ஊர்ப்புதினம்

மத்திய வங்கியின் அனுமதியில்லாத நுண்கடன் நிறுவனங்கள் மக்களை சுரண்டுகின்றன – சாணக்கியன் இராசமாணிக்கம்

9 hours 22 minutes ago

10 Oct, 2025 | 02:41 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் அனுமதியில்லாத நுண்கடன் நிதி நிறுவனங்கள் மக்களை சுரண்டி பிழைக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில நிதி நிறுவனங்கள் 300,200 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி அறவிடுகின்றன இதனால் அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சம்மாந்துறை,கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் Privelth Global PVT LTD என்னும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று 2014.02.05 காலப்பகுதியில் நடத்தப்பட்டது. மேற்படி நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய அஹமட் ஷெரின், முகமது ஷிஹாப் (ஷிஹாப் ஷெரீப்) மற்றும் பாத்திமா பர்ஸ மார்கார் ஆகியோரால் 1400 பேரிடம் சுமார் 170 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அறிவாரா?

கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இவர்கள் இன்றளவிலும் காணாமல் போய் உள்ளனர் என்பதனை அமைச்சர் அறிவாரா?இதில் குறிப்பிட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாது ? இவர்கள் மோசடி செய்துள்ள தொகையை மீள அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அது தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கை யாவை ? மற்றும் இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பான முறையான கண்காணிப்பு மேற்கொண்டு நம்பகத்தன்மை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?

நிதி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக நான் பல பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு வந்துள்ளேன் அதில் த பினான்ஸ் நிறுவன பிரச்சினை சம்பந்தமாகவும் பலமுறை கதைத்துள்ளேன் அதில் முதலிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் அவர்களுக்கான நீதியானது வழங்கப்படவில்லை.

ஒரு வரவேற்கத்தக்க விடயம் குறிப்பாக மன்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மே. வினோராஜ் ஒரு முடிவு எடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் இயங்கி வரும் நுண்கடன் நிறுவனங்கள் மக்களிடம் 200 மற்றும் 300 வீதத்துக்கு அதிகமான வட்டியினை வசூலிப்பதாகவும் அவர்கள் மத்திய வங்கியின் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் தனியே வியாபார பதிவை கொண்டு மாத்திரம் செயற்பட்டு வருவதாகவும் அதனால் தரப்படட மக்கள் பாதிக்கப்பட்டு வருவதனால் அவர் இதற்கு எதிராக ஒரு நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளார்.

இவரது இவ் நடவடிக்கையினை மென்மேலும் துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி செயல்பட முடியுமா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்துவதற்குரிய ஏதேனும் ஏற்பாடுகள் செய்யுமா என்பது பற்றியும் மற்றும் ஏற்கனவே இவ்வாறான நுண் கடன் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தீர்வு குறுகிய காலத்துக்குள் கிடைக்குமா என்பதையும் அறிவிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/227411

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

9 hours 28 minutes ago

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

adminOctober 10, 2025

WhatsApp-Image-2025-10-10-at-7.00.48-PM.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று  (10)  வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.  இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

WhatsApp-Image-2025-10-10-at-7.00.46-PM-

WhatsApp-Image-2025-10-10-at-7.00.47-PM-

WhatsApp-Image-2025-10-10-at-7.00.47-PM.

WhatsApp-Image-2025-10-10-at-7.00.46-PM.

https://globaltamilnews.net/2025/221354/

50,000 வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகள் இழக்கப்பட்டுள்ளது

1 day 2 hours ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நாடு முழுவதும் ஏராளமான சட்டவிரோத நிதி நிறுவனங்கள் தோற்றம் பெற்று, அப்பாவி மக்களின் பணத்தைச் சுரண்டி வருகின்றன. இதற்கு மிக அன்மித்த உதாரணமாக கிழக்கு ஹேவாகம் கோரள கூட்டுறவு சங்கம் தமது சேமிப்பு நிதியை இது போன்ற ஒரு நுண் நிதி வங்கியில் வைப்பிலிட்டதனால், கோடிக்கணக்கான ரூபா இழக்கப்பட்டு, சுமார் 50,000 வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகளும் இழக்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவ்வாறே, இணையவழி கடன் மாபியா மூலம், பல்வேறு நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வந்து இணையவழியாக கடன்களை வழங்கி, இறுதியில், மிரட்டல் விடுத்து, அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல்முறைகளும் நாட்டில் நடந்து வருகின்றன.

மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களை மதிக்காமல், வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் லீசிங் நிறுவனங்களினது செயல்களும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த விடயத்தில் அரசாங்கம் அவசரமாக தலையீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmgkimr0n00xqo29n46ctf39r

முல்லைத்தீவிற்கான சொகுசுப்பேருந்துசேவை தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி; இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் - அமைச்சின் அதிகாரிகள் பதில்

1 day 2 hours ago

10 Oct, 2025 | 03:52 AM

image

முல்லைத்தீவு - கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையானது இம்மாதத்திற்குள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென அமைச்சின் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவை இதுவரை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே இந்த குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துசேவை ஆரம்பிக்கப்படவேண்டும்.

இதற்கு முன்பும் இரண்டுதடவைகள் இந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் இந்த முல்லைத்தீவு கொழும்பிற்கான சொகுசுப்பேருந்து சேவைதொடர்பில் பேசியிருந்தேன். விரைந்து இச் சேவையை ஆரம்பிக்குமாறும் கோரியிருந்தேன்.

அதற்கான பதில்கள் கிடைக்குமென எதிர்பார்கின்றேன். தயவுசெய்து இந்த சொகுசுப் பேருந்துசேவையினை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

இந்நிலையில் இதற்கு அமைச்சின் அதிகாரிகள் பதிலளிக்கையில்,

கூடியவிரைவில் இந்த பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் எதிர்வரும் 15ஆம் திகதி   போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுசார்ந்த கூட்டமொன்று இடம்பெறும்.  அக்கூட்டத்தில் இந்த சொகுசுப் பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும்.

அந்தவகையில் இம்மாத இறுதிப்பகுதிக்குள் இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவிற்கான சொகுசுப்பேருந்துசேவை தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி; இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் - அமைச்சின் அதிகாரிகள் பதில் | Virakesari.lk

வட மாகாண ஆளுநர் கழிவு மின் உற்பத்தி திட்டம் குறித்து அறிவுறுத்தல்

1 day 2 hours ago

(எம்.நியூட்டன்)

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்  கழிவகற்றல் பெரும் சவாலாக உருவாகியிருப்பதால் கொழும்பு மாநகர சபையால் கழிவுபொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின் உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டு அத்தகைய திட்டங்களின் சாத்தியபாடுகளை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில்  கழிவகற்றல் தொடர்பான விவகாரம் மிகப் பெரும் சவாலாக உருவாகிவரும் நிலையில் கொழும்பு மாநகர சபையால் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பார்வையிட்டு அத்தகையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.

வட மாகாண ஆளுநர் கழிவு மின் உற்பத்தி திட்டம் குறித்து அறிவுறுத்தல் | Virakesari.lk

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

1 day 7 hours ago

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

October 10, 2025

கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.

நந்தன வீரரத்ன என்பவரால் எழுதப்பட்டு, மனோரஞ்சனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ‘நாட்டை உலுக்கிய 83 கறுப்பு ஜுலையின் ஏழு நாட்கள்’ எனும் புலனாய்வு நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்று ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (9) கொழும்பிலுள்ள மகாவலி மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய டில்வின் சில்வா மேலும் கூறியதாவது:

கறுப்பு ஜுலை பற்றிய இந்த நூலானது மறைக்கப்பட்ட அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வெளிக்கொணர்வதற்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோன்று 1988, 1989 களில் இடம்பெற்ற கலவரங்களை ‘ஜே.வி.பி கலவரம்’ என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால் உண்மையில் நாம் அந்தக் கலவரங்களைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோர்.

அதேபோன்று 1983 கறுப்பு ஜுலை கலவரத்தினால் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டேன். ஏனெனில் அக்காலப்பகுதியில் நான் எமது கட்சியின் களுத்துறை மாவட்டம், பேருவளை ஒருங்கிணைப்பாளராகவும், முழுநேர கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்தேன். இருப்பினும் கலவரத்தை அடுத்து எமது கட்சியும் தடை செய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து எமது அரசியல் செயற்பாடுகள் முடங்கியதுடன் அவற்றை இரகசியமாக முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏகாதிபத்தியவாத அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையிருந்தது. அதற்காக தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார்.

அதுமாத்திமன்றி அரசியலமைப்பின் ஊடாக சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார். அவ்வேளையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் அதனை நீக்குவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எமக்கும், மக்களுக்கும் எதிரான சகல ஒடுக்குமுறைகளும் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டன.

அதேவேளை ஜே.வி.பியினாலேயே கறுப்பு ஜுலை கலவரங்கள் நடத்தப்பட்டன என்ற கருத்துக்களும் தீவிரமாகப் பகிரப்பட்டன. எனவே தமிழ் மக்களின் மனங்களில் இக்கலவரங்களை நாம் (ஜே.வி.பி) தான் நடத்தினோம் என்ற எண்ணம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நாம் வடக்கில் உள்ள போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது. இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலேயே பாரிய முரண் காணப்படுகின்றது. இவ்வாறு ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் ஒரு தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என்றார்.

https://www.ilakku.org/the-entire-country-paid-a-heavy-price-for-j-r-jayewardene-tilvin-silva-comments-on-black-july/

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் : த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு

1 day 8 hours ago

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் : த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு

10 Oct, 2025 | 09:07 AM

image

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (09) முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம்  என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த விடயங்களை நாங்கள் கடந்த யூலை மாதம் கள விஜயம் செய்து ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருந்தோம்.

காணி உரிமையாளர்கள ஒலுமடுவில் இருக்கிறார்கள். அவர்கள் காணியை வெளியாக்கிய போது அவர்கள் மீது வனஇலாகா திணைக்களம் வழக்கு தாக்கல் செய்து மூன்று வருடங்கள் வழக்கு இடம்பெற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தான் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் குறிப்பாக மகிந்தவின் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருக்கின்ற பிமல் தர்மராஜா குழுவினரால் டோசர் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் நாம் வெளியில் கொண்டு வந்திருந்தோம்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி அந்த இடங்களைப் பார்வையிட வன்னியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். அந்த இடத்திற்கு  வருகை தநத காணியை ஆககிரமித்துள்ள பிமல் தர்மராஜா போன்ற குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன் அவர்களது பெயரையும், வன்னிப் பாராளுடன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்ய தான் வந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு  முன்னால் தெரிவித்திருந்தார்கள். அச்சுறுத்துகின்ற மற்றும் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் கணொளிகளாக உள்ளன.

அந்தப்பகுதி போகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை வழங்கியுள்ளோம்.

அவர்கள் நேரடியாக போகஸ்வேவ பொலிஸ் நிலையம் ஊடாக இதனை அணுகுவவதற்காக இநத விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அதிகாரிக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள வாக்கு மூலம் வழங்கியுள்ளோம்.

எமது நிலங்கை அரச திணைக்களளுடன் இணைந்து ஆக்கிரமித்து 210 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்கள். காண உரிமையாளர்கள் போவதற்கு தடை போடும் திணைக்களங்கள் குடியேற்ற சிங்களவர்கள் துப்பரவு செய்து அபகரிக்கும் போது பேசாமல் இருக்கிறார்கள். இனிவரும் காலஙகளில் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் திரிவைத்த குளம் தமிழர் காணிகளை மீட்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/227371

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர்

1 day 8 hours ago

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர்

10 Oct, 2025 | 09:50 AM

image

ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று வியாழக்கிழமை(09) மாலை சர்வமத குழு, பொது அமைப்புக்கள், போராட்டக்குழு  ஆகியவற்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இதன் போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சனையை அவரிடம் முன் வைத்தேன். இந்த விடயம் குறித்து கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள்.

நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. நான் மக்களின் நிலைப்பாட்டையும், மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தினேன்.

எனினும் அவருடைய நிலைப்பாடு என்னவென்றால் குறித்த 14 காற்றாலை களையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை வழங்கினார்.

கணிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தி தருவதாகவும் குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்த ஒரு அரசாங்கமும் இச் சிறிய பகுதியில் கணிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை. அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் என கூறினார்.

எது எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களை சந்தித்ததன் பின்னர் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன். நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/227374

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்; ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு!!

1 day 8 hours ago

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்; ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு!!

800104631.jpeg

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளுடன் அங்கசேட்டையில் ஈடுபட்டார் என்று ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் மீதே அந்த ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில், மாணவிகள் தமது பெற்றோருக்குத் தெரியப்படுத்திய நிலையில், பெற்றோரால் பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது. எனினும், பாடசாலை நிர்வாகம் உடன் நடவடிக்கைகளை எடுக்காததைத் தொடர்ந்தே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/மாணவிகளுக்கு_பாலியல்_சீண்டல்;_ஆசிரியருக்கு_எதிராக_முறைப்பாடு!!#google_vignette

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து!

1 day 10 hours ago

New-Project-124.jpg?resize=600%2C300&ssl

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் கூறியதாகத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று (09) சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் நடைபெற்ற உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு வருகைதந்திருந்த ரவி செனவிரட்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகளை மறுத்து பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நேற்று நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து வெளியிட்டபோதே சபையில் இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது தயாசிறி ஜயசேகர கூறுகையில்,

நான் உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன அந்தக் குழுவுக்கு வருகை தந்திருந்தபோது, நிஸாம் காரியப்பர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் சகல ஊடகங்களும் எங்களிடம் கேட்கின்றன.

இந்நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அதன் பின்னால் இந்தியா இருப்பதாக அவர் கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அவ்வாறான கருத்தைக் கூறவில்லை.

எனினும் இது தொடர்பில் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவில் இதுபற்றி கூறாமல் நீதிமன்றத்தில் யார் பிரதான சூத்திரதாரி என்பதைக் கூறுங்கள். இது தொடர்பில் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது பொறுப்புவாய்ந்த ஒருவரோ கூற வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இது தொடர்பில் கூறுகையில்,

இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.

அந்த செயற்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் அவற்றை ஊடகங்களுக்கு கூறவில்லை.

அது விசாரணையின் ஒரு பகுதி என்பதனால் அந்தக் கருத்தை நீக்குமாறு உத்தரவிட முடியாது. வேறு வழியில் இந்த விசாரணைகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கோருகின்றேன்’’ என கூறினார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர,

குறித்த விடயத்தை நிஸாம் காரியப்பரே டுவிட் செய்துள்ளார். உயர்ப்பதவிகள் தொடர்பான குழுவில் நடக்கும் விடயங்களை எவரும் டுவிட் செய்வதில்லை.

அவர் இன்று (வியாழகிழமை ) காலையிலேயே டுவிட் செய்திருந்தார். ஆனால் இந்த விடயங்கள் நேற்று (புதன்கிழமை) மாலையே வெளியாகியிருந்தன’’ என்றார்.

இதேவேளை இது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில்,

உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறலுடனேயே அழைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான செயற்குழுவாகும். இங்கு வரும் அதிகாரிகள் அந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்தே கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

அவ்வாறு பதிலளிக்கும் விடயங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களால் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளில் வெளியிடப்படுகின்றது என்றால் அது பாரதூரமான குற்றமாகும்.

அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு வெளியில் சமூக வலைத்தளங்களில் எழுதும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.பியை அழைத்து அவரை எச்சரிக்க வேண்டும். அவரை அந்த குழுவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என கூறினார்.

https://athavannews.com/2025/1449996

அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!

1 day 10 hours ago

New-Project-122.jpg?resize=750%2C375&ssl

அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!

2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது.

அமைச்சர்கள்

  1. பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

  1. அனுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

  1. சுசில் ரணசிங்க : வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

  1. அனில் ஜெயந்த பெர்னாண்டோ: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

  1. டி.பி. சரத்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

  1. எம். எம். மொஹமட் முனீர்: சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

  1. எரங்க குணசேகர : நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

  1. ஹன்சக விஜேமுனி : சுகாதார பிரதி அமைச்சர்

  1. அரவிந்த செனரத் விதாரண : காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

  1. தினிந்து சமன் குமார: இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

  1. நிஷாந்த ஜெயவீர: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

  1. கௌசல்யா அரியரத்ன: வெகுஜன ஊடக பிரதி  அமைச்சர்

  1. எம். ஐ. எம். அர்காம்: எரிசக்தி பிரதி அமைச்சர்.

    Athavan News
    No image previewஅமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!
    2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும்

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

1 day 10 hours ago

court-order.jpg?resize=750%2C375&ssl=1

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல நேற்று (09) இந்த தண்டனையை விதித்துள்ளார்.

மன்னாரை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், ஐஸ் என்ற போதைப் பொருளைக் கொண்டு சென்றபோது, கடந்த 2022 நவம்பர் 03 ஆம் திகதி எழுத்தூர் சந்திக்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் சட்டமா அதிபர் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பை அறிவிக்கும் போது, வழக்குத் தொடுப்பவரால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தண்டனை விதித்துள்ளார்.

https://athavannews.com/2025/1449999

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்

1 day 21 hours ago

Published By: Vishnu

09 Oct, 2025 | 07:00 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல. எமது மக்களின் மனித உரிமைகளை அரசியலாக்கி குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல, மனித உரிமைகள்பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். கடந்த அரசாங்கங்கள், தெரிந்தே செய்த அந்த தவறை மீண்டும் செய்வது எமது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல சர்வதேச பொறிமுறையை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல் மயமாக்கல் காரணமாக சர்வதேச மயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களுக்கு வெவ்வேறு கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. சில நேரங்களில் இந்த அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களை ஆதரித்து அவற்றில் பங்காளிகளாகவும் மாறிவிட்டன (2015,2017, 2019). மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களித்துள்ளன. (2012, 2013, 2014, 2021, 2022).ஏனைய சந்தர்ப்பங்களில், இலங்கை அரசாங்கம் இலங்கை மீது ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களிக்கவில்லை,மேலும் தீர்மானங்களின் சில பிரிவுகளை மட்டுமே எதிர்த்தன.

இந்த அனைத்து தீர்மானங்களிலும் இரண்டு பொதுவான புள்ளிகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவது, ஜெனீவாவில் இந்த செயல்முறையின் அடிப்படையிலான தேசிய பிரச்சினைகள் எந்த முந்தைய அரசாங்கத்தாலும் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. இந்தத் தீர்மானங்கள் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான முக்கிய காரணம் இதுதான். எந்தவொரு போரிலும் மனித உரிமைகள் பிரச்சினைகள் எழுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்

நாடுகள் பலவற்றில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பிரச்சினைகள் அவற்றின் சொந்த தேசிய கட்டமைப்பு நிறுவனங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன. தேசிய ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்கின்றன. ஆனால் நம் நாட்டில் முந்தைய அரசாங்கங்கள் என்ன செய்தன? தேசிய மட்டத்தில் உரிமைகள், பிரச்சினைகளைத் தீர்த்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, அவர்கள் இனவெறி, பாலின வேறுபாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள்.நாட்டைப் பிரித்தனர், அனைத்து இனங்கள் மற்றும் மத மக்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தினர், மீறினர், மேலும் இலங்கையை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நாடாக மாற்றினர். ஜெனீவா தீர்மானத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால் இது தெளிவாகின்றது.

2009 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை, அப்போதைய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகருக்கு உறுதியளித்தபடி, அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு நிலையான தேசிய தீர்வை செயல்படுத்துவதாகும். ஆனால் அது நடந்ததா? இல்லை. இந்த செயல்முறை நடைபெறாமல் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ,பல நாடுகள் ஒன்றிணைந்து 2012 இல் இலங்கை மீது மற்றொரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. இந்த 2012 தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை,அப்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாகும். ஆனால் அந்தப் பரிந்துரைகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டதா? இல்லை.

அது நடக்காத இடத்தில், 2013 ஆம் ஆண்டு பேரவையில் மீண்டும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரியும், தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையகம் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது நடந்ததா? இல்லை. அவர்கள் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அப்போதைய அரசாங்கங்கள், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்த தேசியப் பிரச்சினைகளையும் ஜெனீவா செயல்முறையையும் பயன்படுத்தின.2013 ஆம் ஆண்டு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஆணையாளரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டார்.

இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளை அரசியல் கால்பந்தாட்டமாக மாற்றுவதன் மூலம் சர்வதேச நம்பகத்தன்மையை இழப்பதன் விளைவு என்ன? இலங்கை அதன் சொந்த தேசிய நிறுவனங்கள் மூலம் அதன் மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற கருத்து உருவாகி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் 2021 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்க ஒரு சிறப்புப் பிரிவை நிறுவ இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதுதான் பிரச்சினை. போருக்குப் பின்னர் உடனடியாக ஒரு தேசிய பொறிமுறை மூலம் எளிதாக தீர்க்கப்படக்கூடிய இந்த ஜெனீவா பிரச்சினை, குறுகிய அரசியல் நோக்கங்கள் மற்றும் குறுகிய பார்வை கொண்ட தலைமை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு, இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும், அனைத்து இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் வறுமையை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும், ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பவும் எங்களுக்கு வலுவான ஆணையை வழங்கினர். இந்த ஆணையை செயல்படுத்துவதும், அனைத்துப் பிரிவு மக்களின் உரிமைகளை உறுதி செய்வதும், இதுவரை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயல்முறையை எப்படியாவது தேசிய மட்டத்திற்குக் கொண்டு வருவதும், வலுவான மற்றும் சுயாதீனமான உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதுமே எங்கள் நோக்கம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதுதான். இலங்கை தொடர்பான அனைத்து திட்டங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது. மேலும், இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த சிறிய எண்ணிக்கையிலான வாக்குகள் படிப்படியாகக் குறைந்து. ஒரு நிலைப்பாட்டை எடுக்காத நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2012 ஆம் ஆண்டில், 47 வாக்குகளில் 15 வாக்குகளைப் பெற்றோம். 2013 இல், 13 வாக்குகள்,2014 இல், 12 வாக்குகள் 2021 இல், 11 வாக்குகள், 2022 இல், 7 வாக்குகள் என்ற அடிப்படையில் வாக்குகள் பெறப்பட்டன. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தக் கால அரசாங்கங்கள் தாங்கள் தோற்போம் என்பதை அறிந்திருந்தும் இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காக மில்லியன் கணக்கான பொதுப் பணத்தைச் செலவிட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்குச் சென்றனர். அந்த வாக்குகளைப் பெற அவர்கள் பல்வேறு வழிகளில் தொடர்புடைய நாடுகளுக்கு உதவினார்கள். தேர்தல் தோல்வியடையும் என்ற யதார்த்தத்தை அறிந்தும், ஊடகக் காட்சிகள் மூலம் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகவே அவர்கள் இதையெல்லாம் செய்தார்கள்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை அமர்வில் நான் உரையாற்றினேன். வகுப்புவாத மற்றும் மத அரசியலை நிராகரித்து, அனைத்து இலங்கையர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப நமது சொந்த தேசிய வழிமுறைகள் மூலம் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேரவை நாடுகளுக்குத் தெரிவித்துள்ளேன்.

கடந்த ஜூன் மாதம், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சமர்ப்பித்த தீர்மானம் பேரவையில் தோற்கடிக்கப்படுவது மிகவும் அரிது. இலங்கையின் பார்வையில், எங்கள் நாடு தொடர்பான ஒரு தீர்மானம் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுதான் 2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானம். அதன் பிறகு, இலங்கை தொடர்பான அனைத்து தீர்மானங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்தது இதுவே முதல் முறை. நாங்கள் பதவியேற்று ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூகத் துறையினருடன் அவர் திறந்த கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கையின் உண்மையான நிலைமையை அவர் நேரடியாகக் கண்டார்.

இந்த விஜயத்தைத் தொடர்ந்து, உயர் ஸ்தானிகர் இலங்கை குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்தார். இலங்கை சமூகம் முழுவதும் முற்போக்கான மாற்றத்தின் போக்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான திறந்த தன்மை மற்றும் உள்நாட்டு வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை எடுத்த முயற்சி ஆகியவற்றை அவர் பாராட்டினார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பேரவையின் 60ஆவது அமர்வில் உயர் ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையிலும் இந்த நேர்மறையான கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

வலுவான உள்நாட்டு வழிமுறைகள் மூலம் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்துமாறு இலங்கையை அவர் வலியுறுத்தினார். இந்த அறிக்கையையும் அதற்கு இலங்கை அரசு வழங்கிய பதிலையும் நான் சமர்ப்பிக்கிறேன். அவர்களுடன் கலந்தாலோசிக்க உங்களை அழைக்கிறேன். ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நியூயோர்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபை அமர்வின் போது மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியையும் என்னையும் சந்தித்தார்.

நான் முன்னர் கூறியது போன்று ல், தேசிய பிரச்சினைகள் மற்றும் மக்களின் மனித உரிமைகள் அரசியல் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்கு பல ஆண்டுகளாக அடிபணிந்ததன் காரணமாக, இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46/ 1, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் என்ற ஒரு பிரிவை நிறுவியது.

மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், வெளியுறவு அமைச்சராக, நானும் ஜெனீவாவில் உள்ள எங்கள் நிரந்தர பிரதிநிதியும், இதுபோன்ற உள்நாட்டு அல்லாத வழிமுறைகளை இலங்கை ஏற்றுக்கொள்வதில்லை என்று பேரவையில் தெளிவாகக் கூறினோம்.சர்வதேச வழிமுறைகளை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல்மயமாக்கல் காரணமாக சர்வதேசமயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி. இது ஒரு வருடம் போன்ற குறுகிய காலத்தில் முடிக்கக்கூடிய பணி அல்ல. ஆனால் அதற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்துள்ளது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எங்கள் நீதித்துறை அமைப்பு மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களை நாங்கள் வலுப்படுத்தி சுயாதீனமாக்குகிறோம்.

காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு சுயாதீனமாக்கப்படுகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளுக்கு இணங்க மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மசோதாவை விரைவில் கொண்டு வருவோம். இந்த சட்டம் நாட்டில் அவசரநிலைகளுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஆனால் போர் முடிந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகும் நடைமுறையில் உள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்தவுஉடனேயே, மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில், அது தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவுவதற்கு நாங்கள் முன்மொழிந்தோம். இந்த தேசிய ஆணையம் நிறுவப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று ஜெனீவா தீர்மானம் இருக்காது. நீங்களும் நானும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது அது நடந்திருக்காது. எனவே, உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்டம் விரைவில் இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும், ஆணைக்குழுவின் பணிகள் தொடங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஒரு சுயாதீனமான வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்படும்.ஜெனீவாவுக்கு காண்பிக்க இந்த முற்போக்கான நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை.

பல ஆண்டுகளாக, அரச அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளான மக்கள் ஒரு அரசியல் இயக்கமாக, மனித உரிமைகள் மீதான எங்கள் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் அனைத்துப் பிரிவு மக்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எங்கள் உண்மையான அனுதாபம் காரணமாக நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்.போரை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ அதிகாரிகளையோ அல்லது வேறு எந்த மக்கள் பிரிவையோ குறிவைத்து இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நமது நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது, ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது மற்றும் பயங்கரமான மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு . இது நாம் தனியாக அடையக்கூடிய ஒரு குறிக்கோள் அல்ல.

இலங்கை மீதான தீர்மானம் கடந்த 6 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததைக் கண்டேன். எனது உரையின் ஆரம்பத்தில் நான் விளக்கியது போல், மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். முந்தைய அரசாங்கங்கள், தெரிந்தே பொதுப் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து, வாக்கெடுப்பு தோல்வியடையும் என்ற நம்பிக்கையில் செய்த அந்த பயனற்ற, அந்த தவறான செயலை மீண்டும் செய்வது எங்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்ல. இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டபோது,இந்த விஷயத்தில் எங்கள் நிரந்தர பிரதிநிதி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார்.

செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பான உரையாடலின் போது நான் கூறியதையும், அக்டோபர் 6ஆம் திகதி ஜெனீவாவில் நிரந்தரப் பிரதிநிதி தீர்மானம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.அக்டோபர் 6 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், இலங்கை தொடர்பான முந்தைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருந்தது. இது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம்,பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டியது.

முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க செயல்முறை பாராட்டப்பட்டுள்ளது. இது தேசிய நிறுவனங்களுக்கு பிரச்சினைகளைத் தீர்க்க இடமளித்துள்ளது.இந்தத் தீர்மானம் 2021 தீர்மானத்தின் நீட்டிப்பு என்பதால், அதன் இறுதி அத்தியாயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் பணிகளைத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டது போல,இது ஒரு உள்ளக பொறிமுறை அல்ல என்பதால் எங்கள் அரசாங்கம் இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தைப் பற்றி விவாதிக்கும் போது 6 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இதை நாங்கள் கடுமையாக வலியுறுத்தினோம். இது பிளவுகளை தீவிரப்படுத்தும் மற்றும் அரசாங்கம் தொடங்கிய திட்டங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

அரசாங்கம் தொடங்கிய உள்ளக பொறிமுறை மற்றும் மனித உரிமைகள் பேரவை நாடுகளில் அதற்காக கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை விரைவில் முடித்து, நமது சொந்த பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அத்துடன் அரசாங்கம் தொடங்கிய உள்நாட்டு வேலைத்திட்டம் மற்றும் இதற்காக மனித உரிமைகள் பேரவை நாடுகளில் கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை முடித்து, எங்கள் பிரச்சினைகளை நாமே தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

அரசாங்கம் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தைப் பாராட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் முன்மொழிவை சமர்ப்பித்த நாடுகளின் குழுவின் சார்பாகப் பேசிய ஐக்கிய இராச்சியம் வெளியிட்ட அறிக்கையிலிருந்தும் இது தெளிவாகிறது. அந்தக் குழுவைத் தவிர, சீனா, பங்களாதேஷ், மாலைத்தீவு, கியூபா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், எத்தியோப்பியா, கோஸ்டாரிகா மற்றும் உலகின் பல்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நாடுகள் உட்பட பேரவை உறுப்பினர்களாக உள்ள பல நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டன. மேலும், கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பாக நடைபெற்ற உரையாடலில், சுமார் 43 நாடுகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தின, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உள்நாட்டு செயல்முறைகள் மூலம் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டின. மனித உரிமைகளை அரசியல்மயமாக்குவது நமது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

நமது சொந்த மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது இந்த மதிப்புமிக்க சபையில் நாம் விவாதிக்க வேண்டிய ஒன்றல்ல. அந்த உரிமைகளைப் பாதுகாப்பது மக்களின் பிரதிநிதிகளாகிய நமது முழுமையான கடமை. பொறுப்பு.. நீங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஜனாதிபதி கூறியது போல், அனைத்து இலங்கையர்களும் சுதந்திரமாக ஒன்றாக வாழும் அமைதியான மற்றும் வளமான நாடு என்ற கனவு நமக்கு உள்ளது. அனைத்து பங்குதாரர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேர்மறையாக ஈடுபடுவதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினருக்கான இந்தக் கனவை நனவாக்கும் பயணத்தில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த தேசிய முயற்சியை ஆதரிப்பது அனைவரினதும் பொறுப்பு என்றார்.

https://www.virakesari.lk/article/227355

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

2 days 6 hours ago

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

09 Oct, 2025 | 12:47 PM

image

தலைமன்னாரிலிருந்து தீடைப் பகுதியில் உள்ள இராமர் பாலம் வரை சென்று சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான படகுச் சேவையினை ஆரம்பிக்க அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து, படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்த படகு சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (8) மாலை நடைபெற்றது.   

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான இக்கலந்துரையாடலில் மன்னார் பிரதேச சபைத்  தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் உள்ள கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதிலிருந்து, குறித்த இடம், மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரைக் காலமும் இருந்து வந்தது.

2015ஆம் ஆண்டு இந்த கடற்கரைப் பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இராமர் பாலத்தை பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் படகுச்சேவையை பயன்படுத்துவதற்கான  கோரிக்கையினை மன்னார் மக்கள் முன்வைத்ததுடன் அரச மட்ட தரப்பிலும் இக்கோரிக்கை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச்சேவையினை மேற்கொள்வது தொடர்பில்  முடிவுகள் எடுக்கப்பட்டு, படகுச் சேவைக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது. 

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை 50க்கு 50 என்ற அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்களமும் மன்னார் பிரதேச சபையும் செயற்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவையை நடைமுறைப்படுத்தலாம் என்றும்  இதர வருமானங்களுக்கான திட்டங்களை மன்னார் பிரதேச சபையின் ஊடாக வகுத்து, அவற்றை செயற்படுத்தலாம் என்றும் அரச அதிபர்  தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்குபற்றிய தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் உறுப்பினர் உள்ளிட்டோர், மன்னார் பிரதேச சபை கடற்கரை பூங்காவை நீண்ட நாட்களாக பராமரித்து வரும் நிலையில், மன்னார் பிரதேச சபையின் வருமானம் மிகவும் குறைந்துள்ளதையும் இன்னும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டி, படகுச் சேவைக்கான நிதி வசூலிக்கும் பொறுப்பினை தமக்குத் தருமாறு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கைக்கு பதிலளித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி பாத்தியா மடுகல்ல, அவ்வாறு செயற்பட முடியாது. வன ஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு இடங்களில் இவ்வாறான சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமக்கு உட்பட்ட பகுதியில் குறித்த கடற்கரை பூங்கா காணப்படுவதனால் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப செயற்பட  வேண்டும் எனத் தெரிவித்தார். 

அந்தக் கருத்தினை மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஆதரித்துப் பேசினார். 

அத்தோடு, கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் மேற்படி கருத்தினை பிறிதொரு நாளில் கூடிப் பேசித்  தீர்மானிப்பதென மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்து கலந்துரையாடலை நிறைவு செய்தார்.  

https://www.virakesari.lk/article/227307

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

2 days 6 hours ago

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

09 Oct, 2025 | 02:07 PM

image

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று (9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன், மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மாற்றிக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடுத்த முடிவு கைவிடப்பட்டது. 

ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்த இடத்துக்குச் சென்ற போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பகத்தின் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில்,

மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டுவர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை.

இதேபோல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கிறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/227315

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

2 days 8 hours ago

New-Project-111.jpg?resize=750%2C375&ssl

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

https://athavannews.com/2025/1449938

விமல் வீரவன்ச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை!

2 days 8 hours ago

09 Oct, 2025 | 10:42 AM

image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் அழைப்பின் பேரில் விமல் வீரவன்ச, அப்பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/227286

உதய கம்மன்பில இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2 days 8 hours ago

09 Oct, 2025 | 10:10 AM

image

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார்.

எந்தவித சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/227281

யாழில் “அணையா விளக்கு” நினைவுத் தூபி உடைக்கப்பட்டது!

2 days 8 hours ago

09 Oct, 2025 | 11:52 AM

image

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.

அந்த நினைவுத் தூபியை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர்.

IMG_0357.jpeg

IMG_0356.jpeg

IMG_0355.jpeg

https://www.virakesari.lk/article/227301

பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி

2 days 9 hours ago

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் பொன்சேகா முன்வைத்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள்  

இதையடுத்தே, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சரத் பொன்சேகா செயற்படுகின்றார் என்றும், அதற்காகவே அவருக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.

பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி | War Crimes Against Fonseka

மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

இறுதிப் போரை முடிப்பதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது எனச் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும்.

போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தெரிந்திருந்தால், எதற்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா சீனாவுக்குச் சென்றார்? முடியப்போகும் போருக்கு எதற்காக ஆயுதங்கள்? போர் முடியப்போகின்றது என மகிந்தவுக்கும் தெரியாது. பொன்சேகாவுக்கும் தெரியாது.

பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி | War Crimes Against Fonseka

போரின்போது பணியாற்றிய படைத் தளபதிகளில் பொன்சேகாவைத் தவிர, ஏனைய அனைவருக்கும் எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பொன்சேகாவுக்கு எதிராக எந்தத் தரப்பாலும் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. ஏனெனில், படையினரை ஐரோப்பிய நாடுகளிடம் காட்டிக் கொடுத்தவரே பொன்சேகாதான் என குறிப்பிட்டுள்ளார். 

Tamilwin
No image previewபொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந...
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிப...
Checked
Sat, 10/11/2025 - 14:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr