எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.
வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே
விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.
சர்வதேசம் கண்ணிழந்த கதையை,
ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.
இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்
கண்களில் வழியும் கண்ணீரே
தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று
காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்
முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.
யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ...
வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.