உலக நடப்பு

சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் - ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

2 months 1 week ago

சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் - பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் - அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி?

Published By: Rajeeban

04 Aug, 2025 | 12:04 PM

image

அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர்.

sydney_pro_5.jpg

அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர்.

காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன்  ஆயிரக்கணக்கானவர்கள் கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர்.

sydney_pro_6.jpg

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயும் காணப்பட்டார்.

வெட்கம் வெட்கம் இஸ்ரேல் வெட்கம் வெட்கம் அமெரிக்கா என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசமிட்டனர்? எங்களிற்கு  என்ன வேண்டும் யுத்த நிறுத்தம் எப்போது வேண்டும தற்போது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்களிற்கு ஆதரவாக பல பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலத்தின் இருபக்கத்திலும் திரண்டிருந்தனர்.

sydney_pro_4.jpg

காசா உலகின் ஏனைய பக்கத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும் ஆனால் அது எங்களை இங்கு பெருமளவில் பாதிக்கின்றது என தெரிவித்த அலெக் பெவிலே என்ற தந்தையொருவர் காசாவின் சிறுவர்களை தனது மூன்று வயது மகனுடன் ஒப்பிட்டுள்ளதுடன் நாங்கள் உதவிகள் மூலம் மேலும் உதவுமோம் என தெரிவித்துள்ளார்.

எங்கள் அரசாங்கம் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என தெரிவித்த ஜாரா வில்லியம் தனது குழந்தையுடன் காணப்பட்டார்.மக்களை முழுமையாக பலவந்தமாக பட்டினி போட்டுள்ள நிலையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என குறிப்பிட்டார்.

sydney_pro.jpg

இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 90,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/221762

பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல்.

2 months 1 week ago

isreal-fe.jpg?resize=590%2C375&ssl=1

பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல்.

”காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர்  பலரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர்.

இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பயணக் கைதிகளில்  பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் படையினரின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் பணயக் கைதிகளை  விடுவிக்கக் கோரி ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேலை அடிபணிய வைக்கும் விதமாக, தங்களது பிடியில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதி ஒருவரின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் அந்த நபர், மண்வெட்டியுடன் தனக்கு தானே புதைக்குழியை வெட்டிக் கொள்ளும் காட்சிகள்  குறித்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிட வேண்டும் என்றும், அங்குள்ள  தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவ சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சிறைபிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை சந்திக்க ஹமாஸ் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441722

பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைப்பதற்கு ஹமாஸ் தயார் - சில நிபந்தனைகளையும் விதித்தது.

2 months 1 week ago

04 Aug, 2025 | 11:20 AM

image

இஸ்ரேல் விமானதாக்குதல்களை நிறுத்தி காசாவிற்கான மனிதாபிமான விநியோக பாதையொன்றை நிரந்தரமாக திறந்துவிடுவதற்கு இணங்கினால்  தன்னிடமுள்ள பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைக்க தயார் என ஹமாஸ் அமைப்பு  தெரிவித்துள்ளது.

ஹமாசிடம் சிக்குண்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் பட்டினியால் வாடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்வதேச கண்டனங்கள்  எழுந்துள்ள நிலையிலேயே  ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டு முதல் ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள எவ்யட்டார் டேவிட்டின் வீடியோவே வெளியாகியுள்ளது. 24வயது டேவிட் எலும்பும்தோலுமாக   காணப்படுகின்றார்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார  தலைவர் இந்த காணொளி பயங்கரமானது என தெரிவித்துள்ளதுடன் ஹமாசின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து ஹமாசின் இராணுவபேச்சாளர் அபுஒபெய்தா பிடிபட்டுள்ள எதிரிகளிற்கு உணவு மருந்து பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் வேண்டுகோள்களை சாதகமாக பரிசீலிக்க தயார் என தெரிவித்துள்ளார்.

எனினும் சில நிபந்தனைகளை விதித்துள்ள அவர் மனிதாபிமான விநியோகம் இடம்பெறும் போது இஸ்ரேல் விமானதாக்குதலை நிறுத்தவேண்டும், காசாவிற்குள் மனிதாபிமான விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிரந்தர பாதையை திறந்துவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினிமற்றும் போசாக்கின்மையால் மேலும் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் பெரும் பஞ்சம் பட்டினிநிலை காணப்படுவதாக பல சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

https://www.virakesari.lk/article/221758

ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்!

2 months 1 week ago

New-Project-22.jpg?resize=750%2C375&ssl=

ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்!

ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் ஏமனுக்கு அருகில் நடந்த தொடர்ச்சியான கப்பல் விபத்துக்களில் அண்மைய நிகழ்வாகும்.

ஏமனில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தலைவரான அப்துசாட்டர் எசோவ் கூறுகையில்,

54 எத்தியோப்பிய குடியேறிகளுடன் சென்ற கப்பல், தெற்கு யேமன் மாகாணமான அப்யானில் இருந்து ஏடன் வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியது.

Gxd8mTyWwAA0fFc?format=jpg&name=medium

கான்ஃபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய 54 புலம்பெயர்ந்தோரின் உடல்களும், மேலும் 14 பேரின் உடல்களும் இறந்து கிடந்ததுடன் ஏமனின் தெற்கு கடற்கரையில் உள்ள அப்யானின் மாகாண தலைநகரான ஜிஞ்சிபாரில் உள்ள மருத்துவமனையின் பிரேத ‍அறைக்கு அவை கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், கப்பல் விபத்தில் 12 புலம்பெயர்ந்தோர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

ஏனையவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்றும் எசோவ் கூறினார்.

இதற்கிடையில், அப்யான் பாதுகாப்பு பணியகம் ஏராளமான இறந்த மற்றும் காணாமல் போன புலம்பெயர்ந்தோரை கருத்தில் கொண்டு ஒரு பெரிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான உள்நாட்டுப் போர் இருந்தபோதிலும், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பகுதியிலிருந்து வேலைக்காக வளைகுடா அரபு நாடுகளை அடைய முயற்சிக்கும் குடியேறிகளுக்கு ஏமன் ஒரு முக்கிய பாதையாகும்.

செங்கடல் அல்லது ஏடன் வளைகுடா முழுவதும் பெரும்பாலும் ஆபத்தான, நெரிசலான படகுகளில் புலம்பெயர்ந்தோர் கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அண்மைய மாதங்களில், ஏமனுக்கு அருகில் நடந்த கப்பல் விபத்துகளில் பல புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

மார்ச் மாதத்தில் ஏமன் மற்றும் ஜிபூட்டிக்கு அருகில் நான்கு படகுகள் கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் இறந்தனர் மற்றும் 186 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1441648

காசாவில் செம்பிறை சமூகத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஒருவர் பலி

2 months 1 week ago

Published By: Rajeeban

03 Aug, 2025 | 05:22 PM

image

காசாவில் உள்ள பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடத்தில் தீ மூண்டுள்ளது என தெரிவித்துள்ள செம்பிறை சமூகம் கான் யூனிசில் உள்ள தனது கட்டிடத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே தாக்கியதாக தெரிவித்துள்ளது.

எங்கள் தலைமையகம் என்பது இஸ்ரேலிற்கு நன்கு தெரியும் என பாலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டிடம் தீப்பிடித்து எரிவதையும் புகைமண்டலம் காணப்படுவதையும் வெளியிட்டுள்ள செம்பிறை சங்கம்கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் இரத்;தக்கறை காணப்படுவதையும் காண்பிக்கும் படங்களையும் வெளியிட்டுள்ளது.

ஒமார் இஸ்லீம் என்பவர் கொல்லப்பட்டுள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/221717

ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை - ஹமாஸ்

2 months 1 week ago

03 Aug, 2025 | 10:31 AM

image

சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

2007 முதல்; காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.

இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாவிட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது.

எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது, மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார், இந்த குழி எனக்கானது என அவர் தெரிவிக்கின்றார்.

பணயக்கைதிகளும் பட்டினி கிடக்கின்றார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/221664

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

2 months 1 week ago

25-688d006f17fdf.jpg?resize=600%2C375&ss

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில்,
டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார்.

அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1441578

ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்

2 months 1 week ago
  • யாரோஸ்லாவ் லுகிவ்

  • பிபிசி செய்திகள்

  • 49 நிமிடங்களுக்கு முன்னர்

முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை "பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த" உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

"முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை அதிபர் டிரம்ப் கூறவில்லை.

யுக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் மெட்வெடேவ் பேசியிருந்தார், அது அமெரிக்காவை அச்சுறுத்தும்விதமாக இருந்தது.

உலகிலேயே அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ரஷ்யாவும் அமெரிக்காவும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் வைத்துள்ளன.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமையன்று (2025, ஆகஸ்ட் 1) ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதிய பதிவில், "ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா அல்லது அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா என்பதை அமெரிக்க அதிபர் கூறவில்லை.

சமூக ஊடகத்தில் இந்த விஷயத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது சரியானதாக எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

"ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, நமது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நான் இதைச் செய்கிறேன். நமது மக்களைப் பாதுகாக்க வேண்டும்."

இந்த விவகாரம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் டிரம்பின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்நாட்டின் பங்குச் சந்தை கடுமையான சரிவைக் கண்டது.

அமெரிக்காவின் இந்நாள் அதிபரும், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் அண்மையில் சமூக ஊடகங்களில் பரஸ்பரம் தொடர்ச்சியான தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏனெனில், போர் நிறுத்தம் செய்வதற்கான எந்த விதமான முயற்சிகளையும் ரஷ்யா எடுக்கவில்லை.

இதற்கு முன்னதாக, திங்களன்று, டிரம்ப் "10 அல்லது 12" நாள் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார். ஜூலை மாத தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் புடின் 50 நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை குறிவைத்து கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

டிமிட்ரி மெட்வெடேவ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2008-12 ஆம் காலகட்டத்தில் ரஷ்யாவின் அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடேவ்

2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்த மெட்வெடேவ், இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் "ரஷ்யாவுடன் இறுதி எச்சரிக்கை விளையாட்டை" விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார்.

எக்ஸ் வலைதளத்தில் மெட்வெடேவ் வெளியிட்ட ஒரு பதிவில், "டிரம்பின் ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் என்றும், போரை நோக்கிய ஒரு படி முன்னோக்கி செலுத்தும் செயல்" என்று கூறினார்.

ஜூலை மாத தொடக்கத்தில் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை விமர்சித்த அவர், அது "நாடக ரீதியாக" இருப்பதாகவும், "ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை" என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து டெலிகிராமில் பதிவிட்ட மெட்வெடேவ், "டெட் ஹேண்ட்" அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். இது, குறிப்பாக ரஷ்யாவின் பழிவாங்கும் அணுசக்தி தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்பின் குறியீட்டுப் பெயர் என சில ராணுவ ஆய்வாளர்கள் புரிந்து கொண்டனர்.

மெட்வெடேவின் கருத்துக்களுக்கு டிரம்ப் பதிலளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் மெட்வெடேவை "ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் அதிபர், அவர் இன்னும் தன்னை நாட்டின் அதிபராகவே நினைக்கிறார்" என்று வியாழக்கிழமையன்று (2025 ஜூலை 31) விவரித்தார்.

மெட்வெடேவை "அவரது வார்த்தைகளைக் கவனியுங்கள்" என்றும், "அவர் மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்!" என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

2022ஆம் ஆண்டில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை மெட்வெடேவ் ஆதரிக்கிறார், மேலும் மேற்கத்திய நாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதற்கும் அவர் தயங்குவதில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c754z1dp09eo

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

2 months 1 week ago

uk-fe.jpg?resize=618%2C375&ssl=1

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

பிரித்தானியாவின்  பிரதமராக  கியர் ஸ்டார்மர்  பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின்  குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

அந்தவகையில் தற்போது  பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான  குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும்  சமூக அமைதி  விருத்திசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  இந்த மாற்றங்கள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கு சவாலாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மிகவும் கடுமையான நடவடிக்கையாக  பார்க்கப்படுவதாகவும்,மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்  சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441497

உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி

2 months 1 week ago

உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி

29 JUL, 2025 | 05:00 PM

image

அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன.

இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக். அவனது புகைப்படம்   காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது  செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும்  படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரினி இந்த சிறுவனை புகைப்படம் எடுத்தார்.

முகமதுவின் தாயார் ஹெடயா அல்-முட்டா, தான் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றி பிபிசியிடம் கூறினார்.

gaza_child_shocking_1.jpg

"இப்போது அவர் மூன்று கிலோகிராம் எடை கொண்டவர், இதற்கு முன்பு அவர் ஒன்பது கிலோகிராம் எடை கொண்டவர். அவர் வழக்கம் போல் உணவுண்டார் , ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் மோசமான உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்'

உணவுப் பற்றாக்குறையால் முகமதுவால் "மற்ற குழந்தைகளைப் போல இருக்கவோ நிற்கவோ முடியாது" என்றும் அவரது முதுகு வளைந்து முதுகெலும்பு வீங்கியிருப்பதாகவும் ஹெடயா விளக்குகிறார்.

"எனக்கு வேறு வழியில்லை, என் கணவர் போரில் கொல்லப்பட்டார் இங்கே எனக்கு கடவுளைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது. நான் தனியாக இருப்பதால் அவருக்கு உணவளிக்க முடியாது. ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்

உலகின் மனிதாபிமானத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இந்த படத்தை எடுத்ததன் நோக்கம் குறித்து  பிபிசியிடம்  பத்திரிகையாளர் அகமது அல்-அரினி இவ்வாறு தெரிவித்தார்

"நான் நீண்ட நேரம் எடுத்த படங்களை எடுத்தேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு முறை எடுக்கும்போது நிறுத்தி என் மூச்சை இழுத்து பின்னர் தொடர வேண்டியிருந்தது" 

எலும்புகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் குழந்தைகள்

"நான் இந்த சிறிய முகமதுவின் படத்தை எடுத்தேன் அவன் தன் தாயுடன் தனியாக இருந்தான். வடக்கு காசாவில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்று அகமது கூறினார்.

காசா பகுதியில்சிறுவர்கள் குழந்தைகள்  அனுபவிக்கும் கடுமையான பசியை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்' என்று அல்-அரினி பிபிசியிடம் கூறினார்.

வடக்கு காசாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மோதலால் முகமதுவும் அவரது தாயாரும் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை முற்றிலும் வெறுமையான ஒவன் மாத்திரம் காணப்பட்ட கூடாரத்தில் பார்த்ததாகவும்அல்-அரினி கூறினார்.

'இது ஒரு கல்லறையை ஒத்திருக்கிறது.'

நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அந்த குழந்தை பிளாஸ்டிக் பையொன்றை ஆடையாக அணிந்திருப்பது தெரியும், இதற்கு காரணம் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்லாமையே என தெரிவிக்கின்றார் அல்-அரினி.

அவரது தாயார் மெல்லிய மற்றும் மெலிந்தவர் தனது பலவீனமான கையால் அவரது தலையைத் தாங்குகிறார்.

"காசா சுகாதார அமைச்சகம் கடந்த வாரத்தில்122 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 83 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது.

சமீபத்திய வாரங்களில் காசாவில் பணிபுரியும் மற்ற புகைப்பட பத்திரிகையாளர்களைப் போலவே அகமதுவும் துன்பத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை விளக்குகிறார்: "குழந்தைகள் பட்டினியால் இறக்கும் விதத்தையும் அவர்களின் உடலில் எலும்புகள் மாத்திரம் எப்படி எஞ்சியிருக்கின்றன  என்பதையும் பார்ப்பது என்னை மிகவும் பாதிக்கிறது; நான் ஒரு மனிதன்."

அதனால்தான் அகமது சொல்வது போல் முகமது மற்றும் ஹெடாயாவைப் பார்த்தபோது அவர்களின் படத்தை எடுக்க அவருக்கு சிறிது நேரம் பிடித்தது.

துரதிர்ஷ்டவசமாக முகமது அவர் பார்த்த ஒரே குழந்தை அல்ல.

gaza_child_shocking_2.jpg

"நான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்" என்று அவர் கூறினார். அடுத்த நாள் ஒரு மாதத்தில் 25 பவுண்டுகள் எடை இழந்த 17 வயது குழந்தையின் படங்களை எடுத்தேன்.

"காசாவில் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை பஞ்சம் இல்லாவிட்டாலும் பயங்கரமான பசி இருக்கிறது நமக்கு கொஞ்சம் கிடைக்கும்போது மக்கள் நமக்காக போராடுகிறார்கள், சிலர் கொஞ்சம் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்

சில நேரங்களில் தனது வேலையைச் செய்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்று இந்த புகைப்படக் கலைஞர் கூறுகிறார்.

நான் இங்கே சுற்றிசுற்றி வந்து படங்களை எடுக்கின்றேன் பட்டினியால் நான் மயங்கி விழப்போகின்றேன் என மனதை உருக்கும் அந்த படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/221295

ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இரான் கடும் எதிர்வினை ஏன்?

2 months 1 week ago

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

"இரானிய அரசு, மத்திய கிழக்கில் போரைத் தூண்டுகிறது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு பயன்படுத்துகிறது. இதனால், இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்துடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தடைகளை பாரபட்சமானது என்று வர்ணித்துள்ள இரான், "இவை சர்வதேச சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையின் கொள்கைகளை மீறுவதாகவும், பொருளாதார ஏகாதிபத்தியத்தின் புதிய வடிவமாகவும் உள்ளன" என்று கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் , "இரானிய ஆட்சி வெளிநாடுகளில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும், அதன் சொந்த மக்களை அடக்கவும் பயன்படுத்தும் வருவாயைக் குறைக்க இன்று அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இரான் தயாரிக்கும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை பெரிய அளவில் விற்றதும், வாங்கியதும் கண்டறியப்பட்டதால், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"அதிபர் டிரம்ப் முன்பு கூறியது போல, இரானிய எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்க முடிவு செய்யும் எந்தவொரு நாடும் அல்லது தனிநபரும் அமெரிக்கத் தடைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க நிதித் துறையின் நடவடிக்கை

அமெரிக்க நிதித்துறை ஹுசைன் ஷம்கானியின் பெரிய கப்பல் வணிகத்துடன் தொடர்புடைய 115க்கும் மேற்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் அரசியல் ஆலோசகரான அலி ஷம்கானியின் மகன்தான் ஹுசைன் ஷம்கானி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பங்கஜ் நாக்ஜிபாய் படேலின் பெயரும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என பிடிஐயின் செய்தி குறிப்பிடுகிறது.

தியோடர் ஷிப்பிங் உள்ளிட்ட ஹுசைன் ஷம்கானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல கப்பல் நிறுவனங்களில், படேல் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.

அதேபோல், இந்திய குடிமக்களான ஜேக்கப் குரியன் மற்றும் அனில் குமார் பனக்கல் நாராயணன் நாயர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நியோ ஷிப்பிங் என்ற நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள்.

இந்த நிறுவனம் அப்ரா என்ற கப்பலை வைத்திருக்கிறது. ஹுசைன் ஷம்கானியின் நெட்வொர்க்கால் இயக்கப்படும் கப்பல்களின் ஒரு பகுதிதான் அப்ரா.

தடைசெய்யப்பட்டுள்ள ஆறு இந்திய நிறுவனங்கள்

சில இந்திய நிறுவனங்கள் இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கவும் விற்கவும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்தன எனக் கூறுகிறது அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை.

அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்:

இந்த பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனம், ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில், 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்:

இந்தியாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை (மெத்தனால் உட்பட) இறக்குமதி செய்தது.

இந்த காலகட்டத்தில், 51 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டன.

ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்:

மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை, குறிப்பாக, டோலுயீனை இறக்குமதி செய்தது.

இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 49 மில்லியன் டாலரை விட அதிகம் .

ராமனிக்லால் எஸ். கோசாலியா & கோ:

இந்த நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையின்படி, ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து மெத்தனால் மற்றும் டோலுயீன் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் 22 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்:

இந்த நிறுவனம் அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து மெத்தனால் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்தது.

இந்த காலகட்டத்தில் மொத்த கொள்முதல் சுமார் 14 மில்லியன் டாலர். இந்த சரக்குகளில் சில துபையை தளமாகக் கொண்ட பாப் அல் பர்ஷா என்ற வர்த்தக நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சன் பாலிமர்ஸ்:

இந்த நிறுவனம் இரானின் டானாய்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்திடமிருந்து பாலிஎதிலீன் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கியதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது. அதன் மொத்த கொள்முதல் 1.3 மில்லியன் டாலரை விட அதிகம்.

தடை செய்யப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு பணம், பொருள்கள், சேவைகளை வழங்குவது, அவர்களுக்கு வேலை செய்வது அல்லது அவர்களிடமிருந்து எதையும் பெறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கட்டுப்பாடுகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?

தடை விதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளோ, பணமோ, அமெரிக்க குடிமகன் அல்லது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், அவையும் முடக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதைப் பற்றிய விவரங்களை அமெரிக்க நிதி அமைச்சகத்தின் "வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC)"-க்கு தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், தடை செய்யப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு பணம், பொருள்கள், சேவைகளை வழங்குவது, அவர்களுக்கு வேலை செய்வது அல்லது அவர்களிடமிருந்து எதையும் பெறுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல, மாறாக அவர்களின் நடத்தை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரானின் பதில்

அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையை இரான் கடுமையாக எதிர்த்துள்ளது.

இந்தியாவில் உள்ள இரான் தூதரகமும், இரான் வெளியுறவு அமைச்சகமும், இதை பாரபட்சமானது மற்றும் தீய நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்துள்ளன.

"அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது மற்றும் பொருளாதாரத் தடைகளை ஒரு கருவியாக மாற்றுகிறது. இதன் மூலம் இரான் மற்றும் இந்தியா போன்ற சுதந்திர நாடுகள் மீது தனது விருப்பத்தைத் திணித்து அவற்றின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புகிறது" என்று இரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

"அமெரிக்காவின் புதிய தடைகள் இரானின் எண்ணெய் வர்த்தகத்தை பாதித்து, அதன் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நலனையும் கெடுக்கும் தீய நோக்கம் கொண்டவை. இந்த ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத தடைகள், குற்றச் செயலாகும். இவை சர்வதேச சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறுகின்றன. இவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்" என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpwy2p7q2d2o

பாலஸ்தீன அதிகாரிகளிற்கு வீசா வழங்கப்போவதில்லை - தடைகளையும் விதிப்போம் - அமெரிக்கா

2 months 1 week ago

01 AUG, 2025 | 01:37 PM

image

பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாலஸ்தீன மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் அவற்றிற்கு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசாவை வழங்கப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பல நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/221533

நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்

2 months 1 week ago

அளவுக்கதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்த்து நகரம் அவசரகால சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே சில நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

Storms drop dangerous, flooding rain from DC to New York, inundating roads and snarling air travel

Dangerous torrential rainfall and flash flooding are underway in the mid-Atlantic and Northeast Thursday with millions at risk along the Interstate 95 corridor. It’s shaping up to be another serious flood event in a summer that’s been full of them.

Heavy storms developed in the afternoon and will last through theevening. Some could dump several inches of rain in a few hours, flooding roads and threatening public transit during the busy afternoon and evening commute.

Flash flood warnings were active in parts of Pennsylvania, New Jersey, Maryland and Virginia by mid-afternoon with more drenching storms to come. There have already been reports of flooded roads and stranded vehicles in Maryland and Pennsylvania, according to the National Weather Service and local officials.

https://www.cnn.com/2025/07/31/weather/flash-flooding-mid-atlantic-interstate-95-climate

இந்தியாவுக்கு வரி விதித்த பிறகு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவு உணர்த்துவது என்ன?

2 months 1 week ago

டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES

31 ஜூலை 2025, 10:25 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தானுடன் அந்நாட்டில் 'எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டிருப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் 'அதிக எண்ணெய் வளங்களை மேம்படுத்தும்.

புதன்கிழமை, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது, டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரிகளை அறிவித்தார்.

மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் மீது அபராதம் விதிப்பது பற்றியும் அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் சில இந்திய நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டன.

இந்தியாவின் மீதான வரிகள் மற்றும் பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் ஆகியவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தனக்குத் தானே தோல்வியை தேடிக்கொள்ளும் நடவடிக்கையாக இருக்கலாம் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார்.

மறுபுறம் தற்போது டிரம்பின் முன்னுரிமை வர்த்தகமே தவிர பாரம்பரிய பாதுகாப்பு கூட்டாண்மை அல்ல என கேட்வே ஹவுஸ் ஆஃப் இந்தியா எனும் சிந்தனை குழுவின் ஆய்வாளர் நயனிமா பாசு, நம்புகிறார்.

இந்தியாவுக்கு வரி விதித்த பிறகு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், ANDREW HARNIK/GETTY IMAGES

இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை - டிரம்ப்

இதற்கிடையே இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழன் அன்று கூறியுள்ளார்.

முன்னதாக புதன்கிழமையன்று, ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்கிறது என்பது குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் இருவரும் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரங்களை ஒன்றாக மூழ்கடிக்க விரும்பினால், செய்யட்டும். எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை" என வியாழனன்று, டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டார்.

"இந்தியாவுடன் நாங்கள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வர்த்தகம் செய்துள்ளோம். ஏனெனில் உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. அதேபோல், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகம் இல்லை. " என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விஷயமும் பிரிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தியா அந்த குழுவில் இருக்கிறது. இது டாலரின் மீதான தாக்குதல். டாலரை யாரும் தாக்க அனுமதிக்க மாட்டோம்."என்று கூறினார்.

"இது பகுதி பிரிக்ஸ் குழுவையும், வர்த்தக பற்றாக்குறையையும் பற்றியது. அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோதி எனது நண்பர். ஆனால் இந்தியா எங்களுடன் அதிக வர்த்தகம் செய்யவில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய பொருட்கள் விற்கிறார்கள். ஆனால், அவர்கள் விதிக்கும் வரிகள் (அமெரிக்க பொருட்கள் இந்திய இறக்குமதிக்கு) மிக அதிகளவில் உள்ளன. இப்போது இந்தியா இந்த வரிகளை பெரிதும் குறைக்க தயாராக இருக்கிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்" என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு வரி விதித்த பிறகு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

'ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்'

இந்நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க-பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தலைமைப் பாத்திரத்தை வகித்ததற்காக அதிபர் டிரம்ப்க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என எக்ஸ் தளத்தில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதிவிட்டார்.

ஷாபாஸ் ஷெரீப்பின் கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நேற்றிரவு (புதன்கிழமை) வாஷிங்டனில் எட்டப்பட்டது.

"இந்த வரலாற்று ஒப்பந்தம் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும், இதனால் எங்கள் நீடித்த கூட்டுறவின் நோக்கம் வரவிருக்கும் நாட்களில் மேலும் விரிவாக்கப்படும்"என அவரது பதிவு குறிப்பிடுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் குறித்த தகவல்களை அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

"நாங்கள் பாகிஸ்தானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் கீழ் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து அங்குள்ள மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்தும்"என ட்ரூத் சோசியலில் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த கூட்டாண்மைக்கு தலைமை தாங்கும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். யாருக்குத் தெரியும், ஒருவேளை ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்" என்றும் அவரது பதிவு கூறியது.

இந்தியாவுக்கு வரி, பாகிஸ்தானுடன் எண்ணெய் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் (இடது) வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்தார்.

நிபுணர்கள் கூறுவது என்ன?

டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்திருந்தாலும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் பார்வையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொருத்தமானதாக இல்லை.

"அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதை காரணம் காட்டி அதன் மீது வரிகளை விதித்துவிட்டு, பின்னர் தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கு கைகொடுப்பது ஒரு 'தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக்கொள்ளும்' நடவடிக்கையாகும். வரும் காலங்களில், அமெரிக்க இராஜதந்திரம் இதைத் தானாகவே உணரலாம்," என டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடடீஸில் பேராசிரியராக இருக்கும் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார்.

பாகிஸ்தானுடன் அமெரிக்கா செய்துகொண்ட இந்த எண்ணெய் ஒப்பந்தம் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம், ஆனால் இது திடீரென நடந்துவிடவில்லை என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் டிரம்பை சந்தித்தபோது, அந்த சந்திப்பு ஆபரேஷன் சிந்தூரை பற்றியதாக இருக்கக்கூடும் என இந்தியா கருதியது என சிந்தனைக் குழுவான கேட்வே ஹவுஸின் ஆய்வாளர் நயனிமா பாசு சொல்கிறார்.

"உண்மையில் இது பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விவாதமாக இருந்தது. அமெரிக்காவுக்கு தலைவலியாக இருந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பிடிக்கிறது என்பதால் ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது, உண்மையில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவுகள் ஊடகங்களில் காட்டப்பட்ட அளவுக்கு மோசமாக இல்லை."

இந்தியா-அமெரிக்க உறவுகளில் நெருக்கம் இருந்தபோதிலும், பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்டபோது, டிரம்பின் தலைமையில் அமெரிக்கா இப்போது வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என நயனிமா பாசு கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, டிரம்ப் 'போர்' செய்வதற்குப் பதிலாக 'வர்த்தகப் போரை' விரும்புகிறார் மற்றும் தனது சொந்த விதிமுறைகளின்படி எவ்வளவு நாடுகளுடன் முடியுமோ அவ்வளவு நாடுகளுடன் வணிகம் செய்ய விரும்புகிறார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பெரும் எண்ணெய் வளங்கள் உள்ளன, அமெரிக்கா இதை பாகிஸ்தானுடன் இணைந்து பயன்படுத்த விரும்புகிறது என்கிறார் பாசு.

அவரைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது அமெரிக்காவுடன் ஒரு மினி ஒப்பந்தத்தை செய்திருக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0ql001y0g8o

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு

2 months 1 week ago

31 JUL, 2025 | 06:56 AM

image

பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவில் காணப்படும் மனித துயரம் சகிக்க முடியாததாக காணப்படுகின்றது மிக வேகமாக மோசமடைகின்றது என  அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221410

ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?

2 months 1 week ago

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம், REUTERS

30 ஜூலை 2025, 02:28 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.

இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும்.

ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவின் காம்ச்சாட்கா பிராந்திய கடற்கரை

முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது.

"கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது"

இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார்.

இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார்.

"இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

ஜப்பானில் மக்களுக்கு எச்சரிக்கை

ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

"பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது.

சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்

  • ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன

  • அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும்

  • அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள்

  • ஹவாய்

  • குவாம்

ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g62665l9do

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் - இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் - இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை

2 months 1 week ago

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் - இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் - இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை

30 JUL, 2025 | 06:50 AM

image

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்" செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து  பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்தம்,இரண்டுதேசத்தினை உறுதி செய்யும் நீண்டகாலதீர்விற்கு அர்ப்பணித்தல்,ஐக்கியநாடுகள் காசாவில் மீண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதித்தல் போன்ற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இல்லாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் அமர்வில் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

காசாவில் காணப்படும் சகிக்கமுடியாத நிலைமை காரணமாகவும்,இரண்டுதேசத்திற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என்ற கரிசனை காரணமாகவும் இந்த நடவடிக்கைகளை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221330

ஜப்பானை தாக்கியது சுனாமி

2 months 1 week ago

ஜப்பானை தாக்கியது சுனாமி

2025 ஜூலை 30 , மு.ப. 08:37

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a)

image_9795faa20e.jpg

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017

கடும் பசியில் காஸா மக்கள் - பட்டினி மனித உடலை என்ன செய்யும்?

2 months 1 week ago

கடும் பசியில் காஸா மக்கள் -  பட்டினி உடலை என்ன செய்யும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால்

  • பிபிசி உலக சேவை

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், "காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிலர் தெருக்களில் சோர்ந்து விழுகிறார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா. இன்னும் அதிகாரப்பூர்வமாக "பஞ்சம்" என்று அறிவிக்கவில்லை. ஆனால், கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயத்தில் காஸா உள்ளது என ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC- Integrated Food Security Phase Classification) எச்சரிக்கிறது.

காஸா

பட மூலாதாரம், ANADOLU/GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது

பஞ்சம் என்றால் என்ன, அது எப்போது அறிவிக்கப்படுகிறது?

ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) என்பது, மக்கள் மலிவு விலை மற்றும் சத்தான உணவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிக்க பயன்படும் உலகளாவிய தரநிலை.

இதில் கட்டம் 5 தான் மிக உயர்ந்த கட்டமாக கருதப்படுகிறது. அதாவது பஞ்சம். பஞ்சம் என்பது பின்வரும் நிலைகளை சந்திக்கும் ஒரு தீவிர சூழ்நிலையை குறிக்கிறது.

  • 20% குடும்பங்கள் உணவுக்கான தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்வது

  • குறைந்தது 30% குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது

  • ஒவ்வொரு நாளும், 10,000 பேரில் குறைந்தது 2 பெரியவர்கள் அல்லது 4 குழந்தைகள் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களின் தொடர்பால் உயிரிழப்பது

காஸாவின் மொத்த மக்களும் (2.1 மில்லியன் பேர்) கட்டம் 3 (நெருக்கடி) அல்லது அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர் என IPC கூறுகிறது.

மே மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் கிட்டத்தட்ட 469,500 பேர் பேரழிவு நிலையை (IPC கட்டம் 5) அனுபவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழல் ஏற்பட்டவுடன், ஐ.நா. பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கிறது.

சில சமயங்களில் ஒரு நாட்டின் அரசாங்கத்துடன் இணைந்தோ, பெரும்பாலும் சர்வதேச உதவி நிறுவனங்கள் அல்லது மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்தோ இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

வடக்கு காஸாவில் உள்ள ஜிகிம் எல்லை

பட மூலாதாரம், MAJDI FATHI/NURPHOTO/GETTY IMAGES

படக்குறிப்பு, வடக்கு காஸாவில் உள்ள ஜிகிம் எல்லையில் இருந்து வரும் உதவி லாரிகளில் இருந்து பாலத்தீனியர்கள் மாவு மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள்

பசியால் வாடும் போது ஒருவரின் உடலுக்கு என்ன நடக்கும்?

பட்டினி என்பது நீண்ட காலமாக உணவு இல்லாததால் ஏற்படுகிறது. இதனால் உடல், அதன் அடிப்படை செயல்பாடுகளுக்கு தேவையான கலோரிகளைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

பொதுவாக உடல், உணவை குளுக்கோஸாக உடைக்கிறது. ஆனால் உணவு நிறுத்தப்படும்போது, உடல் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை வெளியிட, கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைகோஜனை உடைக்கத் தொடங்குகிறது.

அங்குள்ள வளங்கள் தீர்ந்துவிட்டால், உடல் தேங்கிய கொழுப்பை உடைத்து, இறுதியில் தசை திரளையும் உடைத்து, போதுமான ஆற்றலை உற்பத்தி செய்யும்.

பட்டினியால் நுரையீரல், வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் சுருங்கலாம். இது மூளையை பாதித்து, மாயத்தோற்றம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

சிலர் நேரடியாக பட்டினியால் இறக்க நேரிடலாம்.

ஆனால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பால், சுவாசம் அல்லது செரிமான அமைப்புகளில் ஏற்படும் தொற்றுகள் போன்ற சிக்கல்களால் அடிக்கடி இறக்கின்றனர்.

பட்டினி ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது.

"நீங்கள் திடீரென்று கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக மாட்டீர்கள். இந்தக் குழந்தைகளுக்கு முன்பு தட்டம்மை, நிமோனியா, வயிற்றுப்போக்கு அல்லது அதுபோன்ற நோய்கள் இருந்திருக்கலாம்," என்கிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து துறையின் கௌரவ மூத்த ஆராய்ச்சி பேராசிரியர் சார்லோட் ரைட்.

மேலும், "முன்பு ஆரோக்கியமாக இருந்த, ஆனால் இப்போது பட்டினியால் வாடத் தொடங்கியுள்ள குழந்தைகளுக்கு, உணவு கிடைத்தால் அதை சாப்பிட்டு ஜீரணிக்கத் தேவையான ஆற்றல் இன்னும் இருக்கும். மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்"என்றும் பேராசிரியர் ரைட் விளக்குகிறார்.

நீண்ட கால விளைவுகள்

படக்குறிப்பு,பசியின் நீண்ட கால விளைவுகள்

ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

குழந்தைப் பருவத்தில் உணவுப் பற்றாக்குறையைச் சந்திப்பது, வாழ்நாள் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில், அறிவாற்றல் வளர்ச்சியில் (cognitive development) குறைபாடுகள் ஏற்படுவது மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய நிலை (stunting) ஆகியவை அடங்கும்.

உடல் வளர்ச்சி குன்றிய நிலை (Stunting) என்பது, மோசமான ஊட்டச்சத்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகள், மற்றும் போதிய உளவியல் மற்றும் சமூக தூண்டுதல் இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் குறைபாடாக உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுக்கிறது.

பொதுவாக, இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப எதிர்பார்க்கப்படும் உயரத்தை விட குறைவாக இருப்பார்கள்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கர்ப்ப காலத்தில் போதுமான அளவு உணவு கிடைக்காவிட்டால், இரத்த சோகை, ப்ரீ -எக்லாம்ப்சியா, ரத்தக்கசிவு, மரணம் போன்ற தீவிர சிக்கல்களை தாய்மார்களுக்கு ஏற்படுத்தலாம். அதேபோல், குழந்தைகள் இறந்து பிறப்பது, குறைவான எடையுடன் பிறப்பது, வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம் என்கிறது யுனிசெஃப்.

அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கத் தேவையான சத்தான பாலை உற்பத்தி செய்ய போராடலாம்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மெடிசின்ஸ் சன்ஸ் பிரான்டியர்ஸ் (Médecins Sans Frontières) அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் நுரதீன் அலிபாபா கூறுகையில், 'இதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது' என்கிறார் .

"வளர்ச்சிக் குறைபாடு என்பது மீள முடியாதது. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள காலத்தை கடந்த பிறகும், குறைந்த உயரத்தில்தான் இருப்பார்கள். இது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பெரும்பாலும் நிரந்தர கற்றல் குறைபாடும் இருக்கும், அது அவர்கள் பள்ளியில் சேரும் வரை தெளிவாக தெரியாது" என்று கூறிய மருத்துவர் அலிபாபா,

"ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது, இதனால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும்" என்றும் கூறுகிறார்.

"நிறைய மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிறுமிகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். அவர்கள் கருத்தரித்தால், இந்த பெண்கள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்."

ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு நிலை) இன்னொரு சிக்கலாக உருவாகலாம்.

"வயதான பிறகு எலும்புகள் மடிக்கக்கூடியதாக மாறுவதால், அவர்கள் தங்கள் உடல் எடையை சுமக்க முடியாமல் போகலாம். அதனால், ஒரு சிறிய நிகழ்வும் கூட எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும்," என்று மருத்துவர் அலிபாபா விளக்குகிறார்.

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் பாலத்தீனியர்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது

ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் ?

"இந்த நெருக்கடிக்கு பதிலளிக்க இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் தேவை. முதலாவது, காஸாவிற்கு அதிகளவிலான உணவு அனுப்பப்பட வேண்டும். இரண்டாவது, விலையுயர்ந்த சிகிச்சை உணவுகள் வழங்கப்பட வேண்டும்"என்று பேராசிரியர் ரைட் கூறினார்.

"குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வேகமாக உணவளிக்க வேண்டும்."

"தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தேர்வாகும். முதலில், தாய்க்கு உணவளிக்க வேண்டும், அதன்மூலம் அவர் குழந்தைக்கு உணவளிக்க முடியும். ஆனால், ஆண்களை விட , பெண்களிடம் உணவு சென்றடைவதை உறுதிசெய்வது தான் உண்மையான சவால் உணவு "

"முக்கியமான செய்தி என்னவெனில், குழந்தைகளும் தாய்மார்களும் முன்னுரிமை பெற வேண்டும், அவர்களுக்கு பெரிய அளவு உதவி தேவையில்லை."

'ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தரும். அதற்கான சிகிச்சை எப்போதும் நேரடியானதல்ல' என விளக்குகிறார் பிபிசி அரபு சுகாதார நிருபரும், மருத்துவராக பயிற்சி பெற்ற ஸ்மிதா முண்டாசாத்.

கடுமையான சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு விழுங்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைப்படலாம்.

"மேலும், நோய்த்தொற்றுகள் அல்லது பிற சிக்கல்களுக்கான சிகிச்சைகளும் தேவைப்படும்," என்றும் அவர் கூறினார்.

"சில சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு மிக விரைவாக அல்லது தவறான உணவை கொடுப்பது ஆபத்தானது.

"அதனால், பசிக்காக உணவை வழங்குவது மட்டும் போதாது. சரியான உணவையும் வழங்க வேண்டும். மேலும், இதை ஆதரிக்கக்கூடிய ஒரு செயல்பாட்டு சுகாதார அமைப்பும் இருக்க வேண்டும்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஸ்மிதா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdrkj8zep71o

ஒஸ்கார் விருதுபெற்ற திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூத குடியேற்றவாசியால் சுட்டுக்கொலை

2 months 1 week ago

ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து

Published By: RAJEEBAN

29 JUL, 2025 | 10:41 AM

image

ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

no_other_land_22.jpg

ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினரும் யூத குடியேற்றவாசிகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களை விபரிக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இவர் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.

ஹெப்ரோனிற்கு அருகில் உள்ள உம் அல் கெய்ர் பாலஸ்தீனிய கிராமத்தின் மீது யூதகுடியேற்றவாசிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டார் என பாலஸ்தீன அதிகார சபையின் கல்வியமைச்சு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

நோ அதர் லாண்டினை உருவாக்கிய வேறு இருவரும் இதனை உறுதி செய்துள்ளனர்.

இன்றுகாலை எனது நண்பர் அவ்டா படுகொலை செய்ய்பட்டார் என பாலஸ்தீன பத்திரிகையாளர் பசெல் அட்ரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

Untitled-1.jpg

பாலஸ்தீனிய சமூக செயற்பாட்டாளரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலியர்

அவர் தனது கிராமத்தில் நின்றுகொண்டிருந்தவேளை யூத குடியேற்றவாசியொருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் அது அவரது உயிரை குடித்தது என அவர் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக என அவர் பதிவிட்டுள்ளார்.

ஹடாலின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வீடியோவையும் பதிவிட்டுள்ள அவர்.

https://www.virakesari.lk/article/221243

Checked
Sat, 10/11/2025 - 20:53
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe