தமிழகச் செய்திகள்

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக அமையாத கூட்டணி ஆட்சி 2026இல் அமைய வாய்ப்புள்ளதா?

4 weeks ago

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன.

மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.

தமிழ்நாட்டில் இவை அனைத்துமே நடந்துள்ளன. ஆனால் எல்லா சமயங்களிலும் திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளன. கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றது இல்லை.

தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு பற்றிப் பேசியிருந்தார். மேலும் அவர், திமுக, பாஜக என இருதரப்பிலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கப்படும் எனவும் இன்று கூறியுள்ளார்.

தற்போது பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது பற்றிப் பேசி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் இதுநாள் வரை இருந்த நிலையை மாற்றுமா?

தமிழ்நாடு அரசியலும் கூட்டணி ஆட்சியும்

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1967 தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன.

தமிழ்நாட்டில் 1952, 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி செய்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வென்றது. 138 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்தது.

கடந்த 1967இல் தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் ஒரு முறை மட்டுமே ஆளும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் இருந்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக 96 இடங்களில் வென்றிருந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாமக முறையே 34 மற்றும் 18 இடங்களில் வென்றிருந்தன. திமுக ஆட்சி அமைத்தது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது, அதிமுக 150 இடங்களைப் பிடித்திருந்தது. அப்போது கூட்டணி அரசாங்கம் பற்றித் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகப் பேசியிருந்த அதிமுக தலைவர் தம்பிதுரை, "தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அரசு அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.

அப்போது கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, "ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெல்வோம். அது எங்களுடைய அரசாகவும் இருக்கலாம் அல்லது கூட்டணி அரசாகவும் இருக்கலாம்" எனக் கூறியிருந்தார்.

கூட்டணி ஆட்சி பற்றி பிற கட்சிகள் என்ன சொல்கின்றன?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமித் ஷா

சமீபத்தில் அதிமுக கூட்டணி பற்றிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்" எனத் தெரிவித்திருந்தார்.

அமித் ஷாவின் கருத்து விவாதப் பொருளான நிலையில், அதுகுறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்" என்றும், தங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் பிளவுபடுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும், "கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஆட்சியை வரவேற்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப் பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்" என்றார்.

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK PAGE

படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

கூட்டணி ஆட்சி தேவை என்பதில் விசிக தெளிவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அப்போது, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றில்லாமல் சிறிய சிறிய கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்கிற நோக்கம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

"கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்தே முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அளவுக்கு திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி அரசு என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அது சரியாக வருமா என்று பார்த்தால் பலரும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும்போது, தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி சொல்லக்கூடாதா?" எனக் கூறியிருந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைப்பாடு மாறுமா?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,X/EZHIL CAROLINE

படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான சல்மா.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தக் கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி திமுகதான். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி என்கிற அடிப்படையில்தான் திமுக ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணமாக இருந்துள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்பதற்கான தேவை எழுந்ததில்லை. அதற்கான கோரிக்கை வருகிறபோது தலைவர்கள் அதைப் பேசி முடிவெடுப்பார்கள்," என்றார்.

ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கை நியாயமானது மட்டுமல்ல, மிகவும் காலதாமதமானது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி விடுவது என்பது வெறும் கொள்கை முழக்கமாக இருந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரையும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதே சரியாக இருக்கும். அதைத்தான் விசிக கூறி வருகிறது. இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்கிற நிலை மாற வேண்டும்" என்றார்.

ஒரு கூட்டணியின் வெற்றியில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குள்ளது என்னும்போது அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் எழில் கரோலின். "தனித்துப் போட்டியிட்டு ஒரு கட்சி வெற்றி பெறக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

கூட்டணி அரசால் நிலையான ஆட்சியைத் தர முடியாதா?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூட்டணி அரசு அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற அச்சம் என்று கூறிய எழில் கரோலின், "மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லையா? அதனால் நிர்வாகம் தடைபட்டுவிட்டதா? தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைந்தது இல்லை. அந்த அனுபவமே இல்லாமல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற கவலை. இட ஒதுக்கீடு, மாநில உரிமை என எதை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான திட்டங்கள், கொள்கைகளில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்துதான் உள்ளது என்னும்போது அச்சம் அவசியமற்றது" என்றார்.

இதை ஒத்த கருத்தையே கூறும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கூட்டணி ஆட்சிக்கான கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது உள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. அதுதான் எதார்த்தம். கூட்டணியின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் பல முறை நெருக்கமான போட்டியைக் கண்டுள்ளோம்."

"சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஒரு கட்சிக்கு 2% தான் வாக்கு வங்கி இருக்கிறது எனக் கூறி புறந்தள்ளிவிட முடியாது. கூட்டணியின் வெற்றிக்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கலாம். புள்ளி விவரங்களையும் கடந்து கூட்டணி ஆட்சி அமைவதுதான் சமநிலையை உருவாக்கும்" என்று கூறினார்.

திமுக, அதிமுக நிலைப்பாடு என்ன?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,X/SASI REKHA ADMK

படக்குறிப்பு, அதிமுக ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை எத்தனைக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகவின் ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா.

"பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கேள்விகளுக்கு தெளிவாகப் பதில் அளித்துவிட்டார். அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட்டார். 31 வருட அதிமுக ஆட்சியில் அப்படித்தான் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்."

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆசை இருக்கலாம் என்றாலும், பெரிய கட்சி எது என்பதே முக்கியம் என்கிறார் சசிரேகா. மேலும், "கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்கள், எந்தச் சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறார்கள், யார் முதல்வர் முகமாக உள்ளார் என்பதும் முக்கியம்.

அதன் அடிப்படையில் பார்த்தால் அதிமுகதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அதே நிலைப்பாடுதான், இனியும் அது தொடரும்," என்றார்.

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

படக்குறிப்பு, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் இதுநாள் வரை தொங்கு சட்டசபை அமைந்தது இல்லை. எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் எப்போதுமே பெரும்பான்மை இடம் கிடைத்துள்ளது. மக்களின் தேர்வும் அதுவாகவே இருந்து வருகிறது" என்றார்.

கடந்து 1979 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. அடுத்து உடனே 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி இடங்களில் திமுக, காங்கிரஸ் போட்டியிட்டன. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அப்போது திமுக தோல்வியுற்றது என்று கடந்த கால முடிவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் ரவிந்திரன்.

அதோடு, 2006 தேர்தல் பற்றி விவரித்த அவர், "அப்போது திமுக சிறுபான்மை அரசாக இருந்தது என்கிற கருத்து உள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்போது 169 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்ததால்தான் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr4ww6genzno

2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

4 weeks ago

New-Project-70.jpg?resize=750%2C375&ssl=

2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.

TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார்.

அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.

https://athavannews.com/2025/1438055

'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

1 month ago

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், BOOPATHY

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 30 ஜூன் 2025

[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.]

''போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்; மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்...என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு...என்னை மன்னிச்சிருங்கப்பா...என்னை மன்னிச்சிருங்கம்மா...!''

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், தனது தந்தைக்குப் பதிவு செய்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய ஆடியோவில் கூறப்பட்டிருந்த வார்த்தைகள் இவை.

அவருடைய இந்த ஆடியோ வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரிதன்யா(வயது 27).

ரிதன்யா, எம்.எஸ்.சி.–சிஎஸ் படித்தவர். இவருக்கும் அவினாசி பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 77 நாட்களே ஆனநிலையில், கடந்த ஜூன் 28 அன்று, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

'திருமணமாகி 2 வாரங்களில் திரும்பிய ரிதன்யா'

அவினாசி–சேயூர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருமணமாகி 2 வாரங்கள் மட்டுமே, ரிதன்யாவும், கவின்குமாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதற்குப்பின், பிரச்னையாகி ரிதன்யா தன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 20 நாட்கள் இருந்துள்ளார். அப்போது கவின் அவ்வப்போது வந்து பார்த்துச்சென்றுள்ளார்.

பெற்றோர் மீண்டும் ரிதன்யாவிடம் பேசி, அவரை கவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கும், வேறு சில இடங்களுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். இரு வாரங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூன் 22 அன்று ரிதன்யாவை கவின் அழைத்து வந்து, அவரின் தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது ரிதன்யா மிகவும் சோகமாக இருந்துள்ளார்.

தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று ரிதன்யா கூறிய நிலையில், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஒரு வாரம் அப்பாவின் வீட்டில் இருக்க ஆசைப்பட்டதால் கொண்டு வந்து விட்டதாக அண்ணாதுரையிடம் கவின் கூறியுள்ளார்.

ரிதன்யாவை விட்டுச்சென்ற பின், ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ஆகிய இரு நாட்களும் கவின் வந்து பார்த்துச் சென்றுள்ளார். மறுநாள் ஜூன் 28 அன்று, சேயூர் மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி காரை தனியாக எடுத்துச் சென்றுள்ளார் ரிதன்யா. வாரம் ஒரு முறை அவர் அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால் அவரை தனியாக அனுப்பியுள்ளனர்.

அன்று மதியம் ஒரு மணிக்கு ரிதன்யாவின் தாயார் ஜெயசுதாவுக்கு ரிதன்யாவின் மொபைலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், இந்த எண் யாருடையது என்று கேட்டு, செட்டிபுதுார் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு பெண் மயங்கிக் கிடக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே ரிதன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு செல்வதற்குள் அவரை அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

முதலில் ரிதன்யாவின் தற்கொலை குறித்து, அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் போலீசில் தெரிவிக்கவில்லை. அதனால் சேயூர் போலீசார் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் தற்கொலை செய்வதற்கு முன்பாக, ஜூன் 28 மதியம் 12 மணியளவிலேயே அவர் ஆடியோ பதிவு செய்து, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

அப்போது மொபைலில் 'நெட்'டை அணைத்து வைத்திருந்ததால் வாட்ஸ்ஆப் தகவலை பெற முடியவில்லை. அன்றிரவு, உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக, இரவு 11 மணியளவில் அண்ணாதுரையின் மொபைலில் 'நெட்'டை அவருடைய உறவினர் ஒருவர் 'ஆன்' செய்தபோது, ரிதன்யாவின் மொபைல் எண்ணிலிருந்து 10 ஆடியோ பதிவுகள் வந்துள்ளன.

அதில் தன்னுடைய தற்கொலை முடிவு பற்றி, அழுதவாறே பேசியுள்ள ரிதன்யா, அந்த ஆடியோக்களை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பியிருந்தது தெரியவந்தது. அந்த ஆடியோக்களில் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு கவினும், அவருடைய தாயும், தந்தையுமே காரணமென்று தெரிவித்திருந்தார்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

படக்குறிப்பு,கணவர் குடும்பத்துடன் ரிதன்யா

'300 சவரன் நகை, புது வால்வோ கார், திருமண செலவு ரூ.3 கோடி'

இந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ரிதன்யாவின் தந்தை, சேயூர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியது (IPC 306) உள்ளிட்ட பிரிவுகளில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாயார் சித்ரா தேவி ஆகியோர் மீது சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கவின்குமாரும், ஈஸ்வரமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். உடல்ரீதியான பாதிப்பு காரணமாக, சித்ரா தேவியை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், ''300 சவரன் போட்டு 70 லட்ச ரூபாய்க்கு வால்வோ காரும் வாங்கிக்கொடுத்தோம். அதில் 150 சவரன் அங்கே இருந்தது. மீதம் என் வீட்டில் இருந்தது. ஆனால் அதற்கு மேலும் கேட்டு, டார்ச்சர் செய்து, இரண்டே வாரத்தில் மகளை என் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நானும் எல்லாம் சரியாகிவிடுமென்று சமாதானப்படுத்தி பேசி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆனால் வெளியில் சொல்லவே முடியாத அளவுக்கு உடல்ரீதியான கொடுமைகளை அவள் அனுபவித்துள்ளார்.'' என்றார்.

''என்னிடமும் என் மனைவியிடமும் கூட முழுமையாக எதையும் சொல்லாமல், அவள் மாமியாரை வரச்சொல்லி, என் வீட்டில் வைத்தே ஒன்றரை மணி நேரம் தனியாகப் பேசினாள். அதன்பின், மாமியார் எங்களிடம் வந்து, 'எங்க பையன் இப்படி இருப்பான்னு எங்களுக்கே தெரியலை. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.' என்று கூறி அழைத்துச் சென்றார்.

மறுபடியும் 20 நாளில் திரும்பிவிட்டாள். பையனுக்கு தொழில் இல்லை. உறவினர்களில் பலர் 100 கோடி ரூபாய் செலவழித்து அவரவர் மாப்பிள்ளைக்குத் தொழில் செய்து கொடுத்துள்ளனர். உங்க அப்பா 500 சவரன் போடுவதாகக் கூறி பாதியளவும் போடவில்லை என்று எல்லோரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.'' என்றும் அண்ணாதுரை தெரிவித்தார்.

மாப்பிள்ளைக்கு தனியாக தொழில் இல்லாவிடினும், 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை வாடகை வந்ததால் வருமானம் இருக்கிறதென்று திருமணத்துக்கு 3 கோடி ரூபாய் செலவழித்ததாக பிபிசி தமிழிடம் கூறிய ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, தற்கொலைக்கு முன்பாக ரிதன்யா, தன் தந்தைக்குப் பேசி அனுப்பிய ஆடியோக்களை பிபிசிடம் பகிர்ந்தார்.

அதில் பேசியுள்ள ரிதன்யா, தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக மீண்டும் மீண்டும் பல முறை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தற்கொலை முடிவுக்கு, கவினும், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தியும், அவருடைய தாயார் சித்ராதேவியும்தான் காரணமென்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

படக்குறிப்பு, பெற்றோருடன் ரிதன்யா

மகளுக்கு நீதி வேண்டுமென்று கேட்கும் தந்தை!

தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்று கண்ணீரோடு பேசினார் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை.

கவின் குடும்பத்தினருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, பிபிசி தமிழிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார்.

ரிதன்யாவின் ஆடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு கவின் மற்றும் அவருடைய தாய், தந்தை இருவரும் காரணமென்று தெளிவாகக் கூறியிருந்தும் கவினையும், அவருடைய தந்தையை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி சேயூர் காவல் ஆய்வாளர் ராஜபிரபுவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அவருடைய தாயார் வயது முதிர்ந்தவர். சமீபத்தில்தான் அவருக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. விசாரணையின் போதே, அவர் அடிக்கடி மயக்கமாகிவிட்டார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே உடனடியாக அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.'' என்றார்.

ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தரப்பில் அவர்களுடைய உறவினர் யாரிடமும் கருத்துப் பெற முடியவில்லை. அவர்கள் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சண்முகானந்தன், ''கவின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி யாரும் பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் சார்பில் நானும் எந்தக் கருத்தும் கூற முடியாது. '' என்றார்.

திருமணம் முடிந்த 77 நாட்களில் இந்த மரணம் நடந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தனது விசாரணையை இன்று காலையில் துவக்கியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவினாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ''தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் ஆடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், அவரின் கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிதன்யாவின் ஆடியோவில் எந்த மாதிரியான கொடுமை நிகழ்ந்தது பற்றி எதுவும் கூறவில்லை. அதனால் இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது. இரு தரப்பிலும் விசாரித்தபின்பே தெளிவான காரணங்கள் தெரியவரும்.'' என்றார்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy4nnp0wq7yo

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

1 month ago

New-Project-7.jpg?resize=750%2C375&ssl=1

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது.

விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர்.

https://athavannews.com/2025/1437696

கட்டாய கருக்கலைப்பு: 2 வயது மகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் - திருவண்ணாமலையில் என்ன நடந்தது?

1 month ago

கோப்புக்காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

கட்டுரை தகவல்

  • மாயகிருஷ்ணன் கண்ணன்

  • பிபிசி தமிழுக்காக

  • 29 நிமிடங்களுக்கு முன்னர்

திருவண்ணாமலையில் வயிற்றில் இருந்த சிசுவை குடும்பத்தினர் வற்புறுத்தி கலைக்க வைத்ததால் தனது மகளுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்காலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி உமா தேவி(வயது 25), மகள் மோகனாஸ்ரீ (2) பெற்றோருடன் வசித்து வந்தனர்.4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீ யும் கடந்த ஜீன் 24-ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

'' என் மகளை விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். இந்த நிலையில் தான் எனது மகள் இரண்டாவதாக கருவுற்றார்.

சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நான் போன் செய்த போது திருப்பதியில் இருக்கின்றோம் என்று என் மகள் கூறினார். நான் திருப்பதி கோவிலுக்கு  சாமிகும்பிட சென்றுள்ளீர்களா? என்று கேட்டதற்கு இல்லை நாங்கள் ஸ்கேன் செய்ய வந்துள்ளோம் என்று கூறினார் எனது மகளை கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளனர்.

எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று தான் நினைத்தோம். நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் உடனே வர முடியவில்லை'' என்கிறார் உமா தேவிவின் தந்தை ஏழுமலை.

தனது மகள் அழுது கொண்டே இறப்பதற்கு முன் தினம் பேசினார் என்கிறார் ஏழுமலை

'' நான் எதுவும் கவலைப்பட வேண்டாம் நான் வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறினேன். ஆனால் அடுத்த நாளே எங்களுக்கு போன் வந்தது முதலில் எனது பேத்தி மோகனா ஸ்ரீ கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறினார்கள்

உடனடியாக சில நிமிடங்களிலேயே உங்களது மகளும் கிணற்றில் விழுந்து விட்டார் இருவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் வந்தது.'' என்கிறார் அவர்.

''எனது மகள் கருவுற்று இரண்டு  மாதம் ஆனவுடன் நாங்கள் அரசு செவிலியரிடம் காண்பித்து பதிவு செய்யுங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்று செக்கப் செய்து வாருங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை பதிவு செய்யவே இல்லை என்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிகின்றது. எனது மகள் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவ்வப்போது திட்டியும், வரதட்சணை கேட்டும் அடித்துள்ளனர்.'' என்கிறார் ஏழுமலை.

இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு

படக்குறிப்பு, இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு

திருப்பதி ஸ்கேன் சென்டரில் சோதனை

இறந்த உமாதேவியின் தந்தை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம்  விசாரணை நடத்தியதாக கூறுகிறார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி

''விக்னேஷ் -உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ? என்று நினைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யது கருவில் இருப்பது பெண் சிசு என்பதை அறிந்துள்ளனர். இதனால் கருவை கலைக்க உமாதேவியை வற்புறுத்தியுள்ளனர் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது'' என்கிறார் அவர்.

இந்தநிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னஷ், ஜெயவேல் சிவகாமி (43) மற்றும் கருவை கலைக்க உதவியதாக அதே ஊரை சேர்ந்த சாரதி (திருப்பதி ஸ்கேன் சென்டரை அறிமுகம் செய்தவர்)  ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை.

'' தமிழ்நாட்டில் இதுபோன்ற ஸ்கேன் சென்டர்கள் தற்பொழுது தகவல் தருவதில்லை இதனால், இவர்கள் அண்டை மாநிலத்துக்கு சென்று இடைத்தரகர் மூலமாக ஸ்கேன் செய்துள்ளனர். கரு கலைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமாதேவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்'' என்கிறார் இன்ஸ்பெக்டர் லட்சுமி.

இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு

திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் உள்ள சட்டவிரோத ஸ்கேனிங் மையத்தை விசாரிக்க சிறப்பு குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும்  திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் கடந்த 2023- 24 ஆம் ஆண்டில் 14233 ஆண் குழந்தைகளும் 12946 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1287 குறைவாகும் என்றார் சுகாதார துறை மாவட்ட அதிகாரி பிரகாஷ்

''திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற விவசாயம் சார்புடைய தொழிலை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், கல்வியறிவு குறைவாக இருக்கிறது. இங்கு பெண் குழந்தைகளின் பிறப்பு கொண்டாடப்படுவதில்லை'' என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் லலித்குமார்.

கடந்த வருடம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழக அளவில் 28 வது இடத்தை பெற்றுள்ளது இதன் தேர்ச்சி விகிதம் 93.10 ஆகும்.

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyllzw0q0yo

இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 month ago

30 JUN, 2025 | 02:11 PM

image

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் IND-TN-10-MM-773பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கைது நடவடிக்கைகள் படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும் நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.

வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218838

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

1 month ago

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார்

கட்டுரை தகவல்

  • பிரபுராவ் ஆனந்தன்

  • பிபிசி தமிழுக்காக

  • 30 ஜூன் 2025, 04:32 GMT

    புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார்.

சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? உயிரிழந்த அஜித் குமாருடன் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவரது சகோதரர் நவீன் குமார் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?

10 பவுன் நகை திருடு போனதாக புகார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம்

'வெள்ளிக்கிழமை மாலை தாயிடம் பேசிய அஜித் குமார்'

தகவலறிந்ததும் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்து பேசிய போது நகையை தான் திருடவில்லை என்று அஜித் தன்னிடம் கூறியதாக பிபிசி தமிழிடம் அவரது தாயார் மாதவி தெரிவித்தார்.

திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித் குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 6 மணி அளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாட்டுத் தொழுவத்தில் இருந்து அஜித்தை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அஜித் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

காவல் நிலையம் முற்றுகை, கடையடைப்பு

திருப்புவனம் காவல் நிலையத்தை அஜித்குமாரின் உறவினர்களும் மடப்புரம் கிராம மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கே வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அஜித்குமார் உயிரிழந்து விட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார். இதனால் பதற்றம் அதிகரித்ததால் திருப்புவனம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தின் முகப்பு

அஜித் குமாரின் சகோதரர் கூறியது என்ன?

"எனது அண்ணன் அஜித்தை போலீசார் கோவிலுக்கு பின்புறம் அழைத்துச் சென்ற போது அவன் நடந்து தான் சென்றான். ஆனால் திரும்பும் போது அவனை தூக்கிக் கொண்டு வந்தனர்," என்கிறார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவீன் குமார்.

பிபிசியிடம் பேசிய அவர், "வெள்ளிக்கிழமை மதியம் எனது அண்ணன் அஜித்குமார் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் காரில் இருந்த தங்க நகையை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் சாவியை அஜித்தின் நண்பர்கள் அருண்குமார், வினோத் குமார் ஆகியோரிடம் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார்.

ஆனால் காரை எடுத்து சென்ற இருவரும் வெகு நேரமாக காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் நீண்ட தூரம் ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் காரை அவர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். கேட்டதற்கு பார்க்கிங்கில் இடமில்லாததால் வெகு தூரம் சென்று காரை நிறுத்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அஜித் போலீசாரிடம் கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மானாமதுரை குற்றப்பிரிவு காவல் துறையினர், நான் மற்றும் பிரவீன்குமார், அருண்குமார், வினோத் குமார், அஜித் குமார் 5 பேரையும் மடப்புரம் அருகே உள்ள கண்மாய் கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்," என்றார்.

காவல்துறையினர் தங்களை கடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டிய அவர், "அஜித்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து அடித்தால் அவனுக்கு காயம் அதிகமாக இருந்தது," என்று கூறினார்.

மேலும் பேசிய நவீன்குமார், "காரை ஓட்டி சென்ற அருண்குமார், வினோத் குமாரை காவல்துறையினர் தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் காருக்குள் இருந்த நகையை பார்க்கவில்லை என கூறியதால் ஒரு கட்டத்தில் போலீசார் யாருக்கோ போன் செய்து காரில் நகை இருந்தது உண்மைதானா என கேட்டனர். அதற்கு அவர்கள் 10 பவுன் தங்க நகை இருந்தது என கூறியதை அடுத்து மீண்டும் அஜித்தை போலீசார் சனிக்கிழமை காலையில் இருந்து கடுமையாக அடித்தனர்.

அடி தாங்காமல் இறுதியில் அஜித் தான் அந்த நகையை திருடியதாகவும், அந்த நகையை கோவில் பின்புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் பின்னால் உள்ள மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருப்பதாக சொன்னான். மடப்புரம் கோவில் பின்புறம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றனர். எங்கள் நால்வரையும் வேனில் இருக்க வைத்து விட்டு 3 காவலர்கள் அஜித்தை மட்டும் அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து ஏற்கனவே போலீசார் கடுமையாக தாக்கியிருந்ததால் அஜித் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்றான். சிறிது நேரத்திற்குப் பின் போலீசார் அஜித்தை தூக்கி கொண்டு மற்றொரு வாகனத்தில் சென்றதை பார்த்தேன்." என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, தாம் உள்பட மற்ற நால்வரையும் வேனில் இருந்து இறங்கிச் செல்லுமாறு காவல்துறை கூறியதாக நவீன்குமார் தெரிவித்தார்.

"நான் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறிய பின் குடும்பத்துடன் காவல் நிலையம் சென்று கேட்டதற்கு அஜித் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்," என்றார் நவீன் குமார்.

மகனை இழந்த வேதனையில் இருக்கும் மாதவி பிபிசி தமிழிடம் பேசிய போது, "இன்னொரு மகனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் நிரந்தர அரசு பணி வழங்குவதாகவும், நிதி உதவி வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதை கொடுத்தால் என் மகன் உயிருக்கு ஈடாகுமா? அவன் திரும்பி வருவானா?" என்று கேள்வி எழுப்பினார்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, கோவிலின் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தில் அஜித் குமார் தாக்கப்பட்டார் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்

நீதிபதி நேரில் ஆய்வு

அஜித் உயிரிழந்தது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார், ஆர்டிஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நீதிபதி முன் ஆஜராயினர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் அஜித்தின் உடலை உடற்கூறாய்வு செய்து, குடும்பத்திடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறி அவரின் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அஜித் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து செல்லும் போது அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் கிராம இளைஞர் சபையினர் உள்ளிட்டடோர் அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என உறுதி அளிக்கும்மாறு அரசியல் கட்சியினர் கோரிக்கை

காவல்துறை கூறுவது என்ன?

முதல் கட்ட நடவடிக்கையாக, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் அறிக்கைக்கு பின் அவர்களை கைது செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

அஜித் குமார் உடல் தகனம்

இதற்கிடையே, உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்று தகனம் செய்தனர்.

காவல்துறை தடயங்களை அழிக்க முயற்சி என்று குற்றச்சாட்டு

திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை தடயங்களை அழிக்க பார்க்கிறது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீசார் சட்டவிரோதமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வருகிறது. அஜித் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அஜித்குமாரின் இறப்பை போலீசார் மறைக்க பார்க்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்வதற்கு முன் 6 காவலர்களையும் அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது" என்றார்.

"ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயங்கள் அழிக்கப்பட்டாலும் உடற்கூறு ஆய்வில் முடிவில் உண்மை நிச்சயம் வெளியே வரும். தென்மண்டல ஐஜி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஹென்றி திபேன் கூறியுள்ளார்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சிகள் கண்டனம்

'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? மு.க. ஸ்டாலின், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையில் பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?," என தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மரணம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"காவல்துறை விசாரணையின் பேரில் ஒருவரை அடித்து தாக்கி படுகொலை செய்து விட்டு, அதற்கான நடவடிக்கையாக வெறும் பணியிடை நீக்கம் மட்டும் போதும் என்று கருதுவது வெகுஜனங்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். அஜித்தின் மரணம் போலீசார் தாக்குதலால் நேர்ந்தது வெளிச்சமான நிலையிலும், ஏன் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் கைது செய்து விசாரணை நடத்தப்படவில்லை?," என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிருக்கு பாதுகாப்பில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

"காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்," என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74zqk4ndxvo

இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது!

1 month ago

New-Project-372.jpg?resize=600%2C300&ssl

இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (28) நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட வேளையிலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 46,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தனரெனவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34, 43 மற்றும் 33 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 https://athavannews.com/2025/1437448

வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

1 month ago

வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

-சாவித்திரி கண்ணன்

be63b230-e9f8-11ee-aa03-9be8f4ddb239.jpg

குடும்ப வாரிசு அரசியல் வெளிப்பார்வைக்கு வெற்றிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் புழுத்து நாறி அழுகி, வெளித் தோற்றத்தில் அழகாகத் தோன்றும் பழம் போன்றதே என்பதற்கு தற்போதைய வரலாறே சாட்சியாகும். ஸ்டாலின் – உதயநிதி, ராமதாஸ் – அன்புமணி, வைகோ –துரை வைகோ போன்ற வாரிசு அரசியலின் போதாமைகளும், பரிதாபங்களும் ஒரு அலசல்;

கொள்கை, லட்சியம் சார்ந்து அரசியல் வாழ்க்கைக்கு சுயம்புவாக வந்து சாதித்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு தயார்படுத்துவதில்லை. அதை கொள்கை, லட்சியம் கொண்ட அடுத்த தலைமுறைக்கு தானாகவே கையளித்து சென்றுவிடுவார்கள்

காந்தி, காமராஜ், மொரர்ஜி தேசாய், அண்ணா, ஜீவா போன்ற  தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தலைவராக்க எண்ணியதில்லை. அப்படி எண்ணாததாலேயே இன்று நாமெல்லாம் அவர்களை இன்று நம் முன்னோடிகளாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம்.

ஆனால், அரசியலில் வாரிசை அதிகாரப்படுத்த நினைத்தவர்கள் பெரும்பாலும் அவஸ்தைப்படாமல், அவமானம் கொள்ளாமல் இருந்ததில்லை.

இந்திராகாந்தி; சஞ்சய்காந்தியை தன் வாரிசாக கொண்டு வந்தார். காங்கிரசின் கொள்கை, கோட்பாடு, லட்சியங்கள் பற்றி ஏதும் அறியாத சஞ்சய்காந்தி காங்கிரசின் மூத்த தலைவர்களை அவமானப்படுத்தினார். அரசாங்க அதிகாரிகளை இஷ்டம் போல ஆட்டுவித்தார். குடும்ப கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்தக் கூறி நிர்பந்தித்ததில் கல்யாணம் ஆகாத இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ஆபரேஷன்கள் செய்யப்பட்டு நாடு அல்லோகலப்பட்டது.  இந்திராகாந்தி தன் மகனி கட்டுபடுத்த முடியாமல் திணறினார். இறுதியில் விமான சாகஸத்தில் சஞ்சய்காந்தி மர்ம மரணம் அடைந்தார்.

2806Insight1.jpg

கருணாநிதி; தமிழ்நாட்டில் கருணாநிதி முதன்முதலாக தன் மகன் மு.க முத்துவை அரசியல் வாரிசாக்க நினைத்து முதலில் மக்கள் செல்வாக்கை பெற அவரை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் நடிக்க வைத்தார். மு.க.முத்து அரசியல் மேடைகளில் பிரச்சார பாடகராக வளம் வந்தார். ஆயினும் அவரால் அரசியலை உள்வாங்க முடியவில்லை. ஆனால், குடிப்பழக்கம் அவரை உள்வாங்கி வீணாகிப் போனார்.

அடுத்ததாக மு.க.ஸ்டாலினை வாரிசாக்க படிபடியாய் தயாராக்கினார். எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ,அமைச்சர், துணை முதல்வர் என தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார். ஆனபோதிலும், பொது நலன் சார்ந்த நாட்டம், தீமையை எதிர்க்கும் போர்குணம் ஏதுமற்றவராகவே ஸ்டாலின் உருவானார். மகனுக்கு போட்டியாக இருப்பவர்களாகக் கருதியவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினார். ஆனால், தான் உயிரோடு இருக்கும் வரையிலும் தன் மகனிடம் பொறுப்பை நம்பி ஒப்படைக்க முடியாதவராகவே கருணாநிதி இருந்தார். இதனால் அப்பாவிற்கும் – பிள்ளைக்கும் பல உள் மோதல்கள் நடந்தன. எனினும், அதிகாரத்தை கடைசி வரை தன்னிடமே வைத்திருந்ததால் மற்றவர்கள் அனுதாபப்படக் கூடிய நிலைமை உருவாகாமல் தப்பித்துக் கொண்டார்.

stalin-karunanidhi43-03-1496462968.jpg

மு.க.ஸ்டாலின்;  வாரிசு அரசியலால் அதிகாரத்திற்கு வந்த ஸ்டாலின் சுயசிந்தனையோ, ஆளுமைப் பண்போ இல்லாத ஒரு  பொம்மை முதலமைச்சர் என்று பெயர் எடுத்துள்ளார். அதிகாரிகளின் விருப்பப்படி ஆட்சி நிர்வாகம் கொண்டு செலுத்தப்படுகிறது. அரசியலில் தலைமைப் பண்பு இல்லாத காரணத்தால் மத்திய பாஜகவிடம் மறைமுகமாக மண்டியிட்டு அவர்களின் மக்கள் விரோத கல்வி கொள்கை, தொழிலாளர் கொள்கை, சுற்றுச் சூழல் கொள்கை, விவசாயக் கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறார். இவர் காலத்தில் தான் பாஜக என்ற இந்துத்துவ மதவெறிக் கட்சி தமிழகத்தில் காலூன்றும் வலிமை பெற்றது.

சினிமா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த தன் மகன் உதயநிதியை இளைஞர் அணித் தலைவராக்கினார். எம்.எல்.ஏ ஆக்கினார்.பிறகு அமைச்சர் ஆக்கிய ஸ்டாலின். அவசரகதியில் துணை முதல்வராகவும் ஆக்கிவிட்டார். நிர்வாகத்தின் அரிச்சுவடி கூட அறிய முடியாதவாராகவே இன்று வரை அதிகாரத்தில் வளைய வருகிறார் உதயநிதி.

gallerye_062828722_3317707.jpg

உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதற்காக கல்வித் துறை அமைச்சராக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் கல்வித் துறை சீரழிந்து கொண்டுள்ளது. இவர்களின் நண்பர் வகையறாக்களான சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன், ரித்தீஸ் ஆகியோர் பெரும் கோடீஸ்வரர்களாகி அமலாக்கத் துறையால் தேடப்பட்டனர்.  பெரியார், அண்ணா, ,திராவிடக இயக்கத்தின் பகுத்தறிவு, சுய மரியாதை, சமூக நீதிக் கோட்பாடு ஆகியவைக் குறித்த அடிப்படை புரிதல்களின்றி தீடீரென்று உச்சத்திற்கு உயர்த்தப்பட்ட உதயநிதி, கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை தாங்கும் ஆற்றல் அறவே இல்லாதவராக உள்ளார். இது வரையிலான தமிழக ஆட்சிகளிலேயே மிக மோசமான நிர்வாகத்தை கொண்ட நிர்வாகமாக ஸ்டாலின் – உதயநிதி நிர்வாகம் உள்ளது.

டாக்டர் ராமதாஸ்; மிக முற்போக்கானவராகவும், நேர்மையானவராகவும் தோற்றம் காட்டியவர் ராமதாஸ். வன்னிய குல அரசியல் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் சேர்ந்து இவரை முன்னிறுத்தி தலைவராக்கினார்கள். முதலில், ’தேர்தல் பாதை, திருடர் பாதை’என்றெல்லாம் வசனம் பேசிவிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கி,  ’’நானும், என் குடும்பமும் அரசியலில் ஒரு போதும் அதிகார பதவிக்கு வரமாட்டோம்’’ என்றார். பிறகு, தான் இது போலக் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் மீறி தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கினார். மகன் ஊழல் முறைகேடுகளில் திளைத்து கோடிக்கோடியாய் பொதுப் பணத்தை சுருட்டியதை பார்த்து புளகாங்கிதம் அடைந்து கட்சியின் தலைவர் பொறுப்பையும் தாரை வார்த்தார்.

806030.jpg

கட்சித் தலைமை பொறுப்பை தந்தவுடன் மகன் அன்புமணி, தந்தையை ’சற்று ஒதுங்கி நில்லுங்கள்’ என கட்டளை இட்டார். மகனுக்கு நிர்வாகம் போதாது. உழைக்கும் பண்பும் இல்லை. கட்சியினரை அரவணைத்து செல்லும் பக்குவமும் இல்லை என்ற யதார்த்தங்களை அறிந்தும், மிகப் பெரிய பொறுப்பை தந்தார். இது கட்சியை குடும்ப சொத்தாக கருதியதால் ஏற்பட்ட மனநிலையாகும். இப்படி சில வருடங்கள் கடந்த நிலையில் மகன் அப்பனிடமே தன் தில்லாலங்கடி வேலைகளை செய்து திடுக்கிடச் செய்தார். குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட அனுசரித்து அரவணைத்து போக முடியாத அளவுக்கு மூர்க்கமான மகனால், தானே பாதிக்கப்பட்டார் ராமதாஸ்.

நிறுவனரான அப்பாவிற்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ ராமதாஸுக்கு அதிகாரமில்லை என தனி ராஜ்ஜியம் நடத்துகிறார், அன்புமணி. தந்தை ராமதாஸுக்கு வயதானதால், எப்படியும் மகனிடம் மட்டுமே அதிகரத்தை தந்துவிட்டுச்  செல்பவராகவும் இருப்பதால், தங்களின் எதிர்காலம் கருதி கட்சி நிர்வாகிகளில் 80 சதவிகிதமனோர் மகன் அன்புமணி பக்கம் சென்றுவிட்டனர். மருமகள் பிடியில் மகன் சென்றுவிட்ட நிலையில், தனி பெரும் தலைவராக வலம் வந்த ராமதாஸ், தற்போது கையறு நிலையில் மனதளவில் மிகவும்  சோர்வடைந்துவிட்டார். பாவம், இன்னும் என்னென்ன அவமானங்களை மகனிடம் பெற உள்ளாரோ..? இதனால், இந்தக் கட்சியும் மக்களிடம் மிகவும் செல்வாக்கு இழந்துவிட்டது.

வைகோ; வாரிசு அரசியலுக்கு சவால் விட்டதால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவரான வைகோ, பெரும் தொண்டர்கள் பலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு சிறப்பாக குரல் கொடுத்தார். அறிவும், ஆற்றலும், சலிக்காத உழைப்பும், போராட்ட குணமும் நிறைந்தவரான வைகோ, காலப் போக்கில் கட்சிக்குள் அடுத்த தலைமுறையை உருவாக்காமல் தளபதிகள் பலரை பறிகொடுத்தார்.

தனது வயது மூப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக தளர்வுற்ற வைகோ, கட்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக தன் மகனை உயர் பொறுப்புக்கு கொண்டு வந்தார். ஆரம்பம் தொடங்கி கொள்கை பற்றுள்ளவராக மகனை கட்சிக்குள் கொண்டு வந்து பயிற்சி தந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அவரை பெரிய வியாபாரியாக்கி தான் அழகு பார்த்திருந்தார். அதனால் வைகோ மகனை கட்சிக்குள் கொண்டு வந்ததை எதிர்த்து பல கொள்கைப் பற்றாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். மகன் துரை வைகோவோ, கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அப்பாவை கலந்து ஆலோசித்து செயல்படுவதில்லை.

11843094-duraivaiko19042025.jpg

கம்பெனி உரிமையாளராக ஊழியர்களை வேலை வாங்கி பழக்கப்பட்ட மகன் துரை வையாபுரி கட்சிக்குள்ளும் மூத்த நிர்வாகிகளை அவ்விதமே நடத்த தலைபட்டு பிரச்சினைகள் வெடித்தன. தற்போது இருக்கும் திமுக கூட்டணிக்குள் கசப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் துரைவைகோ. அப்பாவின் கட்டளையை மீறி,சமீபத்திய பொதுக் குழுவில் திமுகவிற்கு எதிராக முன்னணி நிர்வாகிகளை காரசாரமாக பேசவைத்துவிட்டார் துரைவைகோ. இதனால் மிகவும் அதிருப்தியுற்ற ஸ்டாலின், இது நாள் வரை மதிமுகவில் இருந்து திமுகவிற்கு வருபவர்களை ஊக்கப்படுத்தி கட்சியில் இணைக்காமல் தவிர்த்து வந்த நிலையை மாற்றி, மதிமுக அதிருப்தியாளர்களை அள்ளி கட்சிக்குள் இணைக்க மும்முரமாக செயல்பட கட்சியினருக்கு கட்டளை இட்டுள்ளார். இதனால் ஏற்கனவே மிக பலவீனமாக இருக்கும் மதிமுக இன்னும் பலவீனப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், துரைவைகோ பாஜக தரப்பில் கூட்டணி காண பேச்சுவார்த்தையை மறைமுகமாக செய்து வருவதை எண்ணி அதிர்ச்சி அடைந்தாலும் ஏதும், செய்ய இயலாதவராக கையறு நிலையில் உள்ளார், அப்பா வைகோ. கடைசி காலத்தில் தன் மகனின் கட்சியை கரைத்து பாஜகவில் ஐக்கியமாக்கிவிடுவார்களே அந்தப் பாவிகள்… என மனம் பதறினாலும் அவரால் என்ன செய்ய இயலும்?

மேற்படி மூன்று கட்சிகளும் குடும்ப அரசியலால் பலம் இழந்துள்ளதும், தேக்க நிலையில் திணறுவதும், எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உழல்வதும் தெளிவு. கொள்கை வழிப் பயணிப்போர், குடும்ப வாரிசு அரசியல் எனும் படுபாதாள சகதிக்குள் சிக்குவதில்லை.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21988/failure-of-succession-politics/

பிரிவினையை உருவாக்குபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை… ஸ்டாலின் விமர்சனம்!

1 month ago

பிரிவினையை உருவாக்குபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை… ஸ்டாலின் விமர்சனம்!

28 Jun 2025, 11:18 AM

stalin criticize there is no space

ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்தநிலையில், மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில்,

“திமுக அரசின் திட்டங்களும் சாதனைகளும்!

அண்ணா காலம் முதல் உங்களில் ஒருவனான என் தலைமை வரை இந்த உறவுதான் இந்த இயக்கத்தின் பலம். நமக்கிடையிலான உணர்வுமிக்க உறவையும் பாசத்தையும் சீரழிக்கலாமா என எதிரிகளும் ஏடுகளும் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்பதைத்தான் 75 ஆண்டுகால இயக்கத்தின் வளர்ச்சி காட்டுகிறது.

‘மக்களிடம் செல்’ என்று அண்ணா அறிவுறுத்திய வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் மொழி – இன – சமுதாய முன்னேற்றத்திற்கான இயக்கமாகக் கட்சியை வளர்த்தெடுத்தார்.

DMK.jpg

அண்ணாவும் கலைஞரும் வகுத்த பாதையில் நம் பயணம் தொடர்கிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் தொண்டர்கள் முடங்கிக் கிடக்காமல், ‘ஒன்றிணைவோம் வா’ என்று களப்பணியாற்றிய நெஞ்சுரம் மிக்கவர்களாக இருந்தார்கள். அதனால்தான் கட்சியின் மீதான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன்.

68 ஆயிரம் டிஜிட்டல் வீரர்கள்!

தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

மாநிலக் கட்சியான திமுக இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள்.

DMK-MK-Stalin-1-1024x576.jpg

திமுகவின் பாதை தெளிவானது!

இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது.

ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன்.

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் – அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/stalin-criticize-there-is-no-space-for-religious-diversity/

சென்னை: சாவின் விளிம்பில் இருந்த பெண்ணை சாதுர்யமான பேச்சால் காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.

1 month ago

எஸ்.ஐ. மீரா, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், சென்னை செய்திகள்,

படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீரா

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 27 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்."

கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்றி மீட்பதற்கு, பெண் உதவி ஆய்வாளர் மீரா செய்தது என்ன?

அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள நானா தெருவில் வசித்து வரும் தம்பதியின் 27 வயது மகள், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அங்கு "அவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவே, தங்கள் மகளை அந்தத் தம்பதி அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளனர். ஆனால், இந்தப் பிரிவை அந்த இளம்பெண் ஏற்கவில்லை," என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

"அது மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி. ஆனால், நான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் அந்தத் தெரு இருந்தது. எனவே விவரம் அறிந்தவுடன் அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். அதற்குள் புகார் கூற வந்த நபரே தனது டூவீலரில் என்னை அழைத்துச் சென்றார்" என நடந்ததை விவரித்தார் உதவி ஆய்வாளர் மீரா.

"நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் வீட்டு ஜன்னல்களுக்கு தடுப்புக் கம்பிகள் எதுவும் அமைக்கப்படவில்லை" என்பதைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசியபோது, "சம்பவ இடத்திற்குச் சென்றபோது பெண்ணின் தாய், பாட்டி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவரது தாய் தனது மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு கூறினார். பெண்ணின் படுக்கையறை கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டு இருந்தது," என்றார்.

போர்வைகளால் உருவாக்கப்பட்ட வலை

எஸ்.ஐ. மீரா, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், சென்னை செய்திகள், தற்கொலை தடுப்பு உதவி மையம்

படக்குறிப்பு, இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார்.

தனது அறையில் இருந்து தற்கொலைக்கு முயலப் போவதாக அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். அதுகுறித்து விளக்கிய மீரா, "அவர் பேசுவது வீட்டின் ஹாலில் கேட்டது. யாரும் காப்பாற்ற உள்ளே வரக்கூடாது என மிரட்டினார். என்னால் எதுவும் செய்ய முடியாமல் தரைத் தளத்திற்கு வந்தேன்" என்றார்.

இதற்கிடையே இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை மீட்பதற்கு வலை போன்று மீட்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த போர்வைகளைக் கட்டி அதன் மூலம் வலை போன்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் மீரா ஈடுபட்டார்.

ஆனால், அப்படியே அந்தப் பெண்ணை தாங்கிப் பிடிக்க நினைத்தாலும் எடை தாங்க முடியாமல் பலத்த காயம் அடைய வாய்ப்புள்ளதையும் அவர் கணித்தார். மீட்பு முயற்சிக்கு மாற்று வழிகள் இல்லாத சூழலில், அவரது கையில் செல்போன் இருந்ததை உதவி ஆய்வாளர் மீரா கவனித்துள்ளார்.

அதுகுறித்து விவரித்த அவர், "அவரை மீட்க அதுதான் ஒரே வழியாக இருந்தது. ஏனெனில், அவரை ஜன்னல் வழியாக மட்டுமே மீட்க முடியும். வேறு வழிகளும் இல்லை. எனவே, தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றேன்" என்றார்.

சமாதானம் ஏற்பட்டது எப்படி?

எஸ்.ஐ. மீரா, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், சென்னை செய்திகள், தற்கொலை தடுப்பு உதவி மையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவரை மீரா தொடர்பு கொண்டுள்ளார். "யார் நீ?" எனக் கேட்டு ஒருமையில் உதவி ஆய்வாளரைத் திட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த மீரா, "உன்னைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன். என்னை நம்பி வெளியில் வா" எனக் கூறியுள்ளார்.

"எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" எனக் கூறி அந்தப் பெண் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது மீராவின் அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.

"சுமார் 8 நிமிடம் கடும் கோபத்துடன் அவர் பேசினார். ஒரு நபரின் பெயரைக் கூறி, 'அவன் என்னை விட்டுட்டுப் போய்விட்டான்' எனக் கூறினார். ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்" என்கிறார் மீரா.

அவரைச் சமாதானப்படுத்திய மீரா, "அப்படியெல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன். ஒரு தங்கையாக நினைத்து என்னிடம் பிரச்னையை கூறினால் சரி செய்து தருகிறேன். வேறு யாரையும் நம்ப வேண்டாம்" எனக் கூறியதாகத் தெரிவித்தார்.

இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது தாயுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது அம்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உதவி ஆய்வாளர் மீரா தெரிவித்தார்.

"ஒரு கட்டத்தில், 'நீ மட்டும் உள்ளே வா' என அந்தப் பெண் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்ட மறு விநாடியே, தீயணைப்பு வீரர் மூலமாகக் கதவை உடைத்து உள்ளே சென்றேன். அந்தப் பெண்ணை உடனடியாக உள்ளே இழுத்துப் போட்டுவிட்டேன்" என்று விவரித்தார்.

'நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும்'

தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை உணர்ந்து நம்பிக்கையளித்தால் மனநிலை மாறும் என்கிறார் உதவி ஆய்வாளர் மீரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை உணர்ந்து நம்பிக்கையளித்தால் மனநிலை மாறும் என்கிறார் உதவி ஆய்வாளர் மீரா (சித்தரிப்புப் படம்)

தற்போது தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். "பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது காதல் விவகாரத்தில் அவருக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அந்த நேரத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசித்தேன்" என்கிறார் மீரா.

"அவர் கையில் செல்போன் இருந்ததால் அவரை அமைதிப்படுத்த முடியும் எனத் தோன்றியது. மேலும், அவரது மனநிலை தெரியாமல் உள்ளே நுழைந்தால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"ஒருவர் தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை அறிந்து, உணர்ந்து அதில் நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும் என நினைத்தேன். வேறு காவல் எல்லையாக இருந்தாலும் அந்தப் பெண்ணை மீண்டும் சந்தித்துப் பேசுமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்கிறார் மீரா.

தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வானார்.

தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்துள்ளார். உதவி ஆய்வாளர் பணிக்கு மூன்றாம் முறையாக முயற்சி செய்து தேர்வானதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

தொடரும் காவல்துறையின் மீட்பு சம்பவங்கள்

மீராவை போலவே, கடந்த சில வாரங்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறை மீட்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த மார்ச் 30 அன்று மெரினா கடற்கரையில் இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த, அப்போது பணியில் இருந்த மெரினா காவல் நிலைய தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர் குமார், முருகன் ஆகியோர் மீட்டனர்.

பெற்றோர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து அப்படியான முயற்சியில் ஈடுபட்டதாக, போலீஸ் விசாரணையில் சகோதரிகள் கூறியுள்ளனர். அவர்களை உறவினர்களிடம் காவல் துறை ஒப்படைத்தது.

திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினார். அவரிடம் சமாதானமாகப் பேசி சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவலர் தேவராஜ் மீட்டுள்ளார்.

தற்கொலையை தடுக்க உதவும் 4 முக்கிய வழிகள்

தற்கொலை மற்றும் அதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கு தனிநபர், சமூகம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதைத் தடுப்பதற்கு நான்கு முக்கிய வழிகளையும் பட்டியலிட்டுள்ளது.

  • தற்கொலை செய்வதற்கான வழிமுறைகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துதல்

  • தற்கொலை பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதற்கான பொறுப்புகள் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெரிவித்தல்

  • வளரிளம் பருவத்தினர் இடையே சமூகம் சார்ந்த திறன்களை (socio-emotional life skills) வளர்த்தல்

  • தற்கொலை நடத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், அவர்களைப் பின்தொடர்தல்

தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு சுகாதாரம், கல்வி, தொழிலாளர், விவசாயம், வணிகம், நீதி, சட்டம், பாதுகாப்பு மற்றும் ஊடகங்கள் எனப் பல துறைகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ. மீரா, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், சென்னை செய்திகள், தற்கொலை தடுப்பு உதவி மையம்

பட மூலாதாரம்,DR MALAIYAPPAN

படக்குறிப்பு, மருத்துவர் மாலையப்பன்

மேலும், தற்கொலைகளைத் தடுப்பதில் சமூகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் கூறுகிறது. இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன், "இந்திய சமூகத்தில் தற்கொலை எண்ணம் என்பது இயல்பாகவே உள்ளது. குடும்ப உறவுகள் இடையே வாக்குவாதம் ஏற்படும்போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுவது வழக்கம்" என்கிறார்.

"தேர்வு, காதல், வணிகம் ஆகியவற்றில் தோல்வி வரும்போது தற்கொலை எண்ணம் வரும். உளவியல்ரீதியாக பலவீனமாக உள்ளவர்கள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கோபத்தில் இந்த முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன," எனக் கூறுகிறார் மருத்துவர் மாலையப்பன்.

தொடர்ந்து பேசிய அவர், "மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும். அதைச் செயல்படுத்தவும் திட்டமிடுவார்கள். இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாக்கிவிடலாம்" என்கிறார். அதோடு, மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் மருத்துவர் மாலையப்பன் பட்டியலிட்டார்.

"போதிய உற்சாகம் இல்லாமல் இருப்பது, மெதுவாக நடப்பது, மெதுவாகப் பேசுவது போன்றவற்றின் மூலம் கண்டறியலாம். முன்பு போல வேகமாகச் செயல்பட மாட்டார்கள். உறக்கம் குறைந்துவிடும். எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டார்.

"பிரச்னைகள் வரும்போது மரணம் ஒரு தீர்வல்ல என்ற எண்ணம் வர வேண்டும். மானம் போனால் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. மானத்தைவிட உயிர் மிக முக்கியம் என எண்ணும் அளவுக்கு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

"உளவியல் ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை அளிக்கலாம். நேரத்தைக் கடைபிடிப்பது, கோபத்தை எவ்வாறு வெளிக்காட்டக் கூடாது, உற்சாகமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" எனக் கூறுகிறார் மாலையப்பன்.

உதவி எண்கள்

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq8z0k5d4zwo

தமிழக - கர்நாடக எல்லையில் தாய்ப் புலி, 3 குட்டிகள் சந்தேக மரணம் - மேய்ப்பர்கள் காரணமா? முழு பின்னணி

1 month ago

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • பெ.சிவசுப்ரமணியம்

  • பிபிசி தமிழுக்காக

  • 27 ஜூன் 2025

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது.

இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது.

இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்கு புலிகள் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்து கிடந்த நான்கு புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று வயது குட்டிகள்

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், "இறந்துபோன தாய்ப் புலிக்கு 15 வயது இருக்கலாம். அதன் குட்டிகளுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக்குள் இருக்கும். இன்னும் சில நாள்களில் தாய்ப் புலியை விட்டு குட்டிகள், தனித்து வாழும் நிலையை அடையும் வயதில் இருந்தன.

நான்கு புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. அவை இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். நான்கு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. முதல் கட்ட விசாரணையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நாளை காலை கால்நடை மருத்துவர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பிறகுதான், புலிகள் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்" என்றார்.

இந்திய அளவில் காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில், நான்கு புலிகள் உயிரிழந்த செய்தி மிகப்பெரிய வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய்ப் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். கர்நாடக அரசு, இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த புலிகள் பாதுகாப்பு திட்டம்

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புலிகள் அதிகமாக வாழும் காடு வளம் கொண்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் பாதுகாப்புக்காக ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger) எனும் திட்டத்தை 1973இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது.

"புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "வன ஊழியர்களின் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கியதாலோ, விஷம் கொடுத்தோ மரணம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது.

'புலிகள் - வன வளத்தின் குறியீடு'

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அளவில், கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் 2வது இடத்தில் உள்ளது

தமிழ்நாட்டில் காட்டுயிர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வரும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ், "தாய்ப் புலியோடு சேர்ந்து மூன்று குட்டிகளும் உயிரிழந்ததைப் பார்க்கும்போது, இந்த நான்கு புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது," என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய காளிதாஸ், "புலிகள் அதிகமாக வாழும் காடு வளமானது எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு புலி வாழும் காடு என்றால், அங்கே 500 மான்கள் வரை வாழும். 500 மான்கள் வாழும் இடத்தில், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மற்ற விலங்குகள், பறவைகள் வாழும். மரங்கள், செடி, கொடி, புற்கள் செழிப்புடன் வளரும். ஒரு புலி, ஒரு மானை, ஒரே முயற்சியில் வேட்டையாடி உண்ண முடியாது. குறைந்தது 20 முறை முயற்சி செய்துதான், அது தன் இரையை வேட்டையாடி உண்ணும்" என்று விளக்கினார் காளிதாஸ்.

மேலும், "இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை விடவும், விஷம் வைத்துக் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காட்டின் எல்லையோரப் பகுதிகளில், கால்நடைகளை வளர்க்கும் எளிய மக்கள், தங்கள் மாடுகளைப் புலிகள், சிறுத்தைகள் அடித்துச் சாப்பிட்டு விடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆத்திரத்தின் விளைவாக, இறைச்சியில் விஷத்தைக் கலக்கும் செயலில் ஈடுபடுவது நடக்கிறது" என்று கூறுகிறார்.

ஒரு புலி, தான் அடித்துச் சாப்பிடும் உணவைக் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும் வழக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டும் காளிதாஸ், "இந்த நடைமுறையைத் தெரிந்துகொள்ளும் சிலர், தனது கால்நடையைக் கொன்ற புலியை அல்லது சிறுத்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அது மிச்சம் வைத்துள்ள இறைச்சியில் விஷம் கலந்து விடுகின்றனர். இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான புலிகள் இறப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது," என்று கூறினார்.

மேலும், காடுகளைப் பாதுகாப்பதில் வனத்துறை முற்று முழுதாகச் சுயமாகச் செயல்பட்டுவிட முடியாது எனக் கூறிய காளிதாஸ், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதோடு, "கால்நடைகளை வளர்க்கும் ஒருவருக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி விட்டால், அதற்கு அரசு இழப்பீடு வழங்கும் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று விளக்கினார்.

புலிகள் வேட்டையாடிய கால்நடைகளுக்கான இழப்பீடு

புலிகள் மரணம், வனம், சிறுத்தை, கால்நடைகள், இயற்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

புலிகள் மற்றும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், "காடுகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு ஆயிரம் முதல் 3,000 வரையும், எருமைகளுக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், மாடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் வனத்துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காட்டுயிர்களால் வேட்டையாடப்பட்ட கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்படும். அப்படித்தான் அதன் வயது முடிவு செய்யப்படும். பிறகு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்து, நிதி கையிருப்பு இருந்தால் உடனடியாக கிளைம் வழங்கப்படும். நிதி இல்லையெனில், அடுத்த மூன்று மாதங்களில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடைக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்று இழப்பீடு வழங்கப்படும் செயல்முறையை விளக்கினார்.

ஓய்வு பெற்ற கர்நாடக மாநில உதவி வனக்கோட்ட அலுவலர் அங்குராஜ் பேசும்போது, "கர்நாடக மாநில காப்புக் காடுகளின் எல்லைக்குள் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு கொடுப்பது இல்லை. ஊர் எல்லையில் உள்ள காடுகளில், காட்டுயிர்களால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்குகிறது" என்றார்.

மேலும், "மாநில அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இதுபோன்ற இழப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வைக்கும். அதில் போதிய நிதி இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். நிதி இல்லையெனில், சீனியாரிட்டி அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறிய அவர், சில நேரங்களில், ஓர் ஆண்டு கடந்தும்கூட இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் அதிகமுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 2022ஆம் ஆண்டு, புள்ளி விவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 560 புலிகளுடன் மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. தமிழ்நாட்டின் காடுகளில் 264 புலிகள் மட்டுமே வாழ்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce9x2870lv4o

தமிழை விட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு: சீமான் ஆவேசம்

1 month ago

சென்னை: “தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்கும் ஓர் முயற்சியாகும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது.

இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் துளியளவும் பயனளிக்காது. மொத்தமாகவே 10 ஆயிரம் மக்கள் கூட பேசாத ஒரு மொழியை வளர்த்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது?

நம் நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. ஒரு மொழியைத் திணித்து, ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று ஒவ்வொன்றாக ஒற்றைமயப்படுத்தி திணிக்கின்ற கொடுமை நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை. எனவே அனைத்து மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழை விட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு: சீமான் ஆவேசம் | Sanskrit is being allocated more funds than Tamil - Seeman - hindutamil.in

புலியும் சிறுத்தையும் மனிதரை உண்ணும் ஆட்கொல்லியாக எப்போது மாறும்?

1 month ago

புலி, சிறுத்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 25 ஜூன் 2025, 08:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை 'மேன் ஈட்டர்'களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர்.

மனிதன் - காட்டுயிர் மோதல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மலைப்பகுதியிலும் மனித–காட்டுயிர் மோதல் என்பது ஒரு பிரச்னையாகவே நீடிக்கிறது.

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடக்கிறது. இதைக் குறைக்கவும், தடுக்கவும் வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்பது அடுத்தடுத்து நடந்துவரும் உயிரிழப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

காட்டுயிர்களால் பலியான மனித உயிர்கள்

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு,மனித–காட்டுயிர் மோதலுக்குக் காடு துண்டாடலும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி ரமேஷ்

  • கடந்த ஜூன் 20 அன்று, வால்பாறையில் பச்சமலை எஸ்டேட் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மனோன் முண்டா–மோனிகா தேவி தம்பதியரின் 4 வயது மகள் ரோஷினி குமாரியை சிறுத்தை தாக்கிக்கொன்றது.

  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் 6 வயது மகள் அப்சரா சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.

  • 2023 ஏப்ரல் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ஓரான் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சிறுத்தையால் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்துவிட்டார்.

  • நீலகிரியில் 2014ம் ஆண்டு சோலாடா, அட்டபெட்டு, குந்த சப்பை பகுதிகளில் 3 மனித உயிர்களைக் கொன்ற புலியும், 2015ம் ஆண்டு பிதர்காடு பகுதியில் மகாலட்சுமி என்ற பெண் தோட்டத் தொழிலாளியை கொன்ற புலியும், 2016ம் ஆண்டு கூடலுார் வுட் பிரேயர் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளி மது ஒரன் என்பவரைக் கொன்ற புலியும் ஆட்கொல்லிகளாக அறிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டன.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு,தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிடில் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை

  • 2021 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற டி23 என்று பெயரிடப்பட்ட புலியை, வனத்துறையினர் உயிருடன் பிடித்து மைசூரு தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

  • 2023 ஜனவரி 31 அன்று முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில், காட்டுக்குள் சென்ற பழங்குடி மூதாட்டியை புலி ஒன்று தாக்கிக் கொன்றது.

  • 2025 மார்ச் 26 அன்று கொல்லகோடு பகுதியைச் சேர்ந்த தோடர் இனத்தைச் சேர்ந்த கேந்தர்குட்டன் என்பவர் வனப்பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தார்.

காடுகளில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடும் இயல்புடைய புலியும், சிறுத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் ஆட்கொல்லியாக மாறுகின்றன என்பது குறித்து மக்களிடம் விவாதங்கள் வலுத்து வருகின்றன.

'மேன் ஈட்டராக' எப்போது மாறுகின்றன?

ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆகிறது என்றால், அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன என்று விளக்குகிறார், முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவரான ராஜேஷ். அவரது கூற்றின்படி,

  • சில புலிகளுக்கு வயதாகி வேட்டையாடும் திறனை இழந்திருந்தால், அவை எளிதில் கிடைக்கும் இரையாக மனிதர்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது.

  • வயது குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் காயமடைந்து வேட்டையாட முடியாத சூழலில் மனிதர்களைத் தாக்கி இரையாக்கிக்கொள்வதுண்டு.

  • சில இடங்களில் காட்டுக்குள் செல்லும் மனிதர்களை ஒரு விபத்தைப் போல புலிகள் தாக்குவதுண்டு.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

''பெரும்பாலான புலிகள், காயம்பட்டாலும், வயதானாலும் அவ்வளவு எளிதில் காட்டை விட்டு வெளியில் வராது. பல புலிகள் அங்கேயே இருந்து இறந்துவிடும். அத்தகைய சூழலில் யாராவது மனிதர்கள் சிக்கினால் இரையாக்கிக் கொள்ளும். அப்படி ஒரு முறை மனிதரை எளிதாக வேட்டையாடி இரையாக்கிக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் மனிதர்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் ராஜேஷ்.

ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' என்ற நுாலில், இதுபற்றி விரிவாக எழுதியுள்ளதைக் குறிப்பிடும் நீலகிரி கானுயிர் சங்கத்தின் காட்டுயிர் புகைப்படக்காரர் சத்தியமூர்த்தி, மனிதர்களைக் கொன்று இரையாக்கிக் கொள்ளும் புலி மற்றும் சிறுத்தை ஆகியவை, 'மேன் ஈட்டர்'களாக மாறிவிட்டால் அவற்றைக் கொல்வதே தீர்வு என்று ஜிம் கார்பெட் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

1900 முதல் 1930 -ஆம் ஆண்டு வரை மனித உயிர்களை பலி கொண்ட பல புலிகள் மற்றும் சிறுத்தைகளை சுட்டுக்கொன்ற ஜிம் கார்பெட், புலிகள் மற்றும் சிறுத்தைகளின் வாழ்க்கை முறை, வேட்டையாடல் குறித்து நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அதே நேரத்தில் புலிகள், சிறுத்தைகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் ஏராளமான நுால்களை எழுதியுள்ளார்.

''மனிதத் தசைகளில் உள்ள உப்பின் சுவையை ருசிக்கும் புலிகள், மீண்டும் அதைத்தேடி மனிதர்களை வேட்டையாடும் வாய்ப்பு அதிகம் என்று ஜிம் கார்பெட் கூறியுள்ளார். ஆனால், அன்றைக்கிருந்த காட்டுச் சூழலும், இன்றைக்கு உள்ள சூழலும் முற்றிலும் மாறியுள்ளன. காடுகள் துண்டாடப்பட்டு, காடுகளும், மனித குடியிருப்புகளும் நெருங்கி விட்டதால் மனிதர்கள் குறித்த புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அடிப்படைத் தன்மைகளும் மாறியுள்ளன. அதற்கேற்ற புரிதல்கள் மக்களுக்கு வேண்டும்.'' என்கிறார் சத்தியமூர்த்தி.

"ஒதுங்கி வாழும் புலி, ஊரைத் தேடி வரும் சிறுத்தை"

106ca070-50c1-11f0-8c47-237c2e4015f5.jpg

படக்குறிப்பு,ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' நூலின் அட்டைப்படம்

பொதுவாக, புலிகள் மனிதர்களைக் கண்டால் கூச்சத்தில் ஒதுங்குகிற காட்டுயிர், மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதனால் வாழ முடியாது என்று கூறும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், ஆனால் சிறுத்தைகளுக்கு அந்த அச்சம் கிடையாது, மனிதர்கள் வாழும் பகுதிகளில் எங்காவது பதுங்கிக்கொண்டு, ஆடு, நாய், கோழிகளைப் பிடித்து இரையாக்கிக் கொண்டு வாழக்கூடியவை என்கிறார்.

இதே கருத்தைச் சொல்லும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் (Nature Conservation Foundation–NCF) மூத்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''எந்தப் புலியையும் நகருக்குள் பார்க்கவே முடியாது. ஆனால், சிறுத்தைகள் காடும், குடியிருப்பும் கலந்துள்ள பகுதிகளில் வாழும். கோவை போன்ற பெரு நகரங்களிலே கூட சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து செல்வதைப் பார்க்க முடியும்.'' என்கிறார்.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும்"

புலிகள், எல்லா வயதினரையும் தாக்கிக் கொல்வதும், சிறுத்தைகள் பெரும்பாலும் குழந்தைகளைக் கொல்வதும் கடந்த கால சம்பவங்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதற்கும் சில காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் உயரம், எடைக்கேற்பவே தனது இரையை வேட்டையாடும் என்கிறார் விஞ்ஞானி ஆனந்தகுமார்.

"சாதாரணமாக ஒரு பெரிய புலியின் எடை 250 முதல் 300 கிலோ வரை இருக்கும். ஆனால், ஆரோக்கியமான சிறுத்தையாக இருந்தாலும் அதிகபட்சம் 70–80 கிலோ அளவுதான் இருக்கும். புலி 120 செ.மீ. உயரம் வரையிருக்கும். ஆனால், சிறுத்தை அதிகபட்சமே 70 செ.மீ.க்கு உள்ளாகவே இருக்கும். அதனால் அந்த உயரத்துக்குள் இருக்கும் குழந்தைகளை அவை தாக்குவதாக" அவர் கூறுகிறார்.

''சிறுத்தைகளின் முக்கிய இரை, காட்டுப்பன்றிகள்தான். புள்ளி மான் குட்டி, கேளையாடு, சருகுமான் (Mouse Deer), காட்டு முயல், காட்டுக்கோழி, தெருநாய் ஆகியவற்றையும் அவை அதிகமாக வேட்டையாடும். சில நேரங்களில் பெருக்கான், தவளை, காமன் லங்கூர், நீலகிரி லங்கூர், சாதாரண குரங்குகள் (bonnet macaque) போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணும். தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உள்ள கடமான் குட்டிகள் அவற்றுக்கு விருப்பமான வேட்டை உணவு.'' என்கிறார் வனத்துறை மருத்துவர் ராஜேஷ்.

சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும் என்று கூறும் ராஜேஷ், இதனால்தான் குழந்தைகள் அதிகமாக தாக்கப்படுவதாக கூறுகிறார்.

குழந்தைகளை சிறுத்தைகள் குறிவைப்பது ஏன்?

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,SCIENTIST RAMESH

படக்குறிப்பு,புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ்

சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வளர்க்கப்படும் தெருநாய்களைக் கொல்லவும் சிறுத்தைகள் அவற்றை நோக்கி வருவதாகச் சொல்கிறார், இந்திய காட்டுயிர் மையத்தின் (WII-Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானி ரமேஷ். அந்த உயரத்திலுள்ள குழந்தைகளையும் தனக்கான இரை என்று கருதி அவை வேட்டையாடுவதாகச் சொல்கிறார் அவர்.

ஜிம் கார்பெட் நுாலில் எழுதியுள்ளதைக் குறிப்பிடும் விஞ்ஞானி ரமேஷ், ''இரண்டு சம்பவங்களில் இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் போது, 2 பெண்களை புலிகள் தாக்கிக் கொன்றதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே விறகு பொறுக்கக் குனியும் போதும், புலிகள் மற்றும் சிறுத்தைகளால் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். சமீபகால நடைமுறையிலும் இதுபோலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.'' என்கிறார்.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை விஞ்ஞானி ஆனந்தகுமார் பேசுகையில், ''தெரு நாய்களைத் தேடி சிறுத்தைகள் வருகின்றன. அதே உயரத்தில்தான் குழந்தைகளும் இருப்பதால் அவர்களைத் தாக்குகின்றன. உண்மையில் இதுபற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காடும், குடியிருப்பும் கலந்து இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமென்பதை மறுக்க முடியாது.'' என்கிறார்.

புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ்.

''புலிகள் சாதாரணமாக 2 வயதானவுடன் தாயை விட்டுப் பிரிந்து வெளியேறி வேட்டையாடப் பழகும். அப்போது எந்த இரை எளிதாகக் கிடைக்கிறதோ அதைத்தான் அவை தாக்கும். அதேபோன்று, காயம் பட்ட புலிகள் மனிதர்களை வேட்டையாடும். ஆனால், காயம்படும் புலிகள் வெகுநாட்கள் இருக்காது; இறந்துவிடும். '' என்கிறார் ரமேஷ்.

மனிதரை இரையாக்கிய பின்னும் 'மேன் ஈட்டர்' ஆகாத புலி

இதற்கேற்ப முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் வனத்துறை அதிகாரி ஒருவர் விளக்கினார். கடந்த 2023 ஜனவரி 31 ஆம் தேதியன்று, முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டுக்குள் விறகு பொறுக்கச் சென்ற ஒரு பழங்குடி மூதாட்டியை அடித்துக் கொன்ற இரண்டரை வயது புலியை, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாகக் கண்காணித்தும் அதற்குப் பின் எந்த மனிதர்களையும் அது தாக்கியதில்லை என்று அவர் விளக்கினார்.

இதுபோன்று தற்செயலாக நடக்கும் சம்பவங்களால் புலிகள், உடனே 'மேன் ஈட்டர்'களாக மாற வாய்ப்பில்லை என்பதை இந்த ஆய்வு விளக்குவதாக வனத்துறையினர் விளக்குகின்றனர். அதனால்தான், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிட்டால் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

புலிகளும், சிறுத்தைகளும் ஆட்களைக் கொல்வதிலிருந்து மக்களைக் காக்க, ஒவ்வொரு பகுதியையும் சம்பவத்தையும் ஆராய்ந்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்பது விஞ்ஞானிகள் பலருடைய ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது. காடுகளை ஒட்டி வாழக்கூடிய மக்களுக்கு அதற்கேற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டுமென்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மனிதன் – காட்டுயிர் மோதலை தவிர்ப்பது எப்படி?

மனித–காட்டுயிர் மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இயற்கை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''நகருக்குள் சாலைகளை ஒட்டி வீடுகள் இருக்கின்றன. அங்கே வாழும் குழந்தைகளை சாலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது போல, காட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இத்தனை மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, விளையாடக் கூடாது என்று குடும்பங்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார்.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு, புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது இதற்கு ஒரு தீர்வு கிடையாது என்கிறார் விஞ்ஞானி ரமேஷ்

வால்பாறையில் மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு, மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதி என இந்தியாவில் குடியிருப்பும், காடும் உள்ள பகுதிகளில் மனித–காட்டுயிர் மோதல் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானி ரமேஷ், "புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது ஒரு தீர்வு கிடையாது, அந்தந்தப் பகுதிக்கேற்ப நுண் திட்டங்களை (Micro Plan) உருவாக்க வேண்டும்" என்கிறார். தங்கள் அமைப்பின் ஆராய்ச்சியில், மனித–காட்டுயிர் மோதலுக்கு காடு துண்டாடப்படுவதும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.

''தேசிய அளவில் மனித–காட்டுயிர் மோதலுக்கான மையத்தை கோவையில் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தெரு விளக்கு என அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி அளவில் திட்டம் தீட்டுவதுபோல, இதிலும் ஊராட்சி அளவில் திட்டங்களைத் தீட்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பகுதியில் மோதல் வந்தபின் தீர்வு காண்பதை விட வராமல் தடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவது அவசியம்.'' என்கிறார் விஞ்ஞானி ரமேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0j4nq3d7g1o

சர்வதேச நிபுணர்கள் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபட்டால் மாத்திரமே இனப்படுகொலைக்கு நீதி சாத்தியம் : தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம்

1 month ago

25 JUN, 2025 | 12:16 PM

image

யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில் நடைபெற்ற அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களின்படி சர்வதேச நியமங்களின்படி அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே இனப்படுகொலைகளிற்கு நேர்மையான விசாரணை இடம்பெறமுடியும் என தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் அவற்றை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கூட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

511271174_711640048388047_47164135170200

https://www.virakesari.lk/article/218407

'ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள்': கூட்டணிக் கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

1 month 1 week ago

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 23 ஜூன் 2025, 06:31 GMT

    புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விசிகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுகள் வந்துள்ளன.

"கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரவையில் பங்கு கேட்போம்" - என்று கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.

இதனை மறுக்கும் தி.மு.கவே, 'கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்' என்று கூறுகிறது.

கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க-வுக்கு நெருக்கடியா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது?

'ஆட்சியில் பங்கு '

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டதாக அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்புகள் எழுந்தன.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இப்போதே பேசத் தொடங்கியுள்ளனர்.

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன்

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார்

கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், "கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம்" என்றார்.

"காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழ்நாட்டின் நிலவரத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை நடக்கும் போது, 'அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும்' என்று கேட்போம்" என அவர் குறிப்பிட்டார்.

"துணை முதல்வர் பதவி...தராவிட்டால் மாற்று வழி"

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/KRISHNAMURTHY

படக்குறிப்பு, குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பொன்.கிருஷ்ணமூர்த்தி

இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "கடந்த தேர்தலில் குறைவான தொகுதிகளை முடிவு செய்ததன் பின்னணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இருந்தார். தி.மு.க-வின் கோரிக்கையை ஏற்று குறைந்த இடங்களில் போட்டியிட்டோம்" எனக் கூறுகிறார்.

"ஆனால், 2026 தேர்தலில் குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும்" எனக் கூறும் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "அவ்வாறு கொடுக்காவிட்டால் மாற்று வழிகளை கட்சித் தலைமை ஆலோசிக்க வேண்டும். கூடவே, காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும்" என்கிறார்.

"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும் போது, தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி கூறக் கூடாதா?" எனவும் பொன்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, "கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

"தனித்து நின்று வெற்றி பெற முடியாது"

சமீப நாட்களாக, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள், 'அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்' எனப் பேசி வருகின்றன.

ஜூன் 10 அன்று மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதால் குறைவான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றோம். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை" என பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கட்சியின் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க செயல்படுத்தினாலும் தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை" எனக் கூறிய பெ.சண்முகம், "அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியாக நின்று தேர்தலை எதிர்கொள்ளும் போது தி.மு.க தரப்பிலும் கூட்டணியாக நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்" எனக் கூறினார்.

பெ.சண்முகத்தின் கருத்தை வரவேற்று செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், "அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை, தி.மு.க-வுக்கு இருக்கிறது. அவர்களும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்" எனக் கூறினார்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்குப் பதில் அளித்த திருமாவளவன், "கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்ற நிலைப்பாடும் இல்லை. ஆனால், அந்தக் கோரிக்கையை வைக்கும் சூழல் கனியவில்லை" எனவும் தெரிவித்தார்.

"12 தொகுதிகள்" - துரை.வைகோ

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன், வைகோ

பட மூலாதாரம்,X/DURAIVAIKO

படக்குறிப்பு, தங்கள் கட்சிக்கு குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ.

ஜூன் 22 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மதிமுகவின் 31வது பொதுக்குழு கூட்டத்தில், "2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து கூடுதல் தொகுதிகளைப் பெற்று, வென்று, மதிமுக தேர்தல் அங்கீகாரம் பெற வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"தங்கள் கட்சி குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும்" எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ.

"எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும்"

"தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறக் கூடிய அணியாக, தி.மு.க கூட்டணி உள்ளது. இதில் அதிக இடங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் இருக்கும். ஆனால், ஒதுக்கப்படும் இடங்களில் எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பது முக்கியம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களில் அவை பாதிக்கும் குறைவாக வெற்றி பெற்றால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும் சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/SIGAMANI

படக்குறிப்பு, எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது முக்கியம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.

"உதாரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களை பெற்றாலும் காங்கிரஸ் கட்சியால் குறைந்த இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. இதை மனதில் வைத்தே தி.மு.க இடங்களை ஒதுக்கும்" எனவும் சிகாமணி திருப்பதி குறிப்பிட்டார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க 119 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்றது.

2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவில் எட்டு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க-வுக்கு 89 தொகுதிகள் கிடைத்தன.

"தொகுதிகளை ஒதுக்குவது மட்டுமல்ல, அந்தத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கவும் தி.மு.க அதிகம் உழைக்க வேண்டிய நிலை உள்ளது" எனக் கூறுகிறார், சிகாமணி திருப்பதி.

"வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது"

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/MK STALIN

இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, "தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது" எனக் கூறுகிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, ம.தி.மு.க, த.மா.கா, இ.கம்யூ, மா.கம்யூ ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியாக போட்டியிட்டன.

"தி.மு.க தோல்வியடைவதற்கு இந்தக் கூட்டணியும் ஒரு காரணமாக இருந்தது. சுமார் ஒன்றரை சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது. அதிகாரத்தில் பங்கு என்பதை நியாயமான கோரிக்கையாகவே பார்க்கிறேன்" எனக் கூறுகிறார் ஆர்.மணி.

"காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதல் இடங்களைக் கொடுக்காவிட்டால் கண்டிப்பாக பிரச்னை வரும். கூடுதல் இடங்களைத் தருவதைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை" எனவும் ஆர்.மணி குறிப்பிட்டார்.

'ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்துப் பேசும் ஆர்.மணி, " கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு நாங்கள் மட்டுமே அதிகாரத்தில் இருப்போம் என்பதை ஏற்க முடியாது" என்கிறார்.

"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை தி.மு.க வைக்கிறது. ஆனால், அதிகாரத்தில் பங்கு என்பது தான் ஜனநாயகமாக இருக்கும். ஒரு கட்சி ஓர் இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார் ஆர்.மணி.

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க தொடர்ந்து முன்வைப்பதாகக் கூறும் ஆர்.மணி, "இது நியாயமான கோரிக்கை. இதை பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளும் முன்வைக்கின்றன" என்கிறார்.

"ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" - ஆர்.மணி

2006 சட்டமன்றத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 96 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 36 பேரும் பா.ம.க உறுப்பினர்கள் 18 பேரும் தி.மு.க அரசுக்கு ஆதரவு கொடுத்தனர்.

இதை மேற்கோள் காட்டும் ஆர்.மணி, "2026 தேர்தலில் அப்படியொரு நிலை வந்தால் தி.மு.க தலைமையால் எதிர்கொள்ள முடியாது. வெளியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தில் பங்கு கேட்கும். கருணாநிதியைப் போல ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" எனக் கூறுகிறார்.

"கூட்டணி ஆட்சி அமைவது தமிழ்நாட்டுக்கு நல்லது" எனக் கூறும் ஆர்.மணி, "மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. அதேபோல், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்." என்கிறார்.

"தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தி.மு.க

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/CONSTANTINE

படக்குறிப்பு, அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் - தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

"அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.

"மாநிலத்தில் கூட்டாட்சி என்பதை மக்கள் ஏற்பதில்லை. ஒருவர் ஆளும் போது மட்டுமே தெளிவான முடிவை எடுக்க முடியும் என நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சியாக இருந்தால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக்கொண்டு தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டதை நினைவுகூர்ந்து பேசிய கான்ஸ்டன்டைன், "அந்தக் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. 2011 தேர்தலில் குறைவான தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டபோதும் மக்கள் ஏற்கவில்லை" என்கிறார்.

திமுக கூட்டணி, தமிழ்நாடு, ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/VCK

படக்குறிப்பு, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது கிடையாது எனக் கூறிவிட்டார் - கான்ஸ்டன்டைன்

"தவிர இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "கட்சி தொடங்கும் போதே, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை." என்கிறார்.

அதிக இடங்களை கேட்பதன் மூலம், ஏற்கெனவே கொடுத்ததை குறைத்துவிட வேண்டாம் என கூட்டணிக் கட்சிகள் உணர்த்துவதாக கான்ஸ்டன்டைன் தெரிவித்தார்.

"கூட்டணிக் கட்சிகள் கேட்பதைப் போல தி.மு.க-வினரும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள். தற்போதுள்ள எண்ணிக்கையே தொடரலாம் அல்லது சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம். அதைத் தலைமை முடிவு செய்யும்" என்கிறார், பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpqn91pp95qo

சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!

1 month 1 week ago

சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!

-சாவித்திரி கண்ணன்

106.jpg

ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான் என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத்துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை;

எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்!

அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் குழுமம். அண்ணனும், தம்பியும் கைக் கோர்த்து ஆடிய அதிகார ஆட்டங்களை பல வால்யூம்களாக எழுதலாம். இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணனை தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக்க தம்பி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதே போல தம்பியை அரசியலில் முன்னினைபடுத்த அண்ணன் செய்த ஊடக நரித்தங்கள் சொல்லில் அடங்காதவை. இதுவே கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரகள் குடும்பமும் பிரியக் காரணமானது. ஆனால், விரைவில் ஒன்று பட்டனர். இந்த காலகட்டத்தில் நான் எழுதிய நூல் தான் சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும்.

20250621_104132.jpg

இவர்கள் துளிர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி தொடர்ந்து அணுக்கமாக அவதானித்து வருகிறேன் நான்!

1989 ஆம் ஆண்டு வாக்கில் குங்குமம் வார இதழில் நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளனாக கட்டுரைகள், புகைப்படங்கள் தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கலாநிதியும், தயாநிதியும் பூமாலை என்ற வீடியோ கேசட் கொண்டு வந்தனர். அதில் குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் போன்றவற்றில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களையே ஊதியம் தராமல் பயன்படுத்திக் கொண்டனர். 1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீடியோ கேசட் கடைகளை மிரட்டி விற்பனை செய்ய வைத்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலிமாறன் நகர்புற அமைச்சராகப் பதவி பெற்ற வாய்ப்பில் ஏற்பட்ட தொழில் அதிபர்கள் தொடர்புகளால் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.

12796007_291_12796007_1629183649107.png

1992- அக்டோபரில் இந்தியாவின் முதன்முதல் சேட்டிலைட் சேனலாக ZEE  தொலைகாட்சி வந்தது. உடனே தன் மகன்களுக்கு காட்சி ஊடகத்தில் இருக்கும் ஆர்வத்தை அறிந்திருந்த மாறன் ஏப்ரல் 14 1993-ல் சன் குழுமத்தை ஆரம்பித்தார்.

திமுக கழகத்தின் நிதியைத் தந்து, அதுவும் போதவில்லை என மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் கட்சி சொத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் சன் தொலைக்காட்சி.

அவர் தான் சேர்மன் தயாளு அம்மாள், மல்லிகா மாறன் இருவரும் பெயருக்கு இயக்குனர்கள். கலாநிதி, தயாநிதி, ஸ்டாலின் மூவரும் பங்குதாரர்கள். இது தான் தொடக்கம். ஆனால், இன்றைக்கு சுமார் 98 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார் கலாநிதி எனச் சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

முரசொலி அலுவலகத்தையே முதலில் பயன்படுத்தியதும், பிறகு அறிவாலயத்திற்கு எதிர் வாடையில் உள்ள சென்சூரி பிளாசாவில் 2000 சதுர அடிக்கு வாடகையில் இருந்து அதையும் தரமுடியாமல் அறிவாலயத்திற்கே வந்ததும், ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் ரூபாய் ஐயாயிரம் என்றாலும், பத்தாயிரம் என்றாலும் தொடர்ந்து பல முறை தானே போனில் நச்சரித்து பேசி வாங்கிய கலாநிதியின் பொருளாதார நெருக்கடிகளும் அவருக்கு மறந்து போயிருக்கலாம்.

2000 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷனை தயாநிதி மாறன் தான் தொடங்கினார். அப்போது தமிழகம் முழுமையும் 30,000 கேபிள் ஆப்ரேட்டர்கள் இருந்தனர். இவர்களில் ஆயிரத்திற்கு  மேற்பட்டோர் லோக்கல் சேனல் நடத்தி வந்தனர். சுமார் 200 பேராவது எம்.எஸ்.ஓ நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பலர் தொழிலைவிட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். சிலர் நடுத்தெருவிற்கு வந்தனர்,. ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அங்குமிங்கும் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. சரண்டரானவர்கள் மட்டுமே தப்பித்தனர். மத்தியி பாஜகவுடன் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் கலைஞர் ஆட்சி, மாநகராட்சியில் ஸ்டாலின் மேயர். கருணாநிதி குடும்ப அதிகாரம் கோலோச்சிய காலம் அது.

unnamed.jpg

 

சென்னையில் சிட்டி கேபிள், ஹாத்வே, ஏ.எம்.என் போன்றவர்கள் கேபிள் நெட்வொர்க்கில் இருந்தனர். இவர்கள் கேபிள் வயர்களை இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அறுத்து எறிந்தவர் தயாநிதி. அவரே களத்தில் இறங்கி ஒரு பேட்டை ரவுடி போல செயல்பட்ட காலகட்டங்கள் அவை.

இதே போல 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியிலே தயாநிதி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அப்போது தமிழில் சேனல் தொடங்க விண்ணப்பித்து இருந்த 60 நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தார். 2007 ஆண்டு மாறன் சகோதர்களுக்கும், மு.க அழகிரிக்குமான மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் பற்றி எரிந்தது. மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட பகையில் தயாநிதி மத்திய அமைச்சர் பதவி இழந்தார்.

அப்போது தான் சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டத்தை ஒடுக்க அரசு கேபிளை தொடங்குகிறார் கலைஞர்.  நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அஞ்சா நெஞ்சரான உமாசங்கர் அதன் இயக்குனராகிறார். அவர் மிக கடுமையாக உழைத்து அரசு கேபிளை நிலை நிறுத்தும் போது, சுமங்கிலியின் அட்ராசிட்டிகளை அடக்குகிறார். இதனால் பயந்து போன மாறன் சகோதர்கள் கலைஞரோடு சமாதானமாகிறார்கள். அத்துடன் அரசு கேபிளை அம்போவென விட்டுவிடுகிறார். உமா சங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுகிறார். குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் பொது நன்மைக்கு உழைத்த அதிகாரி அவமானப்படுத்தப்படுகிறார்.

20250621_120058.jpg

இந்த சன் குழும சதிக் கூட்டத்தின் அதிகார ஆட்டத்தை அடி முதல் நுனி வரை விவரித்து நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். முதலாவது 2007 ஆம் ஆண்டு எழுதிய சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். அடுத்து 2013 –ல் கொண்டு வந்த கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும். இவற்றை மிக விரைவில் கிண்டிலில் வெளியிட உள்ளேன்.

இன்றைக்கு என்ன நிலைமை?  இந்தியாவின் பல மொழிகளில் 30 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு அதிபர். எம்.எம் வானொலிகள், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், இன்னும் பல பிசினஸ்கள்..எல்லாவற்றிலும் தம்பியைத் தவிர்த்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். சுமங்கலி கேபிள் விஷனையும் அவரே எடுத்துக் கொண்டார். நிறுவனங்களின் 98 சதவிகித பங்குகளை கலாநிதியே வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

29693246474_be67fc9929_b.jpg

தம்பியை அரசியலில் நீ சம்பாதித்துக் கொள். தொழில் சம்பாத்தியம் அனைத்தும் எனக்கே என முடிவு செய்துவிட்டார் போலும். அரசியலில் இருக்கும் போது கூட அண்ணனுக்கு அடியாள் வேலை மட்டுமே பார்த்தவர் தான் தயாநிதி. பல உயர் நிறுவனங்களில் அண்ணனை பங்குதாராக்க நிர்பந்தம் கொடுத்தார். ரத்தன் டாட்டா அவர்கள் இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம் என மூஞ்சிக்கு நேராக சொல்லி அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் டாட்டாவையே மொட்டை அடித்து தெருவில் நிற்க வைத்திருப்பார்கள். ஆட்சி மாற்றங்களும், காட்சி மாற்றங்களும் நடந்தன.

திமுக குடும்பத்தில் இன்றைக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக சபரீசன் வந்துவிட்டார். கலாநிதி மாறனே கதிகலங்கி போய் அவரோடு கைகுலுக்கி தன்னை தற்காத்துக் கொண்டார். தயாநிதியோ அரசியலில் புதிதாக உள்ளே நுழைந்த சோட்டா பாயான உதயநிதிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளார். அரசியலில் தனக்கான எதிர்காலம் குறித்து அவருக்கு அச்சம் இருக்கிறது. எல்லாமே அண்ணன் என இருந்துவிட்டதால் அண்ணன் பார்த்து செய்வார் என தனக்கான சேனல் என்பதாக தன் மகனைக் கொண்டு கரண் தொலைகாட்சி தொடங்க முயன்றார்.

தன்னைத் தவிர யாருமே வளர்வதை அறவே விரும்பாத இயல்பு  கொண்டவரான கலாநிதி தம்பியை வளரவிடுவாரா? நான்கைந்து வருட காத்திருப்புக்கு பிறகும் தயாநிதியால் தனக்கென ஒரு சேனலை சாத்தியப்படுத்த முடியவில்லை. தன் மகனுக்கு சன் குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பையும் பெற்றுத் தர முடியவில்லை. கலாநிதியின் மனைவியும் மகளுமே அங்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

இந்தச் சூழலில் தான் 22 வருடங்களாக மனதில் பொத்தி வைத்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாநிதி. ஆனால், பாட்டி தயாளு அம்மாள், அம்மா மல்லிகா மாறன் ஆகியோரையே நிராகரித்து தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொண்ட கலாநிதி, தன் இயல்புக்கு ஏற்ப தம்பியை நிராகரித்துள்ளார். ஸ்டாலின் பேசியும் கலாநிதி ஒத்து வரவில்லை. தம்பிக்கு ஒரு நியாயமான பங்கை தர இசைவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தயாநிதியின் வக்கில் நோட்டீஸ் அண்ணன் கலாநிதியை கலவரப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தையடுத்து சன் குழுமத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

அட்டூழியக்காரர்கள் தங்கள் அழிவை தாங்களே வலிந்து உருவாக்கி கொண்டு அழிவர் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அந்த வகையில் பற்பலரின் பேரழிவுக்கு காரணமான சன் குழுமத்தினரின் சங்கதியும் ஒரு முடிவுக்கு வருமா? அல்லது சமாதானமாகிக் கொண்டு ஒன்றிணைந்துவிடுவார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21935/kalanidhi-vs-thadhayanidhi/

'சன் பங்குகளை அபகரித்தார்': கலாநிதிக்கு தயாநிதி வக்கீல் நோட்டீஸ் - சன் குழுமத்தில் என்ன நடக்கிறது?

1 month 1 week ago

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 20 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

'முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை' எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உள்பட 8 பேருக்குத் தனது வழக்கறிஞர் மூலமாக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று தயாநிதி மாறன் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சட்டவிரோத பங்கு பரிமாற்றம் மூலம் சன் நெட்வொர்க்கின் சொத்துகளை கலாநிதி மாறன் அபகரித்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதில், "கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் 12 முதல் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது. இதனால் இந்த இரு குடும்பங்களும் தலா 50 சதவிகித பங்குகளை வைத்திருந்தன" எனக் கூறியுள்ளார்.

"தயாநிதி மாறனின் தந்தை எஸ்.என்.மாறன் என்ற முரசொலி மாறனுக்கு 47,500 பங்குகளும் மல்லிகா மாறனுக்கு 9 ஆயிரம் பங்குகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே மல்லிகா மாறனிடம் ஆயிரம் பங்குகள் இருந்ததால், இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பங்குகளாக இருந்தன" எனக் கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பின்னர் சன் டிவி லிமிடெட்டாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நோட்டீஸில் என்ன உள்ளது?

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கடந்த 2002ஆம் ஆண்டு பங்குதாரர்களுக்கும் முரசொலி மாறன் மற்றும் மல்லிகா மாறனுக்கும் போனஸ் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முரசொலி மாறனின் கணக்கில் 95 ஆயிரம் பங்குகளும் மல்லிகா மாறனின் கணக்கில் 20 ஆயிரம் பங்குகளும் சேர்ந்தன" எனவும் தயாநிதி மாறன் கூறுகிறார்.

தொடக்கத்தில் இருந்து 2003 செப்டம்பர் 15 வரை சன் நெட்வொர்க் நிறுவனத்தில் சம்பளம் பெறும் ஊழியராக கலாநிதி மாறன் இருந்ததாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்த நிறுவனங்களில் எந்தவித பங்கும் அவருக்கு இல்லை. ஆரோக்கியத்துடன் முரசொலி மாறன் இருந்தபோது கலாநிதிக்கு எந்தப் பங்குகளையும் அவர் அளிக்கவில்லை" என்கிறார்.

கடந்த 2002ஆம் ஆண்டில் முரசொலி மாறனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்ததால், கோமா நிலைக்குச் சென்றதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "2002 நவம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

இதன் பிறகு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட முரசொலி மாறன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

தந்தையின் உடல்நிலை மோசமான நேரத்தில் குடும்பமே அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, "தனிப்பட்ட நலனுக்காக முழு சொத்துகளையும் அபகரிக்கும் நோக்கில் தனது சதித் திட்டத்தை கலாநிதி மாறன் செயல்படுத்தினார்" என தயாநிதி மாறன் நோட்டீஸில் விமர்சித்துள்ளார்.

தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • சன் நெட்வொர்க் குழுமத்தின் 12 லட்சம் பங்குகளை கருணாநிதி குடும்பம் உள்பட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறாமல் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டார்.

  • கடந்த 2003ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க்கின் பங்கு மதிப்பு தோராயமாக 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அப்படி இருக்கும்போது, 10 ரூபாய் மதிப்பில் பங்குகளை மாற்றியுள்ளார்.

  • கடந்த 2003, மார்ச் 31ஆம் தேதியன்று நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரித் தொகையாக 253 கோடியே 53 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இருந்தது. 15.9.2003 வரை நிறுவனத்தின் ஒரு பங்குகூட கலாநிதி மாறனிடம் இல்லை. ஆனால், ஒரே நேரத்தில் பெரும்பான்மையான பங்குதாரராக மாறினார்.

  • முரசொலி மாறன் 2003 நவம்பர் 23 அன்று உயிரிழந்தார். சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டு நவம்பர் 28 அன்று அவரது இறப்பு பதிவு செய்யப்பட்டது. அவர் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை.

  • பல்வேறு நிறுவனங்களில் அவரது பங்குகளை உள்ளடக்கிய சொத்து, இந்து வாரிசுரிமை சட்டத்தின் 8வது பிரிவின்படி தாய் சண்முகசுந்தரம், மல்லிகா மாறன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மகள் அன்புக்கரசி ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படவில்லை.

கருணாநிதி கேட்ட கேள்வி

முரசொலி மாறனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு (2003 நவம்பர் 24) அன்று, "சொத்து மற்றும் தொழில்களைப் பிரிப்பது தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?" எனத் தன்னிடம் கருணாநிதி கேட்டதாக தயாநிதி மாறன் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு "தந்தையைப் போலவே குடும்பத்துக்கு நன்மை தரக்கூடிய செயல்களை கலாநிதி மாறன் செய்வார்" எனத் தான் கருணாநிதியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளதோடு, "ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக தனது திட்டத்தை அவர் செயல்படுத்தினார்" எனவும் கூறியுள்ளார்.

நம்பிக்கையை மீறுவது, ஏமாற்றுதல், மோசடி செய்தல், குற்றவியல் சதி ஆகியவற்றை இது தெளிவாக உணர்த்தியுள்ளதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406, 409, 463, 465, 467, 468, 471 மற்றும் 120பி (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் இவை தண்டனைக்குரியது" என்று தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

சன் குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களை 15.9.2003 அன்று இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் "பங்குகளை உரிமையாளர்களான மு.க.தயாளு மற்றும் முரசொலி மாறனின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்து சன் குழுமம் கூறுவது என்ன?

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சன் குழுமம் முழுமையாக மறுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நிறுவனத்தின் செயலாளர் ரவி ராமமூர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சன் நெட்வொர்க் உரிமையாளருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் இடையில் நடக்கும் விவகாரம் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது குற்றம் சுமத்தப்படும் விஷயங்கள், 22 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை, அவதூறானவை என்றும் சட்டப்படி எந்த உண்மையும் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள சன் நெட்வொர்க் குழுமம், "இடைத்தரகர்களால் அவை சரிபார்க்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளது.

"கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், வணிகம் அல்லது அதன் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உரிமையாளரின் குடும்ப விவகாரங்களில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" எனவும் சன் குழுமம் குறிப்பிட்டுள்ளது.

"பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள் எந்தவித குழப்பத்தையும் அடையக்கூடாது" என்பதற்காக சன் குழுமம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால், வழக்கறிஞர் நோட்டீஸ் தொடர்பான எந்த விவரங்களையும் கடிதத்தில் சன் குழுமம் குறிப்பிடவில்லை.

இது தொடர்பாக, தயாநிதி மாறனின் வழக்கறிஞர் சுரேஷை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. "இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

சன் குழுமம் உருவான கதை

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம், 1985 டிசம்பர் 12ஆம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது.

கடந்த 1989ஆம் ஆண்டில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பை கலாநிதி மாறன் கவனித்து வந்தார். 1990ஆம் ஆண்டில் 'பூமாலை' என்ற பெயரில் மாதம் இருமுறை வீடியோ கேசட் ஒன்றை அவர் வெளியிட்டு வந்தார்.

செய்திகளை பின்னணிக் குரலுடன் அதற்கான படங்களைக் காட்சிப்படுத்தி வீடியோவாக உருவாக்கி வெளியிட்டனர். பிறகு 'சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்', 'சன் டிவி லிமிடெட்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் பின்னணியில் முரசொலி மாறனும் கலாநிதி மாறனும் இருந்தனர். இதில் தயாளு அம்மாவும் பங்குதாரராக இருந்தார்.

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன் தொலைக்காட்சி உருவான காலத்தில் தூர்தர்ஷன் தவிர வேறு தொலைக்காட்சிகள் இல்லாததால் அது பிரபலமடையத் தொடங்கியது. அப்போது 'தமிழ் மாலை' என்ற பெயரில் மூன்று மணிநேரம் மட்டும் ஒளிபரப்பு நடத்தப்பட்டது.

பிறகு கேபிள் தொழிலிலும் கலாநிதி மாறன் இறங்கினார். சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கேபிள் தொழிலை நடத்தி வருகிறார்.

சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதில் இருந்து 2007 வரையில் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செயல்பட்டது. சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 'தினகரன்' நாளேட்டில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரியை மையப்படுத்தி கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது.

இதனால் அழகிரி தரப்பினர் கோபம் அடையவே, மதுரை தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக மாறன் சகோதரர்களை கருணாநிதி விலக்கி வைத்தார்.

அண்ணா சாலையில் இருந்த சன் தொலைக்காட்சி அலுவலகம், அடையாறுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் தொலைக்காட்சி உருவானது.

'இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது?' என அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த கருணாநிதி, "சன் டிவியில் என் மனைவி தயாளு அம்மாள் வசமிருந்த 20 சதவிகித பங்குகளை முழுமையாக விட்டுக் கொடுத்ததால் 100 கோடி ரூபாய் கிடைத்தது" எனக் கூறியிருந்தார்.

தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை சன் குழுமம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், சன் டிவி, சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா, கே டிவி, ஜெமினி டிவி, சன் லைஃப், சுட்டி டிவி, ஜெமினி மூவிஸ் டிவி, ஜெமினி மியூசிக், ஜெமினி காமெடி, குஷி டிவி, ஜெமினி லைஃப், உதயா டிவி, சூர்யா டிவி, சூர்யா மூவிஸ், சூர்யா காமெடி, சூர்யா மியூசிக், கொச்சு டிவி, சன் பங்களா, சன் மராத்தி என இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது.

மாறன் குடும்பத்தின் பின்னணி

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் இருந்தனர்.

சண்முக சுந்தரத்தம்மாள் என அழைக்கப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகிய மகன்களும் பெரிய நாயகத்துக்கு அமிர்தம் என்ற மகனும் இருந்தனர்.

முரசொலி மாறனின் இயற்பெயரான தியாகராஜ சுந்தரம் என்பதை நெடுமாறன் என கருணாநிதி மாற்றினார். ஆனால், இந்தப் பெயரில் இருவர் இருந்ததால், முரசொலி நாளேட்டின் பெயரையும் சேர்த்து முரசொலி மாறன் என்று அவர் வைத்துக் கொண்டார்.

இவருக்கு கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என இரு மகன்களும், அன்புக்கரசி என்ற மகளும் உள்ளனர். வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்த கலாநிதி மாறன், தொடக்கத்தில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்துள்ளார். இவருக்கு காவேரி என்ற மனைவியும் காவ்யா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று முரசொலி மாறன் மறைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலுக்குள் தயாநிதி மாறன் வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2004ஆம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004 மே முதல் 2007 மே 13 வரை இந்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார்.

கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2008ஆம் ஆண்டு டிசம்பரில் மோதல் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கண்கள் பனித்தது, இதயம் இனித்தது" என்று பதில் அளித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், இந்திய ஜவுளித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தவர், 2ஜி விவகாரம் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjel0l2pj80o

'சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது' - ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்

1 month 1 week ago

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாமி சிலையின் பல்லக்கைத் தூக்குவதில் இருந்து கோவில் கோபுர கலசத்தில் நீரைத் தெளிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து தரப்பு மக்களும் சமமாகப் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியது எப்படி?

வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய பட்டியல் சமூக மக்கள்

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின மக்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர்.

அந்த ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அந்தப் பழமையான கோவிலை இடித்துவிட்டுப் புதிய மாரியம்மன் கோவிலைக் கட்ட ஊர்மக்கள் திட்டமிட்டனர்.

பிபிசி தமிழிடம் பேசிய உள்ளூர் கிராம மக்கள், அந்த கோவிலின் பெரும்பான்மைப் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் சில ஆண்டு காலம் அப்படியே இருந்தது. அதன் பின்னர் ஊர் மக்கள் அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டி இந்தக் கோவில் பணிகளை முடிக்க ஆர்வம் காட்டினோம் என்று தெரிவிக்கின்றனர்.

நான்கு முக்கியக் கோரிக்கைகள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்க முடிவெடுத்த தருணம்

"கோவில் கட்டி முடித்த பிறகு நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் பட்டியலின மக்களின் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் நான்கு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தோம்" என்று தெரிவிக்கிறார் பட்டியல் பிரிவைச் சேர்ந்த ராம்ஜி. அந்தக் கோரிக்கைகள்,

  • பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும்

  • விழா கமிட்டியில் சம அளவிலான பொறுப்புகளை பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்

  • கோவிலில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வழி வகை செய்ய வேண்டும்

  • கோவில் திருவிழாவின்போது சாமி சிலை தூக்குவதைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சிலைகளை வண்டியில் வைத்து பவனி அழைத்து வர வேண்டும்.

"ஆரம்பத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு வீடாக கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5000 வசூலிக்கப்பட்டது. பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன," என்று தெரிவிக்கிறார் ராம்ஜி.

"ஆரம்பத்தில் சிறு சிறு கோவில் நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். பிறகு சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் போன்றவற்றை கோவிலுக்கு மேல்புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பட்டியலின பெண்கள் கீழ் புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கின," என்று விவரிக்கும் ராம்ஜி, பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுதான் இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிர்வாகத்தை நாடியதாகக் குறிப்பிடுகிறார்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முடிவுகள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,மாரியம்மன் சிலை பவனி நிகழ்வில் பங்கேற்ற ஊர்ப் பொதுமக்கள்

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே வட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் மே 29ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விழா கமிட்டி குழுவினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி:

  • கோவில் குடமுழுக்கு விழாவில், பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கோவில் விழாக் குழுவில் அனைத்து வகுப்பினரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். சாமி ஊர்வலத்திற்கான வாகன ஏற்பாட்டைப் பொதுவான முறையில் செய்ய வேண்டும்.

  • வாட்ஸ்ஆப் குரூப்பில் சாதி தொடர்பான பதிவுகள் எதையும் பதிவிடக்கூடாது. சாமி ஊர்வலம், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் சாதிப் பாகுபாடின்றி அனைத்து வகுப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

  • திருவிழா சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும், மேற்படி இருதரப்பினரும் வழங்க வேண்டும்.

இந்த முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன், "மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதன் அடிப்படையில், அமைதியான முறையில் வழிபாடு நடத்த மக்கள் அனைவரும் முன்வந்தனர்" என்று கூறினார்.

'அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கக் கூடாது'

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஊர் பொதுமக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விழாக் கமிட்டி குழுவின் தலைவர் காசி விஸ்வநாதன் அடுத்து வரும் தலைமுறையினர் சாதிய கொடுமை மற்றும் தீண்டாமையின் வாசமின்றி வளர வேண்டும் என்று கூறினார்.

"தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். ஆனால் கடவுள் மற்றும் வழிபாட்டு உரிமையானது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருக்கும். அதை கடவுளிடம் முறையிட கோவில்களுக்கு வருகின்றனர். பிற்போக்குத் தன்மை கொண்ட சாதிய கட்டுப்பாடுகளை நாங்கள் உடைக்க விரும்பினோம்," என்று தெரிவித்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், "கோவில் திருவிழாவின்போது உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் சாதிய பெருமைகளைப் பேசும் வீடியோக்கள், சாதிப் பெயர்கள் மற்றும் பாடல்கள் போன்றவை பகிரப்படுவதை மறுத்தோம்.

மேற்கொண்டு பேனர்களிலும் சாதிப் பெயர்கள் ஏதும் இடம் பெறாமல் அச்சிடப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அதை அனைவரும் முறையாகப் பின்பற்றினோம். மக்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மகிழ்வுடன் பங்கேற்றனர்," என்றார்.

இனி வருங்காலங்களிலும், அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய போக்கே தொடரும் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

அனைத்து கோவில் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பட்டியலின மக்கள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,குடமுழுக்கு நிகழ்வின்போது ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பங்கேற்றனர்.

ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்து பால் குடம் எடுத்துள்ளனர்.

"அனைவரும் ஒன்றாக பால் குடம் எடுத்தோம். பொங்கலும் ஒன்றாகப் படையலிடப்பட்டது. மேலும் மாரியம்மன் சிலை பவனியின்போது அந்தச் சிலையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தூக்கிச் சென்றனர். எங்கள் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அனைத்தும் நடைபெற்றது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார் ராம்ஜி.

கேள்விக்குள்ளாகிறதா பட்டியலின வழிபாட்டு உரிமைகள்?

"பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் காலம் காலமாகப் பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில மாற்றங்களையும், சேலம் கிராமத்தில் நடந்திருப்பது போன்று நேர்மறையான மாற்றங்களையும் காண்பது மக்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெளியுலக அனுபவத்தையும் காட்டுகிறது," என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் வெளியான தலித் இதழ்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான ஆர். யுவராஜ்.

தமிழ்நாடு பட்டியலின மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து வரும் அவர், "இதுபோன்ற கோவில் வழிபாட்டு உரிமைகள் அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை," என்றும் குறிப்பிட்டார்.

"பல சமூகத்தினர் சேர்ந்து வாழும் பகுதி என்பதால் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தொழில்மயமாக்கப்பட்ட பகுதி என்றால் ஒரே தொழிலைச் சார்ந்து பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில், பழைய தீண்டாமை பழக்கவழக்கங்கள் எளிமையாக முடிவுக்கு வருகிறது. ஏனெனில் அவர்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதாரத்திற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர்.

ஆனால் ஒரேயொரு சாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, வாழ்வும் வருமானமும் ஒரு எல்லைக்குள்தான் என்று வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் சாதிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கின்றன," என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அதோடு, சமூக நீதிக்கான பயணம் மிக நீண்டது எனவும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கோவில் பிரவேசம் ஓர் இளைப்பாறல் எனவும் யுவராஜ் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpw7g1ee0n2o

Checked
Sat, 08/02/2025 - 08:39
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed