ஏனையவை
புதிய பதிவுகள்
calendar |
ஊர்ப்புதினம்சொகுசு வீட்டில் கசிப்பு: ஒருவர் கைது
37 min 4 sec ago
![]() -எஸ். எம். மும்தாஜ்,எம்.என்.எம். ஹிஜாஸ்
சொகுசு வீடொன்றினுள் மறைமுகமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை சுற்றவளைத்துள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றையே சிலாபம் பொலிஸார் இன்று திங்கட்கிழமை சுற்றிவளைத்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த தகவல்களையடுத்தே குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்து 24,120 டிரேம் சோடா, மற்றும் 10 பெரல்கள், இரண்டு கேஸ் சிலிண்டர்களுடன் மேலும் பல உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரோஹண விஜயவீரவின் மகள் கைது
39 min 1 sec ago
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67836-2013-05-20-12-25-31.html
இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
43 min 9 sec ago
இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது. அத்துடன், இரண்டாம் கட்டமாக தெற்குப் பகுதியில் தனிநபரால் மூன்று வீடுகள் கட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரச அதிபரினால் அப்பகுதியும் எமக்கு மீட்டுத் தரப்படவில்லை. அடுத்த மூன்றாம் கட்டமாக கிளிநொச்சி சாலைக்கு எதிரில், தற்போது பொதுச் சந்தை காணப்படும் காணியானது இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தங்குமிடத்துக்குரிய ஏறத்தாழ 5 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டது. அத்துடன், அரசாங்க அதிபர் தலைமையில், ஏறத்தாழ 10 ஏக்கர் காணி எஞ்சியுள்ளது. யுத்தம் முடிவடைந்து 4 வருட காலப்பகுதியில் புதிதாக ஆரம்பிக்கும் எமது கிளிநொச்சி சாலைக்கு அரசாங்க அதிபரினால் எதுவித உதவியும், கிளிநொச்சி சாலைக்கும், வெளிமாவட்ட ஊழியர்களுக்கும் செய்து தரப்படவில்லை. ஆனால், அரச அதிபர் எமக்கு செய்த உதவி ஒன்று எமது காணி அபகரிப்புத்தான். ஆனால், அதி மேதகு ஜனாதிபதியின் கிளிநொச்சி வருகையின் போது, கிளிநொச்சி சாலைக்குரிய காணியில், பஸ் நிலையமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் மற்றும் அலுவலகக் கட்டடமும் உழியர்களின் ஓய்வு அறையும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சேவையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் அன்றாட அவசிய தேவகை;காக 10 புதிய பஸ் கொள்வனவு செய்து கொடுக்கும்படியும் அரசாங்க அதிபர் தலைமையின் கூட்டத்தில் கூறி இருந்தார். அத்துடன், அரசதிணைக்களங்களை அபகரித்தல், ஆக்கிரமித்தல், வேறு தேவைக்கு விட்டுக் கொடுத்தல், போன்றன இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆனால் தற்போது, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான காணி அரச அதிகாரிகளினால் அபகரிப்பு தான் நடைபெற்று வருகின்றதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.seithy.com/listAllNews.php?newsID=83121&category=TamilNews&language=tamil
கிளிநொச்சி அரசாங்கஅதிபரை விழுத்தி இளவரசனுக்கு தலைப்பா கட்டும் குழுவுக்கு, சுவீகரிப்படும் காணி அரச காணியாக இருப்பதை இட்டு மனவருத்தமாக இருக்கிறது. அது பொதுமக்கள் காணியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலிருக்கு. இளவரசருக்கு கிளிநொச்சிக்கும் என்ன தொடர்பு? மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்
52 min 17 sec ago
மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]
![]() ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்களின் எதிர்ப்பு போராட்டத்தைக் கண்டு பயந்துவிட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தேசிய தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டும். இந்த அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. தற்போது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கத் துணிந்து விட்டனர். எனவே, இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எதிர்வரும் 2014 இல் எமக்கு தேர்தல் ஒன்று அவசியமாகவுள்ளது. நாம் அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நிலைதடுமாற வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/listAllNews.php?newsID=83132&category=TamilNews&language=tamil
சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழாவில் அமெரிக்கத் தூதுவருக்கு பின்வரிசை ஆசனம்!
57 min 21 sec ago
சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழாவில் அமெரிக்கத் தூதுவருக்கு பின்வரிசை ஆசனம்! ![]()
சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு அதிதிகள் மேடையில் பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று சனிக்கிழமை காலி முகத்திடலில் பெருமெடுப்பில் யுத்த வெற்றி விழாவை நடத்தியது சிறிலங்கா அரசு. இதில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் என பல உயர்மட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கென அதிதிகள் மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் அமர்ந்தவாறு அவர் நிகழ்வுகளைப் பார்வையிட்டார். அதேவேளை, அரபு நாட்டுத் தூதுவர்கள் பலர் முன்வரிசையில் அமர்ந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புக் கிளையின் அலுவலகத்தில் அதன் தலைவர் சம்பந்தனை அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸன் சந்தித்துக் கலந்துரைடியிருந்தார். இதன்போது அவர், வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான கள நிலவரம், வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் சம்பந்தனிடம் கேட்டறிந்துகொண்டார். இதன் பின்னர் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸன் இலங்கை நாட்டுக்குத் துரோகம் இழைக்கின்றார் எனவும், இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோகின்றது எனவும் கடும் போக்குடைய சிங்கள அமைப்புகள் அரசை எச்சரித்திருந்தன. அத்துடன் அமெரிக்கத் தூதுவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றுமாறும் இவ் அமைப்புகள் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையில், சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு அதிதிகள் மேடையில் பின்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தாவுக்கு உதவிய பிளேக் கொழும்புத் தெருக்களில் இறங்கி கால்நடையாக நடந்தார். மடாகளைபு உயிராபத்தான பயணத்தில் போட்டு அனுப்பி வைக்கபட்டார். எனவே இலங்கை அரசுடன் ஒத்துளைக்க மறுக்குல் மிசேல் சிசனுக்கு இது நடப்பது அப்படி ஒன்றும் பெரிதல்ல .
கிரகநிலை சரியில்லையாம் – ஆறாவது தடவையாக சீனாவுக்கு ஓடுகிறார் மகிந்த
1 hour 16 min ago
கிரகநிலை சரியில்லையாம் – ஆறாவது தடவையாக சீனாவுக்கு ஓடுகிறார் மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:48 GMT ] [ தா.அருணாசலம் ]
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேறகொள்ள சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. சிறிலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும். இதனிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த 10ம் நாள் நான்கு நாள் பயணமாக உகண்டா சென்றிருந்தார். எனினும், நேற்று முன்தினம் காலையே அவர் நாடு திரும்பியிருந்தார். இந்தநிலையில் அவர் மீண்டும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிரகநிலைகள் பாதகமாக இருப்பதால், சோதிடர்களின் அறிவுரைப்படி அவர், வெளிநாட்டில் தங்கிருக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. http://www.puthinappalakai.com/view.php?20130519108290
கிரக நிலை சரியில்லாததால் விமானங்களில் தொடர் விடுமுறைச்சுற்றுலா எடுக்கிறார். கிரக நிலை சரியாக இருந்தால் என்ன செய்வாரோ? "இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை"
2 hours 43 min ago
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது.
தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது சாடியுள்ளது. "துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல்போனவர்களின் கதி பற்றிய தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப்படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள், ஆனால் ராஜபக்ஷ அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது" என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என ஐநா தலைமைச் செயலருக்கு ராஜபக்ஷ வழங்கியிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நியமித்த படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பொறுப்புகூறல் தொடர்பில் செய்த பரிந்துரைகளும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அது சுட்டிகாட்டியுள்ளது. "பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழிதேடுவார்கள்" என பிராட் ஆடம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130520_hrwstatementonlanka.shtml பல சேனாக்களின் நகர்வுகளும்! பிளான் Bயும்
3 hours 1 min ago
பல சேனாக்களின் நகர்வுகளும்! பிளான் Bயும்
-TAMIL WOLD- இலங்கைத்தீவின் சிங்கள கடும்போக்குவாதத்துக்கும் அதன் குத்தகைக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு நீண்டது. அதன் சில வடிவங்களாக சில பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னான சிஹல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பெயர்களை எல்லாம் பின்தள்ளி, தற்போது பொது பல சேனா, லக்பல சேனா, ஸ்வர்ண ஹன்ஸ, அந்த சேனா… இந்த சேனா… என புதிய புதிய வடிவடித்தில் பௌத்த மதவாதக் காளான்களின் பெயர்களே ஊடகப் பரப்புகளை நிறைக்க முனைகின்றன. இவ்வாறான அமைப்புக்களின் தினசரி ஊடக மாநாடுகளும், அறிக்கைகளும், பௌத்த மத காவல் மார்தட்டல்களும், துண்டு.. துக்கடா செய்தி அளவையும் தாண்டி அதிக முக்கியத்துவச் செய்திகளாகவும் வலம் வருகின்றன. மேலோட்டமாக நோக்கினால் இஸ்லாமிய மக்களின் மத நம்பிக்கைகளை மட்டுமே குறிவைத்து மேற்படி புதிய அமைப்புக்களின் நகர்வுகள் இருப்பதாகப் புலப்பட்டாலும், இதற்குள் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பது புலப்படுகிறது. இலங்கைத்தீவில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு மேற்படி அமைப்புகள் குதிகுதியெனக் குதித்தாலும், இதன் பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரல் வேறானது. உலக அரங்கில் முனைப்புப் பெற்றுள்ள தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான பொறுப்புக்கூறலைத் திசைதிருப்புவது! மாற்று வழியூடாக ஒரு சிங்கள தேசியவாத அலையை உருவாக்குவது! மகிந்த சிந்தனையின்பால் விரக்தியுற்ற சிங்கள மக்களின் வாக்குவங்கியை மீண்டும் அதே அதிகார மையத்துக்குத் திருப்பி விடுவது! போன்ற பல மறைபொருள் நிகழ்ச்சி நிரல்கள் இதற்குள் அடங்கியுள்ளன. ‘கையிலே காசு வாயிலே தோசை’ என்பார்களே, அதேபோன்ற யுத்திக்குரியது இது! ஆனால் இவ்வாறான பலே..பலே.. பல சேனாக்களுக்கு கடிவாளம் போடுவது போல, மகிந்த மற்றும் அவரது தலைமையமைச்சர் போன்றவர்கள் கருத்துக் கூறுவதும் இங்கு சற்று நோக்கத்தக்கது. மகிந்த ஜயரட்ண குரல்களின் ‘மையம்’ இனவாத, மதவாத நாடாக முத்திரை குத்துவதற்கு எடுக்கப்படும் சதி முயற்சிகள் குறித்து எச்சரிக்கின்றன. அத்துடன் இவ்வாறான சதிவலையில் சிக்க வேண்டாமெனவும் அவை மக்களை அறிவுறுத்துகின்றன. இதேபோல தற்போதைய ஆட்சிப்பாங்கின் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகூட இனங்களுக்கு எதிரான இவ்வாறான நகர்வுகள் குறித்துக் கவலை கொள்கிறது. மகிந்த, ஜயரட்ண், மைத்திரிபால சிரிசேன போன்றவர்கள் இவ்வாறு ‘இனங்களுக்கு இடையிலான ஐக்கியம்’ குறித்துக் கவலை கொள்வதாகக் காட்டிக்கொண்டாலும், சிங்களத்தின் பாதுகாப்புக் குறியீடு மட்டும் இந்த விடயத்தில் சற்று மெளனம் காக்கிறது. பல சேனாக்களின் விடயத்தில் கோத்தாவின் அழுத்தமான எதிர்க்கருத்துகள் எவையும் இதுவரை பதிவாகவில்லையென்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அவ்வாறாயின் ‘பல சேனா’ காவலர்களின் நகர்வுகளுக்கும், கோத்தாபயவின் அரசியல் கனவுகளுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடுமா? நிச்சயமாக! இலேசில் சட்டனெப் புறந்தள்ள முடியாத சில காரண காரியங்கள் இதற்குள் உள்ளன. குறிப்பாக ‘மகிந்த சிந்தனையின் ஆட்சியில்’ சலிப்புற்ற சிங்கள வாக்கு வங்கியை இன்னொரு வழியில் மீள் புத்துயிர்ப்புக்கு உள்ளாக்கி, அடுத்த பொதுத் தேர்தலையும் வெற்றிகொள்ளும் இலக்கு இதில் முக்கியமானது! தற்போது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அரசியல் அநாதையாக நிற்கும் சரத் பொன்சேகா கூட, மகிந்த அதிகார மையத்தை வீழ்த்தும் ஊக்க சக்தி ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது எனக் கூறும் யதார்த்தமான செய்தியின் பின்னணியூடாக நோக்கவேண்டிய விடயம் இது! சரத் பொன்சேக்காவின் மதிப்பீட்டினை ஒத்த மதிப்பீடுதான் யானைகளின் விடயத்தில் மகிந்த அதிகார உயர்மட்டத்துக்கும் உள்ளது. ஆயினும் தமது நீண்டகால ஆட்சியின் சலிப்பு, ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்கிவிடக்கூடும் என் அச்சமும், தமிழ் மக்களை மையப்படுத்திய விடயங்களை முன்னிறுத்தி அனைத்துலகமும் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்க விரும்பும் என்ற யதார்த்தமும் இங்கு சில மாற்று உபாயங்களை உருவாக்குகின்றது. அதாவது இது ஒரு பிளான் பி (Plan B) திட்டவகையானது. குறிப்பாக இப்போதுள்ள பல சேனாக் காளான்கள் தேர்தல் நேரத்தில் ஒரு வலுவான வேர்களையுடைய பௌத்த மத காவல் மரங்களாக மாற்றப்படுமானால் நிச்சயமாக ‘சிங்கள இனத்துக்கு’ ஆபத்து நேருவதான அதன் கூக்குரல் ஒரு பலமான வாக்கு வங்கியை உருவாக்கக் கூடும்! இவ்வாறான ஒரு வாக்குவங்கியை உருவாக்கும் திராணி யானைகளுக்கு இல்லை. சிங்கள மக்களின் ‘பாதுகாவலர்’ தகுதிக்குரிய போட்டி அதனிடம் இருந்தாலும், தமிழ் மக்களுக்கு எதை வழங்க வேண்டும், எதை வழங்கக் கூடாது என் நிலைப்பாட்டில் சற்றேக்குறைய மகிந்த அதிகார மோதகங்களுடன், ஐ.தே.க. கொழுக்கட்டைகள் உடன்பாடு கொண்டிருந்தாலும், ‘யானைகளின் மேற்குலக முகம்’ அதன் பகிரங்கத் திராணிக்கு சவாலாகின்றது. ஆசை உள்ளது ஆட்சி செய்ய, அம்சம் உள்ளது கழுதை மேய்க்க’ என்றொரு பழமொழி உள்ளதல்லவா? அதுபோல ஆகிவிட்டது ஐ.தே.க.வின் நிலை! ஆகையால் இவ்வாறான பலவீனங்களை கணிப்பிட்டபடி, இலங்கையில் பௌத்த இருப்புக்கு ஆபத்து வந்துவிட்டதான கூக்குரலுடன் ‘பல சேனாக்கள்’ தயார்ப்படுத்தப்படுகின்றன. ‘பொதுபல சேனா’ என்பதன் தமிழாக்கம் புத்தரின் பலம்மிக்க படை என்பதாக இருந்தாலும், இங்கு அமைதியே உருவாகி நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் புத்தரிடமிருந்து இந்தப் பலம் வருவதில்லை. மாறாக இலங்கைத்தீவின் படைத்துறை மற்றும் காவற்துறை அதிகாரம் தம்மிடமே இருப்பதாகக் கெக்கரிக்கும் முகத்திடமிருந்தே அது வருகிறது! உண்மையில் பார்த்தால், பொதுபல சேனா அல்ல, ‘கோத்தா பல சேனாக்களே’ இவை! காக்கிச் சீருடைகளில் மட்டுமல்ல, காவி உடைகளிலும் தனக்கு ஆளுமை இருப்பதாக மறைமுகமாக கோத்தா காட்டுகிறார். இந்த நிலையில், மறுபுறத்தே இந்த ‘நெடியை’ மறைக்க, இனவாதம், மதவாதம் நாட்டில் இல்லையெனவும், பௌத்தர்கள் நாட்டில் வாழும் சகல மதத்தினருக்கும் முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்றும் வாசனை வீச்சை மகிந்த போன்றவர்கள் பீய்ச்சியடிக்கின்றனர். இலங்கைத்தீவு அனர்த்தங்களுக்கு உள்ளான ஒவ்வொரு வேளையிலும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தது பௌத்த தேரர்களே என்ற புகழாரத்தை சூடியபடியே அலரிமாளிகை அனைத்துலகத்துக்கு இன ஐக்கியக் கதை கூறுகிறது. வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதால், நாட்டுக்குப் பாதிப்பு உருவாகும் என்பதால், தமது கோரிக்கையை மீறி அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்ற பலசேனாக்களின் அறைகூவலுக்கு மத்தியில், கோத்தாபய மேற்பார்வையில் மகிந்த அதிகார மையத்தின் ‘பிளான் B’ வெகுவாகவே மும்முரப்படுகிறது. வலிகாமத்தில் பலவந்த காணி சுவீகரிப்பிற்கெதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது!
3 hours 18 min ago
யாழ் வலிகாமம் பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 6381 ஏக்கர் காணியை அரசாங்கம் பலத்காரமாக சுவீகரிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்து 1474 பேர் தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் http://tamilworldtoday.com/?p=11657
வடமாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை- டக்ளஸ் தேவானந்தா
9 hours 7 min ago
Published on May 20, 2013-9:19 am · No Comments
அரசுத்தலைவர் தன்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் மாகாணசபை தேர்தலில் போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார். ‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
/thinakkathir
காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டாம் என இந்தியா கோரவில்லையாம்!
16 hours 17 min ago
13ஆவது அரசியலமைப்புத் திருத்தில் உள்ள மாகாண சபைகளுக்குரிய காணி, காவல்துறை அதிகாரங்களை நீக்க வேண்டாம் என இந்திய அரசாங்கம் கோரவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும்... http://tamilworldtoday.com/?p=11451
பொன்னம்பலத்தைவிட கொப்பேகடுவவை வடக்கு மக்கள் ஆதரித்ததாக பொய் சொன்ன மகிந்த ராஜபக்ஷ!
16 hours 51 min ago
1982ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொன்னம்பலத்தை வடக்கு, கிழக்குத் தமிழர்கள் தோற்கடித்து கொப்பேக்கடுவவை வெற்றி பெறச் செய்தவர்கள் என இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை காலிமுகத்திடலில் நடைபெற்ற அரசாங்கத்தின் போர் வெற்றியின் நான்காவது ஆண்டு கொண்டாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அத்துடன் வடக்கு மக்களின் மனதைத் தான் அறிவதாகவும் கூறியிருந்தார்.
எனினும், பொன்னம்பலத்தைத் தோற்கடித்து, கொப்பேகடுவவை தமிழர்கள் ஆதரித்தார்கள் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதைத் தேடிப்பார்த்தபோது, தேர்தல் முடிவுகளின் படி முற்றிலும் பொய்யான தகவல் எனத் தெரியவருகிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் குமார் பொன்னம்பலத்துக்கு மொத்தம் 155,947 வாக்குகளும் ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு 153,909 வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் திணைக்களம் வெளியிட்ட முடிவுகள் குறிப்பிட்டிருந்தன.
இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்று ஜனாதிபதியானார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ தோல்வியடைந்தார்.
இதே தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ரோஹண விஜேவீர, கொல்வின் ஆர். டி. சில்வா, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் போட்டியிட்டனர். குமார் பொன்னம்பலம் நான்காவது இடத்தைப் பிடித்தார். ரோஹண மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
பொதுவாக வட மாகாணத்தின் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் காங்கேசன்துறை, மானிப்பாய், கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை ஆகிய 5 தொகுதிகளில் கொப்பேக்கடுவ வெற்றி பெற்றிருந்தார். ஏனைய 6 தொகுதிகளிலும் பொன்னம்பலம் வெற்றார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்த மூன்று தொகுதிகளில் வவுனியா, மன்னார் தொகுதிகளில் அவர் பொன்னம்பலத்தைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் அந்த இரு தொகுதிகளிலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவே வென்றிருந்தார்.
மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டத்தில் இருந்த மூன்று தொகுதிகளில் கல்குடா தொகுதியில் பொன்னம்பலத்தைவிட கொப்பேக்கடுவ அதிக வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் இங்கும் ஜே.ஆர். வெற்றிபெற்றார். ஏனைய இரு தொகுதிகளான மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பில் குமார் கொப்பேகடுவவைவிட அதிக வாக்குகள் பெற்றார். அதிலும் பட்டிருப்பில் அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இருந்த 3 தொகுதிகளிலும் கொப்பேக்கடுவ பொன்னம்பலத்தைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும் சேருவல, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஜே.ஆர். வென்றார்.
அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் இருந்த 4 தொகுதிகளிலும் குமார் பொன்னம்பலத்தைவிட கொப்பேகடுவ அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அம்பாறை தொகுதியில் மட்டும் வென்றிருந்தார். ஏனையவற்றை ஜே.ஆர். கைப்பற்றினார்.
எனினும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் வீழ்ந்த வாக்குகளின் அடிப்படையில் கொப்பேக்கடுவவைவிட, குமார் பொன்னம்பலத்துக்கே அதிக வாக்குகளை வழங்கியிருக்கின்றனர் என்று தேர்தல் திணைக்களம் வெளியிட்ட முடிவுகளில் இருந்து தெரிகிறது. http://tamilworldtoday.com/?p=11429
மேலும் விரிவான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு...
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
Sun, 19/05/2013 - 18:59
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள் சிங்களவர்களை விடவும் சிறந்தவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது – அஸ்வர்
Sun, 19/05/2013 - 18:49
சிங்களவர்களை விடவும் சிறந்தவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது – அஸ்வர்
இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – நோர்வே
Sun, 19/05/2013 - 18:28
இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – நோர்வே மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு... சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம்.
Sun, 19/05/2013 - 18:23
மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...
19 மே 2013
சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம்.
![]()
நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி மனித மிருகம் ஒன்றினால் பாலியல் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறாள்.
சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.
அதிகாரிகளின் மெத்தனப்போக்கும், அசண்டையீனமான பேச்சுக்களும், அதிகாரத் தோரணையான எச்சரிக்கைகளும் இந்த மாணவிக்கு நடந்த அநீதியை மூடி மறைப்பதற்கான செயலாகவே காணப்படுகிறது. தடையங்களை அழித்தல், மிரட்டல்கள் மூலம் நீதி கேட்பவர்களை பயமுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோசமான ஜனநாய மறுப்புக்கள் நடந்தேறி வருகின்றது. நாடாளவிய ரீதியில் தொடர்ச்சியாக இவ்வகையான சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் இப்படியான கோர நிகழ்வுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளப்படுத்துகின்ற விடயத்தில் துரிதமான செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் செய்யாதவிடத்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறையையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க முடியாது என்பதை அனைவரும் உணருதல் வேண்டும்.
எனவே இம் மாணவியை வன்புணர்வு செய்து சிதைத்த கயவனை கண்டறிவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்தும் அந்த பாடசாலை மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை வற்புறுத்தியும் நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (20.05.2013) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து மக்களையும் அணித்திரளுமாறும், கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், சமுக ஆர்வலர்கள் என அனைவரையும் அணிதிரண்டு இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டுமாறு வேண்டுகிறோம்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு நீதி வழங்கு!
குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து!
உண்மையை மூடி மறைக்காதே!
காவல்துறையே குற்றங்களுக்கு துணை போகாதே!
மாணவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கு!
நேற்று நெடுங்கேணி சேனைப்புலவு! நாளை உங்கள் விட்டு வாசலில் கூட நடக்கலாம்....
வாருங்கள், ஒன்று சேருங்கள்! குரல் கொடுப்போம் நீதிக்காக...
சேனைப்புலவு மக்களும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு
ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது
Sun, 19/05/2013 - 15:08
யாழ்ப்பாணம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது
![]() யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
http://onlineuthayan.com/News_More.php?id=704582048319832503 நந்திக்கடலில் சடலமாக மீட்கப்பட்டவர் எரித்திரியாவிலா? என்ன பேய் கதை என்கிரார்; இராணுவ பேச்சாளர்
Sun, 19/05/2013 - 15:05
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நந்திக்கடலில் இருந்து மீட்டோம். எப்படி அவர் எரித்திரியாவில் இருப்பது என்ன போய் கதை இது என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
http://onlineuthayan.com/News_More.php?id=337762048819444377
தமிழர்களை பற்றிய மஹிந்தவின் கருத்து; பொன்னம்பலத்தை நிராகரித்து கொப்பேக்கடுவவை ஆதரித்தவர்களாம்
Sun, 19/05/2013 - 15:03
"வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச் செய்து கொப்பேகடுவவுக்கு வாக்களித்து அவரை வெற்றிப்பெறச் செய்தனர்.'' இவ்வாறு காலிமுகத்திடலில் இடம் பெற்ற போர் வெற்றியின் நான்காண்டுகள் நிறைவிழா கொண்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் எடுப்பதற்கோ இன்றேல் நாட்டைப் பிரிப்பதற்கோ எவருக்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், "எவர் எதை மறந்தாலும் நாம் பெற்றுக் கொண்ட வெற்றி சிறுவர்களின் இதயங்களுக்கு நன்றாகப் புரிகின்றது. ஆரம்ப காலங்களில் மரத்தடிகளில் அஞ்சி பதுங்கி யிருந்த சிறுவர்கள் எதிர் காலத்தில் வெற்றி வலராற்றைக் கூறவேண்டும்.
போர் செய்த வரலாறாக அல்ல போரை முடிவுக்குக் கொண்டு வந்த வரலாறாக மரண அச்சுறுத்தலிலிருந்து நாடு விடுபட்ட வரலாறாக நினைவு கூர வேண்டும். எனவே, சிறுவர்கள் இந்த வரலாற்றை மறக்க இடமளிக்க முடியாது. இது வரலாற்றில் பதியப்பட வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரி வித்தவை வருமாறு,
தாய் நாட்டை மீட்டெடுத் தமைக்கான வெற்றி விழாவை நான்காவது ஆண்டாகவும் கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றேன்.
இலங்கை வரலாற்றில் தாய் நாடு ஒன்றிணைக்கப்பட்ட முக்கியத்துமான சந்தர்ப் பமாகும். அதுமட்டுமன்றி மக்களின் மரணபயம் நீக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும்.
அவற்றுக்கப்பால் மனித கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாகும். தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்ததை நாம் மறக்கமுடியாது. கண், காது, தலை உட்பட உடல் அவயங்கள், இரத்தம், வியர்வை ஆகியவற்றை நாட்டுக்காக எமது வீரர்கள் பூஜை செய்தனர்.
அவ்வாறான முக்கியத்துவமிக்க படையினரை சிலர் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டுச்செல்வதற்கு முயற்சித்தனர். இவ்வாறான நிலையில் எதிர்காலத்திலும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு சேவையாற்றுவோம் என்ற மனநிலையை நாம் உருவாக்கியுள்ளோம். அதற்கான சேவைகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளோம்.
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் நமது மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? காலி முகத்திடலுக்கு சுதந்திரமாக சென்றுவர முடியாது. மூடப்பட்டிருந்தது.
மத்தியவங்கி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகிலிருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அத்துடன், அவற்றுக்கு அருகிலிருந்த ஹோட்டல்களை புலிகள் குண்டுவைத்துத் தாக்கினர்.
1985ஆம் ஆண்டு அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990 ஆண்டில் காத்தான்குடி முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருந்த பள்ளிமீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருக்கின்றார்.
நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள் புலிகளினால் தாக்குல்கள் நடத்தப்பட்ட சந்திகளாவும் இடங்களாகவுமே அடையாளம் காணப்பட்டன.
அவ்வீதியாக இன்றேல் அந்த இடங்களை கடந்து செல்கையில் இந்த இடத்தில்தான் ஜனாதிபதி பிரேமதாஸ கொல்லப்பட்டார். இந்த சந்தியில் தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். என்னிடம் சில இடங்களை அடையாளப்படுத்தினர்.
நாட்டில் எங்கும் எவ்விடத்திற்கும் சென்று எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இதயத்தில் மரணபயமிருந்த நாடாகவும் இந்நாடு இருந்தது. அப்போது நாட்டு மக்களை மீட்டெடுப்பதற்கு எவருமே முன்வரவில்லை.
சமாதானத்திற்காக அழைத்து வந்தவரை கொலை செய்தனர் 1977ஆம் ஆண்டு மக்கள் தாக்கப்பட்டபோது 5/6 பெரும்பான்மை அதிகாரத்துடன் இருந்த ஜனாதிபதி, புலிகளின் தாக்குதலிலிருந்து மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார்.
அடுத்தடுத்த வந்த ஆட்சியாளர்களும் புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துதவினர். புலிகளுக்கு உதவிய ஜனாதிபதி புலிகளினாலேயே கொல்லப்பட்டார். புலிகளின் தலைவருக்கு குண்டு துளைக்காத ஆடையை வழங்கி சமாதானத்திற்கு அழைத்துவந்த இந்தியப் பிரதமரையும் புலிகள் தமிழ்நாட்டில் கொலைச்செய்தனர்.
புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டவர்களால் குண்டுத் தாக்குதல்களிலிருந்து கொழும்பை மீட்க முடியாது போனது. புலிகளுடன் மோதவேண்டாம்.
அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு சர்வதேசம் எங்களிடம் அடிக்கொரு தடவை கேட்டது. எனினும், நாம் இளைஞர்களின் சக்தி மற்றும் வீரத்தில் நம்பிக்கை கொண்டோம். பயத்தை இல்லாது செய்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டினோம்.
இப்போது இது மரண அச்சுறுத்தலிலிருந்து விடுபட்ட இராச்சியம். எவர் எதை மறந்தாலும் நாம் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி சிறுவர்களின் இதயங்களுக்கே நன்றாகப் புரிகின்றது.
ஆரம்ப காலங்களில் அஞ்சி மரத்தடிகளில் பதுங்கியிருந்த சிறுவர்கள் எதிர்காலத்தில் இதைக் கூறவேண்டும். சிறுவர்கள் இந்த வரலாற்றை மறக்க இடமளிக்க முடியாது.
போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்க சிலர் முயற்சித்தனர்.
இலங்கைக்கு 16 குளங்களைக் கட்டிக்கொடுத்த மகாசேன மன்னனின் பெயரை சூறாவளிக்குச் சூட்டுமாறு 2003ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர்.
மகாசேனன் யார்? மின்னேரிய தெய்வம். ஆனால் அந்த வரலாற்றை மறந்து நாசம் செய்ய தயாரானார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த யுகத்தையும் மறக்கடிக்கச் செய்வார்கள் என எமக்குச் சந்தேகம் உள்ளது.
இந்த யுகத்தை நாம் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. யுத்தம் செய்த யுகமாக அல்ல, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த யுகமாக நாம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த யுகம் வரலாற்றில் பதியப்படவேண்டும். டயர்கள் போட்டப்பட யுகமாக அல்ல, யுத்தம் நிறைவடைந்த, இரத்த ஆறு நிறுத்தப்பட்ட யுகமாக, நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் யுகமாக நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
வடமாகாணத்தை பொறுத்தவரையில் 12 கட்சிகள் தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்கின்றன. அன்று பயந்துக்கொண்டு கொழும்பிலிருந்து அரசியல் செய்தவர்கள் இன்று எவ்விதமான அச்சமும் இன்றி அரசியல் செய்கின்றனர்.
வடக்குக் கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம்பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மூன்று இலட்சம் வடக்கு மக்களை நாம் மீட்டெடுத்த போது அவர்களுக்கு ஒரு பொதி உணவு கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை.
புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை. இராணுவம், அரசுடன் நீங்களுமே அவர்களுக்கு உணவு கொடுத்தீர்கள். இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்த 11 ஆயிரம் முன்னாள் புலிப் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வளித்தோம். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளித்தோம்.
தூக்குமேடை வரை செல்லவேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக் கொடுத்தோம். பலர் புனர்வாளிவளிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இவ்வாறான வாய்ப்புக் கிடைக்குமா?
சிவில் படைக்கு தமிழர்கள் 4 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம்.
முப்படைகளிலும் இணைவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். படைகளில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை. வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர்.
அதனால்தான் அரசிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது கிளிநொச்சியில் அந்த பிரேரணைக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர்.
காலத்திற்கு காலம் புரட்சி, ஊடக சுந்திரம் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல்கொடுப்பர். அதற்கெல்லாம் நாம் பதிலளித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே, நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் எடுப்பதற்கோ இன்றேல் நாட்டைப் பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியேன்.
இப்படித் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
Pages |
யாழ் நாளாந்த / விசேட அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளலாம்Select the newsletter(s) to which you want to subscribe or unsubscribe. தேடல்
படைப்புக்களம்
இன்றைய தெரிவுவிம்பம்இதமான காலை நேரம். இளவேனிற் காலத்தின் ஆரம்பம். ஆங்காங்கு புள்ளினங்களின் கீச் ;கீச்’ ஒலி. ஐன்னல் திரைச்சீலை இடைவெளிகளினூடாககதிரவனின் ஒளிக்கீற்று கட்டிலில் விழ ஆரம்பித்தது. ராதி மெதுவாகப் புரண்டு... ஒரு ஏழைத் தாயின் துயர மனநிலையை கதையூடாகக் கொண்டு வந்து கண்களைப் பனிக்கச் செய்த கதை. காவலூர் கண்மணியின் எழுத்துநடை மனதைக் கதையுடன் ஒன்றிப் போக வைத்தது. - நியானி - இணைப்புகள்நாணயமாற்றுபங்குச்சந்தை |


(168).jpg)
.jpg)


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

















