புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
வினா 22) இலங்கை 7 ஓட்டங்களால் வங்காளதேச அணியை தோற்கடித்திருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 44 புள்ளிகள் 2) ரசோதரன் - 41 புள்ளிகள் 3) ஏராளன் - 39 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 39 புள்ளிகள் 5) வீரப்பையன் - 38 புள்ளிகள் 6) சுவி - 37 புள்ளிகள் 7) கிருபன் - 37 புள்ளிகள் 8) புலவர் - 37 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 37 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 35 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 12) வாதவூரான் - 33 புள்ளிகள் 13) கறுப்பி - 33 புள்ளிகள் 14) வசி - 31 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 22, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 48)

ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

3 months 2 weeks ago
20 Oct, 2025 | 05:02 PM தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தங்காலை துறைமுகத்தில் கடந்த 14ஆம் திகதி கடலில் மிதந்த 51 பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொதிகள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த நீரை குடித்த ஐந்து நாய்கள் சுயநினைவின்றி ஒரே இடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். எவ்வாறிருப்பினும் அவற்றில் இரண்டு நாய்கள் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஏனைய நாய்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/228230

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இந்த‌ ஞாயிற்றுக் கிழ‌மையோட‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடியுது இல‌ங்கை பாங்கிஸ்தான் வ‌ங்கிளாதேஸ் வெளிய‌ இல‌ங்கை வெற்றி பெற‌ வேண்டிய‌ விளையாட்டு ஒன்று ம‌ழையால் த‌டை ப‌ட்ட‌து பாக்கிஸ்தான் இங்லாந்தை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து அதுவும் ம‌ழையால் த‌டை ப‌ட்ட‌து................ பாங்கிஸ்தான் ம‌ற்றும் வ‌ங்கிளாதேஸ் ம‌க‌ளிரின் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது இந்த‌ உல்க‌ கோப்பையில் ந‌ல்ல‌ ப‌ந்து போட்ட‌வை..............................

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
நாங்கள் என்னதான் சோப்பு வாங்கி கொடுத்தாலும் ஒயில் கிழவர் குளிக்கப்போவதில்லை என தெரிந்த பின்னும், வாசகர் நலன் கருதி தரமான பதிலை வழமைபோல் கொடுத்துள்ளீர்கள். அனைவர் சார்பிலும் உங்கள் உழைப்புக்கும் நேரத்துக்கும் நன்றி. இதேபோலத்தான் நீரவ் மோடி, விஜை மல்லையாவும் இந்தியாவில் நாமம் போட்டு விட்டு இலண்டனில் வந்து பதுங்கி உள்ளார்கள். மல்லையா தான் கள்ளனே இல்லை என பேட்டி வேறு கொடுக்கிறார்😂. வியாபாரத்தில் நட்டப்படுவது இயல்பு…பல வியாபார பெரும் சாதனையாளர்களின் பல முயற்சிகள் திவாலாகி பின்னர் அனுபவ அடிப்படையில் அடுத்த நகர்வுகளில் சாதித்தனர். ஆனால் பொய்யான விம்பத்தை கட்டி எழுப்பி, கடன் வாங்கி திவாலாக்குவது அப்படி அல்ல. ஒரு PLC கள்ள accounts காட்டி, போலியாக பங்கு விலையை கூட்டுவதை ஒத்த விடயம் இது. இங்கே ஏமாற்றபடுது கடன்கொடுப்போர், மூலப்பொருள், சேவை வழங்குனர். அங்கே ஏமாற்றப்படுவது முதலீட்டாளர்கள். உண்மையில் கள்ளம் இல்லை எண்டால் ஏன் ஆள் நாட்டை விட்டு ஓடுவான்? பிரித்தானியா போன்ற ஒரு நாட்டை விட்டு ஓடுகிறார் என்றாலே சட்டத்துக்கு பயந்துதான் ஓடுகிறார். நாளைக்கு என்னால் மோகேஜ் கட்டமுடியாது போய், வீடு ரிபொசசனுக்கு வந்து, வித்த பின்னும் வங்கி நட்டப்பட்டால் - நான் நாட்டை விட்டு ஓட மாட்டேன். தேவையில்லை. மன்னிச்சு கொள்ளவும் என்பதோடு விடயம் முடியும். ஆனால்…. நான் மோகேஜ் எடுக்கும் போது கள்ள பத்திரம் கொடுத்து, 25K சம்பளத்தை 65 என காட்டி. நாலு வட்டிக்கு 50,000 எடுத்து டிபோசிட் போட்டு விட்டு, வங்கியிடம் அதை என் சொந்த சேமிப்பு என பொய் சொல்லி…. இப்படி பிராடு செய்து மோகேஜ் எடுத்து, பின் கட்ட முடியாமல் - வீடு ஜப்தி ஆகி, வங்கியும் நட்டப்பட்டால் - நான் செய்தது கிரிமினல் குற்றமே. நடைமுறையில் பொதுவாக இப்படி செய்பவர்களை small fish என்பதால் வங்கிகள் (நீங்கள் சொம்னபடி இழப்பை ஏற்கும் காப்புறுதி கம்பனிகள்) திரத்துவதில்லை. ஆனால் திரத்த விரும்பினால் திரத்தலாம். பிறகு இலண்டனில் கள்ள டொகுமெண்ட் கொடுத்து மோர்ச்கேஜ் எடுத்த அண்ணைமார் எல்லாம், சஞ்சீவ் போல இலங்கைக்கு ஓட வேண்டி வரும் 😂. பிகு எனக்கு இந்த ஊத்தவாளி தம்பதியில் ஆகக் கோவம் - கட்டாயம் கடந்த ஒரு வருடத்தில் நிலமை மோசமாவது தெரிந்த பின்னும், 3.5 மில்லியனை கம்பெனியில் இருந்து டிவிடெண்ட் என உருவியுள்ளார்கள். ஆனால் வேலை ஆட்களை சம்பளபாக்கியில் விட்டு விட்டு ஓடியுள்ளார்கள்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி!

3 months 2 weeks ago
மீகஸ்ஆரே கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகள், கணேமுல்ல சஞ்ஜீவ ஆகியோரின் கொலைகள் Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாட்டின் வெளிப்பாடுகள் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகளின் கொலையில் ஜே.சி.பி சமன் அல்லது பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தில் பெரும் குழப்பங்கள், சந்தேகங்கள் வலுவடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வது நீண்ட நாள் திட்டம் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்கான சந்தர்ப்பம் வரும் வரை கெஹெல்பத்தர பத்மே காத்திருந்தார். கார் ஒன்றை ஜே.சி.பி சமனுக்கு வாடகைக்கு வழங்கி அதில் பொருத்தப்பட்டிருந்த GPS தொடர்பிலேயே முறுகல் ஏற்பட்டதாக கஜ்ஜாவின் மகன் அண்மையில் நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்வாண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முன்தினம் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு தனது இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார். துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம் குறித்த இரு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம் தலையோங்கி காணப்பட்ட போது நடத்தப்பட்ட நிலையில், கஜ்ஜாவின் கொலை சாதாரண கொலைச் சம்பவமாகவும், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது. இவ்வாறான பின்னணியில், கஜ்ஜா ஒரு யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தான் கொலை செய்யப்பட்டால் அதற்கு ராஜபக்சர்களே பொறுப்பாளிகள் எனவும் தெரிவித்திருந்தார். கஜ்ஜா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கணேமுல்ல சஞ்சீவ கொலை இடம்பெற்றதால் கஜ்ஜா, தனது மரணத்திற்கு யார் காரணம் என தெரிவித்த கருத்து வலுவிழக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டது. எந்தவொரு ஊடகத்திலும் அது பேசு பொருளாக்கப்படவில்லை. இங்கு தான் இந்த Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. Dead Cat Theory Dead Cat Theory (டெட் கேட் தியரி) என்பது அரசியல் மற்றும் ஊடகங்களில் சாதகமற்ற செய்திகள் அல்லது சூழ்நிலைகளிலிருந்து திசை திருப்பப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும். இதனை, அரசியல்வாதியொருவர் ஒரு வாதத்தில் தோல்வியடையும் போது அல்லது எதிர்மறையான ஆய்வுக்கு உள்ளாகும் போது, அதிர்ச்சியூட்டும் அல்லது பொருத்தமற்ற தகவலை வௌியிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை அசல் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பக்கூடிய செயற்பாடு என அவுஸ்திரேலிய அரசியல் மூலோபாய நிபுணர் லிண்டன் கிராஸ்பி விளக்கியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மித்தெனியவில் இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார். அதற்கு அடுத்த நாளான பெப்ரவரி 19 ஆம் திகதி காலை கணேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார். பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி காலை, கஜ்ஜாவின் கொலை தொடர்பில் அவர் முன்கூட்டியே ஊடகங்களில் கூறிய விடயங்கள் ஆழமாக அலசப்பட்டிருக்க வேண்டும். எனினும், அந்த கொலையும் அதற்கான பிரதான காரணங்கள் மறைக்கப்பட்டு கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. தற்போது இவ்விரு கொலைகள் தொடர்பிலும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில், இவ்விரு கொலைகளுக்கும் உதவியவர் சம்பத் மனம்பேரி. அவர் மொட்டுக் கட்சியில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். ஆக, இந்த விடயங்களில் தெற்கின் பிரதானமான ஒரு கட்சி Dead Cat Theory யின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதை இவ்விடயங்களால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/popular-political-party-in-south-dead-cat-theory-1760879786

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ பல‌ போட்டிக‌ள் ம‌ழையால் கைவிட‌ப் ப‌ட்ட‌து இந்தியாவில் ந‌ட‌ந்த‌ அனைத்து போட்டிக‌ளும் ம‌ழையால் பாதிக்க‌ப் ப‌ட‌ வில்லை ஒரு விளையாட்டில் சிறு ம‌ழை ம‌ற்ற‌ம் ப‌டி ஓக்கே.................................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
7 ஓட்டங்களால் அமோக வெற்றி. இலங்கை எல்லா விதமான தவறுகளைச் செய்தது. பிடிகளைத் தவற விட்டனர். தவறுதலான களத்தடுப்புகள். வங்காளத் தலைவியின் மிக அருமையான ஆட்டம். எல்லாம் சேர்ந்து கடைசிப் பரிமாற்றத்தில் எல்லாம் மாறியது. அதில் முதல் நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுகள். பிடியை எடுத்தனர். ஓட்டமிழப்புச் செய்தனர். எல்லாத் தவறுகளும் சரி செய்யப் பட்டன. வெற்றி இனிமையானது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
க‌ட‌சி ஓவ‌ரில் 4விக்கேட் ச‌ம‌ரி அட்ட‌ப‌த்து வ‌வ்............... இல‌ங்கை அணியின் சிற‌ந்த‌ ம‌க‌ளிர் என‌ இந்த‌ திரியில் ஏற்க‌ன‌வே எழுதி இருந்தேன்...........................

இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா? முக்கிய தகவல்கள்...

3 months 2 weeks ago
செவ்வந்தியின் புலனாய்வுப் பயிற்சிகளில் Body Double தொடர்பான தகவல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள உளவுத்துறை அதிகாரிகளுக்கும், ஒரு பயனுள்ள முறையாக உருவாக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு விடயமாக Body Double தந்திரோபாய முறை காணப்படுகிறது. படுகொலையைத் தவிர்ப்பதற்கோ அல்லது எதிரியை வழிதவறச் செய்வதற்கோ ஒரு முறையாகச் செயல்பட இதனை பல அதிகாரத்தவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இலங்கையை தாண்டி உலகச் செய்திகளிலும் வரிக்கு வரி வெளிப்படுத்தப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரமும், அதன் சூத்திரதாரியான இஷார தொடர்பான Body Double திட்டமிடல்களும் விசாரணை அதிகாரிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்திருக்க கூடும் என்பதை கூறியாகவேண்டும். ஒரு நபரை திட்டமிட்டு கொலை செய்து, அந்த கொலையில் இருந்து தப்பித்து நாடுகடந்து சென்று, அங்கு சுற்றிவளைக்கப்பட்டு தற்போது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் இஷார செவ்வந்தி Body Double முறையில் தன்னை மாற்றிக்கொள்ளவும், அதனை கொண்டு ஐரோப்பிய நாட்டுக்கு தப்பித்து செல்ல முடியும் என திட்டமிட்ட விடயங்கள் சாதாரணமானவை அல்ல என்பது சாதாரணமான ஒன்று அல்ல. இது புலனாய்வுகளையும், பல குற்ற பயிற்சிகளையும் பெற்று அதில் இருந்து விடுபட மேற்கொள்ளும் இலகுவில் ஊகிக்க முடியாாத சதித்திட்டம். இவ்வாறு இஷாரா தனக்கென ஒரு Body Double - ஐ உருவாக்கி அதன் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்த விடயங்கள் அந்த விடயங்களின் பின்னணி, மேலும் இஷாராவின் கொலை சதி என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி... More information about Sevanthi's investigative training, Body Double | Ishara sevanthi | Niraj https://ibctamil.com/article/body-double-in-sewwandi-s-intelligence-training-1760967856

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 months 2 weeks ago
நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனியவில் இருந்த போது “கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் - இஷாரா செவ்வந்தி 20 Oct, 2025 | 04:33 PM நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ' பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை படுகொலை செய்வதற்கு முன்னைய நாள் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனிய பிரதேசத்தில் தங்கியிருந்தோம். இதன்போது “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார். பின்னர் நானும் “கமாண்டோ சலிந்து”வும் கொழும்புக்கு சென்றோம். இதனையடுத்து நான் சட்டத்தரணி வேடத்தில், புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலை செய்ய உதவி செய்தேன்' என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இஷாரா செவ்வந்தியும் “கமாண்டோ சலிந்து”வும் அருண விதானகமமகே ஹேவத் கஞ்சா என்பரை கொலைசெய்வதற்காக மித்தெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் திட்டம் மாற்றப்பட்டு “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலைசெய்வதற்காக இருவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228226

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 months 2 weeks ago
நான் ஏற்கனவே கூறியபடி இவ்வாறான அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது யாராலும் தமது அலுமாரியில் இருந்து எடுத்து தர முடியாது. பிரச்சனையில் சம்பந்தப்பட்டோர் பேசி தீர்கக வேண்டிய விடயம். பிரியாணி தான் வேண்டும் என்று அடம் பிடித்து தாம் சமைத்த சாப்பாட்டை தாமே கொட்டியவர்கள் சிறிது காலம் பசியிருக்கத்தான் வேண்டும்.
Checked
Thu, 02/05/2026 - 07:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed