1 month ago
வினா 4) 7 விக்கேற்றுக்களினால் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. 5 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் 2)கிருபன் - 9 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 9 புள்ளிகள் 4)நியூபேலன்ஸ் - 9 புள்ளிகள் 5)ஆல்வாயன் - 7 புள்ளிகள் 6)புலவர் - 7 புள்ளிகள் 7)வாதவூரான் - 7 புள்ளிகள் 8) ரசோதரன் - 7 புள்ளிகள் 9) வீரப்பையன் - 7 புள்ளிகள் 10) சுவி - 6 புள்ளிகள் 11) வாத்தியார் - 5 புள்ளிகள் 12)செம்பாட்டன் - 5 புள்ளிகள் 13)கறுப்பி - 5 புள்ளிகள் 14)ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் 15)வசி - 3 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 4, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
1 month ago
இந்த செய்தி போட்டதிற்காக காத்தான்குடியில் நாளை ஜூம்மா முடிந்ததும் ஆர்ப்பாடம் நடைபெறும் ...நாமெல்லாம் பத்தரை மாற்று தங்கமெல்லொ..
1 month ago
இங்கு வருவது உங்கள் மனதுக்கு ஆறுதல் என்றால் மகிழ்ச்சி. ஆனால் சிரமமாக இருந்தால், தேவையான ஓய்வை எடுத்து முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு.வீரப்பையன் விரையில் உடல்நலம் தேறி கலகலப்பாக வேண்டும்
1 month ago
ஏன் சொத்துக்களின் பிரகடனத்தை பார்க்க வேணும்..தோழர்களின் வண்டியை(தொந்தியை)உடல் பருமனின் வளர்ச்சியை பார்க்கும் பொழுதே தெரிகின்றது தோழர்களிடம் சொத்துக்கள் குவிகின்றது என்று....🤣 சிறிலங்கா தீவு மக்கள் இவையை மட்டுமா அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள்.சிறிமா கோஸ்டி,ஜெஆர் கோஸ்டி,சந்திரிக்காகோஸ்டி ,மகிந்தா கோஸ்டி என எல்லோரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் ...இப்பொழுது அனுரா கோஸ்டி யை ஏற்றியிருக்கினம் ...தீவு மக்கள்....
1 month ago
என்ன சொல்கிறீர்கள். தேவையான ஓய்வை எடுங்கள். யாழ் களம் இங்கேயே இருக்கும். இந்தப் போட்டியெல்லாம் சும்மா முசுப்பாத்திக்குத் தானே. உங்கள் நலம்தான் முக்கியம். இங்கு வருவது உங்கள் மனதுக்கு ஆறுதல் என்றால் மகிழ்ச்சி. ஆனால் சிரமமாக இருந்தால், தேவையான ஓய்வை எடுத்து முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு.
1 month ago
ஆம். யார் இல்லை. என்றது. சினிமா. மூலம். அழிந்தவர்களுமுண்டு. அது. தான. அதிகம். நீங்கள். சொன்னவர்கள. பெரிய. பணம். படைத்தவர்கள். சரி. அண்ணை. சீமான். தமிழ் ஈழம். எடுத்து. தந்ததான். பிற்பாடு. கதைப்பம்.
1 month ago
ஹேமமாலினி ஏற்கனவே சொல்லிவிட்டார். பாஜக என்றால் யார் என்று தெரியும் என்பதால், நாங்கள் எவரும் அவர்களின் கருத்தை இங்கே ஒரு பொருட்டாக கொண்டு வருவது கூட இல்லை. கும்பமேளாவில் இறந்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொல்லும் கூட்டம் அது.............🫣. என்ன நடந்தது என்பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கும். அவை பெரும்பாலும் அவர்களின் முன்னைய ஆதரவு - எதிர்ப்பு நிலையை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த தலைவர்கள் எல்லோரும் இப்போது என்ன சொல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள், எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதில் பல பார்வைகள் இருக்கமுடியாது.
1 month ago
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்...... நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் மேடை அதிரடி வசனங்களாலும்,திரைக்கதை வசனங்கள் புகழாலும்,நாடக நடிப்புகளாலும் முன்னுக்கு வந்தவர் கருணாநிதி.அன்றைய காலத்தில் திரை முன்னணிகள் சொல்வதெல்லாம் தெய்வவாக்கு(இன்றும் அதே நிலைதான்☹) தீபம் காட்டுவது,பால் ஊத்துவது இன்றும் உள்ளது. இதுதான் இன்றைய இந்திய, தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை. நிலைமை இப்படியிருக்க.... சினிமா கவர்ச்சி அரசியல் வலிமை மிக்கது என பழைய வரலாறுகள் சொல்லி நிற்கும் இவ் வேளையில் திமுக பயப்பிடுமா இல்லையா? சினிமா அரசியலில் எம்ஜிஆர் தப்பி பிழைக்க...... எஸ் எஸ் ராஜேந்திரன் தொடக்கம் சிவாஜிகணேசன் பாக்கியராஜ் ரி ராஜேந்தர் கமலகாசன் ராமராஜன் செந்தில் விஜகுமார் என பலர் அவஸ்தை பட்டது பலருக்கும் தெரியும்.
1 month ago
நீங்கள் போடும் அந்த 100 சமூக செயற்பாட்டாளர்களை விட நீதியானவர்களை கொண்ட பாஜக அமைத்த ஆய்வுக் குழு ஒன்று டெல்லியில் இருந்து உண்மை என்ன என்பதை கண்டறியும் தூய நோக்கத்தில் கரூர் வருகின்றது .அவர்கள் சொன்னால் இவர்கள் ஏற்று கொள்வார்கள்.
1 month ago
நன்றி தலைவரே🙏👍...............
1 month ago
அதான் கரூரில் ஒரு மூ.சந்தில் வைத்து வீரவாகுவை முங்கு முங்கு எண்டு மொங்கிவிட்டார்களே…இனி ஐயரிடம் டீல் போடுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வீரவாகு வந்திருக்க கூடும். வீரவாகு கொடுப்பதை கொடுக்க ஒத்து கொண்டால், ஐயர் பேக்கரியை கொடுப்பார். ஆனால் இது வெளியே கடுகளவு கசிந்தாலும் வீரவாகு மானம் அம்பேல்😂.
1 month ago
சினிமா வசனங்களை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இந்த அழிவும் வரும் இதுக்கு மேலான அழிவுகளும் வரும். சினிமாவை வைத்து அரசியல் செய்த எம்ஜிஆர் காலம் அந்தக்காலம்.அப்போது அது சரியாக இருந்தது. ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் சினிமா தகவல் சொல்லும் களமாக இருந்தது. அதே அரசியலை மூக்கை பிடித்தால் வாயை திறக்க தெரியாத இளம் சினிமாக்காரர்களுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? சினிமாவில் கதையும் சொந்தமில்லை.கதை வசனங்களும் சொந்தமில்லை. இசையும் சொந்தமில்லை.பாடல் வரிகளும் சொந்தமில்லை. பஞ்ச் வசனங்களும் சொந்தமில்லை.அணியும் உடைகளும் சொந்தமில்லை. பத்து வசனம் தொடர்ந்து பேச வக்கில்லை. ஆனால் நினைப்போ நேரடி முதல்வர் கதிரை.
1 month ago
இந்திய அரசியலை மாபியாவுடன் ஒப்பிட்டது மிகப்பொருத்தமானது. இது தனியே கூட்டம் கூடியது, தள்ளுமுள்ளு, சாவு என்பதாக எனக்கு படவில்லை. விஜையின் நிகழ்வுக்கு பின்னான நடத்தை அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தினாலும், நாமும் இந்த சதிக்கு பலியாகி அவர் மீது மட்டும் கோவத்தை காட்டி விட்டு அடங்கி விட கூடாது என நான் நினைக்கிறேன். விஜைக்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது, மாறாது என கூவினாலும், திமுக ரொம்பவே கிலி கொண்டது என்பதே உண்மை. சீமானை பெயரை கூட சொல்லாமல் சிவாஜி கிருஸ்ணமூர்தியை வைத்து லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணிய அதே திமுக அத்தனை அமைச்சர், முதல்வர், துணை முதல்வரையும் இறக்கி களமாடியது. தேர்தலுக்கு 7 மாதம் முன்பே. தமது சுயநலனுக்காக பல இலட்சம் ஈழதமிழர் கொலையை உண்ணாவிரத நாடகம் ஆடி கடந்து போன கட்சி, குடும்பம் இது, அதே சுயநலனுக்காக ஏன் இதை செய்திருக்க கூடாது.
1 month ago
https://x.com/sindhan/status/1973707471329116265?s=12https://x.com/sindhan/status/1973707471329116265?s=12 டெல்லியில் கொள்கை எதிரிகள்தான் இருக்கிறார்கள்.அவர்களைச்சந்தித்து ஒரு பேக்கரி டீல் போடப்போகிறார்களோ?
1 month ago
விஜய் இப்ப தான் கட்சி தொடக்கி இருக்கார். ஒரு தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை தேர்தலை எதிர்கொள்வதற்கான.... அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றார். ஆனால் இதுவரை அவரை ஒரு நடிகனாகவே மக்கள் அறிந்துள்ளார்கள் அரசியலில் எப்படிச் செயற்படுவார் என்பதை மக்கள் அவருடைய திரைப்படங்களை வைத்தே அளவிட்டுள்ளார்கள் இது உண்மையா? இல்லை அவர் சினிமா மூலம் மக்களை ஏமாற்றிருக்கின்றாரா? என்பது யாருக்கும் வெளிச்சம் இல்லை தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி. ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி. அது கொசுறு என்றால் கொசுறாகவே போயிடும். ஆனால் இவர்கள் விஜயை ஒரு பெரிய யானையாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள் எதற்காக ஒருவேளை எடப்பாடி யின் எதிர் வாக்குக்களை விஜய் பக்கம் திருப்பவா? தி மு க வை எடப்பாடியார் முந்தும் வேளையில் இந்த விளையாட்டால் விஜயால் எடப்பாடிக்கு ஆப்பா ? அதை உணர்ந்த எடப்பாடியார் விஜயை தன்னுடன் இழுக்க முயல்கின்றாரா ? அதற்கான மாமா வேலையை பா ஜ க பயமுறுத்தி செயல்படுத்த நினைக்கின்றதா ? இப்படிப் பல கேள்விகள் உள்ளது இந்தியா என்பது அரசியல் மாபியாக்கள் கூட்டணி எப்போதும் எதுவும் நடக்கலாம்
1 month ago
பையா என்றும் நீங்கள் நலமுடன் வாழ்வீர்கள் .......இந்தத் துன்பமெல்லாம் கடந்து போய்விடும் ........ மனதை பலமாக வைத்திருக்கவும் . ........!
1 month ago
நான் அந்த 100 பேர்களின் பெயர்களை இங்கே போட்டாலும், நீங்கள் அவர்களில் ஒருவர் விடாமல் ஏதோ சொல்லத்தான் போகின்றீர்கள். அதை உங்கள் தரப்பின் பார்வையாக எடுத்துக் கொள்கின்றோம். நீங்கள் திமுகவால் இறக்கி விடப்பட்ட 100 பேர்கள் என்று இவர்களைச் சொல்கின்றீர்கள். நான் அவர்களாகவே முன்வந்து தமிழ் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையில் இதைச் செய்கின்றார்கள் என்கின்றேன். நான் கூட அந்த அக்கறையினால் தான் விஜய்க்கும், அவரது நடவடிக்கைகளுக்கும் எதிராக என்னால் முடிந்த இடங்களில் என் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
1 month ago
கோழி கறிக் குழம்பு . ........! 😃
1 month ago
இரை ..... எது அல்லது எது .........! 😇
1 month ago
நன்றி வாந்தி அண்ணா🙏👍..............
Checked
Wed, 11/05/2025 - 20:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed