புதிய பதிவுகள்2

தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்

1 month 2 weeks ago
https://www.facebook.com/reel/1291652396316203 அண்ணை, இந்தக் 👆காணொளியில் குறிப்பிடும் சம்பவத்திற்கும் செய்தியில் கூறப்படும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமோ?!

காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண்

1 month 2 weeks ago
காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கால் நூற்றாண்டிற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் நடந்தபோது பள்ளி மாணவராக இருந்த அவரது மகன் இப்போது வழக்கறிஞர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டுமென தாயும் மகனும் இன்னமும் விரும்புகின்றனர். 27 ஆண்டுகளைத் தாண்டித் தொடரும் ஒரு போராட்டத்தின் கதை இது. Play video, "போலீஸ் காவலில் உயிரிழந்த கணவர் - 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் தாயும் மகனும்", கால அளவு 10,36 10:36 காணொளிக் குறிப்பு, கணவரை தேடி வந்து மனைவியை கொண்டு சென்ற போலீஸ் மதுரை நகரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருக்கும் உசிலம்பட்டியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது அந்த கிராமம். அங்கிருக்கும் குறுகிய தெரு ஒன்றில் உள்ள வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அவருடைய மெல்லிய தோற்றத்தைப் பார்த்தால், 27 ஆண்டுகளாகப் போராடும் ஒரு நபரைப் போலத் தெரியாது. ஆனால், அவர் பேசத் தொடங்கும்போது அவரது குரலில் தொனிக்கும் உறுதி அந்தச் சந்தேகத்தை உடைத்துவிடும். அது 1998ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 27ஆம் தேதி. காலை ஏழு மணி. தனது வயல்காட்டில் இந்தப் பெண்மணியும் வேறு சில பெண்களுமாக சுமார் பத்து பேர் சேர்ந்து பருத்தி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவலர்கள், அங்கே வந்தனர். அந்தப் பெண்மணியை நெருங்கிய காவலர்கள், அவரது கணவரைப் பற்றிக் கேட்டனர். அவர் வெளியே சென்றிருப்பதாக அந்தப் பெண் சொல்லவே, ஒரு திருட்டு வழக்கைப் பற்றி விசாரிக்க வேண்டுமெனக் கூறி முதலில் அவரை உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு அங்கிருந்து மதுரை நகருக்கு அருகிலுள்ள ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் காலை ஆறு மணிவரை அந்தப் பெண் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அன்று காலை 11 மணியளவில் அவரது கணவரும் சில காவலர்களால் ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதற்குப் பிறகு இருவருக்கும் சித்ரவதைகள் துவங்கின என்கிறார் அந்தப் பெண்மணி. அடுத்த கால் நூற்றாண்டுக்கும் மேல் நீளவிருக்கும் ஒரு நீண்ட போராட்டத்தின் துவக்கமாக அந்த சித்ரவதைகள் அமைந்தன. அந்தக் கொடூரமான காலகட்டத்தை பிபிசியிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணீருடன் நினைவுகூர ஆரம்பித்தார் அந்தப் பெண்மணி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வயல்காட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது தனது கணவரைத் தேடி வந்த காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் அந்தப் பெண்மணி (சித்தரிப்புப் படம்) காவல் நிலையத்தில் நடந்த கொடூர சித்ரவதைகள் "ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எங்கள் இருவரையும் அடித்து நொறுக்கினர். நண்பகல் 12 மணியளவில் மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் இருந்து வந்த சில காவலர்கள் என் கணவரை மட்டும் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கேயும் தாக்குதல் தொடர்ந்தது. அன்று மாலை ஆறு மணியளவில் கணவரை ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கே அழைத்து வந்த காவலர்கள், அவரை மீண்டும் தாக்கினார்கள்" என்கிறார் அந்தப் பெண்மணி. ஜூலை 29ஆம் தேதியன்றும் தாக்குதல் தொடர்ந்தது. 30ஆம் தேதியன்று கணவரை மட்டும் ஒரு வண்டியில் ஏற்றி எம். கல்லுப்பட்டிக்குக் கொண்டு போன காவலர்கள் அங்கிருந்த ஒரு நகைக்கடையில், பத்து பவுன் நகையை விற்றதாக ஒப்புக்கொள்ளச் சொன்னதாகவும் கணவர் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார் அப்பெண். இதற்குப் பிறகு ஆகஸ்ட் 2ஆம் தேதி உசிலம்பட்டி டிஎஸ்பியிடம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களது நிலை மிக மோசமாக இருந்ததால், இருவரையும் பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து உசிலம்பட்டியிலேயே இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி கணவர் இறந்துவிட்டார். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட உசிலம்பட்டி மக்கள் போராட்டத்தில் இறங்க, கணவருடன் சேர்ந்து கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண்மணி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடற்கூராய்வும் ஆர்.டி.ஓ விசாரணையும் இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியான ஒரு சிறிய செய்தியைப் பார்த்து, மதுரையில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அரசு மருத்துவமனைக்கு வந்து அந்தப் பெண்மணியிடம் பேசியது. அதற்குப் பிறகு அவர், அரசு மருத்துவமனையில் இருந்து மதுரையில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆகஸ்ட் 12ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இறந்துபோன கணவரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர் ராதாகிருஷ்ணன், அடிபட்ட காயங்களால்தான் அவர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டார் என்கிறார் அப்பெண். ஆர்.டி.ஓ-வும் தனது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். இதற்குப் பிறகு, அரசு அறிவுறுத்தலின் பேரில் உசிலம்பட்டி நீதிமன்ற நடுவரிடம் 1999 செப்டம்பரில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முடிவால் நிலைகுலைந்த தாயும் மகனும் காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதையை நேற்று நடந்ததைப் போல இப்போதும் நினைவுகூர்கிறார் அந்தப் பெண். "தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார்கள். தண்ணீர் கேட்டால் தரமாட்டார்கள். என் கணவர் நிர்வாணமாகத்தான் கிடந்தார். அங்கே வந்தவர்கள், போனவர்கள் எல்லோருமே பார்த்தார்கள். யாரும் மீட்கவில்லை. நான்கு சுவற்றுக்கு இடையில் எந்தக் கடவுளைக் கூப்பிடுவது?" "வருகிறவர்கள், போகிறவர்களெல்லாம் அடிப்பார்கள். எனக்குக் கை ஒடிந்தது. பின்பக்கம் முழுவதும் காயமாக இருந்ததால் எப்போதும் குப்புறவேதான் படுப்போம். கருப்பாயூரணி காவல் நிலையத்தில் இரண்டு பேரையும் விடிய விடிய கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்." "நான் பெரிய ஆஸ்பத்திரியில் (அரசு மருத்துவமனையில்) இருக்கும்போது பலர் எங்களை அணுகி ஏழு லட்சம் தருகிறோம், பத்து லட்சம் தருகிறோம் என்று கூறி, வழக்கை திரும்பப் பெறச் சொன்னார்கள். காசே எங்களுக்கு வேண்டாம். ஏழு நாட்களாக எங்களை ஏன் அடித்தீர்கள், அவரை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டேன். இனி தமிழ்நாட்டில் இப்படி நடக்கக்கூடாது. என்னையும்கூட அடித்துக் கொல்லுங்கள் பணத்தை வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்" என்கிறார் அவர். படக்குறிப்பு,இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. இறுதியாக 2012ஆம் ஆண்டில்தான் விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியது. ஆனால், இந்த வழக்கில் விசாரணை துவங்குவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. ஒரு வழியாக 2012ஆம் ஆண்டின் துவக்கத்தில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இதில் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், வழக்கு முடிவதற்குள் பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பைக் கடுமையாக மறுத்தனர். அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 9 பேரையும் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொல்லப்பட்டவரின் மனைவியின் சாட்சியத்தைத் தவிர, நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லை என்றும் அவரது சாட்சியத்தை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவும் கூறி 2016 செப்டம்பரில் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. இது அந்தப் பெண்மணியை நொறுங்கச் செய்தது. அவர் மட்டுமல்ல, அவரது மகனும் துவண்டுபோனார். தனது தந்தையைக் கொன்று, தாயை சித்ரவதை செய்தவர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே சட்டம் படித்திருந்தார் அந்த மகன். அந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு வழக்கு நடந்த காலகட்டம் நெடுக உதவியாகச் செயல்பட்டார். இந்த நிலையில் வழக்கின் முடிவு அவர்களை நிலைகுலையச் செய்தது. படக்குறிப்பு,ஊமச்சிகுளம் காவல் நிலையம் சட்டம் படிக்கக் காரணமான தந்தையின் மரணம் இந்தச் சம்பவம் நடந்த தருணத்தில், அதாவது 1998இல் அந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களில் மூத்த மகன் 14 வயது சிறுவனாக இருந்தார். அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். தனது தந்தையின் நிலைக்குக் காரணமானவர்களை ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆத்திரம் அவருக்கு இருந்தது. "என் தந்தையைக் கொன்றவர்களை ஏதாவது செய்ய வேண்டுமென கிராமத்து பாணியிலான கோபத்தில் இருந்தேன். அப்போதுதான் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் போன்றவர்கள், 'நீ நன்றாகப் படித்து இதுபோல பாதிக்கப்படும் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்' என்றார்கள். எனக்கு அந்த நேரத்தில் அதைப் பற்றிய புரிதல் ஏதும் இல்லை. என் அப்பாவையும் அம்மாவையும் கொடூரமாகச் சித்ரவதை செய்திருக்கிறார்கள். அது தொடர்பானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற கோபம் மட்டும் மனதில் இருந்தது. ஆனால், ஹென்றியும் அவருடன் இருந்தவர்களும் எனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்தனர். நீ சட்டம் படித்து, இதுபோல பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்கள்" என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் அவர். இந்த விவகாரம் நடக்கும்போது அவர் பள்ளி மாணவராக இருந்தார். ஆனால், வழக்கின் விசாரணை முழுமையாகத் துவங்கியபோது அவர் தனது சட்டப் படிப்பையே முடித்திருந்தார். 2008இல் அவர் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு, திருச்சி சட்டக் கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். தமது பெற்றோர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கிற்காக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அரசு வழக்கறிஞரிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். வழக்கின் விசாரணை நடக்கும் நாட்களில் சாட்சிகளை பத்திரமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது போன்ற பணிகளை அவர் பார்த்துக்கொண்டார். "அடுத்த நாள் சாட்சியமளிக்க வேண்டுமென்றால், முதல் நாள் இரவே அவர்கள் (சாட்சிகளின்) வீட்டிற்குச் சென்று, அவர்கள் வீட்டிலேயே தங்குவேன். அவர்களைக் கையோடு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன். அதேபோல, அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று, என் தந்தையின் உடற்கூராய்வு அறிக்கையை வாங்குவது, அங்கு பதிவான அறிக்கைகளை வாங்கி, அரசு வழக்கறிஞருக்குத் தருவது போன்ற உதவிகளைச் செய்தேன்" என பிபிசியிடம் அந்த நாட்களை நினைவுகூர்ந்தார் அந்த இளைஞர். 'போராடிக்கொண்டே இருப்பேன்' இந்த வழக்கில் நீதிமன்றத்தில் கிடைத்த தொடர் தோல்விகளுக்குப் பிறகும் இந்த வழக்கை அப்படியே விட்டுவிட அவர்கள் விரும்பவில்லை. "இந்த வழக்கில் காவல்துறையின் சித்ரவதை இல்லை என்று தீர்ப்பு ஏதும் வரவில்லை. சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதால்தான் ஒன்பது பேரும் விடுதலையாகி இருக்கிறார்களே தவிர 'அவர்கள் சித்ரவதை செய்யவில்லை, அந்தச் சித்ரவதையால் மரணம் ஏற்படவில்லை' என்று நீதிமன்றம் சொல்லவில்லை. உடற்கூராய்வு அறிக்கையும், ஆரம்பக் கால சாட்சியங்களும் சித்ரவதையை உறுதிசெய்திருக்கின்றன. சித்ரவதை நடந்தது என்பதை விசாரணை நீதிமன்றத்தில் முதல் முதலில் சாட்சி சொல்லும்போது அங்கிருந்த சக கைதிகள் வலுவாகச் சொன்னார்கள்." என்கிறார் கொல்லப்பட்டவரின் மகன். "ஆனால், குறுக்கு விசாரணையில் அவர்கள் அதை மாற்றிச் சொன்னார்கள். நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்பதால்தான் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது. என் தாய்க்கும் தந்தைக்கும் சித்ரவதை நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம்" என்கிறார் அவர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டப் போராட்டம் என்பது மிக நீண்டது என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். ஆனால், தாயும் மகனும் இந்தப் போராட்டத்தை இப்போதைக்கு விடுவதாக இல்லை. "நாங்கள் யார் சொத்துக்கும் ஆசைப்படவில்லை. நேர்மையாக உழைத்தோம். வண்டி மாடு ஓட்டுவோம். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தோம். இதேபோலத்தானே மனிதர்கள் எல்லோரும் கஷ்டப்படுவார்கள்?" "நான் இவர்கள் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு கரையேறிவிடலாம். ஆனால், நம்மைப் போன்ற அப்பிராணிகளைக் கொல்லக்கூடாது. இதுக்கு நீதி கிடைக்கனும். எனக்கு அந்த நீதி இதுவரை கிடைக்கவில்லை. 27 வருடங்களாகக் கிடைக்கவில்லை. இன்னமும் போராடுகிறேன். போராடிக்கிட்டே இருப்பேன்" என்கிறார் அந்தப் பெண். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjerpg1mvo

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 முதல் – ஜனாதிபதி

1 month 2 weeks ago
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்! 08 Jan, 2026 | 03:01 PM ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய, சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதீகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.virakesari.lk/article/235515

காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்!

1 month 2 weeks ago
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி ஒருவர் பரப்பிய ஒரு படத்தைக் கூடச் சரி பார்க்காமல் அப்படியே இணையத்தில் இருந்து உருவிப் போட்டிருக்கிறது குளோபல் "ரொய்லெற்" ஊடகம்😂! பின்னணி: சிலியா மதுரோவின் முகத்தில் உராய்வுக் காயங்கள் (bruises) இருந்து உண்மை. கைதின் போது அவை ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் போலிப் படத்தில் இருப்பது போல அடி காயங்கள் இருக்கவில்லை. அவர் இவ்வாறு கோர்ட் சூட் அணிந்து நியூயோர்க் நீதிமன்றில் ஆஜராகவும் இல்லை! LatestLYDid Cilia Flores, Wife of Venezuela Leader Nicolas Maduro...A viral photo of Cilia Flores, the wife of Venezuela leader Nicolas Maduro, appearing in the New York court with bruises around her eye and a bandage on her forehead has surfaced on social media, spar

இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்

1 month 2 weeks ago
இன்று மாலை 5.05 மணியளவில் உடுதும்பர பகுதியில் 2.2 ரிக்டர் அளவுகோலில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.. Rj.Chandru Report

“விஜய்யை எதிர்கொண்டு நிரூபியுங்கள்!” - ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் மோடிக்கு தமிழக காங்கிரஸ் சவால்

1 month 2 weeks ago
சென்னை: “நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு கூற்றை நிரூபியுங்கள்” என பிரதமர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை குறி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்யின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம். பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும், தணிக்கை வாரியத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தவெகவுடன் தமிழக காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் சூழலில், ‘ஜனநாயகன்’ தணிக்கை பிரச்சினையில் தமிழக் காங்கிரஸ் கட்சியினர் விஜய்க்கு அழுத்தமாக குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது. “விஜய்யை எதிர்கொண்டு நிரூபியுங்கள்!” - ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் மோடிக்கு தமிழக காங்கிரஸ் சவால்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா

1 month 2 weeks ago
07 Jan, 2026 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையேல் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில் பேசும் அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தகாத மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார். முறைப்பாட்டை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை கேவலமாக பேசினார். பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார். இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது . இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். தொடர்ந்தும் இவர் தனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூற முடியாது. இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர்.இதனால் அந்தக் குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா | Virakesari.lk

கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு துப்புரவு

1 month 2 weeks ago
நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! 08 Jan, 2026 | 03:13 PM நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துப்புரவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன. பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பூசகமான முறையில் இராணுவத்தினருடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் அத்திவாரம் வெட்டியது. அம் முயற்சி பௌத்த சிங்கள பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியென குற்றஞ்சாட்டப்பட்டது. அந்நிலையில், அப்போதும் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஷ் அவற்றை தடுத்திருந்தார். இதனையடுத்து அவர் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு இடையூறு விளைவித்தாகத் குற்றச்சாட்டில் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழக்கினை எதிர்கொண்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ் வழக்குகள் பின்னர் சட்டா அதிபரின் ஆலோசனைக்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்நுழைபவர்களுக்கான கட்டண அறவீடு தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினால் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான காரணங்களினால் சபை பதவியிழந்த பின்பு பிரதேச சபையினால் குறித்த பகுதியில் செயற்பட முடியவில்லை. அதனால் அப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளினாலும் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் காட்டமான கண்டனங்கள் அண்மைய நாட்களாக வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான அ.கமலறேகன், பணியாளர்கள், பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியை நேற்று புதன்கிழமை (7) துப்புரவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சபையின் சொத்தாக உடைவடைந்த நிலையில் உள்ள இருக்கைகள், நுழைவாயில் கதவு போன்றன திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. பெயர்ப் பலகையிடப்பட்டுள்ளதுடன் பொலித்தீன் தடை மற்றும் சுத்தத்தினைப் பேணுவதற்கான விளம்பர பலகைகளும் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ளன. நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! | Virakesari.lk

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

1 month 2 weeks ago
08 Jan, 2026 | 04:58 PM அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது. இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்! | Virakesari.lk

சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து

1 month 2 weeks ago
08 Jan, 2026 | 04:17 PM இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி இருவரும் சீதையம்மன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில் நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது. இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டீரந்த நிலையில் காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தறை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் ஆகாயப்படை தரப்பினர் வழங்க மறுத்தமை காரணமாக இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது. இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்து ஏ.வி.குருமூர்த்தி இந்த பூஜை வழிபாடுகளில் பங்கு பற்றியதுடன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உட்சவ மூர்த்தி திருவுருவச் சிலையும் மற்றும் இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீரும் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கொழும்பு இந்திய தூதவராலயத்தின் அதிகாரி ஏ.வி.குருமூர்த்தனால் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன். இந்திய இராணுவத்தளபதியின் வருகை காலநிலை காரணமாக சாத்தியப்படாமல் போய்விட்டது.ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தோம். அதேபோன்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் விசேட பேரிடரின் பின்பு இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக இலங்கைக்கு வருகை தந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளை மீள கட்டியெழுப்புவதற்கும் மேலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டமைக்கும் உயிரிழந்தவர்களை கண்டு பிடிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்து செய்த சேவைக்காகவும் யஎங்களுடைய நாட்டின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்களுடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும்.விசேடமாக பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இரயில்வே பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலமாக எங்களுடைய உல்லாச பயணத்துறை வளர்ச்சியடைவதன் மூலமாக எங்களுடைய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பு முடியும் எனவும் குறிப்பிட்டார். ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னத்தை இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்தனர். சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து | Virakesari.lk

இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்

1 month 2 weeks ago
08 Jan, 2026 | 06:21 PM வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வியாழக்கிழமை (8) மாலை 5.30 மணி எதிர்வுகூறியுள்ளதன்படி, வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு, வடமேற்கு, திசை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது. நகர்வு 1. ஏற்கனவே இருந்தது போன்று இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து பின் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் எதிர்வரும் 10.01.2026 அன்று மாலை மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் பிரவேசித்தல். நகர்வு 2. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கும் அம்பாந்தோட்டைக்கும் இடையில் நிலப்பகுதிக்குள் எதிர்வரும் 09.01.2026 அன்று இரவு அல்லது 10.01.2026 அன்று அதிகாலை பிரவேசித்தல். நகர்வு 1இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் நான் முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 12.01.2026 வரை மிக மிக கனமழையைப் பெறும் (04 நாள் திரட்டிய மழை வீழ்ச்சி 600 மில்லிமீட்டரை விட அதிகம்). நகர்வு 2இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் கனமான (200 மி.மீ. திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும்). ஆனால் கிழக்கு மாகாணம் எதிர்வரும் 13.01.2026 வரை ( 05 நாட்கள்) 350 மி.மீ.இனை விட கூடுதலான திரட்டிய மழைவீழ்ச்சியைப் பெறும். நகர்வு 2இன் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் மத்திய மாகாணம் ஊவா மாகாணம் என்பன 300 மி.மீ. இனை விட கூடுதலாக திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும். ஆனால் நகர்வு 1ஐ விட நகர்வு 2 இலங்கைக்கு குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய சப்ரகமுவா, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மீளவும் பாதிப்பை ஏற்படுத்தும். நகர்வு 2இன் மையப் பகுதியாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அமையும் என்பதனால் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களில் நிலச்சரிவு நிகழவுகளுக்கான அதிகூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், இந்த நிகழ்வின் நகர்வு பற்றிய இறுதி முடிவை நாளை (09.01.2026) காலையே தீர்மானிக்க முடியும். நகர்வு 2 உறுதியானால் மீளவும் மலையகத்தின் பல பகுதிகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும். ஆகவே இது தொடர்பாக மிக மிக முன்னெச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும் என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள் | Virakesari.lk

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

1 month 2 weeks ago
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பிமல் ரத்நாயக்க. 08 Jan, 2026 | 04:55 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு,பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய முன்னுரிமை வழங்கப்படும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அடுத்த பாராளுமன்ற அமர்வு வார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் இந்த வாரத்தில் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) எதிர்க்கட்சி பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தால் அதனை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டும். இதனாலும் அதேபோன்று நீங்கள் இப்போது நம்பிக்கையில்லா பிரேரரணையொன்றுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி அதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது. இதனால் இந்த நேரத்தில் இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வு நடவடிக்கை தொடர்பான குழுக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமையாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் இந்த கூட்டம் நடத்தப்படும். ஆனால் நான் குறிப்பிட்ட காரணங்களால் இந்த வாரத்தில் குறித்த கூட்டம் நடத்தப்படாது. எவ்வாறாயினும் அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்குத் தயாராவதற்கு உறுப்பினர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில், பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என்றார். கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 2 weeks ago
அண்மையில் சுரேஸ் பிரேமசந்திரன் வழங்கிய ஒரு செவ்வியில் “இறுதி யுத்தத்திற்கும் இந்தியாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். தமிழர்களுக்கு சேவை செய்ய என்று இன்னமும் முன்னணியில் நிற்கும் இவர்களை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது. இறுதியில் அமெரிக்காவின் பங்கும் கூடுதலாக இருந்தது.

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

1 month 2 weeks ago
யார் கொடுத்த சாபமோ வட இந்தியர்கள் போற உலக நாடெல்லாம் வாங்கி கட்டுகிறார்கள் .

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
ஏராளன் நிதியை கையாளும் விதம் மிகவும் சிறந்த முறை ஒரு உதவித்தட்டம் செயற்படுத்தும் வேளை அந்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டைக் கண்காணித்து அந்த பிரதேசத்தின் பணிமனை யில் இருக்கும் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தரின் அறிவுறுத்தலின்படியே நிதி ஏராளனால் விடுவிக்கப்படும் . இப்படியாக நிதி விடுவிக்கப்படும் நேரத்தில் பயனாளர் பக்கமும் உதவி செய்யும் எங்கள் பக்கமும் நிதியைக் கையாளும் ஏராளன் பக்கமும் உண்மைத் தன்மையும் வெளிப்படையான நிதி பரிமாற்றமும் தெரியவரும் சிறப்பான வழிமுறை ஆகவே இதற்கு இன்னுமொரு நிதிப் பொறுப்பாளர் தேவை இல்லை என்பது எனது கணிப்பு . முன்னோடி அடிப்படை வசதித் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் மொத்த நிதியும் சேரும் வரை காத்திருக்காமல் ஒருவருடைய தேவையை நிறைவேற்றத் தேவையான நிதி கிடைத்தவுடன் ஆரம்பித்து வைக்கலாம் என்பது எனது கணிப்பு 1.குமாரசாமி அண்ணா உதவி செய்யும் திட்டம் அது எதுவென அவர் விரும்பினால் இங்கே தெரியப்படுத்தலாம் 2.பொன்னாலை திட்டம் 3.சுழிபுரம் அல்லது காரைநகரில் ஒருவருடைய தேயைப் பூர்த்தி செய்தல் 4. இன்னுமொருவருடைய தேவையை பூர்த்தி செய்தல் இப்படி மாறி மாறி தேவையின் அடிப்படையில் வேலைகளைத் தொடங்கி இலகுவாகவும் விரைவாகவும் இந்தத் திட்டத்தை செய்து முடிக்கலாம்

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்காவில் உள்ள் மத்திய வங்கி ஏனைய நாடுகளில் உள்ளதை விட மிகவும் வேறுபட்டது. அது ஒரு ஒற்றை அமைப்பு அல்ல. அதில் தனியார் ஆதிக்கம் அதிகம்.
Checked
Mon, 02/23/2026 - 19:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed