உலக நடப்பு

ஈஸ்டர் பண்டிகை; ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு!

3 months 1 week ago

New-Project-219.jpg?resize=750%2C375&ssl

ஈஸ்டர் பண்டிகை; ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி, 30 மணி நேர போர் நிறுத்தம் மொஸ்கோ நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும்.

எனினும், போர் நிறுத்தத்தின் போது, “எந்தவொரு சாத்தியமான மீறல்களுக்கும்” பதிலளிக்க ரஷ்யப் படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் புட்டின் கூறியுள்ளார்.

ரஷ்யாவும், உக்ரேனும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு இருப்பதைக் காட்டாவிட்டால், சில நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை கைவிடலாம் என்ற அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து, மொஸ்கோவின் 30 மணி நேர போர் நிறுத்தமானது அமுலுக்கு வந்துள்ளது.

எவ்வாறெனினும், புட்டினின் அறிவிப்புக்குப் பின்னர் சிறிது நேரத்திலேயே, ரஷ்யப் படைகள் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்ததாக உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு, தமது விமானங்கள் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை முறியடித்ததாக கூறினார்.

Athavan News
No image previewஈஸ்டர் பண்டிகை; ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அற...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி, 30 மணி நேர போர் நிறுத்தம்...

ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு!

3 months 1 week ago

New-Project-217.jpg?resize=750%2C375&ssl

ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு!

ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கச் செய்யவும் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது.

எனினும், வடமேற்கு ஏமனை ஆளும் ஹவுத்தி தலைமையிலான அரசாங்கம், அந்த முனையம் ஒரு பொதுமக்களை கொண்ட பகுதி என்றும், அந்தத் தாக்குதல் “முழுமையான போர்க்குற்றம்” என்றும் கூறியது.

செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் காசா போருடன் தொடர்புடைய இஸ்ரேல் மீதான ஹவுத்தி தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் அமெரிக்கப் படைகள் தங்கள் குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

அன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது.

https://athavannews.com/2025/1428787

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

3 months 2 weeks ago

New-Project-212.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

உக்ரேனில் கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆரம்ப படியாக, கெய்வ் மற்றும் வொஷிங்டன் வியாழக்கிழமை (17) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இயற்கை வளங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் கடந்த பெப்ரவரியில் தயாராக இருந்தபோதிலும், ட்ரம்பிற்கும் உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக சந்திப்பு குழப்பமாக மாறியதால் அது தாமதமானது.

இந்த நிலையில் குறித்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள உக்ரேனின் முதல் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்வைரிடென்கோ,

எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்ட உள்நோக்க ஒப்பந்தம் ஒரு பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமாகும்.

இது உக்ரேனின் மறுகட்டமைப்புக்கான முதலீட்டு நிதியை அமைப்பதற்கும் வழி வகுக்கிறது – என்றார்.

2022 இல் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கு அமெரிக்க ஆதரவு தேவை என்பதை அங்கீகரித்த பின்னர் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.

https://athavannews.com/2025/1428765

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சிகளை கைவிட அமெரிக்கா திட்டம்?

3 months 2 weeks ago

18 APR, 2025 | 04:52 PM

image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில் இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன்.

 ட்ரம்ப் இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில் இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார். இது முக்கியமானது. என்றாலும் இதே அளவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது நம் முன் உள்ள ஒரு பிரச்சினை. அதேநேரத்தில் இது சாத்தியமாகுமா என்பதை நாம் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சவாலும் நம் முன் உள்ளது. ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அது விரைவில் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் இருக்க வேண்டும்.

இதை 12 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு தூரம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும்இ அந்த வேறுபாடுகளைக் குறைக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.

ukraine_forces_june_.jpg

உக்ரைனின் கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறேன் என்று ட்ரம்ப் நேற்று(வியாழக்கிழமை) கூறி இருந்தார். உக்ரைனுடனான அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட்ட நிலையில் ரூபியோ இவ்வாறு கூறி இருக்கிறார். வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாததால் வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் விரக்தியை ரூபியோவின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

வெள்ளை மாளிகையில் தனது முதல் 24 மணி நேரத்திற்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/212307

இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஹமாஸ்

3 months 2 weeks ago

இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஹமாஸ்

%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+

இஸ்ரேல் முன்மொழிந்த இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது. 

பாலஸ்தீனத்துடன் 45 நாட்களுக்கான போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்த இஸ்ரேல், 10 பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இணங்கியது. 

எனினும் இவ்வாறான பகுதியளவான போர்நிறுத்த ஒப்பந்தங்களை தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும், அவை பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கானவை என்றும் ஹமாஸின் பிரதானப் பேச்சாளர் காலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். 

தாங்கள் நிறைவானதும், முழுமையானதுமான போர் நிறுத்த ஏற்பாட்டையே எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.hirunews.lk/tamil/403155/இடைக்கால-போர்-நிறுத்தத்-திட்டத்தை-நிராகரித்தது-ஹமாஸ்

தாலிபான் மீதான தடையை நீக்கிய ரஷ்யா!

3 months 2 weeks ago

New-Project-210.jpg?resize=750%2C375&ssl

தாலிபான் மீதான தடையை நீக்கிய ரஷ்யா!

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்ட ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் மீதான தடையை ரஷ்யாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (17) நீக்கியது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்யாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

நாட்டின் மீது அதன் கட்டுப்பாடு இருந்தபோதிலும், மனித உரிமைகள், நிர்வாகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், தாலிபான் தலைமையிலான நிர்வாகம் எந்த நாடும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ரஷ்ய நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பு, 2003 ஆம் ஆண்டு மொஸ்கோவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தலிபான்களுக்கு ஒரு இராஜதந்திர வெற்றியாகும்.

முன்னாள் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகாலப் போரை நடத்தியது, இது 1989 இல் மொஸ்கோ தனது படைகளைத் திரும்பப் பெற்றதுடன் முடிந்தது.

எனினும், ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்த உதவுவதற்காக தாலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மைய ஆண்டுகளில், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவை தாலிபான்களை பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளன.

2021 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு திரும்பியபோது,1996 முதல் 2001 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தை விட மிகவும் மிதமான ஆட்சியை வழங்குவதாக தலிபான்கள் உறுதியளித்தனர்.

ஆனால், 2021 கையகப்படுத்தலுக்குப் பின்னர் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கினர்.

பூங்காக்கள், குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொது இடங்களில் பெண்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில், பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் தாலிபான்களை உலக அரங்கில் தனிமைப்படுத்தியுள்ளன.

இருப்பினும் அவர்களின் அரசாங்கம் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428756

புளோரிடா பல்கலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் துப்பாக்கி சூடு.

3 months 2 weeks ago

New-Project-206.jpg?resize=750%2C375&ssl

புளோரிடா பல்கலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் துப்பாக்கி சூடு.

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் (FSU) ஒரு பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிதாரி என்று கூறப்படும் 20 வயதுடைய FSU மாணவர் பீனிக்ஸ் இக்னர், மாநிலத் தலைநகரான டல்லாஹஸ்ஸியில் உள்ள மாணவர் சங்கக் கட்டிடத்திற்கு அருகில் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளார்.

பின்னர், சந்தேக நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

இறந்தவர்கள் மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழக வளாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2025/1428727

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!

3 months 2 weeks ago

9732e96a-81cd-417f-bd35-a332af71e611_fa1

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!

பணமோசடி வழக்கில் பெரு நாட்டின்  முன்னாள் ஜனாதிபதி  ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த  2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதன்போது  ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி  ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்  வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்படுகின்றது.

f5968aa30bdff1_5968aa30be0a2.jpeg?resize

இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி  ஒல்லாண்டா, மற்றும்  அவரது மனைவி ஹெரேடியா (Heredia) ஆகியோர் மீது தலைநகர் லிமாவில் உள்ள நீதிமன்றில் பணமோசடி வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே 2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஒல்லாண்டா உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே அவரது மனைவி ஹெரேடியா பெருவில் உள்ள பிரேசில் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார். அங்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் இந்த தண்டனையை எதிர்த்து ஒல்லாண்டா ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்யவுள்ளனர். அந்த வழக்கில் ஹெரேடியா பிரேசிலில் இருந்து கொண்டே காணொலிக்காட்சி மூலம் ஆஜர் ஆவார் என அவரது  சட்டத்தரணி  வில்பிரடோ பெட்ராசா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428722

அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும் - இருநாடுகளிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக செயல் இழக்கும் - சிங்கப்பூர் பிரதமர்

3 months 2 weeks ago

17 APR, 2025 | 10:38 AM

image

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது புதியவரிகளை இடைநிறுத்திவைத்துள்ளமை குறித்து சிறிதும் நிம்மதிபெருமூச்சு விடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போரினால் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் முற்றாக நின்றுபோகும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்பினை அந்த இரு நாடுகளும் மாத்திரம் அனுபவிக்கப்போவதில்லை முழு உலகமும் உணரப்போகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது புதிய வரிகளை ஜூலை வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள போதிலும் அமெரிக்கா பத்து வீத வரிகளை விதித்து வருகின்றது என தெரிவித்துள்ள அவர் ஒரு அறிவிப்பின் மூலம் வரிகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்ற நிலையில் எந்த நிறுவனமும் நீண்ட கால முதலீடுகள் குறித்து திட்டமிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தை துண்டிக்கும்,என அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருப்பது உலக பொருளாதாரத்தின் மறு உருவாக்கத்தை என தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் ஆனால் இது ஒருங்கிணைந்த விதத்தில் இடம்பெறவில்லை மாறாக அமெரிக்கா சீனாவை மையமாக கொண்டதாக காணப்படுகின்றது எனசிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/212182

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் – பைடன் குற்றச்சாட்டு

3 months 2 weeks ago

230421-biden-trump-mn-0825-032389.webp?r

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் – பைடன் குற்றச்சாட்டு.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.  குறிப்பாக ட்ரம்ப் அண்மையில் விதித்த புதிய வரிக்கொள்கை உலகநாடுகள்  மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தமது ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் முதல் முறையாக  முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்  அண்மையில் உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன்போது ”  ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தை டொனால்ட் ட்ரம்ப் சீரழித்து விட்டார்” என    ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

அத்துடன்  அவசர அவசரமாக ட்ரம்ப் கொண்டுவந்த மாற்றங்களால், அமெரிக்கர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகளும்  பாதிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேரழிவுகளை ட்ரம்ப் அரசு கொண்டுவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப்  போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்  நிலையில்  சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428615

ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை!

3 months 2 weeks ago

New-Project-180.jpg?resize=750%2C375&ssl

ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை!

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார்.

நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் முக்கியமான விவாதங்களுக்காக அவர் தெஹ்ரானுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வந்துள்ளது.

பிரான்ஸ் செய்திச் சேவையான லு மொண்டேவிடம் பேசும் போது க்ரோஸி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்துடன் அதன் இணக்கத்தை கண்காணிக்கும் பணியை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு (IAEA) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் பின்னர், ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

வொஷிங்டனின் உறுதியான நிலைப்பாடு இருந்தபோதிலும், ஈரான் தனது திட்டம் முற்றிலும் சிவிலியன் என்று நிலைநிறுத்துகிறது.

இந்த நிலையில் ஈரானும் அமெரிக்காவும் சனிக்கிழமை (19) திட்டமிடப்பட்ட இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் நிலையில், க்ரோசியின் வருகை அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

ஓமானில் நடைபெற்ற முதல் சந்திப்பை இரு தரப்பினரும் “ஆக்கபூர்வமானது” என்று வர்ணித்தனர்.

இருப்பினும் தெஹ்ரான் ரஷ்யாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக மொஸ்கோவிற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவுடனான வரவிருக்கும் சுற்று அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் ரோமில் நடைபெறும் என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இது பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் குறித்த முந்தைய நிச்சயமற்ற தன்மையை நீக்குகிறது.

ஈரானின் அணுசக்தி முன்னேற்றம் ஆயுதமயமாக்கலில் குறுக்கிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப பாதுகாப்புகள் மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்.

https://athavannews.com/2025/1428578

சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா!

3 months 2 weeks ago

US-China-trade-war-web2.jpeg?resize=750%

சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா!

அமெரிக்கா-  சீனா இடையேயான வர்த்தகப்  போர் தீவிரமடைந்து வரும்  நிலையில்  சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதற்குப்  பதிலடி கொடுக்கும் வகையில் சீன இறக்குமதிக்கான வரியை 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான ‘உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்திக்கு அமெரிக்கா சீனாவையே அதிகம் சார்ந்துள்ளது.

இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையிலேயே சீன இறக்குமதிக்கான வரியை ஏற்கனவே விதித்த 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பு உலகரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தகக்து.

https://athavannews.com/2025/1428589

கணினி சிப் தயாரிப்பில் ஆதிக்கத்தை நிறுவ முயலும் அமெரிக்கா - ஆசியாவின் சவாலை சமாளிக்குமா?

3 months 2 weeks ago

சிப்கள்

படக்குறிப்பு,நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கியப் போர்க்களமாகவே உள்ளன.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சுரஞ்சனா திவாரி

  • பதவி,

  • 16 ஏப்ரல் 2025

பல ஆண்டுகளாக அமெரிக்கா சிப் உற்பத்தியை "தவற விட்டுவிட்டது" . இதன் காரணமாக சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின.

அப்போது அமெரிக்க வர்த்தகச் செயலாளராக இருந்த ஜினா ரைமண்டோ, 2021 இல் எனக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கிய போர்க்களமாகவே உள்ளன.

இந்நிலையில், பிற நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, முழுமையாக வெற்றி பெற்ற ஒரு மிக நுட்பமான, சிக்கலான உற்பத்தி முறையை வேகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

தனது சுங்க வரிக் கொள்கை அமெரிக்கப் பொருளாதாரத்தை விடுவித்து, வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்குச் சாதகமாக கொண்டு வரும் என டிரம்ப் கூறுகிறார்.

ஆனால், திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமலும், அமெரிக்க தொழிற்சாலைகளில் உள்ள தரமற்ற உற்பத்தியோடும், சில பெரிய நிறுவனங்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றன.

அப்படியானால், டிரம்ப் வித்தியாசமாக என்ன செய்யப் போகிறார் ?

தைவான் மற்றும் ஆசியாவின் பிற நாடுகள் உயர்தரமான சிப்களை உருவாக்கும் ரகசிய தொழில்நுட்பங்களை வைத்திருக்கும்போது, அமெரிக்காவும் அவற்றை பெரிய அளவில் உற்பத்தி செய்வது உண்மையில் சாத்தியமா?

மைக்ரோசிப்களை உருவாக்குதல்: ரகசிய தொழில்நுட்பம்

சிலிக்கான் தகடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைக்ரோசிப்கள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் ஆசிய நாடுகள் அதன் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சலவை இயந்திரங்கள் முதல் ஐஃபோன்கள் வரை, ராணுவ ஜெட் விமானங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்துப் பொருட்களுக்கும் மின்சாரம் வழங்குவதில் செமிகண்டக்டர்கள் (semiconductors) முக்கிய இடம் வகிக்கின்றன.

சிப்கள் (chips) எனப்படும் இந்த சிறிய சிலிக்கான் தகடுகள் முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் இன்று, மிகவும் மேம்பட்ட சிப்கள் ஆசியாவில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிப்களை உருவாக்குவதற்கு அதிகம் செலவாகும். மேலும் தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான செயல்முறையும் ஆகும்.

உதாரணமாக, அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட தைவான், ஜப்பான் அல்லது தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட, சீனாவில் இருந்து எடுக்கப்படும் அரிய உலோகங்கள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிப்களை ஒரு ஐபோன் கொண்டிருக்கலாம்.

அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அவை வியட்நாமில் பேக்கேஜிங் செய்யப்படுவதற்கும், அதன் பிறகு அவற்றை ஒன்றிணைக்கவும், சோதனை செய்வதற்கும் சீனாவுக்கு அனுப்பப்படலாம். பல ஆண்டுகளாக வளர்ந்து, ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட சிப்களை உற்பத்தி செய்யும் அமைப்பாக இது உள்ளது.

சிப் துறையை டிரம்ப் பாராட்டியுள்ளார், ஆனால் அதற்கு வரி விதிக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டவில்லை என்றால் 100 சதவிகித வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தொழில்துறையின் முன்னணி நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்திடம் (TSMC) அவர் கூறியுள்ளார்.

இவ்வளவு சிக்கலான உற்பத்தி அமைப்பும் கடுமையான போட்டியும் உள்ள நிலையில், நிறுவனங்கள் அதிக செலவுகள் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்ய திட்டமிட வேண்டும், அது டிரம்ப் ஆட்சியில் இருக்கப்போகும் காலத்துக்குப் பிறகும் தொடர வேண்டும். கொள்கைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களும் அதற்கு உதவவில்லை.

இதுவரை, சில நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய விருப்பம் காட்டியுள்ளன.

சீனா, தைவான், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் சிப்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய குறிப்பிடத்தக்க மானியங்கள் அவற்றின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.

2022 ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடனின் கீழ் சட்டமாக மாறிய அமெரிக்க சிப்கள் மற்றும் அறிவியல் சட்டத்தின் பின்னணியில் இருந்த சிந்தனையும் அதுதான் .

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மானியங்கள், வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை ஒதுக்குவதன் மூலம் சிப்களின் உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டு வரவும், விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்தவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டாவிட்டால் TSMC-க்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பாளரான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) மற்றும் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளரான சாம்சங் (Samsung) போன்ற சில நிறுவனங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளன.

தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) அரிசோனாவில் ஆலைகளை கட்டுவதற்காக 6.6 பில்லியன் டாலர் மானியங்கள் மற்றும் கடன்களைப் பெற்றுள்ளது, மேலும் சாம்சங் டெக்சாஸின் டெய்லரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்காக சுமார் 6 பில்லியன் டாலர் பெறுகிறது.

மூன்று ஆலைகளுக்கு 65 பில்லியன் டாலர் முதலீடு உறுதி செய்த தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், அமெரிக்காவில் மேலும் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனா தைவானை கட்டுப்படுத்துவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், சிப் உற்பத்திப் பணிகளை பன்முகப்படுத்துவது தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்துக்கும் பயனளிக்கக்கூடும்.

ஆனால், தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் மற்றும் சாம்சங் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய முதலீடுகளில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன, அதிகரித்து வரும் செலவுகள், திறமையான தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதில் ஏற்படும் சிரமங்கள், கட்டுமான தாமதங்கள் மற்றும் உள்ளூர் சங்கங்களின் எதிர்ப்புகள் ஆகியவை அதில் அடங்கும். "இது வெறும் பெட்டிகளை உருவாக்கும் தொழிற்சாலை அல்ல," என்கிறார் சந்தை நுண்ணறிவு நிறுவனமான கவுண்டர்பாயிண்டின் ஆராய்ச்சி இயக்குனர் மார்க் ஐன்ஸ்டீன். "சிப்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் மிகவும் உயர் தொழில்நுட்பம் கொண்ட, மிகவும் சிக்கலான சூழல்களில் கட்டப்படுகின்றன, அவற்றைக் கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்."

அமெரிக்க முதலீடு இருந்தபோதிலும், குறிப்பாக மிகவும் மேம்பட்ட கணினி சிப்கள் உட்பட, அதன் பெரும்பகுதி உற்பத்தி தைவானில் தான் இருக்கும் என்று தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.

தைவானின் வலிமையை சீனா திருட முயன்றதா?

இன்று, அரிசோனாவில் உள்ள தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவன ஆலைகள் உயர்தர சிப்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் "சிப் வார்: தி ஃபைட் ஃபார் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் கிரிட்டிகல் டெக்னாலஜி" என்ற புத்தகத்தின் ஆசிரியரான கிறிஸ் மில்லர், "தைவானில் அவர்கள் ஒரு தலைமுறைக்குப் பின்னால் உள்ளனர்" என்கிறார்.

"உற்பத்தி அளவு என்பது, அமெரிக்கா மற்றும் தைவானில் எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இன்று, தைவான் அதிக உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது." என்று அவர் கூறுகிறார்.

உண்மை என்னவென்றால், தைவான் அந்த திறனை வளர்த்துக் கொள்ள பல ஆண்டு காலம் ஆனது, மேலும் இந்தத் துறையில் தைவானின் வலிமையைத் திருட சீனா பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் சிப் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளது.

தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் தான் "ஃபவுண்டரி மாடலின்" முன்னோடியாக இருந்தது, இதில் சிப் தயாரிப்பாளர்கள், அமெரிக்க நிறுவனங்களின் வடிவமைப்புகளை எடுத்து, அந்த நிறுவனங்களுக்காக சிப்களை உற்பத்தி செய்தனர்.

ஆப்பிள், குவால்காம் மற்றும் இன்டெல் போன்ற சிலிக்கான் வேலியைச் சார்ந்த தொடக்கநிலை நிறுவனங்களின் எழுச்சியைக் கடந்து வந்த தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், சிறந்த பொறியாளர்கள், மிகவும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் அறிவைப் பகிரும் சூழலுடன், அமெரிக்கா மற்றும் ஜப்பானிய தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களுடன் போட்டியிட முடிந்தது.

"அமெரிக்காவால் சிப்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமா?" என்றால், "நிச்சயமாக முடியும். ஆனால் அவர்கள் சிப்களை ஒரு நானோமீட்டர் அளவு வரை குறைத்து தயாரிக்கப் போகிறார்களா? அநேகமாக இல்லை." என்கிறார் ஐன்ஸ்டீன்.

டிரம்பின் குடியேற்றக் கொள்கை இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

இந்தக் கொள்கையினால், சீனா மற்றும் இந்தியாவிலிருந்து திறமையான பணியாளர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவுக்கு திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவரும் அமெரிக்காவின் H-1B விசா திட்டத்துக்கு மஸ்க் அளித்த ஆதரவைக் குறிப்பிட்டு, "டெஸ்லாவுக்கான பொறியாளர்களைப் பெற்றுக்கொள்வதில், ஈலோன் மஸ்க் கூட குடியேற்றச் சிக்கல்களை எதிர்கொண்டார்," என்று ஐன்ஸ்டீன் கூறுகிறார்.

"அது ஒரு பெரிய தடையாக இருக்கிறது. குடியேற்றம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றாவிட்டால், அவர்களால் அதை சமாளிக்க முடியாது. ஏதாவது மாயாஜாலம் செய்வது போல் திடீரென்று திறமையான தொழிலாளர்களை உருவாக்க முடியாது" என்கிறார் ஐன்ஸ்டீன் .

உலகளாவிய தாக்கம்

அப்படியிருந்தும், டிரம்ப் சுங்க வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளார், செமிகண்டக்டர் துறையில் தேசிய பாதுகாப்பு வர்த்தக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

"இது முறையாக இயங்கிக் கொண்டிருந்த அமைப்பில் ஒரு பெரிய தடையாக மாறிவிட்டது," என்கிறார் ஐன்ஸ்டீன்.

"உதாரணத்துக்கு, ஜப்பான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க செமி கண்டக்டர்களை முக்கிய அடிப்படையாக எடுத்திருந்தது. ஆனால் சுங்க வரிகள் போன்றவை அந்த வணிகத் திட்டத்தில் இடம் பெற்றவை அல்ல."

மில்லரின் கருத்துப்படி, இந்தத் தொழில்துறையின் நீண்டகால விளைவாக உலகின் முக்கிய பொருளாதாரங்களான சீனா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி மீதான கவனம் அதிகரிக்கும்.

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை எதிர்கொண்டு, ஐரோப்பா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் தனது சந்தை விரிவாக்கத்தை முன்னெடுத்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் லாப வரம்புகள் குறைவாக இருப்பினும், சில நிறுவனங்கள் புதிய சந்தைகளை தேடுகின்றன.

"சீனா இறுதியில் வெற்றி பெற விரும்புகிறது. அதற்காகவே, அது புதிய கண்டுபிடிப்புகளிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டிலும் தீவிரமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. டீப்சீக் (Deepseek) விஷயத்தில் அது என்ன செய்தது என்பதையே பாருங்கள்," என்று சீனாவில் உருவாக்கப்பட்ட ஏஐ சாட்போட்டை குறிப்பிடுகிறார் ஐன்ஸ்டீன்.

"அவர்கள் இன்னும் சிறந்த சிப்களை உருவாக்கினால், அனைவரும் அவர்களையே நாடுவார்கள். குறைந்த செலவில் அதிக திறன் கொண்ட சிப்களை தற்போது அவர்களால் உருவாக்க முடியாது. அதி உயர் தொழில்நுட்ப உற்பத்தித் திறனைப் பெறுவதே எதிர்கால நோக்கமும் ஆகும்"

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தனது சுங்க வரிக் கொள்கை அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்கே கொண்டு வரும் என டிரம்ப் கூறுகிறார்.

இதற்கிடையில், புதிய உற்பத்தி மையங்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நிபுணர்கள் கூறுகையில், இந்தியா சிப் விநியோகச் சங்கிலியில் அமெரிக்காவை விட சிறப்பாக ஒருங்கிணைக்கப்படுவதற்கு சாத்தியமுள்ள நாடாக உள்ளது. சிப்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்தியா நிலவியல் ரீதியாக நெருக்கமாக உள்ளதும், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குதலும், மேம்பட்ட கல்வி தரமும் இதற்கு காரணமாக உள்ளது.

இந்தியா சிப் உற்பத்திக்குத் தயாராக இருப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அது சில முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது. இதில் தொழிற்சாலைகளுக்கான நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் தேவையான தண்ணீர் கிடைப்பது முக்கியமானவை. சிப் உற்பத்திக்கு உயர்தரமான மற்றும் அதிகமான தண்ணீர் தேவைப்படும்.

பேரம் பேசும் சிப்கள்

சிப் நிறுவனங்கள் முற்றிலும் சுங்க வரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை.

மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், சிஸ்கோ போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் சிப்களை அதிகம் சார்ந்துள்ளன.

இந்நிலையில், இத்துறையில் வரிகள் விதிக்கப்பட்டால் அவற்றை மாற்ற வேண்டும் என டிரம்புக்கு அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மேற்கொண்ட செய்த தீவிர முயற்சியின் விளைவாகவே, ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் மின்னணு உற்பத்திகளுக்கான சுங்க வரிகளில் விலக்கு கிடைத்ததாக சிலர் நம்புகின்றன.

மேலும் இதன் விளைவாகவே , சீனாவுக்கு என்விடியா விற்கும் சிப்களில் இருந்த தடையை, டிரம்ப் நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்களன்று அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் ஆப்பிள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து கேட்டபோது, "நான் நெகிழ்வான தன்மை கொண்டவர்" என்று பதிலளித்தார் டிரம்ப். மேலும், "சில விஷயங்கள் வரக்கூடும், நான் டிம் குக்குடன் பேசுகிறேன், சமீபத்தில் டிம் குக்குக்கு உதவினேன்" என்றும் கூறினார்.

என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவுக்கு சிப் விற்பனை செய்வதற்கான தடையை டிரம்ப் நீக்க வேண்டும் என்று என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் விரும்பினார்.

இவை அனைத்தும் டிரம்ப் இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதால் தான் நடக்கிறது எனக் கருதுகிறார் ஐன்ஸ்டீன். உள்கட்டமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு சிப்களை உருவாக்க முடியாது என்பதை டிரம்ப் நிர்வாகம் புரிந்துகொண்டுள்ளது.

"டிக் டாக்கின் உரிமையாளர் பைட் டான்ஸுக்குச் செய்ததைத்தான் டிரம்ப் நிர்வாகம் செய்ய முயற்சிக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஆரக்கிள் அல்லது வேறு அமெரிக்க நிறுவனத்துக்கு ஒரு பங்கைக் கொடுக்காவிட்டால், இனி உங்களை அமெரிக்காவில் செயல்பட விடமாட்டேன் என்று அவர் கூறுகிறார்," என்கிறார் ஐன்ஸ்டீன்.

தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் இங்கேயும் இதேபோன்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் எங்கும் செல்லவில்லை, இன்டெலுடன் ஒப்பந்தம் செய்து, லாபத்தைப் பகிர்ந்துகொள்ள அவர்களை கட்டாயப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆசிய செமிகண்டக்டர் சிப் உற்பத்தி அமைப்பு, ஒரு முக்கிய பாடத்தை வழங்குகிறது.

அதாவது, எந்த ஒரு நாடும் தனியாக சிப் தொழிற்சங்கத்தை இயக்க முடியாது, மேலும் மேம்பட்ட செமிகண்டக்டர்களை திறமையாகவும் பெரும்பான்மையாகவும் உருவாக்க விரும்பினால், அதற்கு நேரம் வேண்டும்.

ஆசியா முழுவதும் சிப் தொழில்நுட்பம் உருவாக அனுமதித்தது உலகளாவிய ஒத்துழைப்பினால் நடந்தது எனினும், பொருளாதாரத்தை பாதுகப்பதற்காகவும் மற்ற நாடுகளுடன் அமெரிக்காவுக்கு உள்ள தொடர்பைக் குறைப்பது போன்ற முயற்சிகளின் மூலமாகவும் டிரம்ப், சிப் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0qn7n339x1o

அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்ன?

3 months 2 weeks ago

இரான் அணுசக்தி

பட மூலாதாரம்,AP

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஃபி பெர்க்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 15 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 16 ஏப்ரல் 2025

இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும் இரானும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 19) முதல் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன.

2018 ஆம் ஆண்டு இரான் மற்றும் உலக வல்லரசு நாடுகள் இடையிலான முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். மேலும் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். இது இரானை கோபப்படுத்தியது.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என்றால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஏன் அனுமதியில்லை?

இரான் தனது அணுசக்தி திட்டங்கள் சிவில் நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறுகிறது.

அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று அந்நாடு கூறுகிறது. ஆனால் பல்வேறு நாடுகளும் உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி ஏஜென்சியும் (IAEA) இதில் உறுதியாக இல்லை.

2002 ஆம் ஆண்டு இரானில் ரகசிய அணுசக்தி நிலையங்கள் இருப்பது கண்டறியப்பட்டபோது, அந்நாட்டின் நோக்கங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்தன.

இதன் மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) இரான் மீறியது. இந்த ஒப்பந்தத்தில் இரான் உள்பட பல உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகள் மருத்துவம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற ராணுவம் அல்லாத தேவைக்காக அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்காது.

இரான்

இரானின் அணுசக்தி திட்டம் எவ்வாறு மேம்பட்டது?

2018 ஆம் ஆண்டில் கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படும் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து, மீண்டும் பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான முடிவிற்கு பழிவாங்கும் விதமாக இரான் முக்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளது.

யுரேனியத்தை செறிவூட்ட ஆயிரக்கணக்கான மேம்பட்ட சென்ட்ரிஃபூக்ஸ் எனப்படும் சுத்திகரிப்பு இயந்திரங்களை இரான் நிறுவியுள்ளது. இவை கூட்டு விரிவான செயல் திட்டத்தால் தடை செய்யப்பட்டவை.

"அணு ஆயுதங்களுக்கு 90% தூய்மைப்படுத்தப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. கூட்டு விரிவான செயல் திட்டத்தின்படி, இரான் 3.67% வரை தூய்மைப்படுத்தப்பட்ட 300 கிலோ யுரேனியத்தை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. இது பொது அணுசக்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு போதுமானது, இந்த அளவு அணு ஆயுதங்கள் தயாரிக்க போதுமானதல்ல

ஆனால் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இரானிடம் சுமார் 275 கிலோகிராம் யுரேனியத்தை 60% தூய்மைக்கு செறிவூட்டியுள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்தது. இரான் இன்னும் அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டினால், கோட்பாட்டளவில் சுமார் அரை டஜன் ஆயுதங்களை உருவாக்க இது போதுமானது

இரான் அணுஆயுதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏன் வெளியேறியது?

2010 ஆம் ஆண்டு முதல் இரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒரு அணுகுண்டை உருவாக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக சந்தேகித்ததால், அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இந்த பொருளாதார தடைகளால் இரான் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விற்பனை செய்வது நின்றது. அத்துடன் அந்நாட்டின் 100 பில்லியன் டாலர் வெளிநாட்டு சொத்துகள் முடங்கி போயின. இதனால் இரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இரான் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது, இது பணவீக்கம் அதிகரிக்க வழிவகுத்தது.

2015 ஆம் ஆண்டில் இரான் மற்றும் உலகின் ஆறு வல்லரசு நாடுகள் (அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன்) பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) எனப்படும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தன.

இரானின் அணுசக்தி திட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், சர்வதேச அணுசக்தி ஏஜென்சிக்கு இரானின் அனைத்து அணுசக்தி நிலையங்களை அணுகவும், சந்தேகத்திற்குரிய இடங்களை ஆய்வு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்குப் பதிலாக, இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டன. இந்த கூட்டு விரிவான செயல் திட்டம் உடன்படிக்கை 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது, அதன் பிறகு இந்த கட்டுப்பாடுகள் காலாவதியாகிவிடும்.

2018 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபோது, ஒப்பந்தத்தின் முக்கிய தூணாக இருந்த அமெரிக்காவை ஒப்பந்தத்திலிருந்து விலக்கினார்.

அவர் இந்த ஒப்பந்தத்தை மோசமான ஒன்று என்று கூறினார். ஏனெனில் அது நிரந்தரமானது அல்ல, மேலும் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் உள்ளிட்ட பிற விஷயங்களை அது கருத்தில் கொள்ளவில்லை.

புதிய மற்றும் விரிவான ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த இரானை கட்டாயப்படுத்தும் "அதிகபட்ச அழுத்த" பிரசாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கத் தடைகளை டிரம்ப் மீண்டும் விதித்தார்.

இஸ்ரேல் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை, அதனால் டிரம்ப் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இரான் ரகசிய ஆயுதத் திட்டத்தை இன்னும் தொடர்கிறது என்றும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை இரான் தனது ராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்த பயன்படுத்தும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது.

அமெரிக்கா விரும்புவது என்ன?

இரான் அணு ஆயுதம்

பட மூலாதாரம்,REUTERS / GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயி

இரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த டிரம்பின் அறிவிப்பு இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. கூட்டு விரிவான செயல் திட்டத்தை விட "சிறந்த" ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதாக அவர் நீண்ட காலமாக கூறி வந்தார். இருப்பினும் இதுவரை இரான் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்துள்ளது.

இரான் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படியவில்லை என்றால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என்று டிரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார்.

இரானின் அணுசக்தி திட்டத்தை "முழுமையாகக் கலைக்க" டிரம்ப் விரும்புவதாக அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார். இரானின் அணு செறிவூட்டல் என்பதை ஆயுதமயமாக்கல் மற்றும் மூலோபாய ஏவுகணைத் திட்டம் என்று கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

டொனால்ட் டிரம்ப் "நேரடி பேச்சுவார்த்தைகள்" நடைபெறும் என்று கூறியிருந்தாலும், இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஓமனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாகவே இருக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், ஆனால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படாது என்பதை டிரம்ப் முதலில் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலுக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்ன?

டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று கூறினார்.

"நாங்கள் உள்ளே நுழைந்து, அமெரிக்காவின் மேற்பார்வை மற்றும் செயல்பாட்டின் கீழ், அணு உலைகளை வெடித்து, அனைத்து உபகரணங்களையும் அழிப்போம்", என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், டிரம்ப் இரான் முழுமையாக சரணடைவதற்கு குறைவான ஒரு சமரசத்தை ஏற்றுக்கொண்டு, அதை ஒரு இராஜதந்திர வெற்றியாக முன்வைக்கக்கூடும்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேல், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக கருதப்படுகிறது. இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத அணு ஆயுதம் வைத்திருக்கும் இரான் இஸ்ரேலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரேல் நம்புகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்க முடியுமா?

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் அணுசக்தி உட்கட்டமைப்பைத் தாக்கும் ராணுவத் திறன்களை வைத்துள்ளன. ஆனால் அத்தகைய நடவடிக்கை சிக்கலானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும், நிச்சயமற்ற விளைவைக் கொண்டிருக்கும்.

முக்கிய அணுசக்தி தளங்கள் ஆழமாக நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளன, இவற்றை மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் தகர்த்து மட்டுமே அணுக முடியும். அமெரிக்கா இந்த வெடிகுண்டுகளை வைத்திருந்தாலும், இஸ்ரேலிடம் இந்த குண்டுகள் இருப்பதாக தெரியவில்லை.

இரான் தன்னை நிச்சயமாக தற்காத்துக் கொள்ளும், இதில் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்களை தாக்குவதும், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதும் அடங்கும்.

இத்தகைய நடவடிக்கைகளை சமாளிக்க, அமெரிக்கா வளைகுடாவில் உள்ள தனது தளங்களையும், விமானம் தாங்கும் போர்க் கப்பல்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

"ஆனால் கத்தார் போன்ற நாடுகளில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளம் இருந்தாலும், அந்நாடுகளால் பதிலடி தாக்குதல்களுக்கு பயந்து இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு உதவ வராமல் போகலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdde3pgd8vlo

"பெண் என்பவர் யார்!" திருநங்கை தொடர்பான வழக்கில் பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

3 months 2 weeks ago

G

"பெண் என்பவர் யார்!" திருநங்கை தொடர்பான வழக்கில் பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

VigneshkumarUpdated: Wednesday, April 16, 2025, 17:16 [IST]

England law world

லண்டன்: சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதாவது பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருநங்கைகளைப் பெண்களாகக் கருத முடியுமா என்பதே வழக்காகும். இந்த வழக்கில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் எனத் தீர்ப்பளித்த பிரிட்டன் நீதிமன்றம், அதேநேரம் பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டன் நீதிமன்றம்

அதாவது பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என்று பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதாவது சட்டப்படி பெண்ணாகப் பிறந்தவர் மட்டுமே பெண்ணாகக் கருதப்படுவார் என்ற போதிலும், சட்டம் இன்னும் திருநங்கைகளுக்குப் பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்றும் இதனால் தங்கள் தீர்ப்பு ஒரு தரப்பினருக்கு மட்டும் முழு வெற்றியைத் தரவில்லை என்றும் பிரிட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

என்ன வழக்கு

ஸ்காட்லாந்து அரசுக்கும் அங்குள்ள பெண்கள் குழுவிற்கும் இடையே நீண்ட காலமாக நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பாலின அங்கீகாரச் சான்றிதழ் கொண்ட திருநங்கைகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகச் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஸ்காட்லாந்து அரசின் வாதம். அதாவது பெண் ஒருவர் மீது பாகுபாடு காட்டப்பட்டாலோ அல்லது பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கும்போது அவர்களைப் பாதுகாக்க இருக்கும் பிரதானச் சட்டங்கள் திருநங்கைகளுக்கும் பொருந்தும் என்பது ஸ்காட்லாந்து அரசின் வாதம்.

இருப்பினும், ஸ்காட்லாந்து அரசின் இந்த நிலைப்பாட்டை அங்குள்ள பெண்களுக்காக ஸ்காட்லாந்து அமைப்பு மிகக் கடுமையாக எதிர்த்தது. பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்றும் திருநங்கைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிட்டது. அதாவது சட்டப்படி பெண்ணாக ஒருவர் கருதப்பட வேண்டும் என்றால் அவர் பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.

விரிவான தீர்ப்பளித்த நீதிபதிகள்

இந்த வழக்கில் தான் 88 பக்கங்களைக் கொண்டு தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், "சமத்துவச் சட்டம் 2010இல் பாலினத்தின் வரையறை விளக்கப்பட்டுள்ளது. ஒருவரது பாலினம், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அது பிறப்பின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த நபர்களின் உரிமையைப் பாதுகாக்கவே சட்டம் இருக்கிறது. அதன்படி பெண்களைப் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள் அல்லது விதிகள் குறிப்பாக ஆண்களுக்குப் பொருந்தாது.

சமத்துவச் சட்டத்தில் பிறப்பின் அடிப்படையில் என்ற வார்த்தை இல்லை என்றாலும், வழக்கமாக ஒரு நபரை ஆண் அல்லது பெண்ணாகப் பிறப்பின் அடிப்படையிலேயே குறிப்பார்கள். அந்த பயோலஜிக்கல் பண்புகள் அடிப்படையிலேயே குறிப்பார்கள். எனவே, இந்த விவகாரத்தில் வேறு எந்த விளக்கமும் தேவையில்லை. ஆண்களும் பெண்களும் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறார்கள்" என்றார்.

திருநங்கைகளுக்குப் பாதுகாப்பு இருக்கு

அதேநேரம் திருநங்கைகளுக்கு இன்னும் சட்டத்தின்படி பாதுகாப்பு இருக்கும் என்பதை விளக்கிய நீதிமன்றம், "சமத்துவச் சட்டம் 2010 திருநங்கைகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. பாலின மறுசீரமைப்பு பாகுபாட்டிலிருந்து மட்டுமல்லாமல், அவர்கள் பெற்ற பாலினத்தில் நேரடிப் பாகுபாடு, மறைமுகப் பாகுபாடு மற்றும் உள்ளடக்கத்தில் துன்புறுத்தலுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்கும்" என்றார்.

அதாவது ஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினாலும் சட்டப்படி அவர்கள் ஆணாகவே கருதப்படுவார்கள். அதேநேரம் பாலின மாற்றம் செய்ததற்கான பாகுபாடு மட்டுமின்றி (பெண்ணாக மாறியதால்) பெண் என்ற அடிப்படையில் அவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டாலும் சட்டப் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்கும்

https://tamil.oneindia.com/news/london/who-is-woman-legally-uk-supreme-court-ruling-defining-woman-sparks-trans-rights-debate-696295.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது

3 months 2 weeks ago

வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது

April 16, 2025 12:27 pm

வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது

சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக்கூடாது என்று சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

விமானங்களைத் தவிர, விமான பாகங்கள் மற்றும் கூறுகளும் விலை அதிகமாகியுள்ளது.

முன்னதாக சீனாவின் ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை 2025 மற்றும் 2027 க்கு இடையில் 179 போயிங் விமானங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையை தடையைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ் மற்றும் சீன உற்பத்தியாளர் கோமாக் ஆகியவற்றை நம்பியிருக்க வேண்டியிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீனாவின் தடை அமெரிக்க பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்கு விலை மூன்று சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளது.

எவ்வாறாயினும், சீனாவின் அறிவிப்பு உலகளாவிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்களை வாங்குவதில் சிரமப்படும் இந்திய விமான நிறுவனங்களுக்கு உதவக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன நிறுவனங்கள் தற்போது 100 போயிங் விமானங்களை வாங்குவதற்கு தயாராகியிருந்தது.

எனினும், சீனாவின் தடை காரணமாக அந்த விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் நிறுவங்கள் வாங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ சீன விமான நிறுவனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்களில் சில இந்திய நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படும் என்று விமானத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

https://oruvan.com/trade-war-china-bans-boeing-planes/

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

3 months 2 weeks ago

15 APR, 2025 | 12:30 PM

image

சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது.

கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது.

யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. 

பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்ததுடன் மாற்றங்களை செய்ய வலியுறுத்தியதையும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/212028

அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியாவும் லேசர் ஆயுதம் தயாரிப்பு - எவ்வாறு செயல்படும்?

3 months 2 weeks ago

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA/STATUS

படக்குறிப்பு,இந்தியா லேசரால் இயக்கப்படும் ஆயுதத்தை சோதித்துள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அமரேந்திர யார்லகடா

  • பதவி, பிபிசி நிருபர்

  • 15 ஏப்ரல் 2025, 08:16 GMT

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் டிரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏப்ரல் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் நடத்தியது.

எதிர்காலத்தின் "மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்"(ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்) என்று அழைக்கப்படும் லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது.

"இது அதிஉயர் தொழில்நுட்ப பயன்பாட்டின் தொடக்கம் மட்டுமே" என்று சோதனை வெற்றியடைந்த பின்னர் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் அறிவித்தார்.

பிபிசியிடம் பேசிய முன்னாள் டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, "இந்தியாவின் இந்த சோதனை பாதுகாப்புத் துறையில் மிகவும் முக்கியமானது" என்றார்.

லேசர் ஆயுதம் எவ்வாறு செயல்படும்?

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA/STATUS

படக்குறிப்பு,எதிர்காலத்தின் "ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்" என்று அழைக்கப்படும் லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையும்போது, போர் முறைகளும் மாறி வருகின்றன.

ஏவுகணைகளுக்குப் பதிலாக டிரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு போர்கள் நடத்தப்படுகின்றன.

யுக்ரேன் -ரஷ்யா போரில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன.

எதிர்காலத்தில் போர்கள் நடக்கும்போது, டிரோன் தாக்குதல்களைத் தடுக்க ஒவ்வொரு நாடும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுவது அவசியமாகிவிட்டது.

தற்காலிகமாக, அதிக சக்தி கொண்ட லேசரும், அதி நுண்ணலை போன்ற தொழில்நுட்பங்களையும் ஆயுதமாக மாற்றும் பணியில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) லேசரால் வழிநடத்தப்படும் ஆற்றல் ஆயுதமான 'டி.இ.டபிள்யூ ( DEW) Mk-II(A) ஐ உருவாக்கியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் டிரோன் தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ள, டிரோன் மூலம் தாக்குதல்களை எதிர்க்கும் அமைப்புகளைத் தயாரிப்பது மிகவும் முக்கியம் என்று சதீஷ் ரெட்டி கூறினார்.

டி.ஆர்.டி.ஓ பரிசோதித்த லேசர் ஆயுதம், அதிக சக்தி கொண்டதாக இருப்பதாக அவர் கூறினார்.

தரையில் இருந்து இயக்கப்படும் லேசர் ஆயுதம், டி.ஆர்.டி.ஓவிலுள்ள உயர் ஆற்றல் அமைப்பு மற்றும் அறிவியல் மையத்தின் (CHES) ஆதரவின் கீழ் பரிசோதிக்கப்பட்டது.

டிரோனை லேசர் கற்றைகள் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான காணொளி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

இது இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு திறன்களில் ஒன்று என்று டிஆர்டிஓ தலைவர் சமீர் வி. காமத் அறிவித்தார்.

உயர் சக்தி லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று சமீர் வி. காமத் ஏ.என்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்த அவர், "அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது." "இஸ்ரேலும் வளர்ச்சியடைந்து வருகிறது," என்று கூறினார்.

'டி.இ.டபிள்யூ' (DEW) உதவியுடன் இலகுரக ஆளில்லா விமானங்களை மட்டுமல்ல, ஹெலிகாப்டர்களையும் கூட முற்றிலுமாக அழிக்க முடியும் என்று டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 'லேசர்' பரிசோதனைகள்

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA

படக்குறிப்பு,DEW உதவியுடன் டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த முடியும் என்று DRDO அறிவித்துள்ளது.

இந்த வகை லேசர் ஆயுத தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ 2019 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது.

அந்த நேரத்தில் அது இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள இலக்குகளை அழிக்கப் பயன்படுத்தப்பட்டது.

தற்போது, 30 கிலோவாட் திறன் கொண்ட லேசர் ஆயுதத்தால், 4-5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை அழிக்க முடியும்.

"இந்த லேசர் தொழில்நுட்பம் டிரோன்களை கட்டமைப்பு ரீதியாக அழித்து அவற்றின் கண்காணிப்பு சென்சார்களை செயலிழக்கச் செய்யும்" என்று டி.ஆர்.டி.ஓ அறிவித்தது.

டி.ஆர்.டி.ஓ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் முன்னாள் தலைமைக் கட்டுப்பாட்டாளரும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் டபிள்யூ. செல்வமூர்த்தி பிபிசியிடம் கூறுகையில், டிரோன்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் மட்டுமே லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் செயல்படும் என்றார்.

இதுகுறித்து பேசிய அவர், "டிரோன்கள் இலக்குகளை நெருங்கும் போது தரைக்கு அருகில் வர நேரிடும். அவை குறிப்பிட்ட வரம்பிற்குள் வந்ததும், லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் சுட்டு வீழ்த்த முடியும்," என்றார்.

லேசர் கற்றைகள் தொலைவில் இருந்தால் அவற்றின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று விளக்கப்பட்டது.

அமிட்டி பல்கலைக்கழகம் தற்போது டி.ஆர்.டி.ஓ.வுடன் இணைந்து லேசர் கற்றைகளை குளிர்விக்கும் தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது.

டிரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

"லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." "இந்த பரிசோதனையின் மூலம், லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களின் திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம்,DRDO

படக்குறிப்பு,லேசர் கற்றைகள் மூலம் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக DRDO கூறுகிறது.

அதிக சக்தி வாய்ந்த லேசர் ஆயுதங்களை தயாரிப்பதில் கவனம்

டி.ஆர்.டி.ஓ தற்போது 'அதிக சக்தி' கொண்ட லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய 300 கிலோவாட் திறன் கொண்ட லேசர் ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது.

"நாங்கள் இப்போது மேற்பரப்பில் (நிலத்தில்) இருந்து செயல்படும் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். காற்று மற்றும் நீர் மூலம் பயன்படுத்தக் கூடிய வகையில் அதை உருவாக்கி வருகிறோம்," என்று சமீர் வி. காமத் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று அவர் விவரித்தார்.

மறுபுறம், ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது லேசர் அடிப்படையிலான தீர்வுகள் குறைந்த விலையில் இருக்கும் என்று செல்வமூர்த்தி கூறினார்.

"ஏவுகணைகளை உருவாக்குவது ஒரு விலையுயர்ந்த விவகாரம்."என்ற அவர், "லேசர் அமைப்பு குறைந்த செலவில் செயல்படுத்தப்படும்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/clyw6ezyln6o

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்

3 months 2 weeks ago

டைட்டானிக் கப்பல்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபெக்கா மொரெல்லே & அலிசன் ஃபிரான்சிஸ்

  • பதவி,

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

டைட்டானிக் கப்பல் குறித்து முழுமையான டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது.

1912 ஆம் ஆண்டில் பனிப்பாறையில் மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, அந்த கப்பல் எவ்வாறு இரண்டாகக் உடைந்தது என்பதைக் காட்டும் முப்பரிமாண படம், அந்த பேரழிவில் 1,500 பயணிகள் உயிரிழந்ததை வெளிப்படுத்துகின்றது.

டைட்டானிக் கப்பலில் இருந்த கொதிகலன் அறையின் புதிய காட்சி ஒன்றையும் இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகிறது.

கப்பலின் விளக்குகளை தொடர்ந்து எரிய வைக்க, பொறியாளர்கள் இறுதிவரை வேலை செய்ததாக, அதனை நேரில் கண்ட சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களை இது உறுதிப்படுத்துகிறது.

கப்பலின் மேல் பகுதியில், ஏ4 பேப்பரின் அளவில் இருந்த சிறிய துளைகள், கப்பல் மூழ்குவதற்கு காரணமாக அமைந்தன என்பதை கணினி மூலம் உருவாக்கப்பட்ட படம் காட்டுகிறது.

"பேரழிவை கடைசியாக நேரில் கண்ட சாட்சி டைட்டானிக். அதனிடம் சொல்வதற்கு இன்னும் பல கதைகள் உள்ளன," என்கிறார் டைட்டானிக் ஆய்வாளரான பார்க்ஸ் ஸ்டீபன்சன்.

டிஜிட்டல் இரட்டையை உருவாக்க 7 லட்சம் புகைப்படங்கள்

டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன், டைட்டானிக் கப்பல், வரலாறு

பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டைட்டானிக்: தி டிஜிட்டல் ரெசரெக்ஷன் என்ற புதிய ஆவணப்படத்திற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகள் சூழ்ந்த நீரில் 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் உள்ளன.

இந்த பாகங்கள், நீருக்கடியில் செயல்படும் ரோபோக்கள் மூலம் விரிவாக படமாக்கப்பட்டது.

ஒவ்வொரு கோணத்திலிருந்தும் எடுக்கப்பட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட படங்கள் இந்த சிதைந்த கப்பலின் "டிஜிட்டல் இரட்டையை" உருவாக்க பயன்படுத்தப்பட்டன.

இது 2023 ஆம் ஆண்டில் இந்த டிஜிட்டல் இரட்டை பிபிசி மூலம் பிரத்யேகமாக உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது .

பெரிய அளவில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள், ஆழமான, இருண்ட கடல் பகுதியில் உள்ளன.

அதனை நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் ஆராய்ந்தால் குறைந்த காட்சிகளையே பெற முடிகிறது.

டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன், டைட்டானிக் கப்பல், வரலாறு

பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு,டைட்டானிக் கப்பல் குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது.

ஆனால் இந்த ஸ்கேன், டைட்டானிக்கின் முழுமையான காட்சியை முதன்முறையாக வழங்கியுள்ளது.

இன்னும் தனது பயணத்தைத் தொடர முயல்வது போல, டைட்டானிக் கப்பலின் முன்புறம் கடற்பரப்பில் நேராக உள்ளது.

ஆனால், 600 மீட்டர் தொலைவில் உள்ள டைட்டானிக் கப்பலின் பின்பகுதி (ஸ்டெர்ன்) முற்றிலும் சிதைந்த உலோகங்களின் குவியலாகவே உள்ளது.

கப்பல் பாதியாய் உடைந்து கடல் பரப்பில் மோதி நொறுங்கும் போது இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

புதிய வரைபடத் தொழில்நுட்பத்தின் மூலம், டைட்டானிக் கப்பலை ஆராய புதியதொரு வழி கிடைத்துள்ளது.

"இது ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தைப் போல் தான். அந்த ஆதாரம் என்ன என்பதையும், அது எந்த இடத்தில் உள்ளது என்பதையும் நீங்கள் பார்ப்பது அவசியம்," என்கிறார் பார்க்ஸ் ஸ்டீபன்சன்.

"மேலும் சிதைந்த இடத்தின் முழுமையான பார்வையைக் கொண்டிருப்பது, இங்கே என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது," என்றும் அவர் கூறினார்.

பனிப்பாறையால் உடைக்கப்பட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு உள்ளிட்ட, புதிய நுணுக்கமான விவரங்களை இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகின்றது.

இச்சம்பவம் நடந்த போது சிலரின் அறைகளுக்குள் பனிக்கட்டிகள் நுழைந்ததை, நேரில் கண்டதாக உயிர் பிழைத்தவர்கள் அளித்த சாட்சியங்களுடன் இது ஒத்துப்போகிறது.

டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன், டைட்டானிக் கப்பல், வரலாறு

பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு,பனிப்பாறையால் உடைக்கப்பட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு உள்ளிட்ட, புதிய நுணுக்கமான விவரங்களை இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகின்றது

நிபுணர்கள் கூறுவது என்ன?

டைட்டானிக்கின் மிகப்பெரிய கொதிகலன் அறைகளில் ஒன்றைக் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கப்பல் இரண்டாக உடைந்த இடத்தில், கப்பலுடைய முன்பகுதியின் கடைசியில் அந்த கொதிகலன் அறை அமைந்துள்ளது, எனவே ஸ்கேன் மூலம் அதை எளிதாகக் காணமுடிகிறது.

அலைகளின் கீழ் கப்பல் மூழ்கும் போதும், விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது என்று விபத்தில் தப்பித்த பயணிகள் தெரிவித்தனர்.

சில கொதிகலன்கள் அடிப்பகுதியில் இருந்தன என்பதையும், அவை தண்ணீரில் மூழ்கியபோதும் செயல்பட்டன என்பதையும் இப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.

கப்பலின் பின்பகுதியில், திறந்த நிலையில் ஒரு மூடி போன்ற அமைப்பு (வால்வு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பிற்கு, நீராவி பாய்ந்து கொண்டிருந்ததை வெளிப்படுத்துகிறது.

டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன், டைட்டானிக் கப்பல், வரலாறு

பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு,ஜோசப் பெல் தலைமையிலான பொறியாளர்களின் குழு விளக்குகள் அணையாமல் இருக்க, உலைகளில் நிலக்கரியை இட்டு நிரப்புவதற்காக கப்பலின் பின்புறத்தில் இருந்தனர்.

இதற்காக ஜோசப் பெல் தலைமையிலான பொறியாளர்களின் குழுவிற்கு நன்றி கூற வேண்டும்.

விளக்குகள் அணையாமல் இருக்க, உலைகளில் நிலக்கரியை இட்டு நிரப்புவதற்காக அவர்கள் கப்பலின் பின்புறத்தில் இருந்தனர்.

பேரழிவுகரமான இச்சம்பவத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தாலும், அவர்களின் வீரதீர செயல்கள் பலர் உயிர் பிழைப்பதற்கு வழிவகுத்தன என்று பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறினார்.

"முழுமையான இருட்டில் மூழ்கிவிடாமல், குறைந்தபட்ச வெளிச்சம் இருக்கும்படி, உயிர் காக்கும் படகுகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதற்கு தேவையான நேரத்தை குழுவினருக்கு வழங்க, அவர்கள் இறுதி வரை விளக்குகளையும் மின்சக்தியையும் இயங்க வைத்தனர்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அவர்கள் குழப்பத்தை முடிந்தவரை கட்டுப்படுத்தி வைத்தனர். அதற்கான ஒரு அடையாளமாக அந்த திறந்த நிலை நீராவி வால்வு கப்பலின் பின்புறம் அமைந்திருந்தது," என்று அவர் கூறினார்.

டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன், டைட்டானிக் கப்பல், வரலாறு

பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு,திறந்த நிலை நீராவி வால்வு

ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட டைட்டானிக் ப்ளூபிரிண்ட்ஸ்

கணினியின் மூலம் உருவகப்படுத்தப்பட்ட ஒரு புதிய படம், டைட்டானிக் மூழ்கிய விதத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளது.

இது டைட்டானிக்கின் வரைபடத்திலிருந்து உருவாக்கப்பட்ட கப்பலின் விரிவான கட்டமைப்பு மாதிரியையும், அதன் வேகம், திசை மற்றும் நிலை பற்றிய தகவல்களையும் பயன்படுத்தி, பனிப்பாறையை கப்பல் தாக்கியபோது ஏற்பட்ட சேதத்தை கணிக்க உதவுகிறது.

"டைட்டானிக் மூழ்கியதை மீண்டும் உருவாக்க, மேம்பட்ட எண்ணியல் வழிமுறைகள், கணக்கீட்டு மாதிரிகள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டிங் திறன்களைப் பயன்படுத்தினோம்," என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜியோம்-கீ பைக் கூறினார்.

கப்பல் பனிப்பாறையில் மோதியபோது, ஒரு மெல்லிய தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தியதால், கப்பலில் ஒரு குறுகிய பகுதியில், வரிசையாக சிறிய துளைகள் உருவாகின என்பதை கணினி மூலம் உருவாக்கப்பட்ட படம் காட்டுகிறது.

டைட்டானிக்கின் நான்கு நீர்ப்புகா பெட்டிகளில் வெள்ளம் புகுந்தாலும், அது மிதந்து கொண்டே இருக்கும் வகையில், டைட்டானிக் மூழ்காமல் இருக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் கணினி மூலம் உருவகப்படுத்தப்பட்ட படம், பனிப்பாறையின் சேதம் ஆறு பெட்டிகளில் பரவியிருப்பதை கணிக்கின்றது.

"டைட்டானிக்கின் மேல்பகுதியில், ஒரு காகிதத்தின் அளவில் இருந்த சிறிய துளைகள் தான் டைட்டானிக் மூழ்கியதின் காரணம்" என்கிறார் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் கடற்படைக் கட்டிடக்கலையின் இணை விரிவுரையாளர் சைமன் பென்சன்.

"அந்த சிறிய துளைகள் கப்பலின் நீளமான பகுதி முழுவதும் உள்ளன. அதனால் கடல் நீர் மெதுவாக, ஆனால் நிச்சயமாக அதன் எல்லா துளைகளுக்குள்ளும் நுழைந்து, பின்னர் பெட்டிகளுக்குள் புகுந்து, டைட்டானிக் மூழ்கியது தான் பிரச்னை"

துரதிஷ்டவசமாக, கப்பலின் கீழ் பகுதி, மண்ணுக்கு அடியில் மறைந்திருப்பதால், ஸ்கேனில் அந்த சேதத்தை காண முடியவில்லை.

டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன், டைட்டானிக் கப்பல், வரலாறு

பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு,இந்த புதிய ஸ்கேன் 1912 ஆம் ஆண்டின், ஒரு குளிர்கால இரவில் நடந்த சம்பவத்தைப் பற்றிய புதிய சான்றுகளை வழங்குகிறது.

அதேபோல், டைட்டானிக் கப்பலுக்கு ஏற்பட்ட விபத்தால் மக்களுக்கு ஏற்பட்ட தாக்கம் இன்னும் பெரிது.

அக்கப்பலில் பயணித்த பயணிகளின் பொருட்கள் கடல் பரப்பில் சிதறிக் கிடக்கின்றன.

இந்த புதிய ஸ்கேன் 1912 ஆம் ஆண்டின், ஒரு குளிர்கால இரவில் நடந்த சம்பவத்தைப் பற்றிய புதிய சான்றுகளை வழங்குகிறது.

ஆனால் முப்பரிணாம படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் முழுமையாக ஆராய்ந்திட நிபுணர்களுக்கு பல ஆண்டுகள் தேவை.

பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறுகையில், "டைட்டானிக், தனது கதையை கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு கூறுகிறது"

"ஒவ்வொரு முறையும், இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது" என்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1j2j7l07o

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

3 months 2 weeks ago

donald-trump-131221607-16x9_0.jpg?resize

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார்.

புதிய திருத்த சட்டம் கடந்த 11-ம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும் உடனடியாக தங்கள் விவரங்களை உள்துறை பாதுகாப்பு (டிஎச்எஸ்) அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்படுவர். சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அமெரிக்கா வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதேபோல அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று வாழும் வெளிநாட்டினர் மீதான கெடுபிடிகளும் அதிகரித்து உள்ளன.
மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது அந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து அமல்படுத்தி உள்ளனர். இதன்படி எச்-1பி விசா, மாணவர் விசா வைத்திருப்போர் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்போர் 24 மணி நேரமும் தங்களது ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் அவர்களின் பிள்ளைகள் 14 வயதை எட்டிய உடன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பெற்றோரே பொறுப்பு என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்யவில்லை என்றால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும். 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2025/1428488

Checked
Sat, 08/02/2025 - 17:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe