உலக நடப்பு

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

3 hours 14 minutes ago

uk-fe.jpg?resize=618%2C375&ssl=1

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

பிரித்தானியாவின்  பிரதமராக  கியர் ஸ்டார்மர்  பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின்  குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

அந்தவகையில் தற்போது  பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான  குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும்  சமூக அமைதி  விருத்திசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  இந்த மாற்றங்கள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கு சவாலாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மிகவும் கடுமையான நடவடிக்கையாக  பார்க்கப்படுவதாகவும்,மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்  சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441497

உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி

17 hours 4 minutes ago

உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி

29 JUL, 2025 | 05:00 PM

image

அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன.

இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக். அவனது புகைப்படம்   காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது  செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும்  படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரினி இந்த சிறுவனை புகைப்படம் எடுத்தார்.

முகமதுவின் தாயார் ஹெடயா அல்-முட்டா, தான் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றி பிபிசியிடம் கூறினார்.

gaza_child_shocking_1.jpg

"இப்போது அவர் மூன்று கிலோகிராம் எடை கொண்டவர், இதற்கு முன்பு அவர் ஒன்பது கிலோகிராம் எடை கொண்டவர். அவர் வழக்கம் போல் உணவுண்டார் , ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் மோசமான உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்'

உணவுப் பற்றாக்குறையால் முகமதுவால் "மற்ற குழந்தைகளைப் போல இருக்கவோ நிற்கவோ முடியாது" என்றும் அவரது முதுகு வளைந்து முதுகெலும்பு வீங்கியிருப்பதாகவும் ஹெடயா விளக்குகிறார்.

"எனக்கு வேறு வழியில்லை, என் கணவர் போரில் கொல்லப்பட்டார் இங்கே எனக்கு கடவுளைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது. நான் தனியாக இருப்பதால் அவருக்கு உணவளிக்க முடியாது. ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்

உலகின் மனிதாபிமானத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இந்த படத்தை எடுத்ததன் நோக்கம் குறித்து  பிபிசியிடம்  பத்திரிகையாளர் அகமது அல்-அரினி இவ்வாறு தெரிவித்தார்

"நான் நீண்ட நேரம் எடுத்த படங்களை எடுத்தேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு முறை எடுக்கும்போது நிறுத்தி என் மூச்சை இழுத்து பின்னர் தொடர வேண்டியிருந்தது" 

எலும்புகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் குழந்தைகள்

"நான் இந்த சிறிய முகமதுவின் படத்தை எடுத்தேன் அவன் தன் தாயுடன் தனியாக இருந்தான். வடக்கு காசாவில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்று அகமது கூறினார்.

காசா பகுதியில்சிறுவர்கள் குழந்தைகள்  அனுபவிக்கும் கடுமையான பசியை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்' என்று அல்-அரினி பிபிசியிடம் கூறினார்.

வடக்கு காசாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மோதலால் முகமதுவும் அவரது தாயாரும் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை முற்றிலும் வெறுமையான ஒவன் மாத்திரம் காணப்பட்ட கூடாரத்தில் பார்த்ததாகவும்அல்-அரினி கூறினார்.

'இது ஒரு கல்லறையை ஒத்திருக்கிறது.'

நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அந்த குழந்தை பிளாஸ்டிக் பையொன்றை ஆடையாக அணிந்திருப்பது தெரியும், இதற்கு காரணம் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்லாமையே என தெரிவிக்கின்றார் அல்-அரினி.

அவரது தாயார் மெல்லிய மற்றும் மெலிந்தவர் தனது பலவீனமான கையால் அவரது தலையைத் தாங்குகிறார்.

"காசா சுகாதார அமைச்சகம் கடந்த வாரத்தில்122 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 83 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது.

சமீபத்திய வாரங்களில் காசாவில் பணிபுரியும் மற்ற புகைப்பட பத்திரிகையாளர்களைப் போலவே அகமதுவும் துன்பத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை விளக்குகிறார்: "குழந்தைகள் பட்டினியால் இறக்கும் விதத்தையும் அவர்களின் உடலில் எலும்புகள் மாத்திரம் எப்படி எஞ்சியிருக்கின்றன  என்பதையும் பார்ப்பது என்னை மிகவும் பாதிக்கிறது; நான் ஒரு மனிதன்."

அதனால்தான் அகமது சொல்வது போல் முகமது மற்றும் ஹெடாயாவைப் பார்த்தபோது அவர்களின் படத்தை எடுக்க அவருக்கு சிறிது நேரம் பிடித்தது.

துரதிர்ஷ்டவசமாக முகமது அவர் பார்த்த ஒரே குழந்தை அல்ல.

gaza_child_shocking_2.jpg

"நான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்" என்று அவர் கூறினார். அடுத்த நாள் ஒரு மாதத்தில் 25 பவுண்டுகள் எடை இழந்த 17 வயது குழந்தையின் படங்களை எடுத்தேன்.

"காசாவில் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை பஞ்சம் இல்லாவிட்டாலும் பயங்கரமான பசி இருக்கிறது நமக்கு கொஞ்சம் கிடைக்கும்போது மக்கள் நமக்காக போராடுகிறார்கள், சிலர் கொஞ்சம் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்

சில நேரங்களில் தனது வேலையைச் செய்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்று இந்த புகைப்படக் கலைஞர் கூறுகிறார்.

நான் இங்கே சுற்றிசுற்றி வந்து படங்களை எடுக்கின்றேன் பட்டினியால் நான் மயங்கி விழப்போகின்றேன் என மனதை உருக்கும் அந்த படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/221295

ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இரான் கடும் எதிர்வினை ஏன்?

17 hours 31 minutes ago

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

"இரானிய அரசு, மத்திய கிழக்கில் போரைத் தூண்டுகிறது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு பயன்படுத்துகிறது. இதனால், இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்துடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தடைகளை பாரபட்சமானது என்று வர்ணித்துள்ள இரான், "இவை சர்வதேச சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையின் கொள்கைகளை மீறுவதாகவும், பொருளாதார ஏகாதிபத்தியத்தின் புதிய வடிவமாகவும் உள்ளன" என்று கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் , "இரானிய ஆட்சி வெளிநாடுகளில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும், அதன் சொந்த மக்களை அடக்கவும் பயன்படுத்தும் வருவாயைக் குறைக்க இன்று அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இரான் தயாரிக்கும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை பெரிய அளவில் விற்றதும், வாங்கியதும் கண்டறியப்பட்டதால், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"அதிபர் டிரம்ப் முன்பு கூறியது போல, இரானிய எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்க முடிவு செய்யும் எந்தவொரு நாடும் அல்லது தனிநபரும் அமெரிக்கத் தடைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க நிதித் துறையின் நடவடிக்கை

அமெரிக்க நிதித்துறை ஹுசைன் ஷம்கானியின் பெரிய கப்பல் வணிகத்துடன் தொடர்புடைய 115க்கும் மேற்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் அரசியல் ஆலோசகரான அலி ஷம்கானியின் மகன்தான் ஹுசைன் ஷம்கானி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பங்கஜ் நாக்ஜிபாய் படேலின் பெயரும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என பிடிஐயின் செய்தி குறிப்பிடுகிறது.

தியோடர் ஷிப்பிங் உள்ளிட்ட ஹுசைன் ஷம்கானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல கப்பல் நிறுவனங்களில், படேல் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.

அதேபோல், இந்திய குடிமக்களான ஜேக்கப் குரியன் மற்றும் அனில் குமார் பனக்கல் நாராயணன் நாயர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நியோ ஷிப்பிங் என்ற நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள்.

இந்த நிறுவனம் அப்ரா என்ற கப்பலை வைத்திருக்கிறது. ஹுசைன் ஷம்கானியின் நெட்வொர்க்கால் இயக்கப்படும் கப்பல்களின் ஒரு பகுதிதான் அப்ரா.

தடைசெய்யப்பட்டுள்ள ஆறு இந்திய நிறுவனங்கள்

சில இந்திய நிறுவனங்கள் இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கவும் விற்கவும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்தன எனக் கூறுகிறது அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை.

அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்:

இந்த பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனம், ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில், 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்:

இந்தியாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை (மெத்தனால் உட்பட) இறக்குமதி செய்தது.

இந்த காலகட்டத்தில், 51 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டன.

ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்:

மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை, குறிப்பாக, டோலுயீனை இறக்குமதி செய்தது.

இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 49 மில்லியன் டாலரை விட அதிகம் .

ராமனிக்லால் எஸ். கோசாலியா & கோ:

இந்த நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையின்படி, ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து மெத்தனால் மற்றும் டோலுயீன் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் 22 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்:

இந்த நிறுவனம் அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து மெத்தனால் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்தது.

இந்த காலகட்டத்தில் மொத்த கொள்முதல் சுமார் 14 மில்லியன் டாலர். இந்த சரக்குகளில் சில துபையை தளமாகக் கொண்ட பாப் அல் பர்ஷா என்ற வர்த்தக நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சன் பாலிமர்ஸ்:

இந்த நிறுவனம் இரானின் டானாய்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்திடமிருந்து பாலிஎதிலீன் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கியதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது. அதன் மொத்த கொள்முதல் 1.3 மில்லியன் டாலரை விட அதிகம்.

தடை செய்யப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு பணம், பொருள்கள், சேவைகளை வழங்குவது, அவர்களுக்கு வேலை செய்வது அல்லது அவர்களிடமிருந்து எதையும் பெறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கட்டுப்பாடுகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?

தடை விதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளோ, பணமோ, அமெரிக்க குடிமகன் அல்லது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், அவையும் முடக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதைப் பற்றிய விவரங்களை அமெரிக்க நிதி அமைச்சகத்தின் "வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC)"-க்கு தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், தடை செய்யப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு பணம், பொருள்கள், சேவைகளை வழங்குவது, அவர்களுக்கு வேலை செய்வது அல்லது அவர்களிடமிருந்து எதையும் பெறுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல, மாறாக அவர்களின் நடத்தை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரானின் பதில்

அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையை இரான் கடுமையாக எதிர்த்துள்ளது.

இந்தியாவில் உள்ள இரான் தூதரகமும், இரான் வெளியுறவு அமைச்சகமும், இதை பாரபட்சமானது மற்றும் தீய நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்துள்ளன.

"அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது மற்றும் பொருளாதாரத் தடைகளை ஒரு கருவியாக மாற்றுகிறது. இதன் மூலம் இரான் மற்றும் இந்தியா போன்ற சுதந்திர நாடுகள் மீது தனது விருப்பத்தைத் திணித்து அவற்றின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புகிறது" என்று இரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

"அமெரிக்காவின் புதிய தடைகள் இரானின் எண்ணெய் வர்த்தகத்தை பாதித்து, அதன் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நலனையும் கெடுக்கும் தீய நோக்கம் கொண்டவை. இந்த ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத தடைகள், குற்றச் செயலாகும். இவை சர்வதேச சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறுகின்றன. இவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்" என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpwy2p7q2d2o

பாலஸ்தீன அதிகாரிகளிற்கு வீசா வழங்கப்போவதில்லை - தடைகளையும் விதிப்போம் - அமெரிக்கா

23 hours 20 minutes ago

01 AUG, 2025 | 01:37 PM

image

பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாலஸ்தீன மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் அவற்றிற்கு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசாவை வழங்கப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பல நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/221533

நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்

1 day 11 hours ago

அளவுக்கதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்த்து நகரம் அவசரகால சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே சில நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

Storms drop dangerous, flooding rain from DC to New York, inundating roads and snarling air travel

Dangerous torrential rainfall and flash flooding are underway in the mid-Atlantic and Northeast Thursday with millions at risk along the Interstate 95 corridor. It’s shaping up to be another serious flood event in a summer that’s been full of them.

Heavy storms developed in the afternoon and will last through theevening. Some could dump several inches of rain in a few hours, flooding roads and threatening public transit during the busy afternoon and evening commute.

Flash flood warnings were active in parts of Pennsylvania, New Jersey, Maryland and Virginia by mid-afternoon with more drenching storms to come. There have already been reports of flooded roads and stranded vehicles in Maryland and Pennsylvania, according to the National Weather Service and local officials.

https://www.cnn.com/2025/07/31/weather/flash-flooding-mid-atlantic-interstate-95-climate

இந்தியாவுக்கு வரி விதித்த பிறகு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவு உணர்த்துவது என்ன?

1 day 17 hours ago

டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES

31 ஜூலை 2025, 10:25 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தானுடன் அந்நாட்டில் 'எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டிருப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் 'அதிக எண்ணெய் வளங்களை மேம்படுத்தும்.

புதன்கிழமை, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது, டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரிகளை அறிவித்தார்.

மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் மீது அபராதம் விதிப்பது பற்றியும் அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் சில இந்திய நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டன.

இந்தியாவின் மீதான வரிகள் மற்றும் பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் ஆகியவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தனக்குத் தானே தோல்வியை தேடிக்கொள்ளும் நடவடிக்கையாக இருக்கலாம் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார்.

மறுபுறம் தற்போது டிரம்பின் முன்னுரிமை வர்த்தகமே தவிர பாரம்பரிய பாதுகாப்பு கூட்டாண்மை அல்ல என கேட்வே ஹவுஸ் ஆஃப் இந்தியா எனும் சிந்தனை குழுவின் ஆய்வாளர் நயனிமா பாசு, நம்புகிறார்.

இந்தியாவுக்கு வரி விதித்த பிறகு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், ANDREW HARNIK/GETTY IMAGES

இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை - டிரம்ப்

இதற்கிடையே இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழன் அன்று கூறியுள்ளார்.

முன்னதாக புதன்கிழமையன்று, ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்கிறது என்பது குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் இருவரும் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரங்களை ஒன்றாக மூழ்கடிக்க விரும்பினால், செய்யட்டும். எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை" என வியாழனன்று, டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டார்.

"இந்தியாவுடன் நாங்கள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வர்த்தகம் செய்துள்ளோம். ஏனெனில் உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. அதேபோல், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகம் இல்லை. " என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விஷயமும் பிரிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தியா அந்த குழுவில் இருக்கிறது. இது டாலரின் மீதான தாக்குதல். டாலரை யாரும் தாக்க அனுமதிக்க மாட்டோம்."என்று கூறினார்.

"இது பகுதி பிரிக்ஸ் குழுவையும், வர்த்தக பற்றாக்குறையையும் பற்றியது. அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோதி எனது நண்பர். ஆனால் இந்தியா எங்களுடன் அதிக வர்த்தகம் செய்யவில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய பொருட்கள் விற்கிறார்கள். ஆனால், அவர்கள் விதிக்கும் வரிகள் (அமெரிக்க பொருட்கள் இந்திய இறக்குமதிக்கு) மிக அதிகளவில் உள்ளன. இப்போது இந்தியா இந்த வரிகளை பெரிதும் குறைக்க தயாராக இருக்கிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்" என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு வரி விதித்த பிறகு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

'ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்'

இந்நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க-பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தலைமைப் பாத்திரத்தை வகித்ததற்காக அதிபர் டிரம்ப்க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என எக்ஸ் தளத்தில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதிவிட்டார்.

ஷாபாஸ் ஷெரீப்பின் கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நேற்றிரவு (புதன்கிழமை) வாஷிங்டனில் எட்டப்பட்டது.

"இந்த வரலாற்று ஒப்பந்தம் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும், இதனால் எங்கள் நீடித்த கூட்டுறவின் நோக்கம் வரவிருக்கும் நாட்களில் மேலும் விரிவாக்கப்படும்"என அவரது பதிவு குறிப்பிடுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் குறித்த தகவல்களை அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

"நாங்கள் பாகிஸ்தானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் கீழ் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து அங்குள்ள மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்தும்"என ட்ரூத் சோசியலில் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த கூட்டாண்மைக்கு தலைமை தாங்கும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். யாருக்குத் தெரியும், ஒருவேளை ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்" என்றும் அவரது பதிவு கூறியது.

இந்தியாவுக்கு வரி, பாகிஸ்தானுடன் எண்ணெய் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் (இடது) வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்தார்.

நிபுணர்கள் கூறுவது என்ன?

டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்திருந்தாலும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் பார்வையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொருத்தமானதாக இல்லை.

"அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதை காரணம் காட்டி அதன் மீது வரிகளை விதித்துவிட்டு, பின்னர் தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கு கைகொடுப்பது ஒரு 'தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக்கொள்ளும்' நடவடிக்கையாகும். வரும் காலங்களில், அமெரிக்க இராஜதந்திரம் இதைத் தானாகவே உணரலாம்," என டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடடீஸில் பேராசிரியராக இருக்கும் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார்.

பாகிஸ்தானுடன் அமெரிக்கா செய்துகொண்ட இந்த எண்ணெய் ஒப்பந்தம் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம், ஆனால் இது திடீரென நடந்துவிடவில்லை என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் டிரம்பை சந்தித்தபோது, அந்த சந்திப்பு ஆபரேஷன் சிந்தூரை பற்றியதாக இருக்கக்கூடும் என இந்தியா கருதியது என சிந்தனைக் குழுவான கேட்வே ஹவுஸின் ஆய்வாளர் நயனிமா பாசு சொல்கிறார்.

"உண்மையில் இது பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விவாதமாக இருந்தது. அமெரிக்காவுக்கு தலைவலியாக இருந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பிடிக்கிறது என்பதால் ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது, உண்மையில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவுகள் ஊடகங்களில் காட்டப்பட்ட அளவுக்கு மோசமாக இல்லை."

இந்தியா-அமெரிக்க உறவுகளில் நெருக்கம் இருந்தபோதிலும், பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்டபோது, டிரம்பின் தலைமையில் அமெரிக்கா இப்போது வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என நயனிமா பாசு கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, டிரம்ப் 'போர்' செய்வதற்குப் பதிலாக 'வர்த்தகப் போரை' விரும்புகிறார் மற்றும் தனது சொந்த விதிமுறைகளின்படி எவ்வளவு நாடுகளுடன் முடியுமோ அவ்வளவு நாடுகளுடன் வணிகம் செய்ய விரும்புகிறார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பெரும் எண்ணெய் வளங்கள் உள்ளன, அமெரிக்கா இதை பாகிஸ்தானுடன் இணைந்து பயன்படுத்த விரும்புகிறது என்கிறார் பாசு.

அவரைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது அமெரிக்காவுடன் ஒரு மினி ஒப்பந்தத்தை செய்திருக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0ql001y0g8o

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு

1 day 23 hours ago

31 JUL, 2025 | 06:56 AM

image

பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவில் காணப்படும் மனித துயரம் சகிக்க முடியாததாக காணப்படுகின்றது மிக வேகமாக மோசமடைகின்றது என  அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221410

ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?

3 days 4 hours ago

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம், REUTERS

30 ஜூலை 2025, 02:28 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.

இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும்.

ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவின் காம்ச்சாட்கா பிராந்திய கடற்கரை

முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது.

"கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது"

இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார்.

இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார்.

"இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

ஜப்பானில் மக்களுக்கு எச்சரிக்கை

ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

"பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது.

சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்

  • ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன

  • அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும்

  • அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள்

  • ஹவாய்

  • குவாம்

ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g62665l9do

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் - இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் - இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை

3 days 4 hours ago

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் - இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் - இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை

30 JUL, 2025 | 06:50 AM

image

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்" செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து  பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்தம்,இரண்டுதேசத்தினை உறுதி செய்யும் நீண்டகாலதீர்விற்கு அர்ப்பணித்தல்,ஐக்கியநாடுகள் காசாவில் மீண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதித்தல் போன்ற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இல்லாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் அமர்வில் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

காசாவில் காணப்படும் சகிக்கமுடியாத நிலைமை காரணமாகவும்,இரண்டுதேசத்திற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என்ற கரிசனை காரணமாகவும் இந்த நடவடிக்கைகளை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221330

ஜப்பானை தாக்கியது சுனாமி

3 days 4 hours ago

ஜப்பானை தாக்கியது சுனாமி

2025 ஜூலை 30 , மு.ப. 08:37

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a)

image_9795faa20e.jpg

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017

கடும் பசியில் காஸா மக்கள் - பட்டினி மனித உடலை என்ன செய்யும்?

3 days 17 hours ago

கடும் பசியில் காஸா மக்கள் -  பட்டினி உடலை என்ன செய்யும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால்

  • பிபிசி உலக சேவை

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், "காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிலர் தெருக்களில் சோர்ந்து விழுகிறார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா. இன்னும் அதிகாரப்பூர்வமாக "பஞ்சம்" என்று அறிவிக்கவில்லை. ஆனால், கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயத்தில் காஸா உள்ளது என ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC- Integrated Food Security Phase Classification) எச்சரிக்கிறது.

காஸா

பட மூலாதாரம், ANADOLU/GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது

பஞ்சம் என்றால் என்ன, அது எப்போது அறிவிக்கப்படுகிறது?

ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) என்பது, மக்கள் மலிவு விலை மற்றும் சத்தான உணவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிக்க பயன்படும் உலகளாவிய தரநிலை.

இதில் கட்டம் 5 தான் மிக உயர்ந்த கட்டமாக கருதப்படுகிறது. அதாவது பஞ்சம். பஞ்சம் என்பது பின்வரும் நிலைகளை சந்திக்கும் ஒரு தீவிர சூழ்நிலையை குறிக்கிறது.

  • 20% குடும்பங்கள் உணவுக்கான தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்வது

  • குறைந்தது 30% குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது

  • ஒவ்வொரு நாளும், 10,000 பேரில் குறைந்தது 2 பெரியவர்கள் அல்லது 4 குழந்தைகள் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களின் தொடர்பால் உயிரிழப்பது

காஸாவின் மொத்த மக்களும் (2.1 மில்லியன் பேர்) கட்டம் 3 (நெருக்கடி) அல்லது அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர் என IPC கூறுகிறது.

மே மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் கிட்டத்தட்ட 469,500 பேர் பேரழிவு நிலையை (IPC கட்டம் 5) அனுபவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழல் ஏற்பட்டவுடன், ஐ.நா. பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கிறது.

சில சமயங்களில் ஒரு நாட்டின் அரசாங்கத்துடன் இணைந்தோ, பெரும்பாலும் சர்வதேச உதவி நிறுவனங்கள் அல்லது மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்தோ இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

வடக்கு காஸாவில் உள்ள ஜிகிம் எல்லை

பட மூலாதாரம், MAJDI FATHI/NURPHOTO/GETTY IMAGES

படக்குறிப்பு, வடக்கு காஸாவில் உள்ள ஜிகிம் எல்லையில் இருந்து வரும் உதவி லாரிகளில் இருந்து பாலத்தீனியர்கள் மாவு மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள்

பசியால் வாடும் போது ஒருவரின் உடலுக்கு என்ன நடக்கும்?

பட்டினி என்பது நீண்ட காலமாக உணவு இல்லாததால் ஏற்படுகிறது. இதனால் உடல், அதன் அடிப்படை செயல்பாடுகளுக்கு தேவையான கலோரிகளைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

பொதுவாக உடல், உணவை குளுக்கோஸாக உடைக்கிறது. ஆனால் உணவு நிறுத்தப்படும்போது, உடல் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை வெளியிட, கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைகோஜனை உடைக்கத் தொடங்குகிறது.

அங்குள்ள வளங்கள் தீர்ந்துவிட்டால், உடல் தேங்கிய கொழுப்பை உடைத்து, இறுதியில் தசை திரளையும் உடைத்து, போதுமான ஆற்றலை உற்பத்தி செய்யும்.

பட்டினியால் நுரையீரல், வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் சுருங்கலாம். இது மூளையை பாதித்து, மாயத்தோற்றம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

சிலர் நேரடியாக பட்டினியால் இறக்க நேரிடலாம்.

ஆனால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பால், சுவாசம் அல்லது செரிமான அமைப்புகளில் ஏற்படும் தொற்றுகள் போன்ற சிக்கல்களால் அடிக்கடி இறக்கின்றனர்.

பட்டினி ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது.

"நீங்கள் திடீரென்று கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக மாட்டீர்கள். இந்தக் குழந்தைகளுக்கு முன்பு தட்டம்மை, நிமோனியா, வயிற்றுப்போக்கு அல்லது அதுபோன்ற நோய்கள் இருந்திருக்கலாம்," என்கிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து துறையின் கௌரவ மூத்த ஆராய்ச்சி பேராசிரியர் சார்லோட் ரைட்.

மேலும், "முன்பு ஆரோக்கியமாக இருந்த, ஆனால் இப்போது பட்டினியால் வாடத் தொடங்கியுள்ள குழந்தைகளுக்கு, உணவு கிடைத்தால் அதை சாப்பிட்டு ஜீரணிக்கத் தேவையான ஆற்றல் இன்னும் இருக்கும். மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்"என்றும் பேராசிரியர் ரைட் விளக்குகிறார்.

நீண்ட கால விளைவுகள்

படக்குறிப்பு,பசியின் நீண்ட கால விளைவுகள்

ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

குழந்தைப் பருவத்தில் உணவுப் பற்றாக்குறையைச் சந்திப்பது, வாழ்நாள் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில், அறிவாற்றல் வளர்ச்சியில் (cognitive development) குறைபாடுகள் ஏற்படுவது மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய நிலை (stunting) ஆகியவை அடங்கும்.

உடல் வளர்ச்சி குன்றிய நிலை (Stunting) என்பது, மோசமான ஊட்டச்சத்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகள், மற்றும் போதிய உளவியல் மற்றும் சமூக தூண்டுதல் இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் குறைபாடாக உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுக்கிறது.

பொதுவாக, இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப எதிர்பார்க்கப்படும் உயரத்தை விட குறைவாக இருப்பார்கள்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கர்ப்ப காலத்தில் போதுமான அளவு உணவு கிடைக்காவிட்டால், இரத்த சோகை, ப்ரீ -எக்லாம்ப்சியா, ரத்தக்கசிவு, மரணம் போன்ற தீவிர சிக்கல்களை தாய்மார்களுக்கு ஏற்படுத்தலாம். அதேபோல், குழந்தைகள் இறந்து பிறப்பது, குறைவான எடையுடன் பிறப்பது, வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம் என்கிறது யுனிசெஃப்.

அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கத் தேவையான சத்தான பாலை உற்பத்தி செய்ய போராடலாம்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மெடிசின்ஸ் சன்ஸ் பிரான்டியர்ஸ் (Médecins Sans Frontières) அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் நுரதீன் அலிபாபா கூறுகையில், 'இதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது' என்கிறார் .

"வளர்ச்சிக் குறைபாடு என்பது மீள முடியாதது. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள காலத்தை கடந்த பிறகும், குறைந்த உயரத்தில்தான் இருப்பார்கள். இது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பெரும்பாலும் நிரந்தர கற்றல் குறைபாடும் இருக்கும், அது அவர்கள் பள்ளியில் சேரும் வரை தெளிவாக தெரியாது" என்று கூறிய மருத்துவர் அலிபாபா,

"ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது, இதனால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும்" என்றும் கூறுகிறார்.

"நிறைய மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிறுமிகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். அவர்கள் கருத்தரித்தால், இந்த பெண்கள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்."

ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு நிலை) இன்னொரு சிக்கலாக உருவாகலாம்.

"வயதான பிறகு எலும்புகள் மடிக்கக்கூடியதாக மாறுவதால், அவர்கள் தங்கள் உடல் எடையை சுமக்க முடியாமல் போகலாம். அதனால், ஒரு சிறிய நிகழ்வும் கூட எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும்," என்று மருத்துவர் அலிபாபா விளக்குகிறார்.

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் பாலத்தீனியர்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது

ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் ?

"இந்த நெருக்கடிக்கு பதிலளிக்க இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் தேவை. முதலாவது, காஸாவிற்கு அதிகளவிலான உணவு அனுப்பப்பட வேண்டும். இரண்டாவது, விலையுயர்ந்த சிகிச்சை உணவுகள் வழங்கப்பட வேண்டும்"என்று பேராசிரியர் ரைட் கூறினார்.

"குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வேகமாக உணவளிக்க வேண்டும்."

"தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தேர்வாகும். முதலில், தாய்க்கு உணவளிக்க வேண்டும், அதன்மூலம் அவர் குழந்தைக்கு உணவளிக்க முடியும். ஆனால், ஆண்களை விட , பெண்களிடம் உணவு சென்றடைவதை உறுதிசெய்வது தான் உண்மையான சவால் உணவு "

"முக்கியமான செய்தி என்னவெனில், குழந்தைகளும் தாய்மார்களும் முன்னுரிமை பெற வேண்டும், அவர்களுக்கு பெரிய அளவு உதவி தேவையில்லை."

'ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தரும். அதற்கான சிகிச்சை எப்போதும் நேரடியானதல்ல' என விளக்குகிறார் பிபிசி அரபு சுகாதார நிருபரும், மருத்துவராக பயிற்சி பெற்ற ஸ்மிதா முண்டாசாத்.

கடுமையான சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு விழுங்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைப்படலாம்.

"மேலும், நோய்த்தொற்றுகள் அல்லது பிற சிக்கல்களுக்கான சிகிச்சைகளும் தேவைப்படும்," என்றும் அவர் கூறினார்.

"சில சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு மிக விரைவாக அல்லது தவறான உணவை கொடுப்பது ஆபத்தானது.

"அதனால், பசிக்காக உணவை வழங்குவது மட்டும் போதாது. சரியான உணவையும் வழங்க வேண்டும். மேலும், இதை ஆதரிக்கக்கூடிய ஒரு செயல்பாட்டு சுகாதார அமைப்பும் இருக்க வேண்டும்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஸ்மிதா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdrkj8zep71o

ஒஸ்கார் விருதுபெற்ற திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூத குடியேற்றவாசியால் சுட்டுக்கொலை

3 days 23 hours ago

ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து

Published By: RAJEEBAN

29 JUL, 2025 | 10:41 AM

image

ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

no_other_land_22.jpg

ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினரும் யூத குடியேற்றவாசிகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களை விபரிக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இவர் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.

ஹெப்ரோனிற்கு அருகில் உள்ள உம் அல் கெய்ர் பாலஸ்தீனிய கிராமத்தின் மீது யூதகுடியேற்றவாசிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டார் என பாலஸ்தீன அதிகார சபையின் கல்வியமைச்சு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

நோ அதர் லாண்டினை உருவாக்கிய வேறு இருவரும் இதனை உறுதி செய்துள்ளனர்.

இன்றுகாலை எனது நண்பர் அவ்டா படுகொலை செய்ய்பட்டார் என பாலஸ்தீன பத்திரிகையாளர் பசெல் அட்ரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

Untitled-1.jpg

பாலஸ்தீனிய சமூக செயற்பாட்டாளரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலியர்

அவர் தனது கிராமத்தில் நின்றுகொண்டிருந்தவேளை யூத குடியேற்றவாசியொருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் அது அவரது உயிரை குடித்தது என அவர் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக என அவர் பதிவிட்டுள்ளார்.

ஹடாலின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வீடியோவையும் பதிவிட்டுள்ள அவர்.

https://www.virakesari.lk/article/221243

நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி.

4 days 7 hours ago

நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி.

ஒரு பொலிசாரும் இறந்துள்ளார்.

Five killed, including NYPD officer, in shooting at Park Ave. skyscraper housing Blackstone, NFL.

police officer and three other people were killed after a gunman opened fire Monday evening at a Midtown Manhattan office building that houses The Blackstone Group and NFL headquarters, police said.

Footage obtained by the Daily News shows a man carrying what appears to be an assault rifle entering 345 Park Ave. before reports of a shooting. (Obtained by Daily News)

The “lone shooter” was later “neutralized,” NYPD Commissioner Jessica Tisch said. Police sources said the man shot and killed himself.

Police sources identified the suspect as Shane Tamura, 27, of Las Vegas. Tamura was issued a concealed firearms permit by Las Vegas police in 2022.

The motive remained a mystery.

The shooting happened at 345 Park Ave. and 51st St. around 6:30 p.m., when police sources say a gunman entered the building with a rifle and started shooting, striking a cop and six civilians.

Fleeing office workers run from the scene of an active shooter situation in Midtown Manhattan on Monday, June 28, 2025. (Barry Williams/New York Daily News)

The police officer, who was off-duty and working as a security guard, was taken to Weill Cornell Medical Center, where he died, police said. At least three of the civilians who were shot have also died, police said.

The police officer, who was 36, was assigned to the 47th precinct in the Bronx, sources said. He has been a police officer since 2021. His name was not immediately released by authorities.

As of 7:52 p.m. NYPD Commissioner Jessica Tisch posted on social media that “the scene has been contained and the lone shooter has been neutralized.”

https://www.nydailynews.com/2025/07/28/nypd-officer-shot-near-park-ave-skyscraper-in-midtown-manhattan/


மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் இராணுவநடவடிக்கை நிறுத்தம் - இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

5 days 4 hours ago

27 JUL, 2025 | 11:50 AM

image

மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி, டெய்ர் அல் பலா, காசா நகரம் ஆகியபகுதிகளில் மறுஅறிவித்தல்வரும் வரை இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காசா பள்ளத்தாக்கில் மனிதாபிமான பொருட்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் ஐநாவினதும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளினதும் வாகனத்தொடரணி பயணிப்பதற்கான பாதுகாப்பான வழிகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/221055

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

5 days 4 hours ago

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

Published By: RAJEEBAN

28 JUL, 2025 | 10:38 AM

image

காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு  அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை தீவிரசிகிச்சை குழந்தைநோயியல் மருத்துவம் இருதயவியல் போன்றவற்றில் நீண்டகால அனுபவம்மிக்க மருத்துவ ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என தெரிவித்துள்ளது.

இவர்களில் 21 பேர் 400நாட்களிற்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்  என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு  ஜூலைமாதத்தின் பின்னர் மூன்று மருத்துவசுகாதார பணியாளர்களை இஸ்ரேல் கைதுசெய்துள்ளது என தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக இஸ்ரேல் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது.

பலசுகாதார மருத்துவ பணியாளர்கள் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பகுதிகளில் வைத்து இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவத் அல்செர் இவர்களை வெளியுலக தொடர்பின்றி பல மாதங்களாக தடுத்துவைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

gaza_doc_dece_24_24.jpg

அவர்களிற்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகளை இஸ்ரேல் மறுக்கின்றது,அவர்கள் மிகமோசமான விதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கபட்டுள்ள மருத்துவர்கள் மருத்துவசுகாதார பணியாளர்களை விடுதலை செய்யவேண்டு;ம் என இஸ்ரேல் வலியுறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்குவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள அதேவேளை காசாவில் மருத்துவ ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பசிபட்டினி ஊட்டச்சத்து குறைபாடு காயமடைந்தவர்களிற்கு மருத்துவகிசிச்சைவழங்க முடியாத அளவிற்கு அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது என மருத்துவர்கள் கார்டியனிடமும்,புலனாய்வு இதழியலிற்கான  அராபிய செய்தியாளர்கள் அமைப்பிடமும் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களை கார்டியன் வெளியிட்டிருந்தது.அவர்கள் தாங்கள்தாக்கப்பட்டதாக சித்திரவதை  செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இஸ்ரேலிய படையினரால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் காசாவின் வடபகுதியில் உள்ள கமால் அத்வான் மருத்துவனையின் இயக்குநர் மருத்துவர் ஹ_சாம் அபு சபியாவும் ஒருவர்.அவர் கடந்த டிசம்பரில் கைதுசெய்யப்பட்டார்.

அவர் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார், அவரது உடல்நிலை மோசமடைகின்றது என இந்த வாரம்  அவரது சட்டத்தரணிகள் ஸ்கைநியுசிற்கு தெரிவித்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/221129

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

5 days 4 hours ago

New-Project-330.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன.

இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து.

மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது.

ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இது ஆகஸ்ட் 1 முதல் செயல்படுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய 30% இறக்குமதி வரி விகிதத்தில் பாதியாகும்.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், சில பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத வரிகளுடன் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அதன் சந்தைகளைத் திறக்கும் என்றும் அவர் கூறினார்.

வான் டெர் லேயனும் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டியதுடன், இது இரு பங்காளிகளுக்கு இடையிலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறினார்.

ஏனெனில் அவை உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.

உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும், அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், வொஷிங்டனின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிராக ட்ரம்ப் வரிகளை விதித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து, அவர் இங்கிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் வரி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஸ்கொட்லாந்தன் தெற்கு அயர்ஷயரில் உள்ள டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்ப் மற்றும் வான் டெர் லேயன் இடையேயான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (27) ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் பின்னர் பேசிய ட்ரம்ப், அமெரிக்க இராணுவ உபகரணங்கள் உட்பட, வொஷிங்டனில் ஐரோப்பிய ஒன்றியம் தனது முதலீட்டை $600 பில்லியன் (£446 பில்லியன்) அதிகரிக்கும் என்றும், எரிசக்திக்காக $750 பில்லியன் செலவிடும் என்று கூறினார்.

அதேநேரம், அமெரிக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் அணு எரிபொருட்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் செய்யப்படும் அந்த முதலீடு, ரஷ்ய மின்சார ஆதாரங்களை ஐரோப்பியர்கள் நம்பியிருப்பதைக் குறைக்க உதவும் என்று வான் டெர் லேயன் கூறினார்.

https://athavannews.com/2025/1440840

காஸாவில் போர்க்குற்றம்: இஸ்ரேலை அதன் நட்பு நாடுகளே கைவிடுகின்றனவா?

5 days 16 hours ago

இஸ்ரேல் - பாலத்தீனம், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஜெர்மி போவன்

  • சர்வதேச ஆசிரியர்

  • 27 ஜூலை 2025, 04:07 GMT

    புதுப்பிக்கப்பட்டது 27 ஜூலை 2025, 05:31 GMT

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இஸ்ரேலில், அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலத்தீன பிரச்னை சமாளிக்கக் கூடிய ஒன்று தான் என்று நம்பினார். உண்மையான அச்சுறுத்தல் இரான் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

காஸாவிற்கு நிதி வழங்க கத்தாரை நெதன்யாகு அனுமதித்திருந்தாலும், ஹமாஸுக்கு எதிரான அவரது தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை. வெளியுறவுக் கொள்கையில் அவரது உண்மையான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுக்க இது அவருக்கு உதவியது. அதாவது, இரானை எதிர்கொள்வது மற்றும் சௌதி அரேபியாவுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது- இவையே அந்த சிக்கல்கள்.

அமெரிக்காவில், அப்போதைய அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் சௌதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது என நம்பினர்.

ஆனால், இது எல்லாம் தொடர்ச்சியான மாயைகள்.

நெதன்யாகுவும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் ராணுவமும் செய்த தவறுகள் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பேரழிவு தாக்குதலை நடத்த ஹமாஸ் அமைப்புக்கு உதவின. அந்த தோல்விகளை ஆராய ஒரு விசாரணைக் குழுவை அமைக்க நெதன்யாகு மறுத்துவிட்டார்.

ஜோர்டான் நதிக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடையிலான நிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நூற்றாண்டு காலமாக நீடித்த மோதல் தீர்க்கப்படாமல், மோசமடைந்து, 1948 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் நடந்தது போலவே ஒரு போராக வெடிக்கவிருந்தது.

2023, அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியம் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக போர் நடைபெற்று வரும் நிலையில், காஸாவில் மோதல் மற்றொரு திருப்புமுனை கட்டத்தில் உள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள்

இஸ்ரேல் - பாலத்தீனம், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2023, அக்டோபர் 7க்குப் பிறகு இஸ்ரேல் தொடர்ச்சியான போர்க்குற்றங்களைச் செய்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.

இந்தப் போரைப் பற்றி செய்தி வெளியிடுவது பத்திரிகையாளர்களுக்கு சவாலாகவே இருந்து வருகிறது.

2023, அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அதன் பின்னர் காஸாவிலிருந்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செய்தி வெளியிடுவதை இஸ்ரேல் தடை செய்துள்ளது.

பாலத்தீனப் பகுதிக்குள் இருந்த பாலத்தீன பத்திரிகையாளர்கள் துணிச்சலான பணிகளைச் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் முக்கிய உண்மைகள் தெளிவாக உள்ளன. 2023, அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் தொடர்ச்சியான போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், முக்கியமாக இஸ்ரேலிய பொதுமக்கள். ஹமாஸ் 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்றது, அவர்களில் காஸாவிற்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

அன்றிலிருந்து இஸ்ரேல் தொடர்ச்சியான போர்க்குற்றங்களைச் செய்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.

இஸ்ரேலின் பட்டியலில் காஸா பொதுமக்களின் பட்டினி, இஸ்ரேலியப் படைகள் ராணுவ நடவடிக்கைகளின் போது காஸா மக்களை பாதுகாக்கத் தவறியது, இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டது மற்றும் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ராணுவ அபாயத்திற்கு முழு நகரங்களையும் வேண்டுமென்றே அழித்தது ஆகியவை அடங்கும்.

போர்க் குற்றங்களுக்காக நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரன்டுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுகின்றனர்.

பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப் படுகொலை செய்வதாகக் குற்றம்சாட்டி சர்வதேச நீதிமன்றத்தில் தொடரும் ஒரு சட்ட ரீதியான செயல்பாடுகளை இஸ்ரேல் கண்டித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுக்கிறது. அவை யூத எதிர்ப்பு '‘அவதூறுகள்' என்று கூறுகிறது.

இஸ்ரேல் - பாலத்தீனம், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேலிய ராணுவம் திங்களன்று டெய்ர் அல்-பலாஹ் மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது, இதனால் மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இஸ்ரேலின் நட்பு நாடுகளின் விமர்சனம்

இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் நண்பர்கள் குறைந்து வருகின்றனர். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு அதனோடு அணி திரண்ட நட்பு நாடுகள், காஸாவில் இஸ்ரேலின் நடத்தையைக் கண்டு பொறுமை இழந்துவிட்டன.

இஸ்ரேலின் மிக முக்கியமான கூட்டாளியான டொனால்ட் டிரம்ப் கூட நெதன்யாகு விஷயத்தில் பொறுமை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவின் புதிய ஆட்சியை டிரம்ப் அங்கீகரித்து, ஊக்குவித்து வருகிறார் எனும் போது, டமாஸ்கஸ் மீது குண்டுவீச்சு நடத்த நெதன்யாகு உத்தரவிட்டது டிரம்புக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகள் சில மாதங்களுக்கு முன்பே பொறுமை இழந்து விட்டன.

இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்து, ஜூலை 21-ஆம் தேதி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றொரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

காஸாவில் பொதுமக்கள் படும் துன்பங்களை விவரிக்க அவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.

ஐ.நா மற்றும் முன்னணி உலகளாவிய நிவாரணக் குழுக்களால் பயன்படுத்தப்படும் நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான முறைகளுக்கு மாற்றாக, இஸ்ரேல் அறிமுகப்படுத்திய காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் தோல்வியுற்ற மற்றும் மோசமான மனிதாபிமான உதவி விநியோக முறை குறித்தும் அவர்கள் பேசினர்.

"காஸாவில் பொதுமக்களின் துன்பம் புதிய எல்லைகளை எட்டியுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இஸ்ரேலிய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவி விநியோக மாதிரி ஆபத்தானது, ஸ்திரமின்மையைத் தூண்டுகிறது மற்றும் காஸா மக்களின் கண்ணியத்தை இழக்கச் செய்கிறது. உதவிகளை சொட்டு மருந்து போல கொடுப்பதையும், தண்ணீர் மற்றும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயலும் குழந்தைகள் உள்பட பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொல்வதையும் நாங்கள் கண்டிக்கிறோம்."

"உதவியை நாடிவந்த 800க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பது கொடூரமானது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேலிய அரசாங்கம் மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இஸ்ரேல் அதன் கடமைகளுக்கு இணங்க வேண்டும்." என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலின் மிக முக்கியமான கூட்டாளியான டொனால்ட் டிரம்ப் கூட நெதன்யாகு விஷயத்தில் பொறுமை இழந்து வருவதாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளரான டேவிட் லாமி, வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பொது மன்றத்தில் இதே போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது சொந்த அறிக்கையுடன், கூட்டு அறிக்கையையும் தொடர்ந்து வாசித்தார்.

வலுவான வார்த்தைகளுக்குப் பதிலாக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பும் தொழிற்கட்சி எம்.பி.க்களுக்கு இது போதாது.

அரசாங்கம் இன்னும் தீர்க்கமாகச் செயல்படத் தயங்குவது குறித்து "சீற்றம்" இருப்பதாக ஒருவர் பிபிசியிடம் கூறினார். அவர்களின் இலக்குகளில் முதன்மையானது பாலத்தீன அரசை அங்கீகரிப்பது, இது ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டாக அவ்வாறு செய்வது குறித்து விவாதித்தன, ஆனால் இதுவரை அதற்கான காலம் வரவில்லை என்று அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.

போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு

இஸ்ரேலின் நெசெட் (Knesset) என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் கோடை விடுமுறைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன, அது அக்டோபர் வரை நீடிக்கும். அதாவது, காஸாவில் போர் நிறுத்தத்தை எதிர்க்கும் நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள தீவிர தேசியவாதிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எனும் அச்சுறுத்தலில் இருந்து அவருக்கு சற்று ஓய்வு கிடைக்கும்.

அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தீவிர தேசியவாதிகள் அச்சுறுத்தியதன் விளைவாகவே போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெதன்யாகு தயங்குகிறார். தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்தால், அக்டோபர் 7ஆம் தேதி அவர் செய்த தவறுகளுக்கு பதில் சொல்ல நேரிடும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் மீது நீண்ட காலமாக ஊழல் வழக்குகளின் விசாரணை முடிவையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு போர் நிறுத்தம் காஸாவின் பொதுமக்களுக்கும், நீண்ட காலமாக ஹமாஸின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கும் உயிர் வாழும் வாய்ப்பிற்கான சாத்தியமாகத் தெரிகிறது.

அதற்காகப் போர் முடிந்துவிடும் என்று அர்த்தமல்ல. அங்கே போர் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் படுகொலைகள் மூலமாக அல்லாமல், ராஜதந்திர வழிகள் மூலமாக பிரச்னைகளுக்கு தீர்வு காண மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjelexd77k1o

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்

5 days 16 hours ago

27 JUL, 2025 | 10:52 AM

image

அவசரமருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை பிரிட்டன் வான்வழியாக போடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் ஆகியொருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது இதனை தெரிவித்துள்ள அவர் அவசரகிசிச்சை தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவது மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் போடுவது போன்றவற்றை ஜோர்தானுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இஸ்ரேல் காசாவில் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலை பயங்கரமானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை பிரிட்டன் முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இடம்பெறும் விடயங்கள் குறித்து பிரிட்டிஸ் மக்கள் மனவேதனையில் உள்ளனர் என்பது எனக்கு தெரியும், காசாவில் காணப்படும் பட்டினிநிலையை காண்பிக்கும் படங்கள் மிகவும் பயங்கரமானவையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அவசரமாக மருத்துவஉதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றோம்,அதிகளவு பாலஸ்தீன சிறுவர்களை பிரிட்டனிற்கு விசேட சிகிச்சைக்காக கொண்டு செல்லவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221045

காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு

6 days 18 hours ago

காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு

காஸா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

கட்டுரை தகவல்

  • மையா டேவிஸ்

  • பிபிசி செய்திகள்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

காஸாவிற்குள் உதவிப் பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், 'உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஹமாஸே பொறுப்பு' என்று கூறுகிறது.

வரும் நாட்களில் வெளி நாடுகள் காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை வீச அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆனால் இந்த முறை, உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு திறனற்றது என்று உதவி நிறுவனங்கள் முன்பே எச்சரித்திருந்தன என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜோர்டானும் பொருட்களை வீசும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், தங்கள் ராணுவம் இன்னும் இஸ்ரேலிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று ஜோர்டானின் ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறியுள்ளார்.

காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் பல நாட்களாக உணவின்றி தவிக்கின்றனர் என்று எச்சரித்துள்ள ஐ.நா.

பட மூலாதாரம்,REUTERS

காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் வழங்கியுள்ள அனுமதியை, ''மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி'' என்று ஐ.நா விமர்சித்துள்ளது.

காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின.

"காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர்.

மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.

"பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய அவர், மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார்.

காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் பல நாட்களாக உணவின்றி தவிக்கின்றனர் என்று எச்சரித்துள்ள ஐ.நா.

பட மூலாதாரம்,EPA

2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் காஸா மனிதாபிமான அறக்கட்டளையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர், "கேள்விக்கு இடமின்றி... போர்க்குற்றங்களை நேரில் கண்டேன்" என பிபிசியிடம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

உணவு விநியோகம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் நேரடியாக வெடிமருந்துகள், பீரங்கி, மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி மூலம் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக அந்தோனி அகுய்லர் கூறினார்.

"என் பணிக்காலத்தில் எங்கும், பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையான, தேவையற்ற, மற்றும் கண்மூடித்தனமான வன்முறையை நான் பார்த்ததில்லை. ஆனால் காஸாவில், ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றியபோதுதான், இதுபோன்ற கொடூரத்தை நேரில் அனுபவிக்க நேரிட்டது" என்று ஓய்வுபெற்ற அந்த வீரர் கூறினார்.

"ஒரு மாதத்திற்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்த வீரரரிடம் இருந்து வந்த கூற்றுகள்" எனக் கூறி, "அவை முற்றிலும் தவறானவை" என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை அவரது கருத்தை மறுத்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை கத்தாரில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு, புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

ஹமாஸ் "உண்மையில் ஒப்பந்தம் செய்வதை விரும்பவில்லை" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்," என்றும் கூறினார்.

அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களைக் குறித்து ஹமாஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிந்து போய்விடவில்லை என்று மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு தோஹாவுக்குத் திரும்புவார்கள் என ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் காஸா நிருபரிடம் தெரிவித்தார்.

2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் காஸாவில் 59,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் காஸாவில் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை, இஸ்ரேல் முற்றிலுமாகத் தடுத்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி, இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டது.

மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியது.

பஞ்சம் ஏற்படப் போவதாக, உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது.

காஸாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 90% க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவோ, அல்லது அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் வியாழன்று அறிவித்தது. இந்த முடிவு இஸ்ரேலையும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவையும் கோபப்படுத்தியது.

அடுத்த நாள், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதி, பிரிட்டனும் பிரான்சை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை ஸ்டார்மர் உணர்த்தியுள்ளார். இது "இஸ்ரேலுடன் பாலத்தீன நாட்டை உருவாக்கும் இரு நாடு தீர்வின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v3xpl227zo

AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்!

1 week ago

sam-altman-openai-actu.jpg?resize=750%2C

AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்!

தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி  வருகிறது .

இந்நிலையில்” இனி வரும் காலங்களில்  (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என  Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு  அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை  விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1440629

Checked
Sat, 08/02/2025 - 08:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe