விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கீர்த்திகன் கூடைப்பந்து தொடரில் சம்பியன்களாக ஏஞ்சல், இந்துக் கல்லூரி அணிகள் ஐந்தாவது தடவையாக நேற்று (05) நடைபெற்று முடிந்திருக்கும் கீர்த்திகன் நினைவுக்கிண்ண கூடைப்பந்துத் தொடரில், ஆண்கள் பிரிவு சம்பியன்களாக மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையும், பெண்கள் பிரிவு சம்பியன்களாக கொக்குவில் இந்துக் கல்லூரியும் நாமம் சூடியிருக்கின்றன. வருடந்தோறும் கொக்குவில் இந்துக் கல்லூரியினர் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த கீர்த்திகன் நினைவுக் கிண்ண கூடைப்பந்து தொடரின் ஐந்தாவது பருவகாலத்திற்கான இறுதிப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்றிருந்தன. 20 வயதின் கீழ்ப்பட்ட ஆண…
-
- 0 replies
- 447 views
-
-
விமர்சனங்களை முறியடித்து பாக். டெஸ்ட் குழாமில் இணைந்த இன்ஸமாமின் மருமகன் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக முன்னாள் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக் இடம்பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் குழாமில் பகார் சமான், சாத் அலி மற்றும் உஸ்மான் சலாஹுத்தின் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத கடைசியில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் அயர்லாந்து அணியுடனான கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 447 views
-
-
'நீ கண்டிப்பாக சதம் அடிக்க வேண்டும்' விராட் கோலியை நிர்பந்தித்த சென்னை ரசிகர் இந்திய அணியினரின் விமானப் பயணத்தின் போது ரசிகர் ஒருவரால் நேர்ந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை விராட் கோலி பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, சக வீரர்கள் டி வில்லியர்ஸ், சாஹல் ஆகியோருடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சந்தித்த ரசிகரைப் பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாங்கள் விமானத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்போது ரசிகர் ஒருவர் வந்தார். அவர் சென்னையைச் சேர்ந்தவர். தோனியின் பெரி…
-
- 0 replies
- 461 views
-
-
முகமது சாலா : அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் "எகிப்திய மன்னர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா (மோ சாலா என்றும் அழைக்கப்படுகிறார்), தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எகிப்தைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் பெருமையுடன் உற்சாக…
-
- 0 replies
- 618 views
-
-
உங்கள் ஆறுதல்களும் ஆதரவுகளும் என்னை மிகவும் எளியவனாக்கி விட்டது: ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி ஸ்டீவ் ஸ்மித். - கோப்புப் படம். | ஏ.பி. பந்தைச் சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார். தற்போது தான் செய்த தவறுகள், ஆஸ்திரேலிய மக்கள் தன் மீது அடைந்துள்ள கோபம், ஆதரவு என்று அனைத்துக்கும் பதில் அளித்து பதிவிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக்குரல்கள் நம்ப முடியவில்லை. இந்த ஆதரவுக்குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி …
-
- 0 replies
- 501 views
-
-
அப்பவே அந்த மாதிரி சீட்டிங் செய்த ஆஸி அணியின் புதிய கோச் ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லங்கர், இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் சீட்டிங் செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. #JustinLanger தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னரின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண…
-
- 0 replies
- 378 views
-
-
விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார் இந்திய அணி கேப்டனான விராட் கோலியை ஜூன் மாதம் முழுவதும் விளையாட சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. #ViratKohli #Surrey இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் இவர், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சரியாக சோபிக்கவில்லை. கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. அப்போது 5 டெஸ்டில் 1…
-
- 2 replies
- 548 views
-
-
கோலியை விட பெரிய சிக்ஸ் அடிக்கும்போது, எதற்காக டயட்- 90 கிலோ எடை வீரர் கேட்கிறார் விராட் கோலியை விட பெரிய சிக்ஸ் விளாசுகையில், அவரைப் போல் உணவுக் கட்டுப்பாட்டை ஏன் கடைபிடிக்க வேண்டும் என ஆப்கான் வீரர் கேள்வி கேட்டுள்ளார். #viratKohli இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். கால்பந்து வீரர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பதுபோல் விராட் கோலி உள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி இருப்பது அரிதான விஷயம். விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுபோல், இந்தியாவின் இள…
-
- 0 replies
- 429 views
-
-
"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம் ''அணியில் மீண்டும் எடுத்துக்கொள்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பெங்களூரு அணி ஏமாற்றியது'' - அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டி, கிரிக்கெட் உலகையே சற்று அதிரவைத்துள்ளது. மேற்கு இந்தியதீவுகள் சேர்ந்த கிறிஸ் கெயில், ஐ.பி.எல் தொடங்கப்பட்டபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு ஆண்டுகள் ஆடினார். பிறகு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்தார். 2010-ம் ஆண்டிலிருந்து ஏழு சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெயில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அதிரடி சிக்ஸர்களை விளாசினார். ஐ.பி.…
-
- 0 replies
- 443 views
-
-
முதலிடத்தை இழந்தது இந்திய அணி ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. அதேவேளையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக அந்த அணி 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலிடம் வகித்திருந்தது. முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று தென் ஆப்பிரிக்க அணி 117 புள்ளிகளில் இருந்து 113 புள்ளிகளுக்கு க…
-
- 1 reply
- 413 views
-
-
நூலிழையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியெல் மெட்ரிட் @Reuters பயென் முனிச் அணியுடனான பரபரப்பான இரண்டாம் கட்ட அரையிறுதியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலையில் முடித்த நடப்பச் சம்பியன் ரியெல் மெட்ரிட் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜெர்மனியின் பயென் முனிச் இரண்டு கட்ட அரையிறுதிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டது. மற்றும் எதிரணிக்கு வாய்ப்புகளை வழங்கியமை அந்த அணி மீண்டும் ஒருமுறை அரையிறுதியுடன் வெளியேற காரணமாகியுள்ளது. இதில் இரண்டு கட்ட அரையிறுதிகளிலும் 4-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்திலே…
-
- 1 reply
- 594 views
-
-
முரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட்டிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கையை முன்னாள் வீரர் முத்தைய முரளீதரன் மோசமாக சித்தரித்துள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் ஒப்சேவரிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நான் விளையாட்டு அமைச்சராக இல்லாதபோதிலும் இலங்கையின் விளையாட்டு வீரர்களிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன். அரசியல்வாதிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இலங்கையை பொறுத்தவரை புதிய வி…
-
- 0 replies
- 607 views
-
-
மலிங்கவிற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் எச்சரிக்கை இலங்கை அணியில் மீண்டும் விளையாட விரும்பினால் உடனடியாக உள்ளுர் போட்டிகளிற்கு திரும்புங்கள் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வேகப்பந்து வீச்சாளர் லசித்மலிங்கவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. லசித் மலிங்க உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் அவர் குறித்து தெளிவான முடிவையெடுக்கவேண்டும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மலிங்கவை உள்ளுர் போட்டிகக்கா தெரிவு செய்துள்ளோம் என்பதை அவரிற்கு அறிவித்துள்ளோம் அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் தெளிவான முடிவை எடுக்கவேண்டியிர…
-
- 0 replies
- 506 views
-
-
தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் டிபோர்டிவோ லா கோருனா அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே 25ஆவது முறையாக லா லிகா பட்டத்தை வென்றது. இதன்மூலம் எர்னஸ்டோ வெல்வெர்டேவின் முகாமையின் கீழ் இந்த பருவத்தில் ஆடும் பார்சிலோனா இம்முறை ஸ்பெயினின் லீக் மற்றும் கிண்ணம் இரு பட்டங்களையும் வென்றுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி செவில்லாவை 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. பார்சிலோன அணி இந்த பருவத்தில் ஒரே…
-
- 0 replies
- 499 views
-
-
அமெரிக்காவின் பிரபல தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை ஷாகேம் கிரிஃபா பெற்றுள்ளார். இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் பிரபல தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை ஷாகேம் கிரிஃபா பெற்றுள்ளார். இதற்கென நடந்த தேர்வின் ஐந்தாவது சுற்றில்…
-
- 0 replies
- 323 views
-
-
ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டம் இன்றைய தினம் (27) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் முதலிடத்தையும், சந்திரசேகரன் ஹெரினா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். எனினும், கடந்த 3 தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்…
-
- 3 replies
- 898 views
-
-
செய்தித்துளிகள்: டி 20 ஆட்டங்களுக்கு சர்வதேச அந்தஸ்து சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை உலகக் கோப்பை டி 20 தொடராக நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. 50 ஓவர் வடிவிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே கலந்து கொள்ளும். இம்முறை டி 20 உலகக் கோப்பை தொடராக நடத்தப்படுவதால் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொள்ளும் …
-
- 0 replies
- 551 views
-
-
104 நாடுகளுக்கு இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க முடிவு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு, இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடந்து வருகின்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்குழுக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கொங், ஐக்கிய அரபு ராச்சியம் , ஓமான், நேபாளம் என, 18 நாடுகளுக்கு இருபதுக்கு…
-
- 0 replies
- 616 views
-
-
இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரராக டோனி சாதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின் போது 34 பந்தில் டோனி 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்த போட்டியில் ஓட்டங்கைளக் குவித்ததன் மூலம் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். http://globaltamilnews.net/2018/76583/
-
- 0 replies
- 628 views
-
-
ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி Image courtesy - Getty Image பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட் பெரும் போராட்டத்துடன் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதில் இந்த ஐரோப்பிய பருவத்தில் போர்த்துக்கல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறை ஒரு கோல் கூட போட தவறியுள்ளார். ஜெர்மனி கழகமான பயென் முனிச்சின் சொந்த மைதானமான அல்லியன்ஸ் அரேனாவில் இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் அந்த அணியினால் ஆதிக்கம் செலுத்த முடிந்தபோத…
-
- 0 replies
- 530 views
-
-
செய்தித்துளிகள்: துபாய் செல்லும் ஐபிஎல் எகிப்தில் நடைபெற்று வரும் எல் கவுனா சர்வதேச பிஎஸ்ஏ உலக சீரிஸ் ஸ்குவாஷ் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 4-11, 8-11, 2-11 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் லாரா மாஸரோவிடம் தோல்வியடைந்தார். இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவண், வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆகியாரது பெயர்கள் அர்ஜூனா விருதுக் காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 140-ம் நிலை வீரரான சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிஸானிடம் 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்…
-
- 0 replies
- 403 views
-
-
ஓய்வு பெறும் திட்டம் இல்லை- ஷரபோவா உறுதி ஓய்வுக்கு என்று காலக்கெடு எதுவும் நான் நிர்ணயித்து கொள்ளவில்லை என உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா கூறியுள்ளார்.#MariaSharapova மாஸ்கோ: உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் களம் திரும்பினார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 31 வயதான ஷரபோவாவின் ஆட்டம் முன்பு போல் சிறப்பாக இல்லாததால் அவர் ஓய்வு பெறக்கூடும் என்று பேச்சு எழுந்த…
-
- 0 replies
- 387 views
-
-
சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால அரையிறுதியின் முதல் கட்டமாக இடம்பெற்ற ரோமா அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் அணி 5-2 என்ற கோல்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இடம்பெற்று முடிந்த காலிறுதியில் லிவர்பூல் அணி, மென்சஸ்டர் சிடி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகிய அதேவேளை, ரோமா அணி பலம்மிக்க பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து அரையிறுதிக்குத் தெரிவாகியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதியின் முதல் கட்டப் போட்டி லிவர்பூல் அணியின் சொந்த மைதானமான என்பீல்ட் அரங்கில் இட…
-
- 0 replies
- 513 views
-
-
2019- உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல் உலகக் கோப்பை (2019) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 4- ந் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ந் தேதி நிறைவடைகிறது. கொல்கத்தாவில் ஐ.சி.சி செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது அதன்படி,பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 16-ந் தேதி இந்தியா மோதுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் 15 நாள…
-
- 3 replies
- 1.1k views
-
-
கோலியை தேடிச்சென்று ஒரு ஷாம்பைன் பாட்டிலை இருவரும் பகிர்ந்து குடிப்போம்; சச்சின் நெகிழ்ச்சி: எதற்குத் தெரியுமா? சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி : கோப்புப்படம் - படம்: ஏஎப்ஃபி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நேரில் தேடிச் சென்று ஒரு ஷாம்பைன் பாட்டில் மதுவை இருவரும் பகிர்ந்து குடிப்போம் என்று சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஏன், எதற்காக விராட் கோலியை தேடிச்செல்வேன் என்பதை மும்பையில் சமீபத்தில் நடந்த போரியா மஜும்தாரின் ‘லெவன் காட்ஸ் அன்ட் ல பில்லியன் இந்தியன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினும், விராட் கோலியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டனர். …
-
- 0 replies
- 483 views
-