புதிய பதிவுகள்2

மதியிறுக்கம்(ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர்

1 month 2 weeks ago
மதியிறுக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர் 08 Jan, 2026 | 04:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மதியிறுக்கம் (ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்குவற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட மட்டத்தில் விசேட செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற நோய்களால் அவதியுறும் பிள்ளைகளை முன்கூட்டியே இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிக்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தில் 16 வைத்தியசாலைகள், தெற்கு மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், சப்ரகமுவ மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமேல் மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமத்திய மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், மத்திய மாகாணத்தில் 09 வைத்தியசாலைகள், ஊவா மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், கிழக்கு மாகாணத்தில் 03 வைத்தியசாலைகள், வடக்கு மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள் என்ற அடிப்படையில் 55 வைத்தியசாலைகளில் குழந்தை மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள். இவ்வாறான வைத்தியசாலைகளில் ஆட்டிஸம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்குதம் கிளினிக்குகள் இயங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 20 ஆக காணப்படுகிறது. இந்த வைத்தியசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு 2025 ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மேலதிகமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நோயால் அவதியுறும் பிள்ளைகளை பாதுகாக்க விசேட பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/235528

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

1 month 2 weeks ago
அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

1 month 2 weeks ago
ராஜதந்திரம் இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம். டிட்வா புயலில் இலங்கையிடம் 3 ஹெலி மட்டும் இருந்தாதால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதை அறிந்துள்ள இலங்கை மக்கள்- இந்த 10 ஹெலியின் பின் அமெரிக்கா மீது கொஞ்சம் நல்லெண்ணம் அடைவர். திருத்தம், உதிரிபாகம் என அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து இலஙகையிடம் பணம் பார்க்கும். தொடர்ந்தும் இலங்கை விமானிகள் பயிற்ச்சிக்கென அமெரிக்கா போவார்கள், அவர்கள் வருவார்கள். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் அதிகார வர்க்கத்கை கையில் வைத்திருக்கலாம். தம்பரின் அதிரடி ராஜதந்திரத்துக்கு நேர் எதிரானது ஜூலியின் அணுகுமுறை. ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX முழுப்பெயர் போட்டுள்ளேன். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும். @goshan_che @valavan @நிழலி @இணையவன் @மோகன் அண்ணாக்கள் கவனத்திற்கு.

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

1 month 2 weeks ago
அண்ணை, வெனிசுலா சம்பவத்தின் பின் கிரீன்லாண்ட் கைப்பற்றப்பட்டால் இலங்கையையும் அமெரிக்கா பிடிக்காதோ என தம்பி ஒருத்தன் கேக்கிறான்! போறபோக்கை பார்த்தால் நடந்தாலும் நடக்குமோ?!

இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு

1 month 2 weeks ago
இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு Jan 8, 2026 - 06:54 PM கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk5hawq803p0o29nfh0w5ihk

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
கு சா அண்ணை, ஒரு சின்ன தெளிவுபடுதலை வேண்டி நிற்கிறேன். நீங்கள் தனிமனிதனாக செய்யும் பங்களிப்புக்கு அப்பால் - முன்னோடிக்கான நிதி சேகரிப்பாளராகவும் நீங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறீர்கள் தானே? மற்றைய திரியில் எமது முதலாவது சம்பாசணையில் இதை சொன்னதன் பின் வேறு இடங்களில் இதை நாம் கதைக்கவில்லை என நினைக்கிறேன். இந்த முயற்சியில் மிக கடினமான பணிகளில் இது முதன்மையானது. அடுத்த கட்டத்துகு நகரும் போது, நாம் தனிநபர்களோ அல்லது யாழ் கள உறவுகளோ சேர்ந்து மட்டும் தேவைப்படும் தொகையை சேர்ப்பது கடினம். யாழுக்கு வெளியே இருந்தும் நிதி உதவிகள் வந்து சேரல் அவசியமாகும். திட்டம் தடையின்றி முன்செல்ல இந்த தெளிவு அவசியமாவதால் கேட்கிறேன். பிழை ஏதும் இருப்பின் மன்னித்தருள்க.

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

1 month 2 weeks ago
10 கெலி பத்தாது அண்ணை! கூட எதிர்பார்க்கிறோம்! பெரிய ஐயாட்ட நீங்க தான் எடுத்து சொல்லவேணும். அடுத்த அமுக்கமோ புயலோ வருதாம்.

எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்

1 month 2 weeks ago
அவன் கழண்ட காற்சட்டைய விட்டிட்டு ஓடினா! இவன் ஏன் அவுத்துப்போட்டு ஓடுறான்! பாலகர்களின் விளையாட்டு. பட்டத்தோட பறக்கிறதே இவங்களுக்கு பொழுதுபோக்கோ?! சுவியண்ணை 2 ஆம் திகதிக்கு பிறகு சிலமனைக் காணவில்லை. அண்ணை ஓடியாங்கோ.
Checked
Mon, 02/23/2026 - 19:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed