புதிய பதிவுகள்2

ஆவணப்படுத்தலுக்கு ஒரு உதவி

1 month 1 week ago
முள்ளிவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள நினைவுத் தூண் எப்போது முதன் முதலில் கட்டப்பட்டது என்பது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 month 1 week ago
பரிசு ஒரு பிரதான வீதியில் ஒருவர் காரைச்செலுத்திக்ண்டிருந்தார் . அவரை போலீசார் சாதாரண உடையில் பின் தொடர்ந்து கொண்டே இருந்தனர். சில மணிநேரம் சென்றதும் போலீசார் அவரது காரை முன்னே மறித்து இறங்கும்படி சைகை காட்டினார் ....அவரும் இறங்கினர் . பின் அவர்கள் இந்தாருங்கள் பரிசு பத்தாயிரம் , நாங்கள் உங்கள் காரைப் தொடர்ந்தோம் .நீங்கள் ஒரு இடத்திலும் குறித்த வேக எல்லைக்கு மேற் செல்லவில்லை. நிதானமாக சடட திட்ட்ங்களுக்கு மதித்து கார் ஒட்டினீர்கள் என்றார்கள். அதற்கு அவன் நன்றி சார் ...நானிதை வைத்து நாளை லைசன்ஸ் எடுக்கிறேன் என்றான். இந்தக் கேடட மனைவி சார் அவர் குடிவெறியில் பகிடி விடுகிறர் என்றாள். இந்தக் காடசியெல்லாம் பார்த்திருந்த மாமியார் நான் சொல்ல சொல்ல கேடடான களவெடுத்த காரில் வரமாடடேன் என்று ,இனி தலை தலையென அடித்துக்கொள்ள வேண்டியது தான் . போலீசார் திரு திரு என விழித்தனர். (படித்து ரசித்தது )

சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

1 month 1 week ago
தமிழர்கள் மட்டும் தான் வெங்காயப் பயிர் செய்கிறார்கள் என்பது தவறான புரிதல். இலங்கை முழுவதும் சின்ன வெங்காயம் செய்வோருக்கு பாதிப்பு என்று தான் யோசிக்க வேண்டும். ஆனால், சின்ன வெங்காயம் இறக்குமதி ஆரம்பித்தது உற்பத்திக்கும் கேள்விக்குமிடையே இடைவெளி வந்ததால் என நினைக்கிறேன். உள்ளூர் விவசாயிகள் இலாபம் அடைய வேண்டும், ஆனால் உற்பத்தியைக் குறைத்து விலையைக் கூட்டி கொள்ளை இலாபம் அடைவது சரியல்ல. தற்போது இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்திற்கும், உள்ளூர் வெங்காயத்திற்கும் 10 அல்லது 20 ரூபாய்கள் தான் விலை வேறு பாடு. எனவே, நுகர்வோர் நலனும், உள்ளூர் விவசாயிகள் நலனும் பேணப்பட்டிருக்கின்றன.

Images of the Tamil Genocide Monuments and Memorials

1 month 1 week ago
Mullivaikkaal Memorial Beau Bassin Rose Hill, Mauritius This was the first memorial built in remembrance of the Tamil Genocide. Its uniqueness lies in the fact that it honours both Tamil civilians and LTTE fighters together. In response to requests from the Mauritius Tamil Temple Federation (MTTF), the mayor of Beau Bassin-Rose Hill, Louis André Toussaint, commissioned the construction of a memorial pillar. The epitaph on the memorial reads as follows: This memorial is located within the Beau Bassin Rose Hill Municipal Council's grounds, a short distance from the mayor's office. This was opened on 18 May 2012. Image Credits: This image was generated by me in the year 2024 from a video from Facebook and later uploaded to Wikipedia

Images of the Tamil Genocide Monuments and Memorials

1 month 1 week ago
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' 'We ourselves will write our history' Purpose: This thread is dedicated to documenting images of Tamil Genocide monuments and memorials located around the world. Disclaimer and Credits: All images shared in this thread are the property of their respective owners. I do not hold any rights to them. What's the Tamil Genocide? Tamil_genocide An image documentary by Nanni Chozhan

ம‌ன‌துக்கு பிடித்த‌ BGM Background Music

1 month 1 week ago
உண்மை தான் அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்👍🥰................... ஏ ஆர் ர‌குமான் ரோஜா ப‌ட‌த்தில் இருந்து 2005 வ‌ரை எல்லா ப‌ட‌ங்க‌ளுக்கும் ந‌ல்லா இசை அமைத்தார் , 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஹிந்தி ப‌ட‌ங்க‌ளுக்கு அதிக‌ம் இசை அமைத்தார் , ஏ ஆர் ர‌குமான் இசையில் வெளி வ‌ந்த‌ இந்த‌ ஹிந்தி ப‌ட‌த்தில் வ‌ந்த‌ இந்த‌ பாட‌ல் குறைந்த‌து 300 த‌ர‌ம் கேட்டு இருப்பேன் , நீங்க‌ளும் கேட்டு பாருங்கோ.................... இது 2001ம் ஆண்டு வெளி வ‌ந்த‌ ஹிந்திப் ப‌ட‌ம் , என்ன‌ பாடின‌ம் என்று தெரியாது , இசை இனிமையான‌ குர‌லில் வெளிவ‌ந்த‌ பாட்டு...............இந்த‌ப் ப‌ட‌த்தில் இன்னொரு ந‌ல்ல‌ பாட‌லும் இருக்கு🥰😍.............................

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

1 month 1 week ago
"தனிக்குழு மாவீரர்" பொன் சிவகுமாரனிற்கான உருவச்சிலை தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்ட இரண்டாவது நினைவுச்சின்னம் இதுவாகும். இது இனத்தின் விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்திய தியாகி பொன் சிவகுமாரனின் நினைவாக அமைக்கப்பட்ட உருவச்சிலையாகும். இது மொத்தம் பல தடவைகள் சிங்கள இனவெறியர்களாலும் அவர்தம் ஏவலாளித் தமிழர்களாலும் உடைத்தெறியப்பட்டுள்ளது. இவருக்காக யாழ் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த சிலையிற்கான திறப்பு விழாவில், ஜெனீவா உடன்படிக்கை காலத்தில், அன்னாரின் தாயார் குத்துவிளக்கேற்றுகிறார். (இனந்தெரியாக காரணங்களால்) மேம்படுத்தப்பட்ட பின்னர்:

காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

1 month 1 week ago
"பிழையான, அடாவடித்தனமான" - இவையெல்லாம் சட்ட ரீதியான வினையுரிச் சொற்கள் அல்ல. இந்தச் சொற்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. "இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" என்பது தான் வர்த்தமானியை நிரந்தரமாக அரசின் ஆயுதங்களுள் இருந்து அகற்றும் மந்திரச் சொல். அதைத் தான் சுமந்திரன் மனுதாரராக வழக்குப் போட, அவர் சார்பில் ஒரு திறமையான சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி தடை வாங்கியிருக்கிறது. நீங்கள் சட்டப் பரிச்சயம் இல்லாமல் இதன் பலனைக் கேள்விக்குள்ளாக்கலாம். ஆனால், இங்கே இன்னும் சிலர் வருவார்கள். வந்து உங்கள் கேள்வியை "நிரந்தரமாக வர்த்தமானியை அகற்றுவதில் இருந்து சுமந்திரன் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்" என்று புது விளக்கம் தர வெளிக்கிடுவார்கள்😂. இப்படித் தான் இன அழிப்பு பற்றிய ஜெனிவா விடயங்களிலும் சுமந்திரன் நடந்து கொண்டார் எனக் குற்றம் சாட்டினார்கள்.

காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

1 month 1 week ago
இந்த விடயத்தில் எனக்கு முழுமையான சட்ட அறிவு / நுணுக்கம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். இந்த திடீர் வர்த்தமானி அறிவிப்பு ஒருசட்ட மூலமாக்கல் முறைமையில் வரவில்லை. இது ஒரு காணி அதிகாரம் சார்ந்த தன்னிச்சையான அரசாங்க அறிவிப்பு மட்டுமே என்றே நான் கருதுகிறேன். இது தமிழர்களை பொறுத்தவரையில் அரச அடாவடித்தன நில அபகரிப்பு. இது அரசின் பிழையான முடிவு. இதை வழக்குமூலம் மட்டும் தான் தான் நிறுத்தலாம் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆளை ஆள் தூக்கிக்கொண்டு வருஷ கணக்காய் அலைய வேண்டியது தான்.

ம‌ன‌துக்கு பிடித்த‌ BGM Background Music

1 month 1 week ago
அந்த BGM இதுக்கை இணைத்து விடுங்கோ Bro..................ப‌ல‌ நாள் க‌வ‌லைக‌ளில் சோக‌ங்க‌ளில் இருந்த‌ போது கைபேயில் இருந்து அதிக‌ம் கேட்பேன் , இப்ப‌டியா இசை ம‌ன‌தை ம‌கிழ்விக்கும் இப்ப‌ வார‌ பாட‌ல்க‌ள் முன்னைய‌ கால‌ங்க‌ளில் வ‌ந்த‌ பாட‌ல் போல் இல்லை.....................1999க‌ளில் ஏ ஆர் ர‌குமான் இசை அமைத்த‌ அத்த‌னை பாட‌ல்க‌ளையும் பிடிக்கும் அதை விட‌ இந்த‌ BGM இசை மிக‌வும் பிடிக்கும்🥰👍................................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
எல்லாம் சொல்லி போட்டியள் இந்த virtue signaling க்கு தமிழ் என்ன எண்டும் சொல்ல முடியுமா? நியாயம் நான் ஆங்கில வார்த்தைகளை தூவுவதாக குறைபடுகிறார் (அரபு என்றால் ஓக்கேயாம்🤣). வச்சு கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.

சகோதரனின் பாலர் பாடசாலை மகள் துஷ்பிரயோகம்: 68 வயதானவருக்கு 60 ஆண்டுகள் சிறை

1 month 1 week ago
ஒருவர் தும்மினால் “நூற்றாண்டு” என்று சொல்லி அவர் நூறு வயதுவரை வாழவேண்டும் என்று வாழ்த்துவது எங்கள் மரபு, இங்கு நீதிபதி கிழவனை 128 வயது வரை வாழ வேண்டித் தீர்ப்பு வழங்கிவிட்டாரே. இப்படியான வக்கிரர்கள் வளர்வதைச் சட்டம் போட்டோ தண்டனை கொடுத்தோ தடுக்க முடியாது. இப்படி நினைத்தாலே நினைப்பவர்கள் பயம்வந்து நடுங்கி வாழச் செய்ய வேண்டும். நலமடித்து கை கால்களை முடமாக்கி வாழும்வரை மனழ் நொந்து வாழ விடவேண்டும்.😳

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

1 month 1 week ago
உலகத் தமிழாராச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலையம் முற்றவெளி, யாழ்ப்பாணம் தமிழீழத்தில் ஒரு படுகொலைக்கென்று நாட்டப்பட்ட முதலாவது நினைவுத்தூண் இதன் முதல் விருத்தேயாகும் (version). இந்நினைவுத்தூணானது 1974இல் நடந்த 4ஆவது உலகத்தமிழாராச்சி மாநாட்டின் பத்தாவது நாளில் (சனவரி 10) சிங்களவரால் கொல்லப்பட்ட தமிழர் பதினொருவருக்கு கட்டப்பட்டது. இது மொத்தம் நான்கு தடவைகள் சிங்கள இனவெறியர்களாலும் அவர்தம் ஏவலாளித் தமிழர்களாலும் உடைத்தெறியப்பட்டுள்ளது. கீழ்வரும் தகவல்கள் யாவும் என். செல்வராஜா அவர்களால் எழுதப்பட்ட "நினைவுகளே எங்கள் கேடயம்" என்ற நூலின் 138,139வது பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். படிமங்கள் இந்நூலிருந்தும் வேறிடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டவையாகும். விருத்து 1 இதன் முதல் விருத்தினை 10.1.1975 அன்று மக்களும் அரசியல்கட்சி தொண்டர்களும் கட்டுவித்தனர். இது பதினொரு சிறு தூண்கள் கொண்ட நினைவுத்தூணாகும். செதுக்கிய மரக் கட்டைகளை மன்னாரிலிருந்தும் "தமிழர் நினைவு நடுகல்" என எழுதிய நடுகல்லை கொழும்பிலிருந்தும் பைஞ்சுதை, கல், மண் மற்றும் தொண்டர்களை யாழ்ப்பாணத்திலிருந்தும் தருவித்து கட்டினர். 10.1.1975 அதிகாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. பற்சமய வழிபாடும் நடந்தது. அது சில கிழமைகளின் பின்னர் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது. விருத்து 2 பின்னர் மீண்டும் 10.1.1976 காலையில் 11 அடி உயரத்தில் நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. அதுவும் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது. கட்டும் போதே இதை மேலும் பல அடிக்கு உயர்த்தக்கூடிய வகையிலேயே கட்டியிருந்தனர். "தந்தை" செல்வா மலர்வணக்கம் செய்கிறார் விருத்து 3 பேந்து மூன்றாவது தடவையாக 10.1.1977இல் ஒன்பது நடுத்தர தூண்களும் ஒரு பெரிய தூணும் கொண்ட நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. இதன் சிறிய தூண்களின் அடிப்பகுதியில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இதற்கு புதிய நினைவு நடுகல்லும் பதிக்கப்பட்டது. விருத்து 3இன் தொடக்க வடிவம்: இதன் பெரிய தூணும் பின்னர் இடிக்கப்பட்டது: விருத்து 3.1 பின்னாளில் இடிக்கப்பட்ட நினைவுத்தூண் மீளவும் கட்டப்பட்டது, முன்னரிருந்தது போன்றே. விருத்து 3.2 பல ஆண்டுகளின் பின்னர் அந்நினைவுத்தூணானது நினைவாலயமாக மாற்றம் பெற்றது; சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பெயர்ப்பலகையும் நாட்டப்பட்டது. இதுவே இன்று நீங்கள் காணும் விருத்தாகும். '2003'

காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

1 month 1 week ago
வட அமெரிக்காவில் இருந்து இவ்வளவு கேஸ்களைப் பற்றி இங்கே வாசிக்கிற நீங்களே இப்படி இருந்தால், சோசியல் மீடியாவில் சட்ட அறிவு பெறும் ஆட்களின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு வழக்கு முழுமையாக விசாரிக்கப் பட இரு தரப்பும் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் தர வேணும். அதன் பின்னர் தான் தீர்ப்பு (verdict) வரும். அப்படித் தீர்ப்பு வழங்கப் பட முன்னர், தீமை பயக்கும் செயல்பாடுகளை உடனே தடுக்கும் முறை தான் இந்த இடைக்காலத் தடை உத்தரவு (temporary injunction). இது அமலில் இருக்கும் போது வழக்கு முன்னோக்கி நகரும்!

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

1 month 1 week ago
இனப்படுகொலை தொடர்பான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் இதற்குள் தமிழீழத்திற்குள்ளும் உலகின் பல்வேறு நாடுகளிலும் 2009இற்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பான சிலைகளின் படிமங்கள் உள்ளன. இந்தத் தகவல் இத்திரியோடு தொடர்பில்லையாதலால் வேறொரு திரியில் பதிந்த பின்னர் அத்திரியின் கொழுவி (link) கீழே தரப்படும்.

சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

1 month 1 week ago
எமது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிட்டே இதைச் செய்கிறார்களோ? இவர்கள் அறுவடை செய்யும் காலம் பார்த்து இறக்குமதியை செய்வதால் இவர்களின் உற்பத்தி குறைந்த விலைக்கே விற்க முடிகிறது. இது கடந்த காலங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டது. இருந்தும் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என்றால் தமிழன் நாசமாக போக வேண்டும் என்றே செய்கிறார்கள்.
Checked
Fri, 08/08/2025 - 00:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed