புதிய பதிவுகள்2

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 முதல் – ஜனாதிபதி

1 month 2 weeks ago
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 முதல் – ஜனாதிபதி Published By: Vishnu 08 Jan, 2026 | 01:58 AM அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் புதன்கிழமை (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. துல்லியமான தரவுகள் மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. வங்கிகளுடன் கலந்தாலோசித்து அந்தக் கடனைப் பெறுவது குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்வதற்கான ஒரு பொறிமுறையின் அவசியத்தையும், அதன் நன்மைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், இது தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செயற்திறனுடன் செலவிட வேண்டியதன் அவசியத்தையும், இல்லையெனில் உரிய காலப்பகுதிக்குள் எதிர்பார்க்கும் அபிவிருத்தி நோக்கங்களை அடைய முடியாது போகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகையில் முன்பிருந்த நிலையை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235482

ஆரோக்கியமான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒரு பிள்ளையை வளர்ப்பதே எமது தேசிய இலக்காகும் - சரோஜா சாவித்ரி போல்ராஜ்

1 month 2 weeks ago
ஆரோக்கியமான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒரு பிள்ளையை வளர்ப்பதே எமது தேசிய இலக்காகும் - சரோஜா சாவித்ரி போல்ராஜ் Published By: Vishnu 08 Jan, 2026 | 01:53 AM “தேசிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட ஒரு சட்டகத்தின் வழிகாட்டலில், இலங்கையிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தை (Early Childhood Development programme) நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.” முன்பிள்ளைப்பருவ சிறுவர்களிடையே சமூக மற்றும் நடத்தை ரீதியான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறுவர் சுகாதார மேம்பாட்டுத் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, புதன்கிழமை (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இத்திட்டம் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தலைமையின் கீழ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட 12 அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இது முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், ஜனவரி 10ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்பாடுசார் கற்றல் அணுகுமுறை (Activity-based learning) மற்றும் கற்றலுக்கு அத்தியாவசியமான கருவிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் சிறுவர்களிடையே ஒத்துணர்வு (Empathy) மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், ஒழுக்க மேம்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற பண்புகளை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷண, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (தூய்மையான இலங்கை) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஷ்வர, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடவிதான ஒருங்கிணைப்பு மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி) திருமதி உதார திக்கும்புர மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பத்துவந்துடாவ ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/235481

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

1 month 2 weeks ago
5ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 119 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை Published By: Vishnu 07 Jan, 2026 | 10:04 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 5ஆவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க இங்கிலாந்து 119 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. ஜேக்கப் பெத்தெல் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி குவித்த கன்னி சதத்தின் பலனாக இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் நான்காம் நாளான புதன்கிழமை (7) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 7 விக்கெட்கள் இழப்புக்கு 518 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 567 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கடைசி விக்கெட்டை இழந்தது. 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த ஸ்டீவன் ஸ்மித் நான்காம் நாள் மேலும் 10 ஓட்டங்களைப் பெற்று 138 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதேவேளை 42 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த போ வெப்ஸ்டர் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஜொஷ் டங் 97 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 130 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 95 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 183 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஜேக்கப் பெத்தல் 2ஆவது விக்கெட்டில் பென் டக்கெட்டுடன் 81 ஓட்டங்களையும் 4 விக்கெட்டில் ஹெரி ப்றூக்குடன் 102 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ஜெமி ஸ்மித்துடன் 45 ஓட்டங்களையும் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தார். பென் டக்கெட், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் தலா 42 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேக்கப் பெத்தல் 232 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள் உட்பட 142 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் போ வெப்ஸ்டர் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். நாளை போட்டியின் கடைசி நாளாகும். https://www.virakesari.lk/article/235479

இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

1 month 2 weeks ago
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியம் - பசுமை பொருளாதார வளர்ச்சி செயற்திட்டத்துக்கான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து 07 Jan, 2026 | 06:41 PM (நா.தனுஜா) 'நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டுள்ளன. மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்ச, இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் என்பன கூட்டிணைந்து உருவாக்கிய இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளையும், உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தையும் ஊக்குவிப்பதே இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும். அத்தோடு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது விசேட கவனம் செலுத்தி, இறப்பர் பயிர்ச்செய்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நேயமான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதும் இதன் இலக்காகும். அதன்படி இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜோஹன் எச்.ஹெஸ்ஸும் புதன்கிழமை (07) கைச்சாத்திட்டனர். இதுபற்றிக் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருக்கும் ஆதரவுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி இச்செயற்திட்டமானது இலங்கையின் நிலையான வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையவாறு அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 'இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகும். பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு, உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப்பாதுகாப்புக்கான நமது பரஸ்பர உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/235473

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

1 month 2 weeks ago
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! 08 Jan, 2026 | 08:39 AM 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235492

அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?

1 month 2 weeks ago
அதிகார வெற்றிடம் (Power Vacuum) என்பது ஒரு கூட்டு பிரச்சினையாக உருவாவதன் தாக்கம். அவுஸ்ரேலியாவில் இந்த நிகழ்வின் பின்னணி.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
அருஸ், நிராஜ் டேவிட் ஆகியோர்களின் காணொளி பார்ப்பதுண்டு (முழுமையாக அல்ல பகுதி பகுதியாக), நேற்று வேலையில் ஒரு இந்திய நண்பர் கூறினார் அமெரிக்க வெனிசுலா ஆக்கிரமிப்பிற்கு காரணம் என அவர் பார்த்த ஒரு யுரியுப் காணொளியில் யாரோ அமெரிக்க மத்திய வங்கி வெள்ளியினை சந்தையில் விற்றிருந்ததாக (short silver) தற்போது வெள்ளி விலை அதிகரித்ததால் அமெரிக்க மத்திய வங்கி மாட்டிக்கொண்டுள்ளது அதனால் வெனிசுலாவில் பெருமளவில் வெள்ளி இருந்ததால்தான் அமெரிக்கா வெனிசுலாவினை தாக்கியதாக கூறினார், அதற்கு அவர் கூறியது Hedge எனும் பதம். முதலில் மத்திய வங்கி இவ்வாறு வெள்ளியினை விற்று வாங்குவதில்லை என நினைக்கிறேன் என கூறி Hedge செய்வதன் நோக்கமே சந்தை செயற்பாடுகளால் ஏற்படும் விலை மாற்ற நட்டத்தினை ஈடு செய்வது, அத்துடன் சந்தையில் செய்யப்படும் வியாபரத்தினை (Silver Contracts) உண்மையான வெள்ளியினூடாக மாற்று செய்ய முடியாது என கூறியிருந்தேன். தங்கம் வெள்ளி போன்ற commodity விலை அதிகரிப்பதற்கு காரணம் liquidity injection, எனது வேலை நண்பர் தவறாக புரிந்து கொண்டாரா அல்லது அந்த காணொளியில் தவறாக கூறினார்களோ தெரியவில்லை. இந்த காணொளிகள் பெரும்பாலும் ஒரு வாசகர் ஈர்ப்பிற்காக பயன்படுத்தப்படுவதால் அதில் விடயங்கள் பெரிதாக இருக்காதுதான்.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
S THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX உறவுகளே, மேலே உள்ளது "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதித்திட்டம் 2026" மட்டும் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு. உங்களிடம் (யாழில்) தகவல் தெரிவிக்காமல் ஒரு ரூபா பணமும் செலவளிக்கப்படமாட்டாது. பணம் அனுப்பினால் தகவல் தாருங்கள். நீங்கள் விரும்புகின்ற வகையில் யாழ் புனைபெயர்/ பெயர் குறிப்பிட விருப்பமில்லை/ சொந்தப்பெயர் தகவலைப் பகிர்வோம். என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் +94 77 959 1047, பொதுவானது +94 77 777 5448.(வட்சப், வைபர்)

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
எப்போதும் வெறுமை வெறுமையாக இருக்காது, தற்போது ரொய்டர்ஸ் செய்தி வழங்கல் வெற்றிடம் எவ்வாறு ஈடுகட்டப்படுகிறது என கூறுகிறது, இது சொல்லாத செய்தி இதனூடாக அதிகார வெற்றிடம் மட்டும் நிரப்பப்படவில்லை மேலதிகமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இது ஒன்றும் அமெரிக்காவிற்கு புதியதல்ல. பொதுவாக சீன வழங்கல் பாதை பன்முகத்தன்மை கொண்டது, தற்போது அது ஈரானை நோக்கி குவிக்க வைக்கின்ற செயலை செய்தது ஈரானின் இராஜதந்திர வெளியுறவுக்கொள்கை அல்ல அதன் எதிரி அமெரிக்காவே. இதனைத்தான் கடந்தகால வரலாற்றுத்தவறுகளில் இருந்து பாடம் கற்காத அமெரிக்கா என குறிப்பிட்டேன். எனது கருத்து தவறாக இருக்குமோ என கருதுகிறேன், இது ஒரு அமெரிக்காவின் கையறு நிலையாக இருக்குமோ என கருதுகிறேன். இந்த வெனிசுலா நடவடிக்கை பல மோசமான தெரிவுகளில் ஒரு ஓரளவு மோசமான தெரிவாக அமெரிக்காவிற்கு உள்ளதா? இது ஒரு ஆரம்பம் மட்டுமே பல கூட்டு விளைவுகளின் விளைவினை இனிமேல்தான் எதிர்கொள்ளவேண்டும்.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
சீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெனிசுலா எண்ணெயை ஈரானிய கச்சா எண்ணெயுடன் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். சியி லியு மற்றும் புளோரன்ஸ் டான் ஆகியோரால் ஜனவரி 8, 2026 காலை 11:00 GMT+11 5 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 11, 2017 அன்று சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள டோங்கிங்கில் ஷான்டாங் ஹைக் குழுமத்திற்குள் ஒரு காட்சி காணப்படுகிறது. REUTERS/Aizhu Chen/கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் வெனிசுலா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்பும் ஒப்பந்தம் எண்ணெய் ஓட்டத்தை திசைதிருப்பும். சீன சுத்திகரிப்பு ஆலைகளால் பயன்படுத்தப்படும் வெனிசுலா எண்ணெய், குறுகிய கால தேவையை ஈடுகட்டுகிறது சீன சுயேச்சைகள் அனுமதிக்கப்பட்ட பிற எண்ணெயைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வாரம் சீன வாங்குபவர்களிடமிருந்து வெனிசுலா மெரே கச்சா எண்ணெயுக்கான சலுகைகள் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர், ஜனவரி 7 (ராய்ட்டர்ஸ்) - அமெரிக்கா நாட்டின் அதிபரை பதவி நீக்கம் செய்ததிலிருந்து நிறுத்தப்பட்ட வெனிசுலா ஏற்றுமதிகளுக்குப் பதிலாக, சீன சுயாதீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் வரும் மாதங்களில் ஈரான் உள்ளிட்ட மூலங்களிலிருந்து கனரக கச்சா எண்ணெயை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வர்த்தகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வார இறுதியில் அமெரிக்கப் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய பின்னர், கராகஸ் மற்றும் வாஷிங்டன் அமெரிக்காவிற்கு 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெனிசுலா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார். ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . அந்த ஏற்பாடு சீனாவிற்கான வெனிசுலா விநியோகத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர், இது டீபாட்கள் எனப்படும் சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மலிவான எண்ணெய் ஆதாரத்தைக் குறைக்கிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட அனுமதிக்கப்பட்ட எண்ணெயை வாங்குபவராகும். ஏராளமான ரஷ்ய, ஈரானிய விநியோகம் "வெனிசுலா நாடகம் சீனாவின் சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்களை கடுமையாக பாதிக்கிறது, ஏனெனில் அவை தள்ளுபடி செய்யப்பட்ட கனரக பீப்பாய்களுக்கான அணுகலை இழக்கக்கூடும்" என்று ஸ்பார்டா கமாடிட்டிஸ் ஆய்வாளர் ஜூன் கோ கூறினார். "இருப்பினும், ரஷ்ய மற்றும் ஈரானிய மூலப்பொருட்கள் ஏராளமாக கிடைப்பதாலும், வெனிசுலா பீப்பாய்கள் தண்ணீரில் இருப்பதாலும், பொருளாதாரம் அவர்களுக்குப் புரியாததால், தேநீர் தொட்டிகள் அனுமதிக்கப்படாத பீப்பாய்களுக்கு ஏலம் எடுக்க வேண்டியிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் சீனா ஒரு நாளைக்கு 389,000 பீப்பாய்கள் வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்தது, இது அதன் மொத்த கடல்வழி கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 4% என்று கெப்லர் தரவு காட்டுகிறது. டிசம்பரில் ஏற்றப்பட்ட குறைந்தது ஒரு டஜன் அனுமதிக்கப்பட்ட கப்பல்கள் ஜனவரி தொடக்கத்தில் சுமார் 12 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை ஏற்றிக்கொண்டு வெனிசுலா கடற்பரப்பை விட்டு வெளியேறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஜனவரி 1 முதல் வெனிசுலாவின் முக்கிய துறைமுகங்களில் ஆசியாவிற்கான ஏற்றுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கப்பல் தரவு காட்டுகிறது. விநியோகம் இறுக்கமடைந்ததால், உடனடி விநியோகத்திற்காக வெனிசுலாவின் மெரே கச்சா எண்ணெய் விற்பனையாளர்கள், கடந்த மாதம் ஐசிஇ பிரெண்டிற்கு பீப்பாய்க்கு சுமார் $10 தள்ளுபடியில் சரக்குகளை வழங்கியதாக ஒரு வர்த்தகர் கூறினார், இருப்பினும் வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. மற்றொரு வர்த்தகர், ஒரு பீப்பாய்க்கு மைனஸ் $11 விலையில் சலுகைகள் இருப்பதாகக் கூறினார். மிதக்கும் சேமிப்பு 75 நாட்கள் நீடிக்கும். ஆசியாவில் உள்ள கப்பல்களில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் சுமார் 75 நாட்கள் சீன தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது, இதனால் மாற்று வழிகளுக்கான உடனடி முன்னேற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கெப்ளர் மூத்த ஆய்வாளர் சூ முயு கூறினார். வெனிசுலா எண்ணெயைப் பயன்படுத்தும் டீபாட்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரஷ்ய மற்றும் ஈரானிய விநியோகத்திற்கு மாற வாய்ப்புள்ளது, மேலும் சீனா கனடா, பிரேசில், ஈராக் மற்றும் கொலம்பியா போன்ற தடையற்ற ஆதாரங்களையும் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார். வாங்குபவர்கள் இன்னும் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கவில்லை என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன, ஈரானிய ஹெவி கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு சுமார் $10 தள்ளுபடியில் ICE பிரெண்டிற்கு பதிலாக போதுமான விநியோகத்தில் உள்ளது, இது மலிவான மாற்றாகும். ஈராக்கிய பஸ்ரா போன்ற மத்திய கிழக்கு வகைகளையும் தேநீர் தொட்டிகள் கருத்தில் கொள்ளலாம் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் கூறினார். இதற்கிடையில், டிரான்ஸ் மவுண்டன் பைப்லைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோல்ட் லேக் மற்றும் அக்சஸ் வெஸ்டர்ன் பிளெண்ட் போன்ற கனேடிய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடிகள் இந்த வாரம் $2 க்கும் அதிகமாக அதிகரித்து, ஏப்ரல் மாதம் சீனாவிற்கு டெலிவரி செய்யப்படும் ICE பிரெண்டிற்கு ஒரு பீப்பாய்க்கு $4-$5 ஆக உயர்ந்துள்ளது, ஏனெனில் அமெரிக்காவின் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்புடன், வர்த்தகர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் சியி லியு மற்றும் புளோரன்ஸ் டான் ஆகியோரால் அறிக்கையிடப்பட்டது; டோனி மன்ரோ மற்றும் எலைன் ஹார்ட்கேஸில் ஆகியோரால் திருத்துதல். https://www.reuters.com/business/energy/chinese-refiners-expected-replace-venezuelan-oil-with-iranian-crude-traders-say-2026-01-07/

ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்

1 month 2 weeks ago
ஆமா, இந்த மேதாவித்தனமெல்லாம் நாடுகள் சந்தர்ப்பம் பார்த்துத்தான் வெளிவருமா? கண்ணுக்கு முன்னுக்கு இந்தக்கொடூரங்கள் நடைபெறும்போது ஏன் அந்த மௌனம்?

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
மீள யோசித்ததில்: சிலவேளை யார் எவ்வளவு அனுப்புகிறார் என்ற விபரம் - ஒப்பீட்டளவில் குறைந்த தொகை அனுப்புவோரை சங்கடபடுத்தலாம். அதனால் அவர்கள் பங்களிக்காமலே விடலாம். எனவே எந்த முடிவும் எனக்கு சமனே.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
அல்லது யார் எவ்வளவு நிதி உதவி செய்கின்றார்கள் என்பதை மறைத்து அவர் அவர் தனது பங்களிப்பை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடலாம் . ஏராளன் வரவுவில் வைக்கப்பட்ட தொகையை மட்டும் எங்களுடன் பகிரலாம். தேவையான தொகை சேர்ந்த கையுடன் முன்னோடிகளின் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எது சரியானது என்பதற்கு அப்பால் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் அதுவே எமது இலக்கு சரி இன்னும் சிலர் தங்களின் கருத்தையும் கூறட்டும்

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
கட்டாயம் எழுதுங்கள். தீமை செய்பவரே சொல்லி காட்டும் உலகில் நாம் ஒளிக்க தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. அத்தோடு இது ஏனையோரையும் ஊக்கப்படுத்தும். நானும் அப்படியே செய்கிறேன்.

நாட்டு நடப்பு.

1 month 2 weeks ago
யாழ் ஆழ்வார் கோவிலை இலக்கு வைத்த பிக்கு. சூறாவளி வரும்போது என்னையே ஜனாதிபதி அழைத்தார்-சாணக்கியன். 6000 ரூபா சம்பளம் பெற்றுவந்த ஆசிரியர்கள் தமிழில் வகுப்பெடுத்துவிட்டு ஆங்கிலத்தில் பரீட்சை என்று முறைப்பாடு.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
இப்படித்தான் ஒருகாலத்தில் ஜேர்மனியும் ஆடியது. முடிவு யாவரும் அறிந்ததே. அமெரிக்காவின் கொலம்பியா மீதான நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கப்படாத விடத்து எனைய வல்லரசுகளின் ஆக்கிரமிப்பும் கேள்விகளுக்கு உட்படாது. அமெரிக்கா அவுக்கு அதிகமாகத் தலையிடுவது உதாரணமாக கிரின்லாண்ட் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இதை ரசிக்கவில்லை. ஈயுவுக்கு வெளியே இருக்கும் யுகேயும் இதை ஆதரிக்கவில்லை. ரஸ்யா சீனா சொல்லத்தேவையில்லை. எல்லோருமு; ஒரு புள்ளியில் சந்தித்தால் விளைவு அமெரிக்காவுக்கு பாதகமாக முடியும்.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
ஒரு குறிப்பிட்ட தொகை மலசல கூடம் கட்ட தேவை என ஏராளன் அறியத்தந்துள்ளார்.அதை நான் அனுப்புகின்றேன். ஆடம்பர மலசல கூடம் கட்டுவதற்கு அந்த பணம் பயன்படாது என நான் நினைக்கின்றேன்.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
இதில் ஈழப்பிரியன் அண்ணாவும் அப்பப்ப உதவி செய்யலாம் எனக் கூறியதை மறந்து விட்டேன்.🙏 அவரையும் சேர்த்துக்கொள்ளலாம். அடுத்த கட்டமாக எங்களின் இலக்கான திட்டத்திற்கு நான் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் சிலரிடம் பேசியிருக்கின்றேன். அவர்களும் நிச்சயமாக இந்தத் திட்டத்திற்கு உதவுவதாகக் கூறியுள்ளார்கள் அதற்கும் ஒரு காலத்தை நிர்ணயம் செய்தால் தான் அந்தக் காலத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்பது கருத்து

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
சரி அப்படியே செய்யலாம் ஏராளன் பரிந்துரைத்த அந்தப் பொன்னாலை திருத்த வேலைகளை முன்மாதிரியாக ஆரம்பிக்கலாம் அதற்கான செலவு அண்ணளவாக 184,௦௦௦ வரும் என்று ஏராளனுடைய நண்பர் ஒருவர் கணித்திருக்கின்றார் , அதை ஏராளன் மற்றைய திரியில் சொல்லியிருக்கின்றார் . நாங்கள் 200.000 ரூபாய் என்ற தொகையை முதலில் சேர்ப்போம். இப்போது இந்தக் குழுவில் நிதி உதவி செய்ய முன் வந்திருப்பது வாத்தியார் குமாரசாமி அண்ணா . கோஷான் கவி அருணாசலம் அண்ணா இதில் குமாரசாமி அண்ணா முன்னோடியூடாக இன்னுமொரு திட்டத்திற்கு நிதி உதவி செய்வதாக எழுதியுள்ளார் ஆகவே அவருடைய நிலையை அவர் விளக்கமாக தெரியப்படுத்துவது நல்லது மற்றும்படி கவி அருணாசலம் அண்ணை எழுத்தியதை நான் ஏற்கனவே எழுத நினைத்தேன் . நேரம் கிடைக்கவில்லை அவர் சரியாகவே கேட்டுள்ளார் நாங்கள் நினைத்தால் இந்த பொன்னாலை திட்டத்தை மாசி மாதத்திற்குள் முடித்து விடலாம். அந்தத் திட்டத்திற்கான எனது பங்களிப்பு இப்போதே தயாராக உள்ளது அந்தப் பங்களிப்பின் தொகையை இங்கே எழுதுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை . பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும் ஒளிவு மறைவு இல்லாமல் தெரியப்படுத்தலாம் என்றால் எழுதுகின்றேன் . அண்ணை, கொமட் 35000 - 70000 ரூபா வரை உள்ளது. நாங்கள் 50000 ரூபா என்று சராசரி விலை குறித்து வைப்போம். கைகளால் பிடித்து நகர வெள்ளிரும்பு பைப் 15000 ரூபா(ஏற்கனவே இரும்பு பைப் போட்டு உக்கிவிட்டது) 2 லான்ட் மாஸ்ரர் மண் 24000 ரூபா 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா 8 பைக்கற் சீமந்து 20000 ரூபா 20 (3/8) கம்பி 20000 ரூபா 1 கிலோ கட்டுக்கம்பி 4000 ரூபா பொருட்கள் கொண்டுவர கூலி 1000 ரூபா மேசன், பிளம்பிங் கூலி 35000 ரூபா மொத்தச் செலவு 184000 ரூபா(கொஞ்சம் கூடிக் குறையலாம்) எனக்கு அறிமுகமான எலக்ரீசியன் தம்பி நேரில் சென்று பார்த்து தந்த விபரங்கள்.
Checked
Mon, 02/23/2026 - 22:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed