புதிய பதிவுகள்2

Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!

3 months 1 week ago
கனடா இந்திரன் தனது மனைவியுடன் சென்று பேராசிரியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்களாம்.

முதல் மறைமுக கரும்புலி "தியாகசீலம்" அன்பு

3 months 1 week ago
எமது இனத்தின் முதல் மறைமுக கரும்புலி "தியாகசீலம்" அன்பு ஆவார். இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவராவார். அன்னாரை பகைவர் வன்புணர்ந்ததால் தன்னை அந்நிலைக்கு இட்டவரின் தலையை அழிக்க தன்னுயிரை போக்க வேண்டும் என்ற உறுதியெடுத்து கரும்புலியானார். இவர் இலக்கொன்றினை இரண்டாம் ஈழப்போரில் அழித்து வீரகாவியமானார். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் (2024ம் ஆண்டு ஓகஸ்டில் நான் எழுதிய பதிவின் மீள்வெளியீடு)

பயந்தாங்கொள்ளி

3 months 1 week ago
ஒரு பயந்தாங்கொள்ளியாற்தான் மற்ற பயந்தாங்கொள்ளியை இனங்காண முடியும். நசிந்து தொங்கும் பூனைக்குட்டியை கண்டவுடனேயே ஓடிய ஆள் எப்படியான ஆள்? தூக்கிவிடவே பயம். அதுக்கு அந்தபெண் பூனையே பரவாயில்லை, அங்கேயே துணிந்து குட்டி போட்டு பாதுகாத்திருக்கிறது. அதற்குள் பயந்தாங் கொள்ளிகுட்டியெது என்கிற ஆராய்ச்சி வேறு. நல்லவேளை! இவர் கடுவன் பூனையின் கண்ணில் படவில்லை.

வணக்கம்

3 months 1 week ago
நன்றி அண்ணா தங்களின் தேடலுக்கும் கண்டு பிடியுங்கள் பார்ப்போம் தாத்ஸ், நன்றி தாத்ஸ் நன்றி அண்ணா , நன்றி அண்ணா ,எந்த ஈமெயில் மூலம் உள்நுழைந்தேன் என்பதையே கண்டு பிடிக்க முடியல இதிலேயே தொடர்கிறேன் இப்போதைக்கு எடிட் option இல்லையா போஸ்ட் எடிட் பண்ண முடியல

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

3 months 1 week ago
சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை நக்கிறதாம். கேள்விப்படவில்லையா சிறியர்? எய்தவர்கள் பிடிபட வேண்டும். அம்புகளை பிடிப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை.

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி

3 months 1 week ago
துட்ட‍‍ஹெமுனு காலத்திலிருந்து இனவாதம் பேசும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை நீங்கள் மாற முடியாது

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு

3 months 1 week ago
இது சிங்கள இராணுவ, பொலிஸாருடைய உடல்கள் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பிக்குகளின் வாயை அடைக்க வெளிப்பட்டிருக்கிறது. நன்றாக அவர்களைபேசுங்கள், நீங்களாகவே உங்களையுமறியாமல் உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறைவா! ஒரு பாவமுமறியாத எங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலையா? ஒருவரை ஒருவர் பாதுகாக்க, காப்பாற்ற இறந்தவர்கள் அணைத்திருந்திருப்பார்களோ? அன்றி புதைகுழியில் ஒன்றோடு ஒன்றை பிணைத்து போட்டிருப்பார்களோ? எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள், கெஞ்சியிருப்பார்கள்? அந்த நிமிடத்தை, இதை செய்தவர்கள் நினைத்திருந்தால்; இந்த நிலை தொடர்ந்திருக்காது. இன்றுவரை இந்த புதைகுழி மௌனமாய் இருந்திருக்காது. புதைகுழி திறந்ததுபோல் கொடியவர்கள் மனதும் திறந்து உண்மையை கொண்டுவரவேண்டும். ஒரு சிங்கள இராணுவம் உண்மையை சொல்லியும் ஏற்காமல் விதண்டாவாதம் பண்ணும் ஒவ்வொருவரும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களே! இதன் பின்னும் நம்மவர் சிங்களத்துக்கு வெள்ளையடிப்பார்களா? ஆம்! அருண் சிர்த்தாத் வெளிக்கிட்டிருக்கிறார்.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

3 months 1 week ago
அப்போது உண்மையான ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளையர்களை காணலாம். இந்த சர்வாதிக நாடுகள் - மேற்குலகநாடுகள் வேறுபாட்டை நன்கு தெரிந்து கொண்டவர்கள் ஈழதமிழர்கள். அதனால் தங்களது தனிபட்ட வாழ்க்கையை மேற்குலகநாடுகளில் அமைத்து கொண்டனர்

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

3 months 1 week ago
கிரேக்க அறிஞ்சர் பிளேட்டோ போலி கவிஞ்சர்களை நாடுகடத்த வேண்டும் என கூறினார், அதற்கு அவர் கூறிய காரணம் மக்களை தவறாக நடத்த முயற்சிப்பதே என கூறுகிறார். Perception என்பது ஒரு வர்ண கண்ணாடி போன்றது அவரவர் புரிதலி விடயங்கள் ஒன்று போல தோன்றும், மிக குறைவான தரவுகளுடன் விடய்ங்களை சுயவிருப்பின் அடிப்படையில் அணுகும் போது இவ்வாறான தவறான முடிவுகளுக்கு வரவேண்டிய நிலை உள்ளது, சமூகத்தில் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள ஒரு கல்வி சமூகத்திற்கு அதிக அக்கறையும் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். கண்ணுக்கு புலப்படாத போரினை ஒரு மதிப்பாய்வு செய்தவரின் கருத்டினுடாக அதில் கூறப்பட்ட விடயத்தினை சுருக்கமாக..... ஒரு கொடுமையினை சட்டமாக்குவதற்கு ஐநா எவ்வாறு உடந்தையாக இருந்தது? அதுவும் ஐ நா பாதுகாப்பு சபையினூடாக ஒரு பாரபட்சமான பொருளாதார தடை ஈராக்கிற்கெதிராக நிறைவேற்றப்பட்டது? ஐ நாவால் அமைக்கப்பட்ட பிரத்தியேக கண்காணிப்புக்குழு ஈராக்கின் இரக்குமதியினை கண்காணித்தது, அவை மனிதாபிமான உணவு மருந்து உள்ளடங்கலாக. இந்த பிரத்தியேக கண்காணிப்புக்குழுவிற்குள் ஊடுருவிய அமெரிக்க அதிகார மையம் 1.மனிதாபிமான உதவிகளை கட்டுப்படுத்தியது. 2.அதிக பட்ச பொருளாதார அழுத்ததினை பிரயோகித்தது 3.இவை அனைத்தும் மக்களுக்கெதிரானது எனும் புரிதலுடனேயே அதனை நிகத்தியிருந்தது. அமெரிக்கா ஐநாவின் 661 பொருளாதார தடை குழுவில் தந்து அதிகாரத்தின் மூலம் குளிர்சாதனம், சுத்தமான நீர், சவர்க்காரம், கோழி முட்டை (உயிரியல் ஆயுதம் செய்துவிடுவார்களாம், இந்த தடைகள் அத்துடன் இதற்கு மேலான பொருள்தடைகள் எமது பிராந்தியத்தில் முன்னர் நிகழ்த்தப்பட்டிருந்த்து) போன்ற பொருள்கள் தடை செய்தது. இந்த பொருளாதார தடை ஈராக்கின் பொருளாதாரத்தினை முற்றாக அழித்தது மட்டுமன்றி ஒரு நாட்டின் இறையாண்மையினையே மீறியது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல சுத்தமான நீரை வழங்குவதற்கான கருவிகளை திருத்துவத்ற்கான உதிரிப்பாகங்களுக்கான தடை முலம் 5 இலட்சம் குழந்தைகள் இறப்பிற்கு அமெரிக்கா வெளியுறவுத்துறையின் பரவல் தடுப்பு பணியகம் ஈரான் ஆக்கிரப்பு போரிற்கு முன்னரே காரணமாக இருந்தது. இவை அனைத்தும் சதாமினை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியாக இருந்த போதும் அதன் மூலம் சதாமினை இந்த பொருளாதார தடையின் மூலம் எதுவும் செய்யவில்லை. அவ்வாறிருக்கையில் எதற்காக பொருளாதார தடை? என தொடருகிறார்.
Checked
Mon, 10/13/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed