1 month ago
02 Oct, 2025 | 05:41 PM (செ.சுபதர்ஷனி) 2012 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரரின் மரணத்துடன் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தைக்காகவே நான் பேசுகிறேன். அரசியல்வாதிக்காகவோ எந்த ஒரு கட்சிக்காகவோ நான் பேச வரவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காண்பித்த சிசிரிவி காணொளியில் இருந்த நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார் என என பாதாள உலககுழுவை சேர்ந்தவர் என அறியப்படும் அருண ஷாந்த விதானகமகே எனும் “கஜ்ஜாவின் மகன் விதான கமகே இந்துவர அமேஷ மாதேவ தெரிவித்தார். மொஹம்மட் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குடன் மித்தெனியவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவுக்கு தொடர்பிருந்தமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (1) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், குறித்த ரக்பி வீரர் உயிரிழந்த போது அதாவது 2012 ஆம் ஆண்டு எனது தந்தை ஹொரணை- கொழும்பு 120 பஸ் வீதியில் பேருந்து உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது எனக்கு மூன்று வயது மாத்திரமே எனினும் எனது உறவினர்கள் எனது தந்தையின் சகோதரர்கள் நண்பர்கள் ஆகியோர் அவர் பேருந்து உதவியாளராக பணியாற்றி இருந்தது எனக்கு தெரிவித்திருந்தனர். அது எனக்கும் நன்றாக தெரிந்த விடயமே. அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிசிடிவி காணொளி ஒன்றை காண்பித்து அதில் இருக்கும் நபர் உங்களது தந்தையா? என கேட்டனர். அதற்கு காணொளியில் இருக்கும் நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார். தந்தைக்கு முதுகு வலி இருப்பதாக எனது அம்மா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். எனது தந்தைக்கு முதுகு வலி இருந்தது உண்மைதான் எனினும் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட தாக்கத்தினால் பின்னர் முதுகு வலி ஏற்பட்டது. சூது, கப்பம் கொருதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் தந்தை ஈடுபட்டுள்ளார். அவ்வாறு பெரும் பணத்தையும் ஏழை குடும்பங்களுக்கு செலவழித்துள்ளார். எவ்வாறாயினும் எனது தந்தை செய்தது தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தந்தை உயிரிழந்த போது அம்மா டுபாயில் இருந்தார். அம்மாவுக்கும், தந்தை பணியாற்றி வந்த பேருந்து சாரதிக்கும் இடையில் தகாத உறவு இருந்தது. அது எனக்கும் தெரியும் பின் தந்தைக்கும் தெரியவர பிரச்சனையாக மாறியது. ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட்ட இருவரையும் தந்தை தாக்கினார். சம்பத் ராமநாயக்க எனும் குறித்த பேருந்து சாரதியை இனிமேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம். இருந்தால் கொலை செய்வதாக எச்சரித்தார். துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எனது தந்தை கைது செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நானே அவரை பிணையில் வெளியே எடுத்தேன். எனினும் பொலிஸார் கூறியது போல எனது தந்தையிடமிருந்து துப்பாக்கி அல்ல 4 “வாக்கிடாக்கிகள்” மாத்திரமே கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் தந்தையின் காணி ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு அம்மா வெளிநாட்டுக்குச் சென்றார். விளக்கமறியலில் இருந்து வெளியே வந்த தந்தை பின்னர் அம்மாவை தேடினார். அதன் பின்னரே அவர் தனது இரண்டாவது கணவருடன் டுபாயில் இருப்பது தெரியவந்தது. தந்தையின் முன்விரோதியான ஜே.சி.பி . சமன் (பெக்கோ சமான்) என்பவரும் அதன் பின்னர் தந்தையுடன் பேச ஆரம்பித்தார். ஏதேனும் உள்நோக்கத்திற்காக பேச ஆரம்பித்தாரா என்பது எனக்கு தெரியாது. சம்பத் ராமநாயக்க சாரதியாக இந்த பஸ்ஸின் உரிமையாளரே ஜே.சி.பி சமன் . தந்தை உயிரிழந்தமை தொடர்பில் அம்மாவுக்கு தெரியப்படுத்தினோம் எனினும் தங்கை மற்றும் தம்பி ஆகியோர் உயிரிழந்த விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை. அன்றைய தினமே அம்மா வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தார். தந்தை இறந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் ஜே.சி.பி . சமன் எனும் குறித்த நபர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தை அம்மாவின் வங்கி கணக்கில் வைப்பிட்டார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டு அவ்விடயத்தை தெரிவித்திருந்தார். அம்மாவிடம் இதை கேட்ட போது அவரை இல்லை என அதற்கு மறுப்பு தெரிவித்தார். பின்னரே அதை ஏற்றுக்கொண்டார். எவராயினும் எனது தந்தையின் மரணத்துடன் எனது தாய்க்கும் ஜே.சி.பி சமன் என குறிப்பிடப்படும் நபருக்கும் தொடர்புள்ளது. பல வருடங்களாக தந்தையுடன் முரண்பட்டு கொண்டிருந்த நபர் திடீரென அவருடன் பழக ஆரம்பித்தது எப்படி? என தாயிடம் கேட்டபோது அவர் தனக்கு அதைப் பற்றி தெரியாது . எனது முதல் கனவனையும் பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை என்றார். தந்தை இறந்து தற்போது 7 மாதங்கள் கடந்து விட்டன. தாய் மற்றும் தந்தையின் குடும்பத்தினரே எனக்கான செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள். தாய் என்னை பராமரிப்பதோ என்னுடன் பேசுவதோ இல்லை. குற்றப்புலனாய்வு பிரிவில் காணொளியை காண்பித்து விசாரணை நடத்திய போது நானும் அங்கிருந்தேன். இருவரிடமும் வெவ்வேறாக விசாரணை செய்தனர். ஆரம்பத்தில் அது தந்தை அல்ல என மறுத்த அவர் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதன் பின்னர் அது தந்தை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உள்ள என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. தந்தையின் மரணத்தின் போது வீட்டிற்கு வந்திருந்த அம்மா எனக்கு தேவையானவரை அல்ல விட்டு வைத்துள்ளீர்கள் இவனை எப்படி நான் பார்த்துக்கொள்வது என தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதை அங்கிருந்த எனது உறவினர்களும் நன்கு அறிவார்கள். எனது தாய்க்கு என்னையும் எனது தந்தையையும் கொலை செய்ய வேண்டும் என்றே திட்டமிருந்தது. அவரின் உறவுக்கு நாங்கள் இருவருமே தடையாக இருந்தோம் ஆகையால் எம்மை இல்லாமல் ஆக்கவே எண்ணினார். தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம். தந்தையின் மரணத்துக்கு காரணமான எனது அம்மாவையும் சமன் ரத்நாயக்க எனும் நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மனித படுகொலை போன்ற பாரிய குற்றச்செயலில் எனது தந்தை ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார். காணொளியில் இருந்த நபர் எனது தந்தை அல்ல ; அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவின் மகன் | Virakesari.lk
1 month ago
வங்காளதேசத்திலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்று எனக்கு முன்னரே ஒருவரும் சொல்லவில்லை..................... ஏதோ எட்டாவது அணியாக உள்ளே பிடித்துப் போட்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துவிட்டேன்....................😜. 'இன்று கறுப்பு பிட்சில் வெள்ளைப் பந்து போட்டார்கள்................' என்று கலர் கலராக காமெண்ட்ரி சொல்லும் வசீயின் காமெண்ட்ரி மிஸ்ஸிங்..............❤️.
1 month ago
வி.ஜி.பி. கோவிந்தசாமி: கோல்டன் ஏரி மின்சாரம் என்ற பெயரில் பிலிம் ஸ்டுடியோவை உருவாக்கியவர், மற்றும் கோடீஸ்வரர் ஆனார். ராஜாதி ராஜா: கோடீஸ்வரர் ஆனார். சினிமா தொழில் நுட்பத்தில் கோடீஸ்வரர்கள்: ஆர்.ஆர். ரம்யா: பிரபல சினிமா இசையமைப்பாளர், தற்போதைய கோடீஸ்வரர். கலாநிதி மாறன் (Kalanithi Maran): சன் குழுமத்தின் தலைவர், வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், மேலும் கோடீஸ்வரர் ஆனார். சினிமாத் துறை, பணம் சம்பாதிக்க மற்றும் கோடீஸ்வரர் ஆக பல வாய்ப்புகளைத் தருகிறது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோர் அடங்குவர்.
1 month ago
ஏராளன் அண்ணான்ட ஆத்தில இண்டைக்கு அடை மழை😍 வாழ்த்துக்கள் அண்ணா👍...............நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றிக்கு அருகில் வந்து விட்டினம்....................... என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கள பெரியப்பு நான் மேல விபரமாய் தான் எழுதினான் இரண்டு அணிகளும் சம பலம் உள்ள அணிகள் என😁👍................ பாக்கிஸ்தான் மகளிர் முதலாவது ஓவரில் இரண்டு விக்கேட்டை இழந்து விட்டினம் அதனால் ஓட்டம் 200 தான்ட வில்லை......................
1 month ago
நான் என்றால் அது அவளும் நானும் படம் . சூரியகாந்தி
1 month ago
கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 26 ஆண்டுகளாக கொழும்பு புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தினால் நடத்தப்படும் இக் கண்காட்சியில் சிங்கள மொழி நூல்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ் மொழி படைப்பாளர்கள், தமிழ் பதிப்பாளர்கள், தமிழ் நுகர்வோர் பல்லாண்டுகளாக பெரும் பாரபட்சங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இவ்வாறான புத்தக கண்காட்சிகளில் தமிழ் பேசும், சிங்களம் பேசும் கலைஞர்களுக்கிடையிலான பிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. துரதிர்ஷ்டவசமாக தமிழ் படைப்பாளர்கள் போதியளவு புத்தகக் கடைகள் இல்லாததால் கலந்துகொள்வதில்லை. கடந்த 26 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிக்கல் இனிமேலும் தொடராமல் இருப்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். இத்தனைகால இந்த நிகழ்வு இலங்கையின் பண்பாட்டு ஒன்றுகூடலாகவும், பண்பாட்டுப் பரிவர்த்தனைக்குமான களமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கள மொழியில் வருடாந்தம் சுமார் 8000 நூல்கள் வெளியாகின்றன. தமிழில் 500க்கும் குறைவான நூல்களே வெளியாகி வருகின்றன. இலங்கைத் தீவில் தமிழ் நூல்களுக்கான சந்தை மிகச் சிறியது. அதுமட்டுமன்றி இங்கு வெளியாகும் நூல்கள் பல 300 பிரதிகள் மாத்திரமே பதிக்கப்படும் நிலையே தொடர்கிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கம் (SLBPA)ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளை நெருங்கப் போகிறது. ஆனால் இதுவரை தமிழ் பதிப்பாளர்களை இணைத்துக்கொள்ள போதிய அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. இன்று 160 பதிப்பாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் இச்சங்கத்தில் ஓரிரு தமிழ் பதிப்பாளர்களே உள்ளனர். அதன் தலைமை இயக்குனர் சபையில் இருக்கும் எழுவரிலோ மேலதிக இயக்குனர்களாக இருக்கிற பதினோரு பேரிலோ அல்லது ஆறு பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவிலோ ஒருவர் கூட தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. இச்சங்கத்தின் இணையத்தளமும் அதன் பதிப்புகளும் கூட ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மட்டுமே உள்ளன. ஏற்பாட்டாளர்களில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவர்களின் குரல்கள் அங்கே ஒலித்திருக்கும். குறைகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கக் கூடும். எனவே தமிழ் பதிப்புப் பரப்பில் ஏற்படுகிற பிரச்சினைகளை வெளியில் கொணர ஒரு அமைப்பாக இந்த சங்கத்தின் மூலம் ஒன்றும் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. குறைந்தபட்சம் SLBPA தாம் நடத்தும் சர்வதேச புத்தகக் கண்காட்சியையாவது பாரபட்சமின்றி நடத்தினால் நலிவடைந்திருக்கிற தமிழ் பதிப்பாளர்களுக்கு சிறிய ஆறுதலாவது கிடைக்கும். இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். •தமிழ் பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்வாங்கப் படவேண்டும்! * புத்தக் கண்காட்சியில் உரிய கடைகளை பெறுவதிலிருந்து, உரிய இடங்களை ஒதுக்குவது, வெளியீட்டு, பேச்சு போன்றவற்றுக்கான மேடைகளைப் பெறுவது, தமிழ் அறிவிப்புகள், விளம்பரங்கள், வசதிகள் என எல்லாவற்றிலும் இருக்கும் பாரபட்சம் அகற்றப்படவேண்டும். இப்போது ஒரு வீத தமிழ் கடைகள் கூட கண்காட்சியில் கிடையாது. * தமிழ் வாசகர்களும் பயனடையக் கூடிய வகையில் தமிழிலும் வழிகாட்டல், விளம்பர பதாகைகள் அமையவேண்டும். * மிகப் பெரிய பதிப்பாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்கிற அனுமதி மாற்றப்படவேண்டும். பதிலாக சிறு கடைக்காரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களுக்கான குறைந்த கட்டண அறவிடும் முறை கொணரப்படவேண்டும். சிங்கள பதிப்பகங்களுக்கு நிகரான வளர்ச்சியடைந்த பதிப்பாளர்களும்,விநியோகஸ்தர்களும் தமிழ்ச் சூழலில் இல்லை என்பதை கருத்திற் கொள்ளவேண்டும். * தமிழ் பேசும் மக்கள் தமது தேவையை அங்கு பெறக்கூடிய வகையில் அங்கே உதவக்கூடிய தமிழ் ஊழியர்களும் அங்கே போதிய அளவு பணிக்கமர்த்தப்படல் வேண்டும். * இலங்கைப் பதிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரை உடைய ஒரு சங்கம் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிச் சமூகங்களுக்கும் சமத்துவமான முறையில் இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதை ஒரு சிங்கள சங்கமாக வெளியில் உணரப்படும் நிலையை இச்சங்கத்தால் மாற்ற முடியும் என்று நம்புகிறோம். * இன்றும் தமிழ் பதிப்பாளர்கள் இலங்கையில் எதிர்நோக்கி வருகிற விசேடமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கான ஒரு அமைப்பும் இலங்கையில் கிடையாது. இனியாவது இவை மாற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை - இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு | Virakesari.lk
1 month ago
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம் 02 Oct, 2025 | 05:26 PM சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மேலும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. கோரப்பட்ட நிதி இன்னும் நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (01) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "அகழ்வாய்வு பணிக்கான பாதீடு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கோரப்பட்டது. எனினும், பாதீடு இன்னும் அங்கீகரிக்கப்படாமையால் வழக்கு ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது." எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட நிதி மதிப்பீடு, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் செப்டெம்பர் 18, 2025 அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மதிப்பீட்டில் கோரப்பட்ட நிதியின் அளவு இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. தற்போதைய அகழ்வாய்வுப் பகுதிக்கு வெளியே மனித எலும்புகள் இன்னும் இருக்கலாம் என்பதற்கான புவியியல் ஆய்வின் மூலம் சான்றுகள் தெரியவந்துள்ளதால், அகழ்வாய்வுப் பணியைத் தொடர எட்டு வார கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளதாக, ஒகஸ்ட் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவானிடம் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதி உதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது. "நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்" என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும். பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைதந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம் | Virakesari.lk
1 month ago
https://x.com/news18tamilnadu/status/1973688182236475601?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A
1 month ago
PAK-W 129 BAN-W (3/50 ov, T:130) 7/0 BAN Women need 123 runs from 47 overs.
1 month ago
சென்ற வாரம், கனடாவிலும் (டொரொன்டொ), சில கடைகளில் ஒரு தேசிக்காய் $1.00 இற்கு போனது.
1 month ago
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31593648180283751/?
1 month ago
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31593648180283751/?
1 month ago
NPP அரசாங்கம் மஹிந்தவின் பினாமிகளையும், அடியாக்களையும் ஒவ்வென்றாக தூக்கிக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் பலிக்கடாவாக்கப்பட்டு மஹிந்த காப்பாற்றப்படுவாரா அல்லது அரச சாட்சியாக மாறி மஹிந்தவும் அவருடைய குடும்பமும் உள்ளே போவார்களா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நெவில் வன்னியாராச்சியே மஹிந்தவின் முக்கிய பினாமியாகும். அவருடைய பெயரில் 12 பேரூந்துகள், 8 ரிப்பர்கள் (tipper vehicle), 3 பெட்ரோல் நிலையங்கள், 32 வங்கிகளில் 41 வாங்கிக்கணக்குகள் என பெருவாரியான சொத்துக்கள் உள்ளன.
1 month ago
அது. நேற்று. இது இன்று. நான். எழுதியது. இன்றைய. நிலமையை. ்்்்்்மேலும். இந்த கேள்விக்கான. பதில். மற்றும். அரசியல்வாதிகளை. நேரடியாக. நேர்மையாக. விவாதியுங்கள். உத்தம்மான. ஒழுக்கமான. ஒரு தலைவனின். போராட்டத்தை. பிரபாகரன். நடத்திய. விடுதலைப் போராட்டத்தை. ஒழுக்கம். கெட்ட. விரும்பி வந்தாய். பல ஆண்டுகளாய் படுத்துக். கொண்டேன். என்று. சொல்லும். சீமான். தொடர முடியுமா. ? அவள். போடும். வழக்குகளை. விசாரிக்க விடமால்். தடைகளை. ஏன். நீதிமன்றத்தில். கோர வேண்டும். ? அதை. சீமானின். பலியல். வல்லுறவு. சரி. என்பவர்கள். கூறக்கூடாது.
1 month ago
இவர்கள் சொல்வதை மற்றைய நாடுகள் அங்கீகரித்து செயற்படுத்த வேண்டும். ஆனால் சர்வதேசத்துக்கு தாம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்ற மாட்டார்கள், அதற்கு சம்பந்தமில்லாத ஆயிரம் காரணங்களை, அறிக்கைகளை வெளியிடுவர். இலங்கைக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் சொல்ல வேண்டியது; உங்கள் சட்டங்களை உங்கள் நாட்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள், எங்கள் இறையாண்மையில் தலையிடுவதையோ, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எங்களுக்கு கட்டளையிடுவதையோ நிறுத்திக்கொள்ளுங்கள் என அறிவிக்க வேண்டும்.
1 month ago
இது 146 பகுதிகளாக பதிவிட உள்ளேன். எல்லாம் எழுதி முடித்துவிட்டேன். ஆகவே பிரச்சனை இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, இப்பொழுது தோள் மூட்டு வலியில், குறிப்பாக வலது தோளில், நான் சிக்கியிருக்கிறேன். தற்போது மிகக் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இனிமேல் நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளைத் தவிர, புதிய பதிவுகளை எழுதுவதை மிகக் குறைக்கவோ, சில காலம் முற்றிலும் நிறுத்தவோ உள்ளேன். அடிப்படை தேவைக்கு அப்பாற்பட்டு, வலது கையால் வேகப்பந்து வீசுவது, பாரங்கள் தூக்குவது, அல்லது கையால் கூடுதல் வேலை செய்வதை தவிர்க்கிறேன். மருத்துவ சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, மருத்துவர் அறிவுரையின் படி என் வருங்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பேன். மிக்க நன்றி என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் மற்றும் கருத்து தெரிவிப்பவர்களுக்கும்
1 month ago
பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும். இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கொந்தளிப்பு தொடர்ந்தது, தத்யாலில் போராட்டக்காரர்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஆயிரக்கணக்கான மேலதிக வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர். முசாபராபாத்தில் ஐந்து போராட்டக்காரர்களும், தீர்கோட்டில் ஐந்து பேரும், தத்யாலில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் குறைந்தது மூன்று பொலிஸ் அதிகாரிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைதியின்மை ஒரு பகுதியில் மட்டும் நிற்கவில்லை. முசாபராபாத்துடன், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி ஆகிய இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் மற்றும் மோதல்கள் பதிவாகியுள்ளன, இது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது. ஊடக அறிக்கைகளின்படி, 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமாபாத் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக குற்றம் சாட்டி, கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (JAAC) இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பிராந்தியம் முழுவதும் சந்தைகள், கடைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1449364
1 month ago
02 Oct, 2025 | 01:05 PM பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர். வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 321 குழந்தைகள், 450 ஆண்கள் மற்றும் 292 பெண்கள் அடங்குவர். பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 661 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், சேதத்தின் அளவை மதிப்பிடவும் அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்த வெள்ளப் பாதிப்பின் தொடர்ச்சியாக, நாட்டில் பணவீக்கம் தற்காலிக அடிப்படையில் அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த இயற்கை சீற்றம் பாகிஸ்தானில் பெரும் அழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/226671
1 month ago
Published By: Digital Desk 1 02 Oct, 2025 | 02:29 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இலஞ்சம் மற்று் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தபட்டு வருகின்றார். அதனையடுத்து நெவில் வன்னியாராச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226676
1 month ago
02 Oct, 2025 | 02:28 PM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 1,700 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி. எஸ்.சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/226681
Checked
Wed, 11/05/2025 - 20:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed