புதிய பதிவுகள்2

வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.

2 months ago
நான் இவரது ரசிகன். எனது மனைவி மூலம் இவர் பாடல்கள் பற்றி அறிந்தேன். இவரை மூன்று சொச்சம் வருடங்கள் முன்பே பாடல்கள் மூலம் பார்த்து அறிந்துள்ளேன். இவருக்கு இலங்கையில் பெண் ரசிகைகள் அதிகம். எனது மனைவியும் இவரது ஒரு ரசிகைதான். இவர் இந்திய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு முன்பு போலவே இலங்கை நின்று படைப்புக்கள் வழங்க வேண்டும். இந்திய அடிமைத்தனம் எங்கு கொண்டுபோய் மாட்டுமோ தெரியாது.

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

2 months ago
இதை வாசித்த போது… போக்கிரி படத்தில் பீச்சியடிக்கும் பவுசர் தண்ணியை வடிவேலு அண்டகுடுத்து முட்டு கொடுத்த காட்சி கண் முன் வந்து போனது. இன்றைய அகதிகளை பார்த்து 20 வருடம் முந்திய அகதிகள் நகைக்க கூடாது. புலிகள் நிழல் அரசு இருந்த போது, புலிகள் பகுதியிலும் எம்மால் பாதுகாப்பாக வாழ முடியாது, புலிகள் கட்டாய ஆட் சேர்ப்புக்கு ஆளானேன், தப்பினேன் என பொய் கேஸ் கொடுத்த பச்சோந்திகால், அகதிகளை பற்றி கதைக்கவே இலாயக்கற்றவர்கள். ஆனால் யூகேயில் ஏல்ஸ்பெரி போன்ற நகர்களில் தமிழரை விட சிங்களவர் எண்ணிக்கை பல மடங்கு கூடியுள்ளது உண்மைதான். போற போக்கில் யூகேயிலும் மோட்டு சிங்களவன் உங்களை 9 வாயில்களிலும் பிதுக்கினாலும் ஆச்சரியமில்லை.

வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.

2 months ago
உங்களுக்கு எல்லாமுமே தப்பு தப்பாக தெரிவது இன்று நேற்று நடப்பதல்ல. 2009 வரை புலிகள்/தலைவர் மற்றும் சமயம் இந்த இரெண்டும் ஒன்றாக கலக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்த நிலையில்…. 2009 ற்கு பின் எவன் ஒருவன் ஒருகையில் தலைவரையும், மறுகையில் ஏதோ ஒரு சமயத்தையும் ஏந்தி வந்தால் - அவர்களை சந்தேகத்துடன் அணுகுவதே அறிவுடமை. குறிப்பாக சங்கியாந்தம், வேலன், உமாகரன் என ஏலவே பலரை இப்படி எமக்கு வடக்கே உள்ளவர்கள் இறக்கி விட்டுள்ள நிலையில். அதுவும் இவர் உமாகரனின் தம்பி… அவரின் வேடம் கலைந்த பின் இவர் களம் இறங்கினார்…அல்லது இறக்கப்பட்டார்…. இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் அளவுக்கு அதிகமான வரவேற்பும் சந்தேகத்தை வலுக்க வைக்கிறது. இலண்டன் வந்த போது இலவச டிக்கெட் வேணுமா என கேட்டார்கள் - மறுத்து விட்டேன்.

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

2 months ago
பூர்வ குடிகள் தமிழர் இல்லை என்று வந்தேறு குடி சிங்களம் ஆடிய ஆட்டத்தால் இலங்கை இன்று பல்வேறு நாடுகளால் பங்கு பிரிக்கப்பட்டு கொண்டு இருக்குது போக போக இன்னும் சிதறு தேங்காயை போன்று போகும் இப்பவே சிங்களவர்கள் அகதியாய் லண்டனிலும் தஞ்சம் கோரி கொண்டு இருக்கிறார்கள் இங்கு சிலருக்கு மோட்டு சிங்களம் என்றால் கோபம் வரும் இப்ப துணிந்தே சொல்லலாம் மோட்டு சிங்களம் ஒழுங்கா நாட்டை ஆட்சி புரிய தெரியாமல் சொந்த இனம் சிங்களமும் அகதியாய் நாட்டை விட்டு ஓடுது .

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

2 months ago
கோட்டியா இவை பண்டைய காலத்து கோட்டியா என்ற வகைக் கடற்கலத்தின் பெயரினைக் கொண்டு முற்றிலும் புதிய தோற்றத்தோடு கடலூரில் கட்டப்பட்ட கலம். முற்றிலும் மரத்தால் ஆனது. பாய்மரமும் கொண்டது. கோட்டியாவின் முழு வடிவம்: தோணி முதல் கோட்டியா வரை: படிமப்புரவு: நூலின் பெயர் மறந்து போனேன்

வீழ்ச்சி - லஷ்மி சரவணகுமார்

2 months ago
ஆசான் ஜெயமோகனின் வெண்முரசு தொடர் காவியம் இன்னும் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். 18 ஆம் நாள் போர் முடிந்து துரியோதனன் மனிதர்கள் நுழையாத காலகம் என்னும் அடர்காட்டினுள் ஒரு ஏரிக்குள் மறைந்திருக்கின்றான். அவனை ஒரு நாளுக்கு மேலாக தேடி கிருஷ்ணனுடன் வரும் பாண்டவர்கள் ஏரிக்குள் இருந்து துரியோதனனை வெளிவரச் செய்து பீமனுடனான கதைப் போருக்கு தயாராகும் இடத்தில் நிற்கின்றேன். துரியோதனன் 18ஆம் நாளிலா அல்லது 19ஆம் நாளிலா மரணமடைந்தான் என்பது மயக்கமாக உள்ளது. தொடர்ந்து மகாபாரதத்தைப் படிக்காமல் கிடைக்கும் இடைவெளியில் சிறுகதைகள், தத்துவங்களைப் படிக்கின்றேன். ஆனால் எல்லாம் புரிவதில்லை! படிப்பவற்றில் சிலவற்றைத்தான் யாழில் பதிவதுண்டு..😃

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

2 months ago
மருத்துவத்திற்கு பெயர் போன ஜேர்மனியில் கூட இந்த கோதாரிகளின் ஆக்கிரமம் சொல்லி வேலையில்லை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் மலிவு கலாச்சாரத்தால் மலிந்த விலையுள்ள இந்த கோதாரிகளை விழுங்கி தொலைக்க வேண்டியுள்ளது. 😡
Checked
Sun, 02/22/2026 - 13:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed