புதிய பதிவுகள்2

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

1 month ago
கரூர் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலவாறு பரவும் அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கரூர் சோகம் - விஜய் அந்த வரிசையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தச் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்தச் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த நீதிபதி, சம்பவம் தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் போலீஸுக்கு உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றம் மேலும் இன்றைய விசாரணையில், சம்பவம் நடந்த பிறகு எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட ட்வீட்டை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியதைக் கவனித்த நீதிபதி செந்தில்குமார், வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident - Vikatan

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

1 month ago
02 Oct, 2025 | 04:44 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனையடுத்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்தனர். அதன் பிரகாரம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அத்திருத்தப் பிரேரணையில் 'மோதல்கள்' எனும் சொல்லின் மூலம் 'இனப்பிரச்சினை' என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டறிந்துள்ளார். அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் பிரேரணையில் 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்கள்' என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கு ஆதரவான வேறு சில நாடுகளும் தம்மிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரேரணையில் சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இம்முறை பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை விட மிகவும் வலுவாக அமையவேண்டியது அவசியம் என்று தாம் ஏற்கனவே வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த சுமந்திரன், அவ்வாறிருக்கையில் முன்னைய தீர்மானங்களில் உள்வாங்கப்பட்டிருந்த விடயங்களையும் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இப்பிரேரணை அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் பின்னணியில், பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருக்கும் சொற்களும் இவ்வாறு நீர்த்துப்போனால், அது அம்மக்களின் நம்பிக்கையிழப்புக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அப்பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என உறுதியாகத் தெரியாத பின்னணியில், அப்பிரேரணை எதிர்வரும் 6 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது. இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் | Virakesari.lk

மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவுக்கு 30 வருட கடூழிய சிறை!

1 month ago
மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார். 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சந்தேக நபர் மீது தண்டனை சட்டக்கோவை 365(2) ம் பிரிவின் கீழ் 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங்காணப்பட்டார். இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இரண்டாவது குற்றத்திற்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் மூன்றாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறைத் தண்டனை பிறப்பிக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவுக்கு 30 வருட கடூழிய சிறை! | Virakesari.lk

திருகோணமலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம் ; குற்றவாளிக்கு 32 வருட சிறை!

1 month ago
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன. இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர - தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார். இதேவேளை அந்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்தவேண்டும், இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் இத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார். திருகோணமலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம் ; குற்றவாளிக்கு 32 வருட சிறை! | Virakesari.lk

பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு

1 month ago
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் (polymer-based) அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், தேவையான எஸ்.எல்.எஸ். தரநிலைகளை பூர்த்தி செய்து, உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காண்பிக்காத பட்சத்தில், அத்தகைய போத்தல்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் திரவங்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கான இலங்கை தர நிர்ணய விவரக்குறிப்பு SLS 1616 மற்றும் பொலிமர் பொருட்களால் செய்யப்பட்ட பாலூட்டும் போத்தல்களுக்கான இலங்கை தர நிர்ணய விவரக்குறிப்பு SLS 1306 என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்த பணிப்பு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டிய ஆய்வையும் அங்கீகாரத்தையும் கோருகிறது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் இல. 9/2003 மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கவும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் இலக்காகக் கொண்டுள்ளது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு | Virakesari.lk

புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகம் ; கடற்படை வீரருக்கு விளக்கமறியல்

1 month ago
( எம்.நியூட்டன்) புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படையைச் சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் வட பகுதி கட்டளை பணியகத்தின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டனர். மருத்துவ அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றமைக்கு உரிய சான்றுகள் காணப்பட்டதால் கடற்படை வீரரையும் கடற்படை யுவதியையும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் காங்கேசன்துறை பொலிஸார் ஒப்படைத்தனர். ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடற்படை வீரரை முற்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகம் ; கடற்படை வீரருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் - அமைச்சர் சந்திரசேகரர்

1 month ago
03 Oct, 2025 | 05:25 PM புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் "செப்டம்பர் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித கேரத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒக்டோபர் மாதம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தங்களது அரசின் நிலைப்பாடு என்ன” என கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என நாங்கள் எமது கொள்கை பிரகடனத்தில் கூறி இருந்தோம். அதை நீக்கப்பட வேண்டிய ஒரு சட்டம். இந்த சட்டத்தினால் அனைவரையும் விட எமது கட்சி கடமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சட்டமூலத்தை மாற்ற வேண்டும் என்பதில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்று நாட்டில் தலை விரித்து ஆடுகின்ற இந்த போதை பிசாசு குறித்தும், போதைப்பொருள் வியாபாரிகள் குறித்தும் மக்களுக்கு நன்றாக தெரியும். அந்தப் போதைப் பொருளுக்கு பின்னால் இன்னொரு போதைப்பொருள் உலகம், பாதாள உலகம், பாதாள அரசியல் மறைந்திருக்கிறது. இவ்வாறான அரசியலை ஒடுக்குவதற்கு இவ்வாறான சட்டங்கள் தேவை. அதனால் புதிய சட்டம் ஒன்று வரும் வரைக்கும் ஒரு விடயத்தை நாங்கள் மீண்டும் சொல்லுகின்றோம், இந்தப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி எந்த ஒரு அப்பாவி குடிமகன் மீதும் நாங்கள் கை வைக்கப் போவதில்லை. நாட்டு மக்களது சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு எதிராகவே இந்த சட்டம் பாய்கின்றதே தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது. சுமந்திரனே, கடந்த காலத்தில் ரணிலுக்கு பின்னால் ஓடுனீர்கள், அவர்களுக்காக வழக்காடினீர்கள் ஆனால் அந்த காலத்தில் இந்த சட்டத்தை நீக்குவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. நாங்கள் வந்து ஒரு வருடத்தில் நாட்டினை கட்டி எழுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்றார். புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் - அமைச்சர் சந்திரசேகரர் | Virakesari.lk

கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

1 month ago
(இராஜதுரை ஹஷான்) உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு பேர வாவியை பயன்படுத்தி நீர் விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம் கொழும்பு சினமன் லேக் ஹோட்டல் முனையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வருகைத் தந்த சிறிய ரக நீர் விமானத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர ஆகியோர் வரவேற்றனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,கொழும்பு துறைமுக நகரத்தை அண்மித்த வகையில் உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதில் பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் கடந்த காலங்களில் காணப்பட்டன. சுமார் 12 ஆண்டுகால முயற்சியின் பயனாக பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்புடன் இந்த உள்ளக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர,கொழும்பு பேர வாவியை அண்மித்து உள்ளக விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும். இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும்.சினமன் எயார் விமானம் பிரதானமாக கொழும்புக்கு வெளியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்கிறது. இருப்பினும் தற்போது கொழும்பு பேரா வாவியை அண்மித்து விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும்.இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும். கொழும்பு நகரில் பிரதான சுற்றுலா ஹோட்டல்கள் அமையப்பெற்றுள்ளது.இந்த புதிய திட்டத்தின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படும். உள்ளக விமான சேவைக்கும் புதிய அனுபவமாக அமையும்.ஆகவே இந்த புதிய சேவையானால் நாட்டின் சுற்றுலாத்துறை கைத்தொழில் அபிவிருத்தியடையும் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் துய்யகொந்த, இந்த திட்டத்துக்குரிய பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து இந்த உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதியளித்துள்ளோம். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு பாதுகாப்பு சட்டங்களுக்கமைய அனுமதி வழங்குவோம் என்றார். கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம் | Virakesari.lk

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month ago
அரசியல் எதிரியை விட கொள்கை எதிரி மேல் என்று நினைக்கும் வாய்ப்பு உள்ளது. சீமான் அனைத்து இழப்புகளையும்(சுப முத்துக்குமார்,கலயாணசுந்தரம் ,ராஜீவ் காந்தி ,காளியம்மாள்) தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.அதுதான் ஒரு உறுதியான தலைமைக்கு இருக்க வேண்டும்.

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 month ago
இந்த செய்தியின் மூலம் எது கொழும்பான்? செய்திகள் இணைக்கும் போது அது பிரதி பண்ணப்பட்ட செய்தி தளத்தின் அதற்குரிய பக்கத்தின் இணைப்பை (Link) வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago
வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு 🟢 அரட்டை (Arattai) மெசஞ்சர் அப்டேட் 🟢 இது எங்கள் நிதானமான பொறியியல் முயற்சியின் இன்னொரு சிறந்த உதாரணம். நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டது காரணம்: • குறைந்த விலை போன்களில் கூட செயல்பட வேண்டும் • குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் (8 kbps வரை சோதித்து வருகிறோம்) நன்றாக இயங்க வேண்டும் • மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் • அதே நேரத்தில் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் ✅ ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து அப்டேட் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் (features) இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும். அதோடு, அதிகமான பயனர்களை தாங்கும் சர்வர் அடிப்படை (infrastructure) வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறோம். நான் தினசரி நேரடியாக எங்கள் எஞ்சினீயர்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடி வருகிறேன். 📢 இது முடிந்தவுடன், ஒரு பெரிய மார்க்கெட்டிங் பிரச்சாரம் (big marketing campaign) நடத்த இருக்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை. 🌍 எங்கள் அரட்டை மெசஞ்சர் உலகின் சிறந்த மெசேஜிங் அனுபவத்தை (best messaging experience) வழங்கும் என்ற எங்கள் உறுதி தொடர்கிறது. 👉 மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்! --Sridhar Vembu CEO ZOHO Download link:- https://chat.arattai.in/app/download

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் பின‌லுக்கு வ‌ந்த‌ தென் ஆபிரிக்கா மக‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் விளையாட்டில் ப‌டு சுத‌ப்ப‌ல்...............................

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 month ago
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு சரியான ட்றீட்மண்ட் தரப்படல் வேண்டும். இதற்கான நல்ல மருந்துகளை இஸ்ரேலிடமிருந்து இலங்கை வாங்கிக்கொள்ளவேண்டும்!

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 month ago
புஸ்ஸி (நல்லா வச்சான்யா பேரு😂) ஆனந்தை கைது செய்ய கூடுமாம். விஜை அரசியல் சரியான வழியில் செல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் 🤣. ஆனால் ஒன்று நீங்கள் சொல்வது போல் ரசிகர் ஏறிய மரம் முறிந்து விழுந்தோ, ரசிகர்கள் கலவரம் செய்தோ தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக எப் ஐ ஆர் கூட சொல்லவில்லை. காரணம் கட்டுக்கடங்காத கூட்டம். அதை வேண்டும் என்றோ அல்லது அசட்டையாகவோ பொலிஸ் கட்டுப்படுத்த தவறியது. இது சதிக்கோட்பாடு அல்ல. பிளேட்டால் கீறினார்கள் இதர கதைகள்தான் ஆதாரம் இல்லாதவை. ஆனால் ஒரு பெரும் கூட்டத்தில் ஒரு நூறு பேர் இறங்கி தள்ளுமுள்ளு பட்டாலே, கூட்டம் கல்லைகலைய போதுமானதாக இருக்கும் என்பதும் உண்மையே. திமுகவின் மாபியாதனமும் தெரியும் என்பதால் இதில் நிச்சயம் ஒரு open mind அணுகுமுறை தேவை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு போகின‌ம்.............பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் அடிச்ச‌ ஸ்கோர‌ தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அடிப்பின‌மோ தெரியாது😁...................................

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 month ago
மரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏறிக்குந்தியிருந்துகொண்டு இந்த உலகமே எனக்கு கீழே என்று ரீல்ஸ் போடும் காக்கா கூட்டத்திற்கு காவல் துறையால் பாதுகாப்புக்கொடுத்திருக்க முடியாது. இந்திய விமானப்படை வேண்டுமென்றால் முயற்சிசெய்து பார்த்திருக்கலாம். அணில்குஞ்சுகளின் ஒவ்வொரு சதிக்கோட்பாட்டிற்குமான counter காணொளிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் எப்படியான ஒரு சமூக குப்பைகள் என்பதும் இப்படியான கும்பலிடம் ஒரு ஆட்சியதிகாரம் சென்றால் அதன் நிலை எப்படியிருக்குமென்பதும் நடுநிலையான மக்களுக்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது. மிகவிரைவில் இவர்கள் காணாமல் போவதுடன் இவர்களது தலைவர் பெரிய அணில் இப்போது head down coalition எவருடனாவது போனாலொழிய இனி அவருக்கு அரசியலெதிர்காலம் இல்லை. இந்த கும்பல் மிகவிரைவில் சினிமாவில் தனது அடுத்த நாயகனை தேடிப்போய்விடும். உண்மையில் பாவம் பெரிய அணில் சினிமாவும் அரசியலும் இரண்டு எதிரெதிர் தளங்கள் என்பதை புரியாமல் காலை விட்டுவிட்டார். சினிமாவில் மக்களை அதிகமாக சந்திக்காமல் கற்பனையான கதாபாத்திரங்கள் மூலம் மாஸ் காட்டி மக்கள்மனதில் இடம் பிடிக்கும் கனவுத்தொழிற்சாலை அது. அங்கே மக்களை நேரே சந்திக்காமல் திரைப்படம் மூலம் சந்திக்க சந்திக்க கிரேஸ் ஏறும். அரசியல் அப்படியே நேரெதிர் தன்மை கொண்டது இங்கே மக்களை நேரடியாக சந்த்தித்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் அதே நேரம் நடிகனாக உருவாக்கிய வேற்றுப்பிம்பம் மக்களை சந்திக்க சந்திக்க கலைய ஆரம்பிக்கும் பாவம் விஜய் 4 வது சந்திப்பிலேயே காலி. இனி என்ன பாஜகவை கூப்பிட்டு சம பந்தியில் உட்காரவைக்க வேண்டியதுதான்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
ந‌ன்றி செம்பாட்ட‌ன் அண்ண‌🙏👍............... யாழில் இருக்கும் பெரிசுங்க‌ கூட‌ விளையாட்டு திரியில் ஜாலியா ப‌ம்ப‌ல் அடிக்க‌ எனக்கு மிக‌வும் பிடிக்கும்................அந்த‌க் கால‌த்தில் இருந்து ம‌க‌ளிர் கிரிக்கேட்டை பார்த்து வ‌ருகிறேன்................உட‌ல் நிலை ச‌ரி இல்லாட்டியும் இப்ப‌டியா திரிக்குள் வ‌ந்து சிரித்து எழுதுவ‌தால் என‌க்கு யோச‌னை மிக‌ மிக‌ குறைவு🙏...................... ந‌ன்றி அண்ணா🙏👍......................
Checked
Wed, 11/05/2025 - 23:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed