புதிய பதிவுகள்2

பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

3 months 1 week ago
இதேதான் நமக்கும்...பழையவான் ..பட்டியைக் கேட்டபோது..அது தேவையில்லை...ஆனால் ஒரு கண்டிசன் ..முருகண்டியிலை கச்சான் வாங்கி உள்ளுக்கு சாப்பிடமுடியாது ...எப்படி

பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

3 months 1 week ago
இந்த தடவை யாழிலிருந்து விமானநிலையம் போகும்போது நாங்கள் வந்த வான் பழைய இலக்கத்தகடு என்றபடியால் அதற்கு இருக்கைப் பட்டிகள் அணியத் தேவையில்லை என்று சாரதி சொன்னார். இருந்தாலும் பழக்க தோசத்தில் அணிந்திருந்தேன். இடையிடை அது தானாகவே கழன்று கொண்டிருந்தது. தேடித்தேடி மீண்டும் மீண்டும் அணிந்தேன். பயணிகள் எல்லோரும் கட்டாயம் இருக்கைப் பட்டிகள் அணிய வேண்டுமென்றால் இலங்கையில் அநேகமான வாகனங்கள் ஓடவே முடியாது.

வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு.

3 months 1 week ago
இது நம்ம அண்ணன் அடிக்கடி சொல்லும் தெலுங்கு வந்தேறி எல்லொ😂.. பிகு தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டை கொழுத்தும் 🤣

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி

3 months 1 week ago
புஞ்சி அம்மே புருசர்கள் எல்லாம் ஒழுக்கம் பற்றி அட்வைஸ் 🤣

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

3 months 1 week ago
செம்மணியில் எடுக்கப்படும் மனித எச்சங்களை AI இல் மாற்றி அமைப்பதனை தவிருங்கள். எது உண்மை என்று கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கிறது. வேணுமென்றால் உங்கட படங்களை செய்து பாருங்கள். Suren Karththikesu இதை வைத்தே அனைத்தையும் பொய்யாக்க போகிறார்கள். Baheerathan Kanagaratnam

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

3 months 1 week ago
மேற்குலகினை எதிர்க்கிறோம் என்ற நினைத்துக் கொண்டு அவற்றிற்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டும். வடகொரியா ஈரான் போன்ற சர்வாதிக நாடுகள் தமது சொந்த மக்களையே அடக்குமுறைக்குள் வைத்துக் கொடுமைப் படுத்துபவை. நாளை இவற்றிற்கு மேற்குலகிற்கு நிகரான சக்தி கிடைக்குமாக இருந்தால் இவை தனது எதிரி நாடுகளை நட்புடன் கையாளும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது ? இதற்கு தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்திக்க வேண்டியதில்லை. அணுவாயுதம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஈரானின் கொள்கை தவறானது. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் அறிவியலில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைய முடிந்தால் ஈரானின் எதிர்காலத்துக்கு நல்லது. இன்று தனது சொந்த வான்பரப்புப் பாதுகாப்பையே முற்றாக இழந்து நிற்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படாது..

வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு.

3 months 1 week ago
வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு 50 களில் எழுதப்பட்ட வல்வெட்டித்துறையின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற கட்டுரை பல தகவல்களைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன: • அமைவிடம் மற்றும் பொதுத் தகவல்கள் ◦ வல்வெட்டித்துறை ஒரு துறைமுகப் பட்டினம். ◦ இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், காங்கேசந்துறையிலிருந்து கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகத் தெற்கே 30 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. ◦ இதன் பரப்பு 1 சதுரமைல். ◦ 1952 ஆம் ஆண்டு குடிசனமதிப்பின்படி, இங்கு 5,162 இந்து சமயத்தவர்களும் 122 கிறிஸ்தவ சமயத்தவர்களும் வாழ்கின்றனர். ◦ 1947 ஆம் ஆண்டு முதல் பட்டின சபையாலும், அதற்கு முன் சுகாதார சபையாலும் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. • பெயர் வந்த காரணம் ◦ 'வல்லி' என்னும் கால்நடை வியாபாரி பட்டி வைத்திருந்த இடமாதலால் 'வல்லிபட்டி' என அழைக்கப்பட்டு, துறைமுகம் ஏற்பட்ட பின் 'வல்லிபட்டித்துறை' என வழங்கி, பின்னர் 'வல்லிவெட்டித்துறை' எனத் திரிந்து, தற்காலம் 'வல்லுவெட்டித்துறை' என்றும் 'வல்வெட்டித்துறை' என்றும் வழங்கிவருகின்றது. ◦ இது சென்னபட்டினம் சென்னையெனச் சுருக்கி அழைக்கப்படுவது போல "வல்வை" என்றும் "வல்வை நகர்" என்றும் அழைக்கப்படுவதுமுண்டு. • ஆரம்பகால குடியேற்றம் - யுத்த வீரர்கள் ◦ ஆதியில் இவ்வூரில் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து ஊர்க்காவலுக்காக வரவழைக்கப்பட்ட போர் வீரர்களே. ◦ இவ்வீரர்கள் கடற்படை, தரைப்படை இரண்டிலும் சேர்ந்திருந்தவர்கள். ◦ உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாடிய "வல்வைக் கலித்துறை" எனும் செய்யுளில் இவ்வூரவர்கள் "ஊர்க்காவலர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். ◦ தஞ்சாவூர் நாய்க்கன் படைகளுடன் வல்வெட்டித்துறைக் கரையில் இறங்கியதாகவும், பறங்கியர் தலைவன் தெமோற்றோ திடீரென்று தாக்கி தமிழரை வெருட்டியடித்த செய்தி "யாழ்ப்பாணவைபவ கௌமுதி"யில் காணப்படுகிறது. ◦ இவ்வூருக்குப் பக்கத்திலுள்ள சமரபாகுதேவன் குறிச்சி, வென்றிபாகுதேவன் குறிச்சி, கல்லிடைத் தேவன் குறிச்சி போன்ற பெயர்களும் அப்பகுதிகளில் யுத்த வீரர்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன. • தொழில்களில் மாற்றம் ◦ நாட்டில் அமைதி நிலவியபின், யுத்த வீரர்களின் சேவை வேண்டப்படாமல் போனதால், அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடலாயினர். ◦ கப்பல் கட்டுதல் மற்றும் கப்பலோட்டும் தொழில்: ▪ பணக்காரராயிருந்தவர்கள் "திரைகடலோடியுந் திரவியம் தேடு" என்னும் ஔவையார் வாக்கின்படி கப்பல்கள் கட்டுவித்து வியாபாரம் செய்து பொருள் ஈட்டத் தொடங்கினர். ▪ கடற்படையிலிருந்தவர்கள் கப்பலோட்டும் தொழிலிலும் கப்பல்கட்டும் தொழிலிலும் ஈடுபட்டனர். ▪ "நாவாய் சாத்திரம்" என்னும் கப்பல் கட்டும் சாத்திரத்தைக் கற்ற மேத்திரிமார் பலர் வல்வெட்டித்துறையிலே இருந்தனர். ▪ பெரிய பாய்க்கப்பல்களைக் கட்டுவதில் வல்ல மேத்திரிமார் இலங்கையில் இவ்வூரிலன்றி வேறெங்கும் காண்பது அரிது. ▪ திசைகாட்டும் கருவி, மணிகாட்டும் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே விண்மீன்களின் உதவியால் திசையையும் நேரத்தையும் அறிந்து கப்பல்களைப் பல தூர தேசங்கட்குமோட்டிப் பெயர்பெற்ற மாலுமிகள் பலர் இங்கு இருந்தனர். ▪ இந்தியாவிலுள்ள கப்பல் வர்த்தகர்கள் இவ்வூரிலுள்ள மேத்திரிமாரை அழைத்துக் கப்பல்கள் கட்டுவித்து பெரும் சீர்வரிசைகள் வழங்கியுள்ளனர். ▪ கீரிமலையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலும் மடாலயமும் கட்டுவித்த வடிவேலு மேத்திரியார் மற்றும் எல்லாக் கிரகங்களினதும் கதிவக்கிரம் முதலியவற்றைக் காட்டவல்ல அதி நூதனக் கடிகாரத்தைச் செய்தவரும், தோட்டங்களுக்கு யந்திரம் மூலம் நீர் பாய்ச்சுவதற்குரிய யந்திரத்தை முதல் முதல் கண்டுபிடித்துச் செய்துதவியவருமாகிய வா. ஆறுமுகம் (பொன்னுச்சாமி மேத்திரியார்) ஆகியோர் இத்தகைய கௌரவம் பெற்றவர்களில் சிலர். வா. ஆறுமுகம் 1930 இல் காலமானார். ▪ நீண்ட காலமாக இவ்வூரவர்கட்கு நாட்டுக்கோட்டைத் தனவணிகர்கள் கப்பல் கட்டுவதற்குப் பணம் கடன் கொடுத்துதவி வந்திருக்கின்றனர். ◦ வேளாண்மை மற்றும் வியாபாரம்: தரைப்படையிலிருந்தோர் வேளாண்மை, வியாபாரம் முதலிய தொழில்களை மேற்கொண்டனர். • ஆலயங்கள் ◦ "கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கேற்ப இங்கு கோவில்களுக்குக் குறைவில்லை. ◦ முக்கியமான பெரிய ஆலயங்கள்: ▪ கிழக்குப் பகுதியில் நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில். ▪ மேற்குப் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில். ▪ முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவில். ▪ இம்மூன்று ஆலயங்களிலும் ஆண்டுதோறும் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. ▪ இலங்கையில் கோபுரம் கட்டப்பட்ட முதற் கோயில் இம்முத்துமாரியம்மன் கோயிலே. ▪ வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவிலில் நடைபெறும் ஆறுகாலப் பூசைக் கிரமங்களும், ஆகமசாத்திரங்களிற் கூறப்பட்டபடி அமைந்திருக்கும் ஆலய அழகும் பெரிதும் போற்றற்குரியன. ◦ சிறு ஆலயங்கள்: தில்லையன் மடத்து வயிரவர் கோவில், உலகுடைய பிள்ளையார் கோவில், சடையாண்டி வயிரவர் கோவில், வைகுந்தப் பிள்ளையார் கோவில், நறுவிலடிப் பிள்ளையார் கோவில், மீனாட்சியம்மன் கோவில், கப்பலுடைய பிள்ளையார் கோவில், புட்டணியுப் பிள்ளையார் கோவில் என வழங்கும் 8 சிறு ஆலயங்களும், ஓர் கத்தோலிக்க மதத்தினர்க்குரிய ஆலயமும் உள. ◦ திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையின் பங்களிப்பு: ▪ மேலே குறிப்பிட்ட சிவாலயம் திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையால் 1867 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1883 ஆம் ஆண்டு வைகாசியில் பிரதிட்டாபிடேகஞ் செய்விக்கப்பட்டது. ▪ இவ்வாலயத்து லிங்கம் "பாணலிங்கம்". காசிக்குச் சென்று கங்கையாற்றிலிருந்து இவ்லிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்துதவியவர் விசுவநாதர். ▪ ஆலயத் தூபித் தங்கக் கலசம், நடராஜர் முதலியவற்றை வார்ப்பித்துக் கொடுத்தவர் விசுவநாதரின் குமாரர் சரவணமுத்து. ▪ திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையை யாவரும் "பெரியவர்" என்றே அழைப்பது வழக்கம். இவரைப் பற்றிச் சிவசம்புப் புலவரவர்களால் பாடப்பெற்ற "வல்வைக் கலித்துறை"ப் பாடல்கள் உள்ளன. ▪ வைகாசி மாதத்தில் நிகழும் வற்றாப் பழைப் பொங்கலுக்காக கடல் மார்க்கமாகச் செல்பவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக முல்லைத்தீவுக் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மடாலயமும், ஒவ்வொருவரினதும் வருணாச்சிரமங்களுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கூடங்களும் இவரால் அமைக்கப்பட்டனவே. இவர் 1892 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார். ▪ இவரது தம்பியார் திரு. குழந்தைவேல் பிள்ளைதான் கொழும்பு செக்கடித் தெருவில் யாழ்ப்பாணித்தார் கோவில் என வழங்கும் சுப்பிரமணியர் ஆலயத்தைத் தாபித்தவர். இவர் அக்காலத்து இந்துஸ்தான் வங்கியில் சிறாப்பராகவும் பிரபலமான வியாபாரியாகவும் இருந்து கொழும்பிலுள்ள தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர். இவர் 1905 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார். • புலவர்களும் அட்டாவதானியும் ◦ ஆதியில் வட மராட்சிப் பகுதி மணியகாரராயிருந்து கடமை பார்த்த புண்ணிய மூர்த்தி மணியகாரனின் மகளை மணந்தவர் ஏகாம்பரப் புலவர். (இப்புண்ணிய மூர்த்தியார் வேங்கடாசலம் பிள்ளை, குழந்தைவேல்பிள்ளை ஆகியவர்களின் தந்தையாகிய திருமேனியாரின் மூத்த சகோதரர்). ◦ ஏகாம்பரப் புலவரின் சகோதரியுடைய மகன் ஏகாம்பரம் என்பவர்தான் இலங்கையில் முதல் முதல் "அட்டாவதானஞ்" செய்து காட்டி அரும்பெரும் புகழ் பெற்றவர். இவர் "அட்டாவதானியார்" என்றே அழைக்கப்பட்டு வந்தவர். ◦ இவர்களுக்குப்பின் ச. வைத்தியலிங்கம் பிள்ளை, த. அருணாசலம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, பொன்னையாபிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகிய புலவர்கள் இருந்திருக்கின்றனர். ◦ இவர்களுள் ச. வைத்தியலிங்கப் புலவர் குறிப்பிடத்தக்கவர். இவர் நாற்பொருட் கவிராச நம்பியகப் பொருள், வள்ளியம்மை தெய்வயானையம்மை திருமணப் படலம், கந்தரலங்காரம், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி முதலிய நூல்கட்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டதுமன்றி, "சிந்தாமணி நிகண்டு" என்னும் நிகண்டு ஒன்றும் யாத்து வெளியிட்டுள்ளார். ஈழ நாட்டில் நிகண்டு நூல் செய்த புலவர் இவரன்றி வேறு யாரும் இலர். ◦ இவர் தர்க்கத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கியவர். ◦ இவர் காலத்து நிகழ்ந்த பல சண்டைகள் தொடர்பான கண்டனங்களையும் துண்டுப்பிரசுரமாக வெளியிட்டுள்ளார். ◦ "சைவாபிமானி" என்னும் பத்திரிகையொன்றைச் சொந்த அச்சியந்திர சாலை நிறுவி அச்சிட்டுப் பத்து ஆண்டுகள் வெளியிட்ட பின்னர் 1901 ஆம் ஆண்டு காலமானார். ◦ ஏனைய புலவர்கள் இயற்றியவை அச்சுவாகனம் ஏறாததால் ஒன்றும் தெரியவரவில்லை. • கவிக்குக் கனசுந்தருதல் (கவிஞர்களுக்கு சன்மானம்) ◦ வல்வெட்டித்துறை கோ. கந்தசாமி என்பவர் மட்டக்களப்பில் பிரபல மர வியாபாரியாக விளங்கியவர். ◦ உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்கள் இவர் மீது "பிரபாவப் பாமாலை" ஒன்றை பாடிச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை புலவரை மட்டக்களப்புக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி சிறு பொருளுதவி செய்தார். ◦ புலவர் சில மாதங்கள் கழித்து மட்டக்களப்புக்குச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை இல்லாத நிலையிலும், அவரது மனைவி சொன்ன சொற்படி ஆயிரம் ரூபாயை வழங்கினார். • கல்விச்சாலைகள் ◦ "சிதம்பர வித்தியாலயம்" என வழங்கும் ஓர் ஆங்கிலக் கல்லூரியும். இது 1896 இல் திரு. கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் நிறுவப் பெற்றது. பின்னர் அவரது மைத்துனர் திரு. ஞா. தையல்பாகர் அவர்களின் பரிபாலனத்தின் கீழ் வளர்ந்து வருகின்றது. ◦ "சிவகுரு வித்தியாசாலை" என வழங்கும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். இத்தையல்பாகர்தான் சிவகுரு வித்தியாசாலையைத் தாபித்தவர். ◦ அமெரிக்கன் மிஷனரிமாரால் நடத்தப்படும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். ◦ கத்தோலிக்க மதத்தினரால் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ்ப் பாடசாலையும் உள. ◦ திரு. ஞா. தையல்பாகர் தனது உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் வித்தியாசாலைகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணம் செய்து அரும் பாடுபட்டு வருகின்றார். • முக்கியமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள் ◦ இவ்வூரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலப்பு மணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை. ◦ உள்ளூரவர்களே எல்லாவிதமான வியாபாரங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர். ◦ அரசாங்க சேவையில் ஈடுபாடு: ▪ பண்டைக் காலம் தொடங்கி இவ்வூரவர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளனர். ▪ திருமேனியாரின் தாயாருடன் கூடிப் பிறந்த பொன்னம்பலம் என்பவர் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரபல வியாபாரியாக விளங்கியதுடன், ஒல்லாந்த அரசாங்கத்தாரால் "முதலியார்" பட்டம் வழங்கப்பெற்றார். ▪ இவருக்குப்பின் வேலுப்பிள்ளை என்பவரும் அவருக்குப் பின் புண்ணியமூர்த்தி என்பவரும் மணியகாரராயிருந்தவர்கள். ▪ இன்னும் இவ் வல்வெட்டித்துறை வாசிகள் பலர் இலங்கை அரசாங்க சேவையில் எல்லாத் துறைகளிலும் அமர்ந்து சேவை செய்து வருகின்றனர். ▪ மலாயா, பர்மா முதலிய இடங்களிலும் பலர் இருக்கின்றனர். ▪ இந்தியாவுக்கும் இவ்வூரவர்கட்குமுள்ள தொடர்பு இன்றும் இருந்து வருகின்றது. ◦ சமூக பங்களிப்புகள்: ▪ இவ்வூரவரொருவர் (முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை) ஒரு லட்சம் ரூபாய் செலவில் **"இந்திராணி வைத்தியசாலை"**யைக் கட்டி அரசினரிடம் ஒப்புவித்துள்ளார். ▪ "ஜனசமூக நிலையம்" (Community Centre) ஒன்று ஊரவர்களால் ரூ. 13,500 செலவில் கட்டிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண புலனாய்வு ·

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 months 1 week ago
தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது 01 JUL, 2025 | 03:57 PM எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் 7 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று (30) இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் ஏழு பேரும் இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரகள் என தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/218938

கனடா தின வாழ்த்துச் செய்தி - உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ்

3 months 1 week ago
இலங்கையில் கனடாவின் இருப்பு எமது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் அடித்தளமாக காணப்படுகின்றது : கனடா தின வாழ்த்துச் செய்தியில் உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் 01 JUL, 2025 | 10:45 AM இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம் என இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், கனடா தினத்தை முன்னிட்டு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உலகம் முழுவதும் உள்ள கனேடியர்கள் ஒருமித்தாகக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நாளில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் வாழும் அனைத்து கனேடிய பிரஜைகள் மற்றும் இந்த தினத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் கனடா தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார். கனடா தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துக் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கனடா தினம் என்பது நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் முக்கியமான மதிப்புகளை பன்முகத்தன்மை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, மனித உரிமைகளுக்கான மரியாதை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்முடைய நீடித்த அர்ப்பணிப்பு பிரதிபலிக்கக் கூடிய சிறப்பான ஒரு வாய்ப்பாகும். இந்த தினம், நமது நாடு இன்று இருக்கும் நிலையில் அடித்தளமிட்டு, அதன் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய முன்னோடி தலைமுறைகளின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் தருணமாகவும், கூட்டமைப்பிற்கு முந்தையதும் பிந்தையதுமான வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்வதற்கான வலிமையையும், ஞாபகப் பாக்கியத்தையும் கௌரவிக்கும் ஒரு சிறப்புநாளாகவும் அமைகிறது. கனடாவின் துடிப்பான உருவாக்கத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். கல்விக் கூட்டாண்மைகள், அபிவிருத்தி ஒத்துழைப்புகள், பாலியல் சமத்துவம் மற்றும் சமநிலை மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த உலகத்தை நோக்கிய பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் ஊடாக, கனடாவும் இலங்கையும், மாலைத்தீவுகளும் வலுவான உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலிருந்து காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவருவதும், அதே சமயம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை தொடர்ந்து செழித்து வளரும் எங்கள் கூட்டுறவுகள் குறித்து நான் பெருமை அடைகிறேன். இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் இந்தோ - பசிபிக் வர்த்தக பிரதிநிதி இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் விஜயம் செய்தமையில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விஜயம், கனடாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிலும் குறிப்பாக இலங்கையில் வேரூன்றியவர்களின் இந்த நாட்டில் முதலீடு செய்யவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் காணப்படும் ஆழமான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டில் கனடாவின் இந்தோ - பசிபிக் மூலோபாயம் (Indo-Pacific Strategy) ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இந்த பிராந்தியத்தின் மக்களுடனான எங்களது உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பை ஆதரிப்பதில் எங்கள் பங்களிப்பை ஆழப்படுத்தவும், கனடா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடா தினத்தைக் கொண்டாடும் அனைவரும் நீங்கள் எங்கு இருந்தாலும் இது, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எட்டிய சாதனைகள் குறித்து சிந்திக்கவும், எதிர்காலத்தில் எதைச் சாதிக்க வேண்டும் என்பதை நினைவு கூரவும் உதவும் ஒரு அரிய தருணமாக அமைய வேண்டும் என கனேடிய உயர் ஸ்தானிகர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218900

வர்த்தகம், முதலீடுகளை விரிவுபடுத்துவது குறித்து இந்திய தொழில்துறை சம்மேளன அதிகாரிகள் குழுவுக்கும் பிரதமர் ஹரிணிக்கும் இடையில் சந்திப்பு

3 months 1 week ago
01 JUL, 2025 | 09:51 AM இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தூதுக்குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையேயான விசேட சந்திப்பு ஜூன் 30ஆம் திகதி இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, குறிப்பாக பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கும் அதன் வளர்ச்சிக்காகவும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் தனது பாராட்டினைத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் மூலம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகள் மேலும் பலப்பட்டுள்ளதாக இந்திய தூதுக்குழு இங்கு மேலும் உறுதிப்படுத்தியது. தொழில்நுட்பம், உற்பத்தி, கல்வி, புத்தாக்கம், தொழில்முனைவு, விவசாயம், வலுசக்தி மற்றும் சுற்றுலா துறை போன்ற முக்கிய பிரிவுகள் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் இந்திய உயர்மட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளும், இலங்கை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளியுறவு அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிலூக்க கதுருகமுவ மற்றும் அதே அமைச்சின் தெற்காசிய பிரிவின் துணை பிரதி பணிப்பாளர் பிரசாந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218895

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

3 months 1 week ago
இதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான பொய்யான பரப்புரைகள் பரப்புவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான பரப்புரைகள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்க ஏன் முன்வரவில்லை?? உதாரணமாக: இவை புலிகளால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள், மற்றும் சிங்கள இராணுவத்தினர் என்பதான பரப்புரைகள்.😲

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள்! 01 JUL, 2025 | 09:48 AM செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் ஏற்கனவே 22 எலும்புக் கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்புக் கூடுகளில் நேற்றைய தினம் வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், புதிதாக எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/218897

யாழ். அராலியில் குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

3 months 1 week ago
குறி சொல்லும் கோவிலில் பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு; வெளியாகிய காரணம்! Published By: VISHNU 01 JUL, 2025 | 04:35 AM குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. மரண விசாரணைகளின்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் நாய்கடிக்கு இலக்காகியுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தவகையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த நாய் மேலும் சிலருக்கு கடித்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/218891

கச்சத்தீவை மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க எவராலும் முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 1 week ago
Published By: VISHNU 01 JUL, 2025 | 04:28 AM "சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது" - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "எமது வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய ரோலர் படகுகள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இதனால் கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சனத்தொகையில் 30 சதவீதமானோர் கடற்றொழிலையே நம்பி உள்ளனர். எனவே, இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். தமிழ் நாட்டில் தேர்தலொன்று நெருங்கும்வேளை கச்சத்தீவு விவகாரம் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும், அதனை மீளப்பெறுவோம் என்றெல்லாம் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வாக்கு வேட்டை நடத்தப்படும். இது எந்நாளும் கூறப்படும் கதையாகும். எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு கருத்தை வெளியிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் ரோலர் படகுகள்மூலம் மீன்வளத்தை மட்டுமல்ல எமது கடல்வளத்தையும் நாசமாக்குகின்றனர். இந்நிலைமை தொடர்ந்தால் இன்னும் 15 - 20 வருடங்களில் எமது கடல்வளம் பாலைவனமாகிவிடும். அதேவேளை, இராஜதந்திர ரீதியில் - சட்டப்பூர்வமாக - சர்வதேச சட்டத்தின் பிரகாரமே இலங்கைக்கு கச்சத்தீவு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அதனை எவராலும் மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது."- என்றார். https://www.virakesari.lk/article/218890
Checked
Mon, 10/13/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed