3 months 1 week ago
தலை தடைகள் எல்லாம் தாண்டி அரசியலில் தொடர்ந்து நிலைப்பார் என்றே தோன்றுகின்றது.
3 months 1 week ago
உண்மை மேலே ஏராளன் கட்டுரையில் சொல்லபட்டது போல வெற்றியும் கவுரவமும் எவ்வளவு பகட்டாக பணம் செலவு செய்து செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று வெளிநாட்டில் தமிழர்கள் நம்பி செய்வதை காணகூடியதாக உள்ளது
3 months 1 week ago
நல்ல செய்தி
3 months 1 week ago
எதையும் இலகுவாக சொல்லலாம்.போராட்டம் என்று வரும் போது கூட எவ்வளவு தூரம் அந்த குடும்பம் பின்னோக்கி சிந்திக்கிறது என்பதை பொறுத்தது தான் பெண்ணின் அடுத்த கட்ட முன்னேற்றம் இருக்கிறது.அது யாராக இருந்தாலும் அந்தந்த துன்பங்களை அனுபவிப்பர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
3 months 1 week ago
02 JUL, 2025 | 05:27 PM (எம்.மனோசித்ரா) செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி – மனித புதைக்குழி தொடர்பில் ஜூன் 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சினால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம். தற்போது இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எம்மால் வேறு கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. எவ்வாறிருப்பினும் இது குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். செம்மணி – சித்துபாத்தி பகுதியில் இனங்காணப்பட்ட மனித புதைக்குழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் சிறுவர்கள் பயன்படுத்தக் கூடியவாறான நீல நிற பையொன்று மீட்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (01) பொம்மை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையிலேயே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219028
3 months 1 week ago
அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )
3 months 1 week ago
STUMPS • Starts 3:30 PM 2nd Test, Birmingham, July 02 - 06, 2025, India tour of England Day 1 - England chose to field. India (85 ov) 310/5 Current RR: 3.64 • Last 10 ov (RR): 48/0 (4.80) Shubman Gill* (rhb) 114 216 12 0 52.77 Ravindra Jadeja (lhb) 41 67 5 0 61.19 England
3 months 1 week ago
02 JUL, 2025 | 06:08 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'நாகரிகமான பிரஜை - முன்னேற்றகரமான மனிதவளத்தை' உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக உயர்தர பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களைப் பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்;க்கப்படுகின்றது. உயர்தர பரீட்சையில் பிரதான பாடத்துறைகளின் கீழ் உயர்வான இசட் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. குறித்த விண்ணப்பங்களில் பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கூடிய தேர்ச்சிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/219040
3 months 1 week ago
"காஸாவில் போர் நிறுத்தம்" - இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் ஜேம்ஸ் சேட்டர் பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் செய்வதற்கான "அவசியமான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தின் போது, "போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம்", என ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் டிரம்ப் தெரிவித்தார். "அமைதியை கொண்டு வர மிகக் கடுமையாக பணியாற்றிய கத்தார் மற்றும் எகிப்தியர்கள் இறுதி முன்மொழிவை தருவார்கள். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன், ஏனென்றால் இது இதைவிட சிறந்ததாக மாறாது, இதைவிட மோசமானதாகத்தான் மாறும்," என டிரம்ப் தனது பதிவில் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் உறுதி செய்யவில்லை, அதே நேரம் ஹமாஸிடமிருந்தும் எந்த உடனடியான கருத்தும் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம் என டிரம்ப் தெரிவித்தார். இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் 'பணயக் கைதிகளை மீட்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு' அரசாங்கத்தில் பெரும்பான்மை உள்ளது மற்றும் இந்த வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அடுத்த வாரம் சந்திக்கவிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் "மிகவும் உறுதியாக நடந்துகொள்வேன்" என டிரம்ப் தெரிவித்திருந்தார். காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர நெத்தன்யாகு விரும்புகிறார் என தாம் நம்புவதாக டிரம்ப் செவ்வாய்கிழமை தெரிவித்தார். "போரை நிறுத்த அவர் விரும்புகிறார் என என்னால் சொல்ல முடியும். அடுத்த வாரம் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன், " என டிரம்ப் மேலும் கூறினார். இஸ்ரேலின் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரான் டெர்மர் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோரை வாஷிங்டனில் சந்திக்கவிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். முன்னதாக ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். பிபிசி செய்தி சேனலில் பேசிய டேனான், ஹமாஸ் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறினார். "நாங்கள் ஹமாஸ் மீது அழுத்தம் தருகிறோம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், பணயக்கைதிகளை திரும்ப கொண்டுவர எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கூடுதலாக ராணுவ அழுத்தத்தை தருவதுதான்," என்றார் டேனன். "பணயக்கைதிகள் வீடு திரும்பியதும் போர் முடிவுக்கு வரும்," என அவர் மேலும் கூறினார். காஸாவில் இன்னமும் சுமார் 50 பணயக்கைதிகள் இருக்கின்றனர், இவர்களில் குறைந்தது 20 பேர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. காஸாவில் புதிய போர்நிறுத்தம் ஏற்படுத்தவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் மத்தியஸ்தர்கள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனஎர். ஆனால் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கடந்த வாரம் தெரிவித்தார். ஹமாஸ் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர்தான் போர் முடிவுக்கு வரமுடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நிரந்தர போர்நிறுத்தமும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறவேண்டும் என்பதையும் ஹமாஸ் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க வடக்கு காஸாவில் மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட பின்னர் டிரம்பின் கருத்துகள் வெளிவந்துள்ளன. திங்கட்கிழமை காஸா நகரில் கடற்கரையை நோக்கி அமைந்துள்ள ஒரு உணவகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், நேரடிச் சாட்சிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கூற்றுப்படி குறைந்தது 20 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலைத் தொடங்கியது. அந்த பகுதியில் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி அப்போதிலிருந்து காஸாவில் குறைந்தது 56,647 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிவாரண முகாமில் உணவு பெற காத்திருக்கும் மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (Gaza Humanitarian Foundation - GHF) காஸாவில் நடத்தும் உதவி விநியோக மையங்களை அணுகும் பொதுமக்கள் "பாதிக்கப்பட்டதாக" வெளியான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் இந்த வாரம் தெரிவித்தது. ஜூன் 28 வரை ஜிஹச்எஃப் முகாம்களுக்கு நிவாரணம் பெறச் செல்ல முயன்று 408 போர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. 170-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சர்ச்சைக்குரிய இந்தக் குழு மூடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. உதவி தேடி வரும் பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் "வழக்கமாக" துப்பாக்கிச்சூடு நடத்துவதாக ஆக்ஸ்ஃபேம் (Oxfam), சேவ் த சில்ரன் (Save the Children) போன்ற அமைப்புகள் சொல்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இஸ்ரேல், உதவி விநியோகத்தில் ஹமாஸின் தலையீட்டை தவிர்க்க இந்த அமைப்பு தேவையானது எனக் கூறுகிறது. மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவின் மீது புதிய தாக்குதல்களை தொடுத்தபோது முந்தைய போர்நிறுத்தம் தோல்வியடைந்தது. " பயங்கரவாத தாக்குதல்களை நிறைவேற்றவும், படைகளை திரட்டவும், மீண்டும் ஆயுதமேந்தவும் ஹமாஸின் தயார்நிலையை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட முன்கூட்டிய தாக்குதல்கள்" என்று இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய ராணுவம் விவரித்தது. ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட முந்தைய சண்டைநிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்படவிருந்தது, ஆனால் முதல் கட்டத்தைக் கூட தாண்டவில்லை. நிரந்தர போர்நிறுத்தம், காஸாவில் உயிரோடு இருக்கும் பணயக்கைதிகளை, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு மாற்றிக்கொள்வது, இஸ்ரேல் படைகள் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேறுவது ஆகிய சண்டை நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் இடம் பெற்றிருந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg5dyjgdx6o
3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். கட்டுரை தகவல் அமீர் அஹ்மது பிபிசி உலக சேவை 2 ஜூலை 2025, 02:48 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். அது உங்கள் உடல் முழுவதற்கும் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை ரத்தத்தின் மூலம் கொண்டு செல்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்க கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் (CVDs) எனப்படும் இதய நோய்கள்தான் இறப்புக்கான முக்கிய காரணம். ஐந்தில் நான்கு கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன. இதயநோய் மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் தினமும் செய்யக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமான இதயம் என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கும். "நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் இளம் வயதிலேயே இதயத்துக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் குறைக்கலாம்," என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த இதயநோய் மருத்துவரான எவன் லெவின். ஆனால், இது ஆரோக்கியமான இதயம் உங்கள் மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும் என சொல்லுமளவு எளிதானதா என்கிற கேள்வியும் உள்ளது மாரடைப்பு என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவசர உதவியை அழைக்க வேண்டும் இதயத்துக்கான ரத்த ஓட்டம் திடீரென தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்துக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது, இதய தசைகள் சேதமடையலாம் அல்லது இறக்க தொடங்கலாம். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் இதயத்தின் தசைகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தைச் சந்திக்கலாம். இதயத்தின் ஒரு பெரும் பகுதி இதுபோல் சேதமடைந்தால், மரணத்தை விளைவிக்கும் வகையில் இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது (இது கார்டியாக் அரெஸ்ட் அல்லது மாரடைப்பு என அழைக்கப்படுகிறது). மாரடைப்பு மரணங்களில் பாதி, அறிகுறிகள் ஏற்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் நிகழ்கின்றன. எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகள் மருத்துவ அவசரமாக கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பது முக்கியம். பிளேக்ஸ் (plaques) எனப்படும் கொழுப்புப் பொருள்கள் இதய ரத்த நாளங்களில் தேங்கி, ரத்தம் எளிதில் பாய முடியாத அளவு அதனை குறுகலாக்கும் கரோனரி இதய நோய்தான் மாரடைப்புக்கு பொதுவான காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் சுமார் 805,000 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதில், 605,000 பேர் முதல் முறையாக மாரடைப்பை அனுபவிக்கிறார்கள், 200,000 பேர் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிக்கு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு வரலாம் என்பதை ஒருவர் அறிவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பின் வலி நெஞ்சிலிருந்து கைகளுக்குச் செல்லலாம் மாரடைப்பு பலவிதமான அறிகுறிகளுடன் ஏற்படலாம், இதில் மிகவும் பொதுவானது மார்பு வலி – ஆனால் இது ஒரு கூர்மையான வலியாக மட்டும் இல்லாமல் மார்பு முழுவதும் கடுமையான அழுத்தம் மற்றும் இறுக்கமாக இருக்கும். சில பெண்கள் இந்த மார்பு வலியோடு, கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வலியை உணரலாம். கலிபோர்னியாவைச் சேர்ந்த இதயவியல் மருத்துவர் ஐலின் பார்சேகியன், மாரடைப்பு தொடக்கத்தில் அஜீரணக் கோளாறு என தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறுகிறார். ஆனால், அஜீரணக் கோளாறு போலல்லாமல் இடது கை, தாடை, முதுகு மற்றும் வயிறு போன்ற உங்கள் உடலின் பிற பகுதிகளிலும் மாரடைப்பு பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகிறது. தலைச்சுற்றல், அதிக வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையும் இதில் அடங்கும். மாரடைப்பு திடீரென ஏற்பட்டாலும், சமயங்களில் பலமணி நேரம் அல்லது பல நாட்களுக்கு முன்பே கூட எச்சரிக்கை அறிகுறிகள் தென்படலாம். ஓய்வு எடுத்தாலும் நெஞ்சுவலி சரியாகாவிட்டால் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். "மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, ரத்த ஓட்டம் சீரமைக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட இதய தசைகள் இறக்கத் தொடங்கலாம், அவசர மருத்துவ பணியாளர்கள் வரும்வரை ஒரு ஆஸ்பிரினை மெல்லும்படி நான் அறிவுறுத்துகிறேன்," என்கிறார் மருத்துவர் ஐலின் பார்சேகியன். உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். "உங்கள் வயது, எடை, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்களுக்கு எதிராக இருந்து, மார்பு அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழையுங்கள்," என்கிறார் அமெரிக்க இதயநோய் நிபுணர் மருத்துவர் இவான் லெவின். மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியமானதாகிறது. உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது உட்பட மாரடைப்பு அபாயத்தையும் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்வதற்காக உங்கள் ரத்தத்தில் காணப்படுவதுதான் (கொழுப்பு) கொலஸ்ட்ரால். அதே நேரம், சில வகை கொழுப்பு அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. நமது இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தினசரி வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய ஒன்று என இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகமுள்ள உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால் தினசரி உட்கொள்ளும் உப்பின் அளவு 6 கிராமுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நிறை கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த உணவுகளில் இறைச்சி பை (meat pie), கேக்குகள், பிஸ்கட்கள், சாசேஜ்கள், வெண்ணெய் மற்றும் பனை எண்ணெய் உள்ள உணவுகள் அடங்கும். நிறைவுறாத கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மற்றும் ரத்த நாள அடைப்புகளை நீக்க உதவக் கூடியவை என்பதால் சமச்சீரான உணவாக அவை சேர்க்கப்பட வேண்டும். இந்த உணவுகளில் எண்ணெய் மீன்கள், அவகேடோ, கொட்டைகள் மற்றும் காய்கறி எண்ணெய்கள் அடங்கும். ஆரோக்கியமான உணவை வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான எடை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 30 நிமிடம் வீதம் வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி செய்வதை இதயநோய் மருத்துவ நிபுணர் இவான் லெவின் பரிந்துரைக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு "எப்போதும்" புகைப்பிடிக்கவோ அல்லது வேப் (Vaping) செய்யவோ கூடாது என்பதுதான் அவரது மிக முக்கிய அறிவுறுத்தல். 24,927 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சிகரெட்டுகளை மட்டும் புகைப்பவர்களுக்கு உள்ள இதய நோய் அபாயம் இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கும் இருப்பதாக அமெரிக்க இதய சங்கம் தெரிவிக்கிறது. இருப்பினும் இ-சிகரெட்டுகளை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30-60% குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, ஏற்கெனவே ஒரு மாரடைப்பை அனுபவித்தவர்களில், சுமார் ஐந்தில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டாவது மாரடைப்புக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகளுக்கு ஸ்டேடின்கள் மற்றும் எஸெடிமிப் (ezetimibe) மருந்துகளை பரிந்துரைப்பது இரண்டாவது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரண்டு மருந்துகளும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள். "எல்டிஎல் (LDL) கொலஸ்ட்ரால் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவு இதய கோளாறுகளின் அபாயம் குறைகிறது என்பதை பல பத்தாண்டுகளின் தரவு காட்டுகிறது," என்கிறார் டாக்டர் ஐலின் பார்சேகியன். இளம் தலைமுறையினரிடம் மாரடைப்பு அதிகரிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளைஞர்களின் வாழ்க்கை முறை மாரடைப்பை அதிகரிப்பதில் பங்கு வகிப்பதாக இதய நோய் மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர். மாரடைப்பு அபாயம் பொதுவாக வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, ஆனால் அமெரிக்க தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் (US National Center for Health Statistics) தரவுகள் இளைஞர்களிடையே மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. 2019இல், 18 முதல் 44 வயது வரையிலானவர்களில் 0.3% பேர் மாரடைப்பை அனுபவித்தனர். 2023ஆம் ஆண்டு இது 0.5% ஆக உயர்ந்தது. 2019-ல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 0.3% பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டில் இது 0.5% ஆக அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்புக்கு, இந்த வயதினரிடையே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் அதிகரித்தது மற்றும் உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களைக் காரணமாக கூறுகிறார் மருத்துவர் இவான் லெவின். "நாம் அனைவரும் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, ஆனால் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். கோவிட்டுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் நச்சான, அதிகம் நகரவே தேவையில்லாத உடல் இயக்கமே இல்லாத வாழ்க்கை முறைக்குள் செல்வது கவலை அளிக்கிறது," என்கிறார் அவர். இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கும் அத்திரோஸ்கிளிரோசிஸ் (atherosclerosis) உருவாக்குவதற்கு புகைப் பிடிப்பது ஒரு காரணியாக அறியப்படுகிறது, ஆனால் இளைஞர்கள் மீது வேப் (vapes) பயன்படுத்துவதன் அறியப்படாத தாக்கம் பற்றிய கவலைகளும் மருத்துவர் இவான் லெவின் போன்ற இதயநோய் நிபுணர்களுக்கு உள்ளது. டாக்டர் ஐலின் பார்சேகியன் கூறுகையில் "பரம்பரை ஹைப்பர்லிபிடமியா (familial hyperlipidaemia) போன்ற மரபணு ஆபத்து காரணிகளும் இள வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் போன்ற சூழல்களும் இதற்கு பங்களிக்கின்றன என்று புரிந்து கொள்ளப்படுகிறது." என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdd5y14ppo
3 months 1 week ago
உனக்கு என்ன பேரம்மா ? அல்லதுAI விளையாட்டா ? 😃
3 months 1 week ago
ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி எல்லோர் வாழ்விலும் இதை நினைவில் கொள்ளுங்கள். உனக்காக நீ போராடு ....மிகவும் விருப்பமான ஒரு சொற் பதம் என் வாழ்விலும் நடந்திருக்கிறது போராடி எடுத்த ஒரு விடயம்.
3 months 1 week ago
வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு? வரதட்சிணை கொடுமையால் உயிரிழப்புகள் ஏற்படுவது நம் நாட்டில் அரிதான நிகழ்வொன்றும் அல்ல. அது ஊடகத்தின் ‘பிரதான கவனம்’ பெறுவதுதான் அரிதான நிகழ்வு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருமணமான 4-ம் நாளில் 24 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கும், 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ரிதன்யா தற்கொலை செய்யப்பட்டதற்கும் இந்தச் சமூகம் ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே மாதிரியான அக்கறையோடு கருத்துகள் தெளிக்கப்படவில்லை. எதிலும் அரசியல் என்பதுபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் எதற்கு அதிக கவனம் என்பதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்றாலே பெரும் அரசியல்தான். 100+ சவரன் நகை என்பதால் கேரளத்து விஸ்மயாவையும், தமிழகத்து ரிதன்யாவையும் ஹைலைட் செய்துவிட்டு வெறும் 1 பவுன் நகை என்பதால் திருவள்ளூர் மகேஸ்வரியை துணுக்குச் செய்தியாக்காமல் இருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு உட்பட்ட நடக்கும் ஒவ்வொரு வரதட்சிணைக் கொடுமையையும் அதே முக்கியத்துவதோடு அணுகும்போது சமூகத்தில் அது அடிக்கடி பேசப்படும் பொருளாகும். வரதட்சிணைக் கொடுமைகளில் ஈடுபட நினைப்போருக்கு சமூகப் பார்வை நம் மீது இருக்கிறது என்று உள்ளூர ஓர் அச்ச உணர்வு ஏற்படக் கூடும் என்ற அக்கறையை பதிவு செய்து கொண்டு, ‘வரதட்சிணை கொடுமைக்கு பெண்கள் ‘பலி’ ஆக பெற்றோரும் காரணமா?’ என்ற வாதத்துக்கு நகர்வோம். ரிதன்யாவும் பெற்றோரும்.. - “மாற்று வாழ்க்கையை அமைப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. என் பொண்ணு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லி இறந்துட்டா. அதுல எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. பெண்ணை இழந்தால் கூட. அதேமாதிரி எல்லா பொண்ணும் இருக்கணும்னு நான் நினைக்கல. வாழுறதுக்கு வழி இருக்கு. வாழலாம். தன் வாழ்க்கைய மாய்ச்சுதான் இந்த உலகத்தைவிட்டுப் போகணும்னு முடிவெடுப்பது தவறுதான்” - சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் ரிதன்யாவின் தந்தை பேசிய வீடியோவில், அவர் இவ்வாறு கூறுவது பதிவாகியுள்ளது. அவரது இந்தப் பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. உண்மையில் ஓர் அரதப் பழசான, ஆணாதிக்கம் தடித்த வாக்கியம் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம். எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர், 12-ம் வகுப்பு படிக்கும் மகளின் திருமணம் பற்றி அடிக்கடி கனவுகளோடு பேசுவார். “என் மகளுக்கு 300 பவுனாவது நகை போட்டு, ஜாம் ஜாம்னு திருமணம் செய்ய வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார். அவர் 40+ இளைஞர்தான். படித்தவர். வியாபாரத்தில் வெற்றி கண்டவர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி விசிட் கொடுப்பவர். செல்போன் முதல் கார் வரை எல்லாவற்றையும் லேட்டஸ்டாக அப்கிரேட் செய்பவர். ஆனால், அவர் வரதட்சிணை ஐடியாலஜியை மட்டும் சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை. அதாவது, அவரது வெற்றியும், கவுரவமும் மகளின் திருமணத்தை எவ்வளவு பகட்டாகச் செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று நம்புகிறார். அல்லது, அவ்வாறு நம்ப இந்தச் சமூகத்தால் பழக்கப்படுத்தப்பட்டுள்ளார். 5 பவுனோ, 500 பவுனோ மகளை கல்யாணச் சந்தையில் வியாபாரம் செய்துவிடுவதுதான் தகப்பனின் தலையாயக் கடமையாக இருக்கிறது. இதில் ரிதன்யாவின் தந்தையோ, மகேஸ்வரியின் தந்தையோ விதிவிலக்கல்ல. மகளுக்கு வரதட்சிணை கொடுப்பது ஒரு குற்றம் என்று புரியாமலேயே அதை ஊக்குவிக்கும் அனைத்து பெற்றோருமே வரதட்சிணை மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் தான். வரதட்சிணை கொடுப்பது குற்றம் என்பதால், வரதட்சிணை மரணங்கள் நிகழும்போது பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்வதும் வழக்கத்துக்கு வர வேண்டும். மகளை தொலைத்த துயரத்தில் இருப்பவர்களுக்கா? என்று கேட்காமல், இதை ஊக்குவிக்க வேண்டும். பெண்ணின் பெற்றோர்கள் எப்படி வரதட்சிணையை தங்களின் பெருமித அடையாளமாகக் கருதுகிறார்களோ, ஆணின் பெற்றோர்கள் வரதட்சிணையை அவர்களின் உரிமையாகக் கருதுகிறார்கள். அந்த வகையில், வரதட்சிணைக் கொடுமைகளுக்கு பெருங்காரணம் ஆணின் பெற்றோர் தான் என்றால் அது மிகையாகாது. தங்கள் மகனை எத்தனை பணத்துக்கு வியாபாரம் செய்யலாம் என்று கணக்குப் போடுபவர்கள் அவர்கள்தான். வரதட்சிணை கேவலம் என்று எந்த ஆண் மகனின் பெற்றோரும் அவரிடம் சொல்வதாகத் தெரிவதில்லை. மாறாக “உனக்கு இருக்கும் அழகுக்கும், சம்பாத்தியத்துக்கும்.. ” என்று கல்யாணச் சந்தையில் தன்னை ஒரு “பிராண்டாகக்” கருதப் பழக்குவதே ஆணின் பெற்றோர்கள் தான். திருமணத்துக்கான தகுதி என்பது பெண்ணை இணையராக நடத்தும் பக்குவம் மட்டுமே. இதை எத்தனை பெற்றோர் ஆண் பிள்ளைக்கு சொல்லி வளர்க்கிறார்கள். அப்பா, அண்ணன், அக்கா / தங்கையின் கணவர் எப்படி வாழ்க்கைத் துணையை நடத்துகிறார்களோ அப்படியே தனக்கு வரும் பெண்ணையும் அணுகுவது அவனுக்கு இயல்பானதாக இருக்கிறது. மேலும், மனைவி என்றால் நம் பாலியல் தேவைக்கான நுகர்பொருள் என்ற போக்கும் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுகிறது. பெண்ணின் மனது என்னவென்பதை தாராளமாக வெளிப்படையாக தாய் தன் மகன்களிடம் பேசலாம். குற்றாச்சாட்டுகளை சுமத்தும் முன்... - ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம் எல்லாம் 27 வயதான, கல்லூரி படிப்பு முடித்த, கார் ஓட்டத் தெரிந்த, தந்தையின் தொழிலை நிர்வகித்து பழக்கமுள்ள, வசதியாக வளர்ந்த பெண்ணின் மனதில் பதிவாகிறது என்றால், அதற்கு குடும்பச் சூழலும் தூபம் போடாமல் இருந்திருக்க முடியாதல்லவா? ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு இயல்பாகக் கடத்தப்பட்டுவிடும். சிலர் மட்டுமே கல்வி, வாசிப்பு என்ற சிறகை விரித்து தேவையற்றதை விட்டொழிப்பார்கள், இல்லை குடும்பத்துக்கே புரிய வைப்பார்கள். ரிதன்யாவுக்கு என்ன மாதிரியான பழக்கவழக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன என்பது வெளியில் இருந்து இந்த தற்கொலை விவகாரத்தை அணுகும் நமக்கு முழுமையாகத் தெரியாது என்றாலும் கூட மகளின் மரணத்துக்கு அவர் சொன்ன காரணத்தை உயர்த்திப் பிடிக்கும் தந்தையின் பேச்சு பிற்போக்கானது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. அதேவேளையில் தற்கொலை முடிவு தவறானது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை ரிதன்யாவின் தந்தை கூறியுள்ளார். மறுமணம் அவரவர் விருப்பம் என்பதிலும் உடன்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்தும் முன்னர் அவருடைய இந்த நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டுவது அவசியம். நமக்கு நாமே... - பெண் சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் தானமாகக் கொடுப்பது அல்ல. இந்தா வைத்துக் கொள் என்று யாரும் நமக்கு பொட்டலம் கட்டிக் கொடுக்க மாட்டார்கள். பெண் சுதந்திரத்துக்கான பெரிய திறவுகோல் கல்வி. கல்லூரிக் கல்விவரை இன்றைய பெண்கள் கற்பது எளிதாகவே வசப்படுகிறது. கல்லூரியில் நீங்கள் என்னப் பாடம் வேண்டுமானாலும் படியுங்கள், ஆனால் அங்கேயும் சென்று பணக்காரர்களாக திரள்வது, ஊர்க்காரர்களாக திரள்வது, சாதிக்காரர்களாக திரள்வது என்று சுருங்காதீர்கள். பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசியுங்கள். சினிமா, பொழுதுபோக்கு தாண்டி அரசியல் பேசுங்கள். இன்னமும் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்று கூடத் தெரியாமல் பட்டம் பெறும் மாணவிகள் உள்ளனர். நீங்கள் பெறும் பட்டம், திருமணப் பத்திரிகையில் பதிவு செய்வதற்காக மட்டுமே இருக்குமாயின் நீங்கள்தான் வேண்டி விரும்பி அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிக்கத் தேவையில்லை என்றாலும் பணிக்குச் செல்லுங்கள். நட்பு, வாசிப்பு, பணியிடம் என பயணப்படும்போது வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி குறைந்த பட்ச அறிவாவது பெண்களுக்கு இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு இந்தச் சட்டங்கள் பற்றிய கையேடுகளைக் கொடுக்கலாம். அது பற்றிய விவாதங்களை ஊக்குவிக்கலாம். பெற்றோர், சமூகம், கல்வி நிறுவனங்கள் தாண்டி பெண்கள் தங்களுக்காக நிற்க வேண்டும். ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பழமொழி எழுதப்பட்ட கால, சூழல் வேறு. அதற்கான களமும் வேறு. ஆனால், வெகு நிச்சயமாக பெண்களுக்காக பொருத்திப் பார்க்கலாம். நீங்கள் உங்களுக்கான சுதந்திரத்தை யாராவது கொடுப்பார்கள் என்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்காகப் போராட உங்களைவிட மிகத் திறமையானவர், தகுதியானவர் யாரும் இருக்க முடியாது. எந்தச் சூழலில் மீண்டெழ கல்வி அவசியம். அதை வாழ்க்கைக்குமானதாக மாற்றிக் கொள்வது உங்கள் வசம். இப்போது அதை செய்யாவிட்டால், எப்போது செய்யப்போகிறீர்கள் பெண்களே..! இது ஒரு கூட்டுப் பொறுப்பு: இங்கே சமூகத்தையும், பெறோரையும் பெண் சுதந்திரத்தை மதியுங்கள் என்று அறிவுரை சொல்லும் அதேவேளையில் ஆண்களுக்கும் முக்கியமாக சில அறிவுறுத்தல்கள் உள்ளன. எத்தனை காலம் தான் நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களாக, வரதட்சிணைக் கொடுமை செய்பவர்களாக, பெண் அடிமைத்தனம் செய்பவர்களாக, குடும்பத்தின் கவுரவத்தை பெண்ணின் தலையில் சுமத்துபவர்களாக இருப்பீர்கள். கொஞ்சமேனும், வெட்கப்பட மாட்டீர்களா? சிறிதளவேனும் உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்த மாட்டீர்களா?. உங்கள் கல்வியை சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாது சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் பயன்படுத்தும் வகையில் கற்றுக் கொள்ளுங்கள். பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று பாலின சமத்துவத்தை மதியுங்கள். அதுவே இல்வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும். படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள், எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? டிரீம் வெட்டிங் செய்வீர்களா? என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறா பெண்கள். வரதட்சிணைக் கொடுமையால் நிகழும் மரணங்களில் இவர்கள் எல்லோருமே ஸ்டேக் ஹோல்டர்ஸ்தான். இதனை ஒழிப்பதென்பது சமூக கூட்டுப் பொறுப்பே! https://www.hindutamil.in/news/life-style/1367877-will-the-rithanya-case-serve-as-a-wake-up-call-for-parents-who-perpetuate-dowry-culture-4.html
3 months 1 week ago
பிள்ளை முறையிடும் போது "நம்ம வீட்டுக்கு வாம்மா" நான் பார்த்து கொள்வேன் என தைரியம் கொடுத்திருக்கலாம் தானே ..அல்லது போய் என்ன எது என்று பார்த்திருக்கலாம் தானே மணப்பெண் வீட்டுக்கு வந்தால் ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என்று...படித்த பிள்ளை எவ்வளவு செல்லமாக வளர்த்திருப்பார் . கடைசியில் ....இப்படி போய்விட்டாயே அம்மா ? கண்டறியாத ஒருவனுக்கு ஒருத்தி ...அது உண்மையான பாசமுள்ள கணவனாய் இருந்தால் மட்டும். இவ்வ்ளவும் செலவு செய்து கட்டி கொடுத்த மனுஷன் உன்னை பார்க்கமலா விட்டு விடுவார்.
3 months 1 week ago
நாடு கடத்தல்களை எதிர்க்கும் - பாலஸ்தீனியர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிக்கும் ஜனநாயக கட்சியின் நியுயோர்க்கிற்கான மேயர் வேட்பாளர் - குடியுரிமையை இரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முயற்சி Published By: RAJEEBAN 02 JUL, 2025 | 11:38 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியேற்றவாசிகளை நாடுகடத்தும் நடவடிக்கை போன்றவற்றை எதிர்க்கும் நியுயோர்க் நகரத்திற்கான ஜனநாயக கட்சியின் மேயர் வேட்பாளர் ஜொஹ்ரான் மம்டானியின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வது குறித்து வெள்ளை மாளிகை ஆராய்கின்றது. வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க பிரஜைகள் சில குற்றங்களிற்காக தண்டிக்கப்பட்டால் அவர்களின் பிரஜாவுரிமையை பறிக்கலாம் என்ற சட்டத்தினை வெள்ளை மாளிகை பயன்படுத்த முயல்கின்றது. குடியுரிமை செயற்பாட்டின் போது பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை மம்டானி மறைத்திருக்கலாம் இதன் காரணமாக அவரின் குடியுரிமையை இரத்து செய்யலாம் என குடியரசுக்கட்சியின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளதை ஏற்க்கும் விதத்தில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை நியுயோர்க் மேயராக தெரிவு செய்யப்பட்டால் எங்கள் அயலவர்களை நாடு கடத்துவதை தடுப்பேன் என மம்டானி தெரிவித்துள்ளமை குறித்து பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, மம்டானி அவ்வாறு செயற்பட்டால் அவரை நாங்கள் கைதுசெய்யவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள மம்டானி அமெரிக்க ஜனாதிபதி என்னை கைதுசெய்யப்போவதாக மிரட்டியுள்ளார், எனது பிரஜாவுரிமையை பறிக்கப்போவதாக தெரிவித்துள்ளார், இதற்கு நான் சட்டங்களை மீறியது காரணமல்ல, நான் எங்கள் நியுயோர்க் நகரத்தை சுங்க மற்றும் குடிவரவுதுறையினர் அச்சுறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தமையினாலேயே டிரம்ப் இவ்வாறு மிரட்டுகின்றார் என குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் அறிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மாத்திரமல்ல, நிழலில் மறைய மறுக்கும் ஒவ்வொரு நியுயோர்க் பிரஜை மீதான தாக்குதல் என தெரிவித்துள்ள மம்டானி நீங்கள் குரல் எழுப்பினால் அவர்கள் உங்களை தேடிவருவார்கள் நாங்கள் இவ்வாறான அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார். உகன்டாவில் இந்திய வம்வாவளி பெற்றோருக்கு பிறந்த 33 வயது மம்டானி பாலஸ்தீனியர்களிற்கான உரிமைக்கான ஆதரவின் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். https://www.virakesari.lk/article/219001
3 months 1 week ago
நிச்சயமாக ஈழப்பிரியன். ஜூன் மாத கணக்கில் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு பேரையும், எங்கள் வீட்டில் இருந்து மூன்று பேரையும், @Paanch வீட்டிலிருந்து இரண்டு பேரையும் கணக்கில் சேர்த்து இருப்பார்கள். நாங்கள் ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கா விட்டால்... 138,241 - 7 = 138,234 சுற்றுலா பயணிகளாக கணக்கு இருந்தது இருக்கும். 😂 இப்ப ஸ்ரீலங்காவுக்கு போன ஆட்கள் ஆரெண்டு பார்த்தால்... முன்னொரு காலத்திலை Boycott Srilanka என்று கம்பு சுத்திக் கொண்டு திரிஞ்ச ஆட்கள்தான். 🤣
3 months 1 week ago
புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் - செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (01) நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மனித எலும்புக்கூடுகளில் பெரும்பாலான சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் காணப்படுகின்றமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்ன நடக்கிறது? அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் எலும்புக்கூடு நீல நிறத்திலான புத்தக பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையொன்றின் எலும்புக்கூடு இரு தினங்களுக்கு முன்பு முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்ட இடத்திலிருந்து பாதணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''ஏற்கெனவே அடையாளப்படுத்தி பாடசாலை புத்தக பையுடன் இருந்த மனித உடல், முழுமையாக நாள் முழுவதையும் செலவிட்டு, நிலத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளது, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலுடன் காலணியும், அதேநேரத்தில் சிறிய குழந்தைகள் விளையாடுகின்ற பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.'' என வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள் யாழ்ப்பாணம் - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்றைய தினம் பின்னிப் பிணைந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார். இந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 5 எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தென்படுகின்ற நிலையில், அந்த தொகுதியில் சரியாக எத்தனை எலும்புக்கூடுகள் உள்ளமை குறித்து தற்போதைக்கு சரியாக கூற முடியாது எனவும் அவர் கூறுகின்றார். ''இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வு பணிகளில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததான மேலதிக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாக சொல்ல முடியாது. அதுவொரு குழப்பமான முறையில் அந்த உடலங்கள் காணப்பட்டுள்ளன.'' என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பொம்மை செம்மணி மனிதப் புதைகுழி வழக்கை ஒன்றாக தொட முயற்சி யாழ்ப்பாணம் - செம்மணி பழைய மனிதப் புதைகுழி வழக்கையும், செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி வழக்கையும் ஒன்றாக இணைந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். 'செம்மணி பழைய புதைகுழி தோண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சட்ட மருத்துவ அதிகாரி பெரேரா அகழ்வு நடந்த பிரதேசத்துக்கு வருகைத் தந்தார். தற்போது அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்ற சட்ட மருத்துவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடி கடந்த அகழ்வு பணிகளின் தகவல்களை வழங்கியிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது. "கிட்டத்தட்ட அந்த வழக்கும் இந்த வழக்கும் இருவேறு வழக்குகளாக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புப்படுத்த வேண்டிய நிலைமை இருக்கின்றது. இதனால், முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய வழக்கை இந்த வழக்குடன் சேர்ந்து அழைப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் செய்வதற்கான கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கின்றது" என அவர் குறிப்பிடுகின்றார். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து யாழ்ப்பாணம் 1995ம் ஆண்டு காலப் பகுதியில் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுவோர் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், செம்மணி பகுதியில் 1999-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வு பணிகளில் போது அந்த பகுதியில் மனிதப் புதைகுழி காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மனிதப் புதைகுழியிலிருந்து பெருமளவிலான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்த செம்மணியை அண்மித்த பகுதியிலிருந்து தற்போது சித்துபாத்தி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன 'செயற்கை நுண்ணறிவு மூலம் சித்தரித்தால் சட்ட நடவடிக்கை' சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் ஆதாரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் வெவ்வேறு விதங்களில் சித்தரித்து வருகின்றமையை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதாரங்களை சித்தரிக்கும் செயற்பாடு தொடரும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''இந்த புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எலும்பு மாதிரிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக பிழையான விதத்திலான படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான தகவல்கள் வெளியிலும் பரப்பப்படுகின்றது. இதுவொரு குற்றவியல் விசாரணை நடவடிக்கையின் ஊடாக நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால், இனிவரும் காலங்களில் அப்படியானது வருமாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நாங்கள் உத்தேசித்திருக்கின்றோம்.'' என அவர் குறிப்பிடுகின்றார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக படங்கள் வெளியிடப்படும் பட்சத்தில், அது விசாரணைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பகரமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார். அதனைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வழக்கறிஞர் மேலும் தெரிவிக்கின்றார். ஐநா மனித உரிமை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க், செம்மணி பகுதிக்கு அண்மையில் சென்றிருந்தார். செம்மணி பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய மனித உரிமை ஆணையாளர், நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்ததையும் காண முடிந்தது. இலங்கையில் தொடரும் மனிதப் புதைகுழிகள் இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி மற்றும் யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளன. புதைகுழிகள் யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம் யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைகுழி கிளிநொச்சி - மனிதப் புதைகுழி கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைகுழி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழி முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைகுழி மன்னார் - மன்னார் மனிதப் புதைகுழி மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைகுழி கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைகுழி கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைகுழி கொழும்பு - கோகந்தர மனிதப் புதைகுழி கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைகுழி மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைகுழி இரத்தினபுரி - இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைகுழி மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைகுழி மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைகுழி கண்டி - அங்கும்புர மனிதப் புதைகுழி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dg05qgl3wo
3 months 1 week ago
காணொளி https://www.youtube.com/shorts/-b-j9uoRVnE
3 months 1 week ago
சிறி இந்தப் பட்டியலில் உங்களையும் என்னையும் சேர்த்திருப்பார்களோ? ஆடி மாதத்தில் அமெரிக்கா கனடா ஐரோப்பா விடுமுறை என்றபடியால் இரட்டிப்பாக இருக்கும். திருவிழாக்களும் வருகிறபடியால் இந்தமாதம் அடுத்தமாதம் கட்டாயம் கூடுதலாக இருக்கும்.
3 months 1 week ago
நன்றி ஜஸ்ட்டின்
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed