4 weeks ago
சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால்... யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி... இங்கே பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் தெம்பாக இயங்குவது சந்தோசம். 😁 😜
4 weeks ago
யாழ்.செம்மணி அணையா விளக்கு மீண்டும் புனரமைக்கப்பட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அந்த விளக்கு வெறும் ஒளி அல்ல — அது யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம், வரலாற்று நினைவுச் சின்னம், மேலும் அந்த மண்ணின் மக்களின் மன உறுதியின் சின்னமாகும். அது சேதமாக்கப்பட்டபோது பலருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது, ஆனால் இன்று அது மீண்டும் எழுந்திருப்பது யாழின் உயிர்ப்பையும், ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது: அணையா விளக்கு போல், யாழின் ஒளியும் — அதன் பண்பாடும், அதன் மக்கள் உறுதியும் — எந்த விசமத்தாலும் அணைய முடியாது.
4 weeks ago
🤣கொஞ்சம் அலட்சியமாக இருந்தால், "சீமான் தான் விஜயலட்சுமி மீது வழக்குப் போட்டார்!" என்றும் புதுக் கதை பின்னுவீர்கள் போல இருக்கிறதே😂? 2011 இல் சீமான் மீது சென்னைக் கோர்ட்டில் கொண்டு FIR வரப் பட்டு, ஒரு நீதிபதியினால் முறைப்பாட்டாளரின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டபின்னர், விஜயலட்சுமியை மிரட்டி 2012 இல் வாபஸ் வாங்க வைத்தார்கள். 2023 இல் மீண்டும் அவர் அந்தக் கேசைத் திறக்க முனைகிறார். சீமான் இதைத் தடுக்கக் கோரி (விசாரிக்கக் கோரி அல்ல!) சென்னை உயர் நீதி மன்றை நாடுகிறார். "வாக்குமூலம் பதிவாகி விட்டது, எனவே குற்றம் சாட்டியவர் இல்லாவிட்டாலும் கூட வழக்கை தடுக்க முடியாது" என சென்னை நீதி மன்றம் மறுத்து விட்டது. கீழே இணைப்பு. The HinduMadras High Court dismisses Seeman’s plea to quash rape caseMadras High Court dismisses Naam Tamilar Katchi chief Seeman's petition to quash actor vijayalakshmi rape case, directs police to complete investigation in 12 weeks.பெப்ரவரி 2025 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த உடனே, சீமான் உச்ச நீதிமன்றிற்கு மார்ச் 2025 இல் சென்று "தள்ளுபடி செய்யுங்கள்" என்றே மனுப் போட்டார் (விசாரித்து முடித்து வையுங்கள் என்று அல்ல!). இரு தரப்பையும் "மன்னிப்புக் கேட்டால் வழக்கை தள்ளுபடி செய்யலாம்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்படியே கேட்டிருக்கிறார். ஏதோ சீமான் விசாரித்துத் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கப் போராடியதாகத் தான் இனி சீமான் விசிறிகளும், தம்பிகளும் எழுதுவார்கள் என ஊகித்தேன். இன்று நீங்கள் தொடங்கியே விட்டீங்கள்😂!
4 weeks ago
யாழ்.செம்மணி அணையா விளக்கு தூபி விசமிகளால் சேதமாக்கப்பட்ட நிலையில்... இன்று மீளவும் புனரமைக்கப்பட்டது. Babu Babugi
4 weeks ago
🤣............. டென்மார்க்கில் இருந்து எறியப்பட்ட கற்கள் இலக்கு தவறி இந்திய வீராங்கனைகளின் தலைகளில் விழுந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.................. இந்தியாவை நம்பியோர் கைவிடப்படுவார்..................🤣.
4 weeks ago
இந்தத் தகவல் உங்களுக்கு "எட்டக்கூடிய" இடத்தில் இருக்கவில்லைப் போல: இந்தியாவில் மருந்துகள் உற்பத்தி, GMP தராதரப் பரிசோதனைகள், அவை மீறப் பட்டால் தண்டனை என்பன மத்திய அரசின் மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் மூன்றின் கீழ் மட்டும் தான் இருக்கின்றன. மாநில அரசுக்கு இதில் எந்தக் கடப் பாடும் ,அதிகாரமும் இல்லை. "பல்பு" தகவல் தேடுவோருக்கும், பகிர்வோருக்கும் கொடுக்கும் நேரத்தை உங்கள் "பியூஸ் போன பல்பை" மாற்றி ஒளி பெறப் பயன்படுத்துங்கள் ஐயா😎!
4 weeks ago
திருச்சிற்றம்பலம்…. இலக்கியாவும், பீரோ ஆண்டியும், பலூன் அக்காவும் டிரெண்ட் ஆகும் தமிழ் சமூகவலை உலகில், அவ்வப்போது அரிதாக முருகனும் டிரெண்ட்டாவது உண்டு. ஆனால்…. நாமே ஓ எல் பரீட்சைக்காக படித்த, மறந்த, 9ம் நூற்றாண்டின் சிவவாக்கியர் டிரெண்ட் ஆவது…. புதுசு கண்ணா…புதுசு… அதுவும் மனிசன் என்னமா எழுதி இருக்கார்ன்னு பார்க்க, பார்க்க….. படிக்க, படிக்க… அட…..அட… இவர் பெரியாருக்கு முதலே பெரியாரிசம் பேசி இருக்கிறாறே, அதுவும் 9ம் நூற்றாண்டில் என்ற வியப்பு எழுவது மட்டும் அல்ல…. ஆசார மறுப்பையும், பக்தியையும், நிலையாமையையும் குழைத்து அப்படியே அதை சிவ நம்பிக்கையில் முக்கி சிவவாக்கியர் நமக்கு அளிக்கும் விருந்து….. தேன்…தேன்… தித்திக்கும் தேன். நீங்களும் பருகுங்காள்….மக்காள். முழுத் தொகுப்பு எனக்குப் பிடித்த பகுதி😂 15 நிமிட காணொளியாக. இதை மீள பிரபலபடுத்தியவர் இவர் என எண்ணுகிறேன்.
4 weeks ago
https://maps.app.goo.gl/x1nRS37xmGgpbGoPA?g_st=ipc இதுதான் அந்த சவக்காலை தங்குமிடம். நிரந்தரமாக மூடிவிட்டார்களாம். பிகு போதிய வசதிகள் செய்தால் - இந்தியன் சங்கிகளின் தலையில் இதுதான் இராமர் பாலம் என சொல்லி நன்றாக மிளகாய் அரைத்து உள்ளூர் வாசிகள் பயனடையலாம்.
4 weeks ago
நல்லது. 3ம் தீவு வரை அலை தாழும் நேரம் (low tide) நடந்தே போகலாம். அலை மீளமுதல் திரும்பி விட வேண்டும். பெரிய அழகு என்றில்லை, ஆனால் ஒரு திரில் அனுபவமாக இருக்கும். வெறும் கூகிள் மேப், போகும் வழியில் கிடைத்த இரு வழிகாட்டிய சிறுவர்களுடன் போய் - வந்தேன். தலைமன்னாரில் ஒரு குடிசைகள் போன்ற தங்குமிடத்தில் தங்கினேன். அதன் உரிமையாளர்+நடத்துபவர் ஒரு ஜேர்மானிய வெள்ளை இனத்தவர். தங்குமிடம் போய் சேர இருட்டி விட்டது. அவர் ஒரு tree house மரத்தில் அமைத்து வாழ்ந்தார். நல்ல சாப்பாடு, கொண்டு போன ஒரு வெளிநாட்டு போத்தலை கொடுத்ததும் அவர் முகத்தில் அளவுகடந்த சந்தோசம். சாப்பாட்டுக்கு காசு வாங்கவில்லை. எல்லாமுமே மிக அடிப்படையான வசதிகள். பாம்புகள் ஓடிய அடையாளம் எங்கும். படுத்தெழும்பி காலையில் பார்த்தால் …. தங்குமிடத்தை ஒரு முன்னாள் சவக்காலையில் அமைத்துள்ளார்🤣.
4 weeks ago
9ரன்ஸ்சுக்கு மூன்று விக்கேட் இந்தியா இப்படியே போனால் நான் யாழுக்கு தலைக்கு துன்ட போட்டு கொண்டு தான் வரனும்😁..........................
4 weeks ago
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா…. ஏலையா க.முருகதாசன் October 9, 2025 0 இந்தியா இலங்கைக்குப் பக்கத்து நாடாக இருப்பதில் சாதகமான சூழ்நிலையைவிட அரசியல் ரீதியான பாதகமான சூழ்நிலையே அதிகரித்து வருகின்றது. இந்தியா, இலங்கைத் தமிழரை வைத்து எவ்வாறு பகடைக்காய் உருட்டியது என்பதும்,அதே சம ஆட்டமாக இலங்கை அரசை தமிழருக்கெதிராக தூண்டியது என்பதை அறிந்து கொள்ள இலங்கைத் தமிழர்கள் எவரும் சதியரசியலில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது புரியும். தமிழர்களில் பெருமளவாக இல்லாவிட்டாலும் தாம் கூறவந்த அரசியல் சூட்சும அறிவினை விளங்கப்படுத்திய விபரப்படுத்திய கணிசமான தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமீழீழ உணர்ச்சிக் கயிறுகளால் தமிழர்களைக் கட்டி ஒரு திசைநோக்கி இழுத்தக் கொண்டு சென்றதைத் தவறென்று சுட்டிக்காட்டிய போது அதனை யாரும் காதுகொடுத்துக் கேட்கவும் இல்லை,.மாற்றுக்கருத்தினர் அப்படி என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுக்கவும் இல்லை. இந்தியாவின், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் அரசியல் தந்திரமுறையில் மிகமகிழ்ந்து உச்சி குளிர்ந்து எல்லாமே நீங்கள்தான் எனத் தமிழ்த் தலைவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். நாம் பேசியிருக்கிறோம்,அவர்கள் இலங்கையரசுடன் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார்கள் எனப் பத்திரிகைகளில் அறிக்கைகளைவிட்டு இந்தியப்பயணம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது என்ற முற்றுப்புள்ளியுடன் இந்திய இராஜதந்திர அரசியலாளர்களைச் சந்தித்த புகைப்படங்களுடன் தவணை நகர்வு நிறைவுபெறும். தமிழ்த் தலைவர்கள் அனைவருமே மிகப் படித்தவர்கள்.அரசியல் அனுபவங்கள் நிறைந்தவர்கள்.எனினும் இத்தலைவர்களுக்கு இந்தியாவின் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் தந்திரத்தை ஏன் ஊகிக்க முடியாமல் போனது என்பது தெரியவில்லை. இறுதியில் ஆயுதப் போரில் தவனை நகர்வு நிறைவுபெற்ற போது இலங்கையை என்றுமே குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் தண்ணீர் ஓடுகிற திசையில் வாய்க்காலை வெட்டியது போல தமிழீழ விடுதலைப் போருக்கு ஆயுத வழியே சரியென்று பலபக்கத்தாலும் மூளைச்சலவை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்தே இலங்கையைச் சீரழித்ததை உணர முடிகின்றது;அதுதான் உண்மையும்கூட.தமிழீழ விடுதலை ஆயதப் போராட்டம் புலிகளின் பெயரால் இந்தியாவால் நடத்தப்பட்டது அல்லது புலிகளைக் கொண்டு இந்தியாவல் நடத்தப்பட்டது என்றும் கூறலாம். இன்றைய அரசின் நடவடிக்கையும் இலங்கை ஜனாதிபதி திரு.அநுர குமார திஸநாயக்காவின் நுட்பமான நகர்வும் இந்தியாவுக்கு பெரும் ஐமிச்சத்தைக் கொடுத்துள்ளது.தமிழர்கள் ஜனாதிபதியை காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ அது நடக்கக்கூடாது என்பதில் அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. ஜனாதிபதி அவர்கள் எல்லா நாடுகளுக்கும் இராஜதந்திர பயணங்களை மேற்கொள்வதைப் பார்த்து அவரை எடைபோட போட முடியாத நிலைக்கு வந்துள்ளது இந்தியா. ஒரு நாடு என்பது அந்நாட்டு மக்களோடு இணைந்த ஒன்றாகும்.நாட்டை நிர்வகிப்பதற்கான அரசைத் தெரிவு செய்கின்ற மக்கள் தமக்கான தேவைகளை அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடனேயே அரசைத் தெரிவு செய்கின்றனர். உலகம் நாடுகளாகி,மக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்த போது,இனக் குழுமங்களில் தானாக உருவாகிய தலைவர்கள் காலப்போக்கில் மக்களால் தெரிவு செய்யப்படம் தலைவராக மாறினார்கள். ஒரு காலகட்டம் வரையும் ஒரு நாட்டினது செயல்பாடுகள் யாவும் அந்நாட்டின் உள்ளகச் செயல்பாட்டை மட்டுமே கொண்டதாக இருந்து வந்தது. தொடர் வளர்ச்சிநிலையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் தொடர்பு கொண்டது.அத்தொடர்புகள் இன்னும் வளர்ந்து செல்கையில் நாடுகள் ஒவ்வொன்றும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடத் தொடங்கின. உளவாளிகளை நியமித்து மற்றைய நாடுகளை கண்காணிக்கும் செயலுக்கு வழிவகுத்தது. மேலே கூறப்பட்ட விடயங்களால் பல நாடுகளில் உள்ளநாட்டுக் கிளர்ச்சிகளும்,ஆட்சி மாற்றங்களும் முரண்பாடுகளும் தோன்றவே செய்தன. ஒரு நாட்டில் இன்னொரு நாட்டினது தலையீட்டினால் ஏற்படும் விளைவகள் அந்தந்த நாடுகளின் அரச பலத்தைப் பொறுத்ததாவிருக்கும். இதுவே காலப் போக்கில்இன முரண்பாடுகளைச் சில நாடுகள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கின.அது ஒரு சூழ்ச்சி,திட்டமிட்ட சதி.அத்தகு நிலையே இந்தியா இலங்கையை கையாள முயற்சிக்கின்றது. ஒரு நாட்டினது தலைவனோ அமைச்சகர்களோ தமது நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக உலக நாடுகள் எங்கும் சென்று உதவிகளைப் பெறுதல் பரஸ்பரம் பண்டமாற்றினை செய்து கொள்ளல் என்பது இயல்பான ஒன்று அதில் எந்த ஒரு நாட்டுக்கும் அறிவுரை சொல்லவோ கருத்துச் சொல்லவோ உரிமையில்லை. இந்தியா,இலங்கை கொண்டுள்ள பல நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது.இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கு இந்தியாதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய ஜனாதிபதி எந்த நாட்டுக்குப் பேகிறார் என்பதையோ,இந்தெந்த நாடுகளுக்கு போவதை தாங்கள் விரும்பவில்லை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறோம் என இந்தியா நினைக்கவும் சொல்லவும் அவர்களுக்கு உரிமையே இல்லை. இதுவரையில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் கொடுக்காத ஒத்துழைப்பை இன்றைய ஜனாதிபதியான மான்புமிகு திரு.அநுரகுமார திஸநாயக்காவுக்கு தமிழர்கள் கொடுத்துவருவதை இந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை. சிங்களவர்களையும் தமிழர்களையும் இனவாதத்தின் மூலமும் இனக்கலவரங்களை ஆரம்பித்து அதன் மூலமும் முரண்பட வைத்து அது தொடர்ச்சியாக வளரவேண்டும் என்பதற்காக ஆயதப் போராட்டத்தை வளர்த்தும் தமிழர்களையும் அழித்து இலங்கையைச் சீரழித்ததும் இந்தியாதான் இந்தியாவேதான். https://akkinikkunchu.com/?p=343999
4 weeks ago
Prashantha Kumar · ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்? -நெகிழ்ந்த நடிகர் நாசர்! “தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தேன். திடீரென்று என் அருகில் வந்த சிவாஜி சார் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் “பாய் அப்பனை திட்டுற பாக்கியம் எந்தப் பிள்ளைக்கு கிடைக்கும்? யோசிச்சிட்டு நிக்காதய்யா…. என்னைத் திட்டய்யா….” என்று எனக்கு தைரியமூட்டி நடிக்க வைத்தார். அதன்பிறகு தேவர்மகன் ப்ரீவியூ காட்சிக்கு என்னை அழைத்தனர். நான் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. அன்று இரவு எனது அறையில் தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பிரபு. “அப்பா பேசணும்னு சொன்னார்” என்று சொல்ல எனக்கு படபடப்பானது. அடுத்த நொடி சிம்மக்குரல் கர்ஜித்தது “பாய் இப்பதான்யா ‘தேவர்மகன்’ படத்தைப் பார்த்தேன்… சும்மா சொல்லக் கூடாதய்யா… படத்துல மாயத்தேவனாகவே வாழ்ந்துருக்கேயா…” என்று மனம் திறந்து பாராட்டினார். எனக்கு பேசவே முடியாமல் குரல் கட்டிக்கொண்டது... இதைவிட ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?” – 07.11.2018 ஆனந்த விகடன் இதழ் முகநூலில் பதிவு: பிரசாந்த்! Voir la traduction
4 weeks ago
புதுசா கல்யாணம் கட்டியிருக்கிறான் போலே
4 weeks ago
World of Creatures “A tree gives the same gift to all — shade, peace, and life. Whether it shelters people or sheep, its kindness never changes.” 🌳"
4 weeks ago
4 weeks ago
4 weeks ago
மழைக்குள் நடக்கும் ஐ . பி . எல் மாட்ச் மாதிரி நீதியும் ஆங்காங்கே ஓவரை கூட்டி குறைச்சு கொண்டு போகிறது போல் இருக்கு . ......!
4 weeks ago
இல்லை. சீமான் சென்னை உயர் நீதி மன்றத்தில் கேட்டது, வழக்கை விசாரியுங்கள் என்று அல்ல. இப்போது மாமா உச்ச நீதி மன்றம் செய்தது போல் விசாரிக்காமல் அடித்து மூடுங்கள் என்பதையே. ஆனால் அரிதாக ஒரு நியாயமான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி - இது பாரிய கிரிமினல் குற்றசாட்டு இதை அப்படி நூக்க முடியாது… ஆனால் பொலிசும் இழுத்தடிக்க கூடாது… என காலவரையறை கொடுத்து… மிக, மிக நியாயமான தீர்ப்பை கொடுத்தார்…. தான் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டதை தாமதாமாக உணர்ந்த சீமான் டெல்லிக்கு ஓடி பாஜக தயவில் வழக்கை அடித்து நூத்தார். இதுதான் நடந்த தரவு. யாழில் பல செய்திதிரிகளில் இதை காணலாம். சங்கு மட்டும் அல்ல, சவமும்தான் சுட்டால் வெண்மை (சாம்பல்) தரும்🤣. உப்புகல்லை வைரம் எண்டு சொன்னால்…. நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்… - கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்-
4 weeks ago
ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது! ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09) அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்துக் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில் அவற்றின் நுகர்வு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மருந்துகளின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது. இந்த நிலையில் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொழில்துறை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும். இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது. மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் இந்த தயாரிப்பைத் தடை செய்துள்ளன. இந்த நச்சு இருமல் சிரப் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்ட பின்னர் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர். உஸ்பெகிஸ்தானில், 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு மாசுபட்ட சிரப்பை உட்கொண்ட பின்னர் 68 குழந்தைகள் இறந்தனர். https://athavannews.com/2025/1449960 ############### ################## @Justin அந்த மருந்து தயாரிக்கப் பட்டதே... திராவிட ஊழல் மலிந்த, தமிழ் நாட்டில் தான். 😮 ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி, 😂 கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 🤣
4 weeks ago
ஒரு நீதிமன்றம் அளித்த தண்டனையை, இன்னொரு நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி, அந்த நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குகிறது. எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்? குற்றவாளிகள் துணிந்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார்கள். இந்த நீதிமன்றத்தில் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலையாகிவிடலாமென்கிற துணிவு. இவர் நாளைக்கே பயமில்லாமல் இன்னும் எத்தனை பேரை சீரழித்து கொலை செய்யபோகிறாரோ? அப்படி நடந்தால்; அவரை விடுதலை செய்த நீதிபதியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்
Checked
Thu, 11/06/2025 - 15:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed