3 months 1 week ago
நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது. அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது. நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது. https://www.kuriyeedu.com/?p=704009
3 months 1 week ago
நீங்கள் சொல்வது எல்லாம் சரி. ஆனால், இது இப்பொது சட்டத்தின் பிடியில். எனவே, சட்ட ஆலோசனை இல்லாமல் வாயை திறந்து இருக்க மாட்டார் என்றே நினைக்கிறன். (ஆனால், அவரின் சிரித்த படத்துடன் அவர் சொன்னார் என்று பார்க்கும் போது பகிடியாகத்தான் இருக்கிறது.)
3 months 1 week ago
இந்தக் கால சிறுசுகள் வலு சீமாட்.
3 months 1 week ago
ஒரு சிறிய உதாரணம் ஒரு துறையில் நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது அதன் லாப நட்டம் கவனிப்பில் இருக்கும் . தொடர்ந்து அந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மற்றும் அரச நிறுவனங்களின் மத்தியிலும் ஒரு நல்ல பெயருடன் வளரும்போது அதன் வளர்ச்சி அதிகரிக்கும் . அதன் கிளைகள் பரவும் வாய்ப்புக்கள் கிடைக்கும் அந்த நிறுவனம் ஒரு சங்கிலித் தொடராக மாறும் வாய்ப்புக்களும் வரும் ஆனால் இங்கே அதிகமாக அந்த நிறுவனம் கவனிக்க வேண்டியது. இலாபம் என்பதே. இலாபம் இல்லாமல் வெறும் அந்நிய முதலீடுகளினால் பெரிதாக்கப்படும் கிளைகளைக் கொண்ட நிறுவனம் தனது இலாபத்தில் அந்த முதலீட்டாளர்களுடன் பங்கு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சிலவேளைகளில் அந்த நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்யும் நிலையில் இலாபம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில் அந்நிய முதலீடுகள் தடைபடலாம் இதனால் ஏற்படும் பங்குகளின் சரிவு இன்னும் அதிக தாக்கத்தை அந்த நிறுவனத்தின் இலாபத்தில் ஏற்படுத்தலாம் . கண்காணிப்பு என்பது ஒரு நிறுவனத்திற்கு எல்லாத் திசைகளிலும் இருக்க வேண்டும் அரசு தனது வருமானத்தைக் கூட்டவும் வரிகளை அறவிடவும் சில உத்திகளைக் கையாளும். அதில் நிறுவனங்கள் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஊக்கம் அளித்த அரசே இன்னொரு சமையத்தில் காலை வாரிவிடும். முதலாளிகள் தாங்கள் நட்டமடைந்தாலும் தங்கள் இலாபத்தில் இல்லாவிட்டாலும்... அவர்களுடைய கணக்குகளில் இருந்து தொழிலாளர்களுக்கும் கூட்டாளிகளும் பங்குதாரர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையேல் அவர்கள் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
3 months 1 week ago
வேறு ஒரு செய்தியில் இருக்கிறது விபரமான குற்றசாட்டு என்று (இந்த செய்து இணைப்பு எங்கோ தவறி விட்டது) misrepresentation breach of the director's duties ஆனால், இவை எப்போதும் மோசடி இல்லை. இவ்வளவு பெரிய தொகையில், இவ்வளவு காலம் சென்று, நேரடியாக மோசடி என்று குற்றம் சாட்ட முடியாமல் இருப்பதன் காரணம் என்ன? sfo விசாரிக்கும் என்றால், sfo அதன் இணைய தளத்தில் விசாரிப்பதாக இருக்கும். (இது ஒன்றும் இரசிய விடயம் அல்ல) GOV.UKFind an SFO caseFind fraud, bribery and corruption cases investigated by the SFO. ஆனால், sfo அதுவாக தலையிடுவதில்லை (எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது). ஏதோ ஒரு விதத்தில் அறிவிக்க வேண்டும், அரசாங்கம் அல்லது அரசாங்க அலகு ஏதாவது அறிவிப்பது ஆகவும் இருக்கலாம். இது புதிய செய்தி. அவர் மீண்டும் வெளியே தலையை காட்டி, எவ்வளவு கடன் இருப்பது என்பது தெரியாது என்று சொன்னதாக (உரிமை கோரியதாக). https://www.telegraph.co.uk/business/2025/09/28/runaway-oil-tycoon-re-emerges-deny-knowledge-15bn-debt/ https://www.telegraph.co.uk/business/2025/09/28/runaway-oil-tycoon-re-emerges-deny-knowledge-15bn-debt/
3 months 1 week ago
In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23] 1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23] பிகு ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம். போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?
3 months 1 week ago
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள் October 26, 2025 1:00 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்… அ.நிக்ஸன்- புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் பிரதான சபையான தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். கடந்த ஒரு வருட கால ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் இந்த உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன மத மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையின் தேசிய விவகாரமாக எடுத்து கையாள வேண்டும் என்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடங்களை தேசிய சபை உறுப்பனர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில்தான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்பதற்கான தயார்படுத்தல்களை தேசிய சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, கடந்த செப்ரெம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தமிழ்த்தரப்புடன் போசப்பட்ட விடயங்கள் குறிப்பாக பௌத்த மயமாக்கல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு கடும் தொனியில் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க பங்குபற்றியிருக்கின்றனர். இக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய முறைமைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள், சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் வெளியிட்ட கருத்துக்கள் பற்றியெல்லாம், நிஹால் அபேசிங்க, ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கிறார். இது பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கொழும்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை பற்றியும், புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துகளை உட்புகுத்தி இனப்பிரச்சினைக்குரிய தீர்வை காண்பது பற்றியும் தேசிய சபை உறுப்பினர்கள் உரையாடியுள்ளனர். இந்த உரையாடலின் போது, மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியல் யாப்புக்காக வரைபைத் தயாரித்து அதனை நிறைவேற்றுவது மாத்திரமே அநுர அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவிப்பார் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சில தமிழ் நாளிதழ்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக, அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என சில உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேநேரம், தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தமை பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர். கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளையும் இழைத்த அநீதிகளையும் தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது எனவும், குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும், நிஹால் அபேசிங்க சுவிஸ்லாந்து சந்திப்பில் கஜேந்திரகுமாருக்கு எடுத்துச் கூறிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தி, அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜேவிபியின் தேசிய சபை தீர்மானித்துள்ளது. குறிப்பாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரியவைத்து, ‘இலங்கை இறைமை’ ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்று அனைத்து இனங்களும் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கக்கூடிய புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தேசிய சபை வற்புறுத்தியுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்பதையும் தமிழர்தரப்புக்கு இறுதி முடிவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் பற்றியும் தேசிய சபை தீர்மானித்திருப்பதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை, அதற்கு உடன்பட மறுப்பதாகவும், குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ரில்வின் சில்வா பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆகவே, மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. அதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள ஜேவிபி அல்லாத உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு நிலைப்பாடு உள்ளமை தெரிகிறது. ஆனாலும், ஜேவிபியின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் தமிழர் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஏற்று செயற்படுத்துக் கூடிய முறையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச பயங்கரவாத தடுப்பு பற்றிய இலங்கைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன வலியுறுத்தி எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 13 பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்வுகளின் பிரகாரம், சோஷலிசம் – சமத்துவம் என்ற ஜேவிபியின் பிரதான கொள்கைகளின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு ஏற்ப அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வலுவான செய்தி ஒன்றை ஜேவிபி வெளியிடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 ஐ தவிர்த்து, 2015 இல் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’என்ற அரசியல் யாப்பு வரைபில் உள்ள சில பரிந்துரைகளை மாத்திரம் மீள் பரிசீலனைக்கு எடுப்பது என அநுர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன. https://oruvan.com/restrictions-and-conditions-imposed-by-jvp/
3 months 1 week ago
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும் adminOctober 25, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன், விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பு.ரவிராஜன், உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசியர் கு. மிகுந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிறின்ஸ் ஜெயதேவன் ஆகியோர் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்னர் என அறியமுடிகிறது. பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய டிசெம்பர் மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார். அதேவேளை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பில் , உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு பேரவைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமொன்று வெளிப்படைத் தன்மையுடன் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2025/221961/
3 months 1 week ago
இவர்தான் நிறுவனத்தை ஆரம்பித்தார் என எங்கே யார் கூறினார்கள்? அதேபோல் ஆரம்பத்தில் மோசடி எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லை, ஆனால் முடிவில் அப்படித்தான் முடித்துள்ளார்கள் என்பதே கூறப்பட்டது.
3 months 1 week ago
தாத்தாக்கள் பேராண்டிகளுக்குப் பின்னால் நின்று அவர்களின் சுமைகளைத் தங்குவது தானே எப்போதும் நடப்பது😅 வாத்தியின் நிலைமை அறிந்து தோள் தர முன்வந்த அமெரிக்கன் தாத்தா😂 இன்றிலிருந்து தோள் தர வந்த யாழ் கள தாத்தா🤣 என்று அழைக்கப்படுவார் 🙏
3 months 1 week ago
இங்கிலாந்தின் வடக்கு கில்லிங்ஹோமில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். புகைப்படக்காரர்: லிண்ட்சே பர்னபி/ஏஎஃப்பி/கெட்டி இமேஜஸ் இந்தக் கட்டுரையில் டோட்டல் எனர்ஜிஸ் SE 53.91 (ஆங்கிலம்) 0.35 % பின்தொடர்க க்ளென்கோர் பிஎல்சி 346.05 (பரிந்துரைக்கப்பட்டது) 0.30 % பின்தொடர்க கச்சா எண்ணெய் 61.50 (குறைந்தது 61.50) 0.47 % பின்தொடர்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: செய்திக் கருத்தை வழங்கவும் அல்லது பிழையைப் புகாரளிக்கவும் ரகசியக் குறிப்பு? எங்கள் நிருபர்களுக்கு ஒரு குறிப்பு அனுப்பவும். தள கருத்து: எங்கள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ளுங்கள் ஜேமி நிம்மோ , ஆர்ச்சி ஹண்டர் மற்றும் ரேச்சல் கிரஹாம் ஆகியோரால் ஜூலை 4, 2025 காலை 5:38 GMT+10 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 4, 2025 இரவு 9:14 GMT+10 மணிக்கு சேமிக்கவும் மொழிபெயர் கேளுங்கள் 6:40 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வாங்குபவரைக் கண்டுபிடிக்க பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் எஸ்இ போராடியபோது, ஒரு எதிர்பாராத ஏலதாரர் மீட்புக்கு வந்தார்: சுத்திகரிப்புத் துறையில் எந்த சாதனையும் இல்லாத ஒரு கணவன்-மனைவி குழு. இந்தத் துறையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி இந்த வாரம் பேரழிவு தோல்வியில் முடிந்தது. திங்களன்று, அந்த ஆலையின் உரிமையாளரான பிராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை கலைப்பதற்கான உத்தரவை இங்கிலாந்து அறிவித்தது, இதனால் நாட்டின் திவால்நிலை சேவை நிறுவனம் அந்த இடத்தைக் காப்பாற்ற போராடியது. இந்த செயல்முறை அரசாங்கத்திலிருந்து ஊழியர்கள் வரை, நாடு முழுவதும் லாரிகளில் ஆலையின் எரிபொருளை கொண்டு செல்லும் நிறுவனங்கள் வரை அனைவரையும் கண்மூடித்தனமாகப் பார்த்தது. ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அதற்கு கச்சா எண்ணெயை வழங்கிய பொருட்களின் நிறுவனமான க்ளென்கோர் பிஎல்சி . இங்கிலாந்தின் ஐந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் லிண்ட்சே மிகச் சிறியது. மூலம்: ப்ளூம்பெர்க் மற்றும் நிறுவன அறிக்கைகளால் தொகுக்கப்பட்ட தரவு. குறிப்பு: புள்ளிவிவரங்கள் கச்சா பதப்படுத்தும் திறனுக்கானவை. இந்த கலைப்பு ஏற்கனவே விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து வருகிறது. விநியோகஸ்தர்கள் இங்கிலாந்தின் மறுபக்கத்திலிருந்து எரிபொருளைப் பெறுவதற்குப் போட்டி போட்டு வருகின்றனர், மேலும் இது நாட்டின் சுருங்கி வரும் சுத்திகரிப்பு அமைப்பின் மீது எரிபொருள்களை வெளியேற்றுவதற்கு அழுத்தத்தைக் குவிக்கிறது. தேசிய அளவில், தளத்தை மூடுவது இறக்குமதி செய்யப்பட்ட விநியோகத்திற்கான தேவையை உயர்த்தக்கூடும், இது ஸ்காட்லாந்தின் ஒரே எரிபொருள் உற்பத்தி தளமான கிரேன்ஜ்மவுத் மூடப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு எரிசக்தி பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் அபாயங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு . லிண்ட்ஸே முதன்முதலில் 1968 ஆம் ஆண்டு எரிபொருளை உற்பத்தி செய்யத் தொடங்கினார், இன்று பிரிட்டனின் மிகச்சிறிய செயல்பாட்டு சுத்திகரிப்பு நிலையமாக இது உள்ளது. ஐரோப்பா முழுவதும் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆலைகளின் விவரக்குறிப்புடன் அதன் சாத்தியமான மூடல் சரியாகப் பொருந்துகிறது: சிறியது மற்றும் வர்த்தக ஜாம்பவான்கள் மற்றும் எண்ணெய் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் செயல்பட நெகிழ்வுத்தன்மை, அளவு மற்றும் செல்வாக்கு இல்லாதது. Total’s Lindsey sale — hammered out in a period when Covid-19 was ravaging demand and forcing a string of European refineries to halt — worked for both sides at the time. The oil company could offload an ailing asset that went against its push into green energy, while for Winston Soosaipillai, who goes by his middle names Sanjeev Kumar, and his wife Arani, the owners of Prax, it was another step in their goal of creating an integrated oil company. Five years later, the refinery’s losses continued to mount, passing £501 million ($684 million) over its lifetime in 2024, its most recent accounts filed with Companies House show. The Lindsey oil refinery.Photographer: Lindsay Parnaby/AFP/Getty Images Prax had $750 million in net debt as of February 2024, mostly in the form of bank loans and a securitization facility, according to its most recent accounts filed with Companies House. The Official Receiver has since reached a deal with Glencore to buy crude oil already stockpiled around the Lindsey refinery, according to a person familiar with the matter. Other Assets The refinery — which processed enough oil to meet about 7% of the UK’s fuel consumption, according to its accounts — supplies London’s Heathrow Airport as well as some filling stations. While Prax Lindsey and some related assets are being liquidated, its ultimate parent company, State Oil Ltd., is in administration, an insolvency process that seeks to rescue firms, not close them. Some parts of the empire, such as Prax’s retail-fuel stations brand Harvest Energy, remain going concerns. The impact of the liquidation — which the UK government said was a decision taken by Prax — was exacerbated by a lack of communication. Energy Minister Michael Shanks complained that the company had failed to communicate even when it was clear back in April that it had “ongoing commercial difficulties.” Prax Lindsey’s gates shut unexpectedly on Friday, without notice, and it stopped releasing fuel, according to one distributor. It took a key gasoline-making unit out of service on Thursday, according to Wood Mackenzie. A person in Prax’s London office, who asked not to be identified because of the sensitivity of the situation, said that communication from management had recently become almost non-existent. Similarly, Glencore wasn’t informed of the challenges Prax faced during a period in which it continued to supply crude oil to the plant, according to people with knowledge of the matter. Attempts to contact the former owners for comment were unsuccessful. லிண்ட்சே நிரந்தரமாக மூடப்பட்டால், இங்கிலாந்தில் நான்கு செயல்பாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே இருக்கும், இது 1970களில் 18 ஆக இருந்த உச்சத்திலிருந்து கீழே குறையும், இது பிரிட்டன் இறக்குமதியை எவ்வளவு நம்பியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிறுவனத்தின் கணக்குகளின்படி, லிண்ட்சே ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்களுக்கும் குறைவான எண்ணெயை பதப்படுத்தியது. அதே ஆண்டில் நாடு ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் பயன்படுத்தியது. லிண்ட்சே வெளியேறியவுடன், இங்கிலாந்து அதன் எரிபொருளில் சுமார் 30% இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று ப்ளூம்பெர்க் தொகுத்த தொழில்துறை தரவு காட்டுகிறது. எளிமையான தொடக்கங்கள் சுத்திகரிப்பு நிலையத்தின் சரிவு, அந்த ஜோடி மீது கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் அரசாங்கத்தால் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பாகக் கருதப்படும் ஒரு தளத்தை அவர்கள் எவ்வாறு கட்டுப்படுத்தினர் - அத்துடன் பணிநீக்கக் கட்டணங்களை யார் செலுத்துவார்கள் என்பதும் இதில் கவனம் செலுத்தியுள்ளது. பிராக்ஸ், லண்டனின் தென்மேற்கில் உள்ள வெய்பிரிட்ஜ் என்ற பசுமையான நகரத்தில் எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்தது. கென்ட் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படித்த சூசைப்பிள்ளைகள், 1999 ஆம் ஆண்டு இருபதுகளில் இருந்தபோது தங்கள் முதல் பெட்ரோல் நிலையத்தை வாங்கினார்கள். அடுத்த ஆண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளையர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளராக ஸ்டேட் ஆயிலை அமைத்தனர். அவர்கள் மேலும் எரிவாயு நிலையங்களை கையகப்படுத்தினர், பின்னர் எண்ணெய் மற்றும் எரிபொருள் சேமிப்பு, வர்த்தகம் மற்றும் ஜெட் எரிபொருளாக விரிவடைந்தனர். பின்னர், 2015 ஆம் ஆண்டில், பிராக்ஸ் ஹார்வெஸ்ட் எனர்ஜியை பொருட்கள் வர்த்தகர் டிராஃபிகுரா குழுமம் மற்றும் ஐரிஷ் தொழிலதிபர் டெனிஸ் ஓ'பிரையனிடமிருந்து கடன் ஆதரவு ஒப்பந்தத்தில் வாங்கியது, இது அதற்கு எரிபொருள் விநியோக ஆதாரத்தை அளித்தது. 2019 ஆம் ஆண்டில் டோட்டல் உடனான ஒரு எரிவாயு நிலையக் கூட்டாண்மை, அடுத்த ஆண்டு லிண்ட்சே விற்பனைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு உறவுகளை மேம்படுத்த உதவியது. மார்ச் 2021 இல் நிறைவடைந்த ஒப்பந்தத்தில் பிராக்ஸ் அதை $167 மில்லியனுக்கு வாங்கியது, கோவிட்-19 நெருக்கடியின் மோசமான தேவையை அழித்த ஒரு வருடம் கழித்து. சிங்கப்பூர் பதிப்பு செய்திமடலை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள். ஆசியாவின் மிகவும் துடிப்பான பொருளாதாரங்களில் ஒன்றைப் பற்றிய நுண்ணறிவுகளுடன் தலைப்புச் செய்திகளுக்கு அப்பால் செல்லுங்கள். வாரந்தோறும் வழங்கப்படும். ப்ளூம்பெர்க் எனக்கு சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகளை அனுப்பக்கூடும். எனது தகவலைச் சமர்ப்பிப்பதன் மூலம், தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன் . 2023 ஆம் ஆண்டில், பிராக்ஸ் வட கடல் ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனமான ஹரிகேயன் எனர்ஜியை வாங்கியபோது மற்றொரு ஆச்சரியமான கையகப்படுத்தல் தொடர்ந்தது. பிராக்ஸின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சஞ்சீவ் குமார் தலைமை தாங்கினார், மேலும் குழுவின் சுமார் 1,500 ஊழியர்களை மேற்பார்வையிட்டார். 2023 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் உள்ள நாட்ரெஃப் சுத்திகரிப்பு நிலையத்தில் டோட்டலின் பங்குகளையும் பிராக்ஸ் வாங்கியது, இந்த கையகப்படுத்தல் கண்டத்தில் அதன் முதல் படியாக விவரிக்கப்பட்டது. இந்தக் காலம் முழுவதும், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் நிலையற்றதாகவே இருந்தன. 2020 ஆம் ஆண்டில் மக்கள் வீட்டிலேயே இருந்ததால் கோவிட்-19 எண்ணெய் நுகர்வுக்கு தலைமுறை தலைமுறையாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது, ஆனால் 2021 ஆம் ஆண்டில் தேவை அதிகரித்ததால் சந்தைகள் கூர்மையாக மீண்டன. மற்ற எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டபோதும், ப்ராக்ஸ் லிண்ட்சே ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது. பிப்ரவரி 2024 இல் முடிவடைந்த ஆண்டிற்கு தாய் நிறுவனம் $28.7 மில்லியன் இழப்பை அறிவித்தது, இது அதன் சமீபத்திய வெளியிடப்பட்ட கணக்குகளின் தொகுப்பாகும். சுத்திகரிப்பு நிலையத்தின் சரிவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட $5.2 மில்லியன் ஈவுத்தொகை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் எதிர்கொள்ளும் வணிக ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட் மே 13 அன்று சூசைப்பிள்ளையைச் சந்தித்ததாக திங்களன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஷாங்க்ஸ் கூறினார் . உடனடியாக மூடப்படும் அபாயம் இல்லை என்று பிராக்ஸின் முதலாளி மிலிபாண்டிற்கு உறுதியளித்தார் என்று அவர் மேலும் கூறினார். ஒரு வாரத்திற்கு முன்பு, அது தனது நிலையை மாற்றிக்கொண்டது, இனி அது ஒரு தொடர்ச்சியான கவலையாக இருக்க முடியாது என்று கூறியது, ஷாங்க்ஸ் கூறினார், நிறுவனத்திற்கு "செயல்பட மிகக் குறைந்த நேரம்" இருந்தது. சுத்திகரிப்பு நிலையத்தின் "பணக்கார உரிமையாளரை" "தனது கைகளை தனது பைகளில் வைத்து தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீடு வழங்குமாறு" அவர் வலியுறுத்தினார். (இந்தக் கதையின் மேலே முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த AI சுருக்கம், தளம் இழந்த பணத்திற்கான கால அளவை தவறாகப் புகாரளித்ததால் நீக்கப்பட்டது.) — ஷெர்ரி சூ, பால் பர்கார்ட், கியுலியா மோர்பர்கோ மற்றும் ஜான் டீன் ஆகியோரின் உதவியுடன் https://www.bloomberg.com/news/articles/2025-07-03/husband-and-wife-team-s-bold-foray-into-oil-refining-ends-badly?embedded-checkout=true ஏற்கனவே நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தினை 169 மில்லியனுக்கு வாங்கியுள்ளார்கள் என்பதாக கூறப்படுகிறது, இவர்கள் மீதான குற்றச்சாட்டான நிறுவன பண மோசடி நோக்கில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதான கூற்றுக்கு ஆதாரமாக கூறப்படும் 2021 இலிருந்து தற்போது வரை கணவனும் மனைவியும் சம்பளமாகவும் பங்குலாபமாகவும் 11.5 மில்லியன் பெற்றார்கள் எனும் கூற்றுடன் ஒப்பிடும் போது 169 மில்லியனை போட்டு (வங்கி கடனாகவும் இருக்கலாம் ஆனால் வங்கி கடன் சொத்து மதிப்பில் 80% வியாபாரக்கடனாக வழங்கும் நிலை இங்குள்ளது அவ்வாறாயின் அவர்களது வர்த்தக அல்லது சொந்த சொத்து மதிப்பு ஏறத்தாழ 200 மில்லியன் இருக்கலாம்) 11.5 மில்லியனை மோசடி செய்யவா முயற்சித்தார்கள்? இதனை முழுமையாக பார்க்கவில்லை ஆனால் ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்ட தம்பதியினர் மேலான குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்குமோ என தோன்றுகிறது. https://find-and-update.company-information.service.gov.uk/officers/B-LQzTO7-hB4-FZmrm-GmZ3GrB8/appointments
3 months 1 week ago
படம் : பூவே பூச்சூடவா படடாசை சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலைக்கட்டி ஆடட்டுமா சித்தடை சிட்டு தானம்மா (௨) தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என்பாட்டிசொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன்பைங்கிளி . ..ஹேய் காலத்துக்கேற்ற பாடல் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வருங் கால தலை முறையினருக்கு ...உதவும்
3 months 1 week ago
அல்வாயர் @alvayan எனது அனுபவங்களை, நான் கேட்டதை, பார்த்ததை கூறினேன் அவ்வளவுதான். 1995 யாழை விட்டு வெளியேறும் வரை பல்வேறு நேரடி அனுபவங்கள், அப்போது நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தது, அறிந்தது, கேட்டது நினைவில் உள்ளன. காரணங்கள் வேறுபாடு உள்ளவை, ஆனால் எல்லாருமே வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு தருணங்களில் பொதுமக்களிற்கு சிரமங்களை ஏற்படுத்தினார்கள். இவை மிரட்டல்கள் தொடக்கம் படுகொலை வரை சென்றன. ஒவ்வொருவருக்கும் தமது கோணத்தில் பார்க்கும்போது தாம் செய்தவை சரியாகவே தென்படும்.
3 months 1 week ago
மத்திய பிரதேசம்: மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஓட்டலில் இருந்து கஃபே-க்கு வீராங்கனைகள் நடந்து சென்றபோது பைக்கில் வந்த ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இந்த நிலையில், கிரிக்கெட் வீராங்கனைகள் பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர் தவறாக நடந்து கொண்டதாக ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்வாகிகள் புகார் அளித்தனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனையிடம் தவறாக நடந்த அகீல்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர். https://www.dinakaran.com/mp-indore-australian-cricketers-sexual-harassment-arrest/
3 months 1 week ago
அப்படி இல்லை துரை. இலங்கையில் அந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பு ஏற்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உள்ளே சென்று பார்க்க ஆவல். செரண்டிப் எனும் சஞ்சிகைதானே இலங்கை தேசிய பயணிகள் விமான நிறுவனத்தினுடையது. படிக்கும் காலத்தில் அதை உரை போடுவதற்கு பயன்படுத்துவோம். அப்போது எயார் லங்கா எனும் பெயர். முன்பும் சஞ்சிகையின் பெயர் செரண்டிப் என்றே நினைவு உள்ளது.
3 months 1 week ago
தெண்டித்து எடுக்கத்தான் பார்ப்பார்கள், ஆனால் bonafide receiver, promissory estoppel, maxims of equity போன்ற சட்ட நுணுக்கங்களை பாவித்து மாற்றப்பட்டவர்கள் இவற்றை வைத்திருக்க முயல்வார்கள்.
3 months 1 week ago
தென்னாப்பிரிக்காவும் ஒரு முறையும் வெல்லவில்லை. மும்பை மைதானம் இந்தியாவுக்கு சாதகம். ஆனால் நான் வாழும் திறமைவாய்ந்த அவுஸ்திரேலியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி.
3 months 1 week ago
என்ன @வாத்தியார் மூச்சுவிட கஸ்டமாக உள்ளதா? தோள் தரவா? முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
3 months 1 week ago
இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன் இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று பிரிந்த சக்திகளாக இல்லாமல் அரசியல் வாதிகளில் கைகளில் அகப்பட்டு ஊழலோடு சிக்ககி பலவீனமடைந் திருக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு குறித்த சமூகவியல் பார்வையில் நாம் இதை பார்க்கும் போது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியிலால பின்னணியைக் கொண்டதாகவே இது இருக்கும் இனங்களுக்கு இடையிலான அரசியல் ஏற்றத் தாழ்வுகள, சமூக அநீதி, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவுகள், சட்டம் சமத்துவமாக இல்லாமல் அது தனித்துவமாக இயங்காமல் சட்டத்தின் கைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதும், தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் தீர்வுகளை சரியான முறையில் நடை முறைப் படுத்தாமல் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தல், போதை பொருட்களின் பயன் பாட்டை ஊக்குவிற்பதன் மூலம் சமூக சீரழிவுகளை ஏறபடுத்தி இளைய சமுதாயத்தை கல்வி அறிவு மூலம் சிந்திக்க விடாமல் சிதைத்து ஒரு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தல், ஆட்சி அதிகார சக்திகள் தமது நலன் கருதி போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடப்புகளை பேணுதல் இப்படி பல காரணிகளை சமூகவியல் ரீதியில் பார்க்க முடியும். இதை முழுமையாக நோக்கும் போது இலங்கையின் போதைப்பொருள் பிரச்சனை என்பது சமூக மற்றும் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்பின் குறைபாடுகள் என்பதை விளக்கிக் கொள்ள முடியும். எனவே இந்த சிக்லானான பெரும் சமூக அழிவை ஏற்படுத்தும் இந்த நச்சு விதைகளை சரியாக விளங்கி இதனை சமூகவியல் தத்துவார்த்த கோட்பாடுகள் வழியாகப் புரிந்து தீர்வு வழிகளை ஏற்படுதினால் மட்டுமே சரியானதோர் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பாதையாகும் என்பதை எல்லா அமைப்புகளும் ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகவியலாளர் எமில் டர்க்கெய்ம் (Emile Drrkheim ) பல சமூகவியல் கோட்ப்பாடுகளை நிறுவியவர். கையில் அதிகாரம் என்ற படகை வைத்துக் கொண்டு ஆட்டுகிறார்கள் இதனால் மக்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் பொருளாதார பிரச்சினை வேலை இன்மை இப்படி பல பிரச்சினைகளால் சமூகம் நிலையாக இல்லாமல் அநீதி நிறைந்த குழப்பமான நிலையாக மாறிவிடும் இதனால் இங்கு சமூக சீர்கேடுகளும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன என சமூகவியலாளர் எமில் டர்க்கைம் (Émile Durkheim) விளக்குகிறார் இந்த நிலையை “அனோமி” (Anomie) என்று அழைத்தார். இதன் பொருள் சமூகம் பின்பற்ற வேண்டிய விதிகள், நெறிமுறைகள் குழப்பமாகவோ இல்லாமலோ இருப்பது. அனோமி கோட்பாட்டை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். அனோமி என்ற இந்தக் கோட்பாட்டை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாக ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். இலங்கை தேசம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இனமுரண்பாடுகளையும் இனவாதத்தையும் ஊக்குவித்ததே தவிர எவருமே சரியானதோர் அரசியல் பாதையில் செல்லவில்லை இதன் பயனை இன்று தொடக்கம் இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை நேசிக்கிறோம் என்று ஊழல் அரசியல் வாதிகளாலும் பொய்மையோடு கலந்த இன வாதிகளாலும் போலி இடது சாரிகளாலும் இந்த நாட்டின் அனைத்து நீதி நிர்வாகங்களும் இவர்களை கையில் சிக்கி ஒரு நாடே நாசமாக போகும் அளவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். இது மாத்திரம் இன்றி பாதுகாப்பு படைகள் கூட இந்த அழிவுக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு ஒரு காலம் படிப்போடு இருந்தது இப்போ ஐசோடு இருக்கு அப்போதெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு தலைமை இருந்தது. ஒரு பெண் இரவு சாமத்தில் கூடவே தனியே போகும் காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தத் தமிழர் தலைமை அரசுகளாலும் நம்மோடு இருந்தவர்களாலுமே அளிக்கப்பட்டது. ஆதலால் அரசு படையில் மட்டுமின்றி நாமும் நம் இனத்தின் அழிவுக்கும் துணை நின்றிருக்கின்றோம். போதையை கொடுத்து ஒரு சமூகம் புடுங்கி எறியப்படுகிறது யாரால் என்பது எல்லாம் தெரியும். இந்தத் தலைமையை அழித்து இன்று இந்தத் தமிழ் மக்களை சமூகச் சீரழிவுக்குள் சிக்க வைத்த பெரும் பெறுப்பு இலங்கை இராணுவப் படைகளுக்கு மாத்திரம் இன்றி எம்மவர் கூட இந்த அழிவுக்கு துணை நின்றிக்கிறார்கள். பாலியல் கொடுமைகள், களவு கொள்ளை, கொலை போதைப் பொருள் பாவனை, வன்முறைகள் என்று இன்று பெரும் சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ் சமூகம். அன்று இருந்த தமிழ் தலைமையினால் இந்த வகையிலான சமூகச் சீரழிவுகள் வன்முறைகள் எதுவும் தமிழ் சமூகத்தில் அவர்கள் பிரதேசத்தில் இல்லாமல் இருந்தது. எனவே இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு அரச படைகளும் அன்று இருந்த தலைமையை எதிர்த்தவர்களாலும் காட்டிக் கொடுப்பு துரோகம் இப்படி பல வழிகளால் இந்த தமிழர் தலைமை இல்லாமல் போவதற்கு துணை நின்றவர்களாலும் இன்று இந்த சமூக சீரழிவுக்கு பெரும் காரணமாக இருக்கிறார்கள். சர்வதேசம் கூடவே பெரும் யுத்தத்திற்கு துணை நின்றது பெரும் துன்பத்தை இனப் படுகொலையை எதிர் கொண்ட தமிழ் சமூகத்துக்கு யுத்தம் முடிவடைந்த பின்பும் ஒரு நீதியான தீர்வை தமிழர்க்கு பெற்றுத் தர உதவவில்லை. தமிழர் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய ஒரு தீர்வை இன்று வரை எந்த அரசும் வழங்கவில்லை. இந்தியா கூடவே தனது அதிகாரத்தை பயன் படுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுத் தரவில்லை. இன்று இறுதியில் ஒரு சமூகச் சீரழிவுடனும் இராணுவ ஆக்கிரமிப்புடனும் எந்த வித தீர்வும் இன்றி இருப்பது பெரும் அவலமே. இலங்கை தேசமானது இன்னும் மாற்றமடைய போக வேண்டிய பாதை இன்னும் தூரமே. சரியான பாதையில் போக சிந்திக்காத வரையிலும் இலங்கை இன்னும் எதிர் காலாத்தில் பெரும் அரசியல் பொருளாதாரப் பிரசினைகளை தான் எதிர் கொள்ள வேண்டி வரலாம் உண்மையான இந்த பெரும் தொற்று நோயான போதைத் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் மாற்றங்களோடு கூடிய அரசியல் சீர்திருத்தத்தாலும், நேர்மையான உண்மையான சமத்துவ ரீதியில் சிந்திக்கக் கூடிய ஆட்சியாளர்களாலும், சமூகவியல் சரியான பார்வையிலும், இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நடை முறைப் படுத்தி மற்றும் இளைய தலைமுறைக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்படுவது அவசியம். இந்தப் போதை காலாச்சாரத்தை ஒழிக்க எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாடசாலைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள், மற்றும் சமூக இயக்கங்கள் அனைவரும் இணைந்து இதற் காக உழைக்க வேண்டும் பேச வேண்டும் எழுத வேண்டும் ஒரு சமூக விழிப்புணர்வை இளையர் மத்தியில் உருவாக்க வேண்டும். இந்த நச்சு விதையை ஒழிக்க வேண்டும். அழகான ஒரு வாழ்வை எல்லா இனங்களும் தமது உரிமையோடும் கடமையோடும் வாழும் வழியை ஏற்படுத்த வேண்டும். பா.உதயன் ✍️
3 months 1 week ago
அத விடுங்க. இப்ப இந்தியா கோப்பை அடிக்குமா இல்லையா. பேசாம, வேற வேலை பார்க்கப் போகலாம் போல. இதுவரை, 12 உலகக் கோப்பைகள் நடைபெற்றுள்ளன. அவுஸ்ரேலியா 7 தடவையும், இங்கிலாந்து 4 தடவையும், நியுசிலாந்து 1 தடவையும் வென்றுள்ளன. அவுஸ்ரேலியா 8வது அடிக்க இன்னும் இரு போட்டிகளே உள்ளன. அந்தப் பெண்களை யார் நிறுத்துவது. அவர்கள் வேறு ஓர் உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே. இந்தியா நிறுத்தும் என்று நினைத்தேன். ஆனால், நடந்தவை........
Checked
Fri, 02/06/2026 - 16:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed