புதிய பதிவுகள்2

திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

2 months 3 weeks ago
புத்தரை கொண்டுபோய் ..திருப்ப இறக்கினதில் அனுர கோஸ்டியின் சூட்ட்சுமமும் இருக்கலாம் ..21ம் திகதி கூடும் பிக்குமாருக்கு ...ஒரு ஆணி அடித்தமாதிரி ...நாம உங்களோடைதான் என்பது போலவும் அடுத்தது நம்ம நாமல்தம்பியும் ....தமிழரின் நகை வித்து எடுத்த காசிலை ..4 பிக்கருக்கு விசுக்க ..அவையும் அந்த பிளாஸ்டிக்கு புத்தரை கொண்டுவந்து வைத்து குழப்பம் ஏற்படுத்தி...பிக்குமாரை திசை திருப்பி..21க்கு கொண்டுபோக முயற்சித்திருக்கல்லாம் மாவீரர் நாளுக்குநாளிருக்கு ...நாமல் தம்பி ..அதுக்கும் ஏதாவது ஜொள்ளுவிட்டு ...ஆள்சேர்க்கல்லாம்.. சஜீத்து அண்ணையும் பாளிமெண்டிலை ...கொட்டு கொட்டென்று கொட்டிப்போட்டு போட்டார்...நம்ம ஆளூ லேசான ஆள்கிடையாது..10 ஆயிரம்..புத்த கோவிலுக்கு அத்திபாரம் போட்ட ஆள்..அதோடை தொல்பொருள் திணைக்கள ம் ..தொடங்கி ..காணீ பிடித்த ஆள்...மொத்தத்தில் அனுரவுக்கு வருசக்கடைசிப் பலன்..சரியில்லைப்போல

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!

2 months 3 weeks ago
இன்று சீனாவின் ஆதிக்கம் உலகம் முழுவது பரவி விட்டது. இதை கண்கூடாகவே எல்லா நாடுகளிலும் பார்த்து இன்புறுகின்றோம். இதன் பின்னரும் சீனாவின் அரசியல் கொள்கையை ஏளனம் செய்வதால் எமக்கு நாமே தலையில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம். இன்றைய ஜேர்மனியின் பொருளாதார நிலை சீனா இல்லையென்றால் எல்லா கார் கொம்பனிகளும் டவுண். எல்லாம் ரஷ்யாவை எதிர்த்ததின் விளைவு. ஓரமாக வைத்திருந்தாலும் கைகோர்த்து வைத்திருக்க வேண்டும்.

திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

2 months 3 weeks ago
நானும் அந்த வீடியோவை பார்த்தனான். அந்த தம்பி பாலியல் தொந்தரவு செய்யவே இல்லை.கையை பிடிச்சு இழுக்கக்கூட இல்லை. 🤣

திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

2 months 3 weeks ago
அட..யாராயிருந்தாலும் ..போடலாம்தானே....பொத்துவில் பக்கம் எண்டால் தனிக்குசி..

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

2 months 3 weeks ago
அப்ப அவர்களின் மலையாளிகளின் பதிமுகம் தண்ணி எனப்படும் மூலிகை தண்ணி டுபாக்கூர் தானா ?

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

2 months 3 weeks ago
சவுதி அரேபியா மதீனா மெக்கா புனித யாத்திரை சென்ற குறைந்தது 45 இந்திய பக்தர்கள் டீசல் லொறியுடன் பேருந்து மோதியதில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடவுளை கும்பிட்டு முடித்த பின்பு தான் இது நடைபெற்றுள்ளது. 10 சிறுவர்கள் 18 பெண்கள்.😟

இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!

2 months 3 weeks ago
லேபர் பார்ட்டிக்குள்ளே கடும் எதிர்ப்பு. இங்கிலாந்து திருச்சபை தலைவரும் கடுப்பாகியுள்ளார். ஆனால் இப்போ லேபர் சட்டத்தினை இறுக்கா விட்டால், அடுத்த தேர்தலில் ரிபோர்ம் வந்து ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் ஆப்பு இறுக்குவார்கள். இந்த 20 வருடம் என்பது தலைப்பு செய்திதான். அகதிகள் கற்றல் அல்லது வேலை வாய்ப்பில் இருந்தால் அவர்கள் புதிதாக உருவாக்கப்படும் work and study ரூட்டுக்கு மாறி விரைவிலேயே நிரந்தர உரிமை, குடும்பத்தை அழைக்கும் உரிமை பெறலாம். இப்படி பல ஓட்டைகள் உள்ளதால்… ரிபோர்மின் எழுச்சியை இந்த அறிவிப்புகள் மழுங்கடிக்கும் என நான் நினைக்கவில்லை.

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

2 months 3 weeks ago
நம்ம முயற்சிதான் மறுப்பதற்கில்லை. ஆனால் கொஞ்சம் அளவு சின்னதாக, ஹவுஸ்போர்ட் போல செய்து விலையும் குறைவாக விற்றால் கிராக்கி இருக்கலாம். மோட்டோர்ஹோம், ஹவுஸ் போர்ட் இன்னும் இலங்கையில் பெரிதாக வளராத ஆனால் வாய்புள்ள விடயங்கள்.

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

2 months 3 weeks ago
ஒரு திறமையான முயற்சி ஆதரவு கிடைத்தால் இன்னும் பெரிய சொகுசுக்கப்பல்களை ஓட விடலாம்

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

2 months 3 weeks ago
யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂

யாழில் கரை ஒதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

2 months 3 weeks ago
சில மாதங்களுக்கு முன்னர் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த அந்த நாட்டின் குடிமக்கள் சிலரை நாடு கடத்தியதாகக் ??? கேள்விப்பட்டேன். அதேபோல இந்தச் சிலையையும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்🤪

திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

2 months 3 weeks ago
பொத்துவில் பக்கம் எண்டதும் உங்கட எண்ணம் “அங்க” ஓடுது போல😂. பொலவந்தலாவ, எருவிலில் திருமணம் எண்டால் தமிழராக இருக்கவே வாய்ப்பு என நினைக்கிறேன். கவனம் 😂. பிகு வீடியோ பார்த்தனான். இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.

குட்டிக் கதைகள்.

2 months 3 weeks ago
தினமும் ஒரு வரி தத்துவம் · Suivre onsertSpdolc666m7t7fg19t30uah2m4h6141c2cm5tf 0mm2mg3a41t6cfi · படித்து பகிர்ந்து 🌹 தினம் ஒரு குட்டிக்கதை - வாய்ப்புகள் ஏராளம்... ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரை பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுவார். அவருடைய கை, கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்தியபோது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளியே வந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்தபோது அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அறைக்கதவை திறந்து வெளியே வந்தார். அவர் எப்படி இதனை செய்கிறார்? என்ன யுக்திகளை மேற்கொள்கிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது. இதுவரை அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர்கூட தப்பித்தது இல்லை என்னும் சான்றும் பெற்றது அந்த சிறைச்சாலை. இதனை கேள்விப்பட்ட அந்த மாயாஜால கலைஞர் தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு வெளிக்காட்டுகிறேன் என்றும் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை மூடினர். உள்ளே சென்று அவர் முதலில், தான் அணிந்திருந்த இடுப்பு பட்டையில் ஒளித்து வைத்திருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார். பின்னர் அந்த கம்பியை வைத்து கதவில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பூட்டை திறக்க முற்பட்டார். அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவை கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார். கதையின் நீதி:- நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டு போட்டுக்கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளம். அந்த வாய்ப்புகளை தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். படித்ததில் பிடித்தது. ~மகிழா. 💃" - மீள் பதிவு. 🌹 Voir la traduction

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
மன்னிப்பு கேட்டதாகவும் செய்தி வருகுது....மைதானத்தில் நல்ல பிள்ளையாக இருந்த பும்ரா ...ஆசியகப் ..பாகிஸ்தான் மச்சிலிருந்து ...குளப்படி காரனாக மாறியிருக்கிறார் இந்தியாவின் பிச் விளையாட்டு இந்தியாவையே பிச்சு விட்டுது...இந்தியாவின் இறுதி இன்னிச் துடுப்பாட்டத்தை..பார்க்கையில்...பனங்காணிக்குள் ரப்பர் பந்தில் விளையாடிய கிரிக்கட்டுப் போல இருக்குது..

கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!

2 months 3 weeks ago
கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றிய விளக்கம் இந்திய தமிழ் படங்களில் வந்திருக்கும்.
Checked
Wed, 02/11/2026 - 14:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed