5 days 23 hours ago
சரஸ்வதி பூசைக்குப் போன இடத்தில் எடுத்து வந்திருக்கிறீர்கள் போலே? பாடலுக்கு நடனமாடியவர் பெயர் கனகா. இந்தக் கனகா தேவிகாவின் மகள் கனகாவுக்கு முந்தையவர். சரஸ்வதியை வைத்து இடம் பெற்ற இந்தப் பாடலைப் போலவே பஞ்சவர்ணக்கிளி படத்தில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்றொரு பாடல் இருக்கிறது. அதில் கே.ஆர். விஜயா பாட, எல். விஜயலக்சுமி நடனம் ஆடியிருப்பார். பஞ்சவர்ணக்கிளி, கௌரிகல்யாணம் இரண்டையுமே இயக்கியவர் எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சங்கர்.
6 days ago
வாசித்தவுடன் சத்தமாக சிரித்துவிட்டேன். முதல்வரியே சிரிக்க வைத்தது. இரண்டாவது வரி அதற்கு மேல். நல்ல நகைச்சுவயை கேட்டு நாளாயிற்று என்ற கவலை இன்று வாசித்ததில் தீர்ந்து விட்டது.
6 days ago
ஓம் கந்தப்பு அண்ணா............எனது தெரிவு தென் ஆபிரிக்கா தென் ஆபிரிக்கா மகளிர் இங்லாந் கூட விளையாடின போது தென் ஆபிரிக்கா மகளிரால் 69ரன்ஸ் தான் அடிக்க முடிந்தது நான் நினைத்தேன் இன்றும் தென் ஆபிரிக்கா தோக்க கூடும் என ஆனால் வென்று விட்டினம் மகிழ்ச்சி அண்ணா..........................
6 days 1 hour ago
முதல் "மரக் கட்டுரை" வந்திருக்கிறது🤤! கருத்துகளுக்கு "பச்சை சிவப்பு" நிறம் தீட்டுவதில் வீணாக்கும் நேரத்தை இருமல் மருத்துக்கும் சத்து டானிக்கிற்கும் இடையேயான வேறுபாட்டைப் பற்றி வாசிக்கச் செலவழிக்க மாட்டீர்களா? "டாஸ்மாக்" போன்ற அரச கடைகளில் "சத்து ரொனிக்" விற்கா விட்டால் உங்கள் போன்ற "வெள்ளிக் கிழமை விசேஷம்" செய்கிற நுகர்வோர், நுகராமல் விட்டு விடுவீர்கள் என்கிறீர்களா😂?
6 days 1 hour ago
டாஸ்மாக்கும்…. சத்து டானிக்தான். 😂 ஆனால் என்ன அதை குடிக்கிறவன் சத்தம் இல்லாமல் மேல்லோகம் போகிறான். 😜 அதற்குள் விசச் சாராயம் குடித்து இறந்தவனுக்கு… 10 லட்சம் ரூபாய், பம்பர் பரிசு. 😂 இது தெரியாமல்… இங்கை நின்று குப்பை கொட்ட வேண்டி இருக்கு. 🤣
6 days 1 hour ago
11 - 15 வாக இணைந்த 5 போட்டியாளர்கள் ( அகஸ்தியன் முதல் நீங்கள் வரை) தென்னாப்பிரிக்கா அணி வெல்லும் என எழுதியிருக்கிறார்கள்.
6 days 1 hour ago
தமிழ்நாடு மத்திய பிரதேச மாநிலத்தோடு ஓப்பிடும் போது தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், நிதி, சமவாய்ப்புகள் கொண்ட பொருளாதாரம் என்பவற்றில் முன்னணியில் நிற்கும் மாநிலம். இதற்கு யார் காரணம்? எந்தக் கொள்கை காரணம்? என்று இரு கேள்விகளைக் கேட்டால் "மரத்தைப் பற்றி விளாவாரியாகப் பேசி, மாட்டைப் பற்றி எதுவும் எழுதாமல் பம்மும்" எங்கள் "திராவிட லவ்வர்ஸ்" என்ன சொல்வார்கள் என யோசிக்கிறேன்😎!
6 days 1 hour ago
வெள்ளை கமலத்திலே ......... பாடியவர் .....சூலமங்கலம் ராஜலட்சுமி, பாடல் நடிப்பு ஷீலா .........நாட்டியம் ? பெயர் மறந்து விட்டது .......! 😍
6 days 1 hour ago
வினா 8) 6 விக்கேற்றினால் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 5 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 17 புள்ளிகள் 2) ஏராளன் - 15புள்ளிகள் 3) கிருபன் - 15புள்ளிகள் 4) ரசோதரன் - 15 புள்ளிகள் 5) வீரப்பையன் - 15 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 13 புள்ளிகள் 7) வாதவூரான் - 13 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 13 புள்ளிகள் 9) சுவி - 12 புள்ளிகள் 10)புலவர் - 11 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 11 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 11 புள்ளிகள் 13)வாத்தியார் - 9 புள்ளிகள் 14)வசி - 9 புள்ளிகள் 15)கறுப்பி - 9 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 8, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
6 days 1 hour ago
சாலையில் சென்ற வாகனங்களை துரத்திய யானைகள்
6 days 1 hour ago
வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும் மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன் எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன் பெண் : உன்னால ஊருங்க இப்போ எல்லெண்ணமே மாறுதே பார் சொல்லாம வானமும் பெய்யுதே வெள்ளெலாமா கூடுது பார் பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும் தூங்காத தூக்கத்த நீ தூங்கணும் ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும் நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும் குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே .........! --- கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே ---
6 days 1 hour ago
கர்ப்பிணிக் கரடியை காப்பாற்றிய வனத்துறை தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவிய கண்டுபிடிப்பு - கார்பன் டேட்டிங் இராவணனிடம் அடிவாங்கும் குஜராத் மக்கள்
6 days 1 hour ago
6 days 1 hour ago
உண்மை விசித்திரமானது .........! 😂
6 days 1 hour ago
'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?' - ம.பி.யை உலுக்கும் இருமல் மருந்து சர்ச்சை படக்குறிப்பு, கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகள் இறந்துள்ளனர், இறந்த அட்னன் எனும் குழந்தையின் பெற்றோர் கட்டுரை தகவல் விஷ்னுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர், போபால் 6 அக்டோபர் 2025, 07:59 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகளும் ராஜஸ்தானில் மூன்று குழந்தைகளும் இறந்தநிலையில், குழந்தைகளின் நலன் குறித்து இரு மாநிலங்களிலும் கேள்விகள் எழுந்துள்ளன. இருமல் மருந்தை குடித்த பிறகே குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றும் இக்குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) எனும் இருமல் மருந்தை மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறை சனிக்கிழமை தடை செய்தது. சனிக்கிழமை இரவு, அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இந்த இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. பாரசியா (Parasia) பகுதி மருத்துவ அதிகாரி அங்கில் சஹ்லம் அளித்த புகார் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின்படி, இறந்த 11 குழந்தைகளில் 10 குழந்தைகள் பாரசியா பகுதியை சேர்ந்தவர்களாவர், இங்குதான் மருத்துவர் பிரவீன் சோனி அரசு குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த இறப்புகளை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு இதுகுறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது, அதில் இந்த மருந்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை மேற்கொண்ட நடவடிக்கையில் ஸ்ரீசன் மருந்து நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் "கலப்படம்" செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கோல்ட்ரிஃப் மருந்தின் SR-13 எனும் தொகுதியில் (batch) 'கலப்படம்' இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்த மருந்தில் 48.6% டைஎத்திலீன் கிளைக்கால் (diethylene glyco) உள்ளது, இது உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல நச்சு ரசாயனமாகும். மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தன் எக்ஸ் பக்கத்தில், "சிந்த்வாரா பகுதியில் கோல்ட்ரிஃப் மருந்தால் குழந்தைகள் இறந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மத்திய பிரதேசம் முழுவதும் இந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மற்ற மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன" என பதிவிட்டுள்ளார். சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் பவன் நந்தர்கர். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெரும்பாலான குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர். சிறுநீரக பயாப்ஸி (சிறுநீரகத்திலிருந்து சிறு திசுவை எடுத்து பரிசோதிப்பது) செய்து பரிசோதித்தபோது, ஒருவித நச்சு ரசாயனத்தால், சிறுநீரகம் பாதிப்படைந்து, செயலிழந்ததால் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்கப்பட்டுள்ளதும் அவர்களின் முந்தைய மருத்துவப் பதிவுகளிலிருந்து தெரியவந்தது." என்றார். சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த யாசின் கானின் நான்கு வயது மகன் உசைத் இப்போது இந்த உலகத்தில் இல்லை. தொலைபேசி வாயிலாக அவர் பிபிசியிடம் பேசுகையில், "என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஆக. 25 அன்று என் மகனுக்கு முதலில் லேசான இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. செப். 13 அன்று என் மகன் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தான். எனக்கு எல்லாமுமாக இருந்த என் மகன் போய்விட்டான்." என்றார். மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 2 வரை 11 குழந்தைகள் உயிரிழந்தன. குறைந்தது 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுள் சிலரின் உடல்நிலை மோசமாக உள்ளது. படக்குறிப்பு, மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா ராஜஸ்தானிலும் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்திற்கு அருகில் உள்ள ராஜஸ்தானின் பாரத்பூர் மற்றும் ஜுஞ்சுனூ மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனையில் இருமல் மருந்து குடித்ததால் இரு குழந்தைகள் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. சனிக்கிழமை சுரு மாவட்டத்திலும் மற்றொரு குழந்தை ஒன்று இறந்துள்ளது. இருமல் மருந்து குடித்ததாலேயே தங்கள் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர். சுரு மாவட்டத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன், ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் உயிரிழந்தார். அச்சிறுவனுக்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இருமல் மருந்து கொடுத்ததாகவும், அதையடுத்து உடல்நிலை மோசமானதால் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதேபோன்று, பாரத்பூரை சேர்ந்த இரண்டு வயது குழந்தையும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மூன்று தினங்கள் கழித்து உயிரிழந்தது. ஜுஞ்சுனூ மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது குழந்தை, சிகாரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமார் மௌரியா பிபிசி இந்தியிடம் கூறுகையில், "மத்திய மருந்து பரிசோதனை முகமையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 12 மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம், அதேபோன்று, மத்திய மருந்து பரிசோதனை முகமையும் ஆறு மாதிரிகளை பரிசோதித்துள்ளது. எங்களின் மூன்று மாதிரிகளிலும் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் ஆறு மாதிரிகளிலும் இதுவரை டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை கண்டறியப்படவில்லை. மீதமுள்ள மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்." என்றார். குழந்தைகள் இறப்பை தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பிரதேச சுகாதார துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா வெள்ளிக்கிழமை மதியம் கூறுகையில், "இதுவரை 12 மாதிரிகள் மாநில மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதில், மூன்று பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன, அதன்படி எவ்வித ரசாயனமும் கண்டறியப்படவில்லை." என்றார். இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்வ்சர், " நாங்கள் மருந்தை பரிசோதித்தோம், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எதுவும் அதில் கண்டறியப்படவில்லை. இந்த மருந்தால் எந்த இறப்பும் நிகழவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம்" என்றார். இதனிடையே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகளின் இறப்புகளை தொடர்ந்து மத்திய சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) "ஆலோசனைப்படியே" இருமல் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. படக்குறிப்பு, குழந்தை விகாஸின் தந்தை பிரபுதயாள் யாதவ் தன் குழந்தையின் இறப்புக்கு நீதி கோருகிறார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? சிந்த்வாரா மாவட்ட நிர்வாகத்தின்படி, இதுதொடர்பான முதல் பாதிப்பு ஆகஸ்ட் 24 அன்று பதிவாகியுள்ளது, செப்டம்பர் 7 அன்று முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. யாசின் கூறுகையில், தன்னுடைய நான்கு வயது மகன் உசைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார். அவர் கூறுகையில் "ஆகஸ்ட் 25ஆம் தேதி என் மகனின் உடல்நிலை மோசமானதால், அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆக.31 வரை அவனுடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்தது, ஆனால் பின்னர் அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது நின்றுவிட்டது. இது இரு நாட்கள் தொடர்ந்தது, இதையடுத்து அவனை சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிந்த்வாராவிலிருந்து நாக்பூருக்கு சென்றோம், அங்கு 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் என் மகன் இறந்துவிட்டான்." என்றார். ஆட்டோ ஓட்டுநரான யாசினுக்கு இரு மகன்கள். மூத்த மகன் உசைத்தின் சிகிச்சைக்காக 4 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். இச்சமயத்தில், அவர் தன் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோவை விற்க நேர்ந்துள்ளது. யாசின் கூறுகையில், "பணத்தினால் என்ன நடக்கும்? என் குழந்தை பிழைத்திருந்தால் எல்லாம் நன்றாக நடந்திருக்கும். மீண்டும் என் ஆட்டோவை வாங்கியிருப்பேன். இப்போது என் வலியை இன்னொரு தந்தை அனுபவிக்கக் கூடாது என நினைக்கிறேன்." என்றார். படக்குறிப்பு, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் 'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?' மத்திய பிரதேசத்தில் இறந்த 11 குழந்தைகளும் சிந்த்வாராவின் பராசியா பகுதியை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் 2.8 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும், அவர்களுள் சுமார் 25,000 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் பாரசியா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் (Sub Divisional Magistrate) தெரிவித்தார். அவர் கூறுகையில், "பலவித சாத்தியமான காரணங்கள் குறித்து விசாரித்துள்ளோம். அப்பகுதியிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளோம், கொசுக்கள் மற்றும் எலிகளிலிருந்து நோய் பரவியதா என்பதையும் பரிசோதித்தோம். அவற்றில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன" என்றார். அவர் மேலும் கூறுகையில், "சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் இறந்த குழந்தைகளின் முந்தைய மருத்துவப் பதிவுகள் ஆராயப்பட்டன, இதில்தான் அந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது" என்றார். அவர் கூறுகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து மருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துள்ளதாகவும் கூறினார். அதன் அடிப்படையில், குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழந்தது எப்படி என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் காரணத்தைக் கண்டறியும் என்றார் அவர். பரிசோதனை முடியவில்லை என்று மத்திய பிரதேச அரசு 10 தினங்களாக கூறிவந்த நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தில், விதிமுறைகளை மீறி நச்சு ரசாயனமான டைஎத்திலீன் கிளைக்கால் இருப்பதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு நாளைக்குள்ளேயே உறுதிப்படுத்தியுள்ளது. சிந்த்வாராவை சேர்ந்த மற்றொரு குழந்தையின் உறவினர் கூறுகையில், "விஷத்தன்மை வாய்ந்த, ஆபத்தான மருந்து எப்படி சந்தையில் விற்கப்படுகிறது? இதை மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? ஒரு நாளைக்குள் தமிழ்நாடு அரசு இதைக் கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளை கொல்லும் மருந்துகளை விற்பனை செய்வது யார் என்பது மத்திய பிரதேச அரசு விசாரிக்கவில்லையா?" என்றார். படக்குறிப்பு, சிந்த்வாரா அரசு மருத்துவமனை முந்தைய எச்சரிக்கைகள் புறக்கணிப்பா? கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் சுகாதார சேவைகள் பொது இயக்குநர், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரபலமான இருமல் மருந்தை தயாரிப்பதற்கு தடை செய்தது. இந்த மருந்தின் தயாரிப்பில் உள்ள குளோர்ஃபெனிரமைன் மாலேட் (chlorpheniramine maleate) மற்றும் ஃபெனைல்ஃபெரின் (phenylephrine) ஆகியவற்றுக்கு 2015-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இருமல் மற்றும் சளி மருந்துகளில் முக்கியமான மூலப்பொருட்களாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 2022-ஆம் ஆண்டில் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், இந்த மருந்துகளை தயாரிப்பவர்கள் தாங்கள் தவறிழைக்கவில்லை என மறுத்துள்ளனர், பரிந்துரைக்கப்பட்ட அளவில் வழங்கும் போது தங்களின் மருந்துகள் பாதுகாப்பானவை என்று கூறுகின்றனர். சிந்த்வாராவை சேர்ந்த சுகாதார துறை அதிகாரி, பெயர் தெரிவிக்க விரும்பாமல் பிபிசியிடம் கூறுகையில், "இறந்த குழந்தைகளுள் 6-7 பேர் 4 வயதுக்குட்பட்டவர்கள்." என்றார். இது முதல் முறையல்ல... மத்திய பிரதேசத்தில் மருந்துகளின் தரம் குறித்து முன்பு கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊசிகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், மாநிலம் முழுவதும் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய பிரதேச பொது சுகாதார சேவைகள் கழகம், இந்த மருந்துகளை தரமற்றவை என வகைப்படுத்தியுள்ளது, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. பொது சுகாதார நிபுணர் அமுல்யா நிதி இதுகுறித்து கூறுகையில், "மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே, சிந்த்வாராவில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, அந்த மருந்தின் தரம் குறித்து அல்ல, அதில் என்ன கலக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். விசாரித்து வருவதாக அரசு கூறுகிறது. விசாரணை இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?" என்றார். மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பேசிய அவர், "குழந்தைகளின் நலனில் அரசு தீவிரமாக இருப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாமதம் செய்யப்படுகின்றது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது ஆகியவை மோசமான விகிதத்தில் உள்ளன. இந்தூரில் குழந்தைகளை எலி கடித்ததும் பதிவாகியுள்ளது. இப்போது சிந்த்வாராவில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்துள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும். மருந்து கொள்முதல் கொள்கை மற்றும் மருந்து தரம் குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். நாட்டிலேயே பச்சிளம் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்தில் அதிகமாக உள்ளது, அங்கு பிறக்கும் 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறக்கின்றன. 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுகாதார அமைச்சர் ராஜேந்திர ஷுக்லா சட்டமன்றத்தில் இந்த தகவலை எழுத்துபூர்வ பதிலாக வழங்கினார். சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பு தரவுகளின்படி (Sample Registration System (2022), தேசிய சராசரியைவிட மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகம் என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நீதி கேட்கும் குடும்பங்கள் இருமல் மருந்தை குடித்து அதனால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் ஐந்து வயதான அட்னன் கான் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அட்னனின் தந்தை ஆமின் செல்போனில் பேசுவதற்கு தயாராக இல்லை. ஆமினின் மூத்த சகோதரர் சஜித் கான் பிபிசியிடம் கூறுகையில், "குழந்தைக்கு எவ்வித தீவிரமான உடல்நல பிரச்னையும் இல்லை. லேசான காய்ச்சல் ஏற்பட்டது, பின்னர் நிலைமை மோசமானது. எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை" என்றார். அட்னனின் தந்தை அங்கு சேவை மையம் ஒன்றை நடத்திவருகிறார், அதன்மூலம் மாதம் சுமார் ரூ. 10,000 வருமானம் ஈட்டிவருகிறார். சஜித் கூறுகையில், 15 நாட்களாக ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தும் அட்னனை காப்பாற்ற முடியவில்லை என்றார். நான்கு வயதான விகாஸ் யாதவன்ஷியின் வீட்டிலும் அமைதி நிலவுகிறது. குழந்தையின் தந்தை பிரபுதயாள் யாதவ் கூறுகையில், "இருமல், சளி, காய்ச்சலால் 10 நாட்களில் சிறுநீரகம் செயலிழக்குமா? எதையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை" என்றார். விகாஸின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகனின் இறப்புக்கு நீதி வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கும் பிரபுதயாள் கூறுகையில், "எங்கள் குழந்தை இறப்புக்கு நீதி வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. இருமல் மற்றும் காய்ச்சலால் எப்படி சிறுநீரகம் செயலிழக்கும்? இதற்கு யார், எப்போது பதிலளிப்பார்கள் என்பதை அரசு சொல்ல வேண்டும்" என்றார். இதனிடையே, சஜித் பிபிசியிடம் கூறுகையில், "மருந்தை தயாரித்தவர்கள் அல்லது விற்றவர்கள் என யார் தவறிழைத்தார்களோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். என் மகன் போய்விட்டான், குறைந்தபட்சம் வேறு யாரும் இந்த மோசமான மருந்துகளுக்கு தங்கள் குழந்தைகளை இழக்கக் கூடாது," என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படக் கூடாது என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது நிபுணர்கள் கூறுவது என்ன? சாமானியர் ஒருவர் எப்படி இந்த மருந்துகள் நல்லதா அல்லது போலியானவையா என்பதை கண்டறிய முடியும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் ஆவேஷ் சயினி கூறினார். அவர் கூறுகையில், "அந்த மருந்து எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அது நுரையாகவோ அல்லது நிறம் மாறியோ அல்லது அதில் வேறு ஏதேனும் துகள்கள் இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும். மருந்தின் அடியில் ஏதேனும் துகள்கள் இருந்தாலோ அல்லது மருந்தின் பேட்ச் எண் குறிப்பிடாமல் அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ அந்த மருந்தும் நல்லதல்ல. அந்த மருந்தின் உரிம எண்ணும் அதில் இருப்பதும் அவசியம். அது எழுதப்படவில்லையென்றாலும் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது." என்றார். மருத்துவர் சயினி கூறுகையில், "இவையெல்லாம் ஏற்கெனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தான். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுகுறித்து ஆய்வு கிடையாது, எனவே இவற்றை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குதான் கொடுக்க வேண்டும்." என்றார். மருந்தை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், "மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே கொடுக்க வேண்டும். குழந்தையின் எடைக்கு ஏற்பவே மருந்து கொடுக்கப்பட வேண்டும்" என்றார். போலி மருந்துகளால் வேறு என்னென்ன பிரச்னைகள் வரும் என கேட்டதற்கு, "மூச்சு விடுவதில் சிரமம், வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகத்தை அது பாதிக்கும். பின்னர் மூளையை பாதிக்கும். இதனால் பின்னர் வலிப்பு ஏற்பட்டு, இதயத்துடிப்பு நின்றுவிடும்." என்றார். இதனிடையே, முன்பு போபாலில் பணியாற்றிய மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா கூறுகையில், "டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை இருமல் மருந்துகளில் குளிர்விப்பானாக (coolants) பயன்படுத்தப்பட்டன. இதனால் மருந்து இனிப்பு சுவையுடையதாகவும் குளிர்ச்சியானதாகவும் இருக்கும். இது சார்பிடாலை (sorbitol) ஒத்ததாக இருக்கும். எனினும், சார்பிடால் செலவு அதிகம் என்பதால், சில மருந்து நிறுவனங்கள் டைஎத்திலீன் கிளைகாலை மலிவான மாற்றாக பயன்படுத்துகின்றன. நாட்டு மதுபானங்களில் காணப்படும் மெத்தில் ஆல்கஹாலுடன் இவையும் ஒரே வகையின்கீழ் வருகின்றன. இரண்டும் உடல் நலனுக்கு தீங்கானவை" என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குழந்தைகளுக்கு நெஃப்ரோடாக்ஸிக், அதாவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த ரசாயனங்கள் சிறுநீரகத்தால் கட்டுப்படுத்தப்படும் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நச்சு பிற பாகங்களுக்கும் பரவி மரணம் நிகழ்கிறது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ye4z7vpnvo
6 days 1 hour ago
வழங்கப்பட்டுள்ளது அண்ணை.
6 days 2 hours ago
🤣............. சர்வர், நிறைய முட்டைகளை வாங்கி அடிக்கி வையப்பா........... இவர்கள் இப்படி மாறி மாறி வென்றால், நிறைய கோப்பி போட வேண்டும் போல...................
6 days 2 hours ago
பாராட்டுக்கள். ஆனாலும் தமிழ்மொழி பேசும் பிள்ளைகளுக்கு இதில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையோ?
6 days 2 hours ago
06 Oct, 2025 | 04:50 PM அகில இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உச்ச மகாநாயக்கரான மதீஹே பன்னசீஹ மகாநாயக்க சுவாமிந்திரசாவின் தலைமையில் நிறுவப்பட்ட விபாசி பௌத்த மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 68 இலட்சம் ரூபாய். இதற்காக சுகாதார அமைச்சகம் 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை மருத்துவமனை சேவைகள் சபை செலவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு கடற்படை தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து உதவி கோரி, இந்த நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதில் வணக்கத்திற்குரிய ராஜவெல்ல சுபூதி தேரர் மற்றும் அவரது குழுவினரின் வழிகாட்டுதலுக்கு சுகாதார அமைச்சர் என்ற முறையில் தனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இதன்போது தெரிவித்தார். அரசாங்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, நூறு மீட்டர் ஓடுவது போல மிக விரைவாகச் செய்ய முடியாது என்றும், மருந்துப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாகவும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்தச் சட்டங்களை மாற்றுவது ஒரு சிக்கலாக இருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எழுந்துள்ள சில சிக்கல்கள் இன்று நேற்று எழுந்தவையல்ல. ஆனால் பிரிட்டிஷ் காலத்திலிருந்து இவை காணப்படுகின்றன என்று அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அவற்றை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவை மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுகாதார அமைச்சகத்தின் சேவையின் மீது நம்பிக்கையை வளர்ப்பது தனக்கு ஒதுக்கப்பட்ட முதல் பணி என்று அமைச்சர் கூறினார். மேலும் அத்தகைய நன்கொடைகளை முறைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார். நாட்டில் தற்போதுள்ள சில சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் சில அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், நன்கொடையாளர்கள் அரசு இராஜதந்திரம் மூலம் உதவியைப் பெறவேண்டியதன் அவசியத்தையும் இங்கு குறிப்பிட்டார். வைத்தியசாலை செயற்பாடு மற்றும் அதற்குரிய அத்தியாவசிய உபகரணங்கள் வரை நன்கொடையாளர்கள் அளிக்கும் நன்கொடைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு வைத்தியசாலைக்கு தேவைப்படும் அத்தியாவசியமான உபகரணங்கள் சம்பந்தமான தரவுகளை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்புத் திட்டத்தை தயாரித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். மஹரகம சிறி வஜிரநான தர்மயநாதிபதி தேரர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவைக் கொண்ட மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக விவகாரங்கள், வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரரால் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வை மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக இயக்குநர் வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வில் நுவரெலியாவின் பிரதம பீடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், அமரபுர ஸ்ரீக தம்மரக்ஷித மகா நிகாயவின் மகாநாயக்க தேரர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வணக்கத்திற்குரிய ஆனந்த மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய அக்குரட்டிய நந்த தேரர் மற்றும் மகா சங்கத்தினர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, இலங்கை தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் பிரஹதீப் விஜேசிங்க மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/227042
6 days 2 hours ago
அமெரிக்கர்களோடு ஒப்பிடும் போது பிரிட்டிஷ் பிரபலங்கள், நிபுணர்கள் பலரிடம் நான் காணும் ஒரு பண்பு படாடோபம் இல்லாத அமைதி. குடாலின் இயல்பும் இதே போன்றது தான். கீழே, நேச்சர் இதழில் இன்று வெளியான ஜேன் குடாலின் நினைவுக் கட்டுரையை இணைத்திருக்கிறேன். https://www.nature.com/articles/d41586-025-03227-w அவரது 60 ஆண்டு காலப் பணி இன்னும் ஒரு 60 ஆண்டுகளுக்குப் பயன் தரக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. "வேர்களும் தளிர்களும் - Roots & Shoots" என்ற ஒரு சிறுவர்/இளையோர் மட்ட அமைப்பை உருவாக்கியதன் மூலம் வனப் பாதுகாப்பு, உயிர்களின் பல்லினத் தன்மையின் (biodiversity) பாதுகாப்பு என்பவற்றை இன்னும் 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தியிருக்கிறார். ஏன் 60 ஆண்டுகள் என்றால், இனிப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த அக்கறைகளைப் போதிக்கும் முன்மாதிரியான பெரியவர்கள் அருகி வருகிறார்கள். "தொழிலைத் தேடு, பணத்தை உழை, சேமித்து இளைப்பாறு, அப்படியே சத்தம் சந்தடியில்லாமல் ஒரு நாள் உலகை விட்டு நீங்கு" என்று ஆலோசனை கொடுக்கும் பெரியவர்களும், இணைய பிரபலங்களும், ஜேன் குடால் போன்றோரின் முன்மாதிரிகளை உருவாக்கப் போவதில்லை என அஞ்சுகிறேன்!
Checked
Sun, 10/12/2025 - 18:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed