Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை வந்தது பாக் . அணி இலங்கை அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றி விளையாடுவதற்காக பகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, இரண்டு இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி லாகூரில் கடந்த 8 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து இலங்கை வந்தடைந்துள்ளது. பாகிஸ்தான் அணியுடன் துணை பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் வாக்கார் யூனிஸ் ஆகியோர் வருகைதந்துள்ள…

  2. வருங்காலத்துக்கான வேகப்பந்து வீச்சு திறமைகள் இந்தியாவில் உள்ளன: கிளென் மெக்ரா எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநராக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆஸ்திரேலிய கிரேட் கிளென் மெக்ரா, இந்திய வேகப்பந்துவீச்சு திறமைகள் பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.ஆர்.எஃப். அகாடமியிலிருந்து அடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி கிளென் மெக்ரா கூறும் போது, “வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர். மேலும் பல்தேஜ் சிங் இருக்கிறார், இவரிடம் நல்ல ஆக்‌ஷன் உள்ளது. சந்தீப் வாரியர் என்பவரும் நம்பிக்கை அளிக்கிறார். அஸ்வின் கிரிஸ்ட் என்பவரும் நெடுந்தூரம் முன்னேறி வந்துள்ளார். இவர் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்கிறார், தான் என்ன …

  3. டிவில்லியர்ஸ் சாதனையை குறிவைக்கும் வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக் புதன்கிழமை இந்தியா-வங்கதேசம் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஃபாதுல்லாவில் தொடங்குவதை அடுத்து வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக், டிவில்லியர்ஸ் சாதனை ஒன்றை குறிவைத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து ஒரு சாதனை புரிந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதனை நவம்பர் 2012 முதல் பிப்ரவரி 2014 வரை நடைபெற்ற 12 தொடர் டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்தின் மொமினுல் ஹக் இன்னும் ஒரு அரைசதம் எடுத்தால் டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்வார். வங்கதேச அணியின் இடது கை பேட்ஸ்மென் மொமினுல் ஹக் (வயது 23) அந்த சாதனையை சமன் செய்வாரா என்ற ஆவல் வங்கதேச அணியினரிடத்தில் ஏற்பட்டுள்ளத…

  4. சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...! கராச்சியில் நடைபெற்ற ஃபேஷன் பேரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பங்கேற்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்ந…

  5. 4000 ஓட்டங்களைப் பெற்றார் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணியின் நட்­சத்­திர துடுப்பாட்ட வீரரான டில்ஷான், இருபது ஓவர்கள் போட்­டி­களில் 4000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை எட்­டி­யுள்ளார். இங்­கி­லாந்தில் நாட் வெஸ்ட் இருபது ஓவர் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்­டத்தில் டெர்­பை­ஷயர்- துர்ஹாம் அணிகள் மோதின. முதலில் விளை­யா­டிய துர்ஹாம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்­பிற்கு 147 ஓட்­ட எண்ணிக்கையை எடுத்­தது. மஸ்டார்ட் (20), ஸ்டோன் மென் (28), கோலிங்வுட் (41) சிறப்­பாக விளை­யாடி அணியின் ஓட்­டங்­களை உயர்த்­தினர். இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய டெர்­பை­ஷயர் அணிக்கு டில்ஷான், டுர்ஸ்டன் ஆகி யோர் சிறப்­பான ஆரம்பத்தைக் கொடுத்­தனர். டுர்ஸ்டன் 21 ஓட்டங்கள…

  6. எவ்வளவு செலவானாலும் உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடம் அமைக்கப்படவேண்டும் : சிதத் வெத்தமுனி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறு­வ­தற்­காக உள்­ளக கிரிக்கெட் பயிற்­சிக்­கூ­டத்தை நிச்­ச­ய­மாக அமைத்­துக்­கொ­டுப்போம் என்றும், இதற்கு 50 மில்­லியன் ரூபா செல­வாகும் என்று கணக்­கிட்­டுள்­ள­தா­கவும் அதற்கு மேல் சென்­றாலும் பர­வா­யில்லை எவ்­வ­ளவு செல­வா­னாலும் அதை செய்­து­கொ­டுப்போம் என இலங்கைக் கிரிக்­கெட்டின் தலைவர் சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார். இலங்கைக் கிரிக்கெட் தலை­மை­யகத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய சிதத் வெத்­த­முனி, உள்­ளக பயிற்­சிக்­கூ­டங்­களை அமைப்­பதன் மூலம் வீரர்­களின் த…

  7. அழகிய ஆலப்புழையில் கிரிக்கெட் மைதானம்... கேரளாவும் தமிழகத்தை முந்தியது....! தென் மாநிலங்களில் தெலுங்கானா பிரிவதற்கு முன்னரே ஆந்திராவில் ஹைதரபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது உண்டு. கர்நாடகாவில் பெங்களூருவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது மங்களூவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை பொறுத்தவரை கொச்சியில் மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. தற்போது அங்கேயும் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கீழை நாடுகளின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆழப்புலை நகரில்தண்ணீரால் சூழ்ந்த இடத்தில் அழகிய கிரிக்கெட் மைதானம் உருவ…

  8. கனேடிய குரோன் ப்றீயிலும் லூயிஸ் ஹமில்டன் வெற்றி 19 கட்­டங்­களைக் கொண்ட ஃபோர்­மியூலா 1 குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தின் ஏழா­வது கட்­ட­மான கனே­டிய குரோன் ப்றீ போட்­டியில் லூயிஸ் ஹமில்டன் வெற்­றி­பெற்று, ஒட்­டு­மொத்த சம்­பியன் பட்­டத்­திற்­கான தனது வாய்ப்பை அதி­க­ரித்த வண்ணம் உள்ளார். மேர்­சிடெஸ் அணி சார்­பாக போட்­டி­யிடும் லூயிஸ் ஹமில்டன் தனது சக அணி வீரர் நிக்கோ ரொஸ்­பேர்­கிடம் எதிர்­கொண்ட சவாலை முறி­ய­டித்து வெற்­றி­யீட்­டினார். 305.775 கிலோ மீற்றர் மொத்த தூரம் கொண்ட விலேநோவ் ஓடு­பா­தையில் நடை­பெற்ற 7ஆவது கட்ட க்ரோன் ப்றீ போட்டி 70 சுற்­று­களைக் கொண்டதாகும். இந்தப் போட்டித் தூரத்தை ஒரு மணித்­தி­யாலம் 31நா­டி­களில் நிறைவு செய்த லூயிஸ் ஹமில்டன் முதலாம் இ…

  9. தன்னம்பிக்கை பெறுவது பற்றி தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்: அஜிங்கிய ரஹானே தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்று அஜிங்கிய ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். "தோனியின் கீழ் விளையாடும் போது இளம் வீர்ர்களான நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை ஊட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என்று எதுவாக இருந்தாலும் அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும் ஒவ்வொரு சூழலிலும் எப்படி வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்” என்றார் அஜிங்கிய ரஹானே. விராட் கோலி பற்றி.. விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர், எதிரணியினர் ஆஸ்திரேலியாவாக …

  10. 300 கி.மீ வேகத்திலும் கீரிப்பிள்ளையின் உயிரை காப்பாற்றிய எப் 1 வீரர்களின் கருணை! ( வீடியோ) எப்1 கார்பந்தயத்தில் கனடா கிராண்ட் ப்ரீ போட்டி நேற்று மான்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பந்தய கார்கள் சுமார் 324 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் போது, பந்தய பாதையில் நரி ஒன்று குறுக்கே பாய்ந்தது. எனினும் கார்கள் நெருங்குவதற்குள் அந்த நரி, பந்தய பாதையை கடந்து விட்டதால் உயிர் பிழைத்தது. அதேபோல் ஸ்பெயின் வீரர் ஃபிலிப் மாசாவின் பந்தய கார் மின்னல்வேகத்தில் வந்து கொண்டிருந்த போது, கீரிப்பிள்ளை ஒன்றும் பந்தய பாதையை கடக்க முயன்றது. பந்தய பாதை அருகே கார்களின் இரைச்சலில் கீரிப்பிள்ளை பயந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் ம…

  11. உலகின் குட்டி நாட்டு கிரிக்கெட் அணி இது...! உலகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன். கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரின் தலைமையகம் இதுதான். போப் ஆண்டவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த குட்டி நாட்டின் நிர்வாகமும் போப் ஆண்டவரின் கையில்தான்.110 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 822 பேர்தான். ஆனால் இந்த குட்டி நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணி இருப்பதுதான் ஆச்சர்யமானது. ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. வாட்டிகன் இருப்பதோ இத்தாலி தலைநகரான ரோம் நகருக்கு மத்தியில். இத்தாலி, கிரிக்கெட் வாடை என்பதே அறவே இல்லாத நாடு. இந்நிலையில்தான் வாட்டிகன் நகரில…

  12. டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் சங்கக்காரா, மேத்யூஸ், ஹேராத் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகள் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள்:- சங்கக்காரா (இலங்கை) 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா 2வது, 3வது இடங்களில் உள்ளனர். சுமித் (அவுஸ்திரேலியா), மேத்யூஸ் (இலங்கை), யூனுஸ்கான் (பாகிஸ்தான்), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), வார்னர் (அவுஸ்திரேலியா), விராட் கோஹ்லி ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள்:- ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹாரீஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். பவுல்ட் …

  13. ஃபிஃபா தயாரித்த முதல் படத்தை தியேட்டருக்கு பார்க்க வந்த ஒரே ஒரு ரசிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனம் உருவான வரலாற்றை மையமாக வைத்து ஃபிஃபா தயாரிப்பில் வெளி வந்த 'யுனைடெட் ஃபேஷன்ஸ்' என்ற திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பீனிஸ் டவுட்டன் நகரில் பிலிம்ஃபேர் திரையரங்கில் ஒரே ஒரு ரசிகர்தான் பார்க்க வந்துள்ளார். எனினும் அவருக்காக அந்த படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஊழல் புகார் காரணமாக ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் அண்மையில் பதவி விலகினார். இவர் பதவியில் இருந்த காலத்தில்தான், யுனைடெட் ஃபேஷன்ஸ் என்ற ஹாலிவுட் படம் தயாரிக்க நிதியுதவி செய்யப்பட்டது. ஃபிஃபா தயாரித்த முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆன…

  14. ‘தளராத’ கால்பந்து தாத்தா சர்வதேச கால்பந்து நிர்வாகத்தில் கொடி கட்டிப்பறந்த செப் பிளாட்டர், பெண்கள் விஷயத்தில் ரொம்ப ‘வீக்’. மூன்று முறை திருமணம் செய்த இவரது வலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியாக இருந்த இரினா ஷெய்க் சிக்கியது தான் ‘லேட்டஸ்ட்’ செய்தி. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின்(பிபா) தலைவராக 5வது முறையாக சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டர், 79, தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் அரங்கேறிய பல்வேறு ஊழல்கள் அம்பலமாக, ‘பிபா’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இவரது மன்மத லீலைகளும் தெரிய வந்துள்ளன. வறுமையான குடும்பத்தில் பிறந்த பிளாட்டர், முதலில் உள்ளூர் பெண் லிலியான் பினரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கொரின் என்ற மகள் உண்டு.…

  15. விதிமுறைப்படி கிரிக்கெட் விளையாட்டுக்கு விக்கெட் கீப்பர் தேவையில்லை...! இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆடி வியக்க வைத்தது. நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நடந்த ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷைர்- வொர்செஸ்டர்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வொர்செஸ்டர்ஷைர் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய நார்தாம்ப்டன்ஷைர் இலக்கினை வேகமாக விரட்டினர். அந்த அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் நார்தம்டன்ஷைர் அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. இந்த சமயத்தில்தான் வொர்செஸ்டர்ஷைர் அணி …

  16. தலைமை பயிற்சியாளர் தேவையா: ரவி சாஸ்திரி விளக்கம் கோல்கட்டா: ‘‘இந்திய அணியில் 3 பயிற்சியாளர்கள் உள்ளனர். இதனால் தற்போது தலைமைப்பயிற்சியாளராக வேறு யாரும் வேண்டாம்,’’என, இந்திய அணியின் ரவி சாஸ்திரி கூறினார். வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் 10ம் தேதி டெஸ்ட் துவங்குகிறது. இதற்கான இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, அணி இயக்குனர் பதவியிலும் இவர் தொடர்வார். இதில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள், கோல்கட்டாவில் இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். நாளை வங்கதேசம் புறப்படுகின்றனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அணி இயக்குனர் ரவி சாஸ்திரி கூறு…

  17. கிரிக்கெட்டில் இப்படியும் சாதனை படைத்த மதுரை மருத்துவ மாணவர்! மதுரை: மருத்துவக்கல்லூரி மாணவர் கிரிக்கெட் மட்டையால் தொடர்ந்து 6 மணிநேரம் 14 நிமிடம் கீழே விழாமல் பந்தை தட்டி புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதமநாராயணன். இவர், மதுரை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிரிக்கெட் வீரரான இவருக்கு, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இவரது மனதில் இருந்துள்ளது. இதை தொடர்ந்து, பந்து கீழே விழாமல் மட்டையால் தொடர்ந்து தட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதை நண்பர்கள், உறவினர்கள், கல்லூரி நண்பர்கள், விளையாட்டு பயிற்ச்சியாளர் என எல்லோர் முன்பும் செய்து காட்டினார். இதனால் கவுதமநாராயணனை எல…

  18. உலகக் கோப்பை தகுதி சுற்று :இந்திய அணியில் இடம் பிடித்தார் தமிழக வீரர் தனபால் கணேஷ்! ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டைன்டைன் அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேசுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள், 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில், ஓமன் அணியுடன் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து குவாம் அணியை எதிர்த்து 16ஆம் தேதி களமிறங்குகிறது. இந்த இரு போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அ…

  19. கெய்ல் மீண்டும் விளாசல் டான்டன்: ஹாம்ஷயர் அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ரன் குவிக்க சாமர்சட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் நாட்வெஸ்ட் ‘வென்டி–20’ தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் சாமர்சட், ஹாம்ஷயர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஹாம்ஷயர் அணிக்கு கேப்டன் வின்ஸ் (64*), எர்வின் (30*) கைகொடுத்தனர். ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. கெய்ல் புயல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சாமர்சட் அணிக்கு டிரஸ்கோதிக் (1) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், டிரிகோ ஜோடி ஹாம்ஷயர் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபா…

  20. கோப்பை வென்றது பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தல் பெர்லின்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி கோப்பை வென்றது. பைனலில் ஜூவான்டஸ் அணியை வீழ்த்தியது. ஐரோப்பாவில் உள்ள கால்பந்து கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடக்கும். பெர்லினில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில் பார்சிலோனா, ஜூவான்டஸ் அணிகள் மோதின. போட்டியின் 4வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரேக்டிக் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் எதிரணியால் இதற்கு பதிலடி தர முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஜூவான்டஸ் அணிக்கு மொராட்டா (55வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். சாரஸ் (68) ஒரு கோல் அடித்து பார்சிலோனா அணியை வலுப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய பார்சிலோனா அணிக்கு ந…

  21. வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது புகார்! ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு …

  22. இந்தியா-ஏ, அண்டர்-19 பயிற்சியாளராக திராவிட் நியமனம் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்தியா-ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சச்சின், லஷ்மண், கங்குலி இடம்பெற ராகுல் திராவிட் ஏன் இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், ‘அனைவரையும் ஒரே நிலையில் இணைக்க முடியாது’ என்றும் ராகுல் திராவிட் போன்ற ஒரு வீரரை எதாவது ஒரு நிலையில் நிச்சயம் பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்படுவார் என்று யூகங்கள் எழுந்தன, ஆனால் பயிற்சியாளராக முழுநேரம் தன்னால் இப்போதைக்கு செலவிட முட…

  23. சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளை­யா­டி­ய­தற்­காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்­கத்தொ­கை­யாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்­டங்­களில் விளை­யா­டி­யது. இரு தொட­ரையும் பாகிஸ்தான் கைப்­பற்­றி­யது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்­தா­னுக்கு சென்­றி­ருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் நேரடி தாக்­குதல் நடத்­திய சம்­ப­வத்தை தொடர்ந்து, அங்கு முன்­னணி அணிகள் செல்­வதை தவிர்த்து வரு­கின்­றன. பாது­காப்பு அச…

  24. 35 வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதமடித்து உலக சாதனை படைத்த ஆடம் வோக்ஸ்! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது 35வது வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆடம் வோக்ஸ் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் அறிமுக ஆட்டத்திலேயே அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் ஏற்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ரோசவ் நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 148 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தாக பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு 5வது விக்கெட்டாக ஆடம் வோக்ஸ் களமிறங்கினார். 35 வயதான இவருக்கு தற்போதுதான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியி…

  25. பவுன்சரில் காயமேற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்ட கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியில் விளையாடிய கீஸ்வெட்டர். | கோப்புப் படம். பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார். முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர். இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.