புதிய பதிவுகள்2

ஜப்பானின் முதல் பெண் ஆளும் கட்சித் தலைவர், ஆண் ஆதிக்கம் செலுத்தும் குழுவில் தீவிர பழமைவாத நட்சத்திரம்.

5 days 13 hours ago
பணச்சந்தைக்கு பங்கு சந்தைக்கு நேரெதிர் தொடர்புகள் காணப்படுவதுண்டு, 50 புள்ளி வட்டி விகித குரைப்பு அமெரிக்க பங்கு சந்தையில் ஒரே நாளில் (காலம் சரியாக நினைவில்லை) 40% ? (இந்த எண்ணிக்கையும் சரியாக நினைவில்லை) வருடாந்தர வளர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. வட்டி விகிதம் குறையும் போது பணச்சந்தையில் நாணயத்தினை விற்பார்கள் அதே வேளை பங்கு சந்தையில் பங்குகளை வாங்குவார்கள் அதற்கு இரண்டு காரணிகள் கூறப்படுகிறது. 1. பாதுகாப்பான பணச்சந்தை, பணமுறிகளில் முதலீடு செய்பவர்களுக்கு இலாபம் குறையும், அதனால் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை பங்குகளுக்கு மாற்றுவார்கள் 2. வட்டி விகிதம் குறையும் போது கடன் சுமைகள் குறையும், குறைந்த செலவில் கடனை பெறலாம் அதனால் வியாபாரங்கள் வளம்பெறும் அதனால் பங்கு சந்தை முதலீடு அதிகரிக்கும், பங்கு விலை அதிகரிக்கும். ஜப்பானிய ஜென்னினை பொதுவாக carry trade இற்கே பயன்படுத்துவார்கள் அதனால் ஜப்பான் பண வீழ்ச்சி அடையும் போது மேலும் அதனை விற்கும் நிலை காணப்படுகிறது ஆனால் பங்கு சந்தை அதிகரிப்பிற்கு இது நேரடியான பங்கினை வட்டி விகித மாற்றம் போல வகிக்காது என கருதுகிறேன் ஆனாலும் பங்கு சந்தை இதற்கு எதிர்வினையாற்றுகிறது. 2016 இலிருந்து என கருதுகிறேன் பணச்சுருக்கத்தில் இருக்கும் ஜப்பான் அண்மையிலேயே தனது பணச்சுருக்கம் கட்டுக்குள் வந்துள்ளது என கூறியிருந்த்து (மற்ற நாடுகள் பணவீக்கத்தில் பாதிக்கப்படும் போது) தற்போது மீண்டும் இந்த சந்தை நிகழ்வு ஜப்பானிய பொருளாதார தளம்பலை நோக்கி செல்கிறதோ என தோன்ற வைக்கிறது மீண்டும் ஒரு வட்டிவிகித குறைப்பு ஏற்படலாமோ என தோன்றுகிறது (எதுவும் உறுதியாக தெரியவில்லை அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்)

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

5 days 14 hours ago
மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, அதில விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். அவர்களே சேடம் இழுக்கிறார்கள்.

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

5 days 14 hours ago
அரசியல் திருடர்களை கைது செய்தால், தெருவுக்கு இறங்கி ஊளையிடுகிறார்கள். பாதாள உலகைச் சேர்ந்தவர்களை கைது செய்தால், அது தேவையில்லை என்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்தால், பதறுகிறார்கள். கொலைகாரரை கைது செய்தால், அவர்களின் சொந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்தி விமர்ச்சிக்கிறார்கள். அப்போ; இதில் எல்லாம் இவர்களுக்கு பங்குண்டு. தங்கள் ஊழல், கொலை, களவுகளை மறைக்க பயங்கரவாதிகளை அழித்தோம் என்று மக்களை திரட்டி ஏமாற்றுகிறார்கள். சந்திரிகா சொன்னார், ராஜபக்சக்கள் திருடர் என்று. ஆனால் இவர்கள் திருடர் மட்டுமல்ல கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு என்று செய்யாத வேலையே இல்லை. அரசியலுக்கு எள்ளளவும் தகுதியற்றவர்கள். தமிழரை மட்டுமல்ல, தமது அடாவடிகளை தட்டிகேட்ப்பவர்கள், விமர்ச்சிப்பவர்கள், தங்களுக்கு உதவியவர்களையே கொலை செய்து தம்மை காத்துக்கொண்டவர்கள். மக்களின் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அதைப்பற்றி கணக்கெடுக்காமல், தங்கள் பணப்பெட்டியை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர். அதை மக்களிடமிருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை காட்டி தங்களை வீரர்களாக சித்தரித்தனர். யார் எதை களவெடுக்கிறார்கள், அதை எப்படி தடுப்பது என்கிற அறிவு கூட இல்லாத முட்டாள்கள். இவர்கள் தான் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். இதில குட்டிச்சாத்தானுக்கு ஜனாதிபதி கனவு வேறு. இவர்களுக்குப்பின்னால் பல திருடர் பதுங்கி காத்திருக்கிறார்கள், இவர்கள் அடாவடி, அரசியல் சூழ்ச்சி செய்து தம்மையும் காப்பாறுவார்களென. முடியாவிட்டால், அரச சாட்சிகளாக மாறி தங்களை காத்துக்கொள்வார்கள்.

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

5 days 14 hours ago
வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா பிரான்சில் நிற்கின்றார், சுவிசிக்கு செல்கின்றார் என நினைக்கின்றேன். இவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தால் இம்முறை நிகழ்வு செய்திகள் சற்று வித்தியாசமாக வரலாம். சரி பார்ப்போம்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 15 hours ago
இந்த. பாண்டா. என்பவர். நாலு ஐந்து. மாநிலங்களில். பொறுப்பளாராக இருந்து. ஆட்சி மாற்றத்தை. எற்படுத்தியுள்ளார். அதாவது. பாரதிய. ஐனத. கட்சியை. ஆட்சியில். அமர்த்தினார். எனவே. கூட்டணி எப்படியுமிருக்கலாம். பாரதிய. ஐனத. கட்சி. தமிழ்நாட்டில். 2026. இல் ஆட்சி அமைக்கும். இனி ஓருபோதும். திமுக. தமிழ்நாட்டை ஆளாது. நாம்தமிழர். சீமான். 3%. எடுப்பார். அவர் ஒருபோதும்். தமிழ்நாட்டை. ஆளப்போவதில்லை. மோடி. இந்தியாவுக்கு. சிறந்த. பிரதமர். இதுவரை. இப்படியான. பிதமர். இந்தியாவில்்ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

5 days 15 hours ago
உலக அமைதிக்கான நோபல் பரிசு⛔ மனித உரிமைக்கான நோபல் பரிசு⛔ இந்த இரண்டையும் நிகழ்சி நிரலில் இருந்து தூக்கி விடச்சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும். வர வர காசு குடுத்து வாங்கிற பட்டங்கள் மாதிரியே நோபல் பரிசும் வரப்போகுது.🙃

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

5 days 16 hours ago
சினிமாக்காரர்களை கடவுளாக பார்க்கும் கூட்டம் இருக்கும் வரைக்கும் மாற்று கட்சியினர் அனைவருக்கும் வெற்றி வேட்டைதான்.

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

5 days 16 hours ago
சுமந்திரன் என்பவர் தமிழ் அரசியலுக்குள் வராமல் இருந்திருந்தால் ஒரு சில நல்ல முடிவுகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் என சொல்கிறார்கள். அதை விட 2009க்கு பின்னர் சமரசம் இல்லாத நல்லதொரு அழுத்தம் சிங்களத்தின் மேல் இருந்திருக்கும் எனவும் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

5 days 16 hours ago
என்னத்த செய்ய? தமிழினத்திற்கென்றே சந்ததிக்கு சந்ததி ஒரு சகுனி உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். சேர் பொன் இராமநாதன் தொடக்கம் சுமந்திரன் ஊடாக தமிழின வில்லன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் போல் இருக்கின்றது.அதை விட அந்த வில்லன் கொம்பனிகளுடன் ஒட்டுண்ணிகளாக இருப்பவர்கள் இன்னும் வில்லங்கமானவர்கள்.மதில் மேல் பூனை ரகமானவர்கள்.😂🤣 சுமந்திரன் சிங்கள பகுதிகளில் சுமந்திர எண்ட பெயரிலை அதுவும் ஹபரண தொகுதியில் நிண்டு வாக்கு கேட்டு பாக்கட்டுமன்.😁 பதவிக்காக ஓடித்திரியிறவர் அதுக்கும் ஓமெண்டுவார் 😋

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 16 hours ago
நீங்களும் சினிமாகாரர்களை நம்புகின்றீர்களா?☹️ விஜய் ரசிகர்களைப்போல் நீங்களும் சளைத்தவர் இல்லை என நான் நினைக்கிறேன்.🤣 சீமான் உண்மையை பேசுகின்றவர்.எதிரியாக இருந்தாலும் திறமையை பாராட்டுகின்றவர்.அந்த வகையில் சீமான் ரஜனியை புகழ்ந்து தள்ளியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சினிமா என்ற முறையில் ரஜனி பாராட்டப்பட வேண்டியவரே.தன் சுயநல அரசியலுக்காக தன்னை தேடி வந்த மக்களையோ, நம்பியிருந்த இனத்தையோ பலிக்கடாவாக்கியவர் இல்லை இந்த சீமான்.

6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!

5 days 16 hours ago
மத்திய பிரதேச சிந்த்வாராவை சேர்ந்தவர் கேட்கின்றார் விஷத்தன்மை கொண்ட ஆபத்தான மருந்து அது என்பதை தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்குள்ளே கண்டுபிடித்துவிட்டது ஆனால் மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? மத்திய பிரதேசத்தை பழைய காலங்களில் காங்கிரசும் கடந்த 20 வருடங்களாக பாஜகவும் ஆட்சி செய்கின்றன. தமிழ்நாட்டை 58 வருடங்களாக திராவிட கட்சிகளே ஆட்சி செய்கின்றன.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 17 hours ago
ஏதோ உங்கட சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லீட்டு போங்க...நானேன் குறுக்க நிக்கப்போறன்...😂

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 17 hours ago
கடலுக்கு ஆய்வு செய்ய சென்ற போது சீமான் றிலக்ஸ்சாக மீன் பிடிக்கின்றார். அவரது இந்திய கடற் பரப்பில் தான் மீன் பிடிக்கின்றார். இதனால் இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதையே தமிழ்நாட்டு மீனவர்களும் பின்பற்ற வேண்டும் .

ஒரு கிராமமே பிரமிட் மோசடியில் சிக்கியது – மொத்தமாக கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அம்பாறை பிரதேச மக்கள் சத்தமிட்டு சாபம் விடும் நிலையில் மோசடிக்காரர்கள் குழந்தையையும் விட்டுவிட்டு ஊரிலிருந்து தப்பியோடி தலைமறைவு

5 days 17 hours ago
wp-content/litespeed/avatar/2684735edbe524bb22324f0d9738aa29.jpg?ver=1759301393 Madawala News14 hours ago 0 2 minutes read wp-content/uploads/2025/10/Picsart_25-10-06_13-48-50-155-780x993.jpg அம்பாறை மாவட்டம் தமன பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பன்னல்கம கிராம மக்கள் அனைவரும் பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி கடனாளிகளாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு, பன்னல்கம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அருணலு பஹன்சிலு என்ற பெயரில் விளக்கு திரிகளை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இது ஒரு பத்தி தயாரிக்கும் தொழிலாகத் தொடங்கப்பட்டது, மேலும் கிராம மக்களுக்கும் அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருவர் ரூ. 50,000 தொகையை வைப்பீடு செய்யும்போது, அவர்களுக்கு 1,000 பத்திகள் மற்றும் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. பத்திகளை பெட்டிகளில் அடைத்து, தயாரித்து, கொண்டு வந்து ஒப்படைக்கும்போது, இந்த நிறுவனம் ரூ. 75,000 தொகையை வழங்கியுள்ளது. பன்னல்கம கிராமத்தில் தொடங்கப்பட்டு இந்த வர்த்தகத்தில், கிராமத்தில் ஏராளமான மக்கள் ரூ. 50,000 யை செலுத்தி, பத்திகளை எடுத்து, பொதிச் செய்து திருப்பி அனுப்பி, ரூ. 75,000 பெற்றுள்ளனர். இந்த வணிகம் கிராமத்திலும் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டது, இரண்டாவது கட்டத்தில், ஒவ்வொரு இடத்திலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, இந்த வணிகத்தை மேலும் விரிவுபடுத்த அந்த பிரதிநிதிகள் மூலம் பணம் பெறப்பட்டது. பின்னர், இந்த வியாபாரி அதை ரூ. 50,000 க்கு பதிலாக ரூ. 250,000 ஆக அதிகரித்து 6,000 பத்திகளையும் பெட்டிகளைக் கொடுத்தார், மேலும் பத்திகளை மீண்டும் பொதி செய்த பிறகு, ரூ. 250,000 உடன் கூடுதலாக ரூ. 150,000 கொடுத்தார். இந்த வணிகம் தங்களுக்கு பெரும் நன்மைகளைத் தரும் என்று நினைத்த கிராம மக்கள், தங்கள் வயல்களை அடமானம் வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி, தங்கள் பொருட்களை அடகு வைத்து, இந்த தொழிலதிபருக்கு ரூ. 10 லட்சம், 15 லட்சம், 30 லட்சம், 40 லட்சம், 100 லட்சம் கொடுத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, பணத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காததால் சிலர் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் மற்றவர்கள் மூலப்பொருட்கள் உடனடியாக வழங்கப்படும் என்று கூறி ஏமாற்றப்பட்டுள்ளனர். பின்னர், இது ஒரு பிரச்சனைக்குரிய சூழ்நிலையாக இருந்ததால், இந்த விஷயம் தொடர்பாக 2025.09.29 அன்று பன்னல்கம விஹாரையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது, மேலும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்ட மக்களும் பிரதேச சபையின் அரசியல் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். தான் அனுப்பிய பொருட்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பொருட்களை திருப்பி அனுப்பியதாகவும், பிரச்சினையைத் தீர்த்து ஒரு மாதத்திற்குள் மக்களிடமிருந்து அறவிடப்பட்ட பணத்தை செலுத்துவதாகவும் கூறினார். இருப்பினும், 3 ஆம் திகதி மாலை, பன்னல்கம கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் பார்வையிலும் மண்ணை தூவிவிட்டு இந்தத் தொழிலை மேற்கொண்ட பன்னல்கம கிராமத்தைச் சேர்ந்த சுரங்க சதருவன் மற்றும் பியூமி புத்தினி ஜெயதுங்கா ஆகியோர் பன்னல்கம கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தையை அவர்கள் வெளியேறும்போது அவர்களுடன் அழைத்துச் செல்லவில்லை, பின்னர் அவர்களின் உறவினர் ஒருவர் குழந்தைக்கு மருந்து வாங்கச் செல்வதாகக் கூறி குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்று தாய் மற்றும் தந்தையிடம் ஒப்படைத்தார். இப்போது இந்தத் தொழிலைச் செய்த பெண்ணின் தாய் மற்றும் தந்தை மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர். 2025.10.04 அன்று, அசல் பன்னல்கம கிராம மக்கள் அந்த வீடுகளுக்கு அருகில் நாள் முழுவதும் கூடினர், மேலும் அவர்களின் பணத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றதாகிவிட்டது. சில பெண்கள் அழுது, இந்தப் பணத்துடன் ஓடிப்போனவர்களை சபித்தனர். இந்த மூலப்பொருட்களை வாங்கும் போது, பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படுகிறது, மேலும் பில்லை ஆய்வு செய்தபோது, அந்த ரசீதில் அவர்கள் கையொப்பமிட்டு பணம் செலுத்தியதாகத் தெரிந்தது. பணம் கொடுத்தவர்களுக்கு பணம் செலுத்தப்பட்டதை இது குறிக்கிறது. பன்னல்கம கிராமம் முழுவதும் மற்றும் தொட்டம, குமனா, பக்மிடியாவ, ஹிகுரானா, திம்பிரிகொல்ல, மடவலந்த, எக்கலோயா, உஹான அம்பாறை கொக்னஹாரா, சியம்பலாந்துவ, வெல்லவாய, மொனராகல மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இந்த பிரமிட் திட்டத்தில் மிகவும் நுட்பமான மோசடியுடன் சிக்கியுள்ளனர். பன்னல்கம கிராமத்தில் மட்டும், 10 லட்சம் வைப்பிலிட்ட பலர் உள்ளனர், மேலும் இந்த ஜோடி சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமண காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு குழுவினர் புகார் அளித்துள்ளனர், மேலும் அதிக பணம் செலுத்தியவர்கள் அம்பாறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மோசடி புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்துள்ளனர். கிராம மக்கள் மற்றும் சில தொழிலதிபர்கள், சுகாதார அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், குடும்ப சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்தப் பண மோசடியில் சிக்கியுள்ளனர். இந்தத் தொழிலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளானவர்கள் இப்போது தப்பி ஓடிவிட்டதாகவும், தங்கள் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் இன்னும் கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரதிநிதிகள் கிராம மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதன் மூலம் இந்த மோசடிக்கு உதவியுள்ளனர். இங்குள்ள சோகமான உண்மை என்னவென்றால், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் சில பெண்கள் பத்து சதவீத வட்டிக்கு பணம் கடன் வாங்கி இந்த மோசடி செய்பவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்துள்ளனர், இப்போது அவர்களால் கடன் கொடுத்தவருக்கு பணம் கொடுக்க முடியவில்லை, மேலும் மிகவும் உதவியற்றவர்களாக உள்ளனர். சில பெண்கள் இந்தத் தொழிலுக்காக தங்கள் கணவர்களிடம் கொள்ளையடித்து பணம் கொடுத்துள்ளனர், இப்போது அந்த வீடுகளில் உள்ள கணவர்கள் சண்டையிடத் தொடங்கியுள்ளனர். பன்னல்கம கிராமம் முழுவதும் இப்போது ஒரே மரண ஓலம் கேட்கிறது. பன்னல்கம மக்கள் வரவிருக்கும் பருவத்தில் நெல் அல்லது மருதாணி பயிரிட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட சிலர், கிராம மக்கள் இந்த வலையில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர், ஆனால் அவர்களின் அதிகப்படியான பண ஆசை காரணமாக, இந்த கிராம மக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். https://madawalaenews.com/29576.html

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 17 hours ago
விஜையால் எப்படி பார்த்தாலும் பாதிப்பு திமுகவுக்கே என்பதில் உடன்பாடுதான் ஐயா. ஆனால் எடப்பாடி, விஜை எம் ஜி ஆர் போல அல்ல. அதே போல் அன்றைய காங்கிரஸ் போல் லோக்சபா தேர்தலில் 50:50 விட்டு தந்தால் சட்டசபையை முழுவதுமாக மாநில கட்சிக்கு தாரைவார்க்கும் கட்சி அல்ல இன்றைய பிஜேபி. இப்போ இருக்கும் நிலையில் அதிமுக+விஜை+பிஜேபி ஒரே அணியில் வரின் 2026 இல் தமிழ் நாட்டில் பிஜேபி அமைச்சர்கள் இருப்பார்கள். அப்போ அரசின் கொள்கை முதல் செயல்திட்டம் வரை கொஞ்சம், கொஞ்சமாக காவி மயமாகும். இது வரலாற்றில் முதன் முறை நிகழும் நிகழ்வாக இருக்கும். அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக, விஜையை முடக்கி தமிழ் நாட்டில் பிஜேபி vs திமுக என்பதே அரசியல் என்ற நிலை உருவாகி விடும். இதைதான் மஹாரஸ்டிராவில் சிவசேனா, பீஹாரில் நிதீஸ், பீஜேபி கூட்டில் அனுபவித்தனர். மேற்கு வங்கத்தில் கயூனிஸ்டை, ஒரிசாவில் பட்நாயக்கை தள்ளி விட்டு (கூட்டு வைக்காமல்) இரெண்டாம் பெரிய கட்சியாக இப்படித்தான் பாஜக வளர்ந்தது. இப்படி ஒரு நிலை வருவதை விரைவு படுத்துவதுதான் விஜையின் வேலை என்றால் - அவர் வராமலே இருந்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. பிஜேபி புகுந்து விடும் என்பது சீமான் பொய்யாக சொல்வது போல் வெறும் வெத்து மிரட்டல் அல்ல. அது ஒரு நியாயமான பயம்.

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

5 days 17 hours ago
இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட மிகவும் பலவீனமான ஒரு தீர்மானம். ஒரு வருடத்தை கடந்த தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பு கூறல் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் இன பிரச்சினை சம்பந்தமாகவும் எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் மாறாக இதற்கு முதல் ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் செயல்பட்டதை போன்றே அதே நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்கின்றதாகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கின்ற நிலையிலும் ஜெனீவாத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற அடிப்படை துரோகம். முழுக்க முழுக்க தங்களுடைய நலன்கள் சார்ந்த முடிவுகளாக இந்த நாடுகள் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கொடுக்காத,மாறாக நிரந்தரமாகவே பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை உண்மையில் நாம் கண்டிக்கிறோம். அந்த வகையில் செம்மணியிலே சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் இந்த வருட ஐ.நா.வின் அறிக்கையை எரித்தார்கள். 2009 ஆம் ஆண்டில் இருந்து பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளக ரீதியாக செய்ய வேண்டும் எனக் கேட்டும் அந்த கோரிக்கையை முன் வைக்கின்ற வகையிலும் சர்வதேச கோணத்தில் எந்த விதமான பொறுப்பு கூறலும் வலியுறுத்தாமல் இருப்பது இந்த தீர்மானம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக சுமந்திரன், சிவஞானம் போன்றவர்களின் படுமோசமான செயற்பாடுகளை விளங்கிக்கொண்டு மக்கள் நிராகரிக்கின்ற தரப்புகளை கட்சிக்குள் எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும். அல்லது அவர்களும் சேர்ந்து இந்த படுமோசமான செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செயலாற்றுகிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டி இருக்கும் என்றார். https://akkinikkunchu.com/?p=343593

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

5 days 17 hours ago
அரசியல் முதிர்ச்சியின் இலக்கணமாகும் முதல்வர் ஸ்டாலினும், திராவிட எதிர்ப்பாளர்களின் சதி லீலைகளும்! 6 Oct 2025, 8:08 AM ராஜன் குறை கரூரில் நிகழ்ந்த பெரும் துயரச் சம்பவத்தை, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை மிகச் சிறப்பாக, பொறுப்புடன் கையாண்டுள்ளார் தமிழ்நாட்டு முதல்வர். அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன என்று அனைவருக்கும் இலக்கணம் வகுக்கும் விதமாக அவர் செயல்பாடு அமைந்துள்ளது. செய்தி அறிந்ததும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரை, அருகமை மாவட்ட அமைச்சரை நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை, சிகிச்சைகளை மேற்பார்வையிடச் சொன்னார். சுகாதாரத் துறை அமைச்சரையும் விரையச் சொன்னார். நிலைமையின் தீவிரம் தெரிந்ததும் தானே நள்ளிரவில் விரைந்து சென்றார். அஞ்சலி செலுத்தினார்; ஆறுதல் கூறினார். விபத்திற்குக் காரணமான தவெக தலைவர் நடிகர் விஜய், அவரைக் காண வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க முயலாமல், விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தபோது, முதல்வர் கரூர் செல்ல விமானம் ஏறினார். முதல்வர் ஒரு வார்த்தை கூட மக்கள் கூடக் காரணமான, விபத்திற்குப் பிறகு களத்தில் நிற்காத தமிழக வெற்றிக் கழகம், அதன் தலைவர் விஜய் குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. உடனடியாக மேனாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தார். அதன் அறிக்கை கிடைத்த பிறகு தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார். திராவிட இயக்க எதிரிகள் உடனே சதிக் கோட்பாடுகளைப் புனைந்தனர். சற்றுக் கூட கூச்சமே இல்லாமல் தி.மு.க கலவரத்தைத் தூண்டியது என்றனர். காவல்துறை வேண்டுமென்றே கூட்டம் நடந்த இடத்தைக் கொடுத்தது, விபத்தைத் தடுக்கவில்லை என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கூறினர். ஆனால் முதல்வர் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. பதிலுக்கு பிறரைக் குற்றம் சாட்டவில்லை. மாறாக எந்த தலைவரும் மக்கள் இப்படி பாதிக்கப்படுவதை விரும்ப மாட்டார் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களையும் மரியாதைப் படுத்தினார். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் பதட்டம் உருவாகக் கூடாது என்ற வகையில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பல விவரங்களை, காணொளிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விஜய் கடுமையாக விமர்சித்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து யதார்த்தமாக நடந்தவற்றை விளக்கினார். விஜய் தன்னைப் பற்றி பேசும் முன்பே கூட்ட த்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததை காணொலிகள் மூலம் விளக்கினார். கூட்ட த்தில் நெரிபட்ட தொண்டர்களே விஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் கவனத்தைக் கவர செருப்புகளை வீசியதை விளக்கினார். அவருக்கு எந்த பதட்டமும், குழப்பமும் இல்லை. உணர்ச்சி வசப்படவில்லை. மிகுந்த பொறுப்புடன் பேசினார். இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிச்சயம் பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்பதால் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும், நிர்மல் குமார் மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரிய வழக்குகள், பொதுநல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கவில்லை ஆதலால் அவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களாக முன்வந்து வழக்கிற்கு ஒத்துழைக்கவில்லை. நடிகர் விஜய் சென்னையில் கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இரண்டு தினங்கள் கழித்து சில நிமிடங்கள் பேசி ஒரு காணொளி மட்டும் வெளியிட்டார். அதில் அவர் சமூக நாகரீகம் கருதி ஒரு மன்னிப்பு கூடக் கேட்கவில்லை. தனக்குள்ள பொறுப்பை ஏற்கவில்லை. முதல்வரை விளித்து பழிவாங்க வேண்டுமென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக சவால் விடுத்தார். இத்தனை உயிரிழப்பிற்கு அவர் நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்பதால் அவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பலர் கூறினர். கைது செய்யாததற்காக முதல்வரைக் கண்டித்தனர். ஆனாலும் முதல்வர் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கவில்லை. ஆணையத்தின் அறிக்கை விஜய் பொறுப்பாளி என்று கூறினால் பிறகு வழக்குத் தொடர்ந்தால் போதும் என்ற நிலையில் அவரைக் கைது செய்து பிறகு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை; அதனால் இந்த துயர நிகழ்வு அரசியல் மயமாவது தேவையில்லை என்று அமைதி காத்தார். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டாமல், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் தடுப்பதே முக்கியம் என்று அறிவித்து தன் தலைமையின் மாண்பினை, அரசியல் முரண்களுக்கு அப்பாற்பட்ட தன் பதவியின் கெளரவத்தை வெளிப்படுத்திக் காட்டினார். தமிழக வெற்றிக் கழகமும், நடிகர் விஜயும் இந்த சிக்கலை எளிதில் கடந்திருக்க முடியும். இந்த நிகழ்விற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு, காவல்துறை ஒத்துழைப்புடன் பாதிக்கப் பட்டவர்களை சென்று பார்த்திருந்தால், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தால் அவர்கள் இப்படி முடங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் நோக்கமே எப்ப டியாவது அரசின் மீதும், ஆளும் கட்சி மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதாகவே இருந்ததால் அவர்களால் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள முடியவில்லை. நீதி மன்றத்திலும், பொது மன்றத்திலும் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்து அம்பலப்பட்டு நிற்க நேர்ந்திருக்கிறது. தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள், நேரலையில் தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்பிய காட்சிகள் யாவும் விபத்து எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ளும் விதமாகத்தான் உள்ளன. ஆம்புலன்ஸ் சதி, மின்சார துண்டிப்பு சதி, தடியடி, செருப்பு வீச்சு சதி என அனைத்துக் கற்பிதங்களையும் காணொளிக் காட்சிகள் பொய்யாக்குகின்றன. விஜய் தாமதமாக வந்தது, தன் வாகனத்திற்குப் பின்னால் ஒரு மக்கள் திரளைத் திரட்டி தன்னை சந்திக்கக் காத்திருந்தவர்களுடன் கலக்க விட்டு நெரிசலை ஏற்படுத்தியது ஆகியவையே இந்த விபத்து நிகழ முக்கியக் காரணங்கள் என்பதைக் காணொளிகளைப் பார்த்து அறிய முடிகிறது. இதை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்துக் கடப்பதுதான் நேர்மை என்பதைவிட அதுவே சுலபமானதும் கூட. ஆனால் அதற்குப் பதிலாக அரசை, ஆளும் கட்சியை குறை கூறி தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைப்பது சிறுபிள்ளைத்தனம். பாரதீய ஜனதா கட்சியின் தொடரும் சதி லீலைகள் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சி இப்போதுதான் வெளிப்பட்டது என்பதல்ல. தி.மு.க 2016 தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே சட்டமன்றப் பெரும்பான்மையை தவற விட்டது. அடுத்த ஆண்டே ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது ஸ்டாலின் கட்சித்தாவல்களை ஊக்குவித்து ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. என்றைக்கு இருந்தாலும் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுதான் ஆட்சியமைப்பேன் எனத் தெளிவுடன் இருந்தார். ஜெயலலிதா நோயுற்றபோதே முதல்வர் பொறுப்பை வகித்து வந்த, அவர் மறைந்தவுடன் முறையாகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமும் சரி, பின்னர் அவர்கள் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த சசிகலா அம்மையாரும் சரி, பாரதீய ஜனதா கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராகத்தான் இருந்தனர். அரை நூற்றாண்டு வரலாற்றில், தி.மு.க மாநில அடையாளத்தில், அதன் சுயாட்சியில் மையம் கொண்டும், அ.இ.அ.தி.மு.க அகில இந்திய அடையாளத்தை அதிகம் அனுசரித்தும், ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதாகவும் விளங்கி வந்துள்ளதை கவனமாக ஆராய்ந்து அறியலாம். இப்படியெல்லாம் இருந்தும் அ.இ.அ.தி.மு.க கட்சியைப் பிளக்க முனைந்தது பாஜக. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் துவங்கும்படி நான்தான் கூறினேன் என்று பகிரங்கமாகவே அறிவித்தார் பாஜக-வின் முக்கிய ஆலோசகர் குருமூர்த்தி. ஒன்றியத்தில் ஆட்சி செய்த பாஜகவும் ஒத்துழைத்தது. சசிகலா பதவியேற்பதைத் தாமதப்படுத்தியது. ஆனால் தினகரனும், சசிகலாவும் கூவாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாத்து ஒ.பி.எஸ் கலகத்தை முறியடித்தனர். உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கிடந்த தீர்ப்பு அந்த நேரம் வெளியாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சிறை சென்றார் சசிகலா. அடுத்த காட்சி ஆர்.கே.நகர் தேர்தல். அதில் டி.டி.வி.தினகரன் போட்டியிட, வெற்றிபெற்றால் அவர் முதல்வராகும் வாய்ப்பு தெரிந்தது. அதை பாஜக விரும்பவில்லை என்பதால் தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டது. அப்படியும் அவர் வென்றுவிட அவர் ஆதரவாளர்களான 18 ச.ம.உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, அவர்கள் தடாலடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஓ.பி.எஸ்ஸின் 11 ச.ம.உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமியுடன் இணைத்து, தினகரனை வெளியேற்றி புதிய ஏற்பாட்டைச் செய்தது பாஜக. இதையும் ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாகக் கூறினார். பிரதமர் கூறித்தான் நான் இணைந்தேன் என்றார். இதில் முக்கியமானது என்னவென்றால் இத்தனை குழப்பத்திலும், ஒரு பிரிவு அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்த்துத் தான் ஆட்சியமைக்கலாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் முயலவேயில்லை. அமைதி காத்தார். கலைஞர் மறைந்து அவர் தலைமைப் பொறுப்பேற்றதும், பாஜக-வை எதிர்த்து திராவிட சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதுதான் தன் அரசியல் என்று அறிவித்தார். இன்று வரை அந்தக் கொள்கையில் திடமாக இருக்கிறார். “ தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று முழுங்கினால் யாரை எதிர்த்து போராடும் என்று கேட்ட ஆளுனருக்கு, அருமையான பதிலைக் கொடுத்துள்ளார். எதையெல்லாம் எதிர்த்து போராடும் என்ற பட்டியலில் கல்வியில் மூட நம்பிக்கைகளை புகுத்தி நூறாண்டுகள் பின்னே செல்ல சதி செய்யும் பாஜக-வை எதிர்த்து போராடும் என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளார். மதவாத, பிற்போக்குவாத அரசியல் எதிர்ப்பு என்ற அடிப்படையில் அவர் உருவாக்கிய கூட்டணி இரண்டு மக்களவை தேர்தல்களிலும், ஒரு சட்டமன்ற தேர்தலிலும், உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றி பெற்றுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிக் கட்டிக்காத்த திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் தன்னுணர்வை தன் தலைமையில் பன்மடங்கு வளப்படுத்தி, திராவிட மாடல் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற ஒரு கருத்தியலை நிலைநிறுத்தியுள்ளார். எதிர்முனையில் அ.இ.அ.தி.மு.க-வை எவ்வளவு பிளந்தாலும் தாங்கள் அதன் இட த்தைப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த பாஜக இப்போது நடிகர் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க விரும்புகிறது. கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்து கண்ணீரின் ஈரம் காயும் முன்னரே, விஜய் தேசிய ஜன நாயக க் கூட்டணிக்கு வரவேண்டும், அவருக்கு வேறு வழியில்லை என்று பாஜக ஊடகப் புலிகள் முழங்கத் துவங்கிவிட்டனர். அது மட்டும் நடந்துவிட்டால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்ற கற்பனை அவர்களை பரவசப்படுத்துகிறது. உடனே தேசியத் தலைமையும் முன்னாள் நடிகர் ஹேமாமாலினி தலைமையில் அனுராக் தாகூர் என்ற டில்லி கலவர புகழ் அமைச்சரை உள்ளடக்கி உண்மையைப் புனைந்து கூற கரூருக்கு அனுப்பியது. அவர்கள் என்ன முயன்றும் பெரிதாக எதுவும் கதைகட்ட முடியவில்லை. ஆனாலும் பாஜக பேச்சாளர்கள், முன்னாள் நடிகை குஷ்பு போன்றவர்கள், தொடர்ந்து ஏதேனும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை, சதிக்கோட்பாடுகளைப் பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை மிகவும் வினோதமாக இருக்கிறது. ஒருபுறம் பிளவு வேலைகள், சூழ்ச்சிகள் எதையும் செய்யாமல் தன் கொள்கைப் பற்றின் அடிப்படையில் கூட்டணி அமைத்து, திறன் மிக்க நல்லாட்சியால் மக்கள் மதிப்பைப் பெற்று நேர்வழியில் அரசியல் செய்யும் முதல்வர் ஸ்டாலின். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தன் விருப்பம் போலச் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்படும் ஆளுனர், தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்து முடக்கப்பார்க்கும் ஒன்றிய அரசு, எப்படியாவது புதிய தேசிய கல்விக்கொள்கையை திணிக்க நினைக்கும், மும்மொழிக் கொள்கையை புகுத்தத் துடிக்கும் அரசியல் மேலாதிக்க வெறி என்று இயங்கும் பாஜக. இத்தனை செய்தும் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாமல் அ,இ.அ.தி.மு.க-வை வெட்டி, ஒட்டி, வளைத்து விளையாடியது போதாமல், இப்போது புதிதாக அந்த ஒட்டுவேலையில் நடிகர் விஜயை இணைக்கப் பார்க்கிறது பாஜக. இதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி பலபடி வளைத்ததில் அவர்கள் கட்சியிலேயே பலவித குழப்பங்கள், குழுக்கள். அண்ணாமலை கட்சியை பெரிதாக வளர்த்துவிட்டார், பெரும் ஆளுமை மிக்க தலைவர் என்று வரலாறு காணாத பிம்பத்தை உருவாக்கியவர்கள், திடீரென அவரை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக்கி விட்டார்கள். இப்போது ஸ்டியரிங்க் யார் கையில், பிரேக் யார் கையில் என்று தெரியாமல் வண்டி தடுமாறுகிறது. பாஜக நிலையும் சிக்கல்தான். அவர்கள் கொள்கையான இந்துத்துவம் பேசி ஒருபோதும் திராவிட கருத்தியலை வெல்ல முடியாது என்பதால், இதுபோல வளைத்தல், உடைத்தல், ஒட்டல் என திருகு வேலைகளைத்தான் செய்ய முடிகிறது. யார் டில்லிக்கு போகிறார்கள், யார் டில்லியிலிருந்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே குடியிருக்க வேண்டியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க அணிகள் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம். டி.டி.வி.தினகரன்; பாஜக அணிகள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை என ஆறேழு பேர் தவிர இப்போது புதிதாக த.வெ.க விஜய் என பாஜக பொம்மலாட்டம் களை கட்டுகிறது. எதிரணியில் சுயமரியாதைப் பதாகையின் கீழ் அணிவகுத்து நிற்கிறது கொள்கைக் கூட்டணி. இப்படியொரு சமனற்ற தேர்தல் களம் சமீப காலங்களில் உருவானதே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் ஊடகங்கள் காட்சி மயக்கங்களை உருவாக்கத்தான் செய்யும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. https://minnambalam.com/chief-minister-stalin-and-his-political-maturity/#google_vignette

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 17 hours ago
உங்களுக்கு விசயம் தெரியாதே… அஜித் அரசியலுக்கு வராமைக்கும், அப்பத்துக்கு வச்ச மா புளித்தமைக்கும்… ஆறு மணிக்கு முன் வானம் வெளிக்கவும் கூட…. சீமான் தான் காரணமாக🤣. பிகு ஏனையோரை போல ரஜனியிம் சீமானின் காட்டு கத்தலை லெட்ப்ட் ஹாண்டில்தான் டீல் பண்ணினா. ரஜனி அரசியலுக்கு வராது போக முக்கிய காரணம்கள் தன் மீதே நம்பிக்கை இன்மை / அல்லது சரியான சுய மதிப்பீடு தொடை நடுங்கிதனம் சினிமா பணம், புகழை ரிஸ்க் எடுக்க விரும்பாமை மகள்கள் அட்வைஸ் கொவிட் கொவிட் வந்து மக்களை சந்திப்பது உயிராபத்தாக முடியலாம் என்ற அச்சம் ஏற்பட்டிராவிடின் வந்தே இருப்பார். வந்து விட்டேன் என்று அறிவிப்பே விட்டார். இந்த பனம் பழம் வீழ்ந்ததில் இந்த அண்டங்காக்காவுக்கு ஒரு சம்பந்தமுமில்லை.
Checked
Sun, 10/12/2025 - 15:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed