்றுக் கொள்வதற்கு, இந்தியாவுடன் அடிக்கடி விள…

  11. சில வரிச் செய்திகள் கால்பந்து ரேங்க்: 156-வது இடத்தில் இந்தியா ஃபிஃபா கால்பந்து தரப்பட்டியலில் இந்தியா 156-வது இடத்தில் உள்ளது. உலக சாம்பியன் ஜெர்மனி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அர்ஜென்டினா முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2-வது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. கொலம்பியா, பிரேஸில், போர்ச்சுகல், ருமேனியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை முறையே முதல் 10 இடங்களில் உள்ளன. கடந்த மாதம் வெளியான தரவரிசைப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இந்தியா 15 இடங்கள் பின்னடைந்துள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான போட்டியில் ஓமனிடம் தோல்வியுற்றதை அடுத்து இந்தியா தரவரிசைப் பட்டியலில் கீழிறங்கியுள்ளது. 156-வது இடத்தை கிர்கிஸ்தானுடன் பகிர்ந்து கொண்…

  12. 2016 ரியோ ஒலிம்பிக்: ஓராண்டு கவுன்டவுன் தொடங்கியது 2016 ஒலிம்பிக் ஓராண்டு கவுன்டவுன் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) பிரேசில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹென்ரிக் எட்வர்டோ அல்வெஸ், விளையாட்டுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஹில்டன், பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கார்லஸ் நுஸ்மேன், பிரேசில் அதிபர் அதிபர் தில்மா ரூசெஃப், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச் உள்ளிட்டோர். படம்: ஏஎஃப்பி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அதற்கான கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில்…

  13. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட அதிக ரன் அடித்த 'எக்ஸ்ட்ரா'! ஆ தொடரில் இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, வரலாறு காணாத அவமானத்தை சந்தித்துள்ளது. அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 60 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் யாரும் நிலைத்து விளையாடவில்லை. கேப்டன் மைக்கேல் கிளார்க்கில் இருந்து அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர், கொஞ்சம் நிலைத்து விளையாடினார். ஆனால் அவரும் 13 ரன்களில் அவுட் ஆகி விட்டார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்காக உதிரிகளாக 14 ரன்கள் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்தது எக்ஸ்ட்ராதான். ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே தனிவீரர்…

  14. சாது மிரண்டால் காடு தாங்காது... எதிரணி வீரரின் கழுத்தை பிடித்து நெறிக்கும் மெஸ்சி! கால்பந்து களத்தில் பார்சிலோனா அணியின் துணை கேப்டன் லயனல் மெஸ்சி அமைதி போக்கையை கடைபிடிப்பவர். பெரும்பாலும் அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடியாது. எதிரணி வீரர்கள் முன்கள வீரரான இவரிடம்தான் தங்களது முரட்டு ஆட்டத்தை காட்டுவார்கள். தடுப்பாட்ட வீரர்களுக்கு தண்ணி காட்டுவதில் மெஸ்சி சளைக்காதவர் என்றாலும் சில நேரங்களில் மெஸ்சிக்கே கோபத்தை வரவழைக்கும் வகையில் எதிரணி வீரர்களின் ஆட்டம் அமைந்து விடுகிறது. தற்போது பிரிசீசன் நட்புரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று பார்சிலோனா அணியுடன் ஏ.எஸ். ரோமா அணி மோதியது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டத…

  15. 236 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த குப்தில்- லாதம் ஜோடி! ஒருநாள் போட்டியில், 236 ரன்களை ஒரு விக்கெட் கூட இழக்காமல் சேஸ் செய்து நியூசிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் குப்தில் 116 ரன்களும், லாதம் 110 ரன்களும் அடித்து இந்த புதிய சாதனை நிகழ்த்தினர். முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 303 ரன்களை ஜிம்பாப்வே அணி சேஸ் செய்து எளிதாக வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 235 ரன்களை எடுத்தது. இதனை நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களே அடித்து முடித்து விட்டனர். இதனால் நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியில் ஒரு ஜோட…

  16. 'மேட்ச் பிக்சிங் ' வங்கதேச கேப்டனுடன் இணைந்து விளையாடிய பிரவீன் தாம்பேவுக்கு சிக்கல் ! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லுடன் இணைந்து, டி20 போட்டியில் விளையாடியதாக ராஜஸ்தான் அணியின் பிரவீன தாம்பே மீது புகார் எழுந்துள்ளது. லிவர்பூல் லீக்கில் பங்கேற்று விளையாடிய பிரவின் தாம்பே, பின்னர் ஜுலை 23 முதல் 31ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருந்துள்ளார். நியூயார்க் நகரில் ஜுலை 26ஆம் தேதி ஹால்ம்டால் கிரிக்கெட் அணிக்காக அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இதே போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் தடைக்குள்ளான வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லும் விளையாடியது தற்போது தெரிய வந்துள்ளது.…

  17. பார்சிலோனா கேப்டனாக ஆன்ட்ரஸ் இனியஸ்டா தேர்வு பார்சிலோனா அணியின் கேப்டனாக ஆன்டரஸ் இனியஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணி வீரர்கள் அனைவரும் வாக்களித்து புதிய கேப்டனை தேர்வு செய்தனர். பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்த சேவி, அந்த அணியில் இருந்து விலகி துபாயை சேர்ந்த அல்சாத் அணியில் அண்மையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் மற்றொரு நடுக்கள வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லயனல் மெஸ்சி இரண்டாவது கேப்டனாக செயல்பட தேர்வாகியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக ஆன்ட்ரஸ் இனியஸ்டா விளையாடி வருகிறார். தற்போது உலகிலுள்ள சிறந்த மி…

  18. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார். இதேவேளை, இங்கிலாந்து அணியின் முழுநேர ஆலோசகராக மஹேல செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இங்கிலாந்து அணிக்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/08/05/இங்கிலாந்து-அணியின்-துடுப்பாட்ட-ஆலோசகராக-மஹேல

  19. சர்வதேச ஒலிம்பிக் குழுவிலிருந்து விலகுகிறார் பிளட்டர் 2015-08-05 10:48:54 சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவில் 16 வரு­டங்­க­ளாக உறுப்­பி­ன­ராக இருந்து வந்த செப் பிளட்டர் அப்­ப­த­விக்கு மீண்டும் போட்­டி­யி­டு­வ­தில்லை எனத் தீர்­மா­னித்­துள்ளார். சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலைவர் பத­வி­யி­லி­ருந்தும் வில­க­வுள்ள செப் பிளட்­டரின் விளை­யாட்­டுத்­துறை சார் நிர்வாகப் பணி விரைவில் முடி­வுக்கு வர­வுள்­ளது. எவ்­வா­றா­யினும் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம் ­மே­ள­னத்தில் நிலவும் சர்ச்­சை­ க­ளுக்கும் பிளட்­டரின் தீர்­மா­னத்­திற்கும் எவ்­வித தொடர்பும் இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிப்­ப­வர்கள் 80 வ…

  20. 'மிக முக்கியமானவர் சங்கக்கார' + View all இலங்­கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும்இ நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான குமார் சங்­கக்­கார பற்றி வி.வி.எஸ். லட்­சுமண் மனம் திறந்து பேசி­யுள்ளார். கோலி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் பங்­கேற்­கி­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான இந்த டெஸ்ட் தொடர் சங்­கக்­கா­ர­விற்கு கடைசி தொட­ராக அமையும். அவர் ஏற்­க­னவே இந்த தொட­ரோடு டெஸ்ட் போட்­டி­களில் இருந்து ஓய்வு பெறப் போவ­தாக தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் சங்­கக்­கார பற்றி இந்­திய அணியின் முன்னாள் துடுப்­பாட்­டக்­கா­ர­ரான வி.வி.எஸ். லட்­சுமண் ஒரு நிகழ்ச்­சியில் கூறு­கையில்இ இலங்கை மண்…

  21. முதல் 3 பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோ லண்டன்: கிரிக்கெட் உலகில் மிகவும் அரிய நிகழ்வான, பந்து வீச்சை ஆரம்பித்ததும் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்திய சம்பவம் மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது.இங்கிலாந்து கவுன்டி அணியான ஒர்செஸ்டெர்ஷயர் பந்து வீச்சாளர் ஜோ லீச், நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியின்போது பந்து வீச்சைத் தொடங்கியதுமே 3 விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் வீசி அசத்தினார். இவரது பந்து வீச்சில், ரிச்சர்ட் லெவி, ராக் கியோ, பென் டக்கெட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் இருவரையும் விக்கெட் கீப்பர் பென் காக்ஸ் கேட்ச் செய்தார். கடைசி நபரை ஜேக் ஷான்ட்ரி கேட்ச் செய்தார்.கிரிக்கெட் உலகில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது மிக …

  22. பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது! இந்தூர்: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் விளையாடிய டி-20 கிரிக்கெட் போட்டியன்று பணம் வைத்து சூதாட்டம் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோடிய டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியை மையமாக வைத்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் பணம் வைத்து ‘ஆன்லைன்’ மூலம் சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, கட்ஜு காலனியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்தபடி ஆன்லைன் மூலம் சூதாட்டத்துக்கான பணப் பரிவர்த்தனையை செய்து கொண்டிருந்த அஜய் பர்யானி (34) என்பவரை போலீசார் கைது செய்த…

  23. தேசத்துக்காக ஹாக்கி விளையாடியவர்... இப்போது தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார்! இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஜக்ராஜ்சிங், அண்மையில் நடந்த குர்தாஸ்பூர் காவல் நிலைய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் இளம் வீரராக இருந்தவர் ஜக்ராஜ்சிங். சிறந்த டிராக்பிளிக்கர்... பெனால்டி கார்னர்களை கோலாக்குவதில் ஸ்பெஷலிஸ்ட். கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஜலந்தர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஜக்ராஜ்சிங்கால் படுகாயமடைந்தார். இதன் காரணமாக அவரால் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. விபத்தில் சிக்கும் போது ஜக்ராஜ்சிங்குக்கு வயது 20தான். எனினும் கடுமையான உழைப்பினால் தற்போது பஞ்சாப் காவல்துறையில் டி.எ…

    • 1 reply
    • 331 views
  24. வார்னருடன் சண்டையில் ஈடுபட்ட ஜோ ரூட்டுக்கு மது விருந்துகளில் பங்கேற்கத் தடை! ஆஷஸ் தொடரின் போது மது விருந்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அப்போது பார் ஒன்றில் மது விருந்தில் கலந்து கொண்ட, இங்கிலந்து வீரர் ஜோ ரூட் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த டேவிட் வார்னர், ஜோ ரூட் முகத்தில் தாக்கினார். இந்த சம்பவத்தையடுத்து, ஜோ ரூட்டுக்கு தற்போதைய ஆஷஸ் தொடரின் போது மது விருந்தில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற 3வது போட்டியில…

  25. தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை! தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளர். தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அது முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால், தாய்நாடு திரும்பினார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவரால் படைக்க முடியாமல் போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.